தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய தியாகன்.
கடற்புலி லெப்டினன்ட் கேணல் தியாகன்
சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன்.
வீரச்சாவு: 13.08.2007
சம்பவம்: திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது.
1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான்.
அத்தோடு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்பில் அதன் ஆசிரியர்மாரை கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான். தொலைத்தொடர்பு சம்பந்தமாக இவனுக்குள்ள ஆர்வத்தை அறிந்த கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் இவனை சண்டையாகிலும் சரி, விநியோக நடவடிக்கையாகிலும் சரி கடற் கண்காணிப்புக்காகிலும் தொலைத்தொடர்பு நிலையத்திற்க்கு இவனையும் அழைத்துச் செல்வார். அங்கு ராடரில் படகுகளை எவ்வாறு துல்லியமாக இணங்கானுவது அதாவது எதிரியின் படகு எது கடற்புலிகளின் படகு எது என்பது போன்ற இப்படியாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிவைப் பெற்ற தியாகன் பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் நின்று செயற்பட்டான்.
தொடர்ந்து விநியோக மற்றும் கடற்சண்டைகளில் தொலைத்தொடர்பாளனாக சென்று வந்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு சண்டைப்படகின் கட்டளை அதிகாரியானான். தொடர்ந்து மன்னார் மாவட்ட கடல் நடவடிக்கை மற்றும் கடல் சண்டைக்காக ஒரு தொகுதி படகுகள் அங்கே அனுப்பப்பட்டபோது இவனது படப்படியான வளர்ச்சிகளை நன்கு அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் சண்டைப் படகுகளின் தொகுதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுகிறான்.
“ஒயாத அலைகள் 03” நடவடிக்கையில் யாழ். கிளாலி நீரேரியில் கடற்படையினருக்கெதிரான தாக்குதலில் பெரும்பங்காற்றி ஆனையிறவு மீட்புச் சமருக்கு பலம் சேர்த்தான். அத்தோடு நின்று விடாமல் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை மீட்கும் சமருக்கு தரைத்தாக்குதலனிக்கு உதவியாக பெரும் பங்காற்றினான். அதன் பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 16.09.2001 அன்று இடம்பெற்ற வலிந்த தாக்குதலில் நிலமையை மாற்றி அமைத்த பெருமை தியாகனையே சாரும்.
கடலில் இடம் பெற்ற பெரும்பாலான விநியோகப் பாதுகாப்புச்மராகிலும் சரி வலிந்த கடற்சமராகிலும் சரி தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே பணியாற்றினான்.
ஈழப்போர் நான்கில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதியாக நியமிக்கப்படுகிறான். அதன் பின்னர் கடற்தாக்குதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியவன் சிறப்புத் தளபதி மற்றும் கடற்சண்டை அநுபவமுள்ள போராளிகளோடு ஆலோசித்து சிறிய படகுகளைக் கொண்ட தொகுதியை உருவாக்கி கடற்கரும்புலிகளையும் அழைத்துச் சென்று எதிரியை அவனது இடத்திற்கே பலநாட்களாகச் தேடிச்சென்று அவனது நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவன் .
பலவெற்றிகரத் தாக்குதல்களை செவ்வனவே வழிநடாத்தியவன். பல இக்கட்டான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் அவர்களை தனது அநுபவங்களைக் கொண்டும் கடற்தாக்குதல் தளபதிகள் எவ்வாறு இக்கட்டான நேரங்களில் செயற்பட்டார்களோ அப்படிச் செயற்பட்டு அவ் இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டு எதிரிக்கு எதிராக பழைய வேகத்துடன் படகுகளை ஒன்றாக்கி தாக்குதல் நடாத்திய ஒருதளபதி.
மூத்த போராளிகளுக்கு மரியாதை கொடுத்து கதைக்கிற பன்பு அவர்களின் அநுபவங்களைக் கேட்டறிவதில் இருந்த ஆர்வம். போராளிகளுடன் பழகுகிற விதம்.இப்படியாக தியாகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான ஒரு தொகை போராளிகளை திருகோணமலையிலிருந்து வன்னிக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு அறிவித்தலும் வழங்கப்பட்டது அதாவது ஒரு பாரிய அணி திருகோணமலையிலிருந்து வன்னிக்கு செல்லப் போகிறது. என எதிரியானவன் தனது அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதை விடுதலைப் புலிகளின் ஒட்டுக் கேட்கும் அணியினரால் தெரிவிக்கப்பட்டது. அப்படியான சூழலில் தான் இவ்விநியோக நடவடிக்கை இடம்பெற்றது இவ் விநியோகப் பாதுகாப்புச் சமர் லெப். கேணல் தியாகன் தலைமையிலேயே இடம்பெற்றது விநியோகத்தில் வருபவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் கருத்திற்கிணங்க விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கி எதிரியின் பாரியதொரு கடற்கலங்களுக்கெதிரான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் கடற்படையின் கலங்களை விநியோபடகுகளிற்க்குச் செல்லவிடாமல் கட்டளைகளை தெளிவாக வழங்கி இறுதிவரை போராடி 13.08.2007 வீரச்சாவடைகிறான்.
கடற்புலிகளைப் பொறுத்தளவில் தியாகனின் இழப்பென்பது ஒரு பாரிய இழப்பாகுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. தியாகனின் சகோதரியும் இவ்விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்திருந்தார். நீள்வானம் போன்று இவர்களது தியாகம் என்றும் எங்கள் மண்ணில் நிலைத்திருக்கும்.
– அலையரசி.
இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும்.வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாகா அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .
மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும்.ஆனால் துரதிஸ்டவசமாக எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரனுக்கு அண்மையாக செயலிழந்தது.இக்கனரக வாகனத்தை செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர்.இச் சமரின் இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக சென்று தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.
மூன்றாவது வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை இவ்விடத்தில் கடற்படையால் தரையிறக்கலாமென எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் தரையிறக்கினான்.இச் சமரை வழிநாடாத்திய தளபதி லெப்.கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார்.இருந்தும் சண்டைதொடர்ந்தது.முன்னேறிய இராணுவத்தை அதாவது வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப்பிரிக்க முடியாவிட்டாலும் .
பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை.கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ச்சியாக தொடுத்தனர்.கொம்படி வரை வந்த படையினர்.கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப் .கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த்தாக்குதல் நடைபெற்றது.
இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ் அா்ப்பணிப்பு மிக்க இச்சமர் இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர் இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்தி சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன்.வழிநடாத்தினார். ஒரு மாதமாக நடைபெற்ற இவ் இராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள வீரச்சாவடைந்தனர்.
உண்மையிலே இச்சமரிலே வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளுக்குப் பின்னாலும் அற்புதமான தியாகங்களும்,மனிதத்தன்மைக்கு அப்பாலான விடுதலை உணர்வும் உள்ளன. இவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் சாதாரணமான இழப்புக்கள் அல்ல மாறாக தமிழர்களுடைய வீர வரலாற்று சரித்திரங்கள்.
இச்சமரிலே தங்கள் உயிர்களைக் கொடையாக்கி தாய்மண் விடுதலைக்காகத் தங்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக.
2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமது மண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு வரப்பட்டதால் எமது கைகளுள் வீழ்ந்தன. எனவே, எதிரி இப்போது வான்படை, கடற்படை, தரைட்படையென முட்படைகளினதும் தொடர்புகளுடன்கூடிய அல்லது அவ்வாறான தொடர்புகளை உடன் ஏற்படுத்தக்கூடிய இராணுவக் கூட்டுத்தளங்களை மட்டுமே எமது பிரதேசங்களில் வைத்திருப்பதற்கு நிப்பந்திக்கப்பட்டான்.
ஆனையிறவுத் தளமும் இத்தகைய அமைப்பைக் கொண்டதாக இருந்தது. இம்முகாம் மீது நாம் தாக்குதலைத் தொடுக்கும் பட்சத்தில் வான், கடல், தரையென மும்முனைகளிலும் எமது நடவடிக்கைகளை எதிகொள்ளக்கூடிய வாய்பான சூழ்நிலையில் ஆனையிறவு இராணுவத்தளம் இருந்தது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளுக்குமான ஒரேயொரு தரைப்பாதையாக ஆனையிறவுக் கடல்நீரேரியூடாக ஒடுங்கிச்செல்லும் பாதையில், குடாநாட்டின் கழுத்தை நெரிப்பதுபோல் ஆனையிறவு இராணுவத்தளத்தை எதிரி நீண்டகாலமா கவே வைத்திருந்தான். கடல்நீரேரியும் நீண்ட உப்புவெளிகளைக் கொண்டிருந்த பிரதேசங்களும் எதிரியின் பாதுகாப்பிற்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருந்தன
இவ்வாறு, சகலவழிகளிலுமே எதிரிக்குச் சாதகமாக இருந்த ஆனையிறவுத் தளத்தின்மீது ஒரு முற்றுகைத் தாக்கியழிப்புச் சமரை மேற்கொண்டு, அதை வீழ்த்துவதென எமது இயக்கம் முடிவுசெய்தது.ஒரு மரபுவழிச் சமருக்குரிய ஆட்பலநிலையிலும் கருவி நிலையிலும் எதிரி பல மடங்கு மேலோங்கியிருந்தான். எனினும், ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பிற்குரிய ஆட்பல நிலையையும் கருவிநிலையையும் மட்டுமே கொண்டிருந்த எமது இயக்கம், மரபுவழிச் சமருக்கு முகங்கொடுக்கக்கூடிய எமது போராளிகளின் மனத்திடத்தை மட்டுமே நம்பிச் சமரங்கைத் திறக்க முடிவுசெய்தது. எமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களை வைத்து, எமது போராளிகளின் தனித்து வமான தொழினுட்ப அறிவை மட்டுமே பயன்படுத்தி மரபுவழித் தாக்குதலுக்கு மிகவும் இன்றிய மையாததாயிருந்த போர்க்கலங்கள் ஆனையிறவுச் சமருக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தன. உழவு இயந்திரம், புள்டோசர் என்ப ன பெரும் வெட்டைகளூடாக எமது அணிகளை நகர்த்துவதற்குத் தேவையான கவசவாகனங்களாக உருமாற்றப்பட்டிருந்தன. எமதியக்கத்தால் தயாரிக்கப்பட்ட “பசிலன் – 2000′ என்ற அதிகதாக்கம் விளைவிக்கக்கூடிய குறுந்தொலைவீச்சுப் பீரங்கியும் எம்மிடம் இருந்தது.
எனவே, போராளிகளின் மனப்பலத்தை மட்டுமே பெரிதாக எண்ணித் திட்டமிடப்பட்ட ‘ஆகாய, கடல், வெளி நடவடிக்கையில், முகாமின் தென்பகுதியூடான நடவடிக்கைகளுக்கான பிரதான பணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் வழங்கப்பட்டது. ஏனைய படையணிகளையும் உள்ளடக்கி இத்தென்சமர்முனையைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடத்தினார்.
போன்ற இடங்களில் நடைபெற்ற சமகளில் படையினர் கடும் இழப்பினைச் சந்தித்தனர். பூவரசங்குளச் சந்திப்பகுதியில் நடைபெற்ற கடுமையான சமளிற் சிறீலங்கா வான்படைமீதான எமது படையணிப் போராளிகளின் தாக்குதலில் ‘பெல்’ ரக உலங்குவானுர்தி ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இது போராட்ட வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி புரிந்த முக்கிய சாதனையாகும், எதிரியின் கவசவாகனங்கள் பலவும் சேதமாகின. களத்தில் மூக்குடைபட்ட எதிரி தன் அநாகரிகத்தை வெளிப்படுத்தி அண்டியிருந்த மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடாத்தினான். 19.06.1991 வரை நடந்த கடுமையான சமரில் 50 இற்கு மேற்பட்ட படையினரையும் ஆயு தங்களையும் இழந்ததுடன் 150 இற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்ததிற் படையினர் பின் வாங்கத் தொடங்கிள். புலிகளின் பலம்பற்றி இராணுவ விமர்சகர்கள் வியந்து நின்ற இச்சமரின் வெற்றிக்காகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த போராளிகள் 22 பேர் வரலாறாகினர்.
