Search

Eelamaravar

Eelamaravar

Tag

சுத்துமாத்துக்கள்

பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

கருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்..

அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார்.

எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது.

திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா? அல்லது விளக்கு பிடிக்கிறதா? என்ற விளையாட்டுக்குள் நாம் வரவில்லை..

அடப்பாவிகளா? ஈழத்திலே எங்கேயடா பார்ப்பான்?

இருக்கிறதே நாலு பிராமணர்கள்..அவர்களும் பூசை வைச்சமா! பொங்கல் சாப்பிட்டமா! என்று இருக்கிறார்கள்.

பூசை வைக்கிற உரிமைக்குக் கூட அவர்களோடு போராட முடியாது. காரணம், ஈழத்தில் ஆலயங்களில் பூசை செய்பவர்கள் 90 விழுக்காடு சைவ மரபில் வந்த அர்ச்சகர்களே..

போதாததற்கு கதிர்காமம், செல்வச் சந்நிதி உட்பட பல தொன்ம ஆலயங்களில் பூசை செய்பவர்கள் மீனவ சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்.
அவர்களை ‘கப்புறாளை’என்போம்.

அதனால்தானே பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை என்கிறோம்.

வரலாறு தெரியாமல் தரப்படுகிற ஆதரவு கூட ஆபத்தானது.

அதற்கு இதுவொரு உதாரணம்.

புரட்சியாளன் – கோட்பாட்டாளன்.

தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாள்ப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.

மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.

இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார். முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது ஒரு கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலத்தையும் துண்டாடுகிறது. ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.
பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் அரசியலையும் முன்மொழிகின்றன.

இது புரியாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம். ஆனால் நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது. எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது.
ஒரு கோட்பாட்டாளன் உருவான கதையின் பின்புலம் இது. வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறதுப

பரனி

மீள்பதிவு

சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் !

தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம்.

அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள் நாம் மறந்தே போய்விட்டோம். இந்த நாளில் சர்வதேசம் சத்தமின்றி யுத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற போதுதான், தமிழகளின் அழிவு அல்லது அழிப்புக்குரிய நிகழ்ச்சி நிரல்கள் தொடங்கப்பட்டன. தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளுவதற்கான வியூகங்கள் அமைக்கப் பட்டன. சர்வதேசம் தமிழர் தாயகத்தை சுற்றி வளைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கின. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியைச் சுற்றி ஆசிய மற்றும் தெற்காசியாவின் அதிகார மையங்களை ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்தே தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமது அரசியல் இருப்பை தக்க வைக்க, அல்லது மீட்டெடுக்க விழுந்த அடிகளை தாள்பணிந்து வாங்கிக் கொண்டு அகிம்சைவழியில்தான் தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. அகிம்சைப் போராட்டம் முற்றுப் பெற்று ஆயுத வழியில் பயணிக்க தொடங்கிய எழுபதுகளில் இருந்து, கட்டம் கட்டமாக சர்வதேச நாடுகள், தமிழர்களுக்கும் ஆட்சியில் இருந்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கும் இடையில் வந்து போகத் தொடங்கிவிட்டன.

இதனால்தான் ஆரம்பத்தில் உள்வீட்டுப் பிரச்சனையாக இருந்த இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. வல்லரசுகள், வல்லரசுகளை தாங்கி நிற்கும் ஐ.நா, தகுதி இல்லா விட்டாலும் வல்லரசாகத் துடிக்கும் மற்றும் சில நாடுகள் இந்த இனப்பிரச்சனைக்குள்ளும், அல்லது மத்தியஸ்தத்துக்கும் என உள்ளே வந்து போயின.

இன்று தமிழர்கள்தான் வீழ்ந்தார்கள், தோற்றார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், நாம் தொடர்ந்து வருபவற்றை தமிழர்கள் என்கிற பொது அடிப்படையில் புரிந்து கொண்டு செல்லவேண்டியது அவசியம். தமிழர்களின் இராணுவ படை பலம், மற்றும் படைநகர்த்தல் தந்திரோபாயம் பற்றி கேள்வியும் வியப்பும் கொண்ட சர்வதேச நாடுகள்; (வல்லரசுகள் உட்பட) அவர்களின் அரசியல் இராஜ தந்திரம் மற்றும் அரசியல் மேலாண்மை பற்றி முழுமையாக புரிந்தும் தெரிந்தும் கொண்டது மேலே குறிப்பிட்ட அந்த நாட்களில் தான். அந்த நாட்களில் என்னதான் நடந்தது? 2003 ம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடை பெற்ற “இலங்கைக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமான உதவி வழங்கும் மாநாடு”.(The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka ) ப்ப்பூஊ இதுதானா? என்று நீங்கள் கேட்கலாம். இதுதான். இதேதான். இதே மாநாட்டு முடிவில்தான் தமிழர்களை, தமிழர்களின் வலிமையை, பேரம்பேசும் சக்தியை அழிக்க மாநாட்டு முடிவில் சர்வதேசம் தமக்குள்ள தீர்மானித்ததாகச் சொல்லப்படுகிறது.

நீங்கள் கேட்கலாம், “தமிழர் தரப்பில் இருந்து இந்த மாநாட்டுக்கு யாருமே செல்லவில்லையே? அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லையே” என்று. ஆம் . தமிழர் தரப்பில் இருந்து யாருமே செல்ல வில்லை. செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும், முடிவுகளும் கூட தமிழர் தரப்பிடம் இருக்கவில்லை. ஆனால், மாநாட்டுக்கு போகாமல் விட்டதுதான் சர்வதேசத்துக்குப் பிரச்சனையாக இருந்தது. அதுதான் அவர்களுக்குள் உறுத்தலை ஏற்படுத்தியது. 51 உதவி வழங்கும் நாடுகள், 22 உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அதன் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப் பட்ட இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு பிரதி நிதிகளும் கலந்து கொண்டே ஆகவேண்டும். அதற்கான அழைப்புகள் நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு முந்தய பேச்சு வார்த்தை மேசைகளிலேயே பேசப்பட்டாகி விட்டது.

சரி அந்த மாநாட்டில் என்னதான் நடக்கும்? என்னதான் நடந்தது? போரில் சம்பந்தப் பட்ட சமபங்குள்ள இரு பக்க பிரதி நிதிகளும் மாநாட்டுக்கு கட்டாயம் சமூகம் தருவதுடன், அந்த சர்வதேச பிரதிநிதிகளின் அரங்கத்திற்கு முன் அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடவேண்டும். அப்படி கைச்சாத்து இட்டால் இலங்கைக்கான அபிவிருத்திக்கு பல கோடி ட்ரில்லியன் டொலர்கள் உதவித் தொகையாக வந்து சேர்ந்திருக்கும். சர்வதேசம் வழங்கியிருக்கும். ஒருதரப்பு அதில் கலந்து கொள்ளாமல் விட்டால் கூட முழுத்தொகையும் கிடைக்காது. (பயணச் செலவை வழங்குவார்கள் போல) அப்போது அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் இலங்கை அரசு சார்பாக கலந்து கொண்டவர். கலந்து கொண்டதற்காக குறிப்பிட்ட தொகை வழங்கப் பட்டது. அந்த பணத்தில் நிலைமை பற்றி எந்த அதிகார பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

தமிழர் தரப்பில் இருந்து யாருமே வரமாட்டோம் என்று ஒரே பிடியாக மறுத்து விட்டார்கள். தமிழர் தரப்பில் இருந்து அதற்காக கூறப்பட்டவை நொண்டிச் சாட்டுகள் என்று சர்வதேசத்திற்கும் தெரியும். அதற்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மாநாட்டுக்கு தம்மை அழைக்க வில்லை என்கிற குற்றச் சாட்டுடன், சரிசம பங்காளிகள் என்கின்ற வகிபாகத்தை சர்வதேசம் கவனமெடுக்கவில்லை என்றும், அது பக்க சார்பானது என்றும், ஏற்கனவே தமிழர் தரப்பு தற்காலிகமாக பேச்சு வார்த்தையில் இருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரப்போகும் சர்வதேச உதவி வழங்கும் இந்த மாநாட்டையும், அதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமப் பொறிகளையும் கருத்தில் கொண்டு, அதனை எப்படி புறக்கணிக்கலாம் என்று சிந்தித்த தமிழர் தரப்புக்கு கிடைத்த அல்வாதான் அமெரிக்காவில் நடந்த “இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு” தொடர்பான கலந்தாய்வில் அழைப்பு விடுக்கப்படாமையாகும். அமெரிக்காவில் உள்ள “விடுதலைப்புலிகள் மீதான தடை” தான் காரணமாகியிருந்தது.

பெரும் பொறிகளை மறைத்து வைத்து விட்டே சர்வதேசம் டோக்கியோவிற்கு தமிழரை அழைத்ததுதான் உண்மை. தமிழர் தரப்பு நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளூரிலேயே பலர் ஆசைப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் நினைத்துப் பார்க்கவே முடியாத அவ்வளவு தொகையான பணம் வரக் காத்திருந்தது. தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று இறுதி மணி நேரம் வரையும் சர்வதேசம் நம்பியது. எத்தனையோ தொலை பேசி அழைப்புக்கள் வன்னி மையத்தை நோக்கி பறந்தன. உலகத்தலைவர்கள்- தூதுவர்களின் வேண்டுகைகள் செய்திகள், பத்திரிகைகளில் பிரசுரமாகின.

நடுநிலையாளர்களின் கெஞ்சல்கள், சில முதலாளி நாடுகளின் வெருட்டல்கள், கண்டிப்புக்கள், கண்டனங்கள் இப்படிப்பல நாடகங்கள் ஜூன் 8 ம் திகதி அதாவது மாநாட்டுக்கு முந்தய நாள் வரையும் போட்டுக் காட்டினார்கள். அதற்காக கட்டுநாயகாவில் சிறப்பு விமானம் ஒன்றும் சிறப்பு கடமையில் விமானப் பணியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பு தானும் தன்பாடுமாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்களில் வரும் மஞ்சள் சோறும் கோழி இறைச்சிக் கறியோடு கத்தரிக்காய் பால்கறியையும் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழர் தரப்பு ஒரு விதமான மௌனத்தை கடைப் பிடித்தார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்த மௌனத்தின் பின்னால் ஒரு ஆத்ம திருப்தியை தமிழர் தரப்பு பெற்றுக்கொண்டதே உண்மை என்பது அப்போது வெளியார் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன் இப்போதும் அதனை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் கண்ணோட்டம் பலருக்கு இல்லை என்பதே உண்மை. அவர்களின் மௌனங்களுக்குப் பின்னால், கூட நின்று உயிரும் சதையுமாக களமாடிய மாவீரக்ள், போராளிகள் பொதுமக்களின் அர்ப்பணிக்கு இந்த உலகில் எதனையும் கொண்டு ஈடு செய்ய முடியாது என்பதே அன்றைய தமிழர் பிரதிநிதிகளின் மௌனத்துக்குக் காரணம். ஆனால், உலக நாடுகளுக்கும், முதலாளிகளுக்கும் மாமா வேலைபார்த்த யசூசி அகாசிக்கு ஏமாற்றமே மிஞ்சிப் போனது. சப்பை மூக்கு வீங்கிப் போனது.

அபிவிருத்தி என்கிற பெயரில் இதுவரை உலக போராட்டங்கள் பல நசுக்கப் பட்டிருக்கின்றன. அழிக்கப் பட்டிருக்கின்றன. உருத்தெரியாமல் போகச் செய்யப் பட்டிருக்கின்றன. தமிழர் தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கையொப்பம் இட்டிருந்தால் எந்த முடிவையும் தனித்து எடுக்க முடியாது என்பதுடன், பணம் கொடுத்த நாடுகள் காரணம் இன்றி இலங்கைக்குள் நுழையும். கால் பாதிக்கும், கண்காணிக்கும். கேள்வியே கேட்கமுடியாது. ஏற்கனவே சிங்கள பேரினவாததுக்குதான் அடிமை. கையொப்பம் இட்டிருந்தால் அனைத்து நாடுகளுக்கும் அடிமையாகப் போக வேண்டி வந்திருக்கும். தமிழர்களுக்கான தீர்வு என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இப்பொழுது ஓரளவுக்காவது பேச்சில் தீர்வு பற்றி சொல்கிறார்கள்.

