Search

Eelamaravar

Eelamaravar

தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்!

லெப் கேணல் கதிர்வாணன்.
மகேந்திரன் திருக்குமார்
வீரச்சாவு.29.07.2008

2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான்.அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான்.

இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான் . இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான்.அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான்.

அத்தோடு தென்தமிழீழ விநியோக நடவடிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான்.அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான்.தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத்தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான்.தரைத்தாக்குதலுக்கேற்றமாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு , எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான்.அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான்.

கடற்புலிகளின் தரைத்தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத்தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத்தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான்.சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன் . 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவடைகிறான்.

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

      “தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.”

“கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.”

“இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.”

“உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம்.”

“வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும்.”

“அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும்.”

இவர்கள் அனைவரும் மரத்திலிருந்து விழவில்லை. இவர்களுக்கு விபத்து நேரவில்லை. உடல் உபாதைகளுடன் பிறக்கவுமில்லை. 30 வருடங்களாக நீடித்த கொடூர போரினுள் சிக்குண்டு தினம் தினம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள். காயப்பட்ட நேரமே செத்திருந்தால் இந்த நரக வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க நேர்ந்திருக்காதே என்று ஒவ்வொரு நாளும் அவஸ்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள்.

6 வயதாக இருக்கும்போது தலையில் காயமடைந்த அகழ்விழி உட்பட போரின்போது நேரடி தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி, ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலே மகளை இழந்து இரும்புத்துண்டுகளை சுமந்து வாழும் தாய் என 10 பேரை சந்திக்க முல்லைத்தீவு சென்றிருந்தேன். வயிற்றுப் பசிப் போராட்டத்துக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய குரல்களுக்கு செவிசாயுங்கள்.

இப்ப இவா ஸ்கூலுக்குப் போறதில்ல. தலையில காயம் பட்டதால அடிக்கடி வலிப்பு வரும். இந்த வருசம் ஓ.எல் பரீட்சை, என்னதான் செய்ய..?

2009 மார்ச் மாதம் புதுமாத்தளன்ல இருக்கும்போதுதான் இவா காயம்பட்டா. அப்போ 6 வயசிருக்கும். நாங்க தங்கியியிருந்த இடத்தில ஷெல் அடிக்கிற சத்தம், ரவுன்ட்ஸ் சத்தம் எதுவுமே எங்களுக்கு கேக்கல. நல்ல பகல் நேரம் அது. நாங்க தரப்பாள் கொட்டிலுக்கத்தான் இருந்தம். தூரத்திலென்டா சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. திடீரென்று மகள் சரிஞ்சி விழுந்திட்டா. என்ன நடந்தது, என்ன நடக்கிறதென்று ஒன்டுமே எனக்கு தெரியேல்ல. பேந்துதான் தலையில் காயம்பட்டத தெரிஞ்சு கொண்டன். இவாட பிடறியில பட்ட ‘பீஸ்’ உள்ள போய் காதுப்பக்கமா வீங்கி இருந்தது. உடனடியா அப்போ அங்க இருந்த தற்காலிக ஹொஸ்பிட்டலுக்குத் தூக்கிக்கொண்டுபோனன். ஒபரேசன் செய்யவேணும், ஆனா மருந்து இல்லையெண்டு டொக்டர் சொன்னார்.

என்ன செய்தன் ஏது செய்தன் என்ற நினைவே இப்ப இல்ல. எப்படியாவது இராணுவத்தின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து முகாமில இருந்த ஹொஸ்பிடல்ல வச்சி வைத்தியம் பார்த்தன். அவங்க உடனே வவுனியாவுக்குக் கொண்டு போனவங்கள். பெரிய டொக்டர் வந்து பார்த்திட்டு இப்பவே கண்டிக்குக் கொண்டுப் போகச் சொன்னார். இரண்டு மாதங்களா அங்க வச்சிதான் மகளுக்கு வைத்தியம் பார்த்தம். நாலு நாள் கழிச்சிதான் கண் முழிச்சா, 20 நாளைக்குப் பிறகுதான் பேச ஆரம்பிச்சா.

ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று ஊசி அடிப்பினம். சேலைனும் ஏத்துவினம். கடைசியா நரம்பு பாதிக்கப்படும், ஒபரேசன் செய்ய முடியாதென்று டொக்டர் சொன்னார்.

வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் நல்லாத்தான் இருந்தவ. பேந்துதான் இந்த வலிப்பு வரத் தொடங்கிற்று. இப்போ ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது. இப்போ ஒவ்வொரு மாதமும் மல்லாகம் ஹொஸ்பிட்டலுக்கு கிளினிக் போறம். வலிப்பு வாறதுக்கு மட்டும் குலுசை தருவினம்.

இப்ப சொல்றாங்கள் வெளிநாடு வழியா ஒபரேசன் செய்யலாம் என்று. எங்கேயும் வெளிக்கிடேல்ல. 8, 9 இலட்சம் செலவாகுமாம். நான் தோட்ட வேலைதான் செய்றன். மூத்த மகன் மட்டும்தான் வேலைக்குப் போறார். மற்ற மூன்று பிள்ளைகளும் படிக்கினம். இத்தனை இலட்சத்துக்கு நான் எங்க போக?

கொஞ்சக் காலமா இந்த வலி இருக்கேல்ல. ஆனால், இரண்டு நாளைக்கு முன்னால கடலுக்குப் போயிருந்தன். தனியா வலைய பிடிச்சி இழுக்க முடியாதளவுக்கு கை விறைச்சிட்டு. ஒரு மாதிரி சமாளிச்சி வந்து சேர்ந்திட்டன்.

1994ஆம் ஆண்டு நான் காயப்பட்டபோது இரண்டு கைலயும் ‘பீஸ்’ இறங்கீற்று. அப்போது ட்ரீட்மென்ட் செய்தனான். ஆனால், ‘பீஸ்ஸ’ வெளியால எடுக்கேல்ல. வலது கை இரண்டு விரலும் இழுத்திருந்தது. பந்து வச்சி எக்ஸசைஸ் செய்து சரிவந்திட்டுது. ஆனால் இன்னும் ‘போல்ஸ்’ ஓடித்திரியுது. அத எடுக்க ஏலாது.

இடது கை தோல் மூட்டுக்குள்ள இருக்கிற ‘பீஸால’தான் கடும் வேதனையா கிடக்கு. ஹொஸ்பிட்டல்ல கொண்டு காட்டினன். எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்திட்டு அதை எடுக்க ஏலாதெண்டு சொல்லிப்போட்டாங்கள். எடுத்தால் கை விளங்காதாம். ஒரு சில நேரங்கள்ல அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும். கைய அசைக்கக்கூட முடியாது. வைப்தான் எண்ணையெல்லாம் தடவி வழமை நிலைக்கு கொண்டுவருவா. எந்த நேரமும் இப்படி ஆகாது. அப்படி ஏதும் நடந்தால் யாராவது உதவிக்கு இருக்க வேணும்.

ஒரு நாள் அப்படித்தான், தனியா கடலுக்குப் போய் நடுக்கடல்ல வச்சி கை இறுகிட்டு. ஒண்டும் செய்ய முடியேல்ல. வலையயும் இழுக்க முடியேல்ல, படகையும் திருப்ப முடியேல்ல. அப்படியே 3,4 மணித்தியாலமா தனியா கிடந்தன். அந்த வழியா வந்த ஊர்க்காரங்களின்ர கண்ணில பட்டதால தப்பிச்சன்.

அதேபோல இன்னொரு நாள் தென்னை மரத்துக்கு ஏறி உச்சியில இருந்தநேரம் இதே மாதிரி இடது கை இழுத்துப் பிடிச்சிருச்சிற்றுது. என்னால் ஒண்டும் செய்ய முடியேல்ல. மரம் வழியா இறங்கவும் ஏலாது, அந்த உச்சியிலிருந்து குதிக்கவும் ஏலாது. பக்கத்து வீட்டில இருந்த அண்ணர் மரத்துக்கு ஏறி என்னை கயிறு கட்டி மரத்தில இருந்து இறக்கினார்.

இப்படி நிறைய நடந்திருக்கு. இதுபோல ஏதாவது நடக்குமெண்டு வேலைக்குப் போகாம இருந்தா மூன்று பிள்ளைகளின்ர படிப்புக்கு என்ன செய்றது? இரண்டு மாசத்தில மண்ணெண்னைக்கு மட்டும் 50 ஆயிரம் கடன் இருக்கு. தொடர்ச்சியா மீன் பட்டால்தான் அந்தக் கடன கூட அடைக்கலாம்.

இந்த இரும்புத் துண்டு உடம்புல இருக்கிறதால எனக்கு என்ன நடக்கும் என்று ஒரு நாள் கூட நான் நினைச்சிப் பார்த்ததில்ல. இருக்கிற வரைக்கும் பிள்ளைகளோடு சந்தோசமா இருந்திட்டுப் போவம்.

நான் இயக்கத்தில போராளியா இருந்தன். வீட்ல பெண் சகோதரங்கள் மூன்று பேர் இருந்ததால நான் போய் சேர்ந்தன்.

1997ஆம் ஆண்டு நடந்த சண்டையில காயப்பட்டன். என்ர பிடறியில ‘பீஸ்’ ஒன்று இருக்கு. நெஞ்சிலயும், கையிலயும் ‘போல்ஸ்சும்’ இருக்கு.

அப்பவே எடுக்க ஏலாதெண்டு விட்டுட்டினம், மூளைக்குப் பிரச்சினையாகுமென்று. இப்பவும் எடுக்க எந்த உத்தேசமும் இல்ல. அப்படி ஏதாவது முயற்சிசெய்து பிரச்சினையாகிட்டால் பிள்ளைகள் 4 பேரையும் பற்றி நினைக்கும்போதே பயமா இருக்கு. இருக்கும் மட்டும் இருக்கட்டும்.

முதல்ல பெரிசா வலி இருக்கல்ல. ஆனால், வெயில் வழியா நின்றால் தலை சுத்தும். ஒருக்கா வேலைசெய்யும்போது தலையில அடிப்பட்டு கூடுதலா வருத்தத்த தந்தது.

தடுப்புக்குப் போய் வந்தபிறகு இன்னும் மோசம். பாரங்கள் தூக்கி, ஓடித்திரியிற வேலையெல்லாம் இப்ப செய்யமுடியாது, களைக்கும். முன்ன செஞ்சமாதிரி செய்ய ஏலாது.

இயக்கத்தில இருந்ததால தடுப்பு முகாமில இருந்தநேரம் சிஐடிக்காரரிட்ட போய் விசயத்த சொன்னன். விசாரிச்சிட்டு விட்டுட்டினம். மாதாமாதம் வந்து சைன் மட்டும் வைக்கச் சொன்னவங்கள். திடீரென்று ஒரு நாள் டிஐடி என்று சொல்லிக் கொண்டு வந்தவங்க, விசாரிக்க. ஒரு நாளில வந்திடலாம் என்று கூட்டிக்கொண்டு போனாங்கள். 4 வருஷத்துக்கு பிறகுதான் வெளியில் விட்டவங்கள்.

அந்த 4 வருஷமும் சரியான சித்திரவதை. ஒரு வெள்ளை சேர்ட் முழுக்க இரத்தம். அந்த சேர்ட்டையும் நான் வீட்டுக்கு கொண்டுவந்தனான். நெஞ்சுப் பகுதியில கறுப்பா வட்டம் வட்டமா இருந்தது. விசாரிக்கும் போது பேனையால குத்துவான். கால் பெருவிரல் இரண்டிலயும் நகம் இல்ல. சீமேந்து தரையில சப்பாத்துக் காலோட என்ர கால் மேல ஏறுவான். இப்போ எனக்கு நடக்கிறது இதுன்ர பாதிப்போ தெரியல.

உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம். எனக்குத் தெரியாது. கன பேர் சொல்லியிருக்கினம். அதனால பின்னேரம் 6 மணிக்கு குளத்துக்குப் போய் விடியக்காலை வெல்லனா 5 மணிக்கு வந்திருவன்.

மழைக்கு நல்லா நனைஞ்சா ஒரு கிழமை ரெண்டு கிழமை வீட்ட படுத்திருக்க வேண்டியதுதான். தலை வெயிற்றா இருக்கும். வெளியில போறதில்ல. கனகன பிரச்சினைகள கொண்டுவந்துவிட்டிடும். அதனால எங்கயும் போறதில்ல. குளத்துக்குப் போய் வீட்டுக்கு வாறது மட்டும்தான்.

ரெண்டு மாடுகள் இருக்கு, அதில பால கறந்து விற்று வாழ்க்கைய கொண்டு நடத்திறம். எந்த நாளும் மீன் பிடிபடுறதில்ல. ஒருசில நாட்கள் 200 ரூபாவும் கிடைக்கும் 2,000 ரூபாவும் கிடைக்கும். 100 ரூபாவும் வீட்டுக்கு எடுத்து வந்திருக்கன்.

முன்னாள் போராளி என்று எந்த உதவித் திட்டமும் கிடைக்கேல்ல. எல்லாமே இவாதான் (மனைவி). நான் கொண்டுவந்து குடுக்கிற காச வச்சிக்கொண்டு சமாளிச்சுக்கொண்டு போறா.

முள்ளிவாய்க்கால்ல வச்சிதான் நான் காயப்பட்டன். 2009 இடம்பெயர்ந்து கொண்டிருக்கேக்க. ஷெல் ‘பீஸ்’ ஒன்று முள்ளந்தண்டு பக்கமா ஏறிற்று. காயப்பட்டு மருத்துவம் செய்யமுடியாம ஒரு கிழமையா இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். கடைசியா உயிர கையில பிடிச்சிக் கொண்டு இராணுவத்திட்ட போய்ச் சேர்ந்தம். அங்கபோய் விசாரிச்சிவிட்டு மருந்து கட்டப்போனன். என்ர காயத்த பார்த்திட்டு, உடன் காயமென்டா ‘பீஸ்’ எடிப்பினமாம், என்ர காயத்தில ஊனம் வடிய வெளிக்கிட்டதால எடுக்கேல்ல. குறிப்பிட்ட காலத்தில ‘பீஸ்’ வெளியில வரும், அப்ப எடுங்கோ என்று மருந்து மட்டும் போட்டவங்கள்.

மூன்று மாதமாக நடக்கமுடியாம இருந்தனான். என்னை தாங்கிக்கொண்டுதான் திரிஞ்சவ. காயங்கள் மாறினவுடன் நோர்மலா நடக்கத் தொடங்கினன். மீள்குடியேறி தோட்ட வேலை, வீடு கட்ட மணல் ஏத்தினது எல்லாம் நான்தான். அப்ப ஒரு வலியும் இருக்கேல்ல. ஆனால், கால் கொஞ்சம் விறைப்பாதான் இருந்தது.

வீட்டுவேலையெல்லாம் முடிச்சி ஒரு கிழமையால வலிக்க ஆரம்பிச்சது. கடுமையான வேதனையோடுதான் இருந்தனான். அத வார்த்தையால சொல்ல முடியாது. கடைசியில பொறுத்துக்கொள்ள முடியாமல் 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி ஹொஸ்பிட்டலுக்குப் போனனான்.

அங்க ஒரு டொக்டர் என்னைப் பார்த்தவர். முள்ளந்தண்டில இரண்டு தரம் ஊசி போட்டார். வலி குறைஞ்சி சுகமாகும் என்று சொன்னவர். ஆனால், வலி கூடினதே தவிர குறையேல்ல. பேந்து ஒபரேசன் செய்வோம், ஒபரேசன் செய்வோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று இன்னொரு ஹொஸ்பிட்டலுக்கு மாறிவிட்டார். அந்த இடத்துக்கு புதுசா வந்த டொக்டர் குடும்பத்தாக்கள கூட்டிவரச் சொன்னார். “ஒபரேசன் செய்தால் சில நேரம் பரலைஸாகலாம்” எண்டு சொல்ல இவா பயந்திட்டா. எனக்கு ஏதும் ஆகிவிடும் எண்டு ஒபரேசன் செய்யவேணாம் என்று சொல்லீற்றா.

மூன்று வருஷமா வீட்டுக்குள்ளதான், ஒன்று இவா வரவேணும். இல்லையென்றால் தங்கச்சி வரவேணும். தனியா ஒண்டுமே செய்யமுடியாது. இப்படியே எவ்வளவு நாள்தான் இருக்க. எனக்கும் எழும்பி நடக்கவேணும் என்று ஆசை இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்குப் போனன். தொடர்ந்து கிளினிக்கும் வரச் சொன்னவங்க.

இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போயினம். இவா மட்டும்தான் வேலைக்குப் போறா. தோட்ட வேலை, மாடு குளிப்பாட்ட, பட்டி துப்பரவாக்க, சாணம் அல்ல எண்டு எல்லா வேலைக்கும் போவா. பாவம்…! என்னாலதான் ஒரு உதவியும் செய்ய முடியேல்ல. அப்படி கொண்டுவந்து தரும் காச வச்சித்தான் யாழ்ப்பாணத்துக்குப் போய் வருவன்.

2019.01.27ஆம் திகதி இரத்தம், யூரின் செக் பண்ணவேணும் எண்டு வரச் சொன்னவங்கள், செக் பண்ணிற்று இண்டைக்கே ஒபரேசன் செய்யலாம், தயாரா இருங்கோ என்று டொக்டர் சொன்னவர். உடனே தங்கச்சிக்கு கோல் எடுத்து விசயத்தை சொன்னன். 4 டொக்டர், ஐந்தரை மணித்தியாலம் ஒபரேசன். 6, 7 மணித்தியாலத்துக்குப் பிறகுதான் கண் முழிச்சன். நான்கு நாட்கள்தான் ஹொஸ்பிடல்ல இருந்தனான்

முள்ளந்தண்டு பகுதியிலிருந்து நீக்கப்பட்ட உலோகத்துண்டு இன்னும் நல்லா குணமாகேல்ல. குனிய வேண்டாம் என்று சொல்லியிருக்கினம். அதுக்கு ஏற்றால்போல டொய்லட் வசதியில்ல. ஒரு நாற்காலியத்தான் பாவிக்கிறன். எனக்கு எந்த உதவியும் வேண்டாம். இத கூட எப்படியாவது சமாளிச்சிடுவன்.

2009 ஆம் ஆண்டு, தம்பியாக்கள் 2 பேரயும் அத்தானையும் கையில கொண்டுபோய் இராணுவத்திடம் ஒப்படைச்சம். அவங்கள எப்படியாவது தேடித்தந்தீங்க எண்டா உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.

2009 சித்திரை, பச்சைபுல்மோட்டை எண்டு நினைக்கிறன். நாங்கள் குடும்பமா இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். எல்லா பக்கமிருந்தும் ஷெல் வந்து விழுது. எந்தப் பக்கம் இருந்து ரவுன்ஸ் வருதென்றே தெரியாது. எங்களுக்கு நெருக்கமா பெரியதொரு சத்தம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அந்தநேரம்தான் நான் காயப்பட்டனான். பெரிய காயம் இல்லையென்டாலும் நெஞ்சுலயும் தொடையிலயும் ‘பீஸ்’ இறங்கிட்டு.

அன்றையிலயிருந்து இன்றைக்கு வரைக்கும் ரெண்டு தரம்தான் மருந்து எடுக்கப்போனன். ‘பீஸ்’ ஒரு இடத்தில நிலையா நிண்டவுடன் வரச் சொன்னவங்க ஒபரேசன் செய்யலாம் எண்டு. ஒரு சிலநேரம் நெஞ்சில உள்ள ‘பீஸ்’ ஒரே இடத்தில் நிற்கும். அப்போ போகலாம் எண்டு நினைச்சாலும் மனம் இடம் குடுக்காது. ஒருவேளை ஒபரேசன் செய்து எனக்கு ஏதும் நடந்திட்டது என்றா குடும்பத்த யார் பார்க்கிறது? அதனால இருக்கிற வரைக்கும் உழைப்பம் என்டு வலியை பொறுத்துக் கொள்வன்.

நான் கூலி வேலைக்குத்தான் போறனான். தோட்ட வேலைகள், வீடுகள் கட்ட, கோயில் வேலைகள். டிரக்டரும் ஓடுவன். இருந்தாலும், கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும். காலும் உலையும். வெயிலிலயும் கனநேரம் இருக்கமுடியாது.

2010ஆம் ஆண்டு கிணறு வெட்ட போன இடத்தில ஏற்பட்ட விபத்தில அப்பா இறந்திட்டார், ஒரு தம்பியும் நாலு தங்கச்சியும் அம்மாவும்தான் இருக்கிறம். கடைசி தங்கச்சியும் தம்பியும் கதைக்க மாட்டினம். நான் மட்டும் தான் வேலை செய்றன். ஒரு நாளை வேலைக்கு போகாம மருந்து எடுக்க வெளிக்கிட்டாலே அண்டைய நாளைக்கு வீட்ல எல்லோரும் பட்டினிதான். இப்படியிருக்க எப்படி ஒபரேசன் செய்றது?

2008 சுதந்திரபுரத்தில நாங்க இடம்பெயர்ந்து இருந்தபோது அடிச்ச ஷெல் பட்டுத்தான் நான் காயப்பட்டனான். ஷெல் ‘பீஸ்’ ஒன்று நெத்தியில ஏறீற்று. அதோடதான் இடம்பெயர்ந்து இராணுவத்தின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தம். அதுக்குப் பிறகு வவுனியாவுக்கு கொண்டு போனவங்கள், உடனடியாவே அனுராதபுரத்துக்கு ஏத்தினாங்கள். அங்க ஸ்கான் எல்லாம் செய்துப் பார்த்திட்டு ‘பீஸ’ எடுக்கேலாது என்று சொல்லிச்சினம்.

மீள்குடியேறி வந்தபிறகு கொஞ்சகாலம் நல்லாதான் இருந்தனான். பிறகு வலிப்பு வரத் தொடங்கிட்டு. சரியா கஷ்டப்பட்டனான். ரெண்டு வருஷமா இப்ப கடவுளே என்று வலிப்பு வாறதில்ல.

வெயில் நேரம் வேலை செய்ய ஏலாது. தலை குத்தும். ஏதேதோ பேசுவன் என்று சொல்லுவினம். சண்டை பிடிப்பன் எண்டும் சொல்லுவினம். அதனால தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்கொள்ளுவன். இல்லையெண்டால் நிழலான ஒரு இடத்தில அப்படியோ இருந்திடுவன். இப்படி இருக்கிற எனக்கு யாரும் வேலை தர விருப்பப்பட மாட்டாங்கள்தானே. வேலை செய்யாமல் இருந்தால் அவங்களும் சும்மா சம்பளம் தருவாங்களா? பிறகு ஐஸ் பழம் யாவாரம் செய்தன். சைக்கிள்ல போய். அதுவும் கொஞ்சநாள்தான். என்னதான் தொப்பி போட்டாலும் வெயில் தாங்க முடியேல்ல. அதையும் விட்டுட்டன். இப்பதான் ஒரு நிறுவனத்தில வேலை கிடைச்சிருக்கு. 2 மாதமா செய்துகொண்டு போறன்.

மூன்று பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போயினம். நான் எடுக்கிற சம்பளம் காணாது. இவா கடற்கரைக்கு போவா, வலை பின்ன. மீன் பட்டால் கறிக்கு மீனும் தந்து 200, 300 ரூபா காசும் தருவாங்கள். இல்லையெண்டால் அதுவும் இல்ல.

