Search

Eelamaravar

Eelamaravar

Category

கரும்புலிகள்

முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் !

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.

பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.

1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.

அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.

தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.

அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.

அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.

இந்தக் கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகள்.

கரும்புலி கப்டன் திரு

கரும்புலி மேஜர் திலகன்

கரும்புலி லெப். ரங்கன்

கரும்புலி கப்டன் நவரட்ணம்

கரும்புலி மேஜர் ஜெயம்


சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து விட, துரத்தியவர்கள் தடுமாறிப் போனார்கள்.

பிடிக்க முடியவில்லை. ஆற்றாமையால் கண்டபடி சுட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்படியே மறைந்திருந்தவன் , இரவானதும் மெல்ல மெல்ல ஊரத் துவங்கினான். இஅயலாமையொடு ஊர்ந்தவன், எதிரியின் அரணைக் கடந்து வந்து சற்றுத் துரத்துக்குள்ளேயே மயங்கிப் போனான். பாவம் முகாமிற்குத் தூக்கிவந்து ‘சேலைன்‘ ஏற்றியபோது கண்திறந்தவன்.

தப்பித்து வந்தது ஒரு அதிஷ்டம் என்று தான சொல்லவேண்டும்.

இப்படியாக….. எத்தனையோ மயிரிழைகளில் தப்பி, அதிஸ்டவசமாக மீண்டவர்கள் கொண்டுவந்த தரவுகள்தான் , பலாலிப் பெருந்தலத்தின் மையத்தில் குறிவைக்க எங்களுக்கு அத்திவாரமாக அமைந்தன.

பலாலித் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் தாக்குதல்களையும் போலவேதான் அதுவும்! வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அது.

எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி!

தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது; உன்னதமானது!

தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே…. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல்; தளர்ச்சியற்ற பிணைப்பு!

அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை. அவர்களுடைய அந்த “மனநிலை” தான்.

எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான தலமென்ற பெருமையுடையது பலாலி முக்கூட்டுப் படைத்தளம்.

வடபுலப் போர் அரங்கின் பிரதான கட்டளைத் தலைமையகமும் அதுவேதான்.

தனிக்காட்டு ராயாவாக ஒரு சிங்கம், கால்களை அகல எறித்துவிட்டு அச்சமற்ற அலட்சியத்தோடு படுத்திருப்பதைப் போல ….

30 சதுர மெயில் விஸ்தீரணத்தில் ….

அகன்று நீண்டு விரிந்து கிடக்கிறது அந்தப் பெருந்தளம்.

இவை தெரியாத விடயங்களல்ல; ஆனால், ஆச்சரியம் என்னவெனில்…

“என்னை எவரும் ஏதும் செய்துவிட முடியாது” என்ற இறுமாப்போடு நிமிர்ந்திருக்கும் அந்த முக்கூட்டுத்தளத்தினுள் நுழைந்து, எங்களது வேவுப்படை வீரர்கள் குறிவைத்த இலக்கு, அதன் இதயமாகும்.

அது, சிறீலங்கா விமானப்படையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைமையகம் என்ற கேந்திர மையமாகும்.

இந்த முப்படைக் கூட்டுத்தளத்தை சுற்றி வர, பலமான் உருக்குக்கவசம் போன்று, உள்ள அதன் முன்ன்னணிப் பாதுகாப்பு வியூகத்தை ( Front Defence line ) ஊடுருவி நுழைவதென்பதே, ஒரு இமாலயக் காரியம்தான.

இமையாத கண்களுடன் , துயிலாமல் காத்திருக்கும் பகைவனின் பத்து ‘பற்றாலியன்‘ படைவீரர்கள்.

சரசரப்புக்கெல்லாம் சடசடத்து, சள்ளடையாக்கிவிடத் தயாராக அவனது சுடுகருவிகள்.

உலகெங்கிலும் இருந்து போறிக்கண்ணிகளையும், மிதிவெடிகளையும் வாங்கி வந்து, விதைத்து உருவாக்கியிருக்கும் அவனது கண்ணிவெடி வயல் ( Mines field ).

வானுலக நட்சத்திரங்களின் ஒளிர்வினைக் கொண்டே, பூவுலக நடமாட்டங்களைத் துல்லியமாய்க் காட்டும் அவனது ‘இரவுப் பார்வை‘ சாதனங்கள் ( Night vision ).

தேவைக்கேற்ற விதமாகப் பயன்படுத்தவென, தேவைக்கேற்ற அளவுகளில் கைவசமிருக்கும் அவனது தேடோளிகள் ( Search Lights ).

அடுக்கடுக்கான சுருள் தடைகளாயும், நிலத்துக்கு மேலால் வளைப்பின்னலாயும் குவிக்கப்பட்டிருக்கும் அவனது முட்கம்பித் தடுப்புகள்.

வன்னிப் பக்கத்துக் குளங்களைப் போல, உயர்ந்த அரண்களாக எழுப்பப்பட்டுள்ளன அவனது அணைக்கட்டுகள்.

உள்ளுக்கிருப்பதைக் கண்டு அறிவதற்கு வெளியில் இருந்து பார்க்க முடியாமல், நிலத்திலிருந்து வானுக்கு எழும்புகின்ற அவனது தகரவேலி.

எங்கிருந்து எங்கு என்று இடம் குறியாது, எப்போதிருந்து எப்போதுக்குள் என்று காலம் குறியாது, ரோந்து சுற்றிக்கொண்டு திரியும் அவனது ‘அசையும் காவலணிகள்’ ( Mobile Sentries ).

அத்தனை பலங்களினாலும் பலம் திரட்டி அரசு பலத்தோடிருந்தனர் எங்கள் பகைவர்.

“எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும், தேடுங்கள்” என்றார் எங்கள் தேசியத்தலைவர்.

நூல் நுழையும் ஊசிக்கண் துவாரம் தேடிய எம் வேவுவீரர்கள், அந்த ‘மரண வலயத்தை‘ ஊடுருவிக் கடந்து, சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார்கள்.

வெளியில் தனது முன்னணிக் காவலரண்களிலிருந்து, அசைக்க முடியாத தன்னுடைய பலத்தை எண்ணிப் பகைவன் இருமாந்துகொண்டிருக்க.

உள்ளே, சுமார் பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனது மையத்தலத்தில், விமான ஓடுபாதைகளில், நடந்து வானுர்திகளை வேவு பார்த்துக்கொண்டிருந்தனர் எம் வீரர்கள்.

அவர்களுடைய முயற்சிதான் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கான திட்டத்திற்கு கருக்கொடுத்தது. அவர்களது ஓய்வற்ற கடும் உழைப்பு, அந்தத் திட்டத்தை படிப்படியாக வளர்த்து முழுமைப்படுத்தியது.

தாக்குதல் இலக்கை வேவு பார்த்து. தாக்குதலணி நகரப் பாதை அமைத்து, தாக்குதல் பயணத்தில் ‘தரிப்பிடம்‘ கண்டு தாக்குதலுக்கான நாள் குறித்த அவ் வேவுப்புலி வீரர்கள்.

கரும்புலி வீரர்களுக்கு உறுதுணையாக வழிகாட்டிச் செல்லத் தயாராகி நின்றார்கள்.

தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது.

பெரிய நோக்கம்;

அரசியல்ரீதியாகவும், படையியல்றீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறக்கூடிய ஒரு நடவடிக்கை.

எமது மக்களின் உயிர்வாழ்வோடு பினைந்ததும் கூட.

ஆனால், அது ஒரு பலமான இலக்கு; உச்சநிலைப் பாதுகாப்புக்கு உட்பட்ட கேந்திரம்.

செல்பவர்கள் வேலமுடியும்; ஆனால் திரும்ப முடியாது.

சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து அதனை எதிர்கொள்வதற்கு நிகரான செயல் அது.

இருப்பினும் தாக்குதல் தேவையானது.

வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கான வழிமுறை தீர்மானிக்கப்பட்டது.

அது ஒரு கரும்புலி நடவடிக்கை.

நான் முந்தி நீ முந்தி என்று நின்றவர்க்குள் தெரிவாகியவர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது ஒரு தாக்குதலணி.

கெனடி அதன் களமுனைத் தளபதி; அவனோடு இன்னும் 6 வீரர்கள்.

சிர்ருருவி மாதிரிப் படிவமாக ( Model ) அமைக்கப்பட்டிருந்த பலாலி வான்படைத் தளத்தையும், அதன் ஓடுபாதைகளையும் சுற்றி அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

தளபதி கடாபி அவர்களுக்குரிய தாக்குதல் வழிமுறைகளைத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொருவருக்குமுரிய இலக்குகளைக் காட்டி விளக்கினார். ஒவ்வொருவரும் எவ்விதமாகச் செயற்ப்படவேண்டும் என்பதை அவர் சொல்ல்லிக் கொடுத்தார்.

அவர்களுக்குரிய ஒத்திகைப் பயிற்சிகள் ஆரம்பித்தன.

”பயிற்சியைக் கடினமாகச் செய்; சண்டையைச் சுலபமாகச் செய்” என்பது ஒரு படையியல் கோட்பாடு.

அந்தக் கோட்பாட்டின்படியே அவர்கள் செயற்ப்பட்டார்கள்.

ஆகா…..! அந்த நேரத்தில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அவர்களை;

மெய்யுருகிப் போயிருப்பீர்கள்.

எவ்வளவு உற்சாகம்; எவ்வளவு ஆர்வம்; ஓய்வற்ற பயிற்சிகளில் அவர்கள் காட்டிய மனமார்ந்த அந்த ஈடுபாடு….. !

‘எப்படி வாழவேண்டும் ?‘ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிற எங்களுக்குல்லிருந்து தானே அவர்கள் போனார்கள்!

உயிரைக் கொடுத்துவிட்டு எப்படி வெற்றியைப் பெறவேண்டும் என்றல்லவா ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குள் இருந்திருக்கக்கூடிய தேசாபிமானத்தை நினைத்துப் பாருங்கள்; அவர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய தமிழபிமானத்தை எண்ணிப் பாருங்கள்.

எங்கள் தலைவன் ஊட்டி வளர்த்த மேன்மை மிகு உணர்வு அது.

தங்கள் கடைசிக் கணங்களில்.

தங்களின் உயிர் அழிந்துவிடப் போவதைப் பற்றியல்ல; தங்களின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டியதைப் பற்றியே அவர்கள் சதா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் போய், “நீங்களில்லையாம்; ஆட்களை மாத்தப்போகினமாம்” என்று சொன்னால் எப்படியிருக்கும்?

அப்படி ஒரு கதை, கதையோடு கதையகா வந்து காதில் விழுந்தது.

“குழுக்கள் போட்டு புதுசா ஆக்களைத் தெரிவு செய்யப் போறேனேன்று சொர்ணம் அண்ணன் சொன்னவராம்” என்றது அந்தத் தகவல்.

கெனடி குழம்பிவிட்டான். அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தளபதியிடம் போய் சண்டை பிடித்தான்.

“நான் கட்டாயம் போக வேணும்” என்று விடாப்பிடியாய்ச் சொன்னான். “வேணுமென்றால் அவர் மற்ற ஆட்களை மாத்தட்டும். குழுக்கள் தெரிவுக்கு என்ற பெயரைச் சேர்க்க வேண்டாம்” திட்டவட்டமாகக் கூறினான்.

எந்த மாற்றமும் செய்யப்படாமலேயே எல்லா ஒழுங்குகளும் பூர்த்தியாகிவிட்டன.

அவர்களுடைய நாள் நெருங்கிவிட்டது.

கடைசி வேவுக்குப் போனபோது, அசோக்கிடம் ஜெயம் சொன்னானாம்.

“கரும்புலிக்குள்ளேயும் நாங்கள் வித்தியாசமாகச் செய்யப்போகின்றோம்; இது ஒரு புது வடிவம். நாங்கள் இவற்றை அழிக்கும்போது சிங்களத் தளபதிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.”

தேசியத்தலைவர் வந்து வழியனுப்பிவைத்தார் ;

அவர்களுக்கு அது பொன்னான நாள்.

ஒன்றாயிருந்து உணவருந்திய தேசியத்தலைவர், கட்டியணைத்து முத்தமிட்டு விடை தந்தபோது.

கரும்புலிகளுக்குள்ளே உயிர் புல்லரித்தது.

“நான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றேன்”, தேசியத்தலைவர் வழியனுப்பி வைத்தார்.

மேலே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில்.

வெகு உல்லாசத்துடன்.

உலங்கு வானூர்த்தி ஒன்று பலாலிப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அட்டகாசமாய் சிரித்துவிட்டு நவரட்ணம் சொன்னான். “இன்றைக்கு பறக்கிறார் , நாளைக்கு நித்திரை கொள்ளப் போகிறார்.”

நீண்ட பயணத்திற்குத் தயாராகி, சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டு நின்றவர்களிடம், “எல்லோரும் வெளிக்கிட்டு வீட்டீர்கள் ….. துரதேசத்துக்குப் போல இருக்கு……”

தளபதி சொர்ணம் கேட்க்க,

கண்களால் புன்னகைத்து ரங்கன் சொன்னான்.

“ஓமோம் ….. கிட்டண்ணையிட்ட…. திலீபண்ணை…. இப்படி நிறைய தெரிஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம்.”

பள்ளிப் பெருந்தளத்தின் முன்னணிக் காவலரன்களுக்கு மிகவும் அருகில் எங்கள் தளபதிகளிடம் விடைபெற்றுச் செல்லும் போது, நின்று திரும்பி தளபதி செல்வராசாவிடம் “அண்ணன்மார் கவனமாகப் போங்கோ ‘செல்; அடிப்பான்” என்று சொல்லிவிட்டுப் போனான் திரு.