தமிழர்கள் மீளவே முடியாத, முன் வைத்த காலை திருப்பிக் கூட வைக்க முடியாத வரலாற்றுத் தடத்தில் போராட்டம் பயணித்திருக்கும். தொலைந்திருக்கும். தமிழர் விடுதலைப் போராட்டத்தை தவிர உலகில் நடந்த அத்தனை விடுதலைப் போராட்டங்களுக்கும் எதோ ஒரு குழு அல்லது நாடு உதவி செய்திருக்கும். செய்திருக்கின்றன. ஆனால் தமிழர் போராட்டம் மட்டும்தான் சொந்த மக்களின் துணையுடன் நடாத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்புடன் மட்டுமே கொண்டு நகர்த்தப்பட்டது. அவற்றை அடகு வைக்க தமிழர் தரப்பு ஒருபோதும் விரும்பவில்லை, எப்போதும் அதற்குத் தாயாருமில்லை என்பதும் காரணம். பணத்திற்கு அடிமையாகப் போக தமிழர் தரப்பும், தலைமையும் என்றுமே நினைத்ததுமில்லை.

அதனாலென்ன வெளிநாடுகள் இலங்கைக்குள் நுழைந்தால் என்ன? நுழைந்துவிட்டுப் போகட்டுமே? இங்கிருந்து கொண்டு போக அவர்களுக்கு என்ன இருக்கிறது இங்கே? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். இங்கே என்ன இல்லை? என்பதுதான் தமிழர் பிரதிநிதிகளின் மறு கேள்வியாக இருந்தது. உள்ளே நுழையும் வெளிநாடுகள் மற்றும் முதலாளிகளின் இலக்கு தமிழர்களாகிய எமது வாழ்க்கையின் மீதான அக்கறையில்லை. எமது இழப்புகளுக்கு மருந்து கொண்டுவரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு எமது வளங்கள் மீதுதான் கண். 2019 இன்று எமது வளங்கள் பங்கு போடப்பட்டிருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மன்னார் பேசாலையில் மசகெண்ணை, புல்மோட்டையின் கனிம மணல், தமிழர்களின் காட்டு வளம், மிகப்பெரிய பரப்பளவில் வடக்கு கடலின் மீன்வளம், பராமரிக்கப்பட்டால் வற்றாத நன்னீர்வளம், இயற்கையாகவே அமைந்த பல நீரேரிகளைக் கொண்ட துறைமுக கடற்கரைகள், எண்ணெய்க் குதங்கள், நிலத்தடி கனிமங்கள் என்று எம்மிடம் என்ன இல்லை? இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் பயன்பாட்டிற்கு அப்பால் யார்யாரோ இன்று கொள்ளையடித்துப் போகிறார்களே? இன்று இலங்கை அரசின் உதவியுடன் கொள்ளைபோகும் இந்த வளங்கள், அன்று நாம் கையொப்பம் போட்டிருந்தால் அன்றே கொள்ளையிடத் தொடங்கியிருப்பார்கள்.

அந்த மாநாட்டில் அவர்கள் தரும் பணத்திற்கு இந்த எமது இயற்கை வளங்கள் ஈடாகுமா? எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கருத்தில் கொண்டே தமிழர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்தார்கள். எதற்காகவாவது இனி ஒரு உலக யுத்தம் உலகில் எந்த மூலையில் ஏற்பட்டாலும் இலங்கையின் பெறுமதி உங்களுக்கு அப்போது புரிந்துகொள்ள முடியும். இன்று சீனம் வந்திட்டு, அரபி வந்திட்டு, ஹிந்தி வந்திட்டு என்று புலம்பும் நீங்கள் இன்னும் ஆழமாக வரலாறைப் படிப்பது அவசியமானது.

இந்த சர்வதேசத்தின் தோல்வியைப் பற்றி, மூக்குடைவைப் பற்றி சர்வதேசம் அமுக்கியே வாசித்தது. ஊடகங்கள் இது பற்றி பெரிதாக கணக்கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு ஆச்சரியம்! இந்த இடத்தில் இருந்து தமிழர் தரப்பு எப்படி தப்பிக் கொண்டது? (அவன் ஒருவனைத் தவிர யாருக்கும் இது தெரியாது) தப்பினார்கள் என்பதைவிட கற்றுக்கொண்டார்கள் என்பது பொருத்தமானது.

எந்த சலனமும் இல்லாமல் சர்வதேசம் பின்னிய, “அபிவிருத்தி” என்ற சூழ்ச்சி வலையில் சிக்காமல் தமிழர் தரப்பு தப்பிக்க கொண்டது. இத்தனை நாடுகளின் அரசியல் நகர்வுகளையும் அவர்கள் புரிந்து தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த சில்லிப் பையன்களிடமா இவ்வளவு வலிமை? அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம், தலைமையும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் பெரும் தலைகளும் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். சண்டை என்றால் அடித்து நசுக்கலாம். இது அரசியல். கத்தியில் நடக்க வேண்டும். அதுவும் ஒரு போராட்ட அமைப்பு இவ்வளவு முன்னேற்றகரமானதா? உலக அரசியலில் தெளிவு கொண்டதா? என்று சிந்தித்தது சர்வதேசம்.

இவர்களை வளரவிட்டால் இந்துசமுத்திரத்தை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் ஆளுகை செய்வது கடினம். ஆகவேதான் அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரல்களை எழுதத் தொடங்கியது சர்வதேசம். அதனைப் புரிந்து கொண்ட தமிழர்களும் அடிபட்ட நாகம் கொத்தவரும் என்றும் தெரிந்திருந்தார்கள். அதனை எதிர்கொள்ள தம்மால் இயன்ற எதிர்நடவடிக்கைகளை செய்யத் தவறவில்லை. அடிமையாக மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்று தமக்கான வழியை பலவலிகளோடு ஏற்று நடந்தார்கள்.

அபிவிருத்தி என்ற ஒன்றிற்குள்ளால் போனால் பல விடயங்களை கதைத்துப் பேசி பெற்றுக் கொள்ளலாம்தானே என்று பலர் அன்று கேட்டார்கள். ஒரு இராணுவ சமநிலைச் சக்தியாக நின்று அதுவரை பேசிய பேச்சுகளுக்கே எந்த அசைவும், தீர்வும், நம்பிக்கை வாக்குறுதிகளும் கிடைக்காத பொழுது இனி எதனை நம்பி அவர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போக முடியும் என்று கேள்வி கேட்ட இவர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்.

மாநாட்டுக்குப் போய் கையெழுத்து போட்டால் பணமாவது வந்திருக்குமே என்றும் கேட்கலாம். பணம் வந்திருக்கும். ஆனால் யாருக்கு வந்திருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. 2004 இல் நடந்த ஆழிப்பேரலை (tsunami) அனர்த்தங்களுக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக தமிழர் தரப்பும் இலங்கை அரசும் சேர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டிய ஆக்க குறைந்த சம அதிகாரமுள்ள “சுனாமிக் பொதுக் கட்டமைப்பு” என்கின்ற ஒன்றைக்கூட இலங்கை அரசும் மத அடிப்படைவாத அமைப்புகளும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் அந்த பணம் தமிழர்களுக்காகவும் பயன்பட்டிருக்குமா? என்ற கேள்வி விசாலமானது.

முன்னர் இப்படிப் பல சம்பவங்களில் சிங்கள பேரினவாதத்தின் மனோநிலையை புரிந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகள், “வரலாறு எமது வழிகாட்டி” என்கின்ற அடிப்படையிலேயே போராட்ட பாதையெங்கும் பல ஆரோக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.

இந்த சம்பவங்கள் நடந்து ஐந்து வருடங்களில் தமிழர் அழிப்பிற்கான யுத்தம் பெருவீச்சில் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அது முடிவுக்கட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. விண்ணிலிருந்து, கடலின் தொலைவிலிருந்து, அருகே உபகண்டத்திலிருந்து பல நாடுகள், இரத்தம் சொட்டச் சொட்ட தமிழர் சந்ததி கருகி புதையும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன . வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தன. இன்றைக்கு மருந்து போட வந்திருக்கிறார்கள். எமது மக்களின் காயங்கள் ஆறாதவை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. சுயநல வஞ்சக அரசியலில், தமிழர்களிடம் தோற்றுப் போன சர்வதேசம் ஒன்று கூடி, உயிரினங்களுக்கு எதிராக பயன்படுத்தவே கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தி பலி(ழி) வாங்கிக் கொண்டது.

புதைக்கப் படுபவைகள் எல்லாம் விதைகளா? என்று எமக்குத் தெரியாது. ஆனால் மூளைத்திறன் உள்ள விதைகள் தூவப் பட்டுதான் இருக்கிறது. காலமழை பொழியும் பொழுது முளைவிட்டே ஆகும். முளைகள் வானுயர கிளை பரப்பியே ஆகும் என்கின்ற நம்பிக்கையில் நாமும்.

எழுதியது : புலர்வுக்காக .. ப.வித்யாசாகர்

எம் தேசத்தின் வளங்கள் இவை … இப்போது ?

தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது.

இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி,

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் கைது 1982

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு

கீழ் கானும் வழக்குகளில் எதிரிகள் விடுதலை

முன்னாள்எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை வழக்கில் எதிரி விடுதலை 1989

டென்மார்க் ;கல்லூரி மாணவி சித்திரா கைதும் விடுதலையும் 1996

டென்மார்க் ஊடகவியளாளர்கள்; நால்வர் கைதும் விடுதலையும் 1996

கலதாரி ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி விடுதலை 1997

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு 2008

ஊடகவியளாளர் பரமேஸ்வரி, சுசந்திகா கைதும் விடுதலையும் 221

ஊடகவியளாளர் யசிதரனும் வளர்மதியும் கைதும் விடுதலையும்

;மூத்த ஊடகவியளாளர் வித்தியாதரன் கைதும் விடுதலையும் 2009

பாதுகாப்புச் செயலாளர் கொலைமுயற்சி வழக்கில் முதல் எதிரி விடுதலை 2006

ரவிராஜ் கொலை வழக்கு 2006

ஜந்து கல்லூரி மாணவர்கள் கடற்படையினரால் கொழும்பில் கடத்தப்பட்ட வழக்கு 2009

மேஜர் முத்தலிப் படுகொலை வழக்கும் எதிரி விடுதலையும் பாரமி குலதுங்க கொலை வழக்கும் எதிரி விடுதலை 2018

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ;மன் ;கதிர்காமர் கொலை வழக்கும் விடுதலையும் 2018 .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை முயற்சிவழக்கும் விடுதலையும்

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கும் விடுதலையும் 2018

பயங்கரவாதத் சட்டமும் நான்கு தசாப்தங்களும்; 1979 – 2019

பயங்கரவாதத் சட்டம் நீக்கப்படுமா?

