முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக நான் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் வண்டி புதுக்குடியிருப்பு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சாரதி பஸ் வண்டியின் வேகத்தை திடீரெனக் குறைத்து மெதுவாக நகர்த்தினான். நான் யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கு நூற்றுக்கணக்கான வயோதிபர்களும், இளைஞர்களும், பெண்களும் கூட அந்தக் காட்டுப் பாதையை மூடி மறைத்துக்கொண்டு நின்றனர். “தம்பி என்ன நடந்தது? இந்த சனம்மில்லாத காட்டுப்பகுதியில் ஒரே சனமாகக் கிடக்குது” என்று எனக்கு முன்னால் இருந்த சாரதியை ஆவலுடன் கேட்டு எட்டிப்பார்த்தேன். “ஏதுவும் விபத்தா தெரியவில்லை அல்லது வேறெதுவோ தெரியவில்லை.” என்று அவர் தனக்குத் தெரிந்த ஊகங்களை எல்லாம் சொல்லி மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார். எங்களுடைய பஸ்வண்டி நகரமுடியாமல் நின்றது. அங்கே பிரமாண்டமான பீரங்கி வண்டி ஒன்று வீதியோரமாக நிற்பாட்டிக் கிடந்தது. அதைச் சுற்றித்தான் நூற்றுக்கணக்கானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இது என்ன சாமான்? நான் என்னுடைய கண்ணால் ஒருநாளும் காணவில்லையே என்று வியப்பாகப் பார்த்துக் கொண்டு அருகில் இருந்த இளம் போராளி ஒருவரைக் கேட்டேன். இதுதான் ஐயா ஆட்லறி ஷெல் அடிக்கின்ற பீரங்கி.முல்லைத்தீவு ஆமிக்காம்பை எங்கடை ஆட்கள் கைப்பற்றினர் என்று அந்த இளம் போராளி கூறினார். அவர் களைப்பாக இருந்த போதும் முகம் பூரிப்பினால் மலர்ந்து கொண்டிருந்தது.
ஆமாம் ஆயுதத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த இந்த மண்ணுக்கு உரமாகின போராளிகளை நினைத்தேன். இதற்காகப் பலியான அவர்களை நினைத்து அந்த ஆயுதத்தை தொட்டுப்பார்த்தேன். அண்ணை இன்னும் கொஞ்சம் போங்கோ அங்கே இன்னுமொரு ஆட்லறி நிற்கிறது என்று யாரோ கூறியது காதில் விழுந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆட்லறி முகாமில் இருந்து எடுத்து வரவே பெரியபாடாக இருந்திருக்கும் அதற்கிடையில் இன்னும் ஒன்றா? மீண்டும் பஸ்ஸில் நாங்கள் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த இடத்தில் இருந்து சிறிய தூரம் சென்றதும் அதைவிடப் பெரிய ஆட்லறி ஒன்று புல்டோசரில் கட்டிவைத்தபடி நின்றது. அங்கும் ஒரே சனக்கூட்டம். நல்லூர் திருவிழாக் கூட்டத்தில் குவிந்தவர்கள் மாதிரி எல்லோர் முகத்திலும் ஒரே குதூகலம். “முல்லைத்தீவு முகாம் சரியாம்” “ஆயிரம் ஆமிவரை முடிஞ்சுதாம்” “கனபேர் சரணடைந்திருக்கலாமாம்”, “எத்தனையோ ஆயுதங்கள் சாப்பாட்டுச் சாமான்கள், வாகனங்கள் எல்லாம் அள்ளிக்கொண்டுவந்து விட்டினமாம்” என அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சனமெல்லாம் தமக்குத் தெரிந்தபடியெல்லாம் கதைத்துக் கொண்டிருந்தது.