கைகளை அசைத்து அசைத்துச் சென்ற கரும்புலிகள் இருளின் கருமையோடு கலந்து மறைந்தார்கள்.

தாக்குதலணி, தாக்குதல் மையத்தைச் சென்றடைவதே ஒரு பெரிய விடயமாகக் கருதப்பட்டது.

தாக்குதலைச் செய்வது இன்னொரு பெரிய காரியம்.

புறப்பட்டுப் போகும் போது அவர்களிடம் இருந்தது தளராத உறுதி, தணியாத தாகம், எல்லாவற்றையும் மேவி, அசையாத தன்னம்பிக்கை.

“அம்மா !

நான் உங்கள் பிள்ளைதான்; ஆனால், தமிழீழத் தாய்மார்கள் எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளை…..

….. அம்மா ! என்னுடைய ஆசை மக்கள் மகிழ்ட்சியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதுவே. அதனால்தான் உயிரைப் பெரிதாக நினையாமல் நான் போராடப் போனேன்.

அதனால், எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்; நீங்களும் சந்தோசமாக இருக்க வேண்டும்.

…. எமது மண் சுதந்திரமடைய வேண்டும். அது நடைபெற வேண்டுமானால் மக்கள் எல்லோருமே தாயகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகக் கிளர்ந்தெழ வேண்டும்.

இதுதான் என் கடைசி விருப்பம்”

ஒகஸ்ட் திங்கள் முதலாம் நாள்.

பகற்பொழுது பின்வாங்கிக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணக் குடாநாட்டை இருள் விழுங்கிக்கொள்ள, பலாலிப் பெருந்தளத்தை, மின்னாக்கி ஒளிவெள்ளத்தில் அமிழ்த்தியது!

மாலை 6.30 மணியைக் கடந்துவிட்டிருந்த நேரம்.

தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

வேவுப் புலி வீரர்கள் முன்னே; கரும்புலி வீரர்கள் பின்னே.

மாவிட்ட புரத்தையும், தெள்ளிப்பளையையும் இணைக்கும் பிரதான் வீதியும், தச்சன்காட்டிலிருந்து வந்து அதனைச் சந்திக்கும் குறுக்கு வீதியும் இராணுவச் சப்பாத்துக்களால் மிதிபட்டு பேச்சு மூச்சற்றுக் கிடந்தன.

வீதியோரமாக, தட்ச்சன்காட்டடியில் அணி நகர்ந்துகொண்டிருந்த சமயம் ,

அவதானமாக; மிக அவதானமாக அவர்கள் ஊர்ந்துகொண்டிருந்த போது.

தீடிரென தெல்லிப்பளை பக்கமகாகக் கேட்டது ‘ட்ரக்‘ வண்டிகளின் உறுமல்.

பயங்கர வேகத்தோடு அது நெருங்கிக்கொண்டிருந்தது.

“நேராக மாவிட்டபுரம் பக்கம்தான் போகப்போறான்” என நினைத்த வேளை, தட்ச்சன்காட்டுப் பக்கமாகவே திரும்பினான். வந்த வேகம் தனியாமலேயே.

நல்ல காலம்…

பளீரென அடித்த ஒழி வெள்ளத்தினுள் மூழ்கிப் போகாமல், பக்கத்திலிருந்த காணிக்குள், எல்லோரும் சம நேரத்தில் பாய்ந்து மறைந்து விட்டார்கள்.

அவர்களைக் கடந்து நேராகச் சென்று, சந்திக் காவலரனடியில் நின்றவன், நின்றானா …..? அந்த வேகத்திலேயே திரும்பி வந்தான்.

‘என்ன நசமடாப்பா …. ? ‘ என நினைத்த வேளை ‘ட்ரக்’ வண்டிகள் இரண்டும் அவர்களுக்கு நேர் முன்னே வந்து சடுதியாய் தரிக்க ….

சில்லுகள் கிளப்பிய புழுதியோடு, புற்றீகலாய்க் குதித்தனர் சிங்களப் படையினர்.

குழல் வாய்கள் தணலாக துப்பாக்கிகள் பேசத்துவங்கின. ‘பொம்மருக்கென்று‘ காவி வந்த நவரட்னத்தின் “லோ” ஒன்று, ‘ட்ரக்‘ வண்டியைக் குறிவைத்து முழக்கியது.

எல்லோரும் ஓடத் துவங்கினர். அது சண்டை போடக்கூடிய இடமல்ல; சண்டை பிடிப்பதற்குரிய நேரமுமல்ல.

அவர்கள் அங்கே போனது இதற்காக்கவுமில்லை.

எங்கே தவறு நடந்தது ……? எங்காவது சுத்துச் சென்றிக்காரன் கண்டானோ….? ‘டம்மி‘ என்று நினைத்த பொயின்ரிலிருந்து பார்த்துச் சொன்னானோ? எங்காவது வீடு உடைத்து சாமான் எடுக்க வந்த ஆமி கண்டு அறிவித்தானோ….?

என்னவாகத்தான் இருந்தாலும், அவர்கள் சென்ற சொக்கம் கெட்டுவிட்டது.

தட்சன்காட்டில் நிகழ்த்த அந்த துரதிர்ஷ்டம்தான், எங்களது தாக்குதல் திட்டத்தையே திசைமாற்றியது.

“திரு” இல்லை “ரங்கன்” இல்லை; “புலிக்குட்டிக்கு” என்ன நடந்ததென்று தெரியவில்லை; ராஜேஷ் ஒரு வழிகாட்டி. அவனையும் காணவில்லை.

எங்கள் தாக்குதலணி சேதாரப்பட்டுவிட்டது.

ஏனையோர் ஒரு பக்கமாக ஓடியதால் சிதறாமல் ஒன்றாயினர்.

தாம் வந்த காரியத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் எழுந்துவிட்டத்தை, எஞ்சியவர்கள் உணர்ந்தனர்; இந்தச் சண்டையோடு எதிரி உசாரடைந்துவிடுவான். கரும்புலி வீரர்கள், வேவுப்புலி வீரர்களை அவசரப்படுத்தினர்.

“உடனடியாக எங்களைத் தாக்குதல் முனைக்குக் கூட்டிச் செலுங்கள்.”

அடுத்த சில மணி நேரங்களின் பின் பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில்….. அவர்கள், வான்படைத் தளத்தின் முட்கம்பி வேலிக்கருகில் தயாராகிக்கொண்டிருந்தனர்.

பிரதான கட்டளையகத்தோடு கெனடி தொடர்பு எடுத்தான். நடந்து முடிந்த துயரத்தை அவன் அறிவித்தான்.

“7 பெருக்கென வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் எஞ்சியிருப்பது 4 பேர் மட்டுமே” என்பதை அவன் தெரியப்படுத்தினான். “எதிரி முழுமையாக உசார் அடைந்துவிட்டதால், இருக்கிரவர்களுடன் உடனடியாக தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினான். “தாமதிகின்ற ஒவ்வொரு நிமிடமும் இலக்குகள் தப்பிப் போக நாங்கள் வழங்குகின்ற சர்ந்தப்பங்கள்” என்பதை விளக்கினான். “தாக்குதலை நிகழ்த்தாமல் திரும்பி, தப்பித்து வெளியேறுவதும் சாத்தியப்படாது” என்பதையும் சொன்னான்.

அவனிடம் சற்று நேரம் அவகாசம் கேட்க பிரதான கட்டளையகம், பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கட்டளைகத்தோடு கலந்து பேசியது. கெனடி சொல்வதே சரியானது எனவும், அதைவிட வேறு வழியில்லை எனவும் பட்டது.

தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

முட்கம்பி வேலிகளை நறுக்கி அறுத்த வேவுப்புலி வீரர்கள் பாதை எடுத்துக் கொடுக்க, வான்தளத்தில் இலக்குகளைத் தேடி கரும்புலி வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.

நவரட்ணம் கடைசியாய் வரைந்த மடலிலிருந்து….

அம்மா! அப்பா!

இனத்துக்கு சுதந்திரமாக ஒரு நாடு இருந்தால்த்தான், எங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு இருக்கும். சுதந்திரமான ஒரு நாடு அமைக்கவே நான் போராட வந்தேன். இனித் தமிழீழத்தில் குண்டுகள் விழக்கூடாது; இதற்காகவே நான் இன்று கரும்புலியாய்ச் செல்கின்றேன்.

என் ஆசை தங்கச்சி!
உனது அடுத்த பரம்பரை, எம் எதிர்கால சந்ததி, மிக மகிழ்ட்சியோடு வாழவேண்டும் என்பதற்காகவே, நான் கனவிலும் நினையாத களம் நோக்கிப் புறப்படுகின்றேன்.

வெல்க தமிழீழம் !

அசொக்கிடமும், ரஞ்சனிடமும் விடைபெற்று அவர்கள் உள்ளே சென்றுவிட, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, இவர்கள் வெளியே திரும்பிக்கொண்டிருந்தனர்.

விடி சாம நேரம்.

படு இருள்.

மிகக் குறுகிய துரத்திர்க்குள் தான் எதனையும் மங்கலாய்த் தன்னும் பார்க்க முடியும்.

மாவிட்டபுரத்திற்க்கு பக்கத்தில் ஒரு குச்சொழுங்கையால் அவர்கள் திரும்பிகொண்டிருந்த போது,

ஒரே ஒரு மணித்துளி……

இருந்தாற் போல்….. அந்த இருளுக்குள் இருளாக …. அவர்களிற்கு முன்னாள்…..

அதென்ன……? நில்லாக் எதோ அசைவது போல உள்ளது!

ரஞ்சனின் கைகளைச் சுரண்டி மெதுவாக, “ஆமி நிக்கிறான் போ ……”, அசோக் சொல்லிமுடிக்கும் முன் தீப்பொறி கக்கிய சுடுகுழழிளிருந்து காற்றைக் கிழித்துச் சீரிய ரவைகள், அசோக்கின் தசைநார்களையும் கிழித்துச் சென்றன!

தலையோ…. கழுத்தோ….. நெஞ்சுப்பகுதியாகவும் இருக்கலாம ….. சரியாகத் தெரியவில்லை….. சன்னங்கள் பாய்ந்து சல்லடையாக்கிச் சென்றன.

“அம் ….” முழுமையாக வெளிவராத குரலுடன், குப்பற விழுந்தான் அந்த வீரன்.

அடுத்த நிமிடத்தில்….

கொஞ்சம் ரவைகளையும் ஒரு கைக்குண்டையும் பிரயோகித்து, அசோக்கையும் பறிகொடுத்துவிட்டு, பக்கத்துக் காணிக்குள் பாய்ந்து ரஞ்சன் ஓடிக்கொண்டிருந்தான்.

முன்பொரு நாள் ….

மயிலிட்டிப் பக்கமாக வேவுக்குச் சென்ற ஒரு இரவில், இராணுவம் முகாமிட்டிருக்கும் பாடசாலை ஒன்றை ரஞ்சனுக்குக் காட்டி, அசோக் மனக்குமுறலோடு சொன்னானாம்.

“இதுதான்ரா நான் படிச்ச பள்ளிக்கூடம்; இண்டைக்கு இதில சிங்களவன் வந்து குடியிருக்கிறான் மச்சான்…… வீட்டுக்கு ஒரு ஆளேண்டாலும் போராட வந்தா இந்த இடமேல்லாத்தையும் நாங்கள் திருப்பி எடுக்கலாம் தானேடா…..”

ரஞ்சனது நெஞ்சுக்குள் இந்த நினைவு வந்து அசைந்தது.

தொடர்ந்து நகருவது ஆபத்தாயும்முடிந்துவிடக்கூடும் என்பதால், அருகிலேயே ஒரு மரைஇவிடம் தேடி அவன் பதுங்கிக்கொண்டான்.

இப்போது அவன் தனித்த்துப்போனான்; கூடவந்த தோழர்கள் எல்லோரினதும் நினைவுகள், இதயமெல்லாம் நிறைந்து வாட்டின.

இனி எப்படியாவது அங்கிருந்து அவன் வெளியேற வேண்டும். வந்தவர்களில் எஞ்சியிருப்பது அவன் மட்டும்தான். நடந்தவற்றைப் போய் சொல்வதற்காவது, அந்த மரணக்குகைக்குளிருந்து அவன் பாதுகாப்பாகத் தப்பிக்க வேண்டும். எனவே அவன் இனி மிக அவதானமாக இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.

மெல்ல விடிந்தது.

அவன் தொடர்ந்து நகர்ந்து வெளியேற நினைத்த போது,

மின்னலென ஒரு யோசனை மூளைக்குள் பொறிதட்டியது.

‘தச்சன்காட்டில் யாரவாது அதிஷ்டவசமாகத் தப்பியிருக்கலாம். அவர்கள் பாதை தெரியாமல் மாறுபட்டு, வேவு வீரர்கள் திரும்பி வருவார்கள் என நம்பி உள்ளே நுழைந்த முதல் நாள் இரவு அவர்கள் தங்கிய தரிப்பிடத்தில் போய் நிற்கக்கூடும்.

நப்பாசைதான்; ஒரு மன உந்துதலோடு அவன் போனான்.

அவன் அங்கே செல்ல…… அங்கே …..!

என்ன அதிசயம்! அவன் நினைத்து வந்ததைப் போலவே அவர்கள்….

ஆனால் நால்வருமல்ல .

ரங்கனும் , புலிக்குட்டியும் மட்டும் நின்றார்கள்; ராஜேஷ் இல்லை, ‘திரு‘ வும் இல்லை.