இவாட வயசான அம்மாவும் அப்பாவும் எங்களோடதான் இருக்கினம். அவங்களயும் நாங்கதான் பார்க்கவேணும். வருமானம் போதாததால ரவுண்ட்ஸ் பொறுக்கி விற்க ஆரம்பிச்சம். இப்ப அதையும்தான் செய்துகொண்டு வாறம். பின்னேரம் மூன்று மணியிலிருந்து 6.30 மணிவரைக்கும் ஒவ்வொரு பங்கரா பார்த்து, நாய் விறாண்றமாதிரி விறாண்டி ரவுண்ட்ஸ் பொறுக்கிக்கொண்டு வருவம். ஒவ்வொரு கிழமையும் சேர்த்து இரும்புக் காரன்ட குடுப்பம். அவன் ஒரு கிலோ 20 ரூபாவுக்குத்தான் எடுப்பான். அதில வார காசையும் வச்சி சமாளிக்கிறம். ரவுண்ட்ஸ் பொறக்குற வேல ஆபத்துதான், தெரியும். ஆனால் சாப்பிடனுமே. நானும் இவாவும்தான் போவம். பிள்ளைகள ஒருநாளும் கூட்டிக்கொண்டு போகமாட்டம்.

தலையில இருக்கிற இந்த “பீஸ” எடுக்கவேணுமே என்று ஒரு நாள் கூட நினைச்சதில்ல. அதனாலதான் வேறெங்கேயும் போய் செக் பண்ணவும் இல்ல. அப்படி போனால் ஒரு நாள் அதுக்கேயே முடிஞ்சிரும். அதைவிட பிள்ளைகளின்ர பசிய போக்குறதுதான் எனக்கு முக்கியம்.

2009 மார்ச் மாதம் 6ஆம் திகதி. இன்னும் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்க முடியும். என் கண் முன்னாலயே என் மகள் கடவுளிட்ட போன நாள். இப்போ அந்த நாள நினைக்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது.

பெரிய சனக்கூட்டம், இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். நாங்க இந்த இடத்திலெண்டா மகள் அந்தா அங்க மரம் இருக்கே, அவ்வளவு தூரம் முன்னால போய்க்கொண்டிருந்தா. திடீரென்டு பெரிய சத்தம். என்ர கால்ல ஏதோ பட்டது போல ஓர் உணர்வு. முன்னால ஆக்களின்ர அலறல் கேட்டுக்கொண்டே இருக்குது. என்னால எழும்பி நிற்க முடியேல்ல. முன்னால போன மகளுக்கு என்ன நடந்திருக்குமோ எண்டு தரையில ஊன்ற முடியாத கால இழுத்துக்கொண்டு ஆக்கள விலத்தி விலத்தி உள்ள போய் பார்த்தன். என் கண் முன்னாலேயே எந்த அசைவும் இல்லாம அப்படியே கிடந்தா. எனக்கு அப்போதே தெரியும் அவ கடளிட்ட போயிற்றா என்டு. எனக்கிருந்த ஒரேயொரு மகள் அவள்.

அன்டைக்கு என்ட கால்ல பட்ட காயத்தின்ட வலி மனசுல ஏற்பட்டது மாதிரியே இன்னும் அப்படியேதான் இருக்கு. ‘பீஸ்’ இருக்குதென்றே தெரியாது. இப்ப ஒரு வருசமாதான் வலியா இருக்கு. இவரின்ர தொந்தரவால யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்குப் போய் பார்த்தன். எக்ஸ்ரே எடுத்தா ‘பீஸ்’ கிடக்கு. பெரிய ‘பீஸ்ஸொ’ண்டும் குருனி குருனியா 5, 6 ‘பீஸ்’ போல கிடக்கு. எலும்புக்குள்ள இருக்கிறதால எடுக்க ஏலாதெண்டு டொக்டர் சொல்லினம்.

முன்ன மாதிரி நடக்க ஏலாது. கொஞ்சம் நடந்தவுடனே கால் குத்த ஆரம்பிச்சிடும்.வெயிலும் கூடக் கூட வேதனையா இருக்கும். நித்திரை கொள்ள ஏலா, கொதியா இருக்கும்.

அதனால பெரிசா எங்கயும் போறதில்ல. இவர் திரிவீல் ஓடுறவர். அதுல வாற வருமானத்த வச்சிதான் குடும்பத்த நடத்திக்கொண்டிருக்கிறம்.

இறுதிப் போரில மாத்தளன்ல வச்சி காயப்பட்டன். ஷெல் ‘பீஸ்’ ஒன்று கழுத்துப் பக்கமா ஏறிற்று. இராணுவத்தின்ர பக்கம் போறதுக்கு முதலே என்ர வலது காலும் கையும் செயலிழக்கத் தொடங்கீற்று. முகாமுக்குப் போய் உடனடியா வவுனியாவுக்கு என்னை கொண்டு போனவங்க. அங்கயும் பார்த்திற்று கண்டிக்கு அனுப்பிவைச்சவங்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்தன். எடுத்து என்ன பயன், வலது காலும் கையும் வழமைக்குத் திரும்பேல்ல. காலை கொஞ்சமாவது அசைக்கலாம், கையில ஒரு விரல கூட அசைக்க முடியாது. ஏன் வாழவேணும் எண்டுகூட நினைச்சன். சரியான கஷ்டம். அரசாங்கம் எந்த உதவியும் செய்யேல்ல. அரசசார்பற்ற நிறுவனங்கள் கொஞ்சம் உதவிசெய்திருக்கு. என்னால எந்தத் தொழிலும் சரியா செய்ய முடியாது.

இருந்தும் ரெண்டு பிள்ளைகளின்ர எதிர்காலத்த நினைச்சி கடற்கரை வழியா போய் வேலை கேட்பன். வலை கட்ட மட்டும் கூப்பிடுவாங்கள். ஒரு நாளைக்கு 200, 300 ரூபா தருவினம். சிலநேரம் ஒரு மீனும் கிடைக்கும்.

ஒருமுறை யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்கு போய் காட்டினனான். எக்ஸ்ரே எடுத்துப் போட்டு ‘பீஸ்’ நரம்புக்குள்ள இருக்கிறதால எடுக்கேலாது எண்டு சொன்னவங்கள். அதை எடுத்தா ரெண்டாவது தரம் பரலைஸாக்குமாம். அதுக்குப் பிறகு அப்படியே விட்டிட்டன். இப்ப ஒவ்வொரு மாசமும் மாஞ்சோலை ஆஸ்பத்திரிக்கு கிளினிக் போறன். உலைவு இருக்கிறதால மருந்து தருவாங்கள். சிலநேரம் பணடோல் மட்டும் தருவாங்கள். அதனால ஒரு சில மாதங்கள்ல போறதும் இல்ல.

இடது கை மூட்டுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில ‘ரவுண்ட்ஸ்’ ஒண்டு இருக்கு. இந்தக் கைய என்னால் தூக்க முடியாது. காலில போல்ஸ்ஸும் இருக்கு. கைக்கு அகப்படும். பார்க்கிறதுக்குத்தான் நான் முழு மனுசனா இருக்கிறன். மற்றும்படி என்னால ஒண்டும் செய்ய ஏலாது.

காயப்பட்டு கிட்டத்தட்ட 20 வருஷமாகீற்று. இது இருக்கிறதால இதுவரை காலமும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறன். எப்படியாவது எடுத்திறலாம் எண்டு மனசுக்கு தோன்றினாலும் அப்புறம் ஏதாவது சிக்கல ஏற்படுத்திடுமோ என்ற பயமும் இருக்கு. நாளைக்கே எனக்கு ஏதாவது நடந்திட்டா பிள்ளைகளையும் மனிசியையும் யார் பார்க்கிறது?

அதோட என்ர உடம்புல இருக்கிற ‘பீஸ’ எடுக்கிறதெண்டால் நிறைய காசு தேவை. சாப்பிடுறதுக்கே காசு இல்லாம இருக்கிறம். அன்றண்டைக்கு உழைச்சாதான் சாப்பிடலாம். பாருங்கோ, வீட்ட சுற்றி வேலிய கூட அடைக்க முடியாம இருக்கிறன். ஊரில இருக்கிற மாடெல்லாம் தோட்டத்துக்குள்ள வருது. வச்சிருக்கிற ஒன்றிரெண்டு பயிரயும் மேய்ஞ்சிற்று போகுது. வேலிய அடைக்க பெரிசா காசு ஒண்டும் தேவையில்ல. மரங்கள வெட்டினா வேலிய அடைச்சிறலாம். முள்ளுக்கம்பி வாங்கவேணும். அதை விட அன்றைய நாள் வேலைக்குப் போகாம வீட்டில இருக்கவேணும். பிறகெப்பிடி அன்றைக்கு சாப்பிடுறது?

மருந்து எடுக்கப்போனாலும் இதே நிலைமைதான். அதனாலேயே போறதில்ல. இப்ப போகவேணும் போலதான் இருக்கு. முன்னப்போல இப்ப வெயில்ல இருக்க முடியேல்ல. தலை குத்த ஆரம்பிக்குது, மயக்கம் வாற மாதிரி. இருக்கிற இடத்திலயே அப்படியே தரையில் இருந்திடுவன்.

யாரிட்டயும் போய் உதவி கேட்கிற மனநிலையிலயும் நான் இல்ல. இருக்கிறத கொண்டு வாழ்ந்திற்றுப் போவம்.

நான் மேசன் தொழில்தான் செய்றன். ஆனால், இப்ப பெருசா செய்றதில்ல. தலையில ‘பீஸ்’ இருக்கிறதால வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும். அதனால மேசன் தொழில விட்டுட்டு மீன் பிடிக்க போறன். பின்னேரம் குளத்துக்குப் போயிற்று காலையில திரும்பி வருவன். சில வேளைகள்ல கடுமையான குளிரா இருந்தாலும் ஒரு இடத்தில இருக்கமுடியாது. தலைய கழற்றிவைக்கனும் போல இருக்கும். யார் பேசினாலும் கோவம் வரும். எரிஞ்சி எரிஞ்சி விழுவன் என்று சொல்வாங்க.

2009 இடம்பெயர்ந்து கொண்டிருக்கேக்கத்தான் காயப்பட்டன். முகாமுக்குப் போய் வவுனியா ஹொஸ்பிட்டல்ல மருந்து எடுத்தது மட்டும்தான், அதுக்குப் பிறகு எங்கயும் போகேல்ல. எடுத்தா நிம்மதியா இருக்கலாம் எண்டு நினைக்கிறன். ஆனா வசதியேதும் இல்லையே. மல்லாகம் போகனும், எக்ரே எல்லாம் எடுக்கவேணும்.

பிள்ளைகள் 3 பேரும் படிக்கினம். மனிசிக்கும் இப்ப ஏலாது. விழுந்து கை முறிஞ்சிருக்கு. கைக்கு போட்டிருக்கிற கம்பிய கழற்றப் போகவேணும். நாளும் பிந்திட்டு, இன்னும் போகாம இருக்கிறம். அவளால ஒண்டும் செய்ய ஏலாது.

இதெல்லாம் நினைச்சிக்கொண்டுதான் இப்ப மேசன் தொழிலுக்கும் போறன். குளத்தில இருந்து வந்தவுடன் மேசன் தொழிலுக்குப் போயிருவன். வெயிலா இருந்தாலும் மழையா இருந்தாலும் இப்ப வேலை செய்தே ஆகவேணும். என்ன செய்ய, எங்கட காலம் இன்னும் கொஞ்சநாள்ல முடிஞ்சிடும். பிள்ளைகள படிப்பிக்க வேணுமே.

* பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பு:

பீஸ்: எறிகணை குண்டுச் சிதறல்கள்

போல்ஸ்: எறிகணை, விமானக் குண்டுகளில் உள்ளடங்கியிருக்கும் சிறிய உலோக உருளைகள்

ரவுண்ட்ஸ்: துப்பாக்கி ரவைகள்

நன்றி : மாற்றம்

ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதை !


போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு இது.

இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான்.

இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன..

இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம்.

(படம்: ஜெகதீஸ்வரன் பிரசாந்த்)

ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி

இலை குழைகளை தின்று உயிர் தப்பி தளம் திரும்பிய சிறுத்தைப் படையணி பெண் போராளிகள்.

1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான ஒரு படையணியை தமிழீழமும் சர்வதேச சக்திகளும் உணர்ந்து கொள்ள இருந்த நாள். இவர்கள் யார் என்று சிங்களப் படைகளும் அதன் அரசும் நிட்சயமாக உணர்ந்தன. ஆனாலும் துரோகத்தால் மலிந்து போன எம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல இழப்புக்களை நாம் சந்திக்க நேர்ந்த . நாளாக இன்றைய நாள் பதிவாகி இருந்தது.

சிறுத்தைப் படையணித் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் கோமளா உட்பட்ட 57 போராளிகளை நாம் இழக்க நேரிட்டதும். இன்றைய நாளில் தான். ஆனாலும் இன்றைய நாளும் இந்தச் சண்டையும் எமக்கு பெரும் வெற்றியைத் தந்திருந்தது. தமிழீழ பெண்களின் வீரத்தை சிங்களம் உணர்ந்து கொண்ட முக்கியமான சண்டையாக இது அமைந்தது.

இரவோடு இரவாக மணலாறு காட்டினூடாக தகர்தழிப்புத் தாக்குதல் ஒன்றுக்கான முழுத் தயார்ப்படுத்தலுடன் நகர்ந்திருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியான “சிறுத்தைப் படையணி” சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியான கேணல் ராஜூ அவர்களின் ஒருங்கிணைப்புக் கட்டளையின் கீழ் லெப் கேணல் கோமளாவின் வழிநடத்தலுடன் நகர்ந்து சென்ற அப் படையணியின் பெண் போராளிகள் பெரும் வரலாறு ஒன்றை பதிவு செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

மண்கிண்டி மலை, கொக்குத்தொடுவாய், டொலர்பாம், கென்பாம், வெலிஓயா ( மணலாறு என்ற தமிழ் பெயரை நேரடியாக சிங்களத்தில் மொழிபெயர்த்து வெலி- மணல் , ஓயா – ஆறு இப்பெயரை வைத்திருந்தது சிங்கள அரசு) என்ற இடத்தில் அமைந்திருந்த “பராக்கிரம்பாகு “முகாம் போன்ற 5 பாரிய படைத்தளங்களின் ஒருங்கிணைப்புச் செயலகமாக இருந்த வெலிஓயா படைத்தளத்தை கட்டுப்படுத்தி சம நேரத்தில் நடக்க இருந்த ஏனைய படைத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய கட்டளைகளையும், வளங்கல்களையும், எறிகணை மற்றும் மோட்டார் உதவித் தாக்குதல்களையும் தடுக்கவும் என இவ்வணி வெலிஓயாத் தளத்தை நோக்கி சென்றது.

வெலிஓயா சார்ந்த பகுதிகள் எங்கும் சிறு சிறு அணிகாளாக பரவிக் கொண்டார்கள் சிறுத்தைப்படையணியின் பெண் போராளிகள்.

அந்த தாக்குதலுக்கு சென்ற அத்தனை போராளிகளும் சாதாரண போராளிகள் அல்ல. தமிழீழத்தின் உயிராயுதங்களுக்கு நிகரானவர்கள். கரும்புலிப் படையணிக்குள் உள்வாங்கப்படாமல் இருந்தாலும் சிறப்புப் படையணியாக இருந்து கொண்டு கரும்புலிகளின் தீரத்தோடு செயற்பட்டவர்கள். தாக்குதலுக்கு செல்லும் போது “சார்ச்சர்” எனக் கூறக்கூடிய வெடியுடையை அணிந்தே இவர்களும் சென்றிருந்தார்கள்.

அவ்வணிகளுக்குள் மேஜர் மாதங்கி தலமையில் ஒரு அணி வெலிஓயா படைமுகாமை தாக்கி அழித்து விடும் நோக்கத்தோடு உள் நுழைந்திருந்தது. ஏனைய அணிகள் வெலிஓயா படைமுகாமை சுற்றி படையினரின் வழங்கல் அணியினர் மற்றும் உதவி அணியினரின் வருகையைக் காத்து நிலையெடுத்திருந்தனர். எவ்வகையிலும் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முறியடிப்புத் தாக்குதலுக்கான ஆயுத்தத்தோடு கோமளா தனது போராளிகளை தயார்நிலையில் வைத்திருந்தார். முகாமுக்குள் உள் நுழைந்த அணி 3 பேர் கொண்ட சிறு அணிகளாக பிரிந்து அப்படை முகாமை தாக்கத் தயாராக இருந்தார்கள்.

அதே நேரம் பின்னணியில் தாம் வளர்த்த தமது சிறப்புப் படையணியின் முதல் வெற்றிச் செய்தியை கேட்க தயாராக இருந்தார்கள் தேசியத்தலைவரும் அவரது மூத்த தளபதிகளும்.

பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. எதிர்பார்ப்பு வீண்போகவும் இல்லை. உள்நுழைந்த வீர வேங்கைகள் சாதித்தார்கள். தாம் நேசித்த தலைவன் எதிர்பார்த்ததை செய்து முடித்தார்கள். விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியின் சிறுத்தைப் படையணியின் பெண் போராளிகள் என்றால் இது தான் என்று சர்வதேசத்துக்கும் சிங்களத்துக்கும் உணர வைத்தார்கள்.

இவ்வாறான காத்திருப்பு நேரத்தில் உள்நுழைந்த அணி சரியான இலக்குகளுக்குப் போய்விட்டதை உறுதிப்படுத்திய கோமளாவுக்கு ராஜூ அவர்கள் சண்டை ஆரம்பிப்பதற்கான சமிக்கையை கொடுக்க, தாக்குதலை ஆரம்பிக்க உத்தரவிடுகிறார் கோமளா.

பாரிய எதிர்ப்பின் மத்தியிலும் பெரும் பாதுகாப்பரன்களை உடைத்தெறிந்து உள் நுழைந்த படையணி சிறு சிறு அணிகளாக தாக்கத் தொடங்கியது. புலிகளின் அதிரடித்தாக்குதலை எதிர்பார்க்காத சிங்களப்படை திணறியது. எங்கு திரும்பினாலும் புலிகளின் ஆயுதங்கள் எதிரியை குறி வைத்தன. சிங்களப்படை செய்வதறியாது திகைத்த அதே நேரம் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தான் இச்சண்டையை செய்வதை எதிரி உணரத் தொடங்கினான். ( சில வேளை காட்டிக் கொடுப்பாளர்கள் தகவல் சொல்லி இருக்கலாம்) அதனால் உள் நுழைந்த போராளிகள் அனைவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்குள் எழுந்தது. ஆனாலும் அவர்கள் எதிர்பார்க்காத தாக்குதல் வியூகங்கள் மூலமாக பெண்புலிகள் எதிரியை திக்குமுக்காட வைத்தனர்.

வெலிஓயா படைமுகாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணிப் போராளிகள். அங்கிருந்த தொலைத் தொடர்பு ( Communication) தொடக்கம் கட்டளைப் பீடம் ( Commanding Station ) வரை தமது கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணியின் சிறப்பு அணி.

தேசியத் தலைவரது திட்டத்தை நிறைவேற்றி அங்கே இருந்த ஆட்லறி எறிகணை ஏவுதளத்தை முற்றுமுழுதாக அழித்தார்கள். பக்கத்தில் இருந்த முகாம்களுக்கான வளங்கல்களையும் கட்டளைகளையும் நிறுத்தினார்கள். அங்கே தரித்து இருந்த 5 ஆட்லறிகள் முழுவதுமாக அழிந்து போனது. படைமுகாம் சிதைந்து கிடந்த நிலையில் ஆயுத வெடிபொருட்கள் முழுவதுமாக தீர்ந்து போகும் நிலை வந்து விட்டது. ஆனால் எதிரியின் துப்பாக்கிகளையும் ரவைகளையும் கைப்பற்றி எதிரியை தாக்கினார்கள். துன்பத்தை தந்தவனுக்கு துன்பத்தை அவனது துப்பாக்கியாலையே திருப்பிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 நாட்களாக தொடர்ந்த சண்டை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. எதிரியின் ரவைகளும் முடிகின்ற நிலைக்கு வந்திருந்தன.

இறுதியாக உடலோடு கட்டப்பட்டிருந்த வெடிமருந்துடை (சார்ச்சர்) மட்டுமே மிஞ்சி இருந்தது. அதை வெடிக்க வைத்து தம்மை உயிர்த்தியாகம் செய்ய அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் தாம் பயின்ற தற்காப்புக் கலையை ஆயுதமாக்கினர். கராத்தேக் கலையின் அதி விசேட பயிற்சிகளைப் பெற்றிருந்த அப்போராளிகள் இறுதியாக எதிரிகளை கொல்வதற்கு அதையே ஆயுதமாக்கினர். தமிழீழத்தின் மூத்த கராத்தே ஆசிரியர் ஒருவரின் நேரடி கற்பித்தலில் தாம் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலையினை இறுதிவரை பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்த வளர்ப்பு சரியாகவே வளர்க்கப்பட்டது என்பதை உணர்த்தினார்கள்.

தம்மிடம் இருந்த குத்துக்கத்தி மூலமாகவும் ( ஆயுத்ததோடு பொருத்தப்பட்டிருக்கும் கத்தி), கிடைக்கும் எப் பொருளையும் ( தடி, கம்பி, ) ஆயுதமாக பயன்படுத்தி கைகலப்பில் ஈடுபட்டார்கள். எதிரிக்கு பெண்புலிகளின் வீரத்தை உரைத்தார்கள். ஒரு நிலையில் எதிரியே “பெண்களா அல்லது பேய்களா இவர்கள் “ ( எதிரியின் உரையாடல்களை விடுதலைப்புலிகளின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு பிரிவு கண்காணித்த போது உறுதிப்படுத்தப்பட்டது. ) என்று பயந்து ஓடும் அளவுக்கு தாக்குதலை செய்தார்கள்.

பெண் புலிகள் தானே இலகுவாக உயிருடன் பிடித்து விடலாம் என்ற இறுமாப்போடு வந்த சிங்களப்படைகள் ஒவ்வொருவராக உயிரற்று போனார்கள். குறித்த சில வீரப் பெண்களின் வீரச்சாவோடு அந்த சண்டை வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் ஏனைய அணிப் போராளிகளை தளம் திரும்புமாறு கேணல் ராஜூ அவர்களிடம் இருந்து கட்டளை வருகிறது.

தளபதி லெப் கேணல் கோமளா தன் போராளிகளை ஒருங்கிணைத்து வெற்றியோடு தளம் திரும்புகிறார். சிறு அணிகளாக இருந்தவர்கள் ஒருங்கிணைந்து மண்கிண்டிமலைப் படைமுகாம் நோக்கி வந்து மணலாறுக் காடுகளுக்கிடையில் பயணிக்கிறார்கள். அந்த வெற்றியின் உச்ச நேரத்தில் துரோகிகளின் துரோகத்தனத்தால் கோமளாவின் அணி பற்றிய முழுமையான தகவல்களுடன் அவர்களை இடை மறிக்கிறான் எதிரி. சரியாக திட்டமிட்டு இடை மறித்த எதிரியோடு சண்டை மூள்கிறது. கோமளா அணியை நிலை குலையாமல் ஒருங்கிணைக்கிறார். கேணல் ராஜூ நேரடியாக வழிநடத்துகிறார். ஆனாலும் தொடர்புகள் அறுந்து போகின்றன. கடுமையான முற்றுகை. அவர்கள் சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல ஆனால் சாதிக்கத் துடித்தார்கள்.