‘வன்னி விக்கிரம’ நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரின் இழப்பைப்பற்றி ஆராய்ந்த பி.பி.சி. உலக சேவையின் இலங்கை முகவர் கருத்து வெளியிடுகையில் இலங்கைத்தீவில் இலங்கை இராணுவம் புலிகளிடம் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். அவ்வளவிற்குச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ‘வன்னி விக்கிரம’ எதிர்த்தாக்குதல் வலுப்பெற்றிருந்ததை உலகம் அறிந்துகொண்டது
–நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் நூல்
கருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்..
அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார்.
எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது.
திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா? அல்லது விளக்கு பிடிக்கிறதா? என்ற விளையாட்டுக்குள் நாம் வரவில்லை..
அடப்பாவிகளா? ஈழத்திலே எங்கேயடா பார்ப்பான்?
இருக்கிறதே நாலு பிராமணர்கள்..அவர்களும் பூசை வைச்சமா! பொங்கல் சாப்பிட்டமா! என்று இருக்கிறார்கள்.
பூசை வைக்கிற உரிமைக்குக் கூட அவர்களோடு போராட முடியாது. காரணம், ஈழத்தில் ஆலயங்களில் பூசை செய்பவர்கள் 90 விழுக்காடு சைவ மரபில் வந்த அர்ச்சகர்களே..
போதாததற்கு கதிர்காமம், செல்வச் சந்நிதி உட்பட பல தொன்ம ஆலயங்களில் பூசை செய்பவர்கள் மீனவ சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்.
அவர்களை ‘கப்புறாளை’என்போம்.
அதனால்தானே பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை என்கிறோம்.
வரலாறு தெரியாமல் தரப்படுகிற ஆதரவு கூட ஆபத்தானது.
புரட்சியாளன் – கோட்பாட்டாளன்.
தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாள்ப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.
மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.
இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.
பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.
இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார். முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.
முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது ஒரு கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலத்தையும் துண்டாடுகிறது. ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.
பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் அரசியலையும் முன்மொழிகின்றன.
இது புரியாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம். ஆனால் நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது. எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது.
ஒரு கோட்பாட்டாளன் உருவான கதையின் பின்புலம் இது. வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறதுப
பரனி
மீள்பதிவு
யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம் முழுமையும் விடுதலைப் புலிகளின் கைகளில் வந்தது. அடுத்த ஓரிரு தினங்களிலேயே சுற்றுவட்டாரத்திலும் சிங்களக் கொடுங்கோன்மையினரின் பாதச் சுவடுகள் துடைத்தெறியப்பட்டு முல்லை நகர் சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கிடையில், முல்லைத்தீவு முகாம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது, எக்காரணம் கொண்டும் அதனைக் கைவிடமாட்டோம் என, சிறீலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த சூழுரைத்து அனுப்பிவைத்த படை, பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் முல்லைப்படைத்தளத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அலம்பிலிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இறக்கப்பட்டது. ஆனாலும் நிலைமையை முன்னரேயே எடைபோட்டிருந்த விடுதலைப்புலிகள் அவர்களைச் சுற்றி வளைத்துக் குறிவைத்தனர்.
நகர முடியாத இறுக்கமான பொறியில் சிக்கிக்கொண்ட படையினர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தானர்.விடுதலைப் புலிகளோ பாதுகாப்பாக நிலை எடுத்து எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கினர். இங்கு களநிலைமை இப்படியிருக்க, குழும்பில் குளுகுளு அறையில் இருந்துகொண்டு அமைச்சர்கள் விடும் அறிக்கை வேறுவிதமாக இருந்தது. முல்லைத்தீவு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள மேலதிக படையினர் முகாமில் உள்ள படையினருடன் எந்த நேரத்திலும் இணைந்துகொள்வார்கள், முல்லைத்தீவு முகாமின் ஒரு பகுதியில் இருந்து கொண்டு படையினர் புலிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்றெல்லாம் அமைச்சர்கள் இலகுவாக செய்திகள் தந்து கொண்டிருந்தனர்.
ஆனால் களநிலைமை வரலாறு காணாத ஒரு பெரும் தோல்வியை அரசின் தோள்களில் சுமத்திக்கொண்டிருந்தது. யாழ். வெற்றி என்ற உள்ளீடற்ற பொய்மைத் தோற்றம் பொசுங்க்கிக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் மீளமுடியாத ஒரு கிடுக்குப் பிடியில் அரசு சிக்கிக்கொண்டிருந்தது. உண்மை இப்படியிருக்க பொய்மைகள் வேறு முகத்தில் ரூபவாஹினியில் தோன்றின.
உண்மையை எவ்வளவுகாலம் திரையிட்டு வைப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா…? ஆனால் மறைக்க முனைந்தார்கள். சத்ஜய இராணுவ நடவடிக்கையின் வாயிலாக. சத்ஜய இராணுவ ஆரம்பிக்கப்பட்டது யூலை இருபத்தாறில். இந்த இராணுவ நடவடிக்கை ஆணையிரவில் இருந்து கிளிநொச்சியை நோக்கி, கையறுநிலையில் சடுதியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வு என்பது இராணுவ விவகாரங்கள் புரியாதவர்களால் கூட புரிந்து கொள்ளக்கூடியதே.
முல்லைத்தீவு முகாமைக் காப்பாற்றப் போனவர்கள் காப்பாற்றுவார் இன்றி, மாழ்வதைத் தவிர மீளும் வகையறியாமல் திகைத்து நிற்க, இந்த சத்ஜய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆனையிறவில் இருந்து கெடுகாலத்தில் புறப்பட்ட இராணுவம் பரந்தனில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு இன்றி பரந்தன் வரை முன்னேறிய சிறிலங்காப் படையினர் பத்துநாட்கள் பரந்தனிலேயே தரித்து நின்று, தமது நிலைகளைப் பலப்படுத்தி, மீண்டும் அடுத்த நகர்வை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பித்தனர். முன்னர் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர்கள், போல் இது சுலபமாக இருக்கவில்லை. வான்வழியாகக் குண்டுகளைச் சொறிந்தபடி, எறிகணைகளை மழைபோல் பொழிந்தபடி, டாங்கிகள் கனரக வாகனங்கள் சகிதம் புறப்பட்ட இராணுவத்தினர் சொற்ப தூரத்தில் வைத்தே கடுமையாகத் தாக்கப்பட்டனர். உறுதியான முடிவுடன் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.
பெரும் எடுப்பிலான இந்த நகர்விற்கு விடுதலைப்புலிகள் முகம் கொடுக்காமல், குடாநாட்டில் பின்வாங்கியது போல் பின்வாங்குவார்; நகர்வு சுலபமாய் அமையும் எனத் திட்டம் வகுத்தோர் தப்புக்கணக்குப் போட்டிருக்கக் கூடும். ஐந்தாம் ஆறாம் திகதிகளில் நடந்த சண்டையில் ஆறு யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டன. நூற்றிற்கும் மேற்ப்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். இரண்டு நாள் சண்டையில் பெருமளவில் இராணுவ வளங்களை இராணுவம் இழந்தது. பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர், மீண்டும் ஒரு தோல்வியைச் சுமந்துகொண்டு பரந்தனுக்குப் பின்வாங்கியுள்ளனர்.
காலப் போருத்தமின்றித் தொடங்கப்பட்ட இந்த சத்ஜய இராணுவ நடவடிக்கையின் தேவை என்ன என்பதற்கு ஒரு காரணம் வெளிப்படையாக சொல்லப்படுகிற போதும், இதற்கு இன்னுமொரு காரணமும் காட்டப்படுகின்றது. முல்லைத்தீவைக் காப்பாற்றவென, அமைச்சர் ரத்வத்தையால் அனுப்பிவைக்கப்பட்ட படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவர்களை மீட்டெடுப்பதற்கு வழி தேடிய சிறிலங்கா பாதுகாப்பு உயர்பீடம், இந்த சத்ஜயவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருமுகப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் கவனத்தை, சிதறடித்து படையினரைக் காப்பாற்ற அரசாங்கம் திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது.
அதாவது விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் இருந்து, சிக்கிய படையினரை இழுத்தெடுக்க அரசு கையாண்ட உத்தி என சொல்லிக்கொள்கின்றார்கள். கிளிநொச்சிவரை முன்னேறுவது, முடிந்தால் தரைப் போக்குவரத்துப் பாதை ஒன்றை அமைப்பது என்ற அடிப்படையில், முன்னர் வரைந்த திட்டத்திற்கு திடீரென உயிர் கொடுத்து நகரவிட்ட அரசு, இதன் மூலம் இரு காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என நம்பியிருக்கக்கூடும். முல்லைத்தீவில் அப்பிக் கொண்ட சகதியைத் துடைப்பது, சிக்குண்ட படையினரைக் காப்பது என்ற வகையில் அது சிந்தித்திருக்கக்கூடும்.
எது எப்படி இருப்பினும், இரு களநிலையிலும் விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டியுள்ளனர். முல்லைத்தீவை சுத்தப்படுத்தி மக்களின் வளமான வாழ்க்கைக்கு பாதை திறந்த விடுதலைப் புலிகள், கிளிநொச்சி நோக்கிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பாதிக்கும் ஆப்பு வைத்தனர்.
– சுப்பு.
வெளியீடு : எரிமலை இதழ்
- சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் வீரவணக்க நாள்
- முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்
—
‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’
‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது.
மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்?
‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’
‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார்?’
யாருமில்ல தம்பி. மகன் வேலைக்குப்போறார். அவரைப் பார்க்கவேணும். வீடு, வளவு, ஆடு, மாடுகள் பார்க்கவேணும். இனி மகனைத் தேட யாருமில்லை – இது கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பும்போது இதய நோயினால் இறந்துபோன தாயின் கணவனின் குரல்
இப்படியாக கடந்த வாரம் இரணைப்பாலையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஸின் தாயும் போராடிக் களைத்தே இறந்துபோனார். இந்த இறப்புக்கள் சாதாரணமானவையல்ல. இறுதிப் போரின் அவலங்களின் சாட்சியொன்றை, இனப்படுகொலையின் உயிர்ச்சாட்சியொன்றை இழந்துகொண்டிருக்கிறோம்.
காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிப் போராட்டம்
2015 ஆண்டின் ஜனவரி மாதத்தில் காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் தெருவுக்கு வந்தனர். அதுவரை நீடித்துவந்த காட்டாட்சியில் அந்தத் தாய்மார் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவுக்கு இறங்கினாலே அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுகளும், விசாரணைகளும் அவர்கள் மீது தொடரப்பட்டிருந்தன. அவர்கள் எங்கு சென்றாலும், எந்த வெளிநாட்டவரை சந்தித்தாலும் கண்காணிக்கப்படும் அச்சமிகு சூழலே நிலவியது. ஆனாலும் அவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தெருவில் இறங்கிப்போராடிக்கொண்டிருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் தாய்மார் பெரும் எதிர்பார்ப்போடு தெருவுக்கு வந்தனர். தொடர்ச்சியாகப் போராடினால் இந்த அரசாவது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உரியதொரு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை அதிகளவில் கொண்டிருந்தனர். அதன்படியே தான் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலுமென போராட்டங்கள் ஆரம்பமாகின.
போராட்டங்கள் என்றால் ஒரு இடத்தில் கூடி கோசமெழுப்பிவிட்டு, மகஜர் கையளித்துவிட்டு செல்வதல்ல. இனிவரும் காலத்திற்கான தங்கள் வாழ்க்கையையே தெருவோரம் அமைக்கப்படும் போராட்டக்கூடாரத்துக்குள் செலவழிக்கப்போகும் வகையிலான போராட்டம். அங்கேயே தங்கியிருந்து, தெருவில் வருவோர் போவோர், வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு தூதர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் என அனைவருக்கு முன்னாலும் தம் கண்ணீரைக் கொட்டி போராடும் களத்திற்கு அந்தத் தாய்மார் வந்தனர்.
இப்படியாக அவர்கள் இரவுபகலாகப் போராடத் தொடங்கி 3 வருடங்கள் கடந்துவிட்டன. இதற்குள் நடந்தவையெவை?