அவனைக் கடந்தும் அவர்கள் மட்டற்ற மகிழ்ட்சி ‘போன உயிர் திரும்பி வந்தது போல’ என்பார்களே, அப்படி ஒரு மகிழ்ட்சி. “உடனே எங்களைக் கொண்டுபோய் கெனடி அண்ணனிட்ட விடு; இண்டைக்கு இரவுக்காவது அடிக்கலாம்” என்று அவர்கள் அவசரப் படுத்திய போது,

ரஞ்சன் நடந்தவற்றைச் சொன்னான்.

அந்தக் கரும்புலி வீரர்களால் அதனைத் தாங்கமுடியவில்லை. தாங்கள் பங்கு கொள்ளாமல் அந்தத் தாக்குதல் நடந்து முடிந்ததை அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தங்களது கைகளை மீறி எல்லாம் நடந்து முடிந்துவிட்டதை எண்ணி, அவர்கள் மனம் புழுங்கினார்கள்.

எல்லாம் முடிந்தது.

“இனி நாங்கள் எப்படியாவது, எந்தப் பிரசினையும் இல்லாமல் வெளியில் போய்விட வேண்டும்” என்றான் ரங்கன். போகத்தானே வேண்டும் , பிறகென்ன…..? ஆனால், ரங்கன் அதற்க்குக் காரணம் ஒன்றைச் சொன்னான்.

“இதற்குள் நிற்கும்போது எங்களுக்கும் ஏதாவது நடந்தால், இயக்கம் எங்களையும் கரும்புலிகள் என்றுதானே அறிவிக்கும். அப்போது விமானங்களை அழித்தவர்கள் என்ற பெயர்தானே வரும். ஆனால், அவர்களுடைய தியாகத்தில் நாங்கள் குளிர்காயக்கூடது.” இதுதான் அவனுடைய மனநிலை.

மிகவும் பாதுகாப்பானது என்று கருதிய பாதை ஒன்றினால் வெளியேற அவர்கள் முடிவு செய்தனர்.

ரஞ்சன் வழிகாட்டினான் ; கூட்டிவந்த வேவு வீரர்களில் இப்போது எஞ்சியிருப்பது அவன்மட்டும்தான்.

பகற்பொழுது , எனவே ஆகக்கூடிய அவதானத்துடன் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர்.

மெல்ல மெல்ல சூரியன் உச்சியை நோக்கி உயர்ந்துகொண்டிருந்தான்.

அப்போது அவர்கள் சீரவளைக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

சரியாக நினைவில் இல்லை, ஒரு பதினோரு மணியிருக்கும் .

ஒரு பற்றைக்குள்ளிருந்து “கதவு …. ?” என ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தால், ஒரு சிங்களப் படையால் குந்திக்கொண்டிருந்தான்; தங்களுடைய ஆட்கள் என்று நினைத்திருப்பான் போலும்.

என்ன பதிலி சொல்வது ….? அவர்கள் யோசிக்க, அவனுக்குள் சந்தேகம் எழுந்துவிட்டது.

சற்று உறுத்தலாக, “ஓயா கவுத …..?” கேட்டுக்கொண்டே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் எழ, ரஞ்சனின் கையில் இருந்த “ரி – 56” அவனுக்கு பதில் சொல்லியது.

“நாங்கள் புலிகள்.”

வெடித்தது சண்டை …

அவர்கள் ஓடத் துவங்கினர் ; மொய்த்துக்கொண்டு கலைத்தனர் சிங்களப் படையினர்.

கணிசமானதொரு துறை இடைவெளியில் அந்தக் கலைபாடு நடந்தது. பகைவனின் சன்னங்கள் அவர்களை முந்திக்கொண்டு சீறின.

திடிரென ரங்கன் கத்தினான், “டே! என்ற காலில் வெடி கொளுவிற்றுதடா ….”

ஓடிக்கொண்டே பார்த்தவர்கள், வலது கால் என்பது தெரிகிறது; எந்த இடத்தில் என்பது தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் வந்துவிடப் போவதுமில்லை.

ரங்கன் ஓட ஓட அவனது காலிலிருந்து ரத்தம் தெறித்துக்கொண்டிருந்தது.

இவர்களால் எதுவுமே செய்ய முடியாது. எதனையும் செய்ய வேண்டுமென அவனும் எதிர்பார்க்கவும் இல்லை.

“என்னால் எலாதடா….. என்னை சுட்டுப்போட்டு நீங்கள் ஒடுங்க்கோடா!” ரங்கன் கத்தினான்.

அவன் ஓட முடியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.

ரஞ்சன் சொன்னான். “குப்பியைக் கடித்துக் கொண்டு….. ‘சாஜ்ஜரை‘ இழு மச்சான் …..”

“சாஜ்ஜர்” உடலோடு இணைக்கும் வெடிகுண்டு. தாக்குதலுக்குப் புறப்படும்போது கரும்புலி வீரர்களுக்கு வழங்கப்பட்டது. சண்டைக்களத்தில் எதிரியிடம் பிடிபடக்கூடிய சர்ந்தபம் வருமானால், ஆகக் கடைசி வழியாக அவர்களைக் காக்கும்.

ரங்கன் குப்பியைக் கடித்துக்கொண்டே “சாஜ்ஜரின்” பாதுகாப்பு ஊசியை இழுத்து எறிந்தான்.

மெல்ல மெல்ல அவன் பின்தங்கி விழ, கலைத்துக்கொண்டு வந்த படையினர் அவனை நெருங்க…..

சாஜ்ஜரும் ரங்கனும் வெடித்துச் சிறரிய சத்தம், ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தார்கள்….. புகையும், அவனது உயிரும் தமிழீழத்தின் தென்றலோடு கலந்துகொண்டிருந்தன.

அந்த வெடி அதிர்ட்சியில் குழம்பித் தடுமாறி, பகைவன் திரும்பவும் கலைக்கத் துவங்க முன், அவர்கள் ஓடி மறைந்து விட்டார்கள்.

எங்கோ பதுங்கியிருந்து. எல்லாம் அடங்கிய இரவாகிய பின் மெல்ல மெல்ல நகர்ந்து வெளியில் வந்தனர் ரஞ்சனும் புலிக்குட்டியும்.

தச்சன்காட்டில் மாறுபட்டுக் காணாமற்போன ராஜேசும் இந்து நாட்களின் பின்னர், ஒருவழியாக வந்து சேர்ந்தான்.

ஆனால் அசோக் வரவில்லை; ரங்கன் வரவில்லை; திருவும் வரவில்லை.

நடு இரவு கடந்து போனது.

ஒகஸ்ட் 2 ஆம் நாளின் ஆரம்ப மணித்துளிகள் சிந்திக்கொண்டிருந்தன.

கெனடி பிரதான கட்டளையகத்துக்கு விபரத்தை அறிவித்தான்.

“இப்போ நாங்கள் நான்கு பேர்தான் நிற்கின்றோம். ஜெயம், நவரட்ணம், திலகன், மற்றும் நான். நாங்கள் தாமதிக்க முடியாது; மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது; அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் நால்வரும் உள்ளே இறங்குகின்றோம். எங்களால் முடிந்தளவிற்கு வெற்றி கரமாகச் செய்கின்றோம்.”

தச்சன்காட்டுச் சண்டையின் செய்தி எங்கும் பறந்தது.

அந்தப் பெருந்தளம், மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு நிமிரும் ஒரு சிங்கத்தைப் போலத் துடித்தெழுந்தது.

ஆபத்து தங்களது வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிட்ட அச்சம் சிப்பாய்களைக் கவ்விக்கொண்டது.

சுடுகருவிகள் தயாராகின.

எந்த நேரத்திலும், எந்த முனையையும் உள்ளே நுழைந்து புலிகள் தாக்குவார்கள் எனப் படிவீரர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

விமான ஓட்டிகள் வானுர்த்திகளில் ஏறித் தயார்நிலையில் இருக்குமாறு பணிக்க்க்கப்பட்டனர்.

வான்படைத் தளத்தைப் பாதுகாக்கும் காவலரண்களும் , வானுர்த்திகளுக்குரிய காவற்படையினரும் உசார்நிலையில் வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலைக்கு வந்து பரிபூரணமாக ஆயத்தமாகிய பகைவன், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகப் போர்க்கோலம் பூண்டு நின்ற வேளை…

யுத்த சன்னதர்களாகப் புறப்பட்டுச் சென்ற எங்கள் கரும்புலி வீரர்கள்….. சிங்களத்தின் சிலிர்ந்து நின்ற பிடரி மயிர்களினூடு ஊர்ந்து, அதன் முகத்தை நெருங்கினர்.

பிரதான கட்டளையகத்திலிருந்து “வோக்கி”யில் கெனடியின் குரல் ஒலித்தது. கெனடி நிலைமையை விளக்கினான்.

“நாங்கள் நல்லா கிட்ட நெருங்கிற்றம் ….”

“ஏதாவது தெரிகின்ற மாதிரி நிற்கிறதா?”

“நாங்கள் தேடிவந்ததில் ஒன்றுதான் நிற்குது. பக்கத்தின் ஒருத்தன் நிற்கின்றான்.”

“வேறு ஒன்றும் இல்லையா …..?”

“அருகில் சின்னன் ஒன்று ஓடித்திரியுது.”

“நீங்கள் தேடிப்போன மற்றதுகள் …..?”

“இங்கு இருந்து பார்க்க எதுவும் தெரியேல்ல, துரத்தில் நிற்கக்கூடும். இறங்க்கினதற்குப் பிறகுதான் தேடக்கூடியதாக இருக்கும்.”

“இப்ப நீங்கள் இறங்கக்கூடிய மாதிரி நிற்க்கிறீங்களா…….?”

“ஓமோம் ….. குண்டு எரியக்கூடிய துரத்திற்கு வந்திட்டம். நீங்கள் சொன்னால் நாங்கள் அடிச்சுக் கொண்டிறங்கிறம்.”

“அபடியெண்டால் நீங்கள் அப்படியே செய்யுங்கோ.”

கட்டளையகம் அனுமதி வழங்கியது.

அதன் பிறகு என்ன நடந்திருக்கும் ……?

கெனடி உத்தரவிட்டிருப்பான்.

“தாக்குதலை ஆரம்பியுங்கள்”

நவரட்னத்தின் கையிலிருந்த “லோ” முழங்க “பெல் 212” இல் தீப்பற்றி எரியும்போது, கெனடி “டொங்கா”னால் அடிக்க திலகன் அதன் மீது கைக்குண்டை வீசியிருப்பான்.

அதே சம நேரத்தில்….. ஜெயத்தின் “லோ” பவள் கவச வண்டியைக் குறிவைத்து முழங்கியிருக்கும்.

பலாலித் தளத்தின் மையமுகாம் அதிர்ந்திருக்கும்.

தங்கள் அனைத்துக் கவசங்களையும் உடைத்து நுழைந்து, பாதுகாக்கப்பட்ட அதியுயர் கேந்திரத்தையே புலிகள் தாக்கிவிட்டத்தை எதிரி கண்முன்னால் கண்டு திகைத்திருப்பான்.

சன்னங்களைச் சரமாரியாய் வீசிரும் துப்பாக்கிகளோடு கூச்சலிட்டபடி பகைவன் குவிந்து வர….. கெனடியின் “டொங்கான்” எறிகணைகளைச் செலுத்தியிருக்கும்.

திலகனின் “ரி – 56” ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்க, தங்களது அடுத்த இலக்கைத் தேடி அவர்கள் ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள்.

“கெனடி…… கெனடி….. நிலைமை என்ன மாதிரிஎன்று எங்களுக்கு சொல்லுங்கோ ……”

“ஒரு ஹெலியும் ஒரு பவளும் அடிச்சிருக்கிறம். ரெண்டும் பத்தி எரிக்ஞ்சுகொண்டிருக்குது…. கிட்டப் போக ஏலாம சுத்தி நிண்டு கத்திக் கொண்டிருக்குராங்கள். ”

“மற்றது என்ன மாதிரி …..?”

“தொடர்ந்து அடித்துக்கொண்டு உள்ளே இறங்கிக்கொண்டிருக்கிறம்…..
பொம்மருகளைத் தேடுறம்….”

ஆனால் 500 மீற்றருக்கு அகன்று 2600 மீற்றருக்கு நீண்டிருந்த விசாலமான ஒரு பாதை அது. மிகவும் துரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ”சியா மாசெட்டி” குண்டு வீச்சு விமானங்களில் தயாராய் இருந்த ஓட்டிகள் அவர்ரியா மேலேடுத்துவிட்டனர்.

கெனடியின் தொடர்பு நீண்ட நேரத்தின் பின் கிடைத்தது.

“கெனடி…. நிலைமை எப்படி எண்டு சொல்லுங்கோ …..”

“ஒரு ‘ஹெலி‘யும் ஒரு ‘பவளும்‘ அடிச்சிருக்கிறம்…. முழுசா எரிஞ்சு கொண்டிருக்கு ….. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

“கெனடி ….. நீங்கள் அவசரப்பட வேண்டாம். …. மற்ற ஆக்கள் என்ன மாதிரி?”

“நானும் திலகனும் நிக்கிறம் …..”

“கெனடி….. நீங்கள் அவசரப்படாதேங்கோ ….. தொடர்ந்து எதுவும் செய்யக்கூடிய மாதிரி இல்லையா ……?”

“அண்ணை….. ….. எனக்கு ரெண்டு காலும் இல்லையண்ணா ……”

“……………………………………………”
“…………………………………….. …..”
“…………………………………………”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ; புலிகளின் தாகம் ……. தமிழீழ ……”

“கெனடி …….. கெனடி ……”
“கெனடி …….. கெனடி ……”
“திலகன் …….. திலகன் ……”
“கெனடி …….. கெனடி ……”
ஒரு முதியவர் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு….…

“எண்டா தம்பி செய்கிறது…… வயதும் போகுது….” என்று கவலைப்பட்டபோது.