முழுமையாக திறனையும் பயன்படுத்தி சண்டை செய்தார்கள். இறுதியாக வெலிஓயாத் தளத்துக்குள் உயிருடன் பிடிபடாமல் போனவர்களை இங்கே பிடித்து விட வேண்டும் என்று துடித்தது சிங்களம். ஆனால் அவர்களால் முடியவே இல்லை. இறுதி வரை சிங்களத்துக்கு புலி வீரத்தை நிலைநிறுத்திய சிறுத்தைப் படையணியின் சிறப்பு அணி இறுதி வரை கைகளாலும் கால்களாலும் சண்டையிட்டது. நவீன போராட்ட முறமைகள் உட்புகுத்தப்பட்ட பின்பும் இவ்வாறான தாக்குதல்களை எதிரி சிந்தித்துப் பார்க்கவில்லை. திணறிப் போன சிங்களப்படையின் உயிருடன் பிடிப்பதற்கான கனவு மண்ணுக்குள் புதைந்து போனது. இவ்வாறு ஒரு புறம் வீரத்தின் உச்சங்கள் சண்டையிட்டு வீரச்சாவடைந்த அதே நேரம் இன்னும் ஒரு அணி தலைவனின் இன்னும் ஒரு எண்ணத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருந்தது.

“தேவையற்ற சாவுகளை தவிர்க்க வேண்டும் ” என்று தேசியத் தலைவர் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பெண் போராளிகள் அவ்வெண்ணத்தை நிறைவேற்ற முனைந்தனர். சக்தி, அஞ்சலை, உஷா, .உட்பட்ட 5 பெண் போராளிகள் உயிர்தப்பிப்பிழைத்தல் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.

“தப்பிப் பிழைத்தல்” என்பது அற்பதமானதும் மிகக் கொடுமையான செயல். இதன் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அனுபவித்தவர்களுக்கே அதன் உண்மை புரியும். பயங்கரமான எதிர் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் செயற்பாடாக இது கணிக்கப் படுகிறது. உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற சொல்லைக் கேட்டவுடனே எனக்கு 3 விடயங்கள் நினைவுக்கு வரும்

1. ஈராக்கில் தனது படையணியுடன் சண்டைக்காக சென்று உயிர் மீண்டு வந்த பிரித்தானிய இராணுவ வீரன் Chris Ryan இன் அனுபவக் குறிப்பான “ தப்பியவன் “ (The One That Got Away) நாவல்.
2. “Man vs. Wild” என்ற Discovery தொலைக்காட்சித் தொடர்.
3. செவ்வாய்க் கிரகத்தில் கைவிடப்பட்டு பூமிக்கு உயிருடன் திரும்பி விண்வெளி வீரன் ஒருவரின் கதையாகிய The Martian என்ற திரைப்படம்

இம் மூன்றுமே உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற விடயத்தின் ஆழத்தையும் அனுபவங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பேசுகின்றன. இதன் அனுபவம் என்பது வார்த்தைகளால் கூற முடியாதவை. அந்த வேதனைகளை யாரும் மறந்து விடவும் முடியாது.

இந்த நிலையில் தப்பிப் பிழைத்தல் பற்றி வெளிநாட்டவர்களின் அனுபவங்களை அறிந்த எமக்கு எம்மவர்கள் பற்றிய உண்மையான பல சம்பவங்களை அறிவதற்கு காலம் வழி விட்டதில்லை. அவ்வாறான தீரம் மிக்க பக்கம் ஒன்றை பகிரப்படாத பக்கம் தன் மீது பதிந்து கொள்கிறது.

மண்கிண்டிமலைப் படைமுகாம் அழிப்புக்குச் சென்ற இப் பெண் போராளிகள் உயிர் வாழ ஆசைப்பட்டவர்கள் அல்ல. தமிழீழத்துக்கான தமது தேவையை உணர்ந்தவர்கள். தாம் எதற்காக வளர்க்கப்பட்டோம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இலக்குத் தகர்க்கப்பட்ட பின் நடந்து கொண்டிருந்த வீரச்சாவுகளுக்குள்ளும் அவர்கள் தாம் சாவதை தவிர்தார்கள். சார்ச்சர் வெடிக்கத் தயாராக இருந்தாலும் வெடித்து சாவதை விட சாதிக்க வேண்டி சண்டைக் களங்களின் தேவையை உணர்ந்து தப்பிக்க முயல்கிறார்கள்.

உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. தேவையான ஆயுத வெடிபொருட்கள் இல்லை. சரியான தொலைத்தொடர்பு முறமைகள் கையில் இல்லை. இருந்தவையும் கைவிடப்பட்டுவிட்டன. ஆனால் எப்பிடியாவது உயிர் தப்பி தலைவனிடம் செல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டும் தான் அவர்களிடம் இருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற அவர்களால் தப்பிக்க இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் தப்பித்தார்கள்.

ஆட்லறித் தளத் தகர்ப்புத் தாக்குதல் நடவடிக்கைக்காக உயிர்க்கொடை செய்த தம் தோழிகளை விட்டுவிட்டு நடக்கத் தொடங்குகிறார்கள். அங்கிருந்து பல தடைகளைத் தாண்ட வேண்டும். சிங்களக் கிராமங்களை கடக்க வேண்டும். படை முகாங்களை தவிர்த்து வெளியேற வேண்டும். அதற்குள்ளே யாராவது தப்பித்திருக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு அனுப்பப்பட்டிருக்கும் ரோந்துக் காவல் அணிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடக்கும் போது சிங்கள வேட்டைக்காறரின் கண்களில் படவே கூடாது.

இப்படியாக பல தடைகளைத் தாண்ட வேண்டிய அவர்கள். சில முக்கிய வீதிகளையும் ஊடறுத்து வர வேண்டும். அவர்கள் வந்தார்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியவர்கள் பல வீதிகளைக் குறுக்கறுத்து கவனமாக கடந்து விடுகிறார்கள். ஆனால் இடையில் இருந்த பல படைமுகாம்களில் பல தடவைகள் முட்டுப்படுகிறார்கள். சிறிய சண்டைகள் மூண்டாலும் அவற்றில் இருந்து விலகி ஓடுகிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவர்களின் முயற்சி காடு மலை என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. மணலாறில் தொடங்கியவர்கள் வவுனியாக் காட்டுக்குள் வந்து மிதந்தார்கள். அத்தனை நாட்களும் உணவில்லை காட்டு இலை குழைகளை பச்சையாக உண்டார்கள். சாப்பிடக் கூடியதாக எது கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்திக் கொண்டார்கள். காட்டுக்குள் இலைகளைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை மிருகங்களை வேட்டையாடினால் அதில் இருந்து வெளியேறும் வெடிச்சத்தம் இவர்களை இனங்காட்டி ஆபத்துக்களை கொண்டு வரும் என்பதை உணர்ந்து வேட்டையாடுவதை தவிர்த்தார்கள். இலைகளை மட்டுமே உண்டார்கள்.

காட்டுக்குள் அருவிகளை தேடிக் கழைத்து விட்ட நிலையில் வரண்டு கிடந்த உதடுகளை நனைக்க வேண்டும் என்று தண்ணீர்க் கொடியை தேடினார்கள். ஆனால் சில நேரத்தில் அவையும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் தண்ணீர்க் கொடியைக் கொண்டு உதட்டை ஈரப்படுத்திக் கொண்டார்கள்.

உடலில் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்கத் தொடங்கிய அவர்கள் இறுதி வரை சோர்ந்து விடவில்லை. நடந்து கொண்டே இருந்தார்கள். நடந்து நடந்து வவுனியா காட்டினூடாக எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தேறிய போது அவர்கள் போராளிகளா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அவர்களின் கோலம் அவ்வாறு மாகி இருந்தது. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். இவர்களும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு தாம் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம் என உறுதிப்படுத்தியவர்களாய் நிலத்திலே மயங்கி விடுகிறார்கள்.

துரோகத்தினால் முடிக்கப்பட்ட இவ்வெற்றிச் சண்டை தன்னுள் 57 சிறுத்தைப் படையணியின் சிறப்புப் பெண் போராளிகளின் தியாகத்தாலும் அவர்களின் வீரத்தாலும் மட்டுமல்லது அந்த பிரதேசத்தில் அன்று நடந்த ஐந்து படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் மொத்தமாக 180 எழுதமுடியாத பல காவியங்களை எழுதிச் சென்றது என்பது உண்மையே…

அனுபவக் குறிப்பு பகிர்வு: முதலாவது சிறுத்தைப் படையணியின் பெண் போராளி
எழுதியது: இ. இ. கவிமகன்

தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது.

இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி,

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் கைது 1982

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு

கீழ் கானும் வழக்குகளில் எதிரிகள் விடுதலை

முன்னாள்எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை வழக்கில் எதிரி விடுதலை 1989

டென்மார்க் ;கல்லூரி மாணவி சித்திரா கைதும் விடுதலையும் 1996

டென்மார்க் ஊடகவியளாளர்கள்; நால்வர் கைதும் விடுதலையும் 1996

கலதாரி ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி விடுதலை 1997

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு 2008

ஊடகவியளாளர் பரமேஸ்வரி, சுசந்திகா கைதும் விடுதலையும் 221

ஊடகவியளாளர் யசிதரனும் வளர்மதியும் கைதும் விடுதலையும்

;மூத்த ஊடகவியளாளர் வித்தியாதரன் கைதும் விடுதலையும் 2009

பாதுகாப்புச் செயலாளர் கொலைமுயற்சி வழக்கில் முதல் எதிரி விடுதலை 2006

ரவிராஜ் கொலை வழக்கு 2006

ஜந்து கல்லூரி மாணவர்கள் கடற்படையினரால் கொழும்பில் கடத்தப்பட்ட வழக்கு 2009

மேஜர் முத்தலிப் படுகொலை வழக்கும் எதிரி விடுதலையும் பாரமி குலதுங்க கொலை வழக்கும் எதிரி விடுதலை 2018

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ;மன் ;கதிர்காமர் கொலை வழக்கும் விடுதலையும் 2018 .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை முயற்சிவழக்கும் விடுதலையும்

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கும் விடுதலையும் 2018

பயங்கரவாதத் சட்டமும் நான்கு தசாப்தங்களும்; 1979 – 2019

பயங்கரவாதத் சட்டம் நீக்கப்படுமா?