சர்வதேச ஊடகக் கவனம்
அதிகளவில் சர்வதேச ஊடகக் கவனத்தை காணாமலாக்கப்பட்டவர்களினால் ஈர்க்க முடிந்திருக்கிறது. அனேகமாக சர்வதேச ஊடகங்கள் என அடையாளப்படுத்தும் அனைத்துமே காணாமலாக்கப்பட்டோர் போராட்டத்தை நேரில் தரித்து அறிக்கைகள் வெளியிட்டுவிட்டன. செய்தியிடல்கள் செய்துவிட்டன. ஆவணப்படங்கள் வந்துவிட்டன. லிபியா போல, சூடான் போல, சேர்பியா போல இலங்கையிலும் காணாமலாக்கப்பட்டோர் விடயம் கொதிநெருப்பாக உள்ளதென்ற செய்தி உலகமயப்பட்ட நன்மை இதனால் நடந்திருக்கிறது. இந்த நன்மை இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை சர்;வதேசமயப்படுத்தவே, அரசுக்கு ஏற்பட்ட பொறுப்புக்கூறல் நெருக்குதல்கள், ஓ.எம்.பியின் உதயத்திற்கு வழிவகுத்தது.
ஒரு துரதிஸ்டம்
ஆனால் துரதிஸ்டம் என்னவெனில், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானவென உருவாக்கப்பட்ட ஓ.எம்.பி மீது பாதிக்கப்பட்டவர்கள் அவநம்பிக்கைக் கொண்டிருந்தனர். கடந்தகாலத்தில் இதுபோன்று உருவாக்கப்பட்ட விசாரணைக்குழுக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்கள் இந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஓ.எம்.பியின் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், இதன் மீது தமக்கு நம்பிக்கையில்லை, வெறுமனே நன்கொடைகளும், நஸ்டஈடுகளும் மட்டும் காணாமாலாக்கப்பட்டவர்களை தேடியறிதலுக்கான வழிமுறையல்ல என்பதைத் தெளிவாகவே தெரிவித்துவிட்டனர். அந்த ஒன்றுகூடலுடன் ஓ.எம்.பியின் நடவடிக்கைகள் பெரியளவில் காணாமலாக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுபட்டதாகத் தெரியவில்லை.
சர்வதேச அமைப்புக்களது நிகழ்வுகள்
போராடும் மக்களின் பிரச்சினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள், அம்னெஸ்டி இன்ரநெசனல், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவற்றின் கரிசனைக்கும் உள்ளாகின. கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோர் தினத்தை கொழும்பில் பெரியளவில் நடத்திமுடித்தது அம்னெஸ்ரி இன்ரநெசனல் அமைப்பு. இதன்மூலம் குறித்த பிரச்சினை இந்நாட்டின் பெரும்பான்மையினருக்கும் எடுத்துச்செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களைத் தாண்டி, பெரியளவில் வெகுசன கவனிப்பை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தவில்லை. இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் காணாமலாக்கப்படும் சம்பவங்கள் 1972 ஆம் ஆண்டு தொடக்கமே நிலவிவருவதால், ஆட்கள் காணாமலாக்கப்படுதல் என்பது சாதாரணமானதொரு விடயம் என்கிற உளவியலுக்கு பெரும்பான்மையின மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.
விசாரணைகள் அளவுக்கு முன்னேற்றம்
சமநேரத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளும், குற்றப்புலனாய்வினரின் விசாரணைகளும் இடம்பெற்றன. இவை கடந்த ஆட்சிக்காலத்தில் சாத்தியமற்றிருந்தது. தம் பிள்ளைகளைக் கடத்தியோரை உறவுகள் அடையாளம் காட்டியும் விசாரணைகள் இடம்பெறாமல் இருந்தன. போராட்டங்களின் விளைவாகவும், இந்த அரசுக்கு இருந்த பொறுப்புக்கூறலின் விளைவாகவும் கண்துடைப்புக்கேனும் விசாரணைகள் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் இந்தப் பின்னணியில் எடுத்து நோக்கத்தக்கது. குறித்த விசாரணை தற்போதும் சூடுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசாரணைகளின் மூலம் கடத்தப்பட்டவர்களுக்கு நடந்ததென்ன? கடத்தலாளிகளின் பின்னாலிருக்கும் சூத்திரதாரிகள் யார்? கடத்தலின் நோக்கமென்ன போன்ற விடயங்கள் இதுபோன்ற விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டால், அந்த விடயங்களில் இப்போது தெருவில் இருந்து போராடிக்கொண்டிருக்கும் பல தாய்மார்களுக்குப் பதிலிருக்கும்.
பயன்படுத்திக்கொண்ட தொண்டு நிறுவனங்கள்
காணாமல் போனோரின் பிரச்சினையை, அவர்தம் தொடர் போராட்டத்தை உள்ள10ர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதனைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே தெரிவித்தும் வருகின்றனர். இலங்கையின் அரசியல்மாற்றங்களுக்கும், மேற்கு சார்ந்த அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கும் காணாமல் போனோரின் விடயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் இலங்கைக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டிய தேவை ஏற்படுமோ அப்போதெல்லாம் காணாமலாக்கப்பட்டவர்களது விடயம் தொண்டு நிறுவனங்களினால் கையிலெடுக்கப்படுகின்றன. போராடும் மக்களையே துண்டுதுண்டாகப் பிரித்துத் தங்கள் தேவைக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களாலும் முன்வைக்கப்படுகின்றது.
போராடும் மக்கள் எப்படியிருக்கின்றனர்?
இப்போது வவுனியாவைத் தவிர போராட்டம் தொடங்கிய இடத்தில், அதே கூடாரத்தில் யாருமே இல்லை. அனைவருமே இடம்மாறிவிட்டனர். கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய இடம் கந்தசுவாமி ஆலய முன்றலாக இருந்தமையால், ஆலய நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின்காரணமாக, இப்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாக இடம்மாறியிருக்கின்றனர். முன்னரைவிட குறைவான மக்களே கலந்துகொண்டிருப்பதை இப்போது அவதானிக்கலாம். வவுனியாவில் போராடும் தாய்மார் தபால் நிலையத்துக்கு அருகில் அதே பாலை மரத்தடிக் கூடாரத்தில் தான் இருக்கின்றனர். அது பொது இடமாக இருப்பதனால் அவர்களுக்கு இடம்மாற வேண்டிய தேவை இருக்கவில்லை. சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீல் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கொட்டகை அமைத்துப் போராடத்தொடங்கிய தாய்மார், இப்போது முல்லைத்தீவு இந்து மகாவித்தியாலயத்தக்கு அருகில் இடம்மாறியிருக்கின்றனர். இந்த இடம்மாற்றங்களுக்கு உள்ள10ர்வாசிகளின் நெருக்குதல்களும் பிரதான காரணம். அந்தத்தந்தப் பகுதிகளுக்கு பிரச்சினைகளோ, தடங்கல்களோ வராதளவுக்குப் போராடும் மக்களின் இடங்கள் மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். கிழக்கு மாகாணத்தில் போராடத் தொடங்கிய தாய்மார்களைப் பற்றிய செய்திகளே வருவதில்லை.
உளப்பாதிப்பு உண்டு
தெருவோரம் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் போராடத்தொடங்கிய காலம் தொட்டு இந்த மக்கள் எதிர்கொள்ளும் உளச்சிக்கல் குறித்து யாரும் கரிசனைகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டத்துக்கு முன்புவரை, காணாமலாக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளோடு (தாய், துணைவி, சகோதரி, தந்தை) அவர்தம் குடும்பத்தவர்கள் துணையாயிருந்தனர். காணாமல்போன தனது பிள்ளையின் ஃ கணவனின் நினைவுவரும்போதெல்லாம் அவர்களின் அருகிருந்து ஆற்றுப்படுத்தவும், நினைவை திசைதிருப்பவும் யாராவது ஒரு உறவினர் கூட இருந்தனர். ஆனால் போராடத்தொடங்கியபின்னர் அந்நிலமை முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. அவர்கள் தங்கியிருக்கும் முழுச்சூழலும் காணாமலாக்கப்பட்டவர்களின் நிழற்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. திருப்பித்திருப்பி காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே அந்தச் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கதைகளுக்கு ஓய்வே இல்லை. புதிதுபுதிதாக வரும் ஒவ்வொருவருக்கும் தம் கதையை மீளமீள தளதளத்த குரலில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தாம் இறந்தாலாவது தமது பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் போராடும் பல தாய்மார் மனதில் இருக்கின்றது. இப்படியாக ஒரே நினைவுடனும், அழுகையுடனும்தான் அந்தத் தாய்மார் தங்கள் மூன்றுவருடங்களைக் கடந்திருக்கின்றனர். அதற்குள் வாழ்ந்து, நினைவில் அமிழ்ந்து கடத்தல் என்பது அவ்வளவு இலகுவதானதல்ல. எனவே உளவுரண் சார்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தவும், பலம்பெற வைக்கவும் உரிய உளவளப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மிக அவசியமானவை.
ஏனைய நோய்கள்
போராடும் களம் தெருவோரமாக இருப்பதனால், தூசி, இரைச்சல் என நோய்த்தூண்டல் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. அத்துடன் போராடுபவர்களில் அனேகர் முதியவர்கள். ஏற்கனவே நீரிழிவு, சிறுநீரக நோய்கள், அல்சர், பிரசர் என முதுமைக்கேயுரிய பல்வேறு நோய்களும் அவர்களைப் பிடித்திருக்கிறது. போராடத்தொடங்கிய நாள்தொட்டு சரியான மருத்துவமின்மை, உரிய நேரத்தக்கு உணவு உட்கொள்ளாமை காரணமாக அந்த நோயின் அளவும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. போராட்டக் களத்திலிருந்து சிலர் அடிக்கடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சந்தரப்பங்களும் ஏற்பட்டிருக்கிறது. மனஅழுத்தமும், வறுமையும், பிள்ளைகள் பற்றி எவ்வித பொறுப்புக்கூறலுமற்ற நிலையும் போராடுபவர்களை மேலும்மேலும் நோய்வாய்ப்படவைத்திருக்கிறது.
இதன் விளைவாக இதுவரை கிளிநொச்சி போராட்ட களத்தில் மட்டும் 14 பேர் இறந்திருக்கின்றனர். முல்லைத்தீவு போராட்டகளத்தில் அண்மையில் இரண்டு தாய்மார் இறந்திருக்கின்றனர். அதில் தாயார் ஒருவர் இறுதிப்போரின்போது காணாமலாக்கப்பட்ட தனது மகனை அவர் தேடியலைந்தார். மிகுந்த வறுமைக்கோட்டின் வாழும் அவரும், அவரது ஒரே மகளும், காணாமல்போன குடும்பத்தின் ஒரே ஆண்மகன் மீண்டாலே தங்கள் வாழ்வு மீளும் என நம்பியிருந்தனர். அதற்காகவே அந்தத் தாய் தன் நோய்நிலையும் மறந்துபோராடினார். இறுதியில் அவரும் இறந்துவிட்டார். அவரின் இறப்புக்கு;ப் பின்னர், அவரளவுக்கு தியாகித்துப் போராடுமளவுக்கு யாருமில்லை. எனவே காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியலையும் ஒருவரின் இறப்பானது, ஒரு சாட்சியத்தின் இறப்பாகும். சாட்சியங்கள் இறந்துபோக அந்த விடயமும் கைவிட்டுப்போகும். இந்த நிலையைத்தான் காணாமலாக்கப்பட்டவர்களின் மூன்றாண்;டுப்போராட்டம் எட்டியிருக்கிறது என்பது துயரமான செய்தி.
எனவே இனப்படுகொலையின், மனித உரிமை மீறல்களின் சாட்சியமாக எஞ்சியிருக்கும் அந்தத் தாய்மாரைக் காப்பாற்றுவதற்கான அரசியல், பொருளாதார, சுகாதார பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்படுதல் வேண்டும். அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. ஆனால் போராடியேனும் அவர்தம் பிள்ளைகளைக் காணாமலாக்கப்பட்ட முகங்களை அரங்கின் முன் கொண்டுவர சாட்சியங்களின் உயிர்வாழ்வு அவசியமானதாகும். அதற்கான பொறிமுறை பற்றி தமிழ் சமூகம் சிந்தித்தல் வேண்டும்.
ஊறுகாய்| ஜெரா
—
சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஓர் மடல்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம் இருப்பின் வழக்குத் தொடருமாறும், இல்லையேல் விடுதலை செய்யுமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் அரசியல் கைதிகள் மீண்டும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரான அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் 07.08 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இதன் போது தம்மை ஏன் விடுதலை செய்யமுடியாது? என அரசியல் கைதிகள் கேள்வியெழுப்பியதாக அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி அவர்கள் தெரிவிக்கையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பலர் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
—
ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் கூட்டமையால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை -கோத்தா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.
தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம்.
அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள் நாம் மறந்தே போய்விட்டோம். இந்த நாளில் சர்வதேசம் சத்தமின்றி யுத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற போதுதான், தமிழகளின் அழிவு அல்லது அழிப்புக்குரிய நிகழ்ச்சி நிரல்கள் தொடங்கப்பட்டன. தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளுவதற்கான வியூகங்கள் அமைக்கப் பட்டன. சர்வதேசம் தமிழர் தாயகத்தை சுற்றி வளைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கின. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியைச் சுற்றி ஆசிய மற்றும் தெற்காசியாவின் அதிகார மையங்களை ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்தே தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமது அரசியல் இருப்பை தக்க வைக்க, அல்லது மீட்டெடுக்க விழுந்த அடிகளை தாள்பணிந்து வாங்கிக் கொண்டு அகிம்சைவழியில்தான் தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. அகிம்சைப் போராட்டம் முற்றுப் பெற்று ஆயுத வழியில் பயணிக்க தொடங்கிய எழுபதுகளில் இருந்து, கட்டம் கட்டமாக சர்வதேச நாடுகள், தமிழர்களுக்கும் ஆட்சியில் இருந்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கும் இடையில் வந்து போகத் தொடங்கிவிட்டன.
இதனால்தான் ஆரம்பத்தில் உள்வீட்டுப் பிரச்சனையாக இருந்த இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. வல்லரசுகள், வல்லரசுகளை தாங்கி நிற்கும் ஐ.நா, தகுதி இல்லா விட்டாலும் வல்லரசாகத் துடிக்கும் மற்றும் சில நாடுகள் இந்த இனப்பிரச்சனைக்குள்ளும், அல்லது மத்தியஸ்தத்துக்கும் என உள்ளே வந்து போயின.
இன்று தமிழர்கள்தான் வீழ்ந்தார்கள், தோற்றார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், நாம் தொடர்ந்து வருபவற்றை தமிழர்கள் என்கிற பொது அடிப்படையில் புரிந்து கொண்டு செல்லவேண்டியது அவசியம். தமிழர்களின் இராணுவ படை பலம், மற்றும் படைநகர்த்தல் தந்திரோபாயம் பற்றி கேள்வியும் வியப்பும் கொண்ட சர்வதேச நாடுகள்; (வல்லரசுகள் உட்பட) அவர்களின் அரசியல் இராஜ தந்திரம் மற்றும் அரசியல் மேலாண்மை பற்றி முழுமையாக புரிந்தும் தெரிந்தும் கொண்டது மேலே குறிப்பிட்ட அந்த நாட்களில் தான். அந்த நாட்களில் என்னதான் நடந்தது? 2003 ம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடை பெற்ற “இலங்கைக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமான உதவி வழங்கும் மாநாடு”.(The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka ) ப்ப்பூஊ இதுதானா? என்று நீங்கள் கேட்கலாம். இதுதான். இதேதான். இதே மாநாட்டு முடிவில்தான் தமிழர்களை, தமிழர்களின் வலிமையை, பேரம்பேசும் சக்தியை அழிக்க மாநாட்டு முடிவில் சர்வதேசம் தமக்குள்ள தீர்மானித்ததாகச் சொல்லப்படுகிறது.
நீங்கள் கேட்கலாம், “தமிழர் தரப்பில் இருந்து இந்த மாநாட்டுக்கு யாருமே செல்லவில்லையே? அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லையே” என்று. ஆம் . தமிழர் தரப்பில் இருந்து யாருமே செல்ல வில்லை. செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும், முடிவுகளும் கூட தமிழர் தரப்பிடம் இருக்கவில்லை. ஆனால், மாநாட்டுக்கு போகாமல் விட்டதுதான் சர்வதேசத்துக்குப் பிரச்சனையாக இருந்தது. அதுதான் அவர்களுக்குள் உறுத்தலை ஏற்படுத்தியது. 51 உதவி வழங்கும் நாடுகள், 22 உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அதன் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப் பட்ட இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு பிரதி நிதிகளும் கலந்து கொண்டே ஆகவேண்டும். அதற்கான அழைப்புகள் நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு முந்தய பேச்சு வார்த்தை மேசைகளிலேயே பேசப்பட்டாகி விட்டது.
சரி அந்த மாநாட்டில் என்னதான் நடக்கும்? என்னதான் நடந்தது? போரில் சம்பந்தப் பட்ட சமபங்குள்ள இரு பக்க பிரதி நிதிகளும் மாநாட்டுக்கு கட்டாயம் சமூகம் தருவதுடன், அந்த சர்வதேச பிரதிநிதிகளின் அரங்கத்திற்கு முன் அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடவேண்டும். அப்படி கைச்சாத்து இட்டால் இலங்கைக்கான அபிவிருத்திக்கு பல கோடி ட்ரில்லியன் டொலர்கள் உதவித் தொகையாக வந்து சேர்ந்திருக்கும். சர்வதேசம் வழங்கியிருக்கும். ஒருதரப்பு அதில் கலந்து கொள்ளாமல் விட்டால் கூட முழுத்தொகையும் கிடைக்காது. (பயணச் செலவை வழங்குவார்கள் போல) அப்போது அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் இலங்கை அரசு சார்பாக கலந்து கொண்டவர். கலந்து கொண்டதற்காக குறிப்பிட்ட தொகை வழங்கப் பட்டது. அந்த பணத்தில் நிலைமை பற்றி எந்த அதிகார பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.
தமிழர் தரப்பில் இருந்து யாருமே வரமாட்டோம் என்று ஒரே பிடியாக மறுத்து விட்டார்கள். தமிழர் தரப்பில் இருந்து அதற்காக கூறப்பட்டவை நொண்டிச் சாட்டுகள் என்று சர்வதேசத்திற்கும் தெரியும். அதற்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மாநாட்டுக்கு தம்மை அழைக்க வில்லை என்கிற குற்றச் சாட்டுடன், சரிசம பங்காளிகள் என்கின்ற வகிபாகத்தை சர்வதேசம் கவனமெடுக்கவில்லை என்றும், அது பக்க சார்பானது என்றும், ஏற்கனவே தமிழர் தரப்பு தற்காலிகமாக பேச்சு வார்த்தையில் இருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரப்போகும் சர்வதேச உதவி வழங்கும் இந்த மாநாட்டையும், அதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமப் பொறிகளையும் கருத்தில் கொண்டு, அதனை எப்படி புறக்கணிக்கலாம் என்று சிந்தித்த தமிழர் தரப்புக்கு கிடைத்த அல்வாதான் அமெரிக்காவில் நடந்த “இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு” தொடர்பான கலந்தாய்வில் அழைப்பு விடுக்கப்படாமையாகும். அமெரிக்காவில் உள்ள “விடுதலைப்புலிகள் மீதான தடை” தான் காரணமாகியிருந்தது.
பெரும் பொறிகளை மறைத்து வைத்து விட்டே சர்வதேசம் டோக்கியோவிற்கு தமிழரை அழைத்ததுதான் உண்மை. தமிழர் தரப்பு நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளூரிலேயே பலர் ஆசைப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் நினைத்துப் பார்க்கவே முடியாத அவ்வளவு தொகையான பணம் வரக் காத்திருந்தது. தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று இறுதி மணி நேரம் வரையும் சர்வதேசம் நம்பியது. எத்தனையோ தொலை பேசி அழைப்புக்கள் வன்னி மையத்தை நோக்கி பறந்தன. உலகத்தலைவர்கள்- தூதுவர்களின் வேண்டுகைகள் செய்திகள், பத்திரிகைகளில் பிரசுரமாகின.
நடுநிலையாளர்களின் கெஞ்சல்கள், சில முதலாளி நாடுகளின் வெருட்டல்கள், கண்டிப்புக்கள், கண்டனங்கள் இப்படிப்பல நாடகங்கள் ஜூன் 8 ம் திகதி அதாவது மாநாட்டுக்கு முந்தய நாள் வரையும் போட்டுக் காட்டினார்கள். அதற்காக கட்டுநாயகாவில் சிறப்பு விமானம் ஒன்றும் சிறப்பு கடமையில் விமானப் பணியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பு தானும் தன்பாடுமாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்களில் வரும் மஞ்சள் சோறும் கோழி இறைச்சிக் கறியோடு கத்தரிக்காய் பால்கறியையும் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழர் தரப்பு ஒரு விதமான மௌனத்தை கடைப் பிடித்தார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்த மௌனத்தின் பின்னால் ஒரு ஆத்ம திருப்தியை தமிழர் தரப்பு பெற்றுக்கொண்டதே உண்மை என்பது அப்போது வெளியார் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன் இப்போதும் அதனை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் கண்ணோட்டம் பலருக்கு இல்லை என்பதே உண்மை. அவர்களின் மௌனங்களுக்குப் பின்னால், கூட நின்று உயிரும் சதையுமாக களமாடிய மாவீரக்ள், போராளிகள் பொதுமக்களின் அர்ப்பணிக்கு இந்த உலகில் எதனையும் கொண்டு ஈடு செய்ய முடியாது என்பதே அன்றைய தமிழர் பிரதிநிதிகளின் மௌனத்துக்குக் காரணம். ஆனால், உலக நாடுகளுக்கும், முதலாளிகளுக்கும் மாமா வேலைபார்த்த யசூசி அகாசிக்கு ஏமாற்றமே மிஞ்சிப் போனது. சப்பை மூக்கு வீங்கிப் போனது.
அபிவிருத்தி என்கிற பெயரில் இதுவரை உலக போராட்டங்கள் பல நசுக்கப் பட்டிருக்கின்றன. அழிக்கப் பட்டிருக்கின்றன. உருத்தெரியாமல் போகச் செய்யப் பட்டிருக்கின்றன. தமிழர் தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கையொப்பம் இட்டிருந்தால் எந்த முடிவையும் தனித்து எடுக்க முடியாது என்பதுடன், பணம் கொடுத்த நாடுகள் காரணம் இன்றி இலங்கைக்குள் நுழையும். கால் பாதிக்கும், கண்காணிக்கும். கேள்வியே கேட்கமுடியாது. ஏற்கனவே சிங்கள பேரினவாததுக்குதான் அடிமை. கையொப்பம் இட்டிருந்தால் அனைத்து நாடுகளுக்கும் அடிமையாகப் போக வேண்டி வந்திருக்கும். தமிழர்களுக்கான தீர்வு என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இப்பொழுது ஓரளவுக்காவது பேச்சில் தீர்வு பற்றி சொல்கிறார்கள்.
தமிழர்கள் மீளவே முடியாத, முன் வைத்த காலை திருப்பிக் கூட வைக்க முடியாத வரலாற்றுத் தடத்தில் போராட்டம் பயணித்திருக்கும். தொலைந்திருக்கும். தமிழர் விடுதலைப் போராட்டத்தை தவிர உலகில் நடந்த அத்தனை விடுதலைப் போராட்டங்களுக்கும் எதோ ஒரு குழு அல்லது நாடு உதவி செய்திருக்கும். செய்திருக்கின்றன. ஆனால் தமிழர் போராட்டம் மட்டும்தான் சொந்த மக்களின் துணையுடன் நடாத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்புடன் மட்டுமே கொண்டு நகர்த்தப்பட்டது. அவற்றை அடகு வைக்க தமிழர் தரப்பு ஒருபோதும் விரும்பவில்லை, எப்போதும் அதற்குத் தாயாருமில்லை என்பதும் காரணம். பணத்திற்கு அடிமையாகப் போக தமிழர் தரப்பும், தலைமையும் என்றுமே நினைத்ததுமில்லை.