அருகில், “ஈழநாதம்” நாளேட்டில் அவர்களின் படங்களைப் பார்த்து நின்ற அவரின் துணைவியார் ஏக்கத்தோடு சொன்னார்.

“நீங்கள் வயது போகுதெண்டு கவலைப்படுறியள்…. எத்தின பிள்ளைகளுக்கு வயது போறதேயில்லை …….!”

வெளியீடு : உயிராயுதம் பாகம் 01


August 1st

August 2nd

August 3rd

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…!

24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை….!

இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை…..!

இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் 14 பெயர் குறிப்பிடமுடியாத மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட வாழ்வில் மாபெரும் வெற்றி மகுடம் சூட்டிய நாள். ஆம், கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்!

1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம்.

கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள்.

ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள்.

தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும், யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது.

இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை, இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள்.

பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள்.

இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது.

வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ்.

இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான்.

துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள்.

கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா?

சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா?

ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி. நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன்.

அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா?

ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள்.

எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது.

உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம்.

கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அனைவரையும் நெஞ்சிருத்தி வணங்குகின்றோம்.

பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்ககளாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

katunayaka black tigers



சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் ! தீயும் கூடக் குளிர்கிறது.!

 

நெஞ்சினிலே பஞ்சுவைத்து
எண்ணையிட்ட நெருப்பு
நில்லெனவே சொல்வதற்கு
யாருமில்லை எமக்கு
சாகவென்று தேதிசொல்லிப்
போகும்புயல் கறுப்பு
நாளைபகை மீதினிலே
கேட்குமெங்கள் சிரிப்பு

புதிய திசையொன்றின் புலர்வு தினம்.
ஆதிக்கக் கதிரைகள்
அச்சத்தில் உறையும் நாள்.

நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த
சொல்லியடிக்கும் திருநாள்.
“கரும்புலிகள்”
மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு
தாகத்தில் திரியும் கோபங்கள்.

தேகத்தில் தீமூட்டும் போதும்
சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள்.
ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை
எந்த ஆய்வாளர்களாலும்
அளவெடுக்க முடிவதில்லை.
அழுதழுது வரும் வார்த்தைகளாற் கூட
இவர்களை எழுதிவிட முடியாது.

கரும்புலிகளைப் பாடும் போதுதான்
கவிஞர்கள் தோற்றுப்போகின்றனர்.
வெடித்த புயல்களுக்கு எழுதிய கவிதைகளை
இருக்கும் கரும்புலிகள் படிக்கும்போதுதான்
எழுத்தின் இயலாமை தெரியவருகிறது.

தூரிகை எடுத்து ஓவியம் தீட்டலாம்
வர்ணங்கள் தோற்றும்போகும் இறுதியில்.

முலைகொடுத்த தாயர்கள் கூட
மலைகளை நிமிர்ந்து பார்க்கலாமே தவிர
அவர் உள்ளக்கிடக்கையை
உணர்ந்துகொள்ள முடியாது.

சாவொன்றின் முன்னேதான்
அதிகமானோர் சகலதையும் இழக்கின்றனர்.
விஞ்ஞானத்தால் சாவுக்குத் தேதிவைக்க
முடியுமெனில்
அச்சத்தில் அந்தரித்துப் போகும் உலகு.
இந்தப்புயல்கள் மட்டும் தேதிவைத்த பின்னர்தான்
சந்தோசத்தை தலையில் வைத்துக்
கூத்தாடுகின்றனர்.
நகம் வெட்டும்போது தசை கிள்ளுப்பட்டாலே
வேர்த்து விறுவிறுத்துப்போகும் இனத்தில்

இந்த உற்பவங்கள் எப்படி சாத்தியமானது?

விதி வழியேதான்
சாவுவருமென நம்பும் சமூகத்தில்
இந்தப் புதுவிதிகள் பிறப்பெடுத்தது எப்படி?

வீதியிற் காணும்போது அமுக்கமாகவும்
வீட்டுக்கு வரும்போதில் வெளிச்சமாகவும்
குதித்துக்கொள்கின்றன இந்தக்
குளிரோடைகள்.

நாளை இவர்களா வெடிக்கப்போகின்றனர்?

நம்ப முடியாமல் இருக்கும் சிலவேளைகளில்.
சத்திரசிகிச்சை என்றாலே
நாங்கள் பாதி செத்துவிடுகிறோம்.
சாகப்போகும் நேரத்திலும்
இவர்களால் எப்படித் தலைவார முடிகிறது?

எல்லா உயிர்களையும் இருந்து பார்க்கும்
இயமன்
இவர்களின் உயிரைமட்டும் எழுந்து
பார்ப்பானாம்.

கரும்புலிகளின் பிறப்பின் சூத்திரம்
உயர்மலையொன்றின் உச்சியிலிருக்கிறது.
இவர்களின் நதிமூலம்
தலைவனின் நம்பிக்கைப் புள்ளியில்
ஊற்றெடுக்கிறது.

வழி தவறாத பயணியென நம்பியே
கரும்புலிகள் கந்தக வெடியாகின்றனர்.
இவர்கள் வரலாறு திருப்பும் பொழுதுகளில்
பூப்பூத்துக்கொள்கின்றன வாசல் மரங்கள்.

மிதித்துச்சென்ற முட்செடிகள் கூட
போய் வருவோருக்குப் புன்னகை
எறிகின்றன.
பயணம் சொல்லிப்போன காற்தடங்களை
பவுத்திரப்படுத்திக் கொள்கிறது காற்று.
தரையில்
கடலிலும்
மறைவிலும் அதிரும்வெடி ஒவ்வொன்றும்
காற்றில் கலந்து கரைவதில்லை
உளிவரும் திசையில் வரையப்படுகின்றன.

அறிந்தழும் தாயரின் குரல்கூட
அடித்தலறி ஒப்பாரி வைப்பதில்லை
மௌனமாக மாரடித்துக்கொள்கிறது.
கரும்புலிகள் எங்கள் காவற்தெய்வமென
நாளை வரும் இளைய உருத்தாளர்
பூட்டனுக்கும், பெத்தாச்சிக்கும்
கோயிலெழுப்புவர்.
வெடியம்மன் கோயிலென விளக்கேற்றுவர்.
பேச்சியம்மனும்

பிடாரியம்மனும் இன்றிருப்பதுபோல
வெடியம்மன் நாளை விளங்குவாள்.
வாழ்வின் அர்த்தம் புரியாமல்
நாங்கள் வெறும்வெளியில் வழக்காடுகிறோம்.
எவரையும் நிகழ்காலம் தீர்மானிப்பதில்லை
இல்லாத காலத்தில் எதிர்காலமே
தீர்மானிக்கிறது.

வாழும்போதில் வாழ்வதுமட்டும் வாழ்வல்ல
சாவின் பின்னர் வாழ்வதுதான் வாழ்வாகிறது.
முன்னோர்கள் இதைத்தான்
சொர்க்கமெனச் சொன்னார்கள்.

கரும்புலிகள் வானத்திலில்லை
பூமியிலேயே வாழ்வார்கள்.
சாவுடன் முடியும் சரித்திரமல்ல இவர்கள்
தீயுடன் எரியும் ஜீவன்களல்ல இவர்கள்.
வரலாற்றில் வாழ்தலென்பது
செய்யும் தியாகத்தால் வருவது.

சந்தனமாய்க் கரையும் வாழ்விலிருந்து
விரிவது.
கரும்புலிகளின் வாழ்வு கோடிதவம்
பூர்வ புண்ணிய வரம்.

ஆணென்றும் பெண்ணென்றும் பேதமின்றி
இந்த அனற்குஞ்சுகளின் பிறப்புக்கு
உலகம் உருகாலம் தலைசாய்க்கும்
ஈழத்தமிழருக்கான விடுதலையை
எவர் தரமறுத்தாலும்
அவரைக் கரும்புலிகளின் கறுப்பு அச்சமூட்டும்.

கறுப்பே அழகு
கறுப்பே வலிமை
கறுப்பே வர்ணங்களின் கவிதை
கறுப்புத்தான் உலகின் ஆதிநிறம்.
அதனாற்தான் ஆதிமனிதனான தமிழனும்
கறுப்பாய் விளங்குகிறான்.
கரும்புலிகள் காலமெழுதிகள்
எழுதும் காலத்தின் எல்லைக்கற்கள்.

எல்லையைக் கடந்து எதிரிகள் வராமல்
இந்த இடியேறிகள் காவலிருக்கின்றனர்.
கரும்புலி போகும் திசையினையெந்த
மனிதரும் தெரிவதில்லை – அந்தக்
கடவுளென்றாலும் இவர்களின் வேரை
முழுவதும் அறிவதில்லை
அழகிய கனவும் மெழுகிய அழகும்
இவரிடம் பூப்பதில்லை – இந்த
அதிசய மனிதர் உலவிடும் பூமி
பகையிடம் தோற்பதில்லை.

கவியாக்கம் : வியாசன்

-விடுதலை புலிகள் இதழ் 136-

காந்தரூபன் அறிவுச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் !

1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறிய போது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.

இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.

காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.

அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.

ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.

“அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது.

அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம்.

எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார்.

யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தர்ரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் ….

காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.

கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.

நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான்.
“சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்…..

“சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான்.
அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.

தமிழீழ விடுதலைக்காய் தம்மை வெடியாக்கி, வரலாறாகிய கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு !

இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 ஆண்டு எனது பாடசாலையில் உயர்தரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை. பற்றாக்குறை என்று சொல்வதை விட ஆசிரியர்கள் இல்லை. இதனால் நானும் என் சக மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்தையே நம்பியிருந்த காலம். சுபாஸ் ஜோன் கல்வி நிலையத்தில் எனது வகுப்பில் படித்தான். நான் உயரதரத்தில் எடுத்த பாடங்களையே அவனும் தெரிவு செய்திருந்தான். அதனால் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களில் எப்போதும் சந்திக்கும் சந்தரப்பம் கிடைக்கும்.

வகுப்புக்களில் இருக்கும் மாணவர்களில் சிலர் எப்போது வருவார்கள் எப்போது செல்வார்கள் என்று தெரியாது. ஒரு சிலர் வகுப்புக்களுக்கு கிழமைக்கணக்கில் வராமல் விட்டிருந்தால் கூட ஏனைய மாணவர்களால் அவர் வகுப்புக்கு வந்தாரா இல்லையா என்று தெரிவதில்லை. ஆனால் ஒரு நாள் ஒரு வகுப்பிற்கு சுபாஸ் வராமல் விட்டாலும் அவனை எல்லோரும் தேடுவார்கள். ஏனென்றால் வகுப்புக்களில் அவன் செய்யும் குறும்புகள் அவ்வளவு அதிகம்.

அவனை சக மாணவர்கள் சுபாஸ் என்று கூப்பிடுவதை விட கட்டை வாத்தி என்று தான் அழைப்போம். காரணம் அவனது உருவம். எங்களது வகுப்பில் மிகவும் குள்ளமாகவும் மெல்லிய உடலமைப்பையும் கொண்ட உருவம் அவன். அவனோடு தனியார் கல்வி நிலையத்தில் பழகிய பழக்கம் அவன் என்னை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்செல்வான். அவன் வீட்டில் செல்லப்பிள்ளை. அவனுக்கு மூத்த சகோதரர்கள் அனைவருமே பெண்கள். இவன் தான் கடைக்குட்டி. அக்காமார்களின் செல்லத்திற்கு அளவில்லை. வீட்டில் எவ்வாறு குறும்புத்தனமாக இருப்பானோ அதே போலத்தான் வகுப்பிலும் குறும்புக்காறன்.

எல்லோரும் தேசத்திற்கான தனது கடமையை ஆற்றவேண்டிய காலம் சபாசும் விடுதலைப்போராளியானான். சுபாஸ் அன்புமாறன் என்ற இயக்கப்பெயரோடு தேசத்திற்கான தனது பணியை ஆற்றத்தொடங்கினான். அவன் இயக்கத்தில் இணைந்து நீண்ட நாட்கள் நான் அவனை சந்திக்கவில்லை. சமாதானச்செயலகத்தில் ஒரு சந்திப்பை முடித்துக்கொண்டு கிளிநொச்சி காக்கா கடைச்சந்தியை உந்துருளியில் கடந்து கொண்டிருக்கிறேன். காக்கா கடைச்சந்தியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாதாரண உடையில் நிற்கும் அந்த உருவம் கட்டை வாத்தி மாதிரிக்கிடக்குதே என்று உந்துருளியை திருப்பினேன். உந்துருளியை திருப்பி அவனருகில் சென்றும் என்னைக்கண்டு விட்டான். ஓடிவந்து கட்டி அணைத்து எப்பிடி மச்சான் இருக்கிறாய் என்று நலம் வசாரித்தான். கூடவே நானும் நலம் விசாரிக்க மச்சான் எங்கட ரீவில நீ செய்தி வாசிக்கேக்க நான் எங்கட பெடியலுக்கு உன்னைப்பற்றி சொல்லுறநான். பெருமையா இருக்கு மச்சான் என்றவாறு பள்ளி த்தோழர்கள் பற்றிப்பேசி நீண்ட நேரம் உரையாடி விட்டு அவனிடமிருந்து விடை பெற்றேன். அதன் பின்னர் அடிக்கடி அவனை கிளிநொச்சியில் சந்தித்து பேசுவதுண்டு. இருவருக்கும் நேரமிருந்தால் கதை நீழும். சிரிது காலத்த்தில் அவனை சந்திக்க முடியவில்லை. வேறு எங்கோ சென்றுவிட்டான். பல தடவை நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் இடங்களை தேடியிருக்கிறேன் அவனை சந்திக்கமுடியவில்லை.

