Search

Eelamaravar

Eelamaravar

Category

இனப் படுகொலை

பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

கருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்..

அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார்.

எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது.

திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா? அல்லது விளக்கு பிடிக்கிறதா? என்ற விளையாட்டுக்குள் நாம் வரவில்லை..

அடப்பாவிகளா? ஈழத்திலே எங்கேயடா பார்ப்பான்?

இருக்கிறதே நாலு பிராமணர்கள்..அவர்களும் பூசை வைச்சமா! பொங்கல் சாப்பிட்டமா! என்று இருக்கிறார்கள்.

பூசை வைக்கிற உரிமைக்குக் கூட அவர்களோடு போராட முடியாது. காரணம், ஈழத்தில் ஆலயங்களில் பூசை செய்பவர்கள் 90 விழுக்காடு சைவ மரபில் வந்த அர்ச்சகர்களே..

போதாததற்கு கதிர்காமம், செல்வச் சந்நிதி உட்பட பல தொன்ம ஆலயங்களில் பூசை செய்பவர்கள் மீனவ சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்.
அவர்களை ‘கப்புறாளை’என்போம்.

அதனால்தானே பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை என்கிறோம்.

வரலாறு தெரியாமல் தரப்படுகிற ஆதரவு கூட ஆபத்தானது.

அதற்கு இதுவொரு உதாரணம்.

புரட்சியாளன் – கோட்பாட்டாளன்.

தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து தலைவர்களும் தமது போராட்டத்தை எதோ ஒரு வகையில் உலகின் ஏதோ ஒரு போராட்டத்துடன் அடையாள்ப்படுத்தும் முனைப்பில் இருந்தார்கள். அந்தந்த போராட்ட தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்தவும் புகுந்தார்கள். ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒரு படி மேலே அந்தந்த தலைவர்கள் போல் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்கள்.

மக்களுக்கும் சீனப் புரட்சி, ரஸ்யப்புரட்சி, தொடக்கம் கியூபா போராட்டம், வியட்னாம் போராட்டம் வரை வகுப்பெடுத்தார்கள். கொம்மியூனிசம், மார்க்கிசம் தொடங்கி உலகின் அனைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்கள் பேராட்டத்தை வழி நடத்துவதாக பறை சாற்றினார்கள்.

இது தவறல்ல. ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார். முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.

முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் என்பது ஒரு கிட்டத்தட்ட ஒரு நிலப்பரப்பை குறிக்கும் இருவேறு பெயர்கள். ஒரு அங்குலம்தான் இந்த இரு நிலத்தையும் துண்டாடுகிறது. ஆனால் அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்ட செய்தியை இந்த நிலங்கள் பதிவு செய்கின்றன.
பெயருக்கேற்றாற் போல் முள்ளி ‘வாய்க்கால்’ ஒரு தேங்கிய அரசியலையும் நந்திக்’கடல்’ எல்லைகளற்று பரந்து விரியும் அரசியலையும் முன்மொழிகின்றன.

இது புரியாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் முள்ளி’வாய்க்காலோடு’ தேங்கி நிற்கிறோம். ஆனால் நாம் விடுதலையை தேட வேண்டிய இடம் நந்தி ‘கடலில்’ தான் கிடக்கிறது. எமக்கு மட்டுமல்ல போராடும் இனங்கள் நவீன அரசுகளை எதிர்கொள்ளும் சூக்குமத்தை விழுங்கியபடி ‘நந்திக்கடல்’ அமைதியாகக் கிடக்கிறது.
ஒரு கோட்பாட்டாளன் உருவான கதையின் பின்புலம் இது. வரலாறு ”பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறதுப

பரனி

மீள்பதிவு

போராடி ஓய்தலே வாழ்வா?

‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’

‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது.

மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்?

‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’

‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார்?’

யாருமில்ல தம்பி. மகன் வேலைக்குப்போறார். அவரைப் பார்க்கவேணும். வீடு, வளவு, ஆடு, மாடுகள் பார்க்கவேணும். இனி மகனைத் தேட யாருமில்லை – இது கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பும்போது இதய நோயினால் இறந்துபோன தாயின் கணவனின் குரல்

இப்படியாக கடந்த வாரம் இரணைப்பாலையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஸின் தாயும் போராடிக் களைத்தே இறந்துபோனார். இந்த இறப்புக்கள் சாதாரணமானவையல்ல. இறுதிப் போரின் அவலங்களின் சாட்சியொன்றை, இனப்படுகொலையின் உயிர்ச்சாட்சியொன்றை இழந்துகொண்டிருக்கிறோம்.

காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிப் போராட்டம்

2015 ஆண்டின் ஜனவரி மாதத்தில் காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் தெருவுக்கு வந்தனர். அதுவரை நீடித்துவந்த காட்டாட்சியில் அந்தத் தாய்மார் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவுக்கு இறங்கினாலே அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுகளும், விசாரணைகளும் அவர்கள் மீது தொடரப்பட்டிருந்தன. அவர்கள் எங்கு சென்றாலும், எந்த வெளிநாட்டவரை சந்தித்தாலும் கண்காணிக்கப்படும் அச்சமிகு சூழலே நிலவியது. ஆனாலும் அவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தெருவில் இறங்கிப்போராடிக்கொண்டிருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் தாய்மார் பெரும் எதிர்பார்ப்போடு தெருவுக்கு வந்தனர். தொடர்ச்சியாகப் போராடினால் இந்த அரசாவது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உரியதொரு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை அதிகளவில் கொண்டிருந்தனர். அதன்படியே தான் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலுமென போராட்டங்கள் ஆரம்பமாகின.
போராட்டங்கள் என்றால் ஒரு இடத்தில் கூடி கோசமெழுப்பிவிட்டு, மகஜர் கையளித்துவிட்டு செல்வதல்ல. இனிவரும் காலத்திற்கான தங்கள் வாழ்க்கையையே தெருவோரம் அமைக்கப்படும் போராட்டக்கூடாரத்துக்குள் செலவழிக்கப்போகும் வகையிலான போராட்டம். அங்கேயே தங்கியிருந்து, தெருவில் வருவோர் போவோர், வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு தூதர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் என அனைவருக்கு முன்னாலும் தம் கண்ணீரைக் கொட்டி போராடும் களத்திற்கு அந்தத் தாய்மார் வந்தனர்.

இப்படியாக அவர்கள் இரவுபகலாகப் போராடத் தொடங்கி 3 வருடங்கள் கடந்துவிட்டன. இதற்குள் நடந்தவையெவை?

சர்வதேச ஊடகக் கவனம்

அதிகளவில் சர்வதேச ஊடகக் கவனத்தை காணாமலாக்கப்பட்டவர்களினால் ஈர்க்க முடிந்திருக்கிறது. அனேகமாக சர்வதேச ஊடகங்கள் என அடையாளப்படுத்தும் அனைத்துமே காணாமலாக்கப்பட்டோர் போராட்டத்தை நேரில் தரித்து அறிக்கைகள் வெளியிட்டுவிட்டன. செய்தியிடல்கள் செய்துவிட்டன. ஆவணப்படங்கள் வந்துவிட்டன. லிபியா போல, சூடான் போல, சேர்பியா போல இலங்கையிலும் காணாமலாக்கப்பட்டோர் விடயம் கொதிநெருப்பாக உள்ளதென்ற செய்தி உலகமயப்பட்ட நன்மை இதனால் நடந்திருக்கிறது. இந்த நன்மை இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை சர்;வதேசமயப்படுத்தவே, அரசுக்கு ஏற்பட்ட பொறுப்புக்கூறல் நெருக்குதல்கள், ஓ.எம்.பியின் உதயத்திற்கு வழிவகுத்தது.

ஒரு துரதிஸ்டம்

ஆனால் துரதிஸ்டம் என்னவெனில், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானவென உருவாக்கப்பட்ட ஓ.எம்.பி மீது பாதிக்கப்பட்டவர்கள் அவநம்பிக்கைக் கொண்டிருந்தனர். கடந்தகாலத்தில் இதுபோன்று உருவாக்கப்பட்ட விசாரணைக்குழுக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்கள் இந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஓ.எம்.பியின் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், இதன் மீது தமக்கு நம்பிக்கையில்லை, வெறுமனே நன்கொடைகளும், நஸ்டஈடுகளும் மட்டும் காணாமாலாக்கப்பட்டவர்களை தேடியறிதலுக்கான வழிமுறையல்ல என்பதைத் தெளிவாகவே தெரிவித்துவிட்டனர். அந்த ஒன்றுகூடலுடன் ஓ.எம்.பியின் நடவடிக்கைகள் பெரியளவில் காணாமலாக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுபட்டதாகத் தெரியவில்லை. 

சர்வதேச அமைப்புக்களது நிகழ்வுகள்

போராடும் மக்களின் பிரச்சினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள், அம்னெஸ்டி இன்ரநெசனல், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவற்றின் கரிசனைக்கும் உள்ளாகின. கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோர் தினத்தை கொழும்பில் பெரியளவில் நடத்திமுடித்தது அம்னெஸ்ரி இன்ரநெசனல் அமைப்பு. இதன்மூலம் குறித்த பிரச்சினை இந்நாட்டின் பெரும்பான்மையினருக்கும் எடுத்துச்செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களைத் தாண்டி, பெரியளவில் வெகுசன கவனிப்பை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தவில்லை. இலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் காணாமலாக்கப்படும் சம்பவங்கள் 1972 ஆம் ஆண்டு தொடக்கமே நிலவிவருவதால், ஆட்கள் காணாமலாக்கப்படுதல் என்பது சாதாரணமானதொரு விடயம் என்கிற உளவியலுக்கு பெரும்பான்மையின மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.

விசாரணைகள் அளவுக்கு முன்னேற்றம்

சமநேரத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளும், குற்றப்புலனாய்வினரின் விசாரணைகளும் இடம்பெற்றன. இவை கடந்த ஆட்சிக்காலத்தில் சாத்தியமற்றிருந்தது. தம் பிள்ளைகளைக் கடத்தியோரை உறவுகள் அடையாளம் காட்டியும் விசாரணைகள் இடம்பெறாமல் இருந்தன. போராட்டங்களின் விளைவாகவும், இந்த அரசுக்கு இருந்த பொறுப்புக்கூறலின் விளைவாகவும் கண்துடைப்புக்கேனும் விசாரணைகள் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் இந்தப் பின்னணியில் எடுத்து நோக்கத்தக்கது. குறித்த விசாரணை தற்போதும் சூடுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசாரணைகளின் மூலம் கடத்தப்பட்டவர்களுக்கு நடந்ததென்ன? கடத்தலாளிகளின் பின்னாலிருக்கும் சூத்திரதாரிகள் யார்? கடத்தலின் நோக்கமென்ன போன்ற விடயங்கள் இதுபோன்ற விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டால், அந்த விடயங்களில் இப்போது தெருவில் இருந்து போராடிக்கொண்டிருக்கும் பல தாய்மார்களுக்குப் பதிலிருக்கும்.

பயன்படுத்திக்கொண்ட தொண்டு நிறுவனங்கள்

காணாமல் போனோரின் பிரச்சினையை, அவர்தம் தொடர் போராட்டத்தை உள்ள10ர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதனைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே தெரிவித்தும் வருகின்றனர். இலங்கையின் அரசியல்மாற்றங்களுக்கும், மேற்கு சார்ந்த அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கும் காணாமல் போனோரின் விடயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் இலங்கைக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டிய தேவை ஏற்படுமோ அப்போதெல்லாம் காணாமலாக்கப்பட்டவர்களது விடயம் தொண்டு நிறுவனங்களினால் கையிலெடுக்கப்படுகின்றன. போராடும் மக்களையே துண்டுதுண்டாகப் பிரித்துத் தங்கள் தேவைக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களாலும் முன்வைக்கப்படுகின்றது.

போராடும் மக்கள் எப்படியிருக்கின்றனர்?

இப்போது வவுனியாவைத் தவிர போராட்டம் தொடங்கிய இடத்தில், அதே கூடாரத்தில் யாருமே இல்லை. அனைவருமே இடம்மாறிவிட்டனர். கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய இடம் கந்தசுவாமி ஆலய முன்றலாக இருந்தமையால், ஆலய நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின்காரணமாக, இப்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாக இடம்மாறியிருக்கின்றனர். முன்னரைவிட குறைவான மக்களே கலந்துகொண்டிருப்பதை இப்போது அவதானிக்கலாம். வவுனியாவில் போராடும் தாய்மார் தபால் நிலையத்துக்கு அருகில் அதே பாலை மரத்தடிக் கூடாரத்தில் தான் இருக்கின்றனர். அது பொது இடமாக இருப்பதனால் அவர்களுக்கு இடம்மாற வேண்டிய தேவை இருக்கவில்லை. சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். முல்லைத்தீல் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கொட்டகை அமைத்துப் போராடத்தொடங்கிய தாய்மார், இப்போது முல்லைத்தீவு இந்து மகாவித்தியாலயத்தக்கு அருகில் இடம்மாறியிருக்கின்றனர். இந்த இடம்மாற்றங்களுக்கு உள்ள10ர்வாசிகளின் நெருக்குதல்களும் பிரதான காரணம். அந்தத்தந்தப் பகுதிகளுக்கு பிரச்சினைகளோ, தடங்கல்களோ வராதளவுக்குப் போராடும் மக்களின் இடங்கள் மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். கிழக்கு மாகாணத்தில் போராடத் தொடங்கிய தாய்மார்களைப் பற்றிய செய்திகளே வருவதில்லை.

உளப்பாதிப்பு உண்டு

தெருவோரம் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் போராடத்தொடங்கிய காலம் தொட்டு இந்த மக்கள் எதிர்கொள்ளும் உளச்சிக்கல் குறித்து யாரும் கரிசனைகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டத்துக்கு முன்புவரை, காணாமலாக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளோடு (தாய், துணைவி, சகோதரி, தந்தை) அவர்தம் குடும்பத்தவர்கள் துணையாயிருந்தனர். காணாமல்போன தனது பிள்ளையின் ஃ கணவனின் நினைவுவரும்போதெல்லாம் அவர்களின் அருகிருந்து ஆற்றுப்படுத்தவும், நினைவை திசைதிருப்பவும் யாராவது ஒரு உறவினர் கூட இருந்தனர். ஆனால் போராடத்தொடங்கியபின்னர் அந்நிலமை முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. அவர்கள் தங்கியிருக்கும் முழுச்சூழலும் காணாமலாக்கப்பட்டவர்களின் நிழற்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. திருப்பித்திருப்பி காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகளே அந்தச் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கதைகளுக்கு ஓய்வே இல்லை. புதிதுபுதிதாக வரும் ஒவ்வொருவருக்கும் தம் கதையை மீளமீள தளதளத்த குரலில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தாம் இறந்தாலாவது தமது பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் போராடும் பல தாய்மார் மனதில் இருக்கின்றது. இப்படியாக ஒரே நினைவுடனும், அழுகையுடனும்தான் அந்தத் தாய்மார் தங்கள் மூன்றுவருடங்களைக் கடந்திருக்கின்றனர். அதற்குள் வாழ்ந்து, நினைவில் அமிழ்ந்து கடத்தல் என்பது அவ்வளவு இலகுவதானதல்ல. எனவே உளவுரண் சார்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தவும், பலம்பெற வைக்கவும் உரிய உளவளப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மிக அவசியமானவை.

ஏனைய நோய்கள்

போராடும் களம் தெருவோரமாக இருப்பதனால், தூசி, இரைச்சல் என நோய்த்தூண்டல் காரணிகள் அதிகமாக இருக்கின்றன. அத்துடன் போராடுபவர்களில் அனேகர் முதியவர்கள். ஏற்கனவே நீரிழிவு, சிறுநீரக நோய்கள், அல்சர், பிரசர் என முதுமைக்கேயுரிய பல்வேறு நோய்களும் அவர்களைப் பிடித்திருக்கிறது. போராடத்தொடங்கிய நாள்தொட்டு சரியான மருத்துவமின்மை, உரிய நேரத்தக்கு உணவு உட்கொள்ளாமை காரணமாக அந்த நோயின் அளவும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. போராட்டக் களத்திலிருந்து சிலர் அடிக்கடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சந்தரப்பங்களும் ஏற்பட்டிருக்கிறது. மனஅழுத்தமும், வறுமையும், பிள்ளைகள் பற்றி எவ்வித பொறுப்புக்கூறலுமற்ற நிலையும் போராடுபவர்களை மேலும்மேலும் நோய்வாய்ப்படவைத்திருக்கிறது.