காலனித்துவ ஆட்சிகாலத்திலிருந்து இந்நாட்டில் நிலவி வந்த ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் மனதிற்கொண்டு பார்க்கும்போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன்மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன்.குறிப்பாக மிகவும் துரதிஸ்டமானதாகக் காணப்படும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் துரிதமான மோசமடைதலை ; வெளிச்சமிட்டுக் காட்டியது காட்டுகிறதுஷஷ

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணப்படுத்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் 1977 ஜுலை பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தின் படைப்பாகும். 1978 ஆம் ஆண்டின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமே பயங்கரவாத தடைச்சட்டமாகும்.; அத்தகைய கடுமையான சட்டம்; அவசரசட்டமாக ஒரே நாளில் 1979ஆண்டு ஜுலை 19ஆம் திகதி தற்காலிக சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் 1982ம் ஆண்டில்10ம் ;இலக்க சட்ட்த்தின்மூலம் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டு நான்கு தசாப்தங்;கள் முடிவடைந்து விட்டது

1979 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச்சட்டம்,; உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள்இ யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள்இ பொறியியளாளர்இ உதவி அரசாங்க அதிபர்இ ஊடகவியளாளர்கள்இ கோவில் தர்மகர்த்தாக்கள்இ கோவில் குருக்கள்இ கிரிஸ்தவமதப் போதகர்;கள்இ நாடாளுமன்ற உறுப்பினரின் செயளாளர். மாவட்ட அமைப்பாளர்இ பல்கலைக்கழக மாணவர்கள்இ அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள்இ சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள்;;இ கிராம சேவையாளர்கள்இ தொழில் அதிபர்கள்;இ வர்த்தகர்கள்இ புலம்பெயர் தமிழர்கள்இ வங்கி முகாமையாளர்இ என சமூகத்தின் பல தரப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

; 1979ஆம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை முப்பது வருடங்களில்; யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 ஆம் மே மாதம் முதல் 2019ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்து பத்து வருடங்களை கடந்த பின்னரும்;, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் ; பலர் இன்றும் நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள் என்பவற்றில் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்;

பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் வ்ழக்குத் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளில் அரசியல் கைதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நீருபிக்காமையினால் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்களேயன்றி மகிந்த ராஜபக்சவின் அரசோ அல்லது நல்லாட்சி அரசோ வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியையும் விடுதலை செய்யவில்லை சந்தேகத்தில் கைது செய்த சாட்சியங்கள் இல்லாத சில கைதிகளை அரசியல்வாதிகளை திருப்திபடுத்தும் நோக்கில் விடுதலை செய்தனர்

2015ம் ஆண்டு இந்த சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் இச் சட்டம் வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழும் தமிழ் உறவுகளை குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றது முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆம் மே மாதம் முடிவடைந்துவிட்டது என்று அரசாங்கம் பெருமையோடு பிரகடனப்படுத்தி;யதுடன். பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம். நாட்டில் சமாதானம் நிலவுகின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆயினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்

1971ஆம் ஆண்டின் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்களை கையாள்வதற்காக 1972 ஆம் ஆண்டு குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி; ஆட்சியை கவிழ்க போராட்டம் நடாத்தினால் அது கிளர்ச்சி; வட கிழக்கு இளைஞர்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டால்; அது பயங்கரவாதமா?

பயங்கரவாத தடைச் சட்டமும் நீதித் துறையின் வகிபாகமும்

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அல்லது பல ஜரோப்பிய அரசியலமைப்பு வாதிகள் அதனை விபரிக்க விரும்புவது போல சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வு என்பது அச் சட்டம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த (மக்களின் விருப்;பு) மிகவும் சிறந்த முறையில் வளங்களைக் கொண்டுள்ள அரசாங்கத்தின் கிளையாகிய நீதித் துறைக்கு அச் சட்டத்தை அலசி ஆராயும் இறுதிப் பொறுப்பை வழங்குவதாகும்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ,; லியனகே எதிர் மாகாராணியார் மற்றும் லஞச் ஊழல் ஆணையாளர் எதிர் ரனசிங்ஹ முதலிய இலங்கையின் குறிப்பிடத் தகுந்த பெரும்பாலான அரசியலமைப்பு தீர்மானங்கள,; சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வுகளின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

உலகெங்கும் பல வருடங்களாக செய்யப்பட்டது போலவே இலங்கையின் நீதி மன்றங்கள் எந்த ஒரு அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகத்திலும் தெளிவாகக் காணப்படுவது போல் அரசியலமைப்புக்கு ஒவ்வாத சட்டங்களை வெற்றானதென்றும் செயலற்றதென்றும் பிரகடணப்படுத்த முடியும் என்பதை அங்கீகரித்தன. எனினும்,

அதன் இரண்டு ஆரம்ப அரசியலமைப்புக்களான 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் சட்டங்களை நீதித் துறை மீளாய்வு செய்வதை தடை செய்தது என்ற வகையில் இலங்கை அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகங்களுள் மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்றாகவும் விளங்குகிறது.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

1972இலும் 1978இலும் பதவிக்கு வந்த இரண்டு அரசாங்கங்கங்களும் ; முதலாவதாக, தமக்குத் தேவையான தமது சொந்த அரசியலமைப்பை வகுத்து நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்தனர்.

இரண்டாவதாக, மாற்ற முடியாதவாறு விசேட பெரும்பான்மை நிபந்தனைகள் என்ற வடிவில் அமைந்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட தடைகளும் சமப்படுத்தல்களும் என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பு தர்மத்தின் பேரில் விதிப்பதை அவை உதாசீனம் செய்தன.இவை அனைத்தும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு வசதியாக அமைந்தது.

காக்கப்பட்டிருக்கும் (இறைமை பௌத்தம் மற்றும் ஏனைய ‘அடிப்படை அம்சங்கள்’ ஆகியவற்றைக் கையாளும்) ஏற்பாடுகளை இச் சட்டத்தின் ஏதாவது வாசகங்கள் மீறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அச் சட்டமூலத்தை நுணுகி ஆராயும் மட்டுப்படுத்தப்பட்ட பணியே தனக்கு உள்ளதென நீதிமன்றம் அறிவித்தது.

இது அத்தகைய வாசகங்கள் நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மட்டுமன்றி ஒரு கருத்தறி வாக்களிப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் தேவைப்படுத்தியிருக்கும். ஒரு பக்க கட்டளையொன்றில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் விசேடமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளோடு இச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் ஒவ்வாததாக இல்லை என்று அறிவித்ததோடு, மனித உரிமைகள் மீதான அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான இச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய மறுத்து அதன் மூலம் இச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தச் சிக்கலுமின்றி மிகவும் வசதியாக அமைந்தது.

ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

1979 ஜுலை 19ஆம் திகதி கடுமையான பயங்கரவாத தடைச் சட்டம்;; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் தனது ஒரு பக்க தீர்ப்பை வழங்கிய இரண்டு நாட்களின் பின்னராகும்

ஆளும் ஐதேக பாராளுமன்றத்தை ; மதிப்பிறக்கம் செய்யும் நடைமுறையை ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட நாற்பது; வருடங்களில் முதல் தடவையாக சட்டவாக்கச் சபையிலிருந்து பிரதான நிறைவே;ற்று மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்தது. அது, பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்ததோடு, தனது பாராளுமன்றக் குழுவிலிருந்து கருத்து வேறுபாடு எதனையும் சகித்துக் கொள்ளாமலும் இருந்ததனால,; பாராளுமன்ற விவாதமும் கலந்தாராய்வும் சிறிதளவே பயனுள்ளதென உணரத் தொடங்கியிருந்தது.

விரைவாக சட்டங்களை இயற்றுவதற்கும் நுணுகி ஆராய்தல், விவாதித்தல், கலந்தாராய்தல் மற்றும் கருத்து முரண்படுதல் ஆகிய பாராளுமன்ற வழக்கங்களை அதைரியப்படுத்துவதற்காகவும் சட்டவாக்க நடைமுறையை குறுகியதாக்கும் முகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறையையும் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.டன் , 1979 ஜுலை 19ஆம் திகதி பகல் உணவிற்குப் பின்னர், பாராளுமன்றம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.

பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சன்ட் பெரேரா பா.உ அன்றைய தினமே அச் சட்டமூலம் நிறைவேற்றப்படக்கூடியதாக நிலையியற் கட்டளைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென பிரேரித்தார். நீதி அமைச்சர் கேடபில்யூ தேவநாயகம் பா.உ அச் சட்டமூலத்தை அறிமுகம் செய்தார். அச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு அன்றிரவு 9.45 வரை தொடர்ந்து நடைபெற்றது.

தமிழ் தலைமைகள் மௌனம் ; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைதிரிபால சேனநாயக்கா மட்டுமே எதிர்ப்பு

எதிர்க் கட்சியின் சார்பில் பிரதான உரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சேனநாயக்க பா.உ வினால் ஆற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் அம்சங்கள் பற்றி மற்றுமின்றி அதனை சட்டமாக்குவதற்கு முனைந்த முறை பற்றியுமான சில முக்கிய கவலைகளை அவர் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறினார்:

‘இந்தப் பாராளுமன்றத்தில் எந்த மக்களின் பெயரினால், எந்த மக்களின் அதிகாரத்தைக் கொண்டு; சட்டங்கள் ஆக்கப்படுகின்றனவோ, அந்த மக்கள் அதன் உள்ளடக்கங்களை ஆராய்வதும் விளக்கமாக அவற்றை நுணுகி ஆராய்வதும் ஒரு புறம் இருக்க, அவற்றை அவர்கள் வாசித்துகூட பார்க்கவிடாது தடுத்து, இச்சட்டமூலத்தை இன்றிரவே பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாங்கம் இப்போது முயலுகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமளிப்பதல்ல. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களில், மக்களின் அடிப்படை உரிமைகளில் ஏதாவதொன்றை பறித்துக்கொள்ள முயன்ற ஒவ்வொரு சட்டமூலமும் தேசிய நலனில் அவசர முக்கியத்துமிக்கதாக விபரிக்கப்பட்டு, எந்த மக்களின வாக்குகள் அரசாங்கத்திற்கு இம்மிகப் பெரிய பெரும்பான்மை கிடைப்பதற்கு உதவியதோ, அதே பொரும்பான்மையை பயன்படுத்தி அந்த மக்களின் முதுகிற்கு பி;ன்னால் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதில் எந்த அவசர முக்கியத்துவத்தையும் காணவில்லை. வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளும் நோக்கத்திற்காகவே அது தேவைப்படுகிறது. ஏலவே, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமும் அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலையும் உள்ளன. அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’

அமைச்சர் தேவநாயகம் தமது தொகுப்புரையை நிகழ்த்துவதற்கு இரவு 9.58 மணிக்கு எழுந்து நின்றார் என்று ஹன்சாட் பதிவு செய்துள்ளது. இதன் பின்னர் குழு நிலையும் (இங்குதான் சட்டமூலத்தை பாராளுமன்றம் வாசகம் வாசமாக ஆராயுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது) முன்றாம் வாசிப்பும் ஆரம்பமாகின. சட்டமூலம் எல்லா நிலைகளிலும் நிறைவேறியது. பயங்கரவத தடுப்புச் சட்டத்தோடு தொடர்பில்லாத, பொது மக்கள் பாதுபாப்பு கட்;டளைச் சட்டத்தின் கீழான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, இரவு 10.25 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? 2979-2019

பயங்கரவாதத் தடைச்; சட்டம் நீக்கப்படலாகாது என பல அரசியல் கட்சியை சார்ந்தவாளின் கருத்தாக காணப்படும் நிலையில் ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்து யாதெனில் பயங்கரவாதத் தடைச் சட்ட்த்தை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் இந் நிலையில் மதவாத இனவாதம் தீவிரப்படுத்தப்படுகின்ற யதார்த்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்ட்ம் மேலும் வலுப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைபேரக்கு உறுதி வழங்கிய இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

2007ஆம் ஆண்டின் 56ம் இலக்கஇகுடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படக் கூடிய அவசர கால நிலையும் உள்ளன.அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’ அவ்வாறான கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் பொழுது இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

தேடுதல்,கைது செயதல்,தடுத்த வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிளான அதிகாரங்களை வழங்குதல் அடங்கலாக ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட இத்தகையதொரு சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை ; நிறுவனங்கள்இ ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும்இ; அரசியல் தலைமைகள் பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கது.