பின்னர் 2008 ஒரு படப்பிடிப்பின் போது…. முல்லை கடற்பரப்பில் கடற்கரும்புலிகளை அவர்களது நவீன கடற்கலங்களோடு ஔிப்பதிவு செய்துகொண்டிருக்கிறேன். என்னை அன்புமாறன் ஏற்கனவே அவதாணித்து விட்டான் ஆனால் நான் அவனை அவதாணிக்கவில்லை. ஔிப்பதிவு நிறைவடைந்தது. பெண் போராளிகள் சிலர் என்னிடம் வந்து அண்ணா நீங்கள் எடுத்த வீடியோக்களை ஒருக்கால் காட்டுங்கோ எங்களை எப்படி எடுத்திருக்கிறீங்கள் என்று பார்ப்போம் என்று என்னிடம் இருந்த ஔிப்பதிவு கருவியை கேட்கவே இப்போது நான் என்ன செய்ய என்று தயங்க அருகில் இருந்த இன்னொரு பெண்போராளி சொன்னாள் அண்ணா நீங்கள் இந்த வீடியோவ போடேக்க நாங்கள் உங்களோட இருக்க மாட்டம். நீண்ட தூரம் போயிருப்பம் அது தான் கேக்கிறோம் என்றால். இதற்குப்பின்னரும் அந்த ஔிப்பதிவுக்கருவி என்னிடம் இருக்க வேண்டுமா என்று எண்ணி ஔிப்பதிவுக்கருவியை அவர்களிடமே கொடுத்துவிட்டேன். அப்போது யாரோ ஒருவர் எனது பின்பக்கமாக வந்து இறுக கட்டிப்பிடித்து விட்டார்கள் யார் என்று தெரியவில்லை. ஒருவாறு இறுக கட்டிப்பிடித்த கைகளை இலேசாக்கி அந்த முகத்தைப்பார்த்தேன். என்னால் நம்ப முடியவில்லை. எதிரே அன்புமாறன். கருத்த வரிச்சீருடையுடன் உப்பு நீர் தோய்ந்தபடி சிரித்துக்கொண்டு நிற்கிறான். அவன் பேசுகிறான் என்னால் பேச முடியவில்லை. வார்த்தை வரவில்லை. வாயடைத்துப்போனேன்.

மச்சான் என்ன யோசிக்கிறாய் வா… அங்கால போவம் என்று என் கையை பற்றியபடி கடற்கரையில் நடக்கிறோம். நீண்ட தூரம் நடந்த பின்னர் என்னடா கதைக்கிறாய் இல்ல… என்ன என்றான். இல்ல மச்சான் உன்னை நான் இங்க எதிர்பார்க்கல்ல அது தான். அது ஒன்டும் இல்லடா சும்மா பயிற்சிக்கு கூப்பிட்டாங்கள் என்று என்னை சமாளித்தான். ஆனால் அந்த இடத்திற்கு செல்வதானால் எப்படி செல்ல முடியும் என்று எனக்குத் தெரியும். அது அவனுக்கும் தெரியும்.நீண்ட நேர அமைதியின் பின்னர் உரையாடல் தொடங்குகிறது.

ஏன் நீ இங்கு வந்தாய் என்று என்னால் கேட்க முடியவில்லை. அதனால் அந்த கேள்வியை அவனிடம் அந்த கேள்வியை தவிர்த்து விட்டாலும் என் மனதுக்குள் குடைந்து கொண்டிருக்க கதை தொடர்கிறது. நீண்ட நேர உரையாடலின் பின்னர் சொன்னான் மச்சான் கனநேரம் கதைசிட்டம் உன்னை உன்ற ஆட்கள் தேடுவாங்கள் வா போவம். என்று விட்டு என்னுடைய கையைப்பிடித்து அவனது தலையில் வைத்து மச்சான் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்யனும் என்றான். என்ன சொல் என்றேன்.என்னை இங்கு கண்டதை யாருக்கும் சொல்க்கூடாது.. எங்கட வீட்ட சொல்லாதை என்றான். அவன் கேட்டதைப்போலவே சத்தியம் செய்து விட்டு இருவரும் விடை பெற்றோம்.

ஒரு வாரம் கடந்திருக்கும். ஒரு நாள் காலை. நான் குளிக்கும் போதும் வானொலிப்பெட்டியை கிணற்றடியில் வைத்து விட்டு குளிப்பது வழக்கம். புலிகளின் குரல் செய்தியை எப்போதும் தவற விடுவதில்லை. அன்றும் காலைச்செய்தி ஒலிக்கிறது. முதலாவது தலைப்புச்செயதி முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோரா கடற்கலம் கடற்கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிப்பு என்ற வெற்றிச்செய்தி ஒலிக்கிறது. அமைதியாக வானொலிப்பெட்டிக்கு அருகில் செல்கிறேன்.
இந்த வெற்றிகர தாக்குதளில் லெப்ரின் கேணல் அன்பு மாறன் வீரகாவியமானான் என்ற செய்தி ஒலிக்கிறது. ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். போராளிகள் எல்லோரும் வீரச்சாவடைவது வழமை தான் ஆனாலும் உற்ற நண்பன் வீரச்சாவு என்றால் யாரால் தான் தாங்க முடியும். அன்பு மாறனுக்கு அன்று வாக்கு கொடுத்த விடயத்தை இன்று தான் மீறியிருக்கிறேன். மன்னித்துவிடு சுபாஸ்…

Siva Karan

22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

லெப். கேணல் அன்புமாறன்
சுபாஸ்கரன் கனகலிங்கம்
முல்லைத்தீவு

மேஜர் நிரஞ்சனி
அன்பரசி நன்னித்தம்பி
கிளிநொச்சி

மேஜர் கனிநிலா
குணரூபா குணராசா
கிளிநொச்சி

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

Bt dora attack 2008Bt Lt Col anpumaran, prabakaranBt Lt Col anpumaranBt Maj Niranjini with prabakaranBt Maj NiranjiniBt Maj Kaninila with prabakaranBt Maj Kaninila

தேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்துங்கள் என நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் வேண்டுகோள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam

கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் !

தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், வாடி வீட்டை நனைத்துக் கொண்டிருக்கும் நிலவொளியும், அவ்வொளியில் மினுமினுக்கும் சமுத்திரமுமென தமிழீழம் தன் அடையாளங்களை சுமந்து நிமிர்ந்திருந்த காலம் மட்டுமல்லாது, தமிழீழம் என்ற இலக்குக்காக தம்மை ஒறுத்து தம் நாட்டின், தம் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக கரங்களில் சுடுகலன்களை சுமந்து நின்ற விடுதலைப் போராளிகளையும், தமிழ் இனத்தையே கருவறுத்து விட துடித்த சிங்கள வெறியர்களையும் அவர்களோடிணைந்த துரோகிகளையும் சுமந்து நின்ற காலம் அது.

தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு வட/ தென் தமிழீழம் எங்கும் புலிகள் வரியுடுத்தி களத்திடை மேவித் திரிந்த அக்காலத்தில், படையக ரீதியாக பல வளர்ச்சியைக் கண்டிருந்த விடுதலைப்புலிகளின் மரபுவழி தமிழீழ இராணுவம் தன் படையக வளங்கல்களை நிலைநிறுத்தவும், மேம்படுத்தவும் என விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தி பயணித்தனர். ஒற்றைப் படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து விநியோகப் பணிகளை செய்த விடுதலைப்புலிகளின் கடற்புறா அணி கடற்புலிகளாக பரினாம வளர்ச்சி பெற்று பல நூறு சண்டைப் படகுகள், பல நூறு விநியோகப் படகுகள்,உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைத் தொடர்பாடல்கள் என அதி உச்ச வளர்ச்சியை அடைந்திருந்த காலம்.

அக்காலத்தில் தான் வட/ தென் தமிழீழத்தின் ஆயுத வளங்கல்களை பலப்படுத்தவும் தமிழீழ படைக்கட்டுமானத்தை நிலைநிறுத்தவும் வட தமிழீழத்தில் இருந்து தென் தமிழீழத்துக்கும் அங்கிருந்து வடதமிழீழத்துக்கும் படையக / ஆளணிகளை நகர்த்தும் பணியை பல போராளிகள் செய்து வந்தார்கள். அதில் முக்கியமானவன் லெப். கேணல் புரட்சிநிலவன். புரட்சிநிலவனை அறியாத கடற்புலிப் போராளிகள் குறைவு. அத்தகைய வீரமும் விவேகமும் கொண்ட இளைய போராளி. இயக்க வாழ்வு என்பது புரட்சிக்கு வெறும் 5 வருடங்கள் தான். ஆனாலும் அதி உச்சப் பணிகள் மூலமாக உயர்ந்து நின்ற போராளி. அதிகமான காலங்களில் விநியோக நடவடிக்கைகளையே தன் பணியாக கொண்டவன். அதுவும் பல இன்னல்கள் நிறைந்த பயணங்களை மிக சாதாரணமாக செய்து முடிப்பவன்.

நினைவாற்றல் நிறைந்த ஒரு போராளி, புரட்சி என்றால் “ஆள்கூறு “ என்று போராளிகள் கிண்டல் செய்வார்கள். உண்மையும் அதுவே புரட்சிக்கு தமிழீழத்தின் பெரும்பான்மையான ஆள்கூறுகள் அனைத்தும் மனதில் நிறைந்து கிடக்கும். குறித்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடத்தில் ஆள்கூறுகளை பார்த்து உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே பூமிநிலை காண் தொகுதி (Global Positioning System) கருவியில் அந்த ஆள்கூற்றை உட்செலுத்தி தயாராகிவிடுவான் புரட்சி. அவ்வாறு நினைவாற்றல் மிகுந்தவன் இப் போராளி.

கடல் அலைகளின் தாலாட்டில் நிதம் நிதம் மகிழ்ந்திருக்கும் வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, தாளையடியை சொந்த இடமாகவும். மருதநிலமும், பாலைவனமும் நிமிர்ந்து நிற்கும் விசுவமடுவை வதிவிட இடமாக கொண்டிருந்த வைரமுத்து வசீகரன் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் விடுதலையின் தேவையை உணர்ந்து பாசறை புகுந்து புரட்சிநிலவனாகினான். அடிப்படைப் பயிற்சியை முடித்து படையணித் தளபதிகளினால் போராளிகள் தம் படையணிகளுக்கு உள்ளிணைக்கப்பட்ட போது கடற்புலிகளின் அணிக்கு தெரிவாகி உள்வாங்கப்படுகிறான். அங்கே சிறப்பு கடற்பயிற்சிகளை முடித்த புரட்சி நிலவன் முழுநிலை கடற்புலியாக உருவாகினான்.

படகு இயந்திரவியலாளனாக தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் நடுக் கடலில் வைத்தே இயந்திரத்தை கழட்டி மாற்றி படகை இயக்கும் வல்லமை கொண்டவன். ஒரு தடவை சர்வதேச கடல் விநியோக போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட பொருட்களுடன் சாலை முகாம் நோக்கி வந்து கொண்டிருந்த படகின் பிரதான இயந்திரவியலாளர்களான சென்றது புரட்சி நிலவனும் நக்கீரன் என்ற போராளியும். கரை நோக்கி வந்து கொண்டிருந்த அப்படகு இயந்திரம் இயங்காததால் இடையில் நின்றுவிட, பழுதடைந்துவிட்ட அவ்வியந்திரத்தின் பிரதான தொகுதியை நடுக்கடலில் வைத்தே மாற்றி சர்வதேச விநியோக போராளிகளிடம் இருந்து கிடைத்த புதிய இயந்திரத் தொகுதியை நிறுவி அப்படகை இயக்கிக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.

அவ்வாறு வலிமை மிக்க டீசல் இயந்திரவியலாளனாகவும் போராளியாகவும் மிளிர்ந்த புரட்சிநிலவன் கடற்புலிகள் அணியில் இருந்து கடற்கரும்புலிகள் அணிக்கு செல்வதற்காக தேசியத்தலமையிடம் அனுமதி கோருகிறான்.

நெஞ்சுக்கும் தோள்மூட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவன் பெற்றிருந்த விழுப்புண் அவனின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமோ என எண்ணத்தை உருவாக்கினாலும் அவனின் துணிவும், தன்நம்பிக்கையும் விவேகமான செயற்பாடுகளும் புரட்சிநிலவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது.

கடற்புலிகளின் பெரும் பணியாக இருந்த ஒன்று கடல் விநியோகம். அவ்விநியோகத்தினூடாக படையகப் பொருட்களை தமிழீழத்துக்கு கொண்டு வருவது முக்கிய பணியாக விரிந்து கிடந்தது. அப்பணியை செய்த போராளிகளுள் புரட்சி நிலவனும் முக்கியம் பெறுகிறார். அப்பணியில் முக்கியம் பெறுவது தென்தமிழீழத்துக்காக படையக பொருட்கள் விநியோகம். அவ்விநியோகத்தை தன் உச்ச வீரத்தால் செய்து கொண்டிருந்த புரட்சிநிலவன் பல முக்கிய ஆயுதங்களை தென் தமிழீழத்துக்குக் கொண்டு போய் சேர்த்தான்.