இதன் விளைவாக இதுவரை கிளிநொச்சி போராட்ட களத்தில் மட்டும் 14 பேர் இறந்திருக்கின்றனர். முல்லைத்தீவு போராட்டகளத்தில் அண்மையில் இரண்டு தாய்மார் இறந்திருக்கின்றனர். அதில் தாயார் ஒருவர் இறுதிப்போரின்போது காணாமலாக்கப்பட்ட தனது மகனை அவர் தேடியலைந்தார். மிகுந்த வறுமைக்கோட்டின் வாழும் அவரும், அவரது ஒரே மகளும், காணாமல்போன குடும்பத்தின் ஒரே ஆண்மகன் மீண்டாலே தங்கள் வாழ்வு மீளும் என நம்பியிருந்தனர். அதற்காகவே அந்தத் தாய் தன் நோய்நிலையும் மறந்துபோராடினார். இறுதியில் அவரும் இறந்துவிட்டார். அவரின் இறப்புக்கு;ப் பின்னர், அவரளவுக்கு தியாகித்துப் போராடுமளவுக்கு யாருமில்லை. எனவே காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியலையும் ஒருவரின் இறப்பானது, ஒரு சாட்சியத்தின் இறப்பாகும். சாட்சியங்கள் இறந்துபோக அந்த விடயமும் கைவிட்டுப்போகும். இந்த நிலையைத்தான் காணாமலாக்கப்பட்டவர்களின் மூன்றாண்;டுப்போராட்டம் எட்டியிருக்கிறது என்பது துயரமான செய்தி.

எனவே இனப்படுகொலையின், மனித உரிமை மீறல்களின் சாட்சியமாக எஞ்சியிருக்கும் அந்தத் தாய்மாரைக் காப்பாற்றுவதற்கான அரசியல், பொருளாதார, சுகாதார பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்படுதல் வேண்டும். அரசின் ஏமாற்று வார்த்தைகளும், செயற்றிட்டங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. ஆனால் போராடியேனும் அவர்தம் பிள்ளைகளைக் காணாமலாக்கப்பட்ட முகங்களை அரங்கின் முன் கொண்டுவர சாட்சியங்களின் உயிர்வாழ்வு அவசியமானதாகும். அதற்கான பொறிமுறை பற்றி தமிழ் சமூகம் சிந்தித்தல் வேண்டும்.

ஊறுகாய்| ஜெரா


சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஓர் மடல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம் இருப்பின் வழக்குத் தொடருமாறும், இல்லையேல் விடுதலை செய்யுமாறும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் அரசியல் கைதிகள் மீண்டும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரான அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் 07.08 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதன் போது தம்மை ஏன் விடுதலை செய்யமுடியாது? என அரசியல் கைதிகள் கேள்வியெழுப்பியதாக அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.ஏ.அசீம் மௌலவி அவர்கள் தெரிவிக்கையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பலர் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் கூட்டமையால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை -கோத்தா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.

சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் !

தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம்.

அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள் நாம் மறந்தே போய்விட்டோம். இந்த நாளில் சர்வதேசம் சத்தமின்றி யுத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற போதுதான், தமிழகளின் அழிவு அல்லது அழிப்புக்குரிய நிகழ்ச்சி நிரல்கள் தொடங்கப்பட்டன. தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளுவதற்கான வியூகங்கள் அமைக்கப் பட்டன. சர்வதேசம் தமிழர் தாயகத்தை சுற்றி வளைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கின. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியைச் சுற்றி ஆசிய மற்றும் தெற்காசியாவின் அதிகார மையங்களை ஒரே நேர்கோட்டில் இணைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்தே தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமது அரசியல் இருப்பை தக்க வைக்க, அல்லது மீட்டெடுக்க விழுந்த அடிகளை தாள்பணிந்து வாங்கிக் கொண்டு அகிம்சைவழியில்தான் தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. அகிம்சைப் போராட்டம் முற்றுப் பெற்று ஆயுத வழியில் பயணிக்க தொடங்கிய எழுபதுகளில் இருந்து, கட்டம் கட்டமாக சர்வதேச நாடுகள், தமிழர்களுக்கும் ஆட்சியில் இருந்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கும் இடையில் வந்து போகத் தொடங்கிவிட்டன.

இதனால்தான் ஆரம்பத்தில் உள்வீட்டுப் பிரச்சனையாக இருந்த இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. வல்லரசுகள், வல்லரசுகளை தாங்கி நிற்கும் ஐ.நா, தகுதி இல்லா விட்டாலும் வல்லரசாகத் துடிக்கும் மற்றும் சில நாடுகள் இந்த இனப்பிரச்சனைக்குள்ளும், அல்லது மத்தியஸ்தத்துக்கும் என உள்ளே வந்து போயின.

இன்று தமிழர்கள்தான் வீழ்ந்தார்கள், தோற்றார்கள் என்று சொல்லப்படுகிற நிலையில், நாம் தொடர்ந்து வருபவற்றை தமிழர்கள் என்கிற பொது அடிப்படையில் புரிந்து கொண்டு செல்லவேண்டியது அவசியம். தமிழர்களின் இராணுவ படை பலம், மற்றும் படைநகர்த்தல் தந்திரோபாயம் பற்றி கேள்வியும் வியப்பும் கொண்ட சர்வதேச நாடுகள்; (வல்லரசுகள் உட்பட) அவர்களின் அரசியல் இராஜ தந்திரம் மற்றும் அரசியல் மேலாண்மை பற்றி முழுமையாக புரிந்தும் தெரிந்தும் கொண்டது மேலே குறிப்பிட்ட அந்த நாட்களில் தான். அந்த நாட்களில் என்னதான் நடந்தது? 2003 ம் ஆண்டு ஜூன் 9 மற்றும் 10 ம் திகதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடை பெற்ற “இலங்கைக்கான அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமான உதவி வழங்கும் மாநாடு”.(The Tokyo Conference on Reconstruction and Development of Sri Lanka ) ப்ப்பூஊ இதுதானா? என்று நீங்கள் கேட்கலாம். இதுதான். இதேதான். இதே மாநாட்டு முடிவில்தான் தமிழர்களை, தமிழர்களின் வலிமையை, பேரம்பேசும் சக்தியை அழிக்க மாநாட்டு முடிவில் சர்வதேசம் தமக்குள்ள தீர்மானித்ததாகச் சொல்லப்படுகிறது.

நீங்கள் கேட்கலாம், “தமிழர் தரப்பில் இருந்து இந்த மாநாட்டுக்கு யாருமே செல்லவில்லையே? அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லையே” என்று. ஆம் . தமிழர் தரப்பில் இருந்து யாருமே செல்ல வில்லை. செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும், முடிவுகளும் கூட தமிழர் தரப்பிடம் இருக்கவில்லை. ஆனால், மாநாட்டுக்கு போகாமல் விட்டதுதான் சர்வதேசத்துக்குப் பிரச்சனையாக இருந்தது. அதுதான் அவர்களுக்குள் உறுத்தலை ஏற்படுத்தியது. 51 உதவி வழங்கும் நாடுகள், 22 உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அதன் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப் பட்ட இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு பிரதி நிதிகளும் கலந்து கொண்டே ஆகவேண்டும். அதற்கான அழைப்புகள் நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு முந்தய பேச்சு வார்த்தை மேசைகளிலேயே பேசப்பட்டாகி விட்டது.

சரி அந்த மாநாட்டில் என்னதான் நடக்கும்? என்னதான் நடந்தது? போரில் சம்பந்தப் பட்ட சமபங்குள்ள இரு பக்க பிரதி நிதிகளும் மாநாட்டுக்கு கட்டாயம் சமூகம் தருவதுடன், அந்த சர்வதேச பிரதிநிதிகளின் அரங்கத்திற்கு முன் அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடவேண்டும். அப்படி கைச்சாத்து இட்டால் இலங்கைக்கான அபிவிருத்திக்கு பல கோடி ட்ரில்லியன் டொலர்கள் உதவித் தொகையாக வந்து சேர்ந்திருக்கும். சர்வதேசம் வழங்கியிருக்கும். ஒருதரப்பு அதில் கலந்து கொள்ளாமல் விட்டால் கூட முழுத்தொகையும் கிடைக்காது. (பயணச் செலவை வழங்குவார்கள் போல) அப்போது அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் இலங்கை அரசு சார்பாக கலந்து கொண்டவர். கலந்து கொண்டதற்காக குறிப்பிட்ட தொகை வழங்கப் பட்டது. அந்த பணத்தில் நிலைமை பற்றி எந்த அதிகார பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

தமிழர் தரப்பில் இருந்து யாருமே வரமாட்டோம் என்று ஒரே பிடியாக மறுத்து விட்டார்கள். தமிழர் தரப்பில் இருந்து அதற்காக கூறப்பட்டவை நொண்டிச் சாட்டுகள் என்று சர்வதேசத்திற்கும் தெரியும். அதற்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மாநாட்டுக்கு தம்மை அழைக்க வில்லை என்கிற குற்றச் சாட்டுடன், சரிசம பங்காளிகள் என்கின்ற வகிபாகத்தை சர்வதேசம் கவனமெடுக்கவில்லை என்றும், அது பக்க சார்பானது என்றும், ஏற்கனவே தமிழர் தரப்பு தற்காலிகமாக பேச்சு வார்த்தையில் இருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரப்போகும் சர்வதேச உதவி வழங்கும் இந்த மாநாட்டையும், அதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமப் பொறிகளையும் கருத்தில் கொண்டு, அதனை எப்படி புறக்கணிக்கலாம் என்று சிந்தித்த தமிழர் தரப்புக்கு கிடைத்த அல்வாதான் அமெரிக்காவில் நடந்த “இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு” தொடர்பான கலந்தாய்வில் அழைப்பு விடுக்கப்படாமையாகும். அமெரிக்காவில் உள்ள “விடுதலைப்புலிகள் மீதான தடை” தான் காரணமாகியிருந்தது.

பெரும் பொறிகளை மறைத்து வைத்து விட்டே சர்வதேசம் டோக்கியோவிற்கு தமிழரை அழைத்ததுதான் உண்மை. தமிழர் தரப்பு நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று உள்ளூரிலேயே பலர் ஆசைப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் நினைத்துப் பார்க்கவே முடியாத அவ்வளவு தொகையான பணம் வரக் காத்திருந்தது. தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று இறுதி மணி நேரம் வரையும் சர்வதேசம் நம்பியது. எத்தனையோ தொலை பேசி அழைப்புக்கள் வன்னி மையத்தை நோக்கி பறந்தன. உலகத்தலைவர்கள்- தூதுவர்களின் வேண்டுகைகள் செய்திகள், பத்திரிகைகளில் பிரசுரமாகின.

நடுநிலையாளர்களின் கெஞ்சல்கள், சில முதலாளி நாடுகளின் வெருட்டல்கள், கண்டிப்புக்கள், கண்டனங்கள் இப்படிப்பல நாடகங்கள் ஜூன் 8 ம் திகதி அதாவது மாநாட்டுக்கு முந்தய நாள் வரையும் போட்டுக் காட்டினார்கள். அதற்காக கட்டுநாயகாவில் சிறப்பு விமானம் ஒன்றும் சிறப்பு கடமையில் விமானப் பணியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் தமிழர் தரப்பு தானும் தன்பாடுமாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்களில் வரும் மஞ்சள் சோறும் கோழி இறைச்சிக் கறியோடு கத்தரிக்காய் பால்கறியையும் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழர் தரப்பு ஒரு விதமான மௌனத்தை கடைப் பிடித்தார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்த மௌனத்தின் பின்னால் ஒரு ஆத்ம திருப்தியை தமிழர் தரப்பு பெற்றுக்கொண்டதே உண்மை என்பது அப்போது வெளியார் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன் இப்போதும் அதனை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் கண்ணோட்டம் பலருக்கு இல்லை என்பதே உண்மை. அவர்களின் மௌனங்களுக்குப் பின்னால், கூட நின்று உயிரும் சதையுமாக களமாடிய மாவீரக்ள், போராளிகள் பொதுமக்களின் அர்ப்பணிக்கு இந்த உலகில் எதனையும் கொண்டு ஈடு செய்ய முடியாது என்பதே அன்றைய தமிழர் பிரதிநிதிகளின் மௌனத்துக்குக் காரணம். ஆனால், உலக நாடுகளுக்கும், முதலாளிகளுக்கும் மாமா வேலைபார்த்த யசூசி அகாசிக்கு ஏமாற்றமே மிஞ்சிப் போனது. சப்பை மூக்கு வீங்கிப் போனது.

அபிவிருத்தி என்கிற பெயரில் இதுவரை உலக போராட்டங்கள் பல நசுக்கப் பட்டிருக்கின்றன. அழிக்கப் பட்டிருக்கின்றன. உருத்தெரியாமல் போகச் செய்யப் பட்டிருக்கின்றன. தமிழர் தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கையொப்பம் இட்டிருந்தால் எந்த முடிவையும் தனித்து எடுக்க முடியாது என்பதுடன், பணம் கொடுத்த நாடுகள் காரணம் இன்றி இலங்கைக்குள் நுழையும். கால் பாதிக்கும், கண்காணிக்கும். கேள்வியே கேட்கமுடியாது. ஏற்கனவே சிங்கள பேரினவாததுக்குதான் அடிமை. கையொப்பம் இட்டிருந்தால் அனைத்து நாடுகளுக்கும் அடிமையாகப் போக வேண்டி வந்திருக்கும். தமிழர்களுக்கான தீர்வு என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இப்பொழுது ஓரளவுக்காவது பேச்சில் தீர்வு பற்றி சொல்கிறார்கள்.

தமிழர்கள் மீளவே முடியாத, முன் வைத்த காலை திருப்பிக் கூட வைக்க முடியாத வரலாற்றுத் தடத்தில் போராட்டம் பயணித்திருக்கும். தொலைந்திருக்கும். தமிழர் விடுதலைப் போராட்டத்தை தவிர உலகில் நடந்த அத்தனை விடுதலைப் போராட்டங்களுக்கும் எதோ ஒரு குழு அல்லது நாடு உதவி செய்திருக்கும். செய்திருக்கின்றன. ஆனால் தமிழர் போராட்டம் மட்டும்தான் சொந்த மக்களின் துணையுடன் நடாத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்புடன் மட்டுமே கொண்டு நகர்த்தப்பட்டது. அவற்றை அடகு வைக்க தமிழர் தரப்பு ஒருபோதும் விரும்பவில்லை, எப்போதும் அதற்குத் தாயாருமில்லை என்பதும் காரணம். பணத்திற்கு அடிமையாகப் போக தமிழர் தரப்பும், தலைமையும் என்றுமே நினைத்ததுமில்லை.

அதனாலென்ன வெளிநாடுகள் இலங்கைக்குள் நுழைந்தால் என்ன? நுழைந்துவிட்டுப் போகட்டுமே? இங்கிருந்து கொண்டு போக அவர்களுக்கு என்ன இருக்கிறது இங்கே? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். இங்கே என்ன இல்லை? என்பதுதான் தமிழர் பிரதிநிதிகளின் மறு கேள்வியாக இருந்தது. உள்ளே நுழையும் வெளிநாடுகள் மற்றும் முதலாளிகளின் இலக்கு தமிழர்களாகிய எமது வாழ்க்கையின் மீதான அக்கறையில்லை. எமது இழப்புகளுக்கு மருந்து கொண்டுவரப்போவதில்லை. மாறாக அவர்களுக்கு எமது வளங்கள் மீதுதான் கண். 2019 இன்று எமது வளங்கள் பங்கு போடப்பட்டிருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மன்னார் பேசாலையில் மசகெண்ணை, புல்மோட்டையின் கனிம மணல், தமிழர்களின் காட்டு வளம், மிகப்பெரிய பரப்பளவில் வடக்கு கடலின் மீன்வளம், பராமரிக்கப்பட்டால் வற்றாத நன்னீர்வளம், இயற்கையாகவே அமைந்த பல நீரேரிகளைக் கொண்ட துறைமுக கடற்கரைகள், எண்ணெய்க் குதங்கள், நிலத்தடி கனிமங்கள் என்று எம்மிடம் என்ன இல்லை? இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் பயன்பாட்டிற்கு அப்பால் யார்யாரோ இன்று கொள்ளையடித்துப் போகிறார்களே? இன்று இலங்கை அரசின் உதவியுடன் கொள்ளைபோகும் இந்த வளங்கள், அன்று நாம் கையொப்பம் போட்டிருந்தால் அன்றே கொள்ளையிடத் தொடங்கியிருப்பார்கள்.

அந்த மாநாட்டில் அவர்கள் தரும் பணத்திற்கு இந்த எமது இயற்கை வளங்கள் ஈடாகுமா? எதிர்கால சந்ததியின் வாழ்வைக் கருத்தில் கொண்டே தமிழர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்தார்கள். எதற்காகவாவது இனி ஒரு உலக யுத்தம் உலகில் எந்த மூலையில் ஏற்பட்டாலும் இலங்கையின் பெறுமதி உங்களுக்கு அப்போது புரிந்துகொள்ள முடியும். இன்று சீனம் வந்திட்டு, அரபி வந்திட்டு, ஹிந்தி வந்திட்டு என்று புலம்பும் நீங்கள் இன்னும் ஆழமாக வரலாறைப் படிப்பது அவசியமானது.