அதனாலென்ன வெளிநாடுகள் இலங்கைக்குள் நுழைந்தால் என்ன? நுழைந்துவிட்டுப் போகட்டுமே? இங்கிருந்து கொண்டு போக அவர்களுக்கு என்ன இருக்கிறது இங்கே? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். இங்கே என்ன இல்லை? என்பதுதான் தமிழர் பிரதிநிதிகளின் மறு கேள்வியாக இருந்தது. உள்ளே நுழையும் வெளிநாடுகள் மற்றும் முதலாளிகளின் இலக்கு தமிழர்களாகிய எமது வாழ்க்கையின் மீதான அக்கறையில்லை. எமது இழப்புகளுக்கு மருந்து கொண்டுவரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு எமது வளங்கள் மீதுதான் கண். 2019 இன்று எமது வளங்கள் பங்கு போடப்பட்டிருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
மன்னார் பேசாலையில் மசகெண்ணை, புல்மோட்டையின் கனிம மணல், தமிழர்களின் காட்டு வளம், மிகப்பெரிய பரப்பளவில் வடக்கு கடலின் மீன்வளம், பராமரிக்கப்பட்டால் வற்றாத நன்னீர்வளம், இயற்கையாகவே அமைந்த பல நீரேரிகளைக் கொண்ட துறைமுக கடற்கரைகள், எண்ணெய்க் குதங்கள், நிலத்தடி கனிமங்கள் என்று எம்மிடம் என்ன இல்லை? இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் பயன்பாட்டிற்கு அப்பால் யார்யாரோ இன்று கொள்ளையடித்துப் போகிறார்களே? இன்று இலங்கை அரசின் உதவியுடன் கொள்ளைபோகும் இந்த வளங்கள், அன்று நாம் கையொப்பம் போட்டிருந்தால் அன்றே கொள்ளையிடத் தொடங்கியிருப்பார்கள்.
அந்த மாநாட்டில் அவர்கள் தரும் பணத்திற்கு இந்த எமது இயற்கை வளங்கள் ஈடாகுமா? எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கருத்தில் கொண்டே தமிழர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்தார்கள். எதற்காகவாவது இனி ஒரு உலக யுத்தம் உலகில் எந்த மூலையில் ஏற்பட்டாலும் இலங்கையின் பெறுமதி உங்களுக்கு அப்போது புரிந்துகொள்ள முடியும். இன்று சீனம் வந்திட்டு, அரபி வந்திட்டு, ஹிந்தி வந்திட்டு என்று புலம்பும் நீங்கள் இன்னும் ஆழமாக வரலாறைப் படிப்பது அவசியமானது.
இந்த சர்வதேசத்தின் தோல்வியைப் பற்றி, மூக்குடைவைப் பற்றி சர்வதேசம் அமுக்கியே வாசித்தது. ஊடகங்கள் இது பற்றி பெரிதாக கணக்கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு ஆச்சரியம்! இந்த இடத்தில் இருந்து தமிழர் தரப்பு எப்படி தப்பிக் கொண்டது? (அவன் ஒருவனைத் தவிர யாருக்கும் இது தெரியாது) தப்பினார்கள் என்பதைவிட கற்றுக்கொண்டார்கள் என்பது பொருத்தமானது.
எந்த சலனமும் இல்லாமல் சர்வதேசம் பின்னிய, “அபிவிருத்தி” என்ற சூழ்ச்சி வலையில் சிக்காமல் தமிழர் தரப்பு தப்பிக்க கொண்டது. இத்தனை நாடுகளின் அரசியல் நகர்வுகளையும் அவர்கள் புரிந்து தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த சில்லிப் பையன்களிடமா இவ்வளவு வலிமை? அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம், தலைமையும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் பெரும் தலைகளும் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். சண்டை என்றால் அடித்து நசுக்கலாம். இது அரசியல். கத்தியில் நடக்க வேண்டும். அதுவும் ஒரு போராட்ட அமைப்பு இவ்வளவு முன்னேற்றகரமானதா? உலக அரசியலில் தெளிவு கொண்டதா? என்று சிந்தித்தது சர்வதேசம்.
இவர்களை வளரவிட்டால் இந்துசமுத்திரத்தை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் ஆளுகை செய்வது கடினம். ஆகவேதான் அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரல்களை எழுதத் தொடங்கியது சர்வதேசம். அதனைப் புரிந்து கொண்ட தமிழர்களும் அடிபட்ட நாகம் கொத்தவரும் என்றும் தெரிந்திருந்தார்கள். அதனை எதிர்கொள்ள தம்மால் இயன்ற எதிர்நடவடிக்கைகளை செய்யத் தவறவில்லை. அடிமையாக மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்று தமக்கான வழியை பலவலிகளோடு ஏற்று நடந்தார்கள்.
அபிவிருத்தி என்ற ஒன்றிற்குள்ளால் போனால் பல விடயங்களை கதைத்துப் பேசி பெற்றுக் கொள்ளலாம்தானே என்று பலர் அன்று கேட்டார்கள். ஒரு இராணுவ சமநிலைச் சக்தியாக நின்று அதுவரை பேசிய பேச்சுகளுக்கே எந்த அசைவும், தீர்வும், நம்பிக்கை வாக்குறுதிகளும் கிடைக்காத பொழுது இனி எதனை நம்பி அவர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போக முடியும் என்று கேள்வி கேட்ட இவர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்.
மாநாட்டுக்குப் போய் கையெழுத்து போட்டால் பணமாவது வந்திருக்குமே என்றும் கேட்கலாம். பணம் வந்திருக்கும். ஆனால் யாருக்கு வந்திருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. 2004 இல் நடந்த ஆழிப்பேரலை (tsunami) அனர்த்தங்களுக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக தமிழர் தரப்பும் இலங்கை அரசும் சேர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டிய ஆக்க குறைந்த சம அதிகாரமுள்ள “சுனாமிக் பொதுக் கட்டமைப்பு” என்கின்ற ஒன்றைக்கூட இலங்கை அரசும் மத அடிப்படைவாத அமைப்புகளும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் அந்த பணம் தமிழர்களுக்காகவும் பயன்பட்டிருக்குமா? என்ற கேள்வி விசாலமானது.
முன்னர் இப்படிப் பல சம்பவங்களில் சிங்கள பேரினவாதத்தின் மனோநிலையை புரிந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகள், “வரலாறு எமது வழிகாட்டி” என்கின்ற அடிப்படையிலேயே போராட்ட பாதையெங்கும் பல ஆரோக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.
இந்த சம்பவங்கள் நடந்து ஐந்து வருடங்களில் தமிழர் அழிப்பிற்கான யுத்தம் பெருவீச்சில் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அது முடிவுக்கட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. விண்ணிலிருந்து, கடலின் தொலைவிலிருந்து, அருகே உபகண்டத்திலிருந்து பல நாடுகள், இரத்தம் சொட்டச் சொட்ட தமிழர் சந்ததி கருகி புதையும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன . வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தன. இன்றைக்கு மருந்து போட வந்திருக்கிறார்கள். எமது மக்களின் காயங்கள் ஆறாதவை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. சுயநல வஞ்சக அரசியலில், தமிழர்களிடம் தோற்றுப் போன சர்வதேசம் ஒன்று கூடி, உயிரினங்களுக்கு எதிராக பயன்படுத்தவே கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தி பலி(ழி) வாங்கிக் கொண்டது.
புதைக்கப் படுபவைகள் எல்லாம் விதைகளா? என்று எமக்குத் தெரியாது. ஆனால் மூளைத்திறன் உள்ள விதைகள் தூவப் பட்டுதான் இருக்கிறது. காலமழை பொழியும் பொழுது முளைவிட்டே ஆகும். முளைகள் வானுயர கிளை பரப்பியே ஆகும் என்கின்ற நம்பிக்கையில் நாமும்.
எழுதியது : புலர்வுக்காக .. ப.வித்யாசாகர்
எம் தேசத்தின் வளங்கள் இவை … இப்போது ?
2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.
பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.
1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.
அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.
அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)
பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.
தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.
அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.
அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.
இந்தக் கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகள்.
கரும்புலி கப்டன் திரு
கரும்புலி மேஜர் திலகன்
கரும்புலி லெப். ரங்கன்
கரும்புலி கப்டன் நவரட்ணம்
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து விட, துரத்தியவர்கள் தடுமாறிப் போனார்கள்.
பிடிக்க முடியவில்லை. ஆற்றாமையால் கண்டபடி சுட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்படியே மறைந்திருந்தவன் , இரவானதும் மெல்ல மெல்ல ஊரத் துவங்கினான். இஅயலாமையொடு ஊர்ந்தவன், எதிரியின் அரணைக் கடந்து வந்து சற்றுத் துரத்துக்குள்ளேயே மயங்கிப் போனான். பாவம் முகாமிற்குத் தூக்கிவந்து ‘சேலைன்‘ ஏற்றியபோது கண்திறந்தவன்.
தப்பித்து வந்தது ஒரு அதிஷ்டம் என்று தான சொல்லவேண்டும்.
இப்படியாக….. எத்தனையோ மயிரிழைகளில் தப்பி, அதிஸ்டவசமாக மீண்டவர்கள் கொண்டுவந்த தரவுகள்தான் , பலாலிப் பெருந்தலத்தின் மையத்தில் குறிவைக்க எங்களுக்கு அத்திவாரமாக அமைந்தன.
பலாலித் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் தாக்குதல்களையும் போலவேதான் அதுவும்! வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அது.
எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி!
தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது; உன்னதமானது!
தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே…. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல்; தளர்ச்சியற்ற பிணைப்பு!
அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை. அவர்களுடைய அந்த “மனநிலை” தான்.
எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான தலமென்ற பெருமையுடையது பலாலி முக்கூட்டுப் படைத்தளம்.
வடபுலப் போர் அரங்கின் பிரதான கட்டளைத் தலைமையகமும் அதுவேதான்.
தனிக்காட்டு ராயாவாக ஒரு சிங்கம், கால்களை அகல எறித்துவிட்டு அச்சமற்ற அலட்சியத்தோடு படுத்திருப்பதைப் போல ….
30 சதுர மெயில் விஸ்தீரணத்தில் ….
அகன்று நீண்டு விரிந்து கிடக்கிறது அந்தப் பெருந்தளம்.
இவை தெரியாத விடயங்களல்ல; ஆனால், ஆச்சரியம் என்னவெனில்…
“என்னை எவரும் ஏதும் செய்துவிட முடியாது” என்ற இறுமாப்போடு நிமிர்ந்திருக்கும் அந்த முக்கூட்டுத்தளத்தினுள் நுழைந்து, எங்களது வேவுப்படை வீரர்கள் குறிவைத்த இலக்கு, அதன் இதயமாகும்.
அது, சிறீலங்கா விமானப்படையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைமையகம் என்ற கேந்திர மையமாகும்.
இந்த முப்படைக் கூட்டுத்தளத்தை சுற்றி வர, பலமான் உருக்குக்கவசம் போன்று, உள்ள அதன் முன்ன்னணிப் பாதுகாப்பு வியூகத்தை ( Front Defence line ) ஊடுருவி நுழைவதென்பதே, ஒரு இமாலயக் காரியம்தான.
இமையாத கண்களுடன் , துயிலாமல் காத்திருக்கும் பகைவனின் பத்து ‘பற்றாலியன்‘ படைவீரர்கள்.
சரசரப்புக்கெல்லாம் சடசடத்து, சள்ளடையாக்கிவிடத் தயாராக அவனது சுடுகருவிகள்.
உலகெங்கிலும் இருந்து போறிக்கண்ணிகளையும், மிதிவெடிகளையும் வாங்கி வந்து, விதைத்து உருவாக்கியிருக்கும் அவனது கண்ணிவெடி வயல் ( Mines field ).
வானுலக நட்சத்திரங்களின் ஒளிர்வினைக் கொண்டே, பூவுலக நடமாட்டங்களைத் துல்லியமாய்க் காட்டும் அவனது ‘இரவுப் பார்வை‘ சாதனங்கள் ( Night vision ).
தேவைக்கேற்ற விதமாகப் பயன்படுத்தவென, தேவைக்கேற்ற அளவுகளில் கைவசமிருக்கும் அவனது தேடோளிகள் ( Search Lights ).
அடுக்கடுக்கான சுருள் தடைகளாயும், நிலத்துக்கு மேலால் வளைப்பின்னலாயும் குவிக்கப்பட்டிருக்கும் அவனது முட்கம்பித் தடுப்புகள்.
வன்னிப் பக்கத்துக் குளங்களைப் போல, உயர்ந்த அரண்களாக எழுப்பப்பட்டுள்ளன அவனது அணைக்கட்டுகள்.
