ஏற்கனவே இது பற்றி இணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை ! முழுமையாக எழுதியிருந்தோம்.
நாம் குறிப்பிட்டது போல் எமது கணக்குகள் மூடப்பட்டது போல் பலருடைய கணக்குகள் மூடப்பட்டு விட்டன. இதன் மூலம் விடுதலைப்புலிகள் பற்றிய பெரும்பாலான பதிவுகள் (youtube )யூரீபிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது.
புலிகள் வலுவாக இருந்த போது இப்படி எதுவும் நடைபெறவில்லை ?
ஆனால் புலிகள் மெளனித்து 10 வருடங்களாகின்ற நிலையில் ஏன் தீவிரமாக புலிகளின் பதிவுகள் அகற்றப்படுகின்றன ?
இதன் பின்னணியில் இந்திய -அமெரிக்க ஏகாதிபத்திய உளவு அமைப்புக்கள் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது !
இதற்கு நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் ?
புலிகளை விற்று வியாபாரம் செய்யும் இந்த அமைப்புக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் ?
வழக்கம் போல் நாங்கள் தான் புலிகளின் ஏக போக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அடுத்த மாதம் மாவிரர் தினத்தை நடாத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் !
ஈழ மாக்களும் வழக்கம் போல் வரிசையில் நின்று பூப் போட்டு விட்டு இன்னும் யாராவது இளிச்ச வாய்கள் வந்து எங்களுக்காக உயிரைக் கொடுக்கமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் போய் விடுவார்கள் !
இதற்கு மேல் நாம் என்னத்தைச் சொல்ல !
ஈழப்பார்வை குழுமம்