இந்த சர்வதேசத்தின் தோல்வியைப் பற்றி, மூக்குடைவைப் பற்றி சர்வதேசம் அமுக்கியே வாசித்தது. ஊடகங்கள் இது பற்றி பெரிதாக கணக்கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு ஆச்சரியம்! இந்த இடத்தில் இருந்து தமிழர் தரப்பு எப்படி தப்பிக் கொண்டது? (அவன் ஒருவனைத் தவிர யாருக்கும் இது தெரியாது) தப்பினார்கள் என்பதைவிட கற்றுக்கொண்டார்கள் என்பது பொருத்தமானது.

எந்த சலனமும் இல்லாமல் சர்வதேசம் பின்னிய, “அபிவிருத்தி” என்ற சூழ்ச்சி வலையில் சிக்காமல் தமிழர் தரப்பு தப்பிக்க கொண்டது. இத்தனை நாடுகளின் அரசியல் நகர்வுகளையும் அவர்கள் புரிந்து தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த சில்லிப் பையன்களிடமா இவ்வளவு வலிமை? அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம், தலைமையும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் பெரும் தலைகளும் காரணம் என்று புரிந்து கொண்டார்கள். சண்டை என்றால் அடித்து நசுக்கலாம். இது அரசியல். கத்தியில் நடக்க வேண்டும். அதுவும் ஒரு போராட்ட அமைப்பு இவ்வளவு முன்னேற்றகரமானதா? உலக அரசியலில் தெளிவு கொண்டதா? என்று சிந்தித்தது சர்வதேசம்.

இவர்களை வளரவிட்டால் இந்துசமுத்திரத்தை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் ஆளுகை செய்வது கடினம். ஆகவேதான் அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரல்களை எழுதத் தொடங்கியது சர்வதேசம். அதனைப் புரிந்து கொண்ட தமிழர்களும் அடிபட்ட நாகம் கொத்தவரும் என்றும் தெரிந்திருந்தார்கள். அதனை எதிர்கொள்ள தம்மால் இயன்ற எதிர்நடவடிக்கைகளை செய்யத் தவறவில்லை. அடிமையாக மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்று தமக்கான வழியை பலவலிகளோடு ஏற்று நடந்தார்கள்.

அபிவிருத்தி என்ற ஒன்றிற்குள்ளால் போனால் பல விடயங்களை கதைத்துப் பேசி பெற்றுக் கொள்ளலாம்தானே என்று பலர் அன்று கேட்டார்கள். ஒரு இராணுவ சமநிலைச் சக்தியாக நின்று அதுவரை பேசிய பேச்சுகளுக்கே எந்த அசைவும், தீர்வும், நம்பிக்கை வாக்குறுதிகளும் கிடைக்காத பொழுது இனி எதனை நம்பி அவர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போக முடியும் என்று கேள்வி கேட்ட இவர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்.

மாநாட்டுக்குப் போய் கையெழுத்து போட்டால் பணமாவது வந்திருக்குமே என்றும் கேட்கலாம். பணம் வந்திருக்கும். ஆனால் யாருக்கு வந்திருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. 2004 இல் நடந்த ஆழிப்பேரலை (tsunami) அனர்த்தங்களுக்கான மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக தமிழர் தரப்பும் இலங்கை அரசும் சேர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டிய ஆக்க குறைந்த சம அதிகாரமுள்ள “சுனாமிக் பொதுக் கட்டமைப்பு” என்கின்ற ஒன்றைக்கூட இலங்கை அரசும் மத அடிப்படைவாத அமைப்புகளும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் அந்த பணம் தமிழர்களுக்காகவும் பயன்பட்டிருக்குமா? என்ற கேள்வி விசாலமானது.

முன்னர் இப்படிப் பல சம்பவங்களில் சிங்கள பேரினவாதத்தின் மனோநிலையை புரிந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகள், “வரலாறு எமது வழிகாட்டி” என்கின்ற அடிப்படையிலேயே போராட்ட பாதையெங்கும் பல ஆரோக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.

இந்த சம்பவங்கள் நடந்து ஐந்து வருடங்களில் தமிழர் அழிப்பிற்கான யுத்தம் பெருவீச்சில் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அது முடிவுக்கட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. விண்ணிலிருந்து, கடலின் தொலைவிலிருந்து, அருகே உபகண்டத்திலிருந்து பல நாடுகள், இரத்தம் சொட்டச் சொட்ட தமிழர் சந்ததி கருகி புதையும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன . வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தன. இன்றைக்கு மருந்து போட வந்திருக்கிறார்கள். எமது மக்களின் காயங்கள் ஆறாதவை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. சுயநல வஞ்சக அரசியலில், தமிழர்களிடம் தோற்றுப் போன சர்வதேசம் ஒன்று கூடி, உயிரினங்களுக்கு எதிராக பயன்படுத்தவே கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தி பலி(ழி) வாங்கிக் கொண்டது.

புதைக்கப் படுபவைகள் எல்லாம் விதைகளா? என்று எமக்குத் தெரியாது. ஆனால் மூளைத்திறன் உள்ள விதைகள் தூவப் பட்டுதான் இருக்கிறது. காலமழை பொழியும் பொழுது முளைவிட்டே ஆகும். முளைகள் வானுயர கிளை பரப்பியே ஆகும் என்கின்ற நம்பிக்கையில் நாமும்.

எழுதியது : புலர்வுக்காக .. ப.வித்யாசாகர்

எம் தேசத்தின் வளங்கள் இவை … இப்போது ?

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

      “தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.”

“கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.”

“இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.”

“உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம்.”

“வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும்.”

“அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும்.”

இவர்கள் அனைவரும் மரத்திலிருந்து விழவில்லை. இவர்களுக்கு விபத்து நேரவில்லை. உடல் உபாதைகளுடன் பிறக்கவுமில்லை. 30 வருடங்களாக நீடித்த கொடூர போரினுள் சிக்குண்டு தினம் தினம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள். காயப்பட்ட நேரமே செத்திருந்தால் இந்த நரக வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க நேர்ந்திருக்காதே என்று ஒவ்வொரு நாளும் அவஸ்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள்.

6 வயதாக இருக்கும்போது தலையில் காயமடைந்த அகழ்விழி உட்பட போரின்போது நேரடி தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி, ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலே மகளை இழந்து இரும்புத்துண்டுகளை சுமந்து வாழும் தாய் என 10 பேரை சந்திக்க முல்லைத்தீவு சென்றிருந்தேன். வயிற்றுப் பசிப் போராட்டத்துக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய குரல்களுக்கு செவிசாயுங்கள்.

இப்ப இவா ஸ்கூலுக்குப் போறதில்ல. தலையில காயம் பட்டதால அடிக்கடி வலிப்பு வரும். இந்த வருசம் ஓ.எல் பரீட்சை, என்னதான் செய்ய..?

2009 மார்ச் மாதம் புதுமாத்தளன்ல இருக்கும்போதுதான் இவா காயம்பட்டா. அப்போ 6 வயசிருக்கும். நாங்க தங்கியியிருந்த இடத்தில ஷெல் அடிக்கிற சத்தம், ரவுன்ட்ஸ் சத்தம் எதுவுமே எங்களுக்கு கேக்கல. நல்ல பகல் நேரம் அது. நாங்க தரப்பாள் கொட்டிலுக்கத்தான் இருந்தம். தூரத்திலென்டா சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. திடீரென்று மகள் சரிஞ்சி விழுந்திட்டா. என்ன நடந்தது, என்ன நடக்கிறதென்று ஒன்டுமே எனக்கு தெரியேல்ல. பேந்துதான் தலையில் காயம்பட்டத தெரிஞ்சு கொண்டன். இவாட பிடறியில பட்ட ‘பீஸ்’ உள்ள போய் காதுப்பக்கமா வீங்கி இருந்தது. உடனடியா அப்போ அங்க இருந்த தற்காலிக ஹொஸ்பிட்டலுக்குத் தூக்கிக்கொண்டுபோனன். ஒபரேசன் செய்யவேணும், ஆனா மருந்து இல்லையெண்டு டொக்டர் சொன்னார்.

என்ன செய்தன் ஏது செய்தன் என்ற நினைவே இப்ப இல்ல. எப்படியாவது இராணுவத்தின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து முகாமில இருந்த ஹொஸ்பிடல்ல வச்சி வைத்தியம் பார்த்தன். அவங்க உடனே வவுனியாவுக்குக் கொண்டு போனவங்கள். பெரிய டொக்டர் வந்து பார்த்திட்டு இப்பவே கண்டிக்குக் கொண்டுப் போகச் சொன்னார். இரண்டு மாதங்களா அங்க வச்சிதான் மகளுக்கு வைத்தியம் பார்த்தம். நாலு நாள் கழிச்சிதான் கண் முழிச்சா, 20 நாளைக்குப் பிறகுதான் பேச ஆரம்பிச்சா.

ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று ஊசி அடிப்பினம். சேலைனும் ஏத்துவினம். கடைசியா நரம்பு பாதிக்கப்படும், ஒபரேசன் செய்ய முடியாதென்று டொக்டர் சொன்னார்.

வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் நல்லாத்தான் இருந்தவ. பேந்துதான் இந்த வலிப்பு வரத் தொடங்கிற்று. இப்போ ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது. இப்போ ஒவ்வொரு மாதமும் மல்லாகம் ஹொஸ்பிட்டலுக்கு கிளினிக் போறம். வலிப்பு வாறதுக்கு மட்டும் குலுசை தருவினம்.

இப்ப சொல்றாங்கள் வெளிநாடு வழியா ஒபரேசன் செய்யலாம் என்று. எங்கேயும் வெளிக்கிடேல்ல. 8, 9 இலட்சம் செலவாகுமாம். நான் தோட்ட வேலைதான் செய்றன். மூத்த மகன் மட்டும்தான் வேலைக்குப் போறார். மற்ற மூன்று பிள்ளைகளும் படிக்கினம். இத்தனை இலட்சத்துக்கு நான் எங்க போக?

கொஞ்சக் காலமா இந்த வலி இருக்கேல்ல. ஆனால், இரண்டு நாளைக்கு முன்னால கடலுக்குப் போயிருந்தன். தனியா வலைய பிடிச்சி இழுக்க முடியாதளவுக்கு கை விறைச்சிட்டு. ஒரு மாதிரி சமாளிச்சி வந்து சேர்ந்திட்டன்.

1994ஆம் ஆண்டு நான் காயப்பட்டபோது இரண்டு கைலயும் ‘பீஸ்’ இறங்கீற்று. அப்போது ட்ரீட்மென்ட் செய்தனான். ஆனால், ‘பீஸ்ஸ’ வெளியால எடுக்கேல்ல. வலது கை இரண்டு விரலும் இழுத்திருந்தது. பந்து வச்சி எக்ஸசைஸ் செய்து சரிவந்திட்டுது. ஆனால் இன்னும் ‘போல்ஸ்’ ஓடித்திரியுது. அத எடுக்க ஏலாது.

இடது கை தோல் மூட்டுக்குள்ள இருக்கிற ‘பீஸால’தான் கடும் வேதனையா கிடக்கு. ஹொஸ்பிட்டல்ல கொண்டு காட்டினன். எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்திட்டு அதை எடுக்க ஏலாதெண்டு சொல்லிப்போட்டாங்கள். எடுத்தால் கை விளங்காதாம். ஒரு சில நேரங்கள்ல அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும். கைய அசைக்கக்கூட முடியாது. வைப்தான் எண்ணையெல்லாம் தடவி வழமை நிலைக்கு கொண்டுவருவா. எந்த நேரமும் இப்படி ஆகாது. அப்படி ஏதும் நடந்தால் யாராவது உதவிக்கு இருக்க வேணும்.

ஒரு நாள் அப்படித்தான், தனியா கடலுக்குப் போய் நடுக்கடல்ல வச்சி கை இறுகிட்டு. ஒண்டும் செய்ய முடியேல்ல. வலையயும் இழுக்க முடியேல்ல, படகையும் திருப்ப முடியேல்ல. அப்படியே 3,4 மணித்தியாலமா தனியா கிடந்தன். அந்த வழியா வந்த ஊர்க்காரங்களின்ர கண்ணில பட்டதால தப்பிச்சன்.

அதேபோல இன்னொரு நாள் தென்னை மரத்துக்கு ஏறி உச்சியில இருந்தநேரம் இதே மாதிரி இடது கை இழுத்துப் பிடிச்சிருச்சிற்றுது. என்னால் ஒண்டும் செய்ய முடியேல்ல. மரம் வழியா இறங்கவும் ஏலாது, அந்த உச்சியிலிருந்து குதிக்கவும் ஏலாது. பக்கத்து வீட்டில இருந்த அண்ணர் மரத்துக்கு ஏறி என்னை கயிறு கட்டி மரத்தில இருந்து இறக்கினார்.

இப்படி நிறைய நடந்திருக்கு. இதுபோல ஏதாவது நடக்குமெண்டு வேலைக்குப் போகாம இருந்தா மூன்று பிள்ளைகளின்ர படிப்புக்கு என்ன செய்றது? இரண்டு மாசத்தில மண்ணெண்னைக்கு மட்டும் 50 ஆயிரம் கடன் இருக்கு. தொடர்ச்சியா மீன் பட்டால்தான் அந்தக் கடன கூட அடைக்கலாம்.

இந்த இரும்புத் துண்டு உடம்புல இருக்கிறதால எனக்கு என்ன நடக்கும் என்று ஒரு நாள் கூட நான் நினைச்சிப் பார்த்ததில்ல. இருக்கிற வரைக்கும் பிள்ளைகளோடு சந்தோசமா இருந்திட்டுப் போவம்.

நான் இயக்கத்தில போராளியா இருந்தன். வீட்ல பெண் சகோதரங்கள் மூன்று பேர் இருந்ததால நான் போய் சேர்ந்தன்.

1997ஆம் ஆண்டு நடந்த சண்டையில காயப்பட்டன். என்ர பிடறியில ‘பீஸ்’ ஒன்று இருக்கு. நெஞ்சிலயும், கையிலயும் ‘போல்ஸ்சும்’ இருக்கு.

அப்பவே எடுக்க ஏலாதெண்டு விட்டுட்டினம், மூளைக்குப் பிரச்சினையாகுமென்று. இப்பவும் எடுக்க எந்த உத்தேசமும் இல்ல. அப்படி ஏதாவது முயற்சிசெய்து பிரச்சினையாகிட்டால் பிள்ளைகள் 4 பேரையும் பற்றி நினைக்கும்போதே பயமா இருக்கு. இருக்கும் மட்டும் இருக்கட்டும்.

முதல்ல பெரிசா வலி இருக்கல்ல. ஆனால், வெயில் வழியா நின்றால் தலை சுத்தும். ஒருக்கா வேலைசெய்யும்போது தலையில அடிப்பட்டு கூடுதலா வருத்தத்த தந்தது.

தடுப்புக்குப் போய் வந்தபிறகு இன்னும் மோசம். பாரங்கள் தூக்கி, ஓடித்திரியிற வேலையெல்லாம் இப்ப செய்யமுடியாது, களைக்கும். முன்ன செஞ்சமாதிரி செய்ய ஏலாது.

இயக்கத்தில இருந்ததால தடுப்பு முகாமில இருந்தநேரம் சிஐடிக்காரரிட்ட போய் விசயத்த சொன்னன். விசாரிச்சிட்டு விட்டுட்டினம். மாதாமாதம் வந்து சைன் மட்டும் வைக்கச் சொன்னவங்கள். திடீரென்று ஒரு நாள் டிஐடி என்று சொல்லிக் கொண்டு வந்தவங்க, விசாரிக்க. ஒரு நாளில வந்திடலாம் என்று கூட்டிக்கொண்டு போனாங்கள். 4 வருஷத்துக்கு பிறகுதான் வெளியில் விட்டவங்கள்.

அந்த 4 வருஷமும் சரியான சித்திரவதை. ஒரு வெள்ளை சேர்ட் முழுக்க இரத்தம். அந்த சேர்ட்டையும் நான் வீட்டுக்கு கொண்டுவந்தனான். நெஞ்சுப் பகுதியில கறுப்பா வட்டம் வட்டமா இருந்தது. விசாரிக்கும் போது பேனையால குத்துவான். கால் பெருவிரல் இரண்டிலயும் நகம் இல்ல. சீமேந்து தரையில சப்பாத்துக் காலோட என்ர கால் மேல ஏறுவான். இப்போ எனக்கு நடக்கிறது இதுன்ர பாதிப்போ தெரியல.

உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம். எனக்குத் தெரியாது. கன பேர் சொல்லியிருக்கினம். அதனால பின்னேரம் 6 மணிக்கு குளத்துக்குப் போய் விடியக்காலை வெல்லனா 5 மணிக்கு வந்திருவன்.