காலனித்துவ ஆட்சிகாலத்திலிருந்து இந்நாட்டில் நிலவி வந்த ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் மனதிற்கொண்டு பார்க்கும்போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன்மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன்.குறிப்பாக மிகவும் துரதிஸ்டமானதாகக் காணப்படும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் துரிதமான மோசமடைதலை ; வெளிச்சமிட்டுக் காட்டியது காட்டுகிறதுஷஷ

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணப்படுத்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் 1977 ஜுலை பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தின் படைப்பாகும். 1978 ஆம் ஆண்டின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமே பயங்கரவாத தடைச்சட்டமாகும்.; அத்தகைய கடுமையான சட்டம்; அவசரசட்டமாக ஒரே நாளில் 1979ஆண்டு ஜுலை 19ஆம் திகதி தற்காலிக சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் 1982ம் ஆண்டில்10ம் ;இலக்க சட்ட்த்தின்மூலம் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டு நான்கு தசாப்தங்;கள் முடிவடைந்து விட்டது

1979 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச்சட்டம்,; உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள்இ யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள்இ பொறியியளாளர்இ உதவி அரசாங்க அதிபர்இ ஊடகவியளாளர்கள்இ கோவில் தர்மகர்த்தாக்கள்இ கோவில் குருக்கள்இ கிரிஸ்தவமதப் போதகர்;கள்இ நாடாளுமன்ற உறுப்பினரின் செயளாளர். மாவட்ட அமைப்பாளர்இ பல்கலைக்கழக மாணவர்கள்இ அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள்இ சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள்;;இ கிராம சேவையாளர்கள்இ தொழில் அதிபர்கள்;இ வர்த்தகர்கள்இ புலம்பெயர் தமிழர்கள்இ வங்கி முகாமையாளர்இ என சமூகத்தின் பல தரப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

; 1979ஆம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை முப்பது வருடங்களில்; யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 ஆம் மே மாதம் முதல் 2019ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்து பத்து வருடங்களை கடந்த பின்னரும்;, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் ; பலர் இன்றும் நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள் என்பவற்றில் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்;

பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் வ்ழக்குத் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளில் அரசியல் கைதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நீருபிக்காமையினால் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்களேயன்றி மகிந்த ராஜபக்சவின் அரசோ அல்லது நல்லாட்சி அரசோ வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியையும் விடுதலை செய்யவில்லை சந்தேகத்தில் கைது செய்த சாட்சியங்கள் இல்லாத சில கைதிகளை அரசியல்வாதிகளை திருப்திபடுத்தும் நோக்கில் விடுதலை செய்தனர்

2015ம் ஆண்டு இந்த சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் இச் சட்டம் வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழும் தமிழ் உறவுகளை குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றது முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆம் மே மாதம் முடிவடைந்துவிட்டது என்று அரசாங்கம் பெருமையோடு பிரகடனப்படுத்தி;யதுடன். பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம். நாட்டில் சமாதானம் நிலவுகின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆயினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்

1971ஆம் ஆண்டின் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்களை கையாள்வதற்காக 1972 ஆம் ஆண்டு குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி; ஆட்சியை கவிழ்க போராட்டம் நடாத்தினால் அது கிளர்ச்சி; வட கிழக்கு இளைஞர்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டால்; அது பயங்கரவாதமா?

பயங்கரவாத தடைச் சட்டமும் நீதித் துறையின் வகிபாகமும்

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அல்லது பல ஜரோப்பிய அரசியலமைப்பு வாதிகள் அதனை விபரிக்க விரும்புவது போல சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வு என்பது அச் சட்டம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த (மக்களின் விருப்;பு) மிகவும் சிறந்த முறையில் வளங்களைக் கொண்டுள்ள அரசாங்கத்தின் கிளையாகிய நீதித் துறைக்கு அச் சட்டத்தை அலசி ஆராயும் இறுதிப் பொறுப்பை வழங்குவதாகும்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ,; லியனகே எதிர் மாகாராணியார் மற்றும் லஞச் ஊழல் ஆணையாளர் எதிர் ரனசிங்ஹ முதலிய இலங்கையின் குறிப்பிடத் தகுந்த பெரும்பாலான அரசியலமைப்பு தீர்மானங்கள,; சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வுகளின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

உலகெங்கும் பல வருடங்களாக செய்யப்பட்டது போலவே இலங்கையின் நீதி மன்றங்கள் எந்த ஒரு அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகத்திலும் தெளிவாகக் காணப்படுவது போல் அரசியலமைப்புக்கு ஒவ்வாத சட்டங்களை வெற்றானதென்றும் செயலற்றதென்றும் பிரகடணப்படுத்த முடியும் என்பதை அங்கீகரித்தன. எனினும்,

அதன் இரண்டு ஆரம்ப அரசியலமைப்புக்களான 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் சட்டங்களை நீதித் துறை மீளாய்வு செய்வதை தடை செய்தது என்ற வகையில் இலங்கை அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகங்களுள் மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்றாகவும் விளங்குகிறது.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

1972இலும் 1978இலும் பதவிக்கு வந்த இரண்டு அரசாங்கங்கங்களும் ; முதலாவதாக, தமக்குத் தேவையான தமது சொந்த அரசியலமைப்பை வகுத்து நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்தனர்.

இரண்டாவதாக, மாற்ற முடியாதவாறு விசேட பெரும்பான்மை நிபந்தனைகள் என்ற வடிவில் அமைந்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட தடைகளும் சமப்படுத்தல்களும் என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பு தர்மத்தின் பேரில் விதிப்பதை அவை உதாசீனம் செய்தன.இவை அனைத்தும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு வசதியாக அமைந்தது.

காக்கப்பட்டிருக்கும் (இறைமை பௌத்தம் மற்றும் ஏனைய ‘அடிப்படை அம்சங்கள்’ ஆகியவற்றைக் கையாளும்) ஏற்பாடுகளை இச் சட்டத்தின் ஏதாவது வாசகங்கள் மீறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அச் சட்டமூலத்தை நுணுகி ஆராயும் மட்டுப்படுத்தப்பட்ட பணியே தனக்கு உள்ளதென நீதிமன்றம் அறிவித்தது.

இது அத்தகைய வாசகங்கள் நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மட்டுமன்றி ஒரு கருத்தறி வாக்களிப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் தேவைப்படுத்தியிருக்கும். ஒரு பக்க கட்டளையொன்றில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் விசேடமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளோடு இச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் ஒவ்வாததாக இல்லை என்று அறிவித்ததோடு, மனித உரிமைகள் மீதான அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான இச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய மறுத்து அதன் மூலம் இச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தச் சிக்கலுமின்றி மிகவும் வசதியாக அமைந்தது.

ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

1979 ஜுலை 19ஆம் திகதி கடுமையான பயங்கரவாத தடைச் சட்டம்;; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் தனது ஒரு பக்க தீர்ப்பை வழங்கிய இரண்டு நாட்களின் பின்னராகும்

ஆளும் ஐதேக பாராளுமன்றத்தை ; மதிப்பிறக்கம் செய்யும் நடைமுறையை ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட நாற்பது; வருடங்களில் முதல் தடவையாக சட்டவாக்கச் சபையிலிருந்து பிரதான நிறைவே;ற்று மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்தது. அது, பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்ததோடு, தனது பாராளுமன்றக் குழுவிலிருந்து கருத்து வேறுபாடு எதனையும் சகித்துக் கொள்ளாமலும் இருந்ததனால,; பாராளுமன்ற விவாதமும் கலந்தாராய்வும் சிறிதளவே பயனுள்ளதென உணரத் தொடங்கியிருந்தது.

விரைவாக சட்டங்களை இயற்றுவதற்கும் நுணுகி ஆராய்தல், விவாதித்தல், கலந்தாராய்தல் மற்றும் கருத்து முரண்படுதல் ஆகிய பாராளுமன்ற வழக்கங்களை அதைரியப்படுத்துவதற்காகவும் சட்டவாக்க நடைமுறையை குறுகியதாக்கும் முகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறையையும் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.டன் , 1979 ஜுலை 19ஆம் திகதி பகல் உணவிற்குப் பின்னர், பாராளுமன்றம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.

பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சன்ட் பெரேரா பா.உ அன்றைய தினமே அச் சட்டமூலம் நிறைவேற்றப்படக்கூடியதாக நிலையியற் கட்டளைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென பிரேரித்தார். நீதி அமைச்சர் கேடபில்யூ தேவநாயகம் பா.உ அச் சட்டமூலத்தை அறிமுகம் செய்தார். அச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு அன்றிரவு 9.45 வரை தொடர்ந்து நடைபெற்றது.

தமிழ் தலைமைகள் மௌனம் ; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைதிரிபால சேனநாயக்கா மட்டுமே எதிர்ப்பு

எதிர்க் கட்சியின் சார்பில் பிரதான உரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சேனநாயக்க பா.உ வினால் ஆற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் அம்சங்கள் பற்றி மற்றுமின்றி அதனை சட்டமாக்குவதற்கு முனைந்த முறை பற்றியுமான சில முக்கிய கவலைகளை அவர் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறினார்:

‘இந்தப் பாராளுமன்றத்தில் எந்த மக்களின் பெயரினால், எந்த மக்களின் அதிகாரத்தைக் கொண்டு; சட்டங்கள் ஆக்கப்படுகின்றனவோ, அந்த மக்கள் அதன் உள்ளடக்கங்களை ஆராய்வதும் விளக்கமாக அவற்றை நுணுகி ஆராய்வதும் ஒரு புறம் இருக்க, அவற்றை அவர்கள் வாசித்துகூட பார்க்கவிடாது தடுத்து, இச்சட்டமூலத்தை இன்றிரவே பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாங்கம் இப்போது முயலுகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமளிப்பதல்ல. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களில், மக்களின் அடிப்படை உரிமைகளில் ஏதாவதொன்றை பறித்துக்கொள்ள முயன்ற ஒவ்வொரு சட்டமூலமும் தேசிய நலனில் அவசர முக்கியத்துமிக்கதாக விபரிக்கப்பட்டு, எந்த மக்களின வாக்குகள் அரசாங்கத்திற்கு இம்மிகப் பெரிய பெரும்பான்மை கிடைப்பதற்கு உதவியதோ, அதே பொரும்பான்மையை பயன்படுத்தி அந்த மக்களின் முதுகிற்கு பி;ன்னால் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதில் எந்த அவசர முக்கியத்துவத்தையும் காணவில்லை. வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளும் நோக்கத்திற்காகவே அது தேவைப்படுகிறது. ஏலவே, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமும் அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலையும் உள்ளன. அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’

அமைச்சர் தேவநாயகம் தமது தொகுப்புரையை நிகழ்த்துவதற்கு இரவு 9.58 மணிக்கு எழுந்து நின்றார் என்று ஹன்சாட் பதிவு செய்துள்ளது. இதன் பின்னர் குழு நிலையும் (இங்குதான் சட்டமூலத்தை பாராளுமன்றம் வாசகம் வாசமாக ஆராயுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது) முன்றாம் வாசிப்பும் ஆரம்பமாகின. சட்டமூலம் எல்லா நிலைகளிலும் நிறைவேறியது. பயங்கரவத தடுப்புச் சட்டத்தோடு தொடர்பில்லாத, பொது மக்கள் பாதுபாப்பு கட்;டளைச் சட்டத்தின் கீழான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, இரவு 10.25 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? 2979-2019

பயங்கரவாதத் தடைச்; சட்டம் நீக்கப்படலாகாது என பல அரசியல் கட்சியை சார்ந்தவாளின் கருத்தாக காணப்படும் நிலையில் ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்து யாதெனில் பயங்கரவாதத் தடைச் சட்ட்த்தை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் இந் நிலையில் மதவாத இனவாதம் தீவிரப்படுத்தப்படுகின்ற யதார்த்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்ட்ம் மேலும் வலுப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைபேரக்கு உறுதி வழங்கிய இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

2007ஆம் ஆண்டின் 56ம் இலக்கஇகுடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படக் கூடிய அவசர கால நிலையும் உள்ளன.அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’ அவ்வாறான கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் பொழுது இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

தேடுதல்,கைது செயதல்,தடுத்த வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிளான அதிகாரங்களை வழங்குதல் அடங்கலாக ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட இத்தகையதொரு சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை ; நிறுவனங்கள்இ ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும்இ; அரசியல் தலைமைகள் பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கது.

முந்திய அரசியமைப்பினதும் ஒரு பகுதியான தற்போதைய அரசியலமைப்பின் இக் குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் எதிர்ப்புச்; சட்டத்தை கொண்டுவர அரசு முயற்சித்தபோதிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல்தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன்முறையீடுகள்மீதான கட்டுப்பாடு முதலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (Pவுயு) சட்டப் பல்லவி மனித உரிமை மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய வடிவில் அது சட்டமாக்கப்பட்டால், அது1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச் ;சட்டத்திலும ; பார்க்க சில பிரிவுகளில் வெளிப்படையாக பார்க்கும் பார்வையில் நெகிழ்சிதன்மையும் கணிசமான முன்னேற்றமும் காணப்படுவதாக புலப்பட்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ;பொழுது இந்த இரண்டு சட்டத்திற்கும் மிடையே குறிப்பிடத்;தக்க வேற்றுமையின்மையை அவதானிக்க கூடியதாகவுள்ளன

அவசரகால ஒழுங்கு விதிகளின் முக்கியமான சில விதிகள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படையாக புரிந்து கொள்ளமுடியாத வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது எனவே தற்போதுள்ள வடிவில் சட்டமாக்கப்படின் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரகால ஒழுங்கு விதிகளை நடைமுறைக்கு கொண்டு வராமல் நிரந்தரமாக ஒரு பயங்கரவாத சர்வாதிகார அரசை கொண்டு நடாத்தக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தலாம்.

இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பெயரில் அவசரகால ஒழுங்கு விதிகள் நிரந்தரமாகவே நடைமுறைக்கு வரலாம் இக்; காரணங்களால் சிங்கள தலைமைத்துவ கட்சிகள் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளன 1979ம்ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே எதிர்புத் தெரிவித்தது

தற்போதைய அரசியல் களநிலைமையில் நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையே அரசியல்யாப்பு 19ம் திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள அதிகாரப்பகிர்வினால் ஏற்பட்டுள்ள ;அரசியல் அதிகாரப் போட்டியினால் நாட்டில் பல சிக்கல் நிலையை ஏற்பட்டுள்ளமையை ஏடுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது

இந்த பயங்கரவாதத் தடைச்; சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 40 ஆண்டுகள் முடிவடைந்நதுடன் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ இந்த நோக்கம் முடிவடைந்து; கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளின் பின்னர், இலங்கை பிரசைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ; பயங்கரவாதத்தடைச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (ஊவுயுயை) விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும்ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமையாது.

S.P. Thas

விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்!

‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன்.

‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

(குணா கவியழகனின் முழுமையான நேர்காணல் இன்று இரவு பிரித்தானிய நேரம் 7.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும்)

தமிழீழ விடுதலை போரில் மட்டுமல்லாமல் தமிழீழ கலைத்துறையிலும் காத்திரமான பங்காற்றியிருந்த குணா கவியழகன் தற்போது இலக்கியத்தில் தனது அனுபவத்தின் மூலமும் எழுத்தற்றால் மூலமும் ஈழ மண்ணின் வாசனையையும் போராட்டத்தின் வடுக்களையும் இலகு மொழியில் கதைகளாக்கி வரலாற்றினை பதியவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

அண்மையில் வெளிவந்த அவருடைய நூல்களான ‘கர்ப்ப நிலம்’, ‘போருழல் காதை’ ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா 27.07.2019 சனிக்கிழமை மாலை 4.05 தொடக்கம் 7மணி வரை லண்டன் ஹரோவ் சிவிக் சென்டர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் குணகவியழகன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் விமர்சகர், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் வாசுதேவன்,விமர்சகர் கெளரி பரா, இலக்கிய விமர்சாகர் மாதவி சிவலீலன் ஆகியோர் மதிப்புரை வழங்க, ஊடகர் இளையதம்பி தயானந்தா தலைமையேற்று நிகழ்வை நடத்தவிருக்கிறார்.

நிகழ்வின்போது நியூசிலாந்தில் உருவான கவனி குறும்படம் சிறப்பு காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன் எழுத்தாளரின் இந்த இரு நூல்களையும் அரங்கில் பெற்றுக்கொள்ள முடியும்.


“ஈழப்போர் பற்றி விசாரணை செய்வதே `போருழல் காதை’ நாவல்!” – குணா கவியழகன்

எமது நீதிக்குரல்கள் கேக்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப் படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறிய வேண்டியது.

“எழுத்து என்பது, ஒரு தேடல்; ஒரு விசாரணை; ஒரு தொலைதல்; ஒரு கண்டுபிடித்தல்; `இன்னும் எழுத்து என்பது ஒரு மண்ணும் இல்லை’ என்ற சலிப்பு வரும்வரை தன்னை ஒப்படைத்தலுக்கான ஒரு மோகம்” என்று சொல்லும் குணா கவியழகன், ஈழப்போரின் பாதிப்புகளைத் தொடர்ந்து படைப்புகளாகச் செய்துவருபவர். இன்று இருக்கும் தமிழக வரலாறும், பண்பாடும் இலக்கியத்திலிருந்து எழுதப்பட்டவைதாம். அப்படி இலக்கியம் என்பதும் வரலாற்றின் பக்கங்களைச் சுமந்து நிற்கும் மிக முக்கியமான ஆவணம். அந்த வகையில் எதிர்காலத்தில் ஈழத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, குணா கவியழகனின் படைப்புகள் ஆதாரமாக இருக்கும். போர்ச்சூழலில் ஈழத்தில் நடைபெற்ற இடப்பெயர்வுகளை எழுதத் தொடங்கியிருக்கும் குணா கவியழகன், `கர்ப்பநிலம்’ நாவலைத் தொடர்ந்து `போருழல் காதை’ என்ற நாவலை எழுதியுள்ளார். நாவல் பற்றி குணா கவியழகன் பகிர்ந்துகொண்டவை…

“வாழ்வின் இடர்பாடுகளையும் அதன் கொண்டாட்டங்களையும் மறுகாட்சிப்படுத்திக் காணவைத்து, விசாரணையைத் தூண்டுவதில் `போருழல் காதை’யும் வாசகர்களுக்கு ஒரு கருவியாகும் என நம்புகிறேன்.

கர்ப்பநிலத்தின் `வனமேகு காதை’யை அடுத்து, `போருழல் காதை’ நாவல் வருகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில், உலகிலேயே மாபெரும் மனித இடப்பெயர்வைக் கண்டது ஈழமண். போர் துரத்த, தலைமுறை தலைமுறையாகத் தேடிவைத்த சொத்தையும் வாழ்வையும் கைவிட்டு, ஒற்றை இரவில் ஓடிய மக்களை மையக் கதைக்களமாகக்கொண்டது கர்ப்பநிலம் – வனமேகு காதை.

இப்போது, `போருழல் காதை’, யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்த மக்களின் வாழ்வை ஆதாரமாக்கிப் பேசுகிறது. பெரும்போரைக் கண்டது வன்னியின் வாழ்வு. அதன் செழுமை, அதன் சிதைவு, அதன் வீழ்ச்சி, வீழ்ச்சியைச் சகிக்க முடியாத மனத்தின் ஓர்மம் என வாழத்துடிக்கும் மக்களின் அலைச்சலும் கொண்டாட்டமுமாய் நாவல் விரிகிறது.

இலக்கியத்தை ஒரு தரிசனமாகக் கொள்ள வேண்டும் என்றால், அகச்சிக்கல்களை மட்டுமே ஆராய்வது என்பது எவ்வளவு அபத்தமான செயல்! அதற்குண்டான புறச்சூழலையும், அதை நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது. அதன் ஒளிகொண்டு அனுபவத்தை அறிவாகத் திரட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. இதற்கான கருவி என்பதே வாழ்வின் மீதான விசாரணைதான். அத்தகைய ஒரு விசாரணைக்கான வெளிகளை உருவாக்கவே இந்த நாவலையும் முன்வைத்துள்ளேன்.

கர்ப்பநிலத்தின் காதைகள், அடிப்படையில் சிங்களத்தமிழ் இன முரண்பாட்டை ஆராயும் முயற்சி. ரத்னாயக்க என்கிற சிங்கள கிராமத்து மனிதரும், அரசுநாகன், பொன்னுக்கோனர் போன்ற யாழ்ப்பாண மனிதரும் ஒருகாலத்தில் நண்பர்கள். இந்தக் குடும்பங்களுக்கு இடையேயான தொடர்பு, அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்ட இனப்பகையால் அறுந்துபோகிறது. பிறகு அவர்களின் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்ன ஆனார்கள் என்ற கதைப் பின்னணியில் போரை விசாரணை செய்கிறது நாவல். இந்த விசாரணைக்கு உலக அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியலின் ஊடாட்டங்கள் பற்றிய உண்மை ஒளியாகப் பாய்ச்சப்படுகிறது.

எமது வலிமையை, அநீதியும் அதர்மமும் வஞ்சகமும்கொண்டு சிங்கள தேசம் உலக சக்திகளுடன்கூடி அழித்தது. எமது நீதிக்குரல்கள் கேட்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப்படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறியவேண்டியது. அந்தக் கதையைச் சொல்லிவிட்டுப்போகிறோம். ஏனெனில், அது மீண்டும் மீண்டும் உலகின் ஏதோ ஒரு மூலையில் படரக் காத்திருக்கும் நச்சுப் பதார்த்தம்.

ஒருவன், தன் வாழ்வுக்கு எழுத்தை சாட்சியாக நிறுத்த முடியாது. ஆனால், தன் எழுத்துக்கு வாழ்வை சாட்சியாக நிறுத்த முடியும். இதுவரையிலான என் எழுத்தைப்போலவே `போருழல் காதை’யும் வாழ்வை சாட்சியாக்கித் துணிந்ததுதாம்.

போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும்.

குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவலில் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.”

முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் !

இலங்கைதீவில் இன்று நாம் காண்பது இதற்கு முன்னெப்போதும் நடக்காத ஒன்று.இது வெளியிலிருந்து இத்தீவு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது. பேரழிவுகளை கொண்டுவரும் பூகோள ரீதியாக சொல்லப்படும் – கிறிஸ்தவத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது மேற்குலகத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது ஏனையோருக்கு எதிரான இஸ்லாம் – என்ற கதையாடலோடு இத்தீவில் நிகழ்ந்தவை மிகவும் அழகாக ஒத்துப்போகிறது. இலங்கை தீவில் ஒற்றையாட்சியை உருவாக்கி வழிநடத்தி ஈழத்தமிழருக்கு எதிராக இதை பாதுகாத்த அதே சக்திகள்தான் இப்பேரழிவு கொண்டுவரும் கதையாடலையும் உருவாக்கியது.

முள்ளிவாய்க்கால் அழிவின் பத்தாண்டு நிறைவை நினைவுகூரும் இக்காலத்தில், இத்தீவில் இப்போது நடப்பவற்றை பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளின் பின்னரும் ஈழத்தமிழரின் சம்மதத்தை சிங்கள அரசால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னரும் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவித்த வண்ணம் போராடியே வருகிறார்கள். அபகரிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீளப்பெறவும், சிங்கள ராணுவத்தை வெளியேற சொல்லியும், கடத்தப்பட்ட, சரணடைந்த தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று அறியவும், வடக்கு-கிழக்கை இணைக்கவும், அதாவது நீதிக்காக போராடுகிறார்கள்.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர், பொது எதிரி ஒன்று உருவாகி இருப்பதால், வடக்கு-கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்து தரிக்கவைக்கும்படி சிறிலங்கா அரசை சில தமிழ் தலைவர்கள் கேட்கிறார்கள். ஒற்றையாட்சி சிறிலங்காவானது ஐ-அமெரிக்க, பிரித்தானிய, இந்திய வல்லரசுகளின் ஒரு தந்திரோபாயமாக ஒரு இராணுவ கருவியாக தொடர்வதற்கு “இந்த பொது எதிரி” என்ற கருத்தாக்கம் இப்போது துணை போகிறது. வேறொரு வழியில் சொல்வதானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஊடாக ஒற்றையாட்சி வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

நான் இதை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயான திணிக்கப்பட்ட கொடூரமான ஒற்றுமையாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்த சமயத்தவருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான கொடூரமான ஒற்றுமையாகவே விபரிப்பேன்.

இத்தீவிலுள்ள மக்களுக்கு இது முற்றிலும் புதிய ஒரு அனுபவம்.இத்தருணத்தில் எமது எதிர்காலத்தைப்பற்றி நாம் ஆழமாக சிந்திப்பது மிகவும் அவசியம்.

ஈழத்தமிழரின் 60 ஆண்டு கால போராட்டத்தின் பின்னர் முள்ளிவாய்காலில் 70,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கைகள் சொல்கின்றன. முன்னாள் மன்னார் ஆயரின் கணிப்பின்படி 140,000 மக்கள் கணக்கில் இல்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் தமிழீழ அரசும், விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டுமானங்களும் முற்றாக அழிக்கப்பட்ட போது பொரும் தொகையான மக்களும் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டார்கள் என்பதுவே.

இந்த இனவழிப்பில் உலகின் வல்லரசுகளின் பங்கு என்ன?