உள்ளுக்கிருப்பதைக் கண்டு அறிவதற்கு வெளியில் இருந்து பார்க்க முடியாமல், நிலத்திலிருந்து வானுக்கு எழும்புகின்ற அவனது தகரவேலி.
எங்கிருந்து எங்கு என்று இடம் குறியாது, எப்போதிருந்து எப்போதுக்குள் என்று காலம் குறியாது, ரோந்து சுற்றிக்கொண்டு திரியும் அவனது ‘அசையும் காவலணிகள்’ ( Mobile Sentries ).
அத்தனை பலங்களினாலும் பலம் திரட்டி அரசு பலத்தோடிருந்தனர் எங்கள் பகைவர்.
“எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும், தேடுங்கள்” என்றார் எங்கள் தேசியத்தலைவர்.
நூல் நுழையும் ஊசிக்கண் துவாரம் தேடிய எம் வேவுவீரர்கள், அந்த ‘மரண வலயத்தை‘ ஊடுருவிக் கடந்து, சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார்கள்.
வெளியில் தனது முன்னணிக் காவலரண்களிலிருந்து, அசைக்க முடியாத தன்னுடைய பலத்தை எண்ணிப் பகைவன் இருமாந்துகொண்டிருக்க.
உள்ளே, சுமார் பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனது மையத்தலத்தில், விமான ஓடுபாதைகளில், நடந்து வானுர்திகளை வேவு பார்த்துக்கொண்டிருந்தனர் எம் வீரர்கள்.
அவர்களுடைய முயற்சிதான் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கான திட்டத்திற்கு கருக்கொடுத்தது. அவர்களது ஓய்வற்ற கடும் உழைப்பு, அந்தத் திட்டத்தை படிப்படியாக வளர்த்து முழுமைப்படுத்தியது.
தாக்குதல் இலக்கை வேவு பார்த்து. தாக்குதலணி நகரப் பாதை அமைத்து, தாக்குதல் பயணத்தில் ‘தரிப்பிடம்‘ கண்டு தாக்குதலுக்கான நாள் குறித்த அவ் வேவுப்புலி வீரர்கள்.
கரும்புலி வீரர்களுக்கு உறுதுணையாக வழிகாட்டிச் செல்லத் தயாராகி நின்றார்கள்.
தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது.
பெரிய நோக்கம்;
அரசியல்ரீதியாகவும், படையியல்றீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறக்கூடிய ஒரு நடவடிக்கை.
எமது மக்களின் உயிர்வாழ்வோடு பினைந்ததும் கூட.
ஆனால், அது ஒரு பலமான இலக்கு; உச்சநிலைப் பாதுகாப்புக்கு உட்பட்ட கேந்திரம்.
செல்பவர்கள் வேலமுடியும்; ஆனால் திரும்ப முடியாது.
சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து அதனை எதிர்கொள்வதற்கு நிகரான செயல் அது.
இருப்பினும் தாக்குதல் தேவையானது.
வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கான வழிமுறை தீர்மானிக்கப்பட்டது.
அது ஒரு கரும்புலி நடவடிக்கை.
நான் முந்தி நீ முந்தி என்று நின்றவர்க்குள் தெரிவாகியவர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது ஒரு தாக்குதலணி.
கெனடி அதன் களமுனைத் தளபதி; அவனோடு இன்னும் 6 வீரர்கள்.
சிர்ருருவி மாதிரிப் படிவமாக ( Model ) அமைக்கப்பட்டிருந்த பலாலி வான்படைத் தளத்தையும், அதன் ஓடுபாதைகளையும் சுற்றி அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
தளபதி கடாபி அவர்களுக்குரிய தாக்குதல் வழிமுறைகளைத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொருவருக்குமுரிய இலக்குகளைக் காட்டி விளக்கினார். ஒவ்வொருவரும் எவ்விதமாகச் செயற்ப்படவேண்டும் என்பதை அவர் சொல்ல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்குரிய ஒத்திகைப் பயிற்சிகள் ஆரம்பித்தன.
”பயிற்சியைக் கடினமாகச் செய்; சண்டையைச் சுலபமாகச் செய்” என்பது ஒரு படையியல் கோட்பாடு.
அந்தக் கோட்பாட்டின்படியே அவர்கள் செயற்ப்பட்டார்கள்.
ஆகா…..! அந்த நேரத்தில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அவர்களை;
மெய்யுருகிப் போயிருப்பீர்கள்.
எவ்வளவு உற்சாகம்; எவ்வளவு ஆர்வம்; ஓய்வற்ற பயிற்சிகளில் அவர்கள் காட்டிய மனமார்ந்த அந்த ஈடுபாடு….. !
‘எப்படி வாழவேண்டும் ?‘ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிற எங்களுக்குல்லிருந்து தானே அவர்கள் போனார்கள்!
உயிரைக் கொடுத்துவிட்டு எப்படி வெற்றியைப் பெறவேண்டும் என்றல்லவா ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குள் இருந்திருக்கக்கூடிய தேசாபிமானத்தை நினைத்துப் பாருங்கள்; அவர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய தமிழபிமானத்தை எண்ணிப் பாருங்கள்.
எங்கள் தலைவன் ஊட்டி வளர்த்த மேன்மை மிகு உணர்வு அது.
தங்கள் கடைசிக் கணங்களில்.
தங்களின் உயிர் அழிந்துவிடப் போவதைப் பற்றியல்ல; தங்களின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டியதைப் பற்றியே அவர்கள் சதா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்டவர்களிடம் போய், “நீங்களில்லையாம்; ஆட்களை மாத்தப்போகினமாம்” என்று சொன்னால் எப்படியிருக்கும்?
அப்படி ஒரு கதை, கதையோடு கதையகா வந்து காதில் விழுந்தது.
“குழுக்கள் போட்டு புதுசா ஆக்களைத் தெரிவு செய்யப் போறேனேன்று சொர்ணம் அண்ணன் சொன்னவராம்” என்றது அந்தத் தகவல்.
கெனடி குழம்பிவிட்டான். அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தளபதியிடம் போய் சண்டை பிடித்தான்.
“நான் கட்டாயம் போக வேணும்” என்று விடாப்பிடியாய்ச் சொன்னான். “வேணுமென்றால் அவர் மற்ற ஆட்களை மாத்தட்டும். குழுக்கள் தெரிவுக்கு என்ற பெயரைச் சேர்க்க வேண்டாம்” திட்டவட்டமாகக் கூறினான்.
எந்த மாற்றமும் செய்யப்படாமலேயே எல்லா ஒழுங்குகளும் பூர்த்தியாகிவிட்டன.
அவர்களுடைய நாள் நெருங்கிவிட்டது.
கடைசி வேவுக்குப் போனபோது, அசோக்கிடம் ஜெயம் சொன்னானாம்.
“கரும்புலிக்குள்ளேயும் நாங்கள் வித்தியாசமாகச் செய்யப்போகின்றோம்; இது ஒரு புது வடிவம். நாங்கள் இவற்றை அழிக்கும்போது சிங்களத் தளபதிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.”
தேசியத்தலைவர் வந்து வழியனுப்பிவைத்தார் ;
அவர்களுக்கு அது பொன்னான நாள்.
ஒன்றாயிருந்து உணவருந்திய தேசியத்தலைவர், கட்டியணைத்து முத்தமிட்டு விடை தந்தபோது.
கரும்புலிகளுக்குள்ளே உயிர் புல்லரித்தது.
“நான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றேன்”, தேசியத்தலைவர் வழியனுப்பி வைத்தார்.
மேலே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில்.
வெகு உல்லாசத்துடன்.
உலங்கு வானூர்த்தி ஒன்று பலாலிப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அட்டகாசமாய் சிரித்துவிட்டு நவரட்ணம் சொன்னான். “இன்றைக்கு பறக்கிறார் , நாளைக்கு நித்திரை கொள்ளப் போகிறார்.”
நீண்ட பயணத்திற்குத் தயாராகி, சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டு நின்றவர்களிடம், “எல்லோரும் வெளிக்கிட்டு வீட்டீர்கள் ….. துரதேசத்துக்குப் போல இருக்கு……”
தளபதி சொர்ணம் கேட்க்க,
கண்களால் புன்னகைத்து ரங்கன் சொன்னான்.
“ஓமோம் ….. கிட்டண்ணையிட்ட…. திலீபண்ணை…. இப்படி நிறைய தெரிஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம்.”
பள்ளிப் பெருந்தளத்தின் முன்னணிக் காவலரன்களுக்கு மிகவும் அருகில் எங்கள் தளபதிகளிடம் விடைபெற்றுச் செல்லும் போது, நின்று திரும்பி தளபதி செல்வராசாவிடம் “அண்ணன்மார் கவனமாகப் போங்கோ ‘செல்; அடிப்பான்” என்று சொல்லிவிட்டுப் போனான் திரு.
கைகளை அசைத்து அசைத்துச் சென்ற கரும்புலிகள் இருளின் கருமையோடு கலந்து மறைந்தார்கள்.
தாக்குதலணி, தாக்குதல் மையத்தைச் சென்றடைவதே ஒரு பெரிய விடயமாகக் கருதப்பட்டது.
தாக்குதலைச் செய்வது இன்னொரு பெரிய காரியம்.
புறப்பட்டுப் போகும் போது அவர்களிடம் இருந்தது தளராத உறுதி, தணியாத தாகம், எல்லாவற்றையும் மேவி, அசையாத தன்னம்பிக்கை.
“அம்மா !
நான் உங்கள் பிள்ளைதான்; ஆனால், தமிழீழத் தாய்மார்கள் எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளை…..
….. அம்மா ! என்னுடைய ஆசை மக்கள் மகிழ்ட்சியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதுவே. அதனால்தான் உயிரைப் பெரிதாக நினையாமல் நான் போராடப் போனேன்.
அதனால், எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்; நீங்களும் சந்தோசமாக இருக்க வேண்டும்.
…. எமது மண் சுதந்திரமடைய வேண்டும். அது நடைபெற வேண்டுமானால் மக்கள் எல்லோருமே தாயகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகக் கிளர்ந்தெழ வேண்டும்.
இதுதான் என் கடைசி விருப்பம்”
ஒகஸ்ட் திங்கள் முதலாம் நாள்.
பகற்பொழுது பின்வாங்கிக்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டை இருள் விழுங்கிக்கொள்ள, பலாலிப் பெருந்தளத்தை, மின்னாக்கி ஒளிவெள்ளத்தில் அமிழ்த்தியது!
மாலை 6.30 மணியைக் கடந்துவிட்டிருந்த நேரம்.
தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
வேவுப் புலி வீரர்கள் முன்னே; கரும்புலி வீரர்கள் பின்னே.
மாவிட்ட புரத்தையும், தெள்ளிப்பளையையும் இணைக்கும் பிரதான் வீதியும், தச்சன்காட்டிலிருந்து வந்து அதனைச் சந்திக்கும் குறுக்கு வீதியும் இராணுவச் சப்பாத்துக்களால் மிதிபட்டு பேச்சு மூச்சற்றுக் கிடந்தன.
வீதியோரமாக, தட்ச்சன்காட்டடியில் அணி நகர்ந்துகொண்டிருந்த சமயம் ,
அவதானமாக; மிக அவதானமாக அவர்கள் ஊர்ந்துகொண்டிருந்த போது.
தீடிரென தெல்லிப்பளை பக்கமகாகக் கேட்டது ‘ட்ரக்‘ வண்டிகளின் உறுமல்.
பயங்கர வேகத்தோடு அது நெருங்கிக்கொண்டிருந்தது.
“நேராக மாவிட்டபுரம் பக்கம்தான் போகப்போறான்” என நினைத்த வேளை, தட்ச்சன்காட்டுப் பக்கமாகவே திரும்பினான். வந்த வேகம் தனியாமலேயே.
நல்ல காலம்…
பளீரென அடித்த ஒழி வெள்ளத்தினுள் மூழ்கிப் போகாமல், பக்கத்திலிருந்த காணிக்குள், எல்லோரும் சம நேரத்தில் பாய்ந்து மறைந்து விட்டார்கள்.
அவர்களைக் கடந்து நேராகச் சென்று, சந்திக் காவலரனடியில் நின்றவன், நின்றானா …..? அந்த வேகத்திலேயே திரும்பி வந்தான்.
‘என்ன நசமடாப்பா …. ? ‘ என நினைத்த வேளை ‘ட்ரக்’ வண்டிகள் இரண்டும் அவர்களுக்கு நேர் முன்னே வந்து சடுதியாய் தரிக்க ….