மழைக்கு நல்லா நனைஞ்சா ஒரு கிழமை ரெண்டு கிழமை வீட்ட படுத்திருக்க வேண்டியதுதான். தலை வெயிற்றா இருக்கும். வெளியில போறதில்ல. கனகன பிரச்சினைகள கொண்டுவந்துவிட்டிடும். அதனால எங்கயும் போறதில்ல. குளத்துக்குப் போய் வீட்டுக்கு வாறது மட்டும்தான்.

ரெண்டு மாடுகள் இருக்கு, அதில பால கறந்து விற்று வாழ்க்கைய கொண்டு நடத்திறம். எந்த நாளும் மீன் பிடிபடுறதில்ல. ஒருசில நாட்கள் 200 ரூபாவும் கிடைக்கும் 2,000 ரூபாவும் கிடைக்கும். 100 ரூபாவும் வீட்டுக்கு எடுத்து வந்திருக்கன்.

முன்னாள் போராளி என்று எந்த உதவித் திட்டமும் கிடைக்கேல்ல. எல்லாமே இவாதான் (மனைவி). நான் கொண்டுவந்து குடுக்கிற காச வச்சிக்கொண்டு சமாளிச்சுக்கொண்டு போறா.

முள்ளிவாய்க்கால்ல வச்சிதான் நான் காயப்பட்டன். 2009 இடம்பெயர்ந்து கொண்டிருக்கேக்க. ஷெல் ‘பீஸ்’ ஒன்று முள்ளந்தண்டு பக்கமா ஏறிற்று. காயப்பட்டு மருத்துவம் செய்யமுடியாம ஒரு கிழமையா இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். கடைசியா உயிர கையில பிடிச்சிக் கொண்டு இராணுவத்திட்ட போய்ச் சேர்ந்தம். அங்கபோய் விசாரிச்சிவிட்டு மருந்து கட்டப்போனன். என்ர காயத்த பார்த்திட்டு, உடன் காயமென்டா ‘பீஸ்’ எடிப்பினமாம், என்ர காயத்தில ஊனம் வடிய வெளிக்கிட்டதால எடுக்கேல்ல. குறிப்பிட்ட காலத்தில ‘பீஸ்’ வெளியில வரும், அப்ப எடுங்கோ என்று மருந்து மட்டும் போட்டவங்கள்.

மூன்று மாதமாக நடக்கமுடியாம இருந்தனான். என்னை தாங்கிக்கொண்டுதான் திரிஞ்சவ. காயங்கள் மாறினவுடன் நோர்மலா நடக்கத் தொடங்கினன். மீள்குடியேறி தோட்ட வேலை, வீடு கட்ட மணல் ஏத்தினது எல்லாம் நான்தான். அப்ப ஒரு வலியும் இருக்கேல்ல. ஆனால், கால் கொஞ்சம் விறைப்பாதான் இருந்தது.

வீட்டுவேலையெல்லாம் முடிச்சி ஒரு கிழமையால வலிக்க ஆரம்பிச்சது. கடுமையான வேதனையோடுதான் இருந்தனான். அத வார்த்தையால சொல்ல முடியாது. கடைசியில பொறுத்துக்கொள்ள முடியாமல் 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி ஹொஸ்பிட்டலுக்குப் போனனான்.

அங்க ஒரு டொக்டர் என்னைப் பார்த்தவர். முள்ளந்தண்டில இரண்டு தரம் ஊசி போட்டார். வலி குறைஞ்சி சுகமாகும் என்று சொன்னவர். ஆனால், வலி கூடினதே தவிர குறையேல்ல. பேந்து ஒபரேசன் செய்வோம், ஒபரேசன் செய்வோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று இன்னொரு ஹொஸ்பிட்டலுக்கு மாறிவிட்டார். அந்த இடத்துக்கு புதுசா வந்த டொக்டர் குடும்பத்தாக்கள கூட்டிவரச் சொன்னார். “ஒபரேசன் செய்தால் சில நேரம் பரலைஸாகலாம்” எண்டு சொல்ல இவா பயந்திட்டா. எனக்கு ஏதும் ஆகிவிடும் எண்டு ஒபரேசன் செய்யவேணாம் என்று சொல்லீற்றா.

மூன்று வருஷமா வீட்டுக்குள்ளதான், ஒன்று இவா வரவேணும். இல்லையென்றால் தங்கச்சி வரவேணும். தனியா ஒண்டுமே செய்யமுடியாது. இப்படியே எவ்வளவு நாள்தான் இருக்க. எனக்கும் எழும்பி நடக்கவேணும் என்று ஆசை இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்குப் போனன். தொடர்ந்து கிளினிக்கும் வரச் சொன்னவங்க.

இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போயினம். இவா மட்டும்தான் வேலைக்குப் போறா. தோட்ட வேலை, மாடு குளிப்பாட்ட, பட்டி துப்பரவாக்க, சாணம் அல்ல எண்டு எல்லா வேலைக்கும் போவா. பாவம்…! என்னாலதான் ஒரு உதவியும் செய்ய முடியேல்ல. அப்படி கொண்டுவந்து தரும் காச வச்சித்தான் யாழ்ப்பாணத்துக்குப் போய் வருவன்.

2019.01.27ஆம் திகதி இரத்தம், யூரின் செக் பண்ணவேணும் எண்டு வரச் சொன்னவங்கள், செக் பண்ணிற்று இண்டைக்கே ஒபரேசன் செய்யலாம், தயாரா இருங்கோ என்று டொக்டர் சொன்னவர். உடனே தங்கச்சிக்கு கோல் எடுத்து விசயத்தை சொன்னன். 4 டொக்டர், ஐந்தரை மணித்தியாலம் ஒபரேசன். 6, 7 மணித்தியாலத்துக்குப் பிறகுதான் கண் முழிச்சன். நான்கு நாட்கள்தான் ஹொஸ்பிடல்ல இருந்தனான்

முள்ளந்தண்டு பகுதியிலிருந்து நீக்கப்பட்ட உலோகத்துண்டு இன்னும் நல்லா குணமாகேல்ல. குனிய வேண்டாம் என்று சொல்லியிருக்கினம். அதுக்கு ஏற்றால்போல டொய்லட் வசதியில்ல. ஒரு நாற்காலியத்தான் பாவிக்கிறன். எனக்கு எந்த உதவியும் வேண்டாம். இத கூட எப்படியாவது சமாளிச்சிடுவன்.

2009 ஆம் ஆண்டு, தம்பியாக்கள் 2 பேரயும் அத்தானையும் கையில கொண்டுபோய் இராணுவத்திடம் ஒப்படைச்சம். அவங்கள எப்படியாவது தேடித்தந்தீங்க எண்டா உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.

2009 சித்திரை, பச்சைபுல்மோட்டை எண்டு நினைக்கிறன். நாங்கள் குடும்பமா இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். எல்லா பக்கமிருந்தும் ஷெல் வந்து விழுது. எந்தப் பக்கம் இருந்து ரவுன்ஸ் வருதென்றே தெரியாது. எங்களுக்கு நெருக்கமா பெரியதொரு சத்தம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அந்தநேரம்தான் நான் காயப்பட்டனான். பெரிய காயம் இல்லையென்டாலும் நெஞ்சுலயும் தொடையிலயும் ‘பீஸ்’ இறங்கிட்டு.

அன்றையிலயிருந்து இன்றைக்கு வரைக்கும் ரெண்டு தரம்தான் மருந்து எடுக்கப்போனன். ‘பீஸ்’ ஒரு இடத்தில நிலையா நிண்டவுடன் வரச் சொன்னவங்க ஒபரேசன் செய்யலாம் எண்டு. ஒரு சிலநேரம் நெஞ்சில உள்ள ‘பீஸ்’ ஒரே இடத்தில் நிற்கும். அப்போ போகலாம் எண்டு நினைச்சாலும் மனம் இடம் குடுக்காது. ஒருவேளை ஒபரேசன் செய்து எனக்கு ஏதும் நடந்திட்டது என்றா குடும்பத்த யார் பார்க்கிறது? அதனால இருக்கிற வரைக்கும் உழைப்பம் என்டு வலியை பொறுத்துக் கொள்வன்.

நான் கூலி வேலைக்குத்தான் போறனான். தோட்ட வேலைகள், வீடுகள் கட்ட, கோயில் வேலைகள். டிரக்டரும் ஓடுவன். இருந்தாலும், கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும். காலும் உலையும். வெயிலிலயும் கனநேரம் இருக்கமுடியாது.

2010ஆம் ஆண்டு கிணறு வெட்ட போன இடத்தில ஏற்பட்ட விபத்தில அப்பா இறந்திட்டார், ஒரு தம்பியும் நாலு தங்கச்சியும் அம்மாவும்தான் இருக்கிறம். கடைசி தங்கச்சியும் தம்பியும் கதைக்க மாட்டினம். நான் மட்டும் தான் வேலை செய்றன். ஒரு நாளை வேலைக்கு போகாம மருந்து எடுக்க வெளிக்கிட்டாலே அண்டைய நாளைக்கு வீட்ல எல்லோரும் பட்டினிதான். இப்படியிருக்க எப்படி ஒபரேசன் செய்றது?

2008 சுதந்திரபுரத்தில நாங்க இடம்பெயர்ந்து இருந்தபோது அடிச்ச ஷெல் பட்டுத்தான் நான் காயப்பட்டனான். ஷெல் ‘பீஸ்’ ஒன்று நெத்தியில ஏறீற்று. அதோடதான் இடம்பெயர்ந்து இராணுவத்தின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தம். அதுக்குப் பிறகு வவுனியாவுக்கு கொண்டு போனவங்கள், உடனடியாவே அனுராதபுரத்துக்கு ஏத்தினாங்கள். அங்க ஸ்கான் எல்லாம் செய்துப் பார்த்திட்டு ‘பீஸ’ எடுக்கேலாது என்று சொல்லிச்சினம்.

மீள்குடியேறி வந்தபிறகு கொஞ்சகாலம் நல்லாதான் இருந்தனான். பிறகு வலிப்பு வரத் தொடங்கிட்டு. சரியா கஷ்டப்பட்டனான். ரெண்டு வருஷமா இப்ப கடவுளே என்று வலிப்பு வாறதில்ல.

வெயில் நேரம் வேலை செய்ய ஏலாது. தலை குத்தும். ஏதேதோ பேசுவன் என்று சொல்லுவினம். சண்டை பிடிப்பன் எண்டும் சொல்லுவினம். அதனால தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்கொள்ளுவன். இல்லையெண்டால் நிழலான ஒரு இடத்தில அப்படியோ இருந்திடுவன். இப்படி இருக்கிற எனக்கு யாரும் வேலை தர விருப்பப்பட மாட்டாங்கள்தானே. வேலை செய்யாமல் இருந்தால் அவங்களும் சும்மா சம்பளம் தருவாங்களா? பிறகு ஐஸ் பழம் யாவாரம் செய்தன். சைக்கிள்ல போய். அதுவும் கொஞ்சநாள்தான். என்னதான் தொப்பி போட்டாலும் வெயில் தாங்க முடியேல்ல. அதையும் விட்டுட்டன். இப்பதான் ஒரு நிறுவனத்தில வேலை கிடைச்சிருக்கு. 2 மாதமா செய்துகொண்டு போறன்.

மூன்று பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போயினம். நான் எடுக்கிற சம்பளம் காணாது. இவா கடற்கரைக்கு போவா, வலை பின்ன. மீன் பட்டால் கறிக்கு மீனும் தந்து 200, 300 ரூபா காசும் தருவாங்கள். இல்லையெண்டால் அதுவும் இல்ல.

இவாட வயசான அம்மாவும் அப்பாவும் எங்களோடதான் இருக்கினம். அவங்களயும் நாங்கதான் பார்க்கவேணும். வருமானம் போதாததால ரவுண்ட்ஸ் பொறுக்கி விற்க ஆரம்பிச்சம். இப்ப அதையும்தான் செய்துகொண்டு வாறம். பின்னேரம் மூன்று மணியிலிருந்து 6.30 மணிவரைக்கும் ஒவ்வொரு பங்கரா பார்த்து, நாய் விறாண்றமாதிரி விறாண்டி ரவுண்ட்ஸ் பொறுக்கிக்கொண்டு வருவம். ஒவ்வொரு கிழமையும் சேர்த்து இரும்புக் காரன்ட குடுப்பம். அவன் ஒரு கிலோ 20 ரூபாவுக்குத்தான் எடுப்பான். அதில வார காசையும் வச்சி சமாளிக்கிறம். ரவுண்ட்ஸ் பொறக்குற வேல ஆபத்துதான், தெரியும். ஆனால் சாப்பிடனுமே. நானும் இவாவும்தான் போவம். பிள்ளைகள ஒருநாளும் கூட்டிக்கொண்டு போகமாட்டம்.

தலையில இருக்கிற இந்த “பீஸ” எடுக்கவேணுமே என்று ஒரு நாள் கூட நினைச்சதில்ல. அதனாலதான் வேறெங்கேயும் போய் செக் பண்ணவும் இல்ல. அப்படி போனால் ஒரு நாள் அதுக்கேயே முடிஞ்சிரும். அதைவிட பிள்ளைகளின்ர பசிய போக்குறதுதான் எனக்கு முக்கியம்.

2009 மார்ச் மாதம் 6ஆம் திகதி. இன்னும் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்க முடியும். என் கண் முன்னாலயே என் மகள் கடவுளிட்ட போன நாள். இப்போ அந்த நாள நினைக்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது.

பெரிய சனக்கூட்டம், இடம்பெயர்ந்து கொண்டிருந்தம். நாங்க இந்த இடத்திலெண்டா மகள் அந்தா அங்க மரம் இருக்கே, அவ்வளவு தூரம் முன்னால போய்க்கொண்டிருந்தா. திடீரென்டு பெரிய சத்தம். என்ர கால்ல ஏதோ பட்டது போல ஓர் உணர்வு. முன்னால ஆக்களின்ர அலறல் கேட்டுக்கொண்டே இருக்குது. என்னால எழும்பி நிற்க முடியேல்ல. முன்னால போன மகளுக்கு என்ன நடந்திருக்குமோ எண்டு தரையில ஊன்ற முடியாத கால இழுத்துக்கொண்டு ஆக்கள விலத்தி விலத்தி உள்ள போய் பார்த்தன். என் கண் முன்னாலேயே எந்த அசைவும் இல்லாம அப்படியே கிடந்தா. எனக்கு அப்போதே தெரியும் அவ கடளிட்ட போயிற்றா என்டு. எனக்கிருந்த ஒரேயொரு மகள் அவள்.

அன்டைக்கு என்ட கால்ல பட்ட காயத்தின்ட வலி மனசுல ஏற்பட்டது மாதிரியே இன்னும் அப்படியேதான் இருக்கு. ‘பீஸ்’ இருக்குதென்றே தெரியாது. இப்ப ஒரு வருசமாதான் வலியா இருக்கு. இவரின்ர தொந்தரவால யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்குப் போய் பார்த்தன். எக்ஸ்ரே எடுத்தா ‘பீஸ்’ கிடக்கு. பெரிய ‘பீஸ்ஸொ’ண்டும் குருனி குருனியா 5, 6 ‘பீஸ்’ போல கிடக்கு. எலும்புக்குள்ள இருக்கிறதால எடுக்க ஏலாதெண்டு டொக்டர் சொல்லினம்.

முன்ன மாதிரி நடக்க ஏலாது. கொஞ்சம் நடந்தவுடனே கால் குத்த ஆரம்பிச்சிடும்.வெயிலும் கூடக் கூட வேதனையா இருக்கும். நித்திரை கொள்ள ஏலா, கொதியா இருக்கும்.

அதனால பெரிசா எங்கயும் போறதில்ல. இவர் திரிவீல் ஓடுறவர். அதுல வாற வருமானத்த வச்சிதான் குடும்பத்த நடத்திக்கொண்டிருக்கிறம்.

இறுதிப் போரில மாத்தளன்ல வச்சி காயப்பட்டன். ஷெல் ‘பீஸ்’ ஒன்று கழுத்துப் பக்கமா ஏறிற்று. இராணுவத்தின்ர பக்கம் போறதுக்கு முதலே என்ர வலது காலும் கையும் செயலிழக்கத் தொடங்கீற்று. முகாமுக்குப் போய் உடனடியா வவுனியாவுக்கு என்னை கொண்டு போனவங்க. அங்கயும் பார்த்திற்று கண்டிக்கு அனுப்பிவைச்சவங்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்தன். எடுத்து என்ன பயன், வலது காலும் கையும் வழமைக்குத் திரும்பேல்ல. காலை கொஞ்சமாவது அசைக்கலாம், கையில ஒரு விரல கூட அசைக்க முடியாது. ஏன் வாழவேணும் எண்டுகூட நினைச்சன். சரியான கஷ்டம். அரசாங்கம் எந்த உதவியும் செய்யேல்ல. அரசசார்பற்ற நிறுவனங்கள் கொஞ்சம் உதவிசெய்திருக்கு. என்னால எந்தத் தொழிலும் சரியா செய்ய முடியாது.