தமிழருக்கு எதிரான மாபெரும் படுகொலைகளுக்கு பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் துணை போயிருக்கின்றன என்று டப்ளின் தீர்பாயத்தின் அறிக்கையும் பிரேமன் தீர்பாயத்தின் அறிக்கையும் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்ல இது ஒரு இனவழிப்பு – ஒரு தேசத்தின் அத்திவாரங்களை, அதன் மக்களை, அதன் தலைமைகளை, அத்தேசத்திற்காக போராடிய மக்களை, அவர்களின் முன்பள்ளி ஆசிரியர்களிலிருந்து அவர்களின் முதன்மை தலைவர்கள் உட்பட யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.

இது ஏன் நடந்தது?

வரலாற்று ரீதியாக இலங்கை தீவு இராணுவத் தேவைகளுக்கு முக்கியமான ஒரு இடமாக, முதலில் பிரித்தானியாவும் பின்னர் அதனுடன் சேர்ந்து ஐ-அமெரிக்காவும் பார்த்திருக்கின்றன. இத்தீவு பலமான இராணுவத்தை கொண்ட ஒரு ஒற்றையாட்சியின் கீழ் இருந்தால் தான் இத்தீவை இந்திய பெருங்கடலில் ஒரு இராணுவ கேந்திரமாக பாவிக்கலாம்.

ஏகாதிபத்திய அரசுகள் இத்தீவிற்கு கவரப்பட்டதற்கு இதன் அழகான கடற்கரைகளோ இதன் மலையகப்பகுதிகளின் சுவாத்தியமோ, இதன் பழமையான தமிழ் சிங்கள நாகரீகங்களோ காரணமல்ல. அதற்கு உண்மையான காரணம் இந்தியாவின் எல்லையில், இந்திய பெருங்கடலின் மையத்தில், கப்பல் பாதைகள் அமைந்துள்ள இடத்தில் இத்தீவு அமைதுள்ளதே.

உண்மை என்னவென்றால், பிரித்தானிய காலனிய காலத்தில் சிங்களவர்கள் தமிழர்களைவிட உயர்ந்த இனம் என்று நம்பவைக்கப்பட்டார்கள். சிங்களவர்கள் தமிழர்களைவிட பிரித்தானியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நம்பவைக்கப்பட்டார்கள்.

உண்மை என்னவென்றால் பிரித்தானிய இராச்சியம் இலங்கையை ஆக்கிரமித்துகொண்டு இருந்த அதே காலத்தில், தமிழர்கள்தான் இத்தீவை ஆக்கிரமித்தவர்கள் என்று சிங்களவர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். இக்காரணத்தால் இத்தீவுக்கு “சுதந்திரம்” கொடுக்கப்பட முன்னரே, தமிழர்கள் இத்தீவில் ஓரங்கட்டப்பட்டார்கள். சிங்கள தலைமைகள் இத்தீவின் சுதந்திரத்திற்காக இந்திய சுதந்திர போராட்ட தலைமைகள் போல ஒருபோதும் போராடியதில்லை.

பதிலாக சிங்கள தலைமைகள் காந்தியின் குடியரசு கோரிக்கையை எதிர்த்து முடியரசு கோரிக்கையையே முன்வைத்தார்கள். அதே நேரத்தில், யாழ்ப்பாண இளையோர் காங்கிரஸ் தான் காந்தியை பின்பற்றி குடியரசு கோரிக்கையை முன்வைத்தார்கள். இதனால் இந்தியாவின் சுதந்திர போராட்ட சுயாட்சி சிந்தனை சிங்கள பகுதிகளைவிட தமிழ் பகுதிகளிலேயே மேலோங்கி இருந்தது.

தங்கள் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் இதனால் தங்கள் தேசிய சிந்தனைக்கும் என்ன நடக்கிறது என்பதையும் சிங்கள் மக்களே அறியவில்லை. “சுதந்திரத்திற்கு” பின்னர் ஒற்றையாட்சி இறுக்கமாக்கபட்டுள்ளது. இதனாலேயே காந்தியின் சத்தியாகிரக வழியை பின்பற்றி 30 ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சை வழி தமிழர் போராட்டம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆயதப்போராட்டமான பரிணமித்தது.

தமிழர் போராட்டத்தின் வடிவத்தையே, அவர்கள் கொடூரமானவர்கள், தற்கொலைதாரிகள், தீவிரவாதிகள் போன்ற சொல்லாடல்களால் உலக வல்லரசுகள் விமர்சித்து வந்திருக்கின்றன.

உண்மையில் போராட்ட வடிவத்தை மட்டும் இவர்கள் எதிர்க்கவில்லை. போராட்டத்தையே இவர்கள் எதிர்த்தார்கள். தாயகத்திற்கான, தேசியத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான போரட்டத்தை, அது அகிம்சை வழியிலானதாக இருந்தாலும் ஆயுத வழியிலானதாக இருந்தாலும் இவர்கள் எதிர்த்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த ஆணைக்கே விடுதலைப்புலிகள் வடிவம் கொடுத்தார்கள் – ஒரு அரசை நிறுவினார்கள்.

நீண்டு தொடர்ந்த இனவழிப்பு செயற்பாடுகளை இந்த நடைமுறை அரசு ஓரளவு தடுத்து நிறுத்தியது. இராணுவ சாதனைகள் ஊடாக தமிழர் விடுதலை போராட்டம் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி அதனுடன் அரசியல் ஒப்பந்தம் செய்ய ஆயத்தமானது. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஆதரித்தது. ஆனால் ஐக்கிய-அமெரிக்க, பிரித்தானிய, இந்தியா அரசுகள் ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்தன.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அதன் இராணுவ வெற்றிகளை கொண்டு சனநாயக அரசியல் வெளியை உருவாக்கி கொடுத்தது. அதுதான் 2002ம் ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள். இந்த சனநாயக வெளியை அழிப்பதற்குதான் தான் 70,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 140,000 மக்கள் கணிப்பில் தவறவிடப்பட்டார்கள். இதன் பின்னர் தொடரும் இனவழிப்பில் சிங்கள குடியேற்றத்தாலும், புத்தமத திணிப்புகளாலும், நில அபகரிப்புக்களாலும் தமிழர் தாயத்தின் தோற்றமும் குடிப்பரம்பலும் தலைகீழாக மாற்றப்படுகிறது.

தமிழர் விடுதலை போராட்டம் ஒரு சமயம் சாராத தேசிய போராட்டம். இத்தேசிய போராட்டத்தில் சமயம் இல்லை. சமயத்தை அடிப்படையாக கொண்டு பிரித்தானியாவால் நிறுவப்பட்ட சிங்கள பௌத்த அரசை எதிர்த்தே சமயம் சாராத தமிழர் போராட்டம் உருவானது. உண்மையில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் சமயசார்பற்ற ஒரு சிந்தனையோட்டம் அன்று இருந்தது. ஆனால் பிரித்தானியா சிங்கள பௌத்த சிந்தனை சார்ந்த தேசியத்தையே முன்னிறுத்திது. அதுவே தமிழர்களுக்கு எதிரான ஒரு மனநிலையை சிங்கள மக்களிடம் பரப்பியது.

சிங்கள பௌத்த தேசியம் சமயம் சார்ந்தது. தமிழர்களின் தேசியம் சமயம் சாராதது.

தமிழர் தலைமைகள் சமயத்திற்கு என்ன இடத்தை கொடுத்தார்கள்?

பிரெஞ்சு கம்யூனிச அரசுகள் போல தமிழர் தலைமைகள் சமயத்திற்கு எதிரானவை அல்ல. இவர்களின் நிலைப்பாடு இந்தியாவின் சமயம்சாரா கொள்கைள் போன்றது. அதாவது பல சமயங்களையும் ஒரே தூரத்தில் வைத்து கொள்கைகளை வகுப்பது. அதே நேரம் சமயங்களில் காணப்படும் முற்போக்கு விடுதலை சிந்தனைகளை உள்வாங்குவது. தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். தமிழர் சமூகம் பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட சமூகம். இருந்தும் கிறிஸ்தவ அரசியல் தலைவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏனெனில் தமிழர் போராட்டம் சமயம் சார்ந்தது அல்ல.

விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்களின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சமய முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. போராட்டம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே சுழன்றது.

விடுதலைப்புலிகளின் ஒரு முக்கிய அரசியல் தலைவரான பாலகுமார் தெளிவாக இதை எழுதியிருக்கிறார். வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்விகத்தில் புத்தமதம் இருக்கிறது. ஆனால் அது, அடக்கியாழும் ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் வரும்போது, முக்கியமாக புத்தரின் சிலைகளும் தூபிகளும், நாம் அதை எதிர்க்கிறோம். நாம் புத்தமதத்தை எதிர்க்கவில்லை. சிங்கள அடக்குமுறை அரசின் கருவியாக அது வரும்போது அதை நாம் எதிர்க்கிறோம். இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சமயத்தில் உள்ள சில அடிப்படைவாத கொள்கைகளை இவ்வாறுதான் தமிழர் விடுதலை போராட்டம் தணித்து வைத்திருந்தது. அந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் அடிப்படைவாத சமய குழுக்கள் தோன்றவில்லை. ஐ-அமெரிக்காவினதும் இஸ்ரேயிலினதும் ஆதரவுடன் சவுதி அரேபியாவிலிருந்து கிழக்கு மாகணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட வஹாபிசமும் அப்போது தீவிரமாக எழும்பவில்லை.

சமாதான பேச்சுவார்தை காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமிய மக்களும் இடைய இருந்த உறவு எத்தகையது?

பலர் இதை மறந்து விட்டிருக்கலாம்.

சமாதான பேச்சு வார்த்தைகளின் முக்கியமான காலத்தில் விடுதலைப்புலிகளும் வரலாற்று ரீதியாக சிங்கள பெரும்பான்மை அரசால் அடக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அரசியல் கட்சிகள் உட்பட, ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கியிருந்தார்கள். அதோடு கருணா விலகிய பின் கிழக்கு மாகாணத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட கௌசல்யன் இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக வேலை செய்தார். இஸ்லாமிய மக்களும் அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் மேல் அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள்.

தங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட்ட இஸ்லாமிய விவசாயிகளால் கௌசல்யனின் அரசியல் செயலகம் நிரம்பியிருந்தது எனக்கு நன்றாகவே தெரியும். கௌசல்யனின் இறுதி நிகழ்வுக்கு யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்பதை நினைவு படுத்துங்கள். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமல்ல. தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் வந்திருந்தார்கள். அதுதான் பலரையும் இணைத்த சமயம் சாராத தமிழர் தேசிய விடுதலை போராட்டம். இந்த சாதனையைதான் அழித்தொழித்தார்கள்.

நாம் 70,000 உயிர்களை மட்டும் தொலைக்கவில்லை. நாம் பெரும் நிலப்பரப்புக்களை மட்டும் இழக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மதங்களையும் கொண்டாடும் அதே நேரம் மத பழக்கங்கள் அடிப்படைவாதமாக மாறாமல் தடுக்கும் பல்லின மக்கள் இணைந்த தேசிய உணர்வையும் இழந்துவிட்டோம்.

2009 படுகொலைகளுக்கு பின் இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள் தமிழர் தாயகத்திற்கும் வந்துள்ளன. வஹாபி போக்குகளும் தீவிரமடைந்துள்ளன. ஐ-அமெரிக்காவிலும் இஸ்ரேயிலிலும் இயங்கும் சியோனிஸ்ட் குழுக்களும் வந்து சேர்ந்துள்ளன. சிங்கள பெளத்த தேசியமும் வெற்றி போதையில் திளைக்கிறது. இன்று இச்சமயங்கள் எல்லாம் அடிப்படைவாத பிரிவுகளாக இத்தீவில் உருவாகியுள்ளன. முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு பின் சமயங்கள் இடையேயான உறவுகள் மீளமைக்கப்பட்டுள்ளன.

நாம் உயிர்களை மட்டும் கொடுக்கவில்லை. சமயம் சாராத தேசிய விடுதலை சிந்தனை கொண்ட போக்கையும் இழந்துவிட்டு நிற்கிறோம். இதன் விளைவைத்தான் இப்போது அனுபவித்துகொண்டு இருக்கிறோம். முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தமிழ்-சிங்கள, கத்தோலிக்க-புரோட்டஸ்டன், தெற்கு-கிழக்கு தேவாலாய தாக்குதல்களுக்கு பின்னர்.