அவ்விநியோகத்தின் பெறுபேற்றை தென்தமிழீழத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைகள் நிச்சயம் உணர்ந்திருக்கும். அதை இரண்டு 152 MM ஆட்லறி எறிகணையின் மூலம் விடுதலைப்புலிகளின் படையணிகள் உணர்த்திக் காட்டின. திருகோணமலை துறைமுகம் தொடக்கம் அங்கே இருந்த எதிரிகளின் பாசறைகள் பல அத் தாக்குதல்களால் திணறிக் கிடந்தன. ஆட்லறி எறிகணையால் எம் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து கொடுங்கோலாட்சி நடாத்திய சிங்கள தேசம் விடுதலைப்புலிகளின் ஆட்லறி எறிகணையின் துல்லிய தாக்குதல்களால் திணறிப் போய்க் கிடந்தது.

அதற்கு மூல காரணமாகியது புரட்சியிலவன் என்றால் அதில் எந்த பொய்மையும் இல்லை. தனது விவேகத்தாலும், புத்திசாதுரியத்தாலும், ஒரு போராளியும் இரண்டு பொதுமகன்களையும் தனது ஆளணியாக கொண்டு தென் தமிழீழத்தின் கிட்டுபீரங்கிப் படையணியை வானம் தொட்டுவிடச் செய்வதற்காக அவ்விரண்டு ஆட்லறி எறிகணை செலுத்திகளையும் படகினூடாக கொண்டு வந்து சேர்த்தது புரட்சி நிலவனின் போரியல் குணத்தின் முக்கிய உச்சமாகிறது. அதுவே தென்தமிழீழத்தில் பல வெற்றிகளுக்கு காரணமாகிறது.

அவற்றை அங்கே கையளித்து சற்று ஓய்வும் இன்றி தென் தமிழீழத்தில் இருந்து வட தமிழீழம் நோக்கி வந்து கொண்டிருந்த புரட்சிநிலவனும் அவனின் அணியும் தமது படகில் இன்னும் ஒரு ஆட்லறியை சுமந்து கொண்டு மன்னார் பகுதி நோக்கி பயணிக்கின்றனர். அப்போது அந்த பயங்கரம் நடக்கின்றது. ஆனால் அதை பயங்கரம் என்று நினைக்காத புரட்சிநிலவன் தனது விவேகத்தால் அன்றைய நாளில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய படையகச் சொத்தொன்றை காப்பாற்றியது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் எந்த நிலையிலும் தளர்வற்றவர்கள் என்பதை சொல்லிச் சென்றான்.

அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் என்று மன்னார் கடற்படை முகாமில் இருந்து வந்த சிங்களக் கடற்படையின் ரோந்துப் படகு ஒன்றை இவர்களை இடைமறிக்கிறது. மீனவர்கள் போல் பயணித்துக் கொண்டிருந்த அவர்களின் படகிற்குள் ஆட்லறி எறிகணை செலுத்தி இருப்பதனால், பொதுமகன்கள் இருவரும் சற்றுக் கலவரமானார்கள். சோதனை என்ற பெயரில் இவர்களின் படகிற்குள் வந்த கடற்படை ஒருத்தன் இவர்களை மிரட்டும் தொணியில் கேள்விகளை கேட்ட போது, பொதுமகன்கள் இருவராலும் கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் எந்த அதிர்ச்சியும் அடையாத புரட்சிநிலவன் சிங்கள மொழியில் உரையாடத் தொடங்கினான்.

சிங்களப் படையின் காலுக்கு கீழ் இருக்கும் சிறிய கதவு ஒன்றை திறந்தால் உள்ளே இருக்கும் பொருட்களை அவன் நிச்சயம் கண்டுவிடுவான். அதனால் அவனின் நினைவுகளை திசை திருப்புவதற்காக முயல்கிறான் புரட்சி நிலவன். உடனடியாக அவனின் கையை பிடித்து படகின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

சிங்களத்தில்

“ உனக்கு என்ன வேணும் சொல்லு தாறன்”

என்று கேட்டது மட்டுமல்லாது அந்தச் சிங்களக் கடற்படைக்கு அவர்களிடம் இருந்த அதிக விலை கொண்ட கருவாட்டை அவனுக்கு அன்பளிப்பாக வழங்குகிறான். அவ் அன்பளிப்பினாலும் உபசரிப்பினாலும் தன் நிலை இழந்த கடற்படை சிரித்தபடி தனது டோரா படகிற்கு திரும்பினான். அவ்வாறு புரட்சிநிலவன் செய்யவில்லை என்றால், நிச்சயமாக அந்த கடற்படை காலடியில் இருந்த கதவை திறந்திருப்பான். அதனை கண்டிருப்பான். அதன் பின் யாருமே எதிர்பார்க்காத சம்வங்கள் நடந்து முடிந்திருக்கும்.

ஆனால் புரட்சிநிலவனின் அந்த விவேகமான செயற்பாடு அவரின் அணியும் உள்ளே அமைதியாக இருந்த ஆட்லறியும் எந்த சேதமும் இல்லாமல் கரையேறியதற்கு காரணமாகியது. இல்லையென்றால் அன்று எமக்காக கொண்டுவரப்பட்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் பெரும் சொத்து பெற்ரோல் ஊற்றி கொழுத்தப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும். அதோடு நிச்சயம் இரண்டு போராளிகளும் வீரச்சாவடைந்திருப்பர். பொதுமகன்கள் இருவரும் கைதாகி இருப்பர் அல்லது அவர்களும் வீரச்சாவடைந்திருப்பர். ஆனால் புரட்சிநிலவனின் சாதுரியமான செயற்பாடு அன்றைய களச்சூழலை மாற்றிவிட்டது.

இக் களச் சூழலையும் சாதுரியமாக நடவடிக்கையை வெற்றிபெறச் செய்த புரட்சிநிலவனின் நடவடிக்கையினையும் அறிந்த தேசியத்தலைவர் உடனடியாக தன்னிடம் அழைத்தது மட்டுமல்லாது, CBZ உந்துருளி ஒன்றும் நடவடிக்கைக்குத் தேவையான பல பொருட்களையும் பரிசளித்து மதிப்பளித்தார்.

அதன் பின்பான நாட்கள் விநியோக நடவடிக்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போது, உயர் தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகளை கொண்டு வர வேண்டி களச்சூழல் ஏற்பட்டது. அதனால் உயர் தொழில்நுட்ப தகவல்பரிமாற்ற முறமையினை கற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அணியில் புரட்சி நிலவனும் ஒருவராகிறார். அந்த கற்றல் செயற்பாடு முடிவடைந்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற புரட்சிநிலவன் எதிரியின் கோட்டைக்குள்ளே நின்று சிங்கள எதிரியை திணறடிக்க செய்யும் படையக பொருட்களை தமிழீழத்துக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பணி ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டார்.

தென்னிலங்கையின் முக்கிய கடல் சார்ந்த நகரம் ஒன்றிற்கு அனுப்பப்பட்ட போது, புலி ஒருத்தன் மீனவனாக மாறி நின்று படையகப் பொருட்களை கப்பலில் இருந்து இறக்குவதும், அதை தமிழீழத்துக்கு எந்த இடரும் இல்லாது அனுப்புவதுமாக தனது விநியோகப் பணியை செய்து கொண்டிருந்தார். பயப்பிடவில்லை, சோர்ந்து போகவில்லை, இலக்கொன்றே அவனின் மூச்சாக தன் பணியில் ஈடுபட்டு பல படையக பொருட்களை தமிழீழத்திற்கு கிடைக்கச் செய்தார். ஒரு படகின் அணித் தலைவனாக பணியாற்றிய அப் போராளிக்கு அவன் கற்றுத் தேர்ந்திருந்த சிங்கள மொழி பெரிதும் உதவியது என்பது உண்மையே.

இவ்வாறான இடர் மிக்க பணிகளினால் தமிழீழ விடுதலைக்காக உழைத்த அப்போராளியும் அவரது அணியும் உறுதியாக இறுதி வரை பயணித்தார்கள். கடல் விநியோகம் என்பது சாதாரணமானதல்ல. சிங்கள கடற்படை இந்திய கடற்படை என கடல் வல்லூறுகளும், தொழில்நுட்ப அரக்கர்களாக இருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் செய்மதிகள் மற்றும் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் என தமிழீழ கடற்பரப்பில் சிறு பணியை செய்வதற்கும் பல தடைகள் எழுந்து நின்றன. அதே நேரம் அதையும் தாண்டி, இயற்கையும் பாதகத்தை விளைவிக்கும்.

அவ்வாறான இடர்களை எல்லாம் தம் தோழ்களிலே சுமந்து தமிழீழ கடல் அன்னையின் மடியில் தவழ்ந்து திரிந்தனர் இப் போராளிகள். ஒன்றல்ல இரண்டல்ல மாதங்கள் பல கடந்தும் கரையேறாத பணி. ஒழுங்கான தூக்கம் இல்லை, உணவில்லை. ஆனாலும் சோர்ந்து போக மாட்டார்கள். தன்நம்பிக்கையையும் துணிவையும் தமதாக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஒன்றில் ஒன்றரை மாதங்களாக கடலில் பயணித்துக் கொண்டிருந்த புரட்சிநிலவன் கரையேறி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. கிடைத்த சிறு ஓய்விலும் முகாமை விட்டு நகராது தமிழீழ விடுதலைக்காக பணி செய்தார்.

அப்போது இன்னும் ஒரு அணி கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அவ்வணியின் படகு இயந்திரகோளாறால் பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத சூழல் வந்த இடைநடுவில் நின்ற போது, சிறப்புத்தளபதி சூசை அவர்களால் புரட்சிநிலவனிடம் அப் படகை மீட்டுவருவதற்கான வேண்டுகை விடப்பட்டது. அது மட்டும் அல்லாது அப்படகின் கட்டளை அதிகாரியாக வந்த போராளி முக்கிய பணி ஒன்றுக்காக வேறு ஒரு படகிற்கு செல்ல வேண்டிய தேவை எழுந்திருந்தது. இவற்றின் காரணமாக அப் படகை பொறுப்பெடுக்கவும், இயந்திரத்தை திருத்தி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கவும் சரியான தெரிவாக புரட்சிநிலவனே இருந்தார்.

அதனால் உடனடியாக தனது அணியோடு கடலேறிய புரட்சிநிலவன் படகை கொண்டு வந்து சேர்க்கும் பணியை சரியாக செய்தார். பழுதடைந்த படகினை சென்றடைந்து, அப்படகின் கட்டளை அதிகாரியாக இருந்த போராளியிடம் இருந்து படகை பொறுப்பெடுத்து அவரது பணிக்காக அவரை அனுப்பிய பின் படகை கரையேற்றும் பணியில் ஈடுபட்டார்கள் புரட்சிநிலவனின் அணியினர். பல இடர்களை சுமந்து குறிப்பிட்ட சில வருட போராட்ட வாழ்விலே உச்ச வீரத்தோடு களப்படியாற்றிய, தமிழீழ மக்களின் மனங்களை வென்ற அப் போராளிக்கு அப்பணியே இறுதிப்பணி என்று யாரும் எண்ணவில்லை.

மன்னார் கடல் அன்று அமைதியாக இல்லை. தன் வீரக் குழந்தைகளின் மேனி தொட்டு வரும் காற்றில் கடல் அலை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சிங்களத்தின் கடற்படையின் படகுகளை எதிர்க்க முடியாது அந்த அலைகள் சீறிக் கொண்டிருந்தன. தன் பிள்ளைகளை தன் அலை எனும் சிறகுகளால் பாதுகாக்க முனைந்து கொண்டிருந்தது அந்த கடல். அதனூடாகவே புரட்சி நிலவனும், மோகன் ஐயாவும், மோகனதாஸ் ஐயாவும். அப்படகோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் கடல் பகுதியில் அடிக்கடி குறுக்கே வரும் சிங்களப்படைப் படகுகள் திடீர் என்று எதிர் வந்தன. சர்வதேசத்தாலும் இந்திய வல்லாதிக்க சக்திகளாலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அக் கடல் மீதான எமது நடவடக்கைகள் ஒவ்வொன்றிலும், அவர்களுக்கெல்லாம் போக்குக் காட்டி ஒவ்வொரு வெற்றி நடவடிக்கைகளையும் செய்த புரட்சிநிலவனின் அணி அன்று சிங்களப் படைகளினால் இடைமறிக்கப்படுகிறது. புரட்சி நிலவனும் அவரின் அணியும் எதிர்த்து களமாடுகிறார்கள். தொலைத் தொடர்புக் கருவிகள் நிலமையை கட்டளைப் பீடத்துக்கு கொண்டு செல்கின்றன. ஆனாலும் சண்டையின் தீவிரம் உச்சம் பெற்று படகு சண்டை இட முடியாத அளவுக்கு சேதமடைகிறது. ஆனாலும் இறுதிவரை உறுதியாக புரட்சிநிலவன் சிங்களப்படைகளை எதிர்கொள்கிறார்.

கட்டளைப் பணியகத்தில் இருந்து உதவி அணிகள் சென்றடைய முன்பாகவே சண்டை உக்கிரமமடைந்து அப்படகு கட்டளை அதிகாரியான கடற்கரும்புலி புரட்சிநிலவன் லெப். கேணல் புரட்சிநிலவனாகவும், மோகன், மற்றும் மோகனதாஸ் என்ற பொதுமகன்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும் வீரச்சாவடைந்திருந்தார்கள். மன்னார் கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததைப் போலவே தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக ஆர்ப்பரித்துப் பயணித்த புரட்சிநிலவனும் அவரது அணியும் தம் பணியின் போதே விழி மூடி கடல் மடியில் வெடியோடு சங்கமித்து போயினர்.