இருந்தும் ரெண்டு பிள்ளைகளின்ர எதிர்காலத்த நினைச்சி கடற்கரை வழியா போய் வேலை கேட்பன். வலை கட்ட மட்டும் கூப்பிடுவாங்கள். ஒரு நாளைக்கு 200, 300 ரூபா தருவினம். சிலநேரம் ஒரு மீனும் கிடைக்கும்.

ஒருமுறை யாழ்ப்பாண ஹொஸ்பிட்டலுக்கு போய் காட்டினனான். எக்ஸ்ரே எடுத்துப் போட்டு ‘பீஸ்’ நரம்புக்குள்ள இருக்கிறதால எடுக்கேலாது எண்டு சொன்னவங்கள். அதை எடுத்தா ரெண்டாவது தரம் பரலைஸாக்குமாம். அதுக்குப் பிறகு அப்படியே விட்டிட்டன். இப்ப ஒவ்வொரு மாசமும் மாஞ்சோலை ஆஸ்பத்திரிக்கு கிளினிக் போறன். உலைவு இருக்கிறதால மருந்து தருவாங்கள். சிலநேரம் பணடோல் மட்டும் தருவாங்கள். அதனால ஒரு சில மாதங்கள்ல போறதும் இல்ல.

இடது கை மூட்டுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில ‘ரவுண்ட்ஸ்’ ஒண்டு இருக்கு. இந்தக் கைய என்னால் தூக்க முடியாது. காலில போல்ஸ்ஸும் இருக்கு. கைக்கு அகப்படும். பார்க்கிறதுக்குத்தான் நான் முழு மனுசனா இருக்கிறன். மற்றும்படி என்னால ஒண்டும் செய்ய ஏலாது.

காயப்பட்டு கிட்டத்தட்ட 20 வருஷமாகீற்று. இது இருக்கிறதால இதுவரை காலமும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறன். எப்படியாவது எடுத்திறலாம் எண்டு மனசுக்கு தோன்றினாலும் அப்புறம் ஏதாவது சிக்கல ஏற்படுத்திடுமோ என்ற பயமும் இருக்கு. நாளைக்கே எனக்கு ஏதாவது நடந்திட்டா பிள்ளைகளையும் மனிசியையும் யார் பார்க்கிறது?

அதோட என்ர உடம்புல இருக்கிற ‘பீஸ’ எடுக்கிறதெண்டால் நிறைய காசு தேவை. சாப்பிடுறதுக்கே காசு இல்லாம இருக்கிறம். அன்றண்டைக்கு உழைச்சாதான் சாப்பிடலாம். பாருங்கோ, வீட்ட சுற்றி வேலிய கூட அடைக்க முடியாம இருக்கிறன். ஊரில இருக்கிற மாடெல்லாம் தோட்டத்துக்குள்ள வருது. வச்சிருக்கிற ஒன்றிரெண்டு பயிரயும் மேய்ஞ்சிற்று போகுது. வேலிய அடைக்க பெரிசா காசு ஒண்டும் தேவையில்ல. மரங்கள வெட்டினா வேலிய அடைச்சிறலாம். முள்ளுக்கம்பி வாங்கவேணும். அதை விட அன்றைய நாள் வேலைக்குப் போகாம வீட்டில இருக்கவேணும். பிறகெப்பிடி அன்றைக்கு சாப்பிடுறது?

மருந்து எடுக்கப்போனாலும் இதே நிலைமைதான். அதனாலேயே போறதில்ல. இப்ப போகவேணும் போலதான் இருக்கு. முன்னப்போல இப்ப வெயில்ல இருக்க முடியேல்ல. தலை குத்த ஆரம்பிக்குது, மயக்கம் வாற மாதிரி. இருக்கிற இடத்திலயே அப்படியே தரையில் இருந்திடுவன்.

யாரிட்டயும் போய் உதவி கேட்கிற மனநிலையிலயும் நான் இல்ல. இருக்கிறத கொண்டு வாழ்ந்திற்றுப் போவம்.

நான் மேசன் தொழில்தான் செய்றன். ஆனால், இப்ப பெருசா செய்றதில்ல. தலையில ‘பீஸ்’ இருக்கிறதால வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும். அதனால மேசன் தொழில விட்டுட்டு மீன் பிடிக்க போறன். பின்னேரம் குளத்துக்குப் போயிற்று காலையில திரும்பி வருவன். சில வேளைகள்ல கடுமையான குளிரா இருந்தாலும் ஒரு இடத்தில இருக்கமுடியாது. தலைய கழற்றிவைக்கனும் போல இருக்கும். யார் பேசினாலும் கோவம் வரும். எரிஞ்சி எரிஞ்சி விழுவன் என்று சொல்வாங்க.

2009 இடம்பெயர்ந்து கொண்டிருக்கேக்கத்தான் காயப்பட்டன். முகாமுக்குப் போய் வவுனியா ஹொஸ்பிட்டல்ல மருந்து எடுத்தது மட்டும்தான், அதுக்குப் பிறகு எங்கயும் போகேல்ல. எடுத்தா நிம்மதியா இருக்கலாம் எண்டு நினைக்கிறன். ஆனா வசதியேதும் இல்லையே. மல்லாகம் போகனும், எக்ரே எல்லாம் எடுக்கவேணும்.

பிள்ளைகள் 3 பேரும் படிக்கினம். மனிசிக்கும் இப்ப ஏலாது. விழுந்து கை முறிஞ்சிருக்கு. கைக்கு போட்டிருக்கிற கம்பிய கழற்றப் போகவேணும். நாளும் பிந்திட்டு, இன்னும் போகாம இருக்கிறம். அவளால ஒண்டும் செய்ய ஏலாது.

இதெல்லாம் நினைச்சிக்கொண்டுதான் இப்ப மேசன் தொழிலுக்கும் போறன். குளத்தில இருந்து வந்தவுடன் மேசன் தொழிலுக்குப் போயிருவன். வெயிலா இருந்தாலும் மழையா இருந்தாலும் இப்ப வேலை செய்தே ஆகவேணும். என்ன செய்ய, எங்கட காலம் இன்னும் கொஞ்சநாள்ல முடிஞ்சிடும். பிள்ளைகள படிப்பிக்க வேணுமே.

* பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பு:

பீஸ்: எறிகணை குண்டுச் சிதறல்கள்

போல்ஸ்: எறிகணை, விமானக் குண்டுகளில் உள்ளடங்கியிருக்கும் சிறிய உலோக உருளைகள்

ரவுண்ட்ஸ்: துப்பாக்கி ரவைகள்

நன்றி : மாற்றம்

ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதை !


போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு இது.

இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான்.

இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன..

இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம்.

(படம்: ஜெகதீஸ்வரன் பிரசாந்த்)

ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி

தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது.

இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி,

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் கைது 1982

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு

கீழ் கானும் வழக்குகளில் எதிரிகள் விடுதலை

முன்னாள்எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை வழக்கில் எதிரி விடுதலை 1989

டென்மார்க் ;கல்லூரி மாணவி சித்திரா கைதும் விடுதலையும் 1996

டென்மார்க் ஊடகவியளாளர்கள்; நால்வர் கைதும் விடுதலையும் 1996

கலதாரி ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி விடுதலை 1997

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு 2008

ஊடகவியளாளர் பரமேஸ்வரி, சுசந்திகா கைதும் விடுதலையும் 221

ஊடகவியளாளர் யசிதரனும் வளர்மதியும் கைதும் விடுதலையும்

;மூத்த ஊடகவியளாளர் வித்தியாதரன் கைதும் விடுதலையும் 2009

பாதுகாப்புச் செயலாளர் கொலைமுயற்சி வழக்கில் முதல் எதிரி விடுதலை 2006

ரவிராஜ் கொலை வழக்கு 2006

ஜந்து கல்லூரி மாணவர்கள் கடற்படையினரால் கொழும்பில் கடத்தப்பட்ட வழக்கு 2009

மேஜர் முத்தலிப் படுகொலை வழக்கும் எதிரி விடுதலையும் பாரமி குலதுங்க கொலை வழக்கும் எதிரி விடுதலை 2018

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ;மன் ;கதிர்காமர் கொலை வழக்கும் விடுதலையும் 2018 .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை முயற்சிவழக்கும் விடுதலையும்

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கும் விடுதலையும் 2018

பயங்கரவாதத் சட்டமும் நான்கு தசாப்தங்களும்; 1979 – 2019

பயங்கரவாதத் சட்டம் நீக்கப்படுமா?

காலனித்துவ ஆட்சிகாலத்திலிருந்து இந்நாட்டில் நிலவி வந்த ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் மனதிற்கொண்டு பார்க்கும்போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன்மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன்.குறிப்பாக மிகவும் துரதிஸ்டமானதாகக் காணப்படும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் துரிதமான மோசமடைதலை ; வெளிச்சமிட்டுக் காட்டியது காட்டுகிறதுஷஷ

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணப்படுத்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் 1977 ஜுலை பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தின் படைப்பாகும். 1978 ஆம் ஆண்டின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமே பயங்கரவாத தடைச்சட்டமாகும்.; அத்தகைய கடுமையான சட்டம்; அவசரசட்டமாக ஒரே நாளில் 1979ஆண்டு ஜுலை 19ஆம் திகதி தற்காலிக சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் 1982ம் ஆண்டில்10ம் ;இலக்க சட்ட்த்தின்மூலம் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டு நான்கு தசாப்தங்;கள் முடிவடைந்து விட்டது

1979 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச்சட்டம்,; உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள்இ யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள்இ பொறியியளாளர்இ உதவி அரசாங்க அதிபர்இ ஊடகவியளாளர்கள்இ கோவில் தர்மகர்த்தாக்கள்இ கோவில் குருக்கள்இ கிரிஸ்தவமதப் போதகர்;கள்இ நாடாளுமன்ற உறுப்பினரின் செயளாளர். மாவட்ட அமைப்பாளர்இ பல்கலைக்கழக மாணவர்கள்இ அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள்இ சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள்;;இ கிராம சேவையாளர்கள்இ தொழில் அதிபர்கள்;இ வர்த்தகர்கள்இ புலம்பெயர் தமிழர்கள்இ வங்கி முகாமையாளர்இ என சமூகத்தின் பல தரப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

; 1979ஆம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை முப்பது வருடங்களில்; யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 ஆம் மே மாதம் முதல் 2019ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்து பத்து வருடங்களை கடந்த பின்னரும்;, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் ; பலர் இன்றும் நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள் என்பவற்றில் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்;

பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் வ்ழக்குத் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளில் அரசியல் கைதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நீருபிக்காமையினால் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்களேயன்றி மகிந்த ராஜபக்சவின் அரசோ அல்லது நல்லாட்சி அரசோ வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியையும் விடுதலை செய்யவில்லை சந்தேகத்தில் கைது செய்த சாட்சியங்கள் இல்லாத சில கைதிகளை அரசியல்வாதிகளை திருப்திபடுத்தும் நோக்கில் விடுதலை செய்தனர்

2015ம் ஆண்டு இந்த சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் இச் சட்டம் வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழும் தமிழ் உறவுகளை குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றது முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆம் மே மாதம் முடிவடைந்துவிட்டது என்று அரசாங்கம் பெருமையோடு பிரகடனப்படுத்தி;யதுடன். பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம். நாட்டில் சமாதானம் நிலவுகின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆயினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்

1971ஆம் ஆண்டின் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்களை கையாள்வதற்காக 1972 ஆம் ஆண்டு குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி; ஆட்சியை கவிழ்க போராட்டம் நடாத்தினால் அது கிளர்ச்சி; வட கிழக்கு இளைஞர்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டால்; அது பயங்கரவாதமா?

பயங்கரவாத தடைச் சட்டமும் நீதித் துறையின் வகிபாகமும்

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அல்லது பல ஜரோப்பிய அரசியலமைப்பு வாதிகள் அதனை விபரிக்க விரும்புவது போல சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வு என்பது அச் சட்டம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த (மக்களின் விருப்;பு) மிகவும் சிறந்த முறையில் வளங்களைக் கொண்டுள்ள அரசாங்கத்தின் கிளையாகிய நீதித் துறைக்கு அச் சட்டத்தை அலசி ஆராயும் இறுதிப் பொறுப்பை வழங்குவதாகும்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ,; லியனகே எதிர் மாகாராணியார் மற்றும் லஞச் ஊழல் ஆணையாளர் எதிர் ரனசிங்ஹ முதலிய இலங்கையின் குறிப்பிடத் தகுந்த பெரும்பாலான அரசியலமைப்பு தீர்மானங்கள,; சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வுகளின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

உலகெங்கும் பல வருடங்களாக செய்யப்பட்டது போலவே இலங்கையின் நீதி மன்றங்கள் எந்த ஒரு அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகத்திலும் தெளிவாகக் காணப்படுவது போல் அரசியலமைப்புக்கு ஒவ்வாத சட்டங்களை வெற்றானதென்றும் செயலற்றதென்றும் பிரகடணப்படுத்த முடியும் என்பதை அங்கீகரித்தன. எனினும்,

அதன் இரண்டு ஆரம்ப அரசியலமைப்புக்களான 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் சட்டங்களை நீதித் துறை மீளாய்வு செய்வதை தடை செய்தது என்ற வகையில் இலங்கை அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகங்களுள் மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்றாகவும் விளங்குகிறது.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

1972இலும் 1978இலும் பதவிக்கு வந்த இரண்டு அரசாங்கங்கங்களும் ; முதலாவதாக, தமக்குத் தேவையான தமது சொந்த அரசியலமைப்பை வகுத்து நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்தனர்.

இரண்டாவதாக, மாற்ற முடியாதவாறு விசேட பெரும்பான்மை நிபந்தனைகள் என்ற வடிவில் அமைந்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட தடைகளும் சமப்படுத்தல்களும் என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பு தர்மத்தின் பேரில் விதிப்பதை அவை உதாசீனம் செய்தன.இவை அனைத்தும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு வசதியாக அமைந்தது.

காக்கப்பட்டிருக்கும் (இறைமை பௌத்தம் மற்றும் ஏனைய ‘அடிப்படை அம்சங்கள்’ ஆகியவற்றைக் கையாளும்) ஏற்பாடுகளை இச் சட்டத்தின் ஏதாவது வாசகங்கள் மீறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அச் சட்டமூலத்தை நுணுகி ஆராயும் மட்டுப்படுத்தப்பட்ட பணியே தனக்கு உள்ளதென நீதிமன்றம் அறிவித்தது.

இது அத்தகைய வாசகங்கள் நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மட்டுமன்றி ஒரு கருத்தறி வாக்களிப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் தேவைப்படுத்தியிருக்கும். ஒரு பக்க கட்டளையொன்றில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் விசேடமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளோடு இச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் ஒவ்வாததாக இல்லை என்று அறிவித்ததோடு, மனித உரிமைகள் மீதான அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான இச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய மறுத்து அதன் மூலம் இச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தச் சிக்கலுமின்றி மிகவும் வசதியாக அமைந்தது.

ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

1979 ஜுலை 19ஆம் திகதி கடுமையான பயங்கரவாத தடைச் சட்டம்;; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் தனது ஒரு பக்க தீர்ப்பை வழங்கிய இரண்டு நாட்களின் பின்னராகும்

ஆளும் ஐதேக பாராளுமன்றத்தை ; மதிப்பிறக்கம் செய்யும் நடைமுறையை ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட நாற்பது; வருடங்களில் முதல் தடவையாக சட்டவாக்கச் சபையிலிருந்து பிரதான நிறைவே;ற்று மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்தது. அது, பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்ததோடு, தனது பாராளுமன்றக் குழுவிலிருந்து கருத்து வேறுபாடு எதனையும் சகித்துக் கொள்ளாமலும் இருந்ததனால,; பாராளுமன்ற விவாதமும் கலந்தாராய்வும் சிறிதளவே பயனுள்ளதென உணரத் தொடங்கியிருந்தது.

விரைவாக சட்டங்களை இயற்றுவதற்கும் நுணுகி ஆராய்தல், விவாதித்தல், கலந்தாராய்தல் மற்றும் கருத்து முரண்படுதல் ஆகிய பாராளுமன்ற வழக்கங்களை அதைரியப்படுத்துவதற்காகவும் சட்டவாக்க நடைமுறையை குறுகியதாக்கும் முகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறையையும் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.டன் , 1979 ஜுலை 19ஆம் திகதி பகல் உணவிற்குப் பின்னர், பாராளுமன்றம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.

பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சன்ட் பெரேரா பா.உ அன்றைய தினமே அச் சட்டமூலம் நிறைவேற்றப்படக்கூடியதாக நிலையியற் கட்டளைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென பிரேரித்தார். நீதி அமைச்சர் கேடபில்யூ தேவநாயகம் பா.உ அச் சட்டமூலத்தை அறிமுகம் செய்தார். அச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு அன்றிரவு 9.45 வரை தொடர்ந்து நடைபெற்றது.

தமிழ் தலைமைகள் மௌனம் ; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைதிரிபால சேனநாயக்கா மட்டுமே எதிர்ப்பு

எதிர்க் கட்சியின் சார்பில் பிரதான உரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சேனநாயக்க பா.உ வினால் ஆற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் அம்சங்கள் பற்றி மற்றுமின்றி அதனை சட்டமாக்குவதற்கு முனைந்த முறை பற்றியுமான சில முக்கிய கவலைகளை அவர் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறினார்:

‘இந்தப் பாராளுமன்றத்தில் எந்த மக்களின் பெயரினால், எந்த மக்களின் அதிகாரத்தைக் கொண்டு; சட்டங்கள் ஆக்கப்படுகின்றனவோ, அந்த மக்கள் அதன் உள்ளடக்கங்களை ஆராய்வதும் விளக்கமாக அவற்றை நுணுகி ஆராய்வதும் ஒரு புறம் இருக்க, அவற்றை அவர்கள் வாசித்துகூட பார்க்கவிடாது தடுத்து, இச்சட்டமூலத்தை இன்றிரவே பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாங்கம் இப்போது முயலுகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமளிப்பதல்ல. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களில், மக்களின் அடிப்படை உரிமைகளில் ஏதாவதொன்றை பறித்துக்கொள்ள முயன்ற ஒவ்வொரு சட்டமூலமும் தேசிய நலனில் அவசர முக்கியத்துமிக்கதாக விபரிக்கப்பட்டு, எந்த மக்களின வாக்குகள் அரசாங்கத்திற்கு இம்மிகப் பெரிய பெரும்பான்மை கிடைப்பதற்கு உதவியதோ, அதே பொரும்பான்மையை பயன்படுத்தி அந்த மக்களின் முதுகிற்கு பி;ன்னால் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதில் எந்த அவசர முக்கியத்துவத்தையும் காணவில்லை. வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளும் நோக்கத்திற்காகவே அது தேவைப்படுகிறது. ஏலவே, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமும் அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலையும் உள்ளன. அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’

அமைச்சர் தேவநாயகம் தமது தொகுப்புரையை நிகழ்த்துவதற்கு இரவு 9.58 மணிக்கு எழுந்து நின்றார் என்று ஹன்சாட் பதிவு செய்துள்ளது. இதன் பின்னர் குழு நிலையும் (இங்குதான் சட்டமூலத்தை பாராளுமன்றம் வாசகம் வாசமாக ஆராயுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது) முன்றாம் வாசிப்பும் ஆரம்பமாகின. சட்டமூலம் எல்லா நிலைகளிலும் நிறைவேறியது. பயங்கரவத தடுப்புச் சட்டத்தோடு தொடர்பில்லாத, பொது மக்கள் பாதுபாப்பு கட்;டளைச் சட்டத்தின் கீழான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, இரவு 10.25 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? 2979-2019

பயங்கரவாதத் தடைச்; சட்டம் நீக்கப்படலாகாது என பல அரசியல் கட்சியை சார்ந்தவாளின் கருத்தாக காணப்படும் நிலையில் ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்து யாதெனில் பயங்கரவாதத் தடைச் சட்ட்த்தை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் இந் நிலையில் மதவாத இனவாதம் தீவிரப்படுத்தப்படுகின்ற யதார்த்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்ட்ம் மேலும் வலுப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைபேரக்கு உறுதி வழங்கிய இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

2007ஆம் ஆண்டின் 56ம் இலக்கஇகுடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படக் கூடிய அவசர கால நிலையும் உள்ளன.அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’ அவ்வாறான கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் பொழுது இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

தேடுதல்,கைது செயதல்,தடுத்த வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிளான அதிகாரங்களை வழங்குதல் அடங்கலாக ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட இத்தகையதொரு சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை ; நிறுவனங்கள்இ ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும்இ; அரசியல் தலைமைகள் பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கது.

முந்திய அரசியமைப்பினதும் ஒரு பகுதியான தற்போதைய அரசியலமைப்பின் இக் குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் எதிர்ப்புச்; சட்டத்தை கொண்டுவர அரசு முயற்சித்தபோதிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல்தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன்முறையீடுகள்மீதான கட்டுப்பாடு முதலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (Pவுயு) சட்டப் பல்லவி மனித உரிமை மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய வடிவில் அது சட்டமாக்கப்பட்டால், அது1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச் ;சட்டத்திலும ; பார்க்க சில பிரிவுகளில் வெளிப்படையாக பார்க்கும் பார்வையில் நெகிழ்சிதன்மையும் கணிசமான முன்னேற்றமும் காணப்படுவதாக புலப்பட்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ;பொழுது இந்த இரண்டு சட்டத்திற்கும் மிடையே குறிப்பிடத்;தக்க வேற்றுமையின்மையை அவதானிக்க கூடியதாகவுள்ளன

அவசரகால ஒழுங்கு விதிகளின் முக்கியமான சில விதிகள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படையாக புரிந்து கொள்ளமுடியாத வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது எனவே தற்போதுள்ள வடிவில் சட்டமாக்கப்படின் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரகால ஒழுங்கு விதிகளை நடைமுறைக்கு கொண்டு வராமல் நிரந்தரமாக ஒரு பயங்கரவாத சர்வாதிகார அரசை கொண்டு நடாத்தக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தலாம்.

இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பெயரில் அவசரகால ஒழுங்கு விதிகள் நிரந்தரமாகவே நடைமுறைக்கு வரலாம் இக்; காரணங்களால் சிங்கள தலைமைத்துவ கட்சிகள் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளன 1979ம்ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே எதிர்புத் தெரிவித்தது

தற்போதைய அரசியல் களநிலைமையில் நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையே அரசியல்யாப்பு 19ம் திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள அதிகாரப்பகிர்வினால் ஏற்பட்டுள்ள ;அரசியல் அதிகாரப் போட்டியினால் நாட்டில் பல சிக்கல் நிலையை ஏற்பட்டுள்ளமையை ஏடுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது

இந்த பயங்கரவாதத் தடைச்; சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 40 ஆண்டுகள் முடிவடைந்நதுடன் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ இந்த நோக்கம் முடிவடைந்து; கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளின் பின்னர், இலங்கை பிரசைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ; பயங்கரவாதத்தடைச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (ஊவுயுயை) விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும்ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமையாது.

S.P. Thas

விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்!

‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன்.

‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

(குணா கவியழகனின் முழுமையான நேர்காணல் இன்று இரவு பிரித்தானிய நேரம் 7.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும்)

தமிழீழ விடுதலை போரில் மட்டுமல்லாமல் தமிழீழ கலைத்துறையிலும் காத்திரமான பங்காற்றியிருந்த குணா கவியழகன் தற்போது இலக்கியத்தில் தனது அனுபவத்தின் மூலமும் எழுத்தற்றால் மூலமும் ஈழ மண்ணின் வாசனையையும் போராட்டத்தின் வடுக்களையும் இலகு மொழியில் கதைகளாக்கி வரலாற்றினை பதியவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

அண்மையில் வெளிவந்த அவருடைய நூல்களான ‘கர்ப்ப நிலம்’, ‘போருழல் காதை’ ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா 27.07.2019 சனிக்கிழமை மாலை 4.05 தொடக்கம் 7மணி வரை லண்டன் ஹரோவ் சிவிக் சென்டர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் குணகவியழகன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் விமர்சகர், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் வாசுதேவன்,விமர்சகர் கெளரி பரா, இலக்கிய விமர்சாகர் மாதவி சிவலீலன் ஆகியோர் மதிப்புரை வழங்க, ஊடகர் இளையதம்பி தயானந்தா தலைமையேற்று நிகழ்வை நடத்தவிருக்கிறார்.

நிகழ்வின்போது நியூசிலாந்தில் உருவான கவனி குறும்படம் சிறப்பு காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன் எழுத்தாளரின் இந்த இரு நூல்களையும் அரங்கில் பெற்றுக்கொள்ள முடியும்.


“ஈழப்போர் பற்றி விசாரணை செய்வதே `போருழல் காதை’ நாவல்!” – குணா கவியழகன்

எமது நீதிக்குரல்கள் கேக்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப் படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறிய வேண்டியது.

“எழுத்து என்பது, ஒரு தேடல்; ஒரு விசாரணை; ஒரு தொலைதல்; ஒரு கண்டுபிடித்தல்; `இன்னும் எழுத்து என்பது ஒரு மண்ணும் இல்லை’ என்ற சலிப்பு வரும்வரை தன்னை ஒப்படைத்தலுக்கான ஒரு மோகம்” என்று சொல்லும் குணா கவியழகன், ஈழப்போரின் பாதிப்புகளைத் தொடர்ந்து படைப்புகளாகச் செய்துவருபவர். இன்று இருக்கும் தமிழக வரலாறும், பண்பாடும் இலக்கியத்திலிருந்து எழுதப்பட்டவைதாம். அப்படி இலக்கியம் என்பதும் வரலாற்றின் பக்கங்களைச் சுமந்து நிற்கும் மிக முக்கியமான ஆவணம். அந்த வகையில் எதிர்காலத்தில் ஈழத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள, குணா கவியழகனின் படைப்புகள் ஆதாரமாக இருக்கும். போர்ச்சூழலில் ஈழத்தில் நடைபெற்ற இடப்பெயர்வுகளை எழுதத் தொடங்கியிருக்கும் குணா கவியழகன், `கர்ப்பநிலம்’ நாவலைத் தொடர்ந்து `போருழல் காதை’ என்ற நாவலை எழுதியுள்ளார். நாவல் பற்றி குணா கவியழகன் பகிர்ந்துகொண்டவை…

“வாழ்வின் இடர்பாடுகளையும் அதன் கொண்டாட்டங்களையும் மறுகாட்சிப்படுத்திக் காணவைத்து, விசாரணையைத் தூண்டுவதில் `போருழல் காதை’யும் வாசகர்களுக்கு ஒரு கருவியாகும் என நம்புகிறேன்.

கர்ப்பநிலத்தின் `வனமேகு காதை’யை அடுத்து, `போருழல் காதை’ நாவல் வருகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில், உலகிலேயே மாபெரும் மனித இடப்பெயர்வைக் கண்டது ஈழமண். போர் துரத்த, தலைமுறை தலைமுறையாகத் தேடிவைத்த சொத்தையும் வாழ்வையும் கைவிட்டு, ஒற்றை இரவில் ஓடிய மக்களை மையக் கதைக்களமாகக்கொண்டது கர்ப்பநிலம் – வனமேகு காதை.

இப்போது, `போருழல் காதை’, யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்த மக்களின் வாழ்வை ஆதாரமாக்கிப் பேசுகிறது. பெரும்போரைக் கண்டது வன்னியின் வாழ்வு. அதன் செழுமை, அதன் சிதைவு, அதன் வீழ்ச்சி, வீழ்ச்சியைச் சகிக்க முடியாத மனத்தின் ஓர்மம் என வாழத்துடிக்கும் மக்களின் அலைச்சலும் கொண்டாட்டமுமாய் நாவல் விரிகிறது.

இலக்கியத்தை ஒரு தரிசனமாகக் கொள்ள வேண்டும் என்றால், அகச்சிக்கல்களை மட்டுமே ஆராய்வது என்பது எவ்வளவு அபத்தமான செயல்! அதற்குண்டான புறச்சூழலையும், அதை நிர்ணயிக்கும் அரசியல் அதிகாரத்தையும் ஆராயவேண்டியிருக்கிறது. அதன் ஒளிகொண்டு அனுபவத்தை அறிவாகத் திரட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. இதற்கான கருவி என்பதே வாழ்வின் மீதான விசாரணைதான். அத்தகைய ஒரு விசாரணைக்கான வெளிகளை உருவாக்கவே இந்த நாவலையும் முன்வைத்துள்ளேன்.

கர்ப்பநிலத்தின் காதைகள், அடிப்படையில் சிங்களத்தமிழ் இன முரண்பாட்டை ஆராயும் முயற்சி. ரத்னாயக்க என்கிற சிங்கள கிராமத்து மனிதரும், அரசுநாகன், பொன்னுக்கோனர் போன்ற யாழ்ப்பாண மனிதரும் ஒருகாலத்தில் நண்பர்கள். இந்தக் குடும்பங்களுக்கு இடையேயான தொடர்பு, அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்ட இனப்பகையால் அறுந்துபோகிறது. பிறகு அவர்களின் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்ன ஆனார்கள் என்ற கதைப் பின்னணியில் போரை விசாரணை செய்கிறது நாவல். இந்த விசாரணைக்கு உலக அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியலின் ஊடாட்டங்கள் பற்றிய உண்மை ஒளியாகப் பாய்ச்சப்படுகிறது.

எமது வலிமையை, அநீதியும் அதர்மமும் வஞ்சகமும்கொண்டு சிங்கள தேசம் உலக சக்திகளுடன்கூடி அழித்தது. எமது நீதிக்குரல்கள் கேட்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக்கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக்கொண்டது. அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக்கொண்டது. எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை. நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப்படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மைக் கருவறுத்தது. இந்தப் பின்னணியில் மக்களின் வாழ்வு என்னவாக இருந்தது என்பது வெளியே அறியப்படாதது. ஆனால், அறியவேண்டியது. அந்தக் கதையைச் சொல்லிவிட்டுப்போகிறோம். ஏனெனில், அது மீண்டும் மீண்டும் உலகின் ஏதோ ஒரு மூலையில் படரக் காத்திருக்கும் நச்சுப் பதார்த்தம்.

ஒருவன், தன் வாழ்வுக்கு எழுத்தை சாட்சியாக நிறுத்த முடியாது. ஆனால், தன் எழுத்துக்கு வாழ்வை சாட்சியாக நிறுத்த முடியும். இதுவரையிலான என் எழுத்தைப்போலவே `போருழல் காதை’யும் வாழ்வை சாட்சியாக்கித் துணிந்ததுதாம்.

போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும்.

குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவலில் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.”

யூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான் !

2001 ம் ஆண்டு 24 யூலை அதிகாலை 14 கரும்புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தை ஊடறுத்து புகுந்தார்கள். பிறகு அங்கு அவர்கள் 14 பேரும் எழுதியது ஒரு இனத்தின் அடங்காமையை, துணிச்சலை, வீரத்தை..

ஒரு இனத்தின் ஒட்டு மொத்த சினமாக அங்கிருந்த வான்கலங்கள் மீது மோதி வெடித்தார்கள். முழு உலகமுமே புலிகளை பார்த்து பிரமித்த நாள் அது.

படைவலுச்சமநிலை புலிகள் பக்கம் திரும்பக் காரணமாக இருந்ததும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் மீது மேற்குலகம் வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்குக் காரணமாக இருந்ததுமான தாக்குதல் என்று வரலாற்றாய்வாளர்களும் இராணுவ வல்லுனர்களும் பதிவு செய்த தாக்குதல் இது.

உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தாக்குதல் நெறிப்படுத்தப்பட வெறும் 14 புலிகள் செய்த சாதனை அது.

இங்கு நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது.

வெறும் 14 போராளிகள் அன்று தீவின் படைத்துறை/அரசியல்/ பொருண்மிய காரணிகளை தீர்மானிக்கும் வல்லமையை தமதாக்கிக் கொண்டார்கள் என்பதே அது.

எனவே எம்மிடம் இருக்கும் போர்க்குணத்தையும் /வீரத்தையும் தொடர்ந்து பேணுவது அவசியம்.

ஏனென்றால் இன்றைய உலக ஒழுங்கு என்பது பலமுள்ளவன் பக்கம் சாயும் தன்மை கொண்டது மட்டுமல்ல நாம் தொடர்ந்து வீழ்ந்து கிடப்பது எதிரி எம்மை தொடர்ந்து அழிக்க உதவுமே ஒழிய எம்மைத் தற்காக்க உதவாது.

“சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும்” என்கிறார் சாணக்கியர்.

“தகுதியுள்ளவை உயிர்வாழும்” என்கிறார் டார்வின்.

இதையே சிக்மன்ட் ப்ராய்ட் வேறு ஒரு மொழியில் சொல்கிறார் ” தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும்”.

அரசு என்ற போர்வையில் பேரழிவு ஆயுதங்களுடன்/ அதி நவீன விஞ்ஞான- தொழில்நுட்ப – புலனாய்வு வலையமைப்புக்களுடன்/ நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புசார் சிந்தனை குழாம்களின் லொபிகளால் சுற்றி வளைக்கப்பட்டு வேட்டையாடப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தில் உயிர்க்கொடை (கரும் புலிகள்) என்பது தவிர்க்க முடியாத ஒரு வகிபாகத்தைக் கொண்டது என்பதை’ நந்திக்கடல்’ அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.