இத்தாக்குதல்களின் விளைவுகள் என்ன?

கம்யூனிச சோவியத் ஒன்றியத்திலும் ஆப்கானிஸ்தானிலும் அன்று நிலவிய கம்யூனிச ஆட்சியை எதிர்ப்பதற்காக, பனிப்போர் காலத்தில் ஆப்கானிஸ்தானில் முஜஹதீன் கொரில்லாக்களுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அடிப்படைவாத போக்குகளை முதலில் ஐ-அமெரிக்காவே ஊக்குவித்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியின் கீழ்தான் மூன்றாம் உலக நாடுகளிலேயே அதிகமான பெண் வைத்தியர்கள் இருந்தார்கள். அங்கு பால்நிலை சமத்துவம் மேலோங்கி இருந்தது.

ஆனால், பெண் உரிமை பற்றி பேசும் பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் முஜஹதீன் கொரில்லாக்களை சவுதி ஆரேபியாவின் வஹாபிச கொள்கைகளை தழுவுவதற்கு ஊக்குவித்தார்கள். அதன் மூலம் இந்த கொரில்லாக்கள் சோவியத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு எதிராக ஐ-அமெரிக்க பிரித்தானிய போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

வஹாபிசம் எங்கிருந்து வருகிறது?

எவ்வாறு சிங்கள பௌத்த இனவாதம் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டதோ அவ்வாறே சவுதி அரேபியாவின் அரச பரம்பரையால் பின்பற்ற படும் இஸ்லாத்தின் ஒரு சிறிய பகுதியான வஹாபிசம் முதலாம் உலக யுத்தத்தின் போது ஒட்டமான் பேரராசுக்கு எதிராக பிரித்தானிய அரசால் ஊக்குவிக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா வஹகாபிசத்தை பின்பற்றும் தலைமைகளின் கைகளில் கொடுக்கப்பட்டது. இந்த வஹாபிசம் தான் மத்திய கிழக்கில், முக்கியமாக அரேபிய தீபகத்தில், இருந்த இஸ்லாத்தின் முற்போக்கு சிந்தனைகளை அழித்தது.

இதை இப்போது இந்தியாவில் வளரும் இந்துத்துவா அடிப்படைவாத சிந்தனைகளிலும் பார்க்கிறோம். உலகின் வல்லரசுகள் எல்லாம் இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது போலவே பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேயிலும் ஒரு கடுமையான சியோனிஸ்ட் சிந்தனையோடு உருவாக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். அது போலவே சிங்கள பௌத்த அரசும் இலங்கை தீவில் ஒரு தந்திரோபாயமாக தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் இந்த வல்லரசு நாடுகளும் இன்று தம்மை சமயம் சார நாடுகளாக முன்னிறுத்தினாலும், மறுபக்கத்தில் இங்கும், முக்கியமாக ஐ-அமெரிக்காவில், அடிப்படைவாத கிறிஸ்தவ போக்குகள் வளருகின்றன. ஐ-அமெரிக்காவில் பைபிள் பெல்ட் எனப்படும் இடங்கள் ஜோர்ஜ் புஸ் ஐயும் ஏனைய போர் முனைப்பு கொண்ட சனாதிபதிகளையும் தெரிவு செய்த இடமாக உள்ளன. இவர்களின் ஏகாதிபத்திய திட்டங்களில் சமயங்கள் அடிப்படைவாத போக்கில் செல்ல ஊக்கப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல, சமயங்கள் ஒன்றுடன் ஒன்று மோதவிடப்படுகின்றன.

ஐ-அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய இந்த அழிவுகளை கொண்டு வரும் பூகோள மட்ட சமய கதையாடல்களின் மேடையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கைதீவு மாறியிருக்கிறது. இத்தாக்குதல்களை செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் தெற்காசியாவில், முக்கியமாக இலங்கையில், பிரித்தானிய ஐ-அமெரிக்க நன்மைகளுக்காக இயங்கியிருக்கிறார்கள்.

இராணுவத்தை வெளியேற்ற தமிழர்கள் பத்து வருடங்களாக போராடிய பின்னர், இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டாம் என்று சொல்வது போன்ற தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் சிறிலங்கா அரசை ஏற்றுக்கொள்ளும் போக்கு தோன்றுகிறது. கடந்த பத்து வருடங்களாக குற்றம் இழைத்த அரசாக கருதப்பட்ட சிறிலங்கா அரசு, இப்போ “பாதிக்கப்பட்ட” அரசாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த பாதிக்கப்பட்ட அரசு மற்றயவர்களுடன் போரிடுவதற்கு அதற்கு மேலும் பலம் தேவைப்படும் – இந்த வாதமே இத்தாக்குதலின் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்பூகோள வடிவமைப்பில் சீனாவின் பங்கு என்ன?

முள்ளிவாய்கால் அழிவுக்கு பின் சிறிலங்கா அரசு சீனாவுடம் மேலும் மேலும் நெருக்கமான உறவை பேணியது. ஐ-அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐநா ஊடாக சிறிலங்காவுக்கு எச்சரிக்கைகள் விடுக்க ஆரம்பித்தன. தமிழர்களுக்கு நீதி வழங்கும் நோக்கத்துடன் இது செய்யப்படவில்லை.

ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானங்கள் சிறிலங்கா அரசுக்கு “சீனாவுக்கு நெருக்கமாக போகாதே” என்ற எச்சரிக்கையை கொடுத்தது. அதே நேரம் தமிழர்களுக்கு “மேற்குலகிற்கு நெருக்கமாக வாருங்கள், நீங்கள் வேண்டும் நீதியை நாம் கொடுக்கிறோம்” என்ற செய்தியையும் கொடுத்தது. இத்தீர்மானங்கள் ஒற்றையாட்சியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. பதிலாக இத்தீர்மானங்கள் முள்ளிவாய்கால் அழிவை, தமிழ் இனத்தின் அழிவை, தனிநபர் மனித உரிமை மீறல்கள் என்ற வட்டத்திற்குள் அடக்கிவிட்டது. தமிழர்களுக்கு நீதிமன்றம் ஊடாக நீதி என்ற பொய்யான ஒரு நம்பிக்கையை கொடுத்து, அரசியல் நீதி பற்றி பேச வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இதே சக்திகள்தான் 2015 ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தது. அதற்கு என்ன நடந்தது?

மேலும் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வல்லரசுகளை நம்பாமல் தாமே போரிட வேண்டும் என்ற தெளிவுக்கு களத்தில் நிற்கும் தமிழ் மக்கள் வர தலைப்படுகிறார்கள். இவர்கள்தான் முள்ளிவாய்கால் பத்து ஆண்டுகள் நிறைவை நினைவுகூர ஆயத்தமானார்கள். அழிவுகள் நடந்த இடத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் நினைவுகூர ஆயத்தமானார்கள். இக்கட்டத்தில்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன. பல உயிர்களை இழந்தோம்.

இங்கு இழக்கப்பட்ட உயிர்களும், சிறிலங்காவின் இராணுவ வெற்றி காவுகொண்ட உயிர்களும் இப்போது ஒற்றையாட்சியை பலப்படுத்துவதற்கும், பூகோள மட்டத்தில் சிறிலங்கா ஏகாதிபத்திய அரசுகளின் இராணுவ தேவைகளுக்கான ஒரு இடமாகுவதற்கும் உதவுகிறது. பூகோள மட்டத்தில் இராணுவ தளமாக மாறும் சிறிலங்கா இந்திய பெருங்கடலில் சீனாவை அடக்குவதற்கான வல்லரசுகளின் தளமாகி மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப்படும்.

2002ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது மட்டுமே இத்தீவு உண்மையான சுதந்திரத்தை எட்டியது. இருதரப்புகளும் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் விடயங்களை பேசுவதற்கு இணக்கம் கண்டன. தமிழர்களின் கூட்டு எதிர்ப்பினால் இந்த இணக்கம் தோன்றியது.

தமிழர்களின் போராட்டத்தினால் சிங்களவர்களும் சுதந்திரத்தை எட்டும் சாத்தியம் இருந்தது. இது வெளியிலிருந்து திணிக்கப்பட்டது அல்ல. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உருவான சமநிலையால் இந்த இணக்கம் தோன்றியது. அதுவே இத்தீவின் அரச வடிவத்தை மாற்றும், தமிழர்களையும் ஒரு தனித்துவமான தேசியமாக ஏற்கும் அரசியல் பேச்சு வார்த்தையாக மாற்றப்பட்டது. இது இரு நாடுகளாகவோ அல்லது இரு தேசங்கள் இணைந்த ஒரு நாடாகவோ இருக்கலாம் என்பது முக்கியமல்ல. இப்பேச்சுவார்த்தை, வல்லரசுகள் இத்தீவை தங்கள் இராணுவ தேவைகளுக்காக கையாளும் போக்கை தடுத்திருக்கும்.

இந்திய பெருங்கடலை ஒரு சமாதான பிரதேசமாக வருங்காலத்தில் பிரகடனப்படுத்த வேண்டும் என்று டோக்கியோவில் இடம்பெற்ற கடைசி பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு நேர்காணலில் அன்ரன் பாலசிங்கம் சொல்லியிருக்கிறார். உலகம் தம்மிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக அப்போது சொன்னார்.

முப்பது ஆண்டுகளாக போரிட்ட சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் இப்போது கைகுலுக்கி பேச்சுவார்த்தைகள் ஊடாக ஒரு சமாதானத்தையும் சனநாயத தீர்வையும் தேடினார்கள். அதே காலத்தில் உலகம் ஈராக் பற்றிய கொள்கையில் இரண்டு பிரிவாக பிளந்து நின்றது. பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் ஈராக் மீது படையெடுக்கும் திட்டத்தை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பா எதிர்தது. இந்தக் கட்டத்தில் தான் இலங்கை தீவின் சமாதான பேச்சு வார்த்தைகள் பிரித்தானியாவாலும் ஐ-அமெரிக்காவாலும் குலைக்கப்பட்டன. ஏனெனில் ஈராக் மீதான படையெடுப்பிற்கு தெற்காசியாவில் இன்னுமொரு பலமான தளம் தேவைப்பட்டது. அது தான் சிறிலங்கா.

தமிழர்கள் இதற்கான விலையை கொடுத்தார்கள். விலையை கொடுத்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து ஒரு பல்லின தேசிய முற்போக்கு அரசை உருவாக்க போராடினார்கள். இப்போதோ ஒரு பூகோள மட்ட சமய போர் இங்கு திணிக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய சக்திகளையும் சிங்கள பௌத்த தேசியத்தையும், இந்துத்துவா சக்திகளையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் கிறிஸ்தவ அடிப்படை வாதத்தையும் எதிர்ப்பதற்கு இத்தீவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை, முக்கியமாக தமிழ் இஸ்லாமிய ஒற்றுமை மிகவும் முக்கியம். அதற்காக சிறிலங்கா அரசு முன்வைக்கும் கருத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

சமயம் சார்ந்த பல்வேறு சக்திகள் முன்வைப்பவற்றை நாம் எதிர்க்க வேண்டும். ஈழத்தமிழரின் சமயம் சாராத பல் மத தேசியத்தை இஸ்லாமியர்களுடன் நாம் முன்னெடுத்து செல்வது மிகவும் முக்கியம். இதனூடாகவே சிறிலங்கா அரசையும், இத்தீவை அடக்குவதற்கான கருவியாக சிறிலங்கா அரசை கையாளும் வெளிசக்திகளையும், அதனூடாக இந்திய கடல் ஒரு போர்களமாக மாற்றப்படுவதையும் நாம் எதிர்க்க வேண்டும்.