“கடலிலே காவியம் படைப்போம்” என்ற உயர்ந்த வாசகத்தை தாரகமந்திரமாக கொண்டு பயணித்த கடற்புலிகள் பாரிய துறைமுகங்களை கொண்ட ஒரு அரச கடற்படையாக இல்லாத நிலையிலும், பல சிறு கடற்துறைமுகங்களை கொண்டிருந்ததும் விநியோக நடவடிக்கைகளில் உச்சம் பெற்றிருந்ததும், தமிழீழ கடற்படையின் இவ்வாறான போராளிகளின் தியாகங்கள் உச்சம் பெற்றிருந்ததும் வரலாறாக பதிவாகி கிடக்கின்றது

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள்!


யூலை 5….

எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் தமிழினத்தின் மிகப்பெரும் பலமான கரும்புலி வடிவத்தை தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் உலகின்முன் எடுத்துக்காட்டினார்.

1987 மே மாதத்தில் இலங்கை அரசு நடத்திய, ஒப்பறேசன் லிபறேசன் என்ற மிகப்பெரிய இராணுவநடவடிக்கைதான், இத்தகையதோர் வடிவத்தை தேசியத்தலைவர் உருவாக்குவதற்கு வழிவகுத்தது. யாழ்குடாநாட்டில் அரசபடையினர் பயணிக்க அச்சங்கொள்ளுமளவிற்கு விடுதலைப் போராளிகளின் மறைந்திருந்து தாக்கும் கெரில்லாத் தாக்குதல் வடிவம் வளர்ச்சியுற்றிருந்தது. படையினர் உளரீதியாக தளர்வடையத்தொடங்கியிருந்தனர். எனவேதான் அன்றைய ஐனாதிபதியாகவிருந்த. ஜே .ஆர். ஐயவர்த்தன, படையினரை உளவலுப்படுத்த எண்ணினார்.

இலங்கைத்தீவிலிருந்து தமிழினத்தவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க பல பேரினவாதிகள் வரிசைகட்டி நின்றாலும், துளியளவும் ஈவிரக்கமற்ற இனவாதியாக தன்னை தமழினத்தவர்களின் நெஞ்சிற் பதித்தவர் அன்றைய ஐனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஐயவர்த்தன. தன்னுடைய ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்போராளிகளையும், அவர்களைத் தாங்கிநிற்கும் தமிழினமக்களையும் துடைத்தழிக்க நினைத்தார் அவர்.

இதற்கமைய இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பேருதவியோடு தமிழினத்தின்மீது படையெடுப்பொன்றைத் திட்டமிட்டார் ஐயவர்த்தன. இந்த நடவடிக்கைக்காக தன்னுடைய இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறப்புப்பயிற்சி பெற்றுக்கொள்ளச் செய்தார். அத்தோடு, தமிழர்கள் மிகச்செறிந்துவாழும் யாழ்குடாநாட்டின்மீது பொருளாதாரத்தடையையும் விதித்தார்.

இவ்வாறு நன்கு திட்டமிட்டு, மிகப்பெரிய படையெடுப்பொன்றை வடமராட்சிமண்ணில் தொடக்கினார். இந்த நடவடிக்கைதான் “ஒப்பரேசன் லிபரேசன்” என்கின்ற இராணுவ நடவடிக்கை. இதன்மூலம் வடமராட்சிப் பிரசேத்தை இராணுவத்தின் கைக்குள் கொண்டுவந்து, விடுதலைப்புலிகளையும் மக்களையும் திகிலடையச் செய்து, பின்னர் அங்கிருந்து யாழ்குடாநாட்டின் தரைப்பகுதிகளை கைப்பற்றிவிடலாம் என்பதே ஐயவர்த்தன கண்ட கனவாகும்.

1987 மே 26 ஆம் நாளன்று, அரசவிமானங்களும், கடற்படைக் கப்பல்களும் வடமராட்சிப்பகுதிமீது தாக்க, அதேநேரத்தில் தரைவழியாக இராணுவம் எறிகணைகளை வீசியபடியே முன்னேறத்தொடங்கியது.

மக்கள் குடியிருப்புகளே அதிகமாக இலக்குவைக்கப்பட்டதால், உயிரிழப்பும், உடைமைகள் இழப்பும், காயமும் என மக்கள் சொல்லொணாத்துயர் சுமந்தனர். பலநாடுகளின் உறுதுணையோடு நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தற்காப்பு தாக்குதல்களை தொடுத்தவாறு போராளிகளும் இழப்புகளுடன் போர் உத்திமுறைக்கு அமைவாகப் பின்வாங்கினர். வடமராட்சி பிரதேசம் பேரழிவுக்குள்ளானது. மக்களின் உடைமைகள் எல்லாம் அழிவுற்றன.

வடமராட்சியைக் கைப்பற்றிய இராணுவம், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைக்காக நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் தமது பெரும் படைத்தளமொன்றை நிறுவியது. மாணவர்களின் அறிவை விருத்திசெய்யும் பாடசாலையில் இருந்துகொண்டு யாழ்குடாநாட்டின்மீது படையெடுப்பு நிகழ்த்துவதற்குரிய அனைத்தையும் இராணுவதரப்பு செய்துகொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் அச்சமுற்று ஓடிவிட்டார்கள். இராணுவம் பெருஞ்சாதனை படைத்துள்ளது என்கின்ற தோற்றத்தை காட்டி, ஐயவர்த்தன இறுமாந்திருந்தார். இந்தவேளையில் தான், அப்போது பலவீனமான நிலையிலிருந்த தமிழினத்தின் பலம்மிக்க கருவியாக, கரும்புலிகள் என்னும் வடிவத்தை தேசியத்தலைவர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். குறைந்த இழப்போடு, எதிரிக்கு உச்சப் பேரிழப்பைக் கொடுக்கக்கூடிய பொறிமுறையாக அதை தேசியத்தலைவர் அவர்கள் எண்ணினார்.

தனது எண்ணத்தை தேசியத்தலைவர் அவர்கள் போராளிகளிடம் முன்வைத்தபோது, இந்தத்தாக்குதலை நானே செய்கிறேன் என வல்லிபுரம் வசந்தன் என்கின்ற போராளி மில்லர் தானாகவே முன்வந்தான். மில்லர் வடமராட்சிப் பிரதேசத்திற் பிறந்து, அப்பிரதேசத்தை நன்கறிந்தவன். அதுமட்டுமன்றி, இராணுவம் குடிகொண்டிருந்த நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தின் மாணவனாகவும் இருந்தவன். எனவே இத்தாக்குதலை மில்லர் செய்வது மிகப்பொருத்தமானது என தேசியத்தலைவர் அவர்கள் தீர்மானித்தார்.

இதன்படி, நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர்மீது, 1987 யூலை 5 ஆம்நாள் நள்ளிரவு முதலாவது கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டியை இராணுவ முகாமுக்குள் செலுத்தி, தன்னை உயிர்வெடியாக்கி வெடிக்கச்செய்த மில்லர், தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் முதலாவது கரும்புலியாக, கரும்புலி கப்டன் மில்லராக நிலைபெறுற்றான்.

மில்லரின் ஒப்பற்ற இந்த ஈகம்தான், இறுமாப்போடு இருந்த, இலங்கையின் அன்றைய ஐனாதிபதி ஐயவர்த்தனவை இந்திய அரசிடம் மண்டியிடவைத்தது. இலங்கை அரசுக்கு முட்டுக்கொடுக்க வந்த இந்திய அமைதிப்படையினரையும் வென்ற வரலாறு எமக்குரியது. எமது விடுதலைப் போராட்டப் பயணிப்பில் நிகழ்ந்த அனைத்து திருப்புமுனைகளுக்கும் பின்னால் வெளித்தெரியாவேர்களாக பல கரியவீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

1987 யூலை 5 ஆம்நாள் ஒலித்த அந்தப்பெருவெடியோசை வடமராட்சிப்பிரதேசத்தை மட்டுமல்ல, தமிழினத்தை முற்றாக அழித்தொழித்துவிட நினைத்த ஐயவர்த்தனவின் நெஞ்சையும் அதிரச் செய்தது.

அன்று கரும்புலி கப்டன் மில்லர் தலைவனின் நெஞ்சுக்கூட்டிற்குள்ளிருந்து அக்கினிக்குஞ்சாக புறப்பட்டு, தன்னுயிரை வெடியாக்கி வீரவரலாற்றைப் படைத்தான். அவன் வாழ்வை வெறுத்துப் போகவில்லை, தன் இனத்தினமீது கவிந்த இருளை எரிக்கவே கரியநெருப்பாகினான். அன்று அவன் தாங்கிச்சென்ற வடிவத்தை, அவனைத்தொடர்ந்து, எண்ணற்ற கரும்புலிகள் ஆண்களும் பெண்களுமாய் தரையிலும் கடலிலும் வான்மூலமும் நடத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தார்கள்.

மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பமாகியது, என்றுமே உலகம் கண்டிராத எண்ணிப்பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமழீழத்தில் உருவாகியது| என தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். தமிழினத்தின் தாயகமண் மீட்புப்போராட்ட முன்நகர்விலே, தடைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டபோதெல்லாம் தங்கள் உயிர்களை வெடியாக்கி, தடைகளைத் தகர்த்தெறிந்து தலைவனுக்கு தோள்கொடுத்து நின்றவர்கள் கரும்புலிகள்.

தாயகப்பகுதிகளில் மட்டுமல்லாது தாயகம்தாண்டி எதிரிகளின் குகைகளுக்குள்ளும் நுழைந்து வரலாறான வரலாறுகள் இவர்கள். ஆணென்றும் பெண்ணென்றும் நிலவிய பேதங்கள் கடந்து, பெருவரலாறானவர்கள் இவர்கள். எம்மினம் உயிர் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, படுகொலைசெய்யப்படுவதை கண்டு ஆற்றாமலே இவர்கள் பெருந்தழலாய் புறப்பட்டார்கள். இவர்களில் சமுகத்தின் பழைமைவாத கருத்துநிலைகளை உடைத்தெறிந்து கடலேறி கரியவடிவெடுத்து வரலாறான பெண்களும் அடங்குவர்.

தலைவனின் கனவைச்சுமந்தபடி, கரிய இருளிலும், பேரலைகள் புரண்டடிக்கும் கடலிலும், எதிரி சுட்டுவீழ்த்தலாம் எனத்தெரிந்த வான்பரப்பிலும், எல்லாவற்றையும் தாண்டி பிரளயத்தை நிகழ்த்த துடிக்கும் கருங்காற்றாய் எதிரிகளின் நடுவிலும் உயிர்வெடியாகச் சென்று, தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தவர்கள் இவர்கள்.

வெல்லப்பட முடியாதது என எதிரிப்படைகள் இறுமாந்திருந்த எத்தனையோ படைத்தளங்களை வென்று, வெற்றிமுரசறைவதற்கு அத்திவராமிட்டவர்கள் இந்த நெருப்பு மனிதர்கள். எமது போராட்டத்தை வளர்ச்சியுறவிடாது, பயணப்பாதையில் பெருந்தடைகளாக, கால்களுக்குமுன் கருங்கல்லாகக் கிடந்த பல தடைகளைத் தம்முயிர்கொண்டு தகர்த்து, விடுதலைப் பயணத்தை முன்நகர்த்திய உன்னதங்கள் இவர்கள். தற்புகழுக்காகவோ அன்றி தன்னலத்துக்காகவோ எரிமலையாகவில்லை இவர்கள். பிறந்து வாழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஈற்றில் கிடைப்பது ஆறடிநிலம். அதைக்கூட ஒறுத்து, அடுத்த தலைமுறைக்காய் உயிர்கொடுத்தவர்கள் இவர்கள். எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டாய் முதற் புள்ளியிட்டவன் கரும்புலி கப்டன் மில்லர்.

தன்னுடைய தாயகத்தில் தான்பிறந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, கும்மாளமிட்டுச்சிரித்த எதிரிகளை மில்லரால் பார்த்திருக்க முடியவில்லை. தான் படித்த பாடசாலையை எதிரிகள் கைப்பற்றி, அங்கிருந்து தன்தாயகத்தை முழுவதுமாக அழிக்கத் திட்டமிடுவதை மில்லரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவனுக்குள் அக்கினிப்பிளம்பு உருக்கொண்டது.

சாவுக்கு நாள் குறித்துவிட்டு, பெற்றெடுத்த தாயுடனும், ஒன்றாய் நின்ற தோழர்களுடனும், ஊட்டி உயிராய் அணைத்த மக்களுடனும் கூட எதுவும் தெரியப்படுத்தாமல், தலைவனுடன் மட்டுமே உணவுண்டு, சிரித்தபடி விடைபெற்றுச் சென்றவர்கள் இவர்கள். தேசத்தின்மீதான பற்றுணர்வும், தம்மினத்தின்மீதான பற்றுறுதியும், ஆழமான கருணையுள்ளமும் கொண்ட இவர்கள், தமிழினத்தை அழிப்பவர்களின் மீது பெருநெருப்பாய் பாய்ந்தவர்கள்.

இவர்கள் யாரும் வாழமுடியாமலோ வாழ்வைவெறுத்தோ போராடப் புறப்பட்டவர்களல்லர். தங்களின் இனத்து மக்களை, உறவுகளை சிங்களப்பேரினவாதம் துரத்;தியடித்ததையும் துடிக்கத்துடிக்கப் படுகொலை செய்ததையும் பார்த்து, இந்த துன்பதுயரங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க தாமாகவே விடுதலைப் பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள். தம்மை கொடையாக்கி தம்மினத்தை வாழவைக்கத் துடித்தவர்கள். உலக அரங்கில் ஈழத்தமழிழினத்திற்கு ஓர் அடையாளம் நிலைத்திருப்பதற்கு இவர்கள் எல்லோரும் செய்திருக்கின்ற ஒப்பற்ற ஈகமே காரணமாயுள்ளது.