முந்திய அரசியமைப்பினதும் ஒரு பகுதியான தற்போதைய அரசியலமைப்பின் இக் குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் எதிர்ப்புச்; சட்டத்தை கொண்டுவர அரசு முயற்சித்தபோதிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல்தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன்முறையீடுகள்மீதான கட்டுப்பாடு முதலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (Pவுயு) சட்டப் பல்லவி மனித உரிமை மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய வடிவில் அது சட்டமாக்கப்பட்டால், அது1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச் ;சட்டத்திலும ; பார்க்க சில பிரிவுகளில் வெளிப்படையாக பார்க்கும் பார்வையில் நெகிழ்சிதன்மையும் கணிசமான முன்னேற்றமும் காணப்படுவதாக புலப்பட்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ;பொழுது இந்த இரண்டு சட்டத்திற்கும் மிடையே குறிப்பிடத்;தக்க வேற்றுமையின்மையை அவதானிக்க கூடியதாகவுள்ளன

அவசரகால ஒழுங்கு விதிகளின் முக்கியமான சில விதிகள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படையாக புரிந்து கொள்ளமுடியாத வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது எனவே தற்போதுள்ள வடிவில் சட்டமாக்கப்படின் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரகால ஒழுங்கு விதிகளை நடைமுறைக்கு கொண்டு வராமல் நிரந்தரமாக ஒரு பயங்கரவாத சர்வாதிகார அரசை கொண்டு நடாத்தக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தலாம்.

இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பெயரில் அவசரகால ஒழுங்கு விதிகள் நிரந்தரமாகவே நடைமுறைக்கு வரலாம் இக்; காரணங்களால் சிங்கள தலைமைத்துவ கட்சிகள் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளன 1979ம்ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே எதிர்புத் தெரிவித்தது

தற்போதைய அரசியல் களநிலைமையில் நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையே அரசியல்யாப்பு 19ம் திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள அதிகாரப்பகிர்வினால் ஏற்பட்டுள்ள ;அரசியல் அதிகாரப் போட்டியினால் நாட்டில் பல சிக்கல் நிலையை ஏற்பட்டுள்ளமையை ஏடுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது

இந்த பயங்கரவாதத் தடைச்; சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 40 ஆண்டுகள் முடிவடைந்நதுடன் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ இந்த நோக்கம் முடிவடைந்து; கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளின் பின்னர், இலங்கை பிரசைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ; பயங்கரவாதத்தடைச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (ஊவுயுயை) விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும்ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமையாது.

S.P. Thas

விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்!

‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன்.

‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

(குணா கவியழகனின் முழுமையான நேர்காணல் இன்று இரவு பிரித்தானிய நேரம் 7.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும்)

தமிழீழ விடுதலை போரில் மட்டுமல்லாமல் தமிழீழ கலைத்துறையிலும் காத்திரமான பங்காற்றியிருந்த குணா கவியழகன் தற்போது இலக்கியத்தில் தனது அனுபவத்தின் மூலமும் எழுத்தற்றால் மூலமும் ஈழ மண்ணின் வாசனையையும் போராட்டத்தின் வடுக்களையும் இலகு மொழியில் கதைகளாக்கி வரலாற்றினை பதியவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

அண்மையில் வெளிவந்த அவருடைய நூல்களான ‘கர்ப்ப நிலம்’, ‘போருழல் காதை’ ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா 27.07.2019 சனிக்கிழமை மாலை 4.05 தொடக்கம் 7மணி வரை லண்டன் ஹரோவ் சிவிக் சென்டர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் குணகவியழகன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் விமர்சகர், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் வாசுதேவன்,விமர்சகர் கெளரி பரா, இலக்கிய விமர்சாகர் மாதவி சிவலீலன் ஆகியோர் மதிப்புரை வழங்க, ஊடகர் இளையதம்பி தயானந்தா தலைமையேற்று நிகழ்வை நடத்தவிருக்கிறார்.

நிகழ்வின்போது நியூசிலாந்தில் உருவான கவனி குறும்படம் சிறப்பு காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன் எழுத்தாளரின் இந்த இரு நூல்களையும் அரங்கில் பெற்றுக்கொள்ள முடியும்.


“ஈழப்போர் பற்றி விசாரணை செய்வதே `போருழல் காதை’ நாவல்!” – குணா கவியழகன்

எமது நீதிக்குரல்கள் கேக்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப் படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறிய வேண்டியது.

“எழுத்து என்பது, ஒரு தேடல்; ஒரு விசாரணை; ஒரு தொலைதல்; ஒரு கண்டுபிடித்தல்; `இன்னும் எழுத்து என்பது ஒரு மண்ணும் இல்லை’ என்ற சலிப்பு வரும்வரை தன்னை ஒப்படைத்தலுக்கான ஒரு மோகம்” என்று சொல்லும் குணா கவியழகன், ஈழப்போரின் பாதிப்புகளைத் தொடர்ந்து படைப்புகளாகச் செய்துவருபவர். இன்று இருக்கும் தமிழக வரலாறும், பண்பாடும் இலக்கியத்திலிருந்து எழுதப்பட்டவைதாம். அப்படி இலக்கியம் என்பதும் வரலாற்றின் பக்கங்களைச் சுமந்து நிற்கும் மிக முக்கியமான ஆவணம். அந்த வகையில் எதிர்காலத்தில் ஈழத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, குணா கவியழகனின் படைப்புகள் ஆதாரமாக இருக்கும். போர்ச்சூழலில் ஈழத்தில் நடைபெற்ற இடப்பெயர்வுகளை எழுதத் தொடங்கியிருக்கும் குணா கவியழகன், `கர்ப்பநிலம்’ நாவலைத் தொடர்ந்து `போருழல் காதை’ என்ற நாவலை எழுதியுள்ளார். நாவல் பற்றி குணா கவியழகன் பகிர்ந்துகொண்டவை…

“வாழ்வின் இடர்பாடுகளையும் அதன் கொண்டாட்டங்களையும் மறுகாட்சிப்படுத்திக் காணவைத்து, விசாரணையைத் தூண்டுவதில் `போருழல் காதை’யும் வாசகர்களுக்கு ஒரு கருவியாகும் என நம்புகிறேன்.

கர்ப்பநிலத்தின் `வனமேகு காதை’யை அடுத்து, `போருழல் காதை’ நாவல் வருகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில், உலகிலேயே மாபெரும் மனித இடப்பெயர்வைக் கண்டது ஈழமண். போர் துரத்த, தலைமுறை தலைமுறையாகத் தேடிவைத்த சொத்தையும் வாழ்வையும் கைவிட்டு, ஒற்றை இரவில் ஓடிய மக்களை மையக் கதைக்களமாகக்கொண்டது கர்ப்பநிலம் – வனமேகு காதை.

இப்போது, `போருழல் காதை’, யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்த மக்களின் வாழ்வை ஆதாரமாக்கிப் பேசுகிறது. பெரும்போரைக் கண்டது வன்னியின் வாழ்வு. அதன் செழுமை, அதன் சிதைவு, அதன் வீழ்ச்சி, வீழ்ச்சியைச் சகிக்க முடியாத மனத்தின் ஓர்மம் என வாழத்துடிக்கும் மக்களின் அலைச்சலும் கொண்டாட்டமுமாய் நாவல் விரிகிறது.

இலக்கியத்தை ஒரு தரிசனமாகக் கொள்ள வேண்டும் என்றால், அகச்சிக்கல்களை மட்டுமே ஆராய்வது என்பது எவ்வளவு அபத்தமான செயல்! அதற்குண்டான புறச்சூழலையும், அதை நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது. அதன் ஒளிகொண்டு அனுபவத்தை அறிவாகத் திரட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. இதற்கான கருவி என்பதே வாழ்வின் மீதான விசாரணைதான். அத்தகைய ஒரு விசாரணைக்கான வெளிகளை உருவாக்கவே இந்த நாவலையும் முன்வைத்துள்ளேன்.

கர்ப்பநிலத்தின் காதைகள், அடிப்படையில் சிங்களத்தமிழ் இன முரண்பாட்டை ஆராயும் முயற்சி. ரத்னாயக்க என்கிற சிங்கள கிராமத்து மனிதரும், அரசுநாகன், பொன்னுக்கோனர் போன்ற யாழ்ப்பாண மனிதரும் ஒருகாலத்தில் நண்பர்கள். இந்தக் குடும்பங்களுக்கு இடையேயான தொடர்பு, அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்ட இனப்பகையால் அறுந்துபோகிறது. பிறகு அவர்களின் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்ன ஆனார்கள் என்ற கதைப் பின்னணியில் போரை விசாரணை செய்கிறது நாவல். இந்த விசாரணைக்கு உலக அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியலின் ஊடாட்டங்கள் பற்றிய உண்மை ஒளியாகப் பாய்ச்சப்படுகிறது.

எமது வலிமையை, அநீதியும் அதர்மமும் வஞ்சகமும்கொண்டு சிங்கள தேசம் உலக சக்திகளுடன்கூடி அழித்தது. எமது நீதிக்குரல்கள் கேட்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப்படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறியவேண்டியது. அந்தக் கதையைச் சொல்லிவிட்டுப்போகிறோம். ஏனெனில், அது மீண்டும் மீண்டும் உலகின் ஏதோ ஒரு மூலையில் படரக் காத்திருக்கும் நச்சுப் பதார்த்தம்.

ஒருவன், தன் வாழ்வுக்கு எழுத்தை சாட்சியாக நிறுத்த முடியாது. ஆனால், தன் எழுத்துக்கு வாழ்வை சாட்சியாக நிறுத்த முடியும். இதுவரையிலான என் எழுத்தைப்போலவே `போருழல் காதை’யும் வாழ்வை சாட்சியாக்கித் துணிந்ததுதாம்.

போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும்.

குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவலில் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.”

மண்கிண்டிமலை, “இதயபூமி-1″தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.!


1980 களின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டைபிடிக்கும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.!

இந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும்,சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.!

1990களில் ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர்.

ஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழிப்படையாக மீண்டும் மாற்றம் பெற்றது.

1990ம் ஆண்டு, 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின்னர் தான், பெரும் மரபுவழிப்படையணிகளை நகர்த்துவது தொடங்கி, அதை சீராக்குவது வரை, பட்டறிவின் மூலம் தங்களை வளர்த்துக்கொண்டனர் புலிகள்.

இதில் முதல், முதலாக “ஆகாய கடல் வெளிச்சமர்” என பெயர் சூட்டப்பட்ட, முதலாவது வலிந்த தாக்குதல் ஆணையிறவுப் பெரும் தளத்தின் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.

அந்தக்காலம், புலிகளின் பட்டறிவுக்காலம்.!

நாம் நிர்ணயித்த இலக்கை அன்று அடைய முடியாது போனது. அந்த தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. இரண்டு இராணுவங்கள் இலங்கையில் உள்ளது என சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன.

இந்த தாக்குதல்கள் மூலம் பெரும் நிவாகப்பட்டறிவையும், போர் நுணுக்கங்களையும் எமது போராளிகள் கற்றுக்கொண்டனர். இதன் பின்னர், பல மினிமுகங்கள், தொடர் காவலரண் தகர்ப்பு, முன்னேற்ற முறியடிப்பு, என தங்களை புலிகள் யுத்த ரீதியாக வளர்த்துக் கொண்டனர்.

மணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம் முகாம் மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.

அதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப்.கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.

இதயபூமி-1 என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில், பால்றாஜ் அண்ணையின் வழிகாட்டலுடன், ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.

இந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளை தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.!

ஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.
அந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை, அந்த முகாம் கொண்டிருந்தது.

அப்படியான ஒரு முகாம் மீதான தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் புலிகள் இருட்டோடு இருட்டாக நகர ஆரம்பித்தனர். காவலரணில், காவலிருந்த சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணை தூவி, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.

இந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.

இப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.

இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!

25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.!

இந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.
திடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது. பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது.

அன்று 100மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் 8போராளிகள் வீரச்சாவடைந்தனர். புலிகளால்81MM மோட்டர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்கள் அள்ளப்பட்டது.

தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, புலிகளின் இந்த பாச்சல், சிங்களத்துக்கு அவமானத்தை உண்டாக்கியது. குறைந்த இழப்புடன் பெரும் சேதத்தை எதிரி சந்தித்தான்.

