இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி அவர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் அவர்களுக்கு இன்று மூன்றாம் நினைவு நாள்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தமிழினின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த முன்று வருடங்களுக்கு முன்பு புற்று நோய்த் தாக்கத்தினால் உயிர் துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகாலமரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும்.

இந்நிலையில், இன்று தமிழினி அக்காவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அவர்களின் குடும்பத்தார் நினைவு கூறும் போது அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற நினைவு.

முன்றாம் ஆண்டு நினைவு நாள் தமிழினி அக்கா. சிறகு விரித்து பறந்து மாவீரர்களை காணச்சென்று விட்டாள் அக்கா தமிழினி…தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிங்களத்தின் சிறைச்சாலையிலிருந்து சிறகு விரித்து பறந்து மாவீரர்களை காணச்சென்று விட்டாள் அக்கா தமிழினி! அவர்களுக்கு வீரவணக்கம்

மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி -காணொளி