முல்லைத்தீவு முகாம் வன்னிப் பேரு நிலப்பரப்பிலுள்ள மிகப் பெரியதொரு கேந்திர முக்கியத்துவம் வந்த ஐராணுவ கடற்படைக் கூட்டுத்தளம். 1990ம் ஆண்டு முல்லைத்தீவில் காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களை ஒரே இரவில் அகதிகளாக்கி உடுத்த உடுப்புடன் வெளியேற்றிய ஆயிரக்கணக்கான இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலம் முல்லைத்தீவு முகாமாக காட்டியளித்துக் கொண்டிருந்தது.
வடக்குக் கிழக்குப் பகுதியில் கடலாலும் தெற்கே நிலப்பரப்பினாலும் சூழப்பட்ட முகாம். 5 மைல் பரப்பிற்குள் தமது தளத்தை அமைத்து அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் குமுளமுனை, செம்மலை, தண்ணீருற்று, முள்ளியவளை, அலம்பில் பகுதியில் உள்ள மக்கள் திலமும் சொல்லொணாத் துயரத்துக்கும், எறிகணை வீச்சுக்கும் ஆளாகி வந்தனர். இது சர்வதேசத்தின் கண்களுக்குப் படாத தமிழர்களின் பெரிய அவலம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மாட்டுப் பட்டியில் அடுத்தடுத்து விழுந்த ஆட்லறி எறிகணைகளால் 40 பசுமாடுகள் உடல் சிதறிக் கொல்லப்பட்டன. அந்த பரிதாபகரமான சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்குள் அதே எறிகணை பீரங்கிகள் எமது மக்கள் குடியிருப்புக்களில் உலாவருகின்றன. “இந்தப் பெரிய சாமான்களைக் கொண்டு வந்து சேர்த்துப் போட்டாங்கள். இனி என்ன எங்களுக்குத் தமிழீழம் கிடைச்சமாதிரித்தான்” அந்தக் கூட்டத்தோடு ஒருவராக நின்ற அந்தப் பெரியவர் குதூகலித்தார். சில மாதங்களுக்கு முன் வலிகாமத்தில் இருந்தும் பின் தென்மராட்சியில் இருந்தும் இடம்பெயர்ந்து வந்து சேர்ந்தவரின் முகத்தில் எவ்வளவு குதூகலம் அந்த ஆட்லறியை இழுத்து வந்த புல்டோசரின் முனால் நான்கு போராளிகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஆம் களத்தில் பல இரவுகள் தூக்கமில்லாமல் தண்ணீர் உணவு கூட அருந்த முடியாமல் போராடிக்களைத்துப் போய் வந்த அந்தப் போராளிகளைப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது.
முல்லைத்தீவு இராணுவத் தளத்தில் கைப்பற்றப்பட்ட அந்த 122 மி.மீ நடுத்தர பிரிவு ஆட்லறி எறிகணைகளை இழுத்துக் கொண்டு வந்த புல்டோசர்களின் முற்தளத்தில் இருந்த போராளிகளைப் பரிவோடு பார்த்துக்கொண்டு நின்ற மக்கள் அவர்களின் களைத்துப் போன முகங்களைத் தடவிக் கொடுத்தது நெஞ்சைத் தொட்டது. எங்களுடன் பஸ்வண்டியில் வந்துகொண்டிருந்தவர்களில் ஒருவரான கலாதரன் என்ற அதிபர் கண்களை அகலத் திறந்தபடி வியப்புமாறாத நிலையில் ஆட்லறிப் பீரங்கியை மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தார். “இந்த ஆட்லறியால எங்கட எத்தின ஆயிரம் மக்களைப் பறிகொடுத்தோம் நாங்கள். எத்தனை கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்திருக்கின்றார்கள்.” உணர்ச்சிவந்த அவரது கண்களில் இருந்து நீர் வடிந்தது. பச்சை நிறத்திலான அந்த பீரங்கியைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். இனி எங்கட உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்றுவதற்கு பயன்படும் என்று அவர் சொல்லிக்கொண்டே பஸ்வண்டியில் ஏறி அமர்ந்தார்.