தம்முடைய விடுதலைக் கனவையும். உணர்வையும் தமக்குப்பின்னால் உள்ளவர்கள்; செயற்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கையோடு, கையசைத்து காற்றில் கரைந்தவர்கள். இவர்கள் செய்த ஒப்பற்ற உயிர்க்கொடை எதற்கானது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவர்களால் நடத்தப்பட்ட குறிப்பிடக்கூடியளவு தாக்குதல்கள் அரசியலிலும், இராணுவநோக்கிலும், உத்திமுறையிலும் உரிமைகோரப்படாதவையாக உள்ளன. இதற்காக தம் முகத்தையும், முகவரியையும் மறைத்து செயற்பட்டவர்கள் இவர்கள். தங்களை ஒறுத்த இந்த நெருப்புமனிதர்களின் எழுச்சி, பல்வேறு அரசியற்பரிமாணங்களை உற்பவித்திருக்கின்றது. உள்ளே தெரிந்தவர்களாகவும், வெளியே தெரியாதவர்களாகவும் இவர்கள் தம்மை உருக்குலைத்து எழுதிய வரலாறு தூய்மையானது. தன்னலத்தையும், தாம் என்கின்ற ஆணவத்தையும் பதிக்கத்துடிக்கும் இன்றைய பொய்யான மனிதர்கள்பலரின் நடுவே, மெய்யாகவே தேசத்தின் விடிவுக்காக வெறுமனே கரியநிழலுருவக்களாக காலமெல்லாம் வாழ்பவர்கள் இவர்கள்.

எமது இனத்தின் மகிழ்வான , சுதந்திரமான, வளமான எதிர்கால வாழ்விற்விற்காக தங்களை நொடிப்பொழுதில் வெடியாக்கிய இவர்களின் வீரத்தையும், வரலாற்றையும் எமது தலைமுறைதாண்டி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கவேண்டிய கடப்பாடுடையவர்கள் நாங்கள். உலகின் மூலைமுடுக்கெங்கும் பரந்துவாழும் ஒவ்வொரு தமிழனும் தனது குழந்தைக்கு, தனது குழந்தையின் குழந்தைக்கு சுதந்திரமாகவாழ ஒரு தாய்நாடு அவசியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். எமது அடுத்த தலைமுறையினர் கைகளில் கைகளிலும் மனங்களிலும் அடிமை விலங்கற்று சுதந்திரமாய் வாழவேண்டும். இதற்காகவே இன்றைய நாளுக்குரியவர்கள் தம்முயிரை வெடியாக்கி, தனி வரலாறாகினார்கள். இவர்களுக்கு ஒருபோதும் மரணமில்லை. இதனால்தான் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள், ‘ இலட்சியவீரர்கள் இறப்பதில்லை’ என மொழிந்திருக்கின்றார்.

தம்மைத் தற்கொடையாக்குவதற்கு முன், இவர்கள் பெற்றுக்கொண்ட மிகக்கடினமான பயிற்சிகள் மெய்சிலிர்க்கவும் மேனிநடுங்கவும் செய்பவை. தம்மைவருத்தி அனைத்து பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்து, கையசைத்தபடியே இருளிற் கரைந்து எம் ஒளியானவர்கள் இவர்கள்.

சின்னஞ்சிறிய முரண்பாடுகளால் மனமுறிவுகளுற்று, எமது இனம் தனித்தனியாக சிதறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தம்மைவிட தம்தாய்நாடு பெரிதென்றெண்ணிய இந்தவீரப்பிள்ளைகளின் உயரிய எண்ணத்தை மனங்கொள்ள வேண்டும். ஒரு சுடரைஏற்றுவதன் மூலம் இவர்களை அஞ்சலிக்கலாம், ஆனால் இவர்களின் இலட்சியக்கனவை இதயத்தில் சுமந்து தொடர்ந்து அந்த இலட்சியத்துக்காகவே தொடர்ந்து பயணிப்பது தான் இவர்களுக்கான கைமாறாக அமையும்.

திறந்தவெளிச் சிறையாக காட்சிதரும் எமது தாயத்தின் இன்றைய நிலையை தமிழினமோ உலகமோ உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்திகளை பேரினவாத அரசு கைக்கொண்டுவருகிறது. எமது இளையதலைமுறையை பண்பாட்டு சீரழிவுகளுக்குள் சிக்கவைக்கின்றது. ஒருபுறம் , பல்வேறு திசைகளிலும் தமிழ் இளையோரின் கவனம் சிதறடிக்கப்பட்டு வருகின்றது. மறுபுறம் தமிழ்மக்களின் தாயகப்பகுதிகள் சிங்கள மயப்படுத்தப்பட்டுவருகின்றன.

பூமிப்பந்திலே நாம் மிகச்சிறிய தேசமாக இருந்தாலும், மிகப்பெரும் வலிமைவாய்ந்த சக்திமிக்க இனமாக உள்ளோம் என தேசியத்தலைவர் குறிப்பிட்டிருப்பதை மனங்கொள்வோம். தமிழர்கள் என்கின்ற ஒற்றுமையின்மூலமாக இந்த நெருப்புமனிதர்களினதும், மற்றும் மாவீரர்களதும் கனவிற்காக உழைப்போம். இதன்மூலம் எமதுமண்ணின் விடுதலையை விரைவாக்கி எமது அடுத்த தலைமுறையினரை வாழவைப்போம்.

-சிவசக்தி-

காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் !

உயிராயுதம்என்றொன்று
உலகினில்உண்டென்று
உயிர்விலைகொடுத்த
உத்தமர்கள்கரும்புலிகள்…..

உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய்
கருகிப்போனவர்கள்கரும்புலிகள்
தண்ணிலவும்செங்கதிரும்என்றும்
தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்…….

உக்கிரயுத்தவடிவை
உலகிற்குகாட்டியமறவர்
மரணத்தின்தேதிதன்னை
மகிழ்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்………

தன்னினத்தின்காப்புக்கவசமாய்
தமை ஈகம்செய்து
நூற்றாண்டுகடந்தும்என்றும்
மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்…….

எத்தடைஎவ்வழிவரினும்
அத்தடைஅவ்வழிநீக்கி
சாவுக்கேபயம்காட்டிய
சரித்திரநாயகர்கள்கரும்புலிகள்………

கண்கள்வலிக்கவழியனுப்பியவரிடம்
கலங்காநெஞ்சோடுவிடைபெற்றவர்
ஆறடிமண்ணில்அடங்கா
அனல்பூத்தநெருப்பானவர்கரும்புலிகள்……..

காற்றோடுகலந்தவர்ஈகம்
நேற்றுவரைவிஞ்சஒருவரில்லை
புதியதொருநாளில்நாளை
புத்துயிர்பெற்றுமீண்டும்……
விதைக்குள்முளையாய்இருந்து
விருட்சமாய்விழுதுகள்தாங்கி
அவன்நிகர்கொண்டவர்தாமாய்
அவனியில்அவதரிப்பார்எமக்காய்…….

நன்றி

திருமதி சுதர்சினி நேசதுரை.
—-

உயிர்வாழும் ஈகங்கள்….

இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள்
கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள்
கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து
காத்திருப்பர் சாகும் தேதிக்காய் நாட்குறித்து
கரிகாலன் விழியசைக்கும் திசை நோக்கி வெடியோடு
காடு மலை கடலெனினும் இவர் பயணம் தொடர்ந்திடும்

பொங்கும் அலை நடுவே கடற்கலங்கள் தகர்த்து
உப்புநீரில் உதிர்ந்து போன உத்தமர்கள் பலருண்டு
சீறிவரும் சிங்களத்தின் படை நடுவே உட்புகுந்து
பகையழித்த நிறைவோடு தரைக்கரும்புலிகளாகிடுவர்
வான்வழியில் ஏறி வந்து எம்மினத்தை கொன்றவரை
தேடிப்போய் கதை முடித்தார் வான் கரும்புலிகளாகி

உயிர் வாழும் வரை வெளியில் தெரியாத அற்புதங்கள்
விடிகாலைப் புலர்வோடு வெளியில் வரும் வதனங்கள்
வெற்றிச்செய்திகளை மண்ணுக்காய்த் தந்துவிட்டு
சிரித்த முகங்களோடு உருவப்படமாகிடுவார்
அன்றலர்ந்த மலர்களெல்லாம் மாலைகளாய் கோர்த்து
உங்களுக்காய்க் காத்திருப்பர் தேசத்து மக்களெல்லாம்
வடியும் கண்ணீரால் விடைகள் தந்திடவே
நடுகல் நாயகராய் உறங்கிடுவீர் பணிமுடித்து
மண்ணில் புதைந்திருக்கும் வேரின் ஆழம்போல்
வெளியில் தெரியாது இவர் உணர்வுகளின் தாகம்

போர்மேகம் கருக்கொண்டு எம்மினத்தைச் சூழ்ந்த போது
பெருந்தலைவர் உயிர்காக்க தம்முடலில் வெடிபொருத்தி
இறுதிக்கணம்வரையும் மாறாக்கொள்கையுடன்
தமிழீழமுரைத்து உயிர்க்கொடையீந்தார் கரும்புலிகள்
முகமும் முகவரியும் வெளிவரா உயிராயுதங்களாய்
பெற்றவர்கள் உற்றவர்கள் தேடலோடு காத்திருக்க
இன்னுமின்னும் எத்தனையோ அநாமதேயக்கரும்புலிகள்
அறிந்திடாத, அழிந்திடாத வரலாறாய் வாழ்ந்திடுவர் ….…!

விஜிதா ராஜ்குமார்

—-

காவியத்தில் உறைந்தவர்கள்…

கருமை என்பது நிறம் அல்ல
காருண்யம் நிறை மனதாம்
உரிமை என்பதை தேசமதில்
உணர்வோடு வைத்த உத்தமர்
உலகாளும் வல்லமை உளத்தில்
உயர்வாகிய நெறி கொடையில்
வரலாறு வியக்கும் நடையில்
வாழ்ந்த மாதவர் சோதரர் ஆனவர்…

கருமை என்பது வானத்தில்
கலைந்து போகும் மேகத்தில்
மழையாகிப் பொழியும் வீரத்தில்
மண் மீது பதித்த பாசத்தில்
நீறு பூத்த நெருப்பாகி எங்கும்
நீக்கமற நிறைந்த வித்தகர்
காற்றோடும் கனலோடும் கலந்து
கண்ணீரில் உறைந்திட்ட புனிதர்…

நாளும் கோளும் குறித்த பின்னர்
நீளும் அந்தப் பொழுதுக்காய்
நீக்கப் போகும் உயிர் காத்து
நிம்மதியுறும் நேசர் இவராம்
நாளும் பொழுதும் தேசத்தாய்
நலனுக்காய் நலம் வாழ்ந்த தூயவர்
நீரோடு கரைந்து நிலம் மீது தவழ்ந்து
அலையோடு எழுந்தாடி சாதித்தவர்…

ஆண்டுகள் முப்பத்தி யிரண்டு
மாண்டு போனதென்ன மில்லரே
நின் நீண்ட கனவெல்லாம் நம்மோடு
நித்தம் கதை பேசி கடப்பதேன்
வித்தாகி விழுதாகி முளைத்திட
வித்துடலும் இல்லாது போனதென்ன
வெடியோடு உறவாடி வெந்தீரே
வெல்லும் ஈழம் மீட்டிடவே நீவிர்…

வானத்து நிலவும் வாசல் வரும்
வாகையர் வீரத்தை சாற்றி நிற்கும்
பெண்ணாகி ஆணாகி வீரமொடு
எண்ணற்று போனவரே எம்மவரே
கண்ணாகி தேசத்தின் ஒளிகாணவே
காலத்தால் அழியாத புகழ் சூடி
கலைந்து போகா இலட்சியம் ஏந்திய
காவியரே கரும்புலி யானவரே …

பெண்மையின் உள்ளம் மென்மையாம்
மேன்மைத் தமிழுக்காய் வன்மையாய்
தொன்மை வீரம் உமக்குள் சுரக்கும்
அன்னை வடிவே ஆதியாகி சூழுமிந்த
முன்னை விதி மாற்ற குழலேந்தி
குண்டுகளாய் வெடித்தீரே கோதையரே
கண்டோம் கரைந்தோம் மகளிர் படையில்
கொட்டிய தீப்பொறிகளும் பொசுக்காத
கோபக்கனலே நீவிர் அன்றோ இன்னும்
தாபம் கொண்ட தேசத் தாய்க்கு
சமர்ப்பணமானவரே உறுதிஉரைத்தோம்
உம் தியாகங்கள் வீணாவதில்லை
விடியல் ஒன்று நம் சொந்தம் ஆகும்…

யூலை ஐந்தில் உமக்காய் சுடர் ஏந்தி
சுவாலை என்றே எமக்குள் அசையும்
சவாலை ஏற்று வழி தொடர்வோம்
உயிர்க்கும் ஒரு நாள் எங்கள் தேசம்
உங்கள் பெயரை நிதமும் உரைக்கும்
கல்லறையும் வேண்டா கனவான்களே
நெஞ்சறை புதைத்தோம் உங்கள் கனவை
அஞ்சுதல் அழித்த அரங்கப் பெருமானாய்
எஞ்சிய ஒற்றைத் தமிழன் உள்ள வரை
ஒன்றான இலக்கு வென்றாடும் நாளை…

சிவதர்சினி ராகவன்

Up ↑