அதனால்தான் பலவீனமான தேசிய இனங்களின் பலம் மிக்க இந்த அதி மனிதர்களை தத்துவப்படுத்தி மறு அறிமுகம் செய்கிறது ‘நந்திக்கடல்’.

நாம் அடிக்கத் தேவையில்லை – ஆனால் எல்லை மீறிப் போனால் ஒரு கட்டத்தில் மீளத் திருப்பி அடிப்போம் என்ற அச்ச உளவியலை எதிரிக்குள் விதைப்பதனூடாகவே நாம் எம்மைத் தற்காத்துக் கொள்ளவும் / பேரம் பேசவும் முடியும்.

அதை விடுத்து தற்போது நமது தமிழ் அரசியல்வாதிகள் செய்வது போல் இணக்க/ அடிபணிவு/ ஒப்படைவு/ சரணாகதி அரசியல் செய்தால் இருக்கிற கோவணமும் பறி போய்விடும்.

யூலை மாதத்தின் குறிப்பாக
இன்றைய நாளின் செய்தி இதுதான்.


தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசன வரிகள்

நாகவிகரையில்
பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று..
இனி என்ன?
“காமினி டீ றூம்”
கதவுகள் திறக்கும்!

சிட்டி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில்
அறிமுகமாகும்!
புத்தன் கோவிலுக்கு
அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்!

சிங்கள மகாவித்தியாலயம்
திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின்
வெள்ளரசிற் கட்டலாம்,

முனியப்பர் கோவில்
முன்றலிலும் கட்டலாம்,
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில்
மதிலிலும் கட்டலாம்!

எவர் போய் ஏனென்று கேட்ப்பீர்?
முற்ற வெளியில்
“தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில்
களியாட்ட விழாவும் நடைபெறலாம்!
நாகவிகாரையிலிருந்து
நயினாதீவுக்கு
பாதயத்திரை போகும்!

பிரித் ஓதும் சத்தம்
செம்மணி தாண்டிவந்து
காதில் விழும்!

ஆரியகுளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளத்து பூக்களும்
பூசைக்கு போகும்!

நல்லூர் மணி
துருப்பிடித்துப்போக
நாகவிகாரை மணியசையும்!
ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக்கிடக்க
ஆரியகுளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!

எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்…


தேசியத் தலைவர் இருந்திருந்தால் இப்படி வாலாட்டுவீர்களா: சாள்ஸ் எம்.பி கேள்வி

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் தமிழர்களுக்கு இந்தத் அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?.

தென்கயிலை ஆதீனம் மீது சிங்களக்காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்?அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா?இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் !

இலங்கைதீவில் இன்று நாம் காண்பது இதற்கு முன்னெப்போதும் நடக்காத ஒன்று.இது வெளியிலிருந்து இத்தீவு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது. பேரழிவுகளை கொண்டுவரும் பூகோள ரீதியாக சொல்லப்படும் – கிறிஸ்தவத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது மேற்குலகத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது ஏனையோருக்கு எதிரான இஸ்லாம் – என்ற கதையாடலோடு இத்தீவில் நிகழ்ந்தவை மிகவும் அழகாக ஒத்துப்போகிறது. இலங்கை தீவில் ஒற்றையாட்சியை உருவாக்கி வழிநடத்தி ஈழத்தமிழருக்கு எதிராக இதை பாதுகாத்த அதே சக்திகள்தான் இப்பேரழிவு கொண்டுவரும் கதையாடலையும் உருவாக்கியது.

முள்ளிவாய்க்கால் அழிவின் பத்தாண்டு நிறைவை நினைவுகூரும் இக்காலத்தில், இத்தீவில் இப்போது நடப்பவற்றை பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளின் பின்னரும் ஈழத்தமிழரின் சம்மதத்தை சிங்கள அரசால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னரும் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவித்த வண்ணம் போராடியே வருகிறார்கள். அபகரிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீளப்பெறவும், சிங்கள ராணுவத்தை வெளியேற சொல்லியும், கடத்தப்பட்ட, சரணடைந்த தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று அறியவும், வடக்கு-கிழக்கை இணைக்கவும், அதாவது நீதிக்காக போராடுகிறார்கள்.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர், பொது எதிரி ஒன்று உருவாகி இருப்பதால், வடக்கு-கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்து தரிக்கவைக்கும்படி சிறிலங்கா அரசை சில தமிழ் தலைவர்கள் கேட்கிறார்கள். ஒற்றையாட்சி சிறிலங்காவானது ஐ-அமெரிக்க, பிரித்தானிய, இந்திய வல்லரசுகளின் ஒரு தந்திரோபாயமாக ஒரு இராணுவ கருவியாக தொடர்வதற்கு “இந்த பொது எதிரி” என்ற கருத்தாக்கம் இப்போது துணை போகிறது. வேறொரு வழியில் சொல்வதானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஊடாக ஒற்றையாட்சி வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

நான் இதை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயான திணிக்கப்பட்ட கொடூரமான ஒற்றுமையாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்த சமயத்தவருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான கொடூரமான ஒற்றுமையாகவே விபரிப்பேன்.

இத்தீவிலுள்ள மக்களுக்கு இது முற்றிலும் புதிய ஒரு அனுபவம்.இத்தருணத்தில் எமது எதிர்காலத்தைப்பற்றி நாம் ஆழமாக சிந்திப்பது மிகவும் அவசியம்.

ஈழத்தமிழரின் 60 ஆண்டு கால போராட்டத்தின் பின்னர் முள்ளிவாய்காலில் 70,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கைகள் சொல்கின்றன. முன்னாள் மன்னார் ஆயரின் கணிப்பின்படி 140,000 மக்கள் கணக்கில் இல்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் தமிழீழ அரசும், விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டுமானங்களும் முற்றாக அழிக்கப்பட்ட போது பொரும் தொகையான மக்களும் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டார்கள் என்பதுவே.

இந்த இனவழிப்பில் உலகின் வல்லரசுகளின் பங்கு என்ன?

தமிழருக்கு எதிரான மாபெரும் படுகொலைகளுக்கு பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் துணை போயிருக்கின்றன என்று டப்ளின் தீர்பாயத்தின் அறிக்கையும் பிரேமன் தீர்பாயத்தின் அறிக்கையும் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்ல இது ஒரு இனவழிப்பு – ஒரு தேசத்தின் அத்திவாரங்களை, அதன் மக்களை, அதன் தலைமைகளை, அத்தேசத்திற்காக போராடிய மக்களை, அவர்களின் முன்பள்ளி ஆசிரியர்களிலிருந்து அவர்களின் முதன்மை தலைவர்கள் உட்பட யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.

இது ஏன் நடந்தது?

வரலாற்று ரீதியாக இலங்கை தீவு இராணுவத் தேவைகளுக்கு முக்கியமான ஒரு இடமாக, முதலில் பிரித்தானியாவும் பின்னர் அதனுடன் சேர்ந்து ஐ-அமெரிக்காவும் பார்த்திருக்கின்றன. இத்தீவு பலமான இராணுவத்தை கொண்ட ஒரு ஒற்றையாட்சியின் கீழ் இருந்தால் தான் இத்தீவை இந்திய பெருங்கடலில் ஒரு இராணுவ கேந்திரமாக பாவிக்கலாம்.

ஏகாதிபத்திய அரசுகள் இத்தீவிற்கு கவரப்பட்டதற்கு இதன் அழகான கடற்கரைகளோ இதன் மலையகப்பகுதிகளின் சுவாத்தியமோ, இதன் பழமையான தமிழ் சிங்கள நாகரீகங்களோ காரணமல்ல. அதற்கு உண்மையான காரணம் இந்தியாவின் எல்லையில், இந்திய பெருங்கடலின் மையத்தில், கப்பல் பாதைகள் அமைந்துள்ள இடத்தில் இத்தீவு அமைதுள்ளதே.

உண்மை என்னவென்றால், பிரித்தானிய காலனிய காலத்தில் சிங்களவர்கள் தமிழர்களைவிட உயர்ந்த இனம் என்று நம்பவைக்கப்பட்டார்கள். சிங்களவர்கள் தமிழர்களைவிட பிரித்தானியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நம்பவைக்கப்பட்டார்கள்.

உண்மை என்னவென்றால் பிரித்தானிய இராச்சியம் இலங்கையை ஆக்கிரமித்துகொண்டு இருந்த அதே காலத்தில், தமிழர்கள்தான் இத்தீவை ஆக்கிரமித்தவர்கள் என்று சிங்களவர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். இக்காரணத்தால் இத்தீவுக்கு “சுதந்திரம்” கொடுக்கப்பட முன்னரே, தமிழர்கள் இத்தீவில் ஓரங்கட்டப்பட்டார்கள். சிங்கள தலைமைகள் இத்தீவின் சுதந்திரத்திற்காக இந்திய சுதந்திர போராட்ட தலைமைகள் போல ஒருபோதும் போராடியதில்லை.

பதிலாக சிங்கள தலைமைகள் காந்தியின் குடியரசு கோரிக்கையை எதிர்த்து முடியரசு கோரிக்கையையே முன்வைத்தார்கள். அதே நேரத்தில், யாழ்ப்பாண இளையோர் காங்கிரஸ் தான் காந்தியை பின்பற்றி குடியரசு கோரிக்கையை முன்வைத்தார்கள். இதனால் இந்தியாவின் சுதந்திர போராட்ட சுயாட்சி சிந்தனை சிங்கள பகுதிகளைவிட தமிழ் பகுதிகளிலேயே மேலோங்கி இருந்தது.

தங்கள் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் இதனால் தங்கள் தேசிய சிந்தனைக்கும் என்ன நடக்கிறது என்பதையும் சிங்கள் மக்களே அறியவில்லை. “சுதந்திரத்திற்கு” பின்னர் ஒற்றையாட்சி இறுக்கமாக்கபட்டுள்ளது. இதனாலேயே காந்தியின் சத்தியாகிரக வழியை பின்பற்றி 30 ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சை வழி தமிழர் போராட்டம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆயதப்போராட்டமான பரிணமித்தது.

தமிழர் போராட்டத்தின் வடிவத்தையே, அவர்கள் கொடூரமானவர்கள், தற்கொலைதாரிகள், தீவிரவாதிகள் போன்ற சொல்லாடல்களால் உலக வல்லரசுகள் விமர்சித்து வந்திருக்கின்றன.

உண்மையில் போராட்ட வடிவத்தை மட்டும் இவர்கள் எதிர்க்கவில்லை. போராட்டத்தையே இவர்கள் எதிர்த்தார்கள். தாயகத்திற்கான, தேசியத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான போரட்டத்தை, அது அகிம்சை வழியிலானதாக இருந்தாலும் ஆயுத வழியிலானதாக இருந்தாலும் இவர்கள் எதிர்த்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த ஆணைக்கே விடுதலைப்புலிகள் வடிவம் கொடுத்தார்கள் – ஒரு அரசை நிறுவினார்கள்.

நீண்டு தொடர்ந்த இனவழிப்பு செயற்பாடுகளை இந்த நடைமுறை அரசு ஓரளவு தடுத்து நிறுத்தியது. இராணுவ சாதனைகள் ஊடாக தமிழர் விடுதலை போராட்டம் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி அதனுடன் அரசியல் ஒப்பந்தம் செய்ய ஆயத்தமானது. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஆதரித்தது. ஆனால் ஐக்கிய-அமெரிக்க, பிரித்தானிய, இந்தியா அரசுகள் ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்தன.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அதன் இராணுவ வெற்றிகளை கொண்டு சனநாயக அரசியல் வெளியை உருவாக்கி கொடுத்தது. அதுதான் 2002ம் ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள். இந்த சனநாயக வெளியை அழிப்பதற்குதான் தான் 70,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 140,000 மக்கள் கணிப்பில் தவறவிடப்பட்டார்கள். இதன் பின்னர் தொடரும் இனவழிப்பில் சிங்கள குடியேற்றத்தாலும், புத்தமத திணிப்புகளாலும், நில அபகரிப்புக்களாலும் தமிழர் தாயத்தின் தோற்றமும் குடிப்பரம்பலும் தலைகீழாக மாற்றப்படுகிறது.

தமிழர் விடுதலை போராட்டம் ஒரு சமயம் சாராத தேசிய போராட்டம். இத்தேசிய போராட்டத்தில் சமயம் இல்லை. சமயத்தை அடிப்படையாக கொண்டு பிரித்தானியாவால் நிறுவப்பட்ட சிங்கள பௌத்த அரசை எதிர்த்தே சமயம் சாராத தமிழர் போராட்டம் உருவானது. உண்மையில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் சமயசார்பற்ற ஒரு சிந்தனையோட்டம் அன்று இருந்தது. ஆனால் பிரித்தானியா சிங்கள பௌத்த சிந்தனை சார்ந்த தேசியத்தையே முன்னிறுத்திது. அதுவே தமிழர்களுக்கு எதிரான ஒரு மனநிலையை சிங்கள மக்களிடம் பரப்பியது.

சிங்கள பௌத்த தேசியம் சமயம் சார்ந்தது. தமிழர்களின் தேசியம் சமயம் சாராதது.

தமிழர் தலைமைகள் சமயத்திற்கு என்ன இடத்தை கொடுத்தார்கள்?

பிரெஞ்சு கம்யூனிச அரசுகள் போல தமிழர் தலைமைகள் சமயத்திற்கு எதிரானவை அல்ல. இவர்களின் நிலைப்பாடு இந்தியாவின் சமயம்சாரா கொள்கைள் போன்றது. அதாவது பல சமயங்களையும் ஒரே தூரத்தில் வைத்து கொள்கைகளை வகுப்பது. அதே நேரம் சமயங்களில் காணப்படும் முற்போக்கு விடுதலை சிந்தனைகளை உள்வாங்குவது. தந்தை செல்வா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். தமிழர் சமூகம் பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட சமூகம். இருந்தும் கிறிஸ்தவ அரசியல் தலைவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏனெனில் தமிழர் போராட்டம் சமயம் சார்ந்தது அல்ல.

விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்களின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சமய முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. போராட்டம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே சுழன்றது.

விடுதலைப்புலிகளின் ஒரு முக்கிய அரசியல் தலைவரான பாலகுமார் தெளிவாக இதை எழுதியிருக்கிறார். வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்விகத்தில் புத்தமதம் இருக்கிறது. ஆனால் அது, அடக்கியாழும் ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் வரும்போது, முக்கியமாக புத்தரின் சிலைகளும் தூபிகளும், நாம் அதை எதிர்க்கிறோம். நாம் புத்தமதத்தை எதிர்க்கவில்லை. சிங்கள அடக்குமுறை அரசின் கருவியாக அது வரும்போது அதை நாம் எதிர்க்கிறோம். இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சமயத்தில் உள்ள சில அடிப்படைவாத கொள்கைகளை இவ்வாறுதான் தமிழர் விடுதலை போராட்டம் தணித்து வைத்திருந்தது. அந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் அடிப்படைவாத சமய குழுக்கள் தோன்றவில்லை. ஐ-அமெரிக்காவினதும் இஸ்ரேயிலினதும் ஆதரவுடன் சவுதி அரேபியாவிலிருந்து கிழக்கு மாகணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட வஹாபிசமும் அப்போது தீவிரமாக எழும்பவில்லை.

சமாதான பேச்சுவார்தை காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமிய மக்களும் இடைய இருந்த உறவு எத்தகையது?

பலர் இதை மறந்து விட்டிருக்கலாம்.

சமாதான பேச்சு வார்த்தைகளின் முக்கியமான காலத்தில் விடுதலைப்புலிகளும் வரலாற்று ரீதியாக சிங்கள பெரும்பான்மை அரசால் அடக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அரசியல் கட்சிகள் உட்பட, ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கியிருந்தார்கள். அதோடு கருணா விலகிய பின் கிழக்கு மாகாணத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட கௌசல்யன் இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக வேலை செய்தார். இஸ்லாமிய மக்களும் அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் மேல் அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள்.

தங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட்ட இஸ்லாமிய விவசாயிகளால் கௌசல்யனின் அரசியல் செயலகம் நிரம்பியிருந்தது எனக்கு நன்றாகவே தெரியும். கௌசல்யனின் இறுதி நிகழ்வுக்கு யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்பதை நினைவு படுத்துங்கள். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமல்ல. தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் வந்திருந்தார்கள். அதுதான் பலரையும் இணைத்த சமயம் சாராத தமிழர் தேசிய விடுதலை போராட்டம். இந்த சாதனையைதான் அழித்தொழித்தார்கள்.