முல்லைத்தீவு இராணுவத்தளம் விடுதலைப் புலிகளின் கையில் வீழ்ந்ததால் ஆங்காங்கே மக்கள் தம்மை மறந்து ஆனந்தக்கூத்தாடுவதும் கைதட்டிப் பாட்டுப்பாடுவதுமகா இருந்தனர். சில இடங்களில் வெடிகளைக் கொழுத்தியும் கையில் பந்தங்களை வைத்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கிளிநொச்சியில் புலிகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர் எனச் சில நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை வானொலி தொடர்ந்து மூன்று நாட்களாகக் கூறிவந்ததை மீண்டும் நினைத்துப் பார்கிறேன். ஆம் புலிகளின் சாதனையால் தம்மை மறந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தெருவில் நடமாடிய அந்த மக்களைப் பார்க்கும் போது, மக்கள் எங்கே நிற்கின்றார்கள் என்ற செய்தியை மீண்டும் முழங்கிச் சொல்வது போல் இருந்தது.
நாங்கள் ஏறிய அந்த விஷேட சேவை பஸ்வண்டி உறுமலுடன் புறப்பட்டு புதுக்குடியிருப்பையும் கடந்து உடையார்கட்டை நோக்கி பரந்தன்சாலை ஊடாக விரைந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவுiranuva முகாம் ஓர் இரவினுக்குள் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்ப்பட்டுவிட்டதாம் என்ற செய்தியைக் கேட்டதும் எங்கள் எல்லோருக்கும் வியப்பாகத்தான் இருந்தது. ஆம் எத்தனையோ காவலரண்கள், பாதுகாப்பு வளையங்கள், ஆயிரக்கணக்கான விஷேட பயிற்சிபெற்ற இராணுவப் படையணிகள் அங்கிருந்தன, நவீனரக ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததுடன் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் வன்னித் தாக்குதலைத் தொடங்கி வன்னிப்பெரு நிலப்படப்பு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் என்ற பெரியளவிலான ஆயுதங்களை மேற்கொண்டிருந்த நிலையில்தான் முல்லைத்தீவு இராணுவமுகாம் மீதான புலிகளின் “ஓயாத அலைகள்” இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1996ம் ஆண்டு ஆடி 17ம் திகதி இரவு பத்துமணியளவில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிகளில் தொடங்கிய ஆரவாரமும் இடைச்ச்சலும் தொடர்ந்து காதைப் பிளந்துகொண்டேயிருந்தன. ஒன்றுக்குப்பின் ஒன்றாகச் சென்றுகொண்டிருந்த நூற்றுகணக்கான வாகனங்கள், புல்டோசர்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று அந்தப் பிரதேசம் அதிர்ந்து கொண்டிருந்தது. அன்றிரவு எங்கள் ஒருவருக்கும் தூக்கம் வரவில்லை. கடவுளே இவ்வளவு ஆயிரக்காணக்கான பெடியள் போகுதுகள் அதுவும் வெற்றியோடு சுகமாகத் திரும்ப வேண்டும் என்று இரவு முழுவதும் ஒவ்வொருவரின் பிராத்தனைகளும் இருந்தன. நள்ளிரவு 12.30 மணிபோல் ஊரே அடங்கி இருந்த வேளையில் ஒருசில எறிகணைச் சந்தங்கள் கேட்டன. அதன்பின் பெரிய அளவில் சத்தங்கள் கேட்கவில்லை. மீண்டும் இரவு 2.30 மணி இருக்கும் திரும்ப அமைதியையும் கிழித்துக்கொண்டு வட்டமிட்டுக்கொண்டிருந்த புக்காரா விமானங்களின் இரைச்சல் எல்லோரையும் ஒரு கணம் உளிக்கிவிட்டது. மறுநாள் அதிகாலை வரை சுப்பர்சொனிக் புகாரா விமானங்கள் இறைந்து கொண்டே இருந்தன. “நேற்றிரவு முல்லைத