சில்லுகள் கிளப்பிய புழுதியோடு, புற்றீகலாய்க் குதித்தனர் சிங்களப் படையினர்.
குழல் வாய்கள் தணலாக துப்பாக்கிகள் பேசத்துவங்கின. ‘பொம்மருக்கென்று‘ காவி வந்த நவரட்னத்தின் “லோ” ஒன்று, ‘ட்ரக்‘ வண்டியைக் குறிவைத்து முழக்கியது.
எல்லோரும் ஓடத் துவங்கினர். அது சண்டை போடக்கூடிய இடமல்ல; சண்டை பிடிப்பதற்குரிய நேரமுமல்ல.
அவர்கள் அங்கே போனது இதற்காக்கவுமில்லை.
எங்கே தவறு நடந்தது ……? எங்காவது சுத்துச் சென்றிக்காரன் கண்டானோ….? ‘டம்மி‘ என்று நினைத்த பொயின்ரிலிருந்து பார்த்துச் சொன்னானோ? எங்காவது வீடு உடைத்து சாமான் எடுக்க வந்த ஆமி கண்டு அறிவித்தானோ….?
என்னவாகத்தான் இருந்தாலும், அவர்கள் சென்ற சொக்கம் கெட்டுவிட்டது.
தட்சன்காட்டில் நிகழ்த்த அந்த துரதிர்ஷ்டம்தான், எங்களது தாக்குதல் திட்டத்தையே திசைமாற்றியது.
“திரு” இல்லை “ரங்கன்” இல்லை; “புலிக்குட்டிக்கு” என்ன நடந்ததென்று தெரியவில்லை; ராஜேஷ் ஒரு வழிகாட்டி. அவனையும் காணவில்லை.
எங்கள் தாக்குதலணி சேதாரப்பட்டுவிட்டது.
ஏனையோர் ஒரு பக்கமாக ஓடியதால் சிதறாமல் ஒன்றாயினர்.
தாம் வந்த காரியத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் எழுந்துவிட்டத்தை, எஞ்சியவர்கள் உணர்ந்தனர்; இந்தச் சண்டையோடு எதிரி உசாரடைந்துவிடுவான். கரும்புலி வீரர்கள், வேவுப்புலி வீரர்களை அவசரப்படுத்தினர்.
“உடனடியாக எங்களைத் தாக்குதல் முனைக்குக் கூட்டிச் செலுங்கள்.”
அடுத்த சில மணி நேரங்களின் பின் பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில்….. அவர்கள், வான்படைத் தளத்தின் முட்கம்பி வேலிக்கருகில் தயாராகிக்கொண்டிருந்தனர்.
பிரதான கட்டளையகத்தோடு கெனடி தொடர்பு எடுத்தான். நடந்து முடிந்த துயரத்தை அவன் அறிவித்தான்.
“7 பெருக்கென வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் எஞ்சியிருப்பது 4 பேர் மட்டுமே” என்பதை அவன் தெரியப்படுத்தினான். “எதிரி முழுமையாக உசார் அடைந்துவிட்டதால், இருக்கிரவர்களுடன் உடனடியாக தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினான். “தாமதிகின்ற ஒவ்வொரு நிமிடமும் இலக்குகள் தப்பிப் போக நாங்கள் வழங்குகின்ற சர்ந்தப்பங்கள்” என்பதை விளக்கினான். “தாக்குதலை நிகழ்த்தாமல் திரும்பி, தப்பித்து வெளியேறுவதும் சாத்தியப்படாது” என்பதையும் சொன்னான்.
அவனிடம் சற்று நேரம் அவகாசம் கேட்க பிரதான கட்டளையகம், பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கட்டளைகத்தோடு கலந்து பேசியது. கெனடி சொல்வதே சரியானது எனவும், அதைவிட வேறு வழியில்லை எனவும் பட்டது.
தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
முட்கம்பி வேலிகளை நறுக்கி அறுத்த வேவுப்புலி வீரர்கள் பாதை எடுத்துக் கொடுக்க, வான்தளத்தில் இலக்குகளைத் தேடி கரும்புலி வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.
நவரட்ணம் கடைசியாய் வரைந்த மடலிலிருந்து….
அம்மா! அப்பா!
இனத்துக்கு சுதந்திரமாக ஒரு நாடு இருந்தால்த்தான், எங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு இருக்கும். சுதந்திரமான ஒரு நாடு அமைக்கவே நான் போராட வந்தேன். இனித் தமிழீழத்தில் குண்டுகள் விழக்கூடாது; இதற்காகவே நான் இன்று கரும்புலியாய்ச் செல்கின்றேன்.
என் ஆசை தங்கச்சி!
உனது அடுத்த பரம்பரை, எம் எதிர்கால சந்ததி, மிக மகிழ்ட்சியோடு வாழவேண்டும் என்பதற்காகவே, நான் கனவிலும் நினையாத களம் நோக்கிப் புறப்படுகின்றேன்.
வெல்க தமிழீழம் !
அசொக்கிடமும், ரஞ்சனிடமும் விடைபெற்று அவர்கள் உள்ளே சென்றுவிட, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, இவர்கள் வெளியே திரும்பிக்கொண்டிருந்தனர்.
விடி சாம நேரம்.
படு இருள்.
மிகக் குறுகிய துரத்திர்க்குள் தான் எதனையும் மங்கலாய்த் தன்னும் பார்க்க முடியும்.
மாவிட்டபுரத்திற்க்கு பக்கத்தில் ஒரு குச்சொழுங்கையால் அவர்கள் திரும்பிகொண்டிருந்த போது,
ஒரே ஒரு மணித்துளி……
இருந்தாற் போல்….. அந்த இருளுக்குள் இருளாக …. அவர்களிற்கு முன்னாள்…..
அதென்ன……? நில்லாக் எதோ அசைவது போல உள்ளது!
ரஞ்சனின் கைகளைச் சுரண்டி மெதுவாக, “ஆமி நிக்கிறான் போ ……”, அசோக் சொல்லிமுடிக்கும் முன் தீப்பொறி கக்கிய சுடுகுழழிளிருந்து காற்றைக் கிழித்துச் சீரிய ரவைகள், அசோக்கின் தசைநார்களையும் கிழித்துச் சென்றன!
தலையோ…. கழுத்தோ….. நெஞ்சுப்பகுதியாகவும் இருக்கலாம ….. சரியாகத் தெரியவில்லை….. சன்னங்கள் பாய்ந்து சல்லடையாக்கிச் சென்றன.
“அம் ….” முழுமையாக வெளிவராத குரலுடன், குப்பற விழுந்தான் அந்த வீரன்.
அடுத்த நிமிடத்தில்….
கொஞ்சம் ரவைகளையும் ஒரு கைக்குண்டையும் பிரயோகித்து, அசோக்கையும் பறிகொடுத்துவிட்டு, பக்கத்துக் காணிக்குள் பாய்ந்து ரஞ்சன் ஓடிக்கொண்டிருந்தான்.
முன்பொரு நாள் ….
மயிலிட்டிப் பக்கமாக வேவுக்குச் சென்ற ஒரு இரவில், இராணுவம் முகாமிட்டிருக்கும் பாடசாலை ஒன்றை ரஞ்சனுக்குக் காட்டி, அசோக் மனக்குமுறலோடு சொன்னானாம்.
“இதுதான்ரா நான் படிச்ச பள்ளிக்கூடம்; இண்டைக்கு இதில சிங்களவன் வந்து குடியிருக்கிறான் மச்சான்…… வீட்டுக்கு ஒரு ஆளேண்டாலும் போராட வந்தா இந்த இடமேல்லாத்தையும் நாங்கள் திருப்பி எடுக்கலாம் தானேடா…..”
ரஞ்சனது நெஞ்சுக்குள் இந்த நினைவு வந்து அசைந்தது.
தொடர்ந்து நகருவது ஆபத்தாயும்முடிந்துவிடக்கூடும் என்பதால், அருகிலேயே ஒரு மரைஇவிடம் தேடி அவன் பதுங்கிக்கொண்டான்.
இப்போது அவன் தனித்த்துப்போனான்; கூடவந்த தோழர்கள் எல்லோரினதும் நினைவுகள், இதயமெல்லாம் நிறைந்து வாட்டின.
இனி எப்படியாவது அங்கிருந்து அவன் வெளியேற வேண்டும். வந்தவர்களில் எஞ்சியிருப்பது அவன் மட்டும்தான். நடந்தவற்றைப் போய் சொல்வதற்காவது, அந்த மரணக்குகைக்குளிருந்து அவன் பாதுகாப்பாகத் தப்பிக்க வேண்டும். எனவே அவன் இனி மிக அவதானமாக இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.
மெல்ல விடிந்தது.
அவன் தொடர்ந்து நகர்ந்து வெளியேற நினைத்த போது,
மின்னலென ஒரு யோசனை மூளைக்குள் பொறிதட்டியது.
‘தச்சன்காட்டில் யாரவாது அதிஷ்டவசமாகத் தப்பியிருக்கலாம். அவர்கள் பாதை தெரியாமல் மாறுபட்டு, வேவு வீரர்கள் திரும்பி வருவார்கள் என நம்பி உள்ளே நுழைந்த முதல் நாள் இரவு அவர்கள் தங்கிய தரிப்பிடத்தில் போய் நிற்கக்கூடும்.
நப்பாசைதான்; ஒரு மன உந்துதலோடு அவன் போனான்.
அவன் அங்கே செல்ல…… அங்கே …..!
என்ன அதிசயம்! அவன் நினைத்து வந்ததைப் போலவே அவர்கள்….
ஆனால் நால்வருமல்ல .
ரங்கனும் , புலிக்குட்டியும் மட்டும் நின்றார்கள்; ராஜேஷ் இல்லை, ‘திரு‘ வும் இல்லை.
அவனைக் கடந்தும் அவர்கள் மட்டற்ற மகிழ்ட்சி ‘போன உயிர் திரும்பி வந்தது போல’ என்பார்களே, அப்படி ஒரு மகிழ்ட்சி. “உடனே எங்களைக் கொண்டுபோய் கெனடி அண்ணனிட்ட விடு; இண்டைக்கு இரவுக்காவது அடிக்கலாம்” என்று அவர்கள் அவசரப் படுத்திய போது,
ரஞ்சன் நடந்தவற்றைச் சொன்னான்.
அந்தக் கரும்புலி வீரர்களால் அதனைத் தாங்கமுடியவில்லை. தாங்கள் பங்கு கொள்ளாமல் அந்தத் தாக்குதல் நடந்து முடிந்ததை அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தங்களது கைகளை மீறி எல்லாம் நடந்து முடிந்துவிட்டதை எண்ணி, அவர்கள் மனம் புழுங்கினார்கள்.
எல்லாம் முடிந்தது.
“இனி நாங்கள் எப்படியாவது, எந்தப் பிரசினையும் இல்லாமல் வெளியில் போய்விட வேண்டும்” என்றான் ரங்கன். போகத்தானே வேண்டும் , பிறகென்ன…..? ஆனால், ரங்கன் அதற்க்குக் காரணம் ஒன்றைச் சொன்னான்.
“இதற்குள் நிற்கும்போது எங்களுக்கும் ஏதாவது நடந்தால், இயக்கம் எங்களையும் கரும்புலிகள் என்றுதானே அறிவிக்கும். அப்போது விமானங்களை அழித்தவர்கள் என்ற பெயர்தானே வரும். ஆனால், அவர்களுடைய தியாகத்தில் நாங்கள் குளிர்காயக்கூடது.” இதுதான் அவனுடைய மனநிலை.
மிகவும் பாதுகாப்பானது என்று கருதிய பாதை ஒன்றினால் வெளியேற அவர்கள் முடிவு செய்தனர்.
ரஞ்சன் வழிகாட்டினான் ; கூட்டிவந்த வேவு வீரர்களில் இப்போது எஞ்சியிருப்பது அவன்மட்டும்தான்.
பகற்பொழுது , எனவே ஆகக்கூடிய அவதானத்துடன் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர்.
மெல்ல மெல்ல சூரியன் உச்சியை நோக்கி உயர்ந்துகொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் சீரவளைக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
சரியாக நினைவில் இல்லை, ஒரு பதினோரு மணியிருக்கும் .