இந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே தான், இதே ஆண்டு ஒன்பதாம் மாதம் ஒப்ரேசன் யாழ்தேவியை தொடங்கி கிளாலியை கைப்பற்ற வெளிக்கிட்டு, புலிகளால் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. (இந்த தாக்குதல் பற்றி முன்னமே பதிவு செய்துள்ளேன்)

1993ம் ஆண்டு புலிகளின் ஆண்டு. அன்று பல வெற்றிகளை நாம் எம் கைகளில் வைத்திருந்தோம்.!

ஏன் இந்த தாக்குதல் புலிகளால் அன்று மேற்கொள்ளப்பட்டது?

இதில் தான் தலைவரின் போர் உத்தியை, நீங்கள் அறிய வேண்டும்.!

1993 இல் பூநகரி தாக்குதலுக்காக, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதனால், குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு, பெரும் தாக்குதல் எதுவும் புலிகளால், எதிரி மீது மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிங்கள உளவுத்துறையினர் எச்சரிக்கை ஒன்றை தமது அரசுக்கு விடுத்தனர்.

புலிகள் பெரும் போர் ஒன்றுக்கு தயாராகின்றார்கள் என்ற செய்தி, சிங்கள நாளேடுகளில் செய்தியாக உலா வந்தது. இதனால் சிங்களப்படை முகாம்கள் உச்சவிழிப்புடன் வைக்கப்பட்டது.

இதனால், அவர்களை திசை திருப்ப வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. பூநகரி தாக்குதலின் ஒரு அங்கம் தான் இதயபூமி-1 தாக்குதல் என்றால் அது மிகையாகாது.

இப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.!

அதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காக தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.!

எங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்த தாக்குதல்.!

இந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில் புதையுண்டு போயுள்ளது.!

இந்த தாக்குதலின் வெற்றி, புலிகளின் போரிடும் உளவுரணை அன்று மேம்படுத்தி இருந்தது.!

அதன் வெளிப்பாடே பூநகரி வெற்றி.!

இந்த தாக்குதலின் போது (சரியாக எனக்கு நினைவில்லை) 10இலட்சத்திற்கு மேற்பட்ட, எதிரியின் பணம் அன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

அந்த பணத்தில், அந்த தாக்குதலில் பங்கு பற்றிய போராளிகளுக்கு, முள்ளியவளையில் ஒரு பாடசாலையில் வைத்து விருந்து வைக்கப்பட்டது.

அந்த விருந்தில் எமது மக்களும் பங்குபற்றி, தம் சந்தோசத்தை கொண்டாடினர்.!!
நினைவுகளுடன் துரோணர்.!!

**
இதயபூமி 01

தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து வைத்திருக்கும் பால பூமி. மணலாறு, தமிழீழத்தின் இதயத்தைப் பிளந்து தமிழ் மக்களின் தாயக தாகத்தை அழுத்து விடத் துடிக்கும் எதிரிக்கும் அந்தப் பிராந்தியம் முக்கியமாகத்தான் இருந்தது. மிகக் குறுகிய காலப் பகுதியில் சிங்கள பேரினவாத அரசு ‘வெலி ஓயா’ என புதிய நாமம் சூட்டி அப்பகுதியில் வாழ்ந்த தமிழ் சுதேசிகலையெல்லாம் விரட்டியடித்து, அங்கெல்லாம் சிங்கள மக்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சில அபகரிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் வீறாப்புடன் எழுந்து நிற்பதுதான் ‘மண்கிண்டிமலை’ அது எதிரியின் பாசையிலே ‘ஜானக புர’.

ஆனால்….. 25.07.1993 அன்று இரவு விடிந்தபோது, எதிரு அதிர்ந்தான். உலகம் வியந்தது. சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது. ‘வெட்கத்துக்குரிய நாள். எது பிழையாகிப் போனது?’ இப்படிப் பலவாறு தமது இராணுவத் தோல்விகளை தாங்கிக்கொள்ள ம்,உடியாமல் அழுதன பல சிங்களதேச நாளேடுகள்.

ஆம், பேரின அரசினால் மிகப்பெரிய தமிழினப் படுகொலை நடாத்தி முடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் நிறைவெய்திய வேளையில் ( 1993 கார்த்திகை வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வராலாற்றுடன் இன்று பதிவு செய்கிறது) கடந்த 25.07.1993 அன்று இரவோடு இரவாக இப்பகுதியின் மிகப் பெரிய முகாம்…. எதிரி தனக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ததெனக் கருதி வந்த முகாம்…. அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு இராணுவத் தாக்குதலுக்கும் கட்டளைத் தலைமையகமாகப் பயன்படுத்துப்பட்டு வந்த மண்கிண்டிமலை இராணுவ முகாம்….. அத்துடன் அதனைச் சூழ்ந்திருந்த சிறிய முகாம்களும் அரைமணி நேரத்தில் தகர்த்தழிக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதயபூமி 01 எனப் பெயர் சூட்டப்பட்டு விடுதலைப் புலிப் போராளிகளினாலும் அவர்களின் பின்னால் அணிவகுத்து நின்ற துணைப்படை வீரர்களினாலும் நடாத்தப்பட்ட இந்த மின்னல் வேக, வெற்றிகரமான தாக்குதலில் தமது இனிய உயிர்களை இதயபூமிக்குத் தந்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் உறங்கிக் கொண்டனர் பத்து வேங்கைகள்.

70க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டு, 5 கோடி பெறுமதியான ஆயுதங்கள் அள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறிய இதயபூமி 01இன்னும் எத்தனை தடவைகள் இந்தப் பகுதியில் வேடிக்கப்போகின்றதோ என்று எதிரி ஏங்கிக் கொண்டிருக்கிறான்.

– எரிமலை (கார்த்திகை 1993) இதழிலிருந்து

யூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான் !

2001 ம் ஆண்டு 24 யூலை அதிகாலை 14 கரும்புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தை ஊடறுத்து புகுந்தார்கள். பிறகு அங்கு அவர்கள் 14 பேரும் எழுதியது ஒரு இனத்தின் அடங்காமையை, துணிச்சலை, வீரத்தை..

ஒரு இனத்தின் ஒட்டு மொத்த சினமாக அங்கிருந்த வான்கலங்கள் மீது மோதி வெடித்தார்கள். முழு உலகமுமே புலிகளை பார்த்து பிரமித்த நாள் அது.

படைவலுச்சமநிலை புலிகள் பக்கம் திரும்பக் காரணமாக இருந்ததும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் மீது மேற்குலகம் வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்குக் காரணமாக இருந்ததுமான தாக்குதல் என்று வரலாற்றாய்வாளர்களும் இராணுவ வல்லுனர்களும் பதிவு செய்த தாக்குதல் இது.

உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தாக்குதல் நெறிப்படுத்தப்பட வெறும் 14 புலிகள் செய்த சாதனை அது.

இங்கு நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது.

வெறும் 14 போராளிகள் அன்று தீவின் படைத்துறை/அரசியல்/ பொருண்மிய காரணிகளை தீர்மானிக்கும் வல்லமையை தமதாக்கிக் கொண்டார்கள் என்பதே அது.

எனவே எம்மிடம் இருக்கும் போர்க்குணத்தையும் /வீரத்தையும் தொடர்ந்து பேணுவது அவசியம்.

ஏனென்றால் இன்றைய உலக ஒழுங்கு என்பது பலமுள்ளவன் பக்கம் சாயும் தன்மை கொண்டது மட்டுமல்ல நாம் தொடர்ந்து வீழ்ந்து கிடப்பது எதிரி எம்மை தொடர்ந்து அழிக்க உதவுமே ஒழிய எம்மைத் தற்காக்க உதவாது.

“சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும்” என்கிறார் சாணக்கியர்.

“தகுதியுள்ளவை உயிர்வாழும்” என்கிறார் டார்வின்.

இதையே சிக்மன்ட் ப்ராய்ட் வேறு ஒரு மொழியில் சொல்கிறார் ” தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும்”.

அரசு என்ற போர்வையில் பேரழிவு ஆயுதங்களுடன்/ அதி நவீன விஞ்ஞான- தொழில்நுட்ப – புலனாய்வு வலையமைப்புக்களுடன்/ நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புசார் சிந்தனை குழாம்களின் லொபிகளால் சுற்றி வளைக்கப்பட்டு வேட்டையாடப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தில் உயிர்க்கொடை (கரும் புலிகள்) என்பது தவிர்க்க முடியாத ஒரு வகிபாகத்தைக் கொண்டது என்பதை’ நந்திக்கடல்’ அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.

அதனால்தான் பலவீனமான தேசிய இனங்களின் பலம் மிக்க இந்த அதி மனிதர்களை தத்துவப்படுத்தி மறு அறிமுகம் செய்கிறது ‘நந்திக்கடல்’.

நாம் அடிக்கத் தேவையில்லை – ஆனால் எல்லை மீறிப் போனால் ஒரு கட்டத்தில் மீளத் திருப்பி அடிப்போம் என்ற அச்ச உளவியலை எதிரிக்குள் விதைப்பதனூடாகவே நாம் எம்மைத் தற்காத்துக் கொள்ளவும் / பேரம் பேசவும் முடியும்.

அதை விடுத்து தற்போது நமது தமிழ் அரசியல்வாதிகள் செய்வது போல் இணக்க/ அடிபணிவு/ ஒப்படைவு/ சரணாகதி அரசியல் செய்தால் இருக்கிற கோவணமும் பறி போய்விடும்.

யூலை மாதத்தின் குறிப்பாக
இன்றைய நாளின் செய்தி இதுதான்.


தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசன வரிகள்

நாகவிகரையில்
பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று..
இனி என்ன?
“காமினி டீ றூம்”
கதவுகள் திறக்கும்!

சிட்டி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில்
அறிமுகமாகும்!
புத்தன் கோவிலுக்கு
அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்!

சிங்கள மகாவித்தியாலயம்
திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின்
வெள்ளரசிற் கட்டலாம்,

முனியப்பர் கோவில்
முன்றலிலும் கட்டலாம்,
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில்
மதிலிலும் கட்டலாம்!

எவர் போய் ஏனென்று கேட்ப்பீர்?
முற்ற வெளியில்
“தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில்
களியாட்ட விழாவும் நடைபெறலாம்!
நாகவிகாரையிலிருந்து
நயினாதீவுக்கு
பாதயத்திரை போகும்!

பிரித் ஓதும் சத்தம்
செம்மணி தாண்டிவந்து
காதில் விழும்!

ஆரியகுளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளத்து பூக்களும்
பூசைக்கு போகும்!

நல்லூர் மணி
துருப்பிடித்துப்போக
நாகவிகாரை மணியசையும்!
ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக்கிடக்க
ஆரியகுளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!

எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்…


தேசியத் தலைவர் இருந்திருந்தால் இப்படி வாலாட்டுவீர்களா: சாள்ஸ் எம்.பி கேள்வி

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் தமிழர்களுக்கு இந்தத் அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?.

தென்கயிலை ஆதீனம் மீது சிங்களக்காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்?அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா?இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…!

24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை….!

இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை…..!

இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் 14 பெயர் குறிப்பிடமுடியாத மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட வாழ்வில் மாபெரும் வெற்றி மகுடம் சூட்டிய நாள். ஆம், கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்!

1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம்.

கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள்.

ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள்.

தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும், யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது.

இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை, இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள்.

பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள்.

இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது.

வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ்.

இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான்.

துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள்.

கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா?

சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா?

ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி. நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன்.

அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா?

ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள்.

எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது.

உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம்.

கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அனைவரையும் நெஞ்சிருத்தி வணங்குகின்றோம்.

பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்ககளாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

katunayaka black tigers



Up ↑