நாம் 70,000 உயிர்களை மட்டும் தொலைக்கவில்லை. நாம் பெரும் நிலப்பரப்புக்களை மட்டும் இழக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மதங்களையும் கொண்டாடும் அதே நேரம் மத பழக்கங்கள் அடிப்படைவாதமாக மாறாமல் தடுக்கும் பல்லின மக்கள் இணைந்த தேசிய உணர்வையும் இழந்துவிட்டோம்.

2009 படுகொலைகளுக்கு பின் இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள் தமிழர் தாயகத்திற்கும் வந்துள்ளன. வஹாபி போக்குகளும் தீவிரமடைந்துள்ளன. ஐ-அமெரிக்காவிலும் இஸ்ரேயிலிலும் இயங்கும் சியோனிஸ்ட் குழுக்களும் வந்து சேர்ந்துள்ளன. சிங்கள பெளத்த தேசியமும் வெற்றி போதையில் திளைக்கிறது. இன்று இச்சமயங்கள் எல்லாம் அடிப்படைவாத பிரிவுகளாக இத்தீவில் உருவாகியுள்ளன. முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு பின் சமயங்கள் இடையேயான உறவுகள் மீளமைக்கப்பட்டுள்ளன.

நாம் உயிர்களை மட்டும் கொடுக்கவில்லை. சமயம் சாராத தேசிய விடுதலை சிந்தனை கொண்ட போக்கையும் இழந்துவிட்டு நிற்கிறோம். இதன் விளைவைத்தான் இப்போது அனுபவித்துகொண்டு இருக்கிறோம். முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தமிழ்-சிங்கள, கத்தோலிக்க-புரோட்டஸ்டன், தெற்கு-கிழக்கு தேவாலாய தாக்குதல்களுக்கு பின்னர்.

இத்தாக்குதல்களின் விளைவுகள் என்ன?

கம்யூனிச சோவியத் ஒன்றியத்திலும் ஆப்கானிஸ்தானிலும் அன்று நிலவிய கம்யூனிச ஆட்சியை எதிர்ப்பதற்காக, பனிப்போர் காலத்தில் ஆப்கானிஸ்தானில் முஜஹதீன் கொரில்லாக்களுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அடிப்படைவாத போக்குகளை முதலில் ஐ-அமெரிக்காவே ஊக்குவித்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியின் கீழ்தான் மூன்றாம் உலக நாடுகளிலேயே அதிகமான பெண் வைத்தியர்கள் இருந்தார்கள். அங்கு பால்நிலை சமத்துவம் மேலோங்கி இருந்தது.

ஆனால், பெண் உரிமை பற்றி பேசும் பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் முஜஹதீன் கொரில்லாக்களை சவுதி ஆரேபியாவின் வஹாபிச கொள்கைகளை தழுவுவதற்கு ஊக்குவித்தார்கள். அதன் மூலம் இந்த கொரில்லாக்கள் சோவியத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு எதிராக ஐ-அமெரிக்க பிரித்தானிய போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

வஹாபிசம் எங்கிருந்து வருகிறது?

எவ்வாறு சிங்கள பௌத்த இனவாதம் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டதோ அவ்வாறே சவுதி அரேபியாவின் அரச பரம்பரையால் பின்பற்ற படும் இஸ்லாத்தின் ஒரு சிறிய பகுதியான வஹாபிசம் முதலாம் உலக யுத்தத்தின் போது ஒட்டமான் பேரராசுக்கு எதிராக பிரித்தானிய அரசால் ஊக்குவிக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா வஹகாபிசத்தை பின்பற்றும் தலைமைகளின் கைகளில் கொடுக்கப்பட்டது. இந்த வஹாபிசம் தான் மத்திய கிழக்கில், முக்கியமாக அரேபிய தீபகத்தில், இருந்த இஸ்லாத்தின் முற்போக்கு சிந்தனைகளை அழித்தது.

இதை இப்போது இந்தியாவில் வளரும் இந்துத்துவா அடிப்படைவாத சிந்தனைகளிலும் பார்க்கிறோம். உலகின் வல்லரசுகள் எல்லாம் இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது போலவே பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேயிலும் ஒரு கடுமையான சியோனிஸ்ட் சிந்தனையோடு உருவாக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். அது போலவே சிங்கள பௌத்த அரசும் இலங்கை தீவில் ஒரு தந்திரோபாயமாக தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் இந்த வல்லரசு நாடுகளும் இன்று தம்மை சமயம் சார நாடுகளாக முன்னிறுத்தினாலும், மறுபக்கத்தில் இங்கும், முக்கியமாக ஐ-அமெரிக்காவில், அடிப்படைவாத கிறிஸ்தவ போக்குகள் வளருகின்றன. ஐ-அமெரிக்காவில் பைபிள் பெல்ட் எனப்படும் இடங்கள் ஜோர்ஜ் புஸ் ஐயும் ஏனைய போர் முனைப்பு கொண்ட சனாதிபதிகளையும் தெரிவு செய்த இடமாக உள்ளன. இவர்களின் ஏகாதிபத்திய திட்டங்களில் சமயங்கள் அடிப்படைவாத போக்கில் செல்ல ஊக்கப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல, சமயங்கள் ஒன்றுடன் ஒன்று மோதவிடப்படுகின்றன.

ஐ-அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய இந்த அழிவுகளை கொண்டு வரும் பூகோள மட்ட சமய கதையாடல்களின் மேடையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கைதீவு மாறியிருக்கிறது. இத்தாக்குதல்களை செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் தெற்காசியாவில், முக்கியமாக இலங்கையில், பிரித்தானிய ஐ-அமெரிக்க நன்மைகளுக்காக இயங்கியிருக்கிறார்கள்.

இராணுவத்தை வெளியேற்ற தமிழர்கள் பத்து வருடங்களாக போராடிய பின்னர், இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டாம் என்று சொல்வது போன்ற தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் சிறிலங்கா அரசை ஏற்றுக்கொள்ளும் போக்கு தோன்றுகிறது. கடந்த பத்து வருடங்களாக குற்றம் இழைத்த அரசாக கருதப்பட்ட சிறிலங்கா அரசு, இப்போ “பாதிக்கப்பட்ட” அரசாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த பாதிக்கப்பட்ட அரசு மற்றயவர்களுடன் போரிடுவதற்கு அதற்கு மேலும் பலம் தேவைப்படும் – இந்த வாதமே இத்தாக்குதலின் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்பூகோள வடிவமைப்பில் சீனாவின் பங்கு என்ன?

முள்ளிவாய்கால் அழிவுக்கு பின் சிறிலங்கா அரசு சீனாவுடம் மேலும் மேலும் நெருக்கமான உறவை பேணியது. ஐ-அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐநா ஊடாக சிறிலங்காவுக்கு எச்சரிக்கைகள் விடுக்க ஆரம்பித்தன. தமிழர்களுக்கு நீதி வழங்கும் நோக்கத்துடன் இது செய்யப்படவில்லை.

ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானங்கள் சிறிலங்கா அரசுக்கு “சீனாவுக்கு நெருக்கமாக போகாதே” என்ற எச்சரிக்கையை கொடுத்தது. அதே நேரம் தமிழர்களுக்கு “மேற்குலகிற்கு நெருக்கமாக வாருங்கள், நீங்கள் வேண்டும் நீதியை நாம் கொடுக்கிறோம்” என்ற செய்தியையும் கொடுத்தது. இத்தீர்மானங்கள் ஒற்றையாட்சியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. பதிலாக இத்தீர்மானங்கள் முள்ளிவாய்கால் அழிவை, தமிழ் இனத்தின் அழிவை, தனிநபர் மனித உரிமை மீறல்கள் என்ற வட்டத்திற்குள் அடக்கிவிட்டது. தமிழர்களுக்கு நீதிமன்றம் ஊடாக நீதி என்ற பொய்யான ஒரு நம்பிக்கையை கொடுத்து, அரசியல் நீதி பற்றி பேச வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இதே சக்திகள்தான் 2015 ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தது. அதற்கு என்ன நடந்தது?

மேலும் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வல்லரசுகளை நம்பாமல் தாமே போரிட வேண்டும் என்ற தெளிவுக்கு களத்தில் நிற்கும் தமிழ் மக்கள் வர தலைப்படுகிறார்கள். இவர்கள்தான் முள்ளிவாய்கால் பத்து ஆண்டுகள் நிறைவை நினைவுகூர ஆயத்தமானார்கள். அழிவுகள் நடந்த இடத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் நினைவுகூர ஆயத்தமானார்கள். இக்கட்டத்தில்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன. பல உயிர்களை இழந்தோம்.

இங்கு இழக்கப்பட்ட உயிர்களும், சிறிலங்காவின் இராணுவ வெற்றி காவுகொண்ட உயிர்களும் இப்போது ஒற்றையாட்சியை பலப்படுத்துவதற்கும், பூகோள மட்டத்தில் சிறிலங்கா ஏகாதிபத்திய அரசுகளின் இராணுவ தேவைகளுக்கான ஒரு இடமாகுவதற்கும் உதவுகிறது. பூகோள மட்டத்தில் இராணுவ தளமாக மாறும் சிறிலங்கா இந்திய பெருங்கடலில் சீனாவை அடக்குவதற்கான வல்லரசுகளின் தளமாகி மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப்படும்.

2002ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது மட்டுமே இத்தீவு உண்மையான சுதந்திரத்தை எட்டியது. இருதரப்புகளும் பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் விடயங்களை பேசுவதற்கு இணக்கம் கண்டன. தமிழர்களின் கூட்டு எதிர்ப்பினால் இந்த இணக்கம் தோன்றியது.

தமிழர்களின் போராட்டத்தினால் சிங்களவர்களும் சுதந்திரத்தை எட்டும் சாத்தியம் இருந்தது. இது வெளியிலிருந்து திணிக்கப்பட்டது அல்ல. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உருவான சமநிலையால் இந்த இணக்கம் தோன்றியது. அதுவே இத்தீவின் அரச வடிவத்தை மாற்றும், தமிழர்களையும் ஒரு தனித்துவமான தேசியமாக ஏற்கும் அரசியல் பேச்சு வார்த்தையாக மாற்றப்பட்டது. இது இரு நாடுகளாகவோ அல்லது இரு தேசங்கள் இணைந்த ஒரு நாடாகவோ இருக்கலாம் என்பது முக்கியமல்ல. இப்பேச்சுவார்த்தை, வல்லரசுகள் இத்தீவை தங்கள் இராணுவ தேவைகளுக்காக கையாளும் போக்கை தடுத்திருக்கும்.

இந்திய பெருங்கடலை ஒரு சமாதான பிரதேசமாக வருங்காலத்தில் பிரகடனப்படுத்த வேண்டும் என்று டோக்கியோவில் இடம்பெற்ற கடைசி பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு நேர்காணலில் அன்ரன் பாலசிங்கம் சொல்லியிருக்கிறார். உலகம் தம்மிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக அப்போது சொன்னார்.

முப்பது ஆண்டுகளாக போரிட்ட சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் இப்போது கைகுலுக்கி பேச்சுவார்த்தைகள் ஊடாக ஒரு சமாதானத்தையும் சனநாயத தீர்வையும் தேடினார்கள். அதே காலத்தில் உலகம் ஈராக் பற்றிய கொள்கையில் இரண்டு பிரிவாக பிளந்து நின்றது. பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் ஈராக் மீது படையெடுக்கும் திட்டத்தை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பா எதிர்தது. இந்தக் கட்டத்தில் தான் இலங்கை தீவின் சமாதான பேச்சு வார்த்தைகள் பிரித்தானியாவாலும் ஐ-அமெரிக்காவாலும் குலைக்கப்பட்டன. ஏனெனில் ஈராக் மீதான படையெடுப்பிற்கு தெற்காசியாவில் இன்னுமொரு பலமான தளம் தேவைப்பட்டது. அது தான் சிறிலங்கா.

தமிழர்கள் இதற்கான விலையை கொடுத்தார்கள். விலையை கொடுத்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து ஒரு பல்லின தேசிய முற்போக்கு அரசை உருவாக்க போராடினார்கள். இப்போதோ ஒரு பூகோள மட்ட சமய போர் இங்கு திணிக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய சக்திகளையும் சிங்கள பௌத்த தேசியத்தையும், இந்துத்துவா சக்திகளையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் கிறிஸ்தவ அடிப்படை வாதத்தையும் எதிர்ப்பதற்கு இத்தீவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை, முக்கியமாக தமிழ் இஸ்லாமிய ஒற்றுமை மிகவும் முக்கியம். அதற்காக சிறிலங்கா அரசு முன்வைக்கும் கருத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

சமயம் சார்ந்த பல்வேறு சக்திகள் முன்வைப்பவற்றை நாம் எதிர்க்க வேண்டும். ஈழத்தமிழரின் சமயம் சாராத பல் மத தேசியத்தை இஸ்லாமியர்களுடன் நாம் முன்னெடுத்து செல்வது மிகவும் முக்கியம். இதனூடாகவே சிறிலங்கா அரசையும், இத்தீவை அடக்குவதற்கான கருவியாக சிறிலங்கா அரசை கையாளும் வெளிசக்திகளையும், அதனூடாக இந்திய கடல் ஒரு போர்களமாக மாற்றப்படுவதையும் நாம் எதிர்க்க வேண்டும்.

நன்றி – தமிழ்நெற் (https://tamilnet.com/art.html?catid=79&artid=39454)

– பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ – தமிழில் ந மாலதி

பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ

சிங்கள சமூகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ தனது இளமைக் காலத்தில் தனது சொந்த இடமான நீர்கொழும்பில் கருப்பு ஜுலாய் கொடுமைகளை நேரில் பார்த்தார். மனச்சாட்சியின் உறுத்தலால் உந்தப்பட்டு தமிழையும் கற்று தொடர்ந்து தமிழருக்கு எதிரான போரை வெளிப்படையாக எதிர்த்தும் வந்தார். இலங்கை மீனவர் சங்கத்தின் நாடுதழுவிய ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது சிறிலங்கா நேவி வடகிழக்கு தமிழ் முஸ்லீம் மீனவர்கள் கடலுக்கு போவதை தடை செய்ததற்கு எதிராக குரல் கொடுத்தார். கத்தோலிக்க மதத்தை சேர்ந்த இவர், தேவாலய தொடர்புகள் ஊடாக, 1987-2004 காலப்பகுதியில், போர் தீவிரமாக நடந்த காலத்திலும், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்றார். சிறிலங்கா அரசின் பொருளாதார தடைகளுக்கும் தமிழருக்கு எதிரான போருக்கும் எதிராக எழுதியும் வந்தார்.

மனிதாபிமான உதவிகளுடன் தெற்கில் இருந்து ஒரு குழுவை தமிழ் இஸ்லாமிய அகதி முகாம்களுக்கு கூட்டிச் சென்றார். 1995இல், ஈழத்தமிழரின் தேசியம், தாயகம், சுயநிர்ணயத்தை ஏற்கும் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்தார். அதே நேரம் ஹிரு எனப்படும் சிங்கள முற்போக்கு அரசியல் குழுவுடனும் இயங்கினார். இராணுவ தீர்வை எதிர்த்து, 2002 சமாதான பேச்சு வார்த்தையையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு எட்டுவதையும் ஆதரித்தார். இறுதிப்போர் நடக்கும் போது, போருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக ஜெர்மனியின் பிரேமன் நகரிலுள்ள மனித உரிமை அமைப்புடன் (International Human Rights Organization-Bremen) இணைந்து வேலை செய்தார். சிறிலங்கா வான்படையின் 2007 செஞ்சோலை படுகொலையின் பின் போரை எதிர்ப்பதற்காக “சிறிலங்காவில் சமாதானத்திற்காக அயர்லாந்து முன்னணி” (Irish Forum for Peace in Sri Lanka) என்ற அமைப்பை உருவாக்கினார்.

முள்ளிவாய்கால் அழிவின் பின்னர், சிறிலங்காவில் சமாதானத்திற்கான அயர்லாந்து முன்னணி அமைப்பும் ஜெர்மனியின் பிரேமன் நகரில் இயங்கும் மனித உரிமை அமைப்பும் ஒழுங்கு செய்த சிறிலங்காவிற்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் (2010) பிரேமன் (2013) அமர்வுகளின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார். தீர்ப்பாயத்தின் இவ்விரு அமர்வுகளும் சிறிலங்கா இனவழிப்பு குற்றம் இழைத்திருக்கிறது என்றும் பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவும் இனவழிப்புக்கு துணைபோயிருக்கின்றன எனவும் தீர்ப்புகள் வழங்கின. பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ கடந்த 15 வருடங்களாக நாடு செல்ல முடியாததால் அயர்லாந்தில் வாழ்கிறார். அங்கு டப்ளின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார். சண்டைக்கு பின்னரான நீதிக்கான மையம் (Centre for Post-Conflict Justice) என்ற அமைப்பின் இயக்குனராகவும் இருக்கிறார். ஈழத்தமிழருக்கான சர்வதேச கூட்டொருமையை கட்டியெழுப்புதில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

Up ↑