நன்றி – தமிழ்நெற் (https://tamilnet.com/art.html?catid=79&artid=39454)

– பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ – தமிழில் ந மாலதி

பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ

சிங்கள சமூகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ தனது இளமைக் காலத்தில் தனது சொந்த இடமான நீர்கொழும்பில் கருப்பு ஜுலாய் கொடுமைகளை நேரில் பார்த்தார். மனச்சாட்சியின் உறுத்தலால் உந்தப்பட்டு தமிழையும் கற்று தொடர்ந்து தமிழருக்கு எதிரான போரை வெளிப்படையாக எதிர்த்தும் வந்தார். இலங்கை மீனவர் சங்கத்தின் நாடுதழுவிய ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது சிறிலங்கா நேவி வடகிழக்கு தமிழ் முஸ்லீம் மீனவர்கள் கடலுக்கு போவதை தடை செய்ததற்கு எதிராக குரல் கொடுத்தார். கத்தோலிக்க மதத்தை சேர்ந்த இவர், தேவாலய தொடர்புகள் ஊடாக, 1987-2004 காலப்பகுதியில், போர் தீவிரமாக நடந்த காலத்திலும், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்றார். சிறிலங்கா அரசின் பொருளாதார தடைகளுக்கும் தமிழருக்கு எதிரான போருக்கும் எதிராக எழுதியும் வந்தார்.

மனிதாபிமான உதவிகளுடன் தெற்கில் இருந்து ஒரு குழுவை தமிழ் இஸ்லாமிய அகதி முகாம்களுக்கு கூட்டிச் சென்றார். 1995இல், ஈழத்தமிழரின் தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை ஏற்கும் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்தார். அதே நேரம் ஹிரு எனப்படும் சிங்கள முற்போக்கு அரசியல் குழுவுடனும் இயங்கினார். இராணுவ தீர்வை எதிர்த்து, 2002 சமாதான பேச்சு வார்த்தையையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு எட்டுவதையும் ஆதரித்தார். இறுதிப்போர் நடக்கும் போது, போருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக ஜெர்மனியின் பிரேமன் நகரிலுள்ள மனித உரிமை அமைப்புடன் (International Human Rights Organization-Bremen) இணைந்து வேலை செய்தார். சிறிலங்கா வான்படையின் 2007 செஞ்சோலை படுகொலையின் பின் போரை எதிர்ப்பதற்காக “சிறிலங்காவில் சமாதானத்திற்காக அயர்லாந்து முன்னணி” (Irish Forum for Peace in Sri Lanka) என்ற அமைப்பை உருவாக்கினார்.

முள்ளிவாய்கால் அழிவின் பின்னர், சிறிலங்காவில் சமாதானத்திற்கான அயர்லாந்து முன்னணி அமைப்பும் ஜெர்மனியின் பிரேமன் நகரில் இயங்கும் மனித உரிமை அமைப்பும் ஒழுங்கு செய்த சிறிலங்காவிற்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் (2010) பிரேமன் (2013) அமர்வுகளின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார். தீர்ப்பாயத்தின் இவ்விரு அமர்வுகளும் சிறிலங்கா இனவழிப்பு குற்றம் இழைத்திருக்கிறது என்றும் பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் இனவழிப்புக்கு துணைபோயிருக்கின்றன எனவும் தீர்ப்புகள் வழங்கின. பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ கடந்த 15 வருடங்களாக நாடு செல்ல முடியாததால் அயர்லாந்தில் வாழ்கிறார். அங்கு டப்ளின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார். சண்டைக்கு பின்னரான நீதிக்கான மையம் (Centre for Post-Conflict Justice) என்ற அமைப்பின் இயக்குனராகவும் இருக்கிறார். ஈழத்தமிழருக்கான சர்வதேச கூட்டொருமையை கட்டியெழுப்புதில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

   ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.

ஈழத் தமிழர் இனப் படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. “ஈழ இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இலங்கை அரசு அயல்நாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் (30/1) நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், நீதி இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2015-ம் ஆண்டு ஈழப்போர் தொடர்பாகத் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டபொழுது, அதிலுள்ள அம்சங்களை 2017 மார்ச்சுக்குள் செயலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அக்கெடு 2019-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, அக்காலக்கெடுவை மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது 2021 வரை இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கும் முடிவை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது திட்டமிட்டரீதியில் மறுக்கப்படுவதைத்தான் இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

ஈழ இறுதிப் போரின் பத்தாம் ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி, அப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய நினைவேந்தல்.

ஐ.நா. மன்றமோ அல்லது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலோ, இலங்கை அரசு இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்துதான், அப்போது ஐ.நா.மன்ற பொதுச் செயலராக இருந்த பான் கீ மூன் இறுதிக்கட்டப் போர் குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்தார். “இலங்கை அரசு கொடிய போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறிய அக்குழு, இது குறித்துப் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்தது. எனினும், இப்பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த ஐ.நா. மன்றம் முன்வரவில்லை.

மாறாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அப்பொழுது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே அமைத்திருந்த “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணையத்தின்” பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ராஜபக்சேவிடம் கோரிவந்தது. யாரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டுமோ, அக்குற்றவாளியிடமே நீதி கேட்ட கேலிக்கூத்து இது. ராஜபக்சே அமைத்த அந்த ஆணையமும், இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதா என்பதை இலங்கை அரசே விசாரித்துவருவதாக ஒரு தோற்றத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்த காட்டிவந்த நாடகமே தவிர, வேறில்லை. இறுதிக் கட்டப் போரில் இலங்கை இராணுவம் திட்டமிட்டரீதியில் மனிதப் படுகொலை எதிலும் ஈடுபடவில்லை என்றுதான் அந்த ஆணையம் அறிக்கை அளித்திருந்தது.

2014, மார்ச்சில்தான் இறுதிக் கட்டப் போர் குறித்த ஒரு விரிவான விசாரணையை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை மார்ச் 2015-ல் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி விசாரணை நடத்தப்பட்டு, செப்.2015-ல் விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்று, மைத்ரிபால சிறீசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜபக்சே அதிபராக இருந்த பொழுது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதை அனுமதிக்க மறுத்தார். ஆனால், சிறீசேனாவோ இவ்விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானம் 30/1 -ஐ முன்மொழிந்தபோது, அதில் தானும் இணைந்துகொண்டார். மேலும், இந்த ஒத்துழைப்புக்கான பலன்களையும் அதிபர் சிறீசேனா அறுவடை செய்து கொண்டார்.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழு, ஈழ இறுதிக் கட்டப் போர்க் குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானமோ, இப்பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு, அதனிடத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்குகொள்ளும்படியான ஒரு சிறப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசே அமைத்துக்கொள்ள அனுமதித்தது. பன்னாட்டு விசாரணை கூடாது என ராஜபக்சே கோரி வந்ததை, சிறீசேனா கொல்லைப்புற வழியில் சாதித்துக் கொண்டார்.

இச்சிறப்பு நீதிமன்றத்துக்கு அப்பால், “வடக்கு – கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். போரின் முடிவில் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு – நிவாரணம் வழங்கும் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சமூக, அரசியல் உரிமைகள் வழங்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” ஆகிய அம்சங்களோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தை மார்ச் 2017-க்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இக்காலக்கெடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்பொழுது மார்ச் 2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 2015 -க்கும் மார்ச் 2019 -க்கும் இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில், இலங்கை அரசு 30/1 தீர்மானத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்குவதற்கு ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா எனப் பரிசீலித்து, காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்றுகொண்டு வழங்கப்பட்ட சலுகை இது. காலக்கெடுவைத் தள்ளிக் கொண்டே போவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுவதை நடைமுறைப்படுத்தும் தந்திரம் இது.

நீர்த்துப்போன ஒன்று என்றாலும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது 30/1 தீர்மானத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனால், இச்சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் திசையில் இலங்கை ஒரு அடிகூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. மாறாக, இனப் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளையும் சிப்பாய்களையும் போர்க் கதாநாயகர்கள் என அழைக்கத் தொடங்கிய சிறீசேனா, பத்திரிகைச் செய்திகளிலும், இராணுவச் சிப்பாய்களைக் கூட்டி நடத்தப்படும் கூட்டங்களிலும், இராணுவ வீரர்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என மீண்டும் மீண்டும் உறுதியளித்து வருகிறார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 2016-ம் ஆண்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், நீதித்துறை அமைச்சர் விஜேவாயாடஸா ராஜபக்சே, “இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக விமர்சிப்போர் மீது கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும்” என மிரட்டினார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தின்படி, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமும் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நட்ட ஈடு-நிவாரண உதவி அலுவலகமும் அமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டிவருகிறது, இலங்கை அரசு. எனினும், இந்த இரண்டு அமைப்புகளும் சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானவை.

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தையொட்டி, ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்தும், அதற்கு நீதி கேட்டும் ஈழத் தமிழ் அமைப்புகள் இலங்கை மன்னார் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஒரு குறிப்பிட்ட நபர் போரின்போது காணாமல் போனதாகச் சான்றிதழ் வழங்கி, அதற்குரிய நட்ட ஈடு வழங்குமாறு பரிந்துரைக்க முடியுமே தவிர, அதற்கு மேற்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்த அலுவலகத்திற்குச் சட்டபூர்வத் தகுதியும், உரிமையும் கிடையாது. இறுதிக்கட்டப் போரின்போது எத்துணை ஈழத் தமிழர்கள் காணாமல் போனார்கள் என்ற விவரத்தைக்கூட வெளியிட மறுத்துவருகிறது, இலங்கை அரசு.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு- நிவாரணம் வழங்கும் அலுவலகத்தைப் பொருத்தவரையில், அதனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டு அமைப்புகளுமே இலங்கை அரசின் தொங்கு தசைகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையைச் சார்ந்த “அடையாளம்” மற்றும் “பேர்ல்” என்ற இரண்டு மனித உரிமை அமைப்புகள் ஜூலை 2017-ல் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத் தீவில் மட்டும் இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அளவில் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

“தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்காது” என ஜூலை 2017-ல் நடந்த இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார், அதிபர் சிறீசேனா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தேசியப் பாதுகாப்புக்காக 672 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் அறிவிக்கையை அக்டோபர் 2017-ல் வெளியிட்டது இலங்கை கடற்படை.

வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் மார்ச் 2018-ல் கூடத் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் புதிய கருப்புச் சட்டத்தை இயற்றிவிட்டுத்தான், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது, இலங்கை அரசு.

சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இலங்கை அரசிற்கு அடுத்தடுத்து இரண்டு முறை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சிறீசேனா அரசிற்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்திருப்பதுதான். மார்ச் 2017-க்குப் பிறகு, அமெரிக்கா இடையே 44 முறை இராணுவம் தொடர்பான சந்திப்புகள் நடந்திருப்பதாகவும், இரண்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சி நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, மனித உரிமை அமைப்பான பேர்ல்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவிலுள்ள நெகோம்போ பகுதியில் அமைந்திருக்கும் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையை அணுகி வருகிறது, அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு அணுசரனையாக இலங்கை அரசும் நடந்துவருவதால், அந்நாட்டுக்குச் சலுகைகளும் நிதியுதவிகளும் அளிப்பதில் தாராளமாக நடந்துவருகிறது அமெரிக்கா. இலங்கைக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை இந்தப் புவி அரசியல் பின்னணியிலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவொருபுறமிருக்க, சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்புகளைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, “போர்க் காலத்தில் இருந்த கடுமையான இராணுவப் பாதுகாப்பு அம்சங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்தான், இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துவிட்டதாக”க் கூறியிருக்கும் இலங்கை அரசு, இனி இது போன்ற குண்டுவெடிப்புகள் நடப்பதைத் தடுப்பது என்ற பெயரில் ஈழப் போரில் இனப் படுகொலை குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்தி, அக்குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது.

மேலும், பௌத்த மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கான சூழல் இல்லை எனக் காட்டி, ஈழத் தமிழர்களுக்கு அரைகுறையான நீதி, நியாயம்கூடக் கிடைத்துவிடாதபடிச் செய்யும் சதியிலும் இறங்கியிருக்கிறது.

By புதிய ஜனநாயகம் – July 12, 2019

இறுதிக்கட்ட யுத்தத்தில் புலிகள் யாரும் ராணுவத்திடம் சரணடையவில்லயாம் !

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்ததாக, அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சரணடைந்த பலர் இன்று காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி வட மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது உறவினர்களை இலங்கை ராணுவம் அழைத்து சென்றதாக பலர் இன்றும் தெரிவித்து வருகினறர்.

இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சரும், தனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக கூறும் பெண்மணியுமான அனந்தி சசிதரனிடம் பி.பி.சி தமிழ் வினவியது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது கணவர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததை தானும், தன்னுடன் இருந்த லட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அவர் தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இலங்கை ராணுவத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் இருக்கவில்லை என கூறிய அவர், இராணுவம் தம்மிடம் சரணடைந்தோர் தொடர்பான தகவல்களை முழுமையாக மறைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி பல வருடங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், போராட்டம் நடத்துபவர்கள் ராணுவத்திற்கு எதிராக போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கானோர் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்க மறியலின் பொருட்டும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்து, சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உரையாற்றியபோது சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் குடும்ப சூழல் எப்படி உள்ளது என்பது குறித்து அறிய மகேந்திரன் குடும்பத்தினரை பிபிசி தமிழ் சந்தித்தது.

திருமணமான உடனே கைது

மகேந்திரனுக்கு திருமணமாகி அப்போது ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. 1993ஆம் ஆண்டு ராணுவத்தினர் மட்டக்களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இறுதியாக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கிணங்க நீண்ட கால சிறைத் தண்டனையை மகேந்திரன் இப்போது அனுபவித்து வருவதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முறக்கொட்டான்சேனை மகேந்திரனின் சொந்த ஊர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலம் மகேந்திரன் செயற்பட்டதாக அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

பிறகு அந்த அமைப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில்தான், மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக நடத்தப்பட்ட, படையினரின் சுற்றி வளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தையும் அதற்குப் பிறகு மகேந்திரனுக்கு என்னவானது என்பதையும், அவரின் மருமகள் மெரீனா பிபிசியிடம் விவரித்தார்.

“ராணுவத்தினருடன் இணைந்து அப்போது செயற்பட்ட, முகம் மறைத்த ‘ஆள்காட்டி’ ஒருவரால், எனது மாமா காட்டிக் கொடுக்கப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர் சார்பாக சட்டத்தரணிகளை வைத்து வாதிடுமளவுக்கு எங்களுக்கு வசதியிருக்கவில்லை. அந்த நிலையில்தான், அவருக்கு 70 வருடங்கள் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது,” என்கிறார் மெரீனா.

மகேந்திரனுக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மகேந்திரனின் சிறைக் காலத்தில்தான் அவரின் அப்பாவும் அம்மாவும் இறந்தார்கள். அம்மாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் மட்டுமே மகேந்திரனுக்குக் கிடைத்தது.

இவ்வாறான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தொடச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது குறித்து சாதகமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், முறக்கொட்டான்சேனையில் சந்தித்த மகேந்திரனின் மூத்த சகோதரி புஷ்பவதியும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்தார்.

“விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, பிடிபட்டவர்களில் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மகேந்தினுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, அவரையும் விடுவிக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இறக்கும் போது, அவர் எங்களுடன் இருக்கவில்லை. அம்மாவின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்தான் அவரைக் கொண்டு வந்தார்கள். அப்போது எங்கள் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை,” என்றார் புஷ்பவதி.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகேந்திரனுக்கு இப்போது 46 வயதாகிறது. தனது இளமைக் காலத்தை சிறைக்குள்ளேயே அவர் தொலைத்துவிட்டார். அவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறைக் கைதிகள் தினத்தன்று, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சந்தித்ததாகக் கூறும் மெரீனா நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் மகேந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலேயே, சிறைவாசத்தை அனுபவதித்து வருகிறார் என்றார்.

இதேவேளை, மகேந்திரனை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனையடுத்தே மகேந்திரன் குறித்து நாடாளுமன்றில் வியாழேந்திரன் உரையாற்றியதாகவும் மெரீனா தெரிவித்தார்.

இதனையடுத்து, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில், நடவடிக்கைகள் எதையாவது மேற்கொண்டுள்ளீர்களா” என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் பிபிசி வினவியது.

அதற்கு பதிலளித்த அவர்; “மகேந்திரனுக்கு 68 வருடங்களைக் கொண்ட சிறைத்தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, அவர் சுமார் 30 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்”.

“சிறைச்சாலை சென்று அவரை நான் சந்தித்தேன். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். நடப்பதற்குக் கூட முடியாத நிலையில் இருக்கின்றார். அந்த சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள், தங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், மகேந்திரனின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டனர்” என்று கூறியதோடு, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமும், ஏனைய உயர் மட்டத்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்,” என்றார்.

இதேவேளை, இவ்வாறானவர்களின் விடுதலை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.

சுமார் 03 தசாப்த காலத்தையும், தனது இளமைக் காலத்தையும் சிறைக்குள் தொலைத்து விட்ட மகேந்திரன், விடுதலை பெற்று வந்து, தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, அவரின் குடும்பத்தாரினுடைய பேரவாவாக உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் படையினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே புனர் வாழ்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஆனால், மகேந்திரன் இறுதி யுத்தத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர் என்பதால், அவரை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ்

ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல இந்திய அரசு நடத்துகிறது: வைகோ கண்டனம்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்.. சிறப்பு முகாம்களை முற்றிலும் நீக்க வைகோ கோரிக்கை

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈழத்தமிழர்களை சந்தேக கண்ணோடு இந்திய அரசு அணுக கூடாது என வலியுறுத்தியுள்ள வைகோ, தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரியுள்ளார். மேலும் அவை சிறப்பு முகாம்களா அல்லது சித்திரவதை கூடங்களா என கேள்வி எழுப்பியுள்ள வைகோ, சிறப்பு முகாம்களை முற்றிலும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வைகோ வெளியிட்டுள்ளார் அதில் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைக்க தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, மத்திய அரசு பல வழிகளிலும் ஒடுக்கி வருகின்றது. சந்தேக வழக்குகளில் கைது செய்யப்படுகிற இளைஞர்களை விசாரணைக்குப் பின் விடுதலை செய்வது தான் வழக்கம். ஆனால் ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையுமின்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கிறார்கள்

சாகும் வரை உண்ணாவிரதம்

சாகும் வரை உண்ணாவிரதம் எவ்விதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே ஈழத்தமிழர்கள் அடைபட்டு கிடக்கின்றனர். சிறைப்பட்டுள்ள இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். குற்றப்பரம்பரை போல நடத்தப்படும் அவலம் குற்றப்பரம்பரை போல நடத்தப்படும் அவலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கம் அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது.பல அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் து கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன.

ஈழத்தமிழர்களை மத்திய அரசு குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது.

இது மனித உரிமைகளுக்கு எதிரானது. சந்தேகக் கண்ணோடு பார்க்க தேவையில்லை சந்தேகக் கண்ணோடு பார்க்க தேவையில்லை ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழ தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடியுரிமையும் வழங்கியுள்ளன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை. இந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.


திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் நடப்பது என்ன?
*************************************

இந்திய உள்ளக புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத்த் தடுப்பு பிரிவினரால் பல சந்தேகங்களுக்கு உட்படுத்தப்பட்டு கைதாகிய ஈழத்தமிழர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும், இன்னமும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப் படாமல் தடுத்து வைத்திருப்பது ஏன்?

காரணம் கேட்ட அவர்களுக்கு உணவு வழங்கல் அல்லது அதற்கான உதவு தொகை என்ற எந்த அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு வதைக்கப்படுவது ஏன்?

இக் கேள்விகளோடு இந்திய , இலங்கை ஊடகங்கள் அவர்களுக்காக இந்திய மற்றும் தமிழக அரசை கேள்வி கேட்க முன் வருமா?

இன்று காலை முதல் நீதி கோரி உண்ணா நிலை போராட்டத்தை நடாத்தி வரும் அவர்களின் நீதிக்காக இத் தேசிய ஊடகங்கள் முன்வருமா..?

கடந்த 26.06.2016ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த தயானந்தன் , சத்தியசீலன்,
தர்சன் , சுதர்சன் , றொபின்பிரசாத் , கோபிநாத் , தயாகரன் , குருவிந்தன், காந்தறூபன், பிரபாகரன், றமேஸ் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காலப் பகுதியில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர் இருபினும் இவர்கள் இன்னும் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர் தங்களை தமது நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இரத்தினம் கவிமகன்

இறுதிக்கட்ட போரின் போது மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி !

சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் இருந்தது என வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் 2019ஆம் ஆண்டிற்கான சுய மதிப்பீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

‘போரின் பின்னர் எமக்கான தேவைகள் ஏராளம் இருந்தன. அவற்றை அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. இருட்டில் தேட முற்படுபவர்களாக இல்லாது எமது தேவைகளை கண்டறிந்து, ஆராய்ந்து, அடையாளப்படுத்தி, அவற்றை எவ்வாறு தீர்த்து வைக்க முடியும் என்பது சம்பந்தமாக நான் 2013இல் பதவி ஏற்றதும் அப்போதைய ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தியுடன் பேசினேன்.

2003இல் தயாரித்தது போல் வட மாகாணத்திற்கு ஒரு தேவைகள் மதிப்பீட்டை தயாரித்து தரும்படி வேண்டினேன். அப்போது இருந்த அரசாங்கம் மகிந்த ராஜபக்ச உடையது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் போரின் முடிவில் பாதிக்கப்பட்டோருக்காக எதையும் செய்யாது வாளாதிருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் அப்போது இருந்தன.

அந்த குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் சுபினே நந்தி இருந்தார். அவருக்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் மிக நெருக்கமான உறவு இருந்தமை யாவரும் அறிந்ததே.

முழுமையான தேவைகள் மதிப்பீட்டை செய்வதாக ஒப்புக் கொண்டதன் பின்னர் மனித இன நலம் சம்பந்தமான Humanitarian அறிக்கையை மட்டும் பெறவே அவர் முன்னின்றார்.

முழுமையான அறிக்கை பெறப்பட்டால் சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் இருந்தது, அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்த சுபினே நந்தியிடமும் இருந்தது.

குறித்த அறிக்கையில் பல பிழையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. உதாரணத்திற்கு கணவன்மார்களை போரில் இழந்த பெண்களின் தொகை வட மாகாணத்தில் சுமார் 49,000மாக இருந்தது. ஆனால் அவர்கள் அறிக்கைப்படி சுமார் 7,500 பேரே போரில் கணவன்மார்களை இழந்தவர்கள்.

29,000 பேரின் கணவன்மார்கள் இயற்கை மரணம் எய்தினார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 29,000 பேர் அரச படைகளால் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளிக் கொண்டுவர வதிவிடப் பிரதிநிதி கூட பின் நின்றார்.

அரசாங்கம் மாறிய பின்னர் இது சம்பந்தமாக பிரதம மந்திரியுடன் பேசினேன். தற்போது இது பற்றி பிரதமர் தலைமைத்துவத்தில் பாஸ்கரலிங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். இவை சம்பந்தமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி நாம் அறிந்திருந்தால் தான் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

தரவுகள் சரியாக இருந்தால் தான் புள்ளிவிபரங்களை வழிநடத்திச் செல்லலாம். பிழையான தகவல்களை அரசாங்கம் தந்தால் எமது பிரச்சினைகள் சம்பந்தமாக உரிய நிவாரணங்களைப் பெற முடியாது போய்விடும்.

ஆகவே உங்களின் சுயமதிப்பீட்டின் வழிமுறையானது இதுவரை ஐ.நா. ஸ்தாபனத்தினாலும், அரசாங்கத்தினாலும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி போதிய அறிவு பெற இடமளிப்பதாக இருக்க வேண்டும்.

தற்போதைய ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் வடக்கு, கிழக்கு தேவைகள் பற்றி இதுவரை தயார் செய்த சகல அறிக்கைகளினதும் பிரதிகள் பெறப்பட வேண்டும்.

பாஸ்கரலிங்கம் அல்லது வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதனுடன் ஒரு நேரத்தை ஒதுக்கி அவர்களால் இதுவரை காலமும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், பூரண விபரங்கள் போன்றவை பெறப்பட வேண்டும்.

அதன் பின்னர் தான் உங்களின் அமைப்பு முறையான சுயமதிப்பீட்டில் இறங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Up ↑