ஒரு பற்றைக்குள்ளிருந்து “கதவு …. ?” என ஒரு குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தால், ஒரு சிங்களப் படையால் குந்திக்கொண்டிருந்தான்; தங்களுடைய ஆட்கள் என்று நினைத்திருப்பான் போலும்.
என்ன பதிலி சொல்வது ….? அவர்கள் யோசிக்க, அவனுக்குள் சந்தேகம் எழுந்துவிட்டது.
சற்று உறுத்தலாக, “ஓயா கவுத …..?” கேட்டுக்கொண்டே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் எழ, ரஞ்சனின் கையில் இருந்த “ரி – 56” அவனுக்கு பதில் சொல்லியது.
“நாங்கள் புலிகள்.”
வெடித்தது சண்டை …
அவர்கள் ஓடத் துவங்கினர் ; மொய்த்துக்கொண்டு கலைத்தனர் சிங்களப் படையினர்.
கணிசமானதொரு துறை இடைவெளியில் அந்தக் கலைபாடு நடந்தது. பகைவனின் சன்னங்கள் அவர்களை முந்திக்கொண்டு சீறின.
திடிரென ரங்கன் கத்தினான், “டே! என்ற காலில் வெடி கொளுவிற்றுதடா ….”
ஓடிக்கொண்டே பார்த்தவர்கள், வலது கால் என்பது தெரிகிறது; எந்த இடத்தில் என்பது தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் வந்துவிடப் போவதுமில்லை.
ரங்கன் ஓட ஓட அவனது காலிலிருந்து ரத்தம் தெறித்துக்கொண்டிருந்தது.
இவர்களால் எதுவுமே செய்ய முடியாது. எதனையும் செய்ய வேண்டுமென அவனும் எதிர்பார்க்கவும் இல்லை.
“என்னால் எலாதடா….. என்னை சுட்டுப்போட்டு நீங்கள் ஒடுங்க்கோடா!” ரங்கன் கத்தினான்.
அவன் ஓட முடியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.
ரஞ்சன் சொன்னான். “குப்பியைக் கடித்துக் கொண்டு….. ‘சாஜ்ஜரை‘ இழு மச்சான் …..”
“சாஜ்ஜர்” உடலோடு இணைக்கும் வெடிகுண்டு. தாக்குதலுக்குப் புறப்படும்போது கரும்புலி வீரர்களுக்கு வழங்கப்பட்டது. சண்டைக்களத்தில் எதிரியிடம் பிடிபடக்கூடிய சர்ந்தபம் வருமானால், ஆகக் கடைசி வழியாக அவர்களைக் காக்கும்.
ரங்கன் குப்பியைக் கடித்துக்கொண்டே “சாஜ்ஜரின்” பாதுகாப்பு ஊசியை இழுத்து எறிந்தான்.
மெல்ல மெல்ல அவன் பின்தங்கி விழ, கலைத்துக்கொண்டு வந்த படையினர் அவனை நெருங்க…..
சாஜ்ஜரும் ரங்கனும் வெடித்துச் சிறரிய சத்தம், ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தார்கள்….. புகையும், அவனது உயிரும் தமிழீழத்தின் தென்றலோடு கலந்துகொண்டிருந்தன.
அந்த வெடி அதிர்ட்சியில் குழம்பித் தடுமாறி, பகைவன் திரும்பவும் கலைக்கத் துவங்க முன், அவர்கள் ஓடி மறைந்து விட்டார்கள்.
எங்கோ பதுங்கியிருந்து. எல்லாம் அடங்கிய இரவாகிய பின் மெல்ல மெல்ல நகர்ந்து வெளியில் வந்தனர் ரஞ்சனும் புலிக்குட்டியும்.
தச்சன்காட்டில் மாறுபட்டுக் காணாமற்போன ராஜேசும் இந்து நாட்களின் பின்னர், ஒருவழியாக வந்து சேர்ந்தான்.
ஆனால் அசோக் வரவில்லை; ரங்கன் வரவில்லை; திருவும் வரவில்லை.
நடு இரவு கடந்து போனது.
ஒகஸ்ட் 2 ஆம் நாளின் ஆரம்ப மணித்துளிகள் சிந்திக்கொண்டிருந்தன.
கெனடி பிரதான கட்டளையகத்துக்கு விபரத்தை அறிவித்தான்.
“இப்போ நாங்கள் நான்கு பேர்தான் நிற்கின்றோம். ஜெயம், நவரட்ணம், திலகன், மற்றும் நான். நாங்கள் தாமதிக்க முடியாது; மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது; அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் நால்வரும் உள்ளே இறங்குகின்றோம். எங்களால் முடிந்தளவிற்கு வெற்றி கரமாகச் செய்கின்றோம்.”
தச்சன்காட்டுச் சண்டையின் செய்தி எங்கும் பறந்தது.
அந்தப் பெருந்தளம், மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு நிமிரும் ஒரு சிங்கத்தைப் போலத் துடித்தெழுந்தது.
ஆபத்து தங்களது வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிட்ட அச்சம் சிப்பாய்களைக் கவ்விக்கொண்டது.
சுடுகருவிகள் தயாராகின.
எந்த நேரத்திலும், எந்த முனையையும் உள்ளே நுழைந்து புலிகள் தாக்குவார்கள் எனப் படிவீரர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
விமான ஓட்டிகள் வானுர்த்திகளில் ஏறித் தயார்நிலையில் இருக்குமாறு பணிக்க்க்கப்பட்டனர்.
வான்படைத் தளத்தைப் பாதுகாக்கும் காவலரண்களும் , வானுர்த்திகளுக்குரிய காவற்படையினரும் உசார்நிலையில் வைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலைக்கு வந்து பரிபூரணமாக ஆயத்தமாகிய பகைவன், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகப் போர்க்கோலம் பூண்டு நின்ற வேளை…
யுத்த சன்னதர்களாகப் புறப்பட்டுச் சென்ற எங்கள் கரும்புலி வீரர்கள்….. சிங்களத்தின் சிலிர்ந்து நின்ற பிடரி மயிர்களினூடு ஊர்ந்து, அதன் முகத்தை நெருங்கினர்.
பிரதான கட்டளையகத்திலிருந்து “வோக்கி”யில் கெனடியின் குரல் ஒலித்தது. கெனடி நிலைமையை விளக்கினான்.
“நாங்கள் நல்லா கிட்ட நெருங்கிற்றம் ….”
“ஏதாவது தெரிகின்ற மாதிரி நிற்கிறதா?”
“நாங்கள் தேடிவந்ததில் ஒன்றுதான் நிற்குது. பக்கத்தின் ஒருத்தன் நிற்கின்றான்.”
“வேறு ஒன்றும் இல்லையா …..?”
“அருகில் சின்னன் ஒன்று ஓடித்திரியுது.”
“நீங்கள் தேடிப்போன மற்றதுகள் …..?”
“இங்கு இருந்து பார்க்க எதுவும் தெரியேல்ல, துரத்தில் நிற்கக்கூடும். இறங்க்கினதற்குப் பிறகுதான் தேடக்கூடியதாக இருக்கும்.”
“இப்ப நீங்கள் இறங்கக்கூடிய மாதிரி நிற்க்கிறீங்களா…….?”
“ஓமோம் ….. குண்டு எரியக்கூடிய துரத்திற்கு வந்திட்டம். நீங்கள் சொன்னால் நாங்கள் அடிச்சுக் கொண்டிறங்கிறம்.”
“அபடியெண்டால் நீங்கள் அப்படியே செய்யுங்கோ.”
கட்டளையகம் அனுமதி வழங்கியது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் ……?
கெனடி உத்தரவிட்டிருப்பான்.
“தாக்குதலை ஆரம்பியுங்கள்”
நவரட்னத்தின் கையிலிருந்த “லோ” முழங்க “பெல் 212” இல் தீப்பற்றி எரியும்போது, கெனடி “டொங்கா”னால் அடிக்க திலகன் அதன் மீது கைக்குண்டை வீசியிருப்பான்.
அதே சம நேரத்தில்….. ஜெயத்தின் “லோ” பவள் கவச வண்டியைக் குறிவைத்து முழங்கியிருக்கும்.
பலாலித் தளத்தின் மையமுகாம் அதிர்ந்திருக்கும்.
தங்கள் அனைத்துக் கவசங்களையும் உடைத்து நுழைந்து, பாதுகாக்கப்பட்ட அதியுயர் கேந்திரத்தையே புலிகள் தாக்கிவிட்டத்தை எதிரி கண்முன்னால் கண்டு திகைத்திருப்பான்.
சன்னங்களைச் சரமாரியாய் வீசிரும் துப்பாக்கிகளோடு கூச்சலிட்டபடி பகைவன் குவிந்து வர….. கெனடியின் “டொங்கான்” எறிகணைகளைச் செலுத்தியிருக்கும்.
திலகனின் “ரி – 56” ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்க, தங்களது அடுத்த இலக்கைத் தேடி அவர்கள் ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள்.
“கெனடி…… கெனடி….. நிலைமை என்ன மாதிரிஎன்று எங்களுக்கு சொல்லுங்கோ ……”
“ஒரு ஹெலியும் ஒரு பவளும் அடிச்சிருக்கிறம். ரெண்டும் பத்தி எரிக்ஞ்சுகொண்டிருக்குது…. கிட்டப் போக ஏலாம சுத்தி நிண்டு கத்திக் கொண்டிருக்குராங்கள். ”
“மற்றது என்ன மாதிரி …..?”
“தொடர்ந்து அடித்துக்கொண்டு உள்ளே இறங்கிக்கொண்டிருக்கிறம்…..
பொம்மருகளைத் தேடுறம்….”
ஆனால் 500 மீற்றருக்கு அகன்று 2600 மீற்றருக்கு நீண்டிருந்த விசாலமான ஒரு பாதை அது. மிகவும் துரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ”சியா மாசெட்டி” குண்டு வீச்சு விமானங்களில் தயாராய் இருந்த ஓட்டிகள் அவர்ரியா மேலேடுத்துவிட்டனர்.
கெனடியின் தொடர்பு நீண்ட நேரத்தின் பின் கிடைத்தது.
“கெனடி…. நிலைமை எப்படி எண்டு சொல்லுங்கோ …..”
“ஒரு ‘ஹெலி‘யும் ஒரு ‘பவளும்‘ அடிச்சிருக்கிறம்…. முழுசா எரிஞ்சு கொண்டிருக்கு ….. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”
“கெனடி ….. நீங்கள் அவசரப்பட வேண்டாம். …. மற்ற ஆக்கள் என்ன மாதிரி?”
“நானும் திலகனும் நிக்கிறம் …..”
“கெனடி….. நீங்கள் அவசரப்படாதேங்கோ ….. தொடர்ந்து எதுவும் செய்யக்கூடிய மாதிரி இல்லையா ……?”
“அண்ணை….. ….. எனக்கு ரெண்டு காலும் இல்லையண்ணா ……”
“……………………………………………”
“…………………………………….. …..”
“…………………………………………”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ; புலிகளின் தாகம் ……. தமிழீழ ……”
“கெனடி …….. கெனடி ……”
“கெனடி …….. கெனடி ……”
“திலகன் …….. திலகன் ……”
“கெனடி …….. கெனடி ……”
ஒரு முதியவர் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு….…
“எண்டா தம்பி செய்கிறது…… வயதும் போகுது….” என்று கவலைப்பட்டபோது.
அருகில், “ஈழநாதம்” நாளேட்டில் அவர்களின் படங்களைப் பார்த்து நின்ற அவரின் துணைவியார் ஏக்கத்தோடு சொன்னார்.
“நீங்கள் வயது போகுதெண்டு கவலைப்படுறியள்…. எத்தின பிள்ளைகளுக்கு வயது போறதேயில்லை …….!”
வெளியீடு : உயிராயுதம் பாகம் 01
August 1st
August 2nd
August 3rd
லெப் கேணல் கதிர்வாணன்.
மகேந்திரன் திருக்குமார்
வீரச்சாவு.29.07.2008
2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான்.அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான்.
இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான் . இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான்.அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான்.
அத்தோடு தென்தமிழீழ விநியோக நடவடிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான்.அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான்.தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத்தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான்.தரைத்தாக்குதலுக்கேற்றமாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு , எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான்.அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான்.
கடற்புலிகளின் தரைத்தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத்தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத்தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான்.சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன் . 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவடைகிறான்.
Recent Comments