Search

Eelamaravar

Eelamaravar

Category

மாவீரர் நாள்

ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் – ஆவணம்

தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம்.

main-qimg-61c9fc2a3aaf917ca5cdcacb6a8aa1f5.jpg

‘தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb’

main-qimg-f6926747938666913c834e99d562b567.png

மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:-

முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி – (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்)

  • அம்பாறை மாவட்டம்

கஞ்சிகுடிச்சாறு உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • மட்டக்களப்பு மாவட்டம்

தரவை மாவீரர் துயிலுமில்லம்.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.

கல்லடி மாவீரர் துயிலுமில்லம்.

மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.

  • திருகோணமலை மாவட்டம்

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.

வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.

  • மன்னார் மாவட்டம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.

முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.

  • வவுனியா மாவட்டம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • கிளிநொச்சி மாவட்டம்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.

  • யாழ்ப்பாண மாவட்டம்

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.

வலிகாமம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்)

வடமராட்சி கிழக்கு எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்.

  • முல்லைத்தீவு மாவட்டம்

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்.

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

நெடுங்கேணி களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்

மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.

மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம்.


இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் ‘முகையவிழ்த்தல்‘ என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன்.

இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும்.

அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன்.

வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்….


  • 1982 – 20 நவம்பர் 2008 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 22,390
  • 1982 – 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை =  25,500 – 26,500

தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 40000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis)


1)கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

  • இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது.
  • முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991
  • முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல்
main-qimg-ecc4a10fca1e73e62c43a08a144e6b42.jpg

1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:-

main-qimg-699288593b614a19ff964152714a185e.png

2)எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: 1990
  • இடிக்கப்பட்டது: 1995
  • புனரமைக்கப்பட்டது: 2002
  • முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 290
    • நினைவுக்கற்கள் – 490
    • தியாகசீலம் – 24
main-qimg-73f2249dea8f84fedefdf27a2e54401e.jpg
main-qimg-34813fce17d2ab167197947e6d259505.png

‘அதன் சுற்றுச்சுவர்’

3)கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார்.

  • முகையவிழ்த்தது: சூலை 14, 1991
  • முதல் வித்து: கப்டன் சோலை
  • மொத்த பரப்பளவு: 12 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 654
    • நினைவுக்கற்கள் – 1199
main-qimg-4edffae6d51402d8a7dd3bc9f4100645.png
main-qimg-140abbc50e2637d5b374bbced3642d95.png

4)முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சூலை 28, 1991
  • முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்)
  • மொத்த பரப்பளவு: 15 ஏக்கர்
  • இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது.
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 603
    • நினைவுக்கற்கள் – 348
main-qimg-50b6db929190eed94d9b2a80882e25ba.png
main-qimg-6a75aa10db4b4c1274e9ca22ea04256e.png

5)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: லெப். பரமசிவம்
  • இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில்
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279
main-qimg-fc2e7deb6dd31ba3651aa9a7282e2108.png
main-qimg-37db32b22c4f7a75b6314bfb20175bdb.png

‘ஒலிமுகம்’

6)ஆங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சூலை 18, 1998
  • முதல் வித்து: வீர. புரட்சிகா
  • மொத்த பரப்பளவு: 10 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 533
    • நினைவுக்கற்கள் – 126
main-qimg-5cb1bff6ed570fcc68da7e748d55677a.png
main-qimg-4907a8a27d7c010749fc37c0d6605ef7.png

ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்

main-qimg-1ea8f41bf4235465e8ad511c7c8241a3.png

‘ஆலங்குளம் ஒலிமுகம்’

7)தரவை மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991
  • முதல் வித்து: லெப். விகடன்
    • (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.)
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+
main-qimg-0ff23882868fb3c1a999d72f28c474d5.png
main-qimg-1ac011c17bb39bdca37d0ce65fb3546e.png
main-qimg-173b832fef090083092491f42ba63616.png

‘தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி’

main-qimg-26839e2e9adde2c4ba3ef2aa3b4a2335.png

‘பாதையும் தரவை ஒலிமுகமும் ‘

8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-d338adb0ded14d1b3b343d7d7c5a115b.png

9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487

கல்லறைகள் கட்டும் முன்:-

main-qimg-14fbcbfb8303b7e7224837856d2a14c0.png

கல்லறைகள் கட்டிய பின்:-

main-qimg-f5fddf3ee99b7a7ee6604a0264208b77.png

10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சனவரி 19, 1991
  • முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன்
  • மொத்த பரப்பளவு: 5 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 391
    • நினைவுக்கற்கள் – 385
main-qimg-d6d84d93444a438aa2c71fb1d132c7f0.png

ஒலிமுகம்:

m-thugi-.jpg

11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: வீர. வாசுகி
main-qimg-5f9a408e17223d3631f94fe6b5c70fd1.png


12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்

mannaar aatkaatti veli.jpg

13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று

எதுவெனத் தெரியவில்லை!

main-qimg-1fd076a2b1a9fe493b5dc62be01afe4a.png

14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

  • 2004 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 1,213
    • நினைவுக்கற்கள் – 755
large.8-1.jpg.1af7ba21604b6a5c9032f7f693bc98c9.jpg

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.’

main-qimg-e42af7716307932330dd8d8f4f20122d.png

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.’

கனகபுரம் ஒலிமுகம்:

5.jpg

15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்

2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும்.

  • 2004 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 1,670
    • நினைவுக்கற்கள் -905
main-qimg-ec202f8d86da78c253c42f7872b8726e.png

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.’

16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-280355dd0b3b7ae5d8ca7858f93c73cd.jpg

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.’

17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்

இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே!

main-qimg-8889a08ff966dea3d9bdc6a074a917be.png

18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்

இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன.

விதம் 1:

9SaysWaxCHwaurQ0XuPP.jpg

விதம் 2:

இவ்விதந்தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும்.

koodaalikkal.jpg

பொதுச்சுடர் மேடை:

co2CGlXqdiq1gskXlSTR.jpg

19)விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-91d6759cd3424946570989a74406642f.png

20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

  • 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4
  • 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150
saatti.jpg

‘சாட்டி ஒலிமுகம்’

saatti ninaivukakrkal.jpg

‘நினைவுக்கற்கள்’


ஏனைய  7 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன.


  • இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்:

–>தேவிபுரம்  பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

–>இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

–>வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை)

–>இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை)

–>வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை)

–>மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது.

–>மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன.

இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன:

சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை

ltte cemetry in mullivaaykkal.. some interior place.jpg

  • கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம்
main-qimg-cdde6077eaf1d2e4a74f296508a69a49.png
main-qimg-afafe1e5b56e971b2617d2306dd0939b.jpg

உசாத்துணை:

படிமப்புரவு

  • vimeo
  • seatigers
  • 85% screen shot only

எழுத்து & வெளியீடு

நன்னிச் சோழன்

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தினத்தில் பொன் தியாகம் ஐயா !

கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வரலாற்று சரித்திரமாக பதிவாகியுள்ளது.

வருடா வருடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக பிரம்மாண்டமான முறையிலும் பேரெழுச்சியுடனும் இந்த மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழினத்தின் மூத்த போராளியும் நான்கு மாவீரர்களின் தந்தையுமான பொன் தியாகம் அப்பா பல வருடங்களின் பின்னர் பொது வெளியில் முதன்மை சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

தன்னுடைய நான்கு பிள்ளைகளை ஈழ மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் மண்ணுக்காக கொடுத்த இந்த மூத்த போராளி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர்நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், பெருந்திரளான மக்கள் இந்த மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுக்கு சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

**
பொன்.தியாகம் அப்பா போராளிகள் எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு!

என்னைப் பாதித்த நாட்கள் பலவுண்டு. இன்றைய நாளும் அவற்றிலொன்று. அதுபற்றிய பதிவிது.

பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றிய போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (மேஜர் தேன்மொழி (டிலானி) வீரச்சாவு

போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவரீச்சர். எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.

அப்போதுயாழ்செல்லும் படையணி என்று ஒரு படையணி இருந்தது. ( கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.

அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.

இன்றைக்குச் சரியாக 18 ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.

ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர் என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,

எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது என்று.

எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.

2009 க்கு முன்னர் அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வீட்டு வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.

லெப்.கேணல் தணிகைச்செல்வி

யாழ் ஏழாலையை பிறப்பிடமாக கொண்டவர் . ஆரம்பகாலச் சுகந்திர பறவைகள் அமைப்புடன் சேர்ந்து இயங்கியவர். 1989 இல் மணலாற்றுக் காட்டில் மகாலிர்ப் படையணியின் நான்காவது பயிற்ச்சி முகாமில் ஆயுதப் பயிற்ச்சி எடுத்தவர்.
அரசியல் துறையில் வன்னி , யாழ் உட்பட பல இடங்களில் அரசியல் பணிசெய்து அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராகச் செயட்பட்டு அதன் பின் யாழ் செல்லும் படையணிப் பொறுப்பாளராகவும் , அரசியல்துறை தாக்குதல் அணியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். லெப்.கேணல் தணிகைச்செல்வியின் வீரச்சாவிற்கு பின்னர் லெப் கேணல் தாரணி யாழ்செல்லும் படையணி தளபதியாக நியமிக்க பட்டர்.

பொன்.தியாகம் அப்பாவின் வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று.

இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி ஒருவர் அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும்.

ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று.

18 வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான்.

ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.

26 .06 .2017

தொகுப்பு வன்னியன்

லெப்.கேணல் தணிகைச்செல்வி தொகுப்பு- கண்ணன்

தமிழர் தாயகத்தில் சிறப்பாக நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒளிப்படத் தொகுப்பு


தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

சிறிலங்கா அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழர் தாயகத்தில், நேற்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவிடங்களிலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு-

முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தில்-

கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில் – விஸ்வமடு தேறாவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர்நாள்

முல்லைத்தீவு- அளம்பில் துயிலுமில்லத்தில்-

யாழ்ப்பாணம் -கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக –

கடற்புலி மாவீரர்கள் நினைவாக – முல்லைக்கடற்கரையில். மாவீரர்நாள்

அம்பாறை – கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில்-

மட்டக்களப்பு – வாகரை துயிலுமில்லத்தில் –

யாழ்.- உடுத்துறை துயிலுமில்லத்தில்- யாழ் பல்கலைக்கழகத்தில்  மாவீரர் நாள் நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் 

யாழ்.சாட்டி துயிலுமில்லத்தில்-

முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்-

யாழ். வல்வெட்டித்துறை மாவீரர் நினைவுத் திடலில்-

மட்டக்களப்பு- தரவை துயிலுமில்லத்தில் – 

மட்டக்களப்பு – தாண்டியடி துயிலுமில்லத்தில்-

மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்- மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் நாள் நிகழ்வு

மட்டக்களப்பு கோவில்குளம் உயர்தொழில்நுட்ப கல்லுரியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை  மாவீரர் நாள்

முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

முதலாவது மாவீரர் லெப்.சங்கர் எரியூட்டப்பட்ட இடத்தில் ஏற்றப்பட்டது பொதுச்சுடர்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் லெப். சங்கர் உடல் எரியூட்டப்பட்ட கீரைத்துரை சுடுகாட்டில் மாலை சரியாக 6.05க்கு விளக்கேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டளைத் தளபதி சங்கர், சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் படுகாயமுற்று குடல் சரிந்த நிலையில், மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மாலை மேதகு வே.பிரபாகரன் மடியில், மதுரை மண்ணில் உயிர் நீத்தார். சங்கர் வீரச்சாவடைந்த அதே நாளன்று இரவு விடுதலைப் புலிப் போராளிகள் மதுரை வந்து இராணுவ மரியாதையோடு தளபதி சங்கரின் பூத உடல் இதே கீரைத்துரை மயானத்தில் எரியூட்டப்பட்டது என்பது வரலாறு.

மாவீரன் சங்கர் மரணமடைந்த அந்த நாளைத்தான் மேதகு வே.பிரபாகரன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் புலிகளின் மாவீரர் தினமாக அறிவித்ததுடன், தனது மடியில் சங்கர், தலை வைத்து உயிர் நீத்த அந்த மாலை 6.05 மணிக்கு தனது மாவீரர் உரையை வாசிப்பதும் மயிர்கூச்செரிய வைக்கும் வரலாறு.

புதுச்சேரியில் மில்லர் அரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்.

மாவீரர் நாள் சோழமண்டலம் 

தாய்த் தமிழகத்தின் தஞ்சையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

லெப்.போசன் கல்லறை நிகழ்வு!

தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வு

27.2018 மாலை தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் எழுச்சியாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், ஓசூர், சென்னை, உள்ளிட்ட பல இடங்களில் நடந்தேறியது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவீரர்களின் ஈகங்களை போற்றியும் தமிழீழம் அடுத்த கட்ட செயல்வடிவ போராட்ட முன்னெடுப்புகளையும் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் முன்னிறுத்தி எழுச்சியுரையாற்றினார்.

அதேபோல் திருச்சி, குடந்தை உள்ளிட்ட இடங்களில் த.தே.பே. பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி நினைவேந்தல் உரையாற்றினர்.

விதைப்பதும் முளைப்பதும் கார்த்திகையே

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

   1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை….

மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

மேலும் பார்க்க ……………

**

**

**

தமிழ்த் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து அகண்ட தமிழ் இராட்சியம் அமைப்போம்

தமிழினம் தனது தலைவரின் பிறந்த தினத்தை மிகவும் உணர்வு பூர்வமாக உலகம் எங்கும் கொண்டாடி வருகின்றது. யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை, யாரும் இலவசங்கள் வழங்கவில்லை ஆனாலும் தமக்குள் இருந்து எழும் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாக இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வயது வேறுபாடின்றி தம் தலைவனை கொண்டாடுகின்றனர்.

தலைவரின் புகைப்படத்தை கைகளில் ஏந்துவதில் பெருமை கொள்கின்றனர். யாரை பயங்கரவாதி என சிங்கள தேசமும், இந்தியாவும், மேற்குலகமும் முத்திரை குத்தியதோ இன்று அந்த தலைவரின் பிள்ளைகள் கொண்டுள்ள எழுச்சியை கண்டு அனைத்துலகமும் ஆச்சரியமடைந்துள்ளது.

பிரபாகரன் என்ற நாமத்தை அழிக்க வேண்டும் என்பது சிங்கள இந்திய ஆதிக்க சக்திகளின் திட்டம் ஆனால் இன்று அந்த நாமம் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உயிர் மூச்சாக பரிணமித்துள்ளது.

உலகை ஆண்ட மூத்த இனம் ஒன்று அடிமைப்பட்டுக் கிடப்பதையும், தனது கண்முன்னால் தனது மக்கள் அடிமைகளாக வாழ்வதையும் கண்டு பொறுக்கமுடியாத பலகனாக களம் புகுந்த எமது தலைவரிடம் அன்று ஆயுதங்களும் இல்லை அவருக்கு ஆதரவுகளும் இல்லை.

ஆனாலும் தனி ஒருவராக இயக்கத்தை கட்டி எழுப்பி ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை தமிழ் இனத்துக்கு என ஒரு தேசத்தையும், அதற்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும், படைக்கட்டமைப்புக்களையும் கொண்டதாக மாற்றம் பெற வைத்தது என்பது அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பாகும்.

உலகத்தின் நான்காவது மிகப்பெரும் இராணுவத்தையும் உலக நாடுகளின் ஆதரவுடன் பல இலட்சம் படைகளைக் கொண்ட சிங்கள இராணுவத்தையும் கதிகலங்க வைத்த வீரமும், விவேகமும் தமிழ் இனத்தின் சரித்திரத்தை மீண்டும் எழுதிச் சென்றுள்ளது.

தமிழீழமும், தமிழகமும் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது, அதற்கு ஆதரவாக அனைத்துலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் களமிறங்கியுள்ளனர். மக்களின் எழுச்சியை அடக்கமுடியாத நிலையில் சிங்களமும், இந்தியாவும் உள்ளன.

தமிழனை ஆளவேண்டும் என்ற வேற்று இனத்தவனின் கனவுக்கு இந்த எழுச்சியானது சாவு மணியடித்துள்ளது. பிரபாகரன் என்ற நாமத்தை நாம் உச்சரிப்போமேயானால் எம்மை ஆள்வதற்கோ அல்லது எம்மை அணுகுவதற்கோ எதிரியும், துரோகியும் அச்சப்படுவான்.

தமிழகத்தில் தமிழ் மக்களின் ஆட்சி மலரும் போது தமிழ் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த தினம் அரச தினமாக அறிவிக்கப்படும் என்ற கருத்துக்களும் உண்டு. அவ்வாறு நாம் அறிவித்தால் அன்று எமது இனத்தின் விடுதலைக்கான கதவானது திறக்கப்படும் என்பதே யதார்த்தமானது.

எதிரிகளால் அழிக்க நினைத்த தமிழ் இனத்தின் வரலாற்றை மீண்டும் எழுதிய பெருமை மட்டும் எமது தலைவருக்கு உரியதல்ல, உலகம் எங்கும் சிதறிக்கிடந்த தமிழ் இனத்தை ஒரு அணியில் இணைத்த பெருமையும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கே உரித்தானது.

சாவதற்கு துணிந்துவிட்டால் சாதாரதண மனிதன் கூட சரித்திரம் படைக்க முடியும் என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்தியதும் அவர் தான். இன்று தமிழ் மக்கள் உலகத்தின் சரித்திர நாயகர்களை நினைவில் கொள்வதில்லை, அவர்களின் ஒரே நாயகன் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

எம் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவதுடன், அவரின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு அகண்ட தமிழ் இராட்சியத்தை அமைப்பதற்காக நாம் அனைவரும் ஒருங்கியைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஈழம் ஈ நியூஸ்

1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் !

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள்.ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.


1989 முதல் 2008 வரை மாவீரர் நாள் நிகழ்வில் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரைகள்

Leader V Prabakaran’s Heros day speeches from 1989 to 2008

காணொளியில்
எழுத்து வடிவம்
English Translation
2008 எழுத்து வடிவம் 2008
2007 எழுத்து வடிவம் 2007
2006 எழுத்து வடிவம் 2006
2005 எழுத்து வடிவம் 2005
2004 எழுத்து வடிவம் 2004
2003 எழுத்து வடிவம் 2003
2002 எழுத்து வடிவம் 2002
2001 எழுத்து வடிவம் 2001
2000

எழுத்து வடிவம்

2000
1999

எழுத்து வடிவம்

1999
1998 எழுத்து வடிவம் 1998
1997 எழுத்து வடிவம் 1997
1996 1996
1995
1994
1993
1992
1991
1990
1989

 

CLICK HERE FACEBOOK

 

# Hon.Velluppillai Prabhakaran, # Maaveerar day , #ltte,# Tamileelam

2004 தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் காணொளிகள் தொகுப்பு

கடல்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வு காணொளி

அகவணக்கம் செய்தோம் வீரர்களே மாவீரர் பாடல் காணொளி

கல்லறைப் பாட்டு காதினில் கேட்டு மாவீரர் பாடல் 2014 -காணொளி

maveerar_day_2014

“தோன்றி” இசைத் தட்டிலிருந்து பாடகர் நிரோஜன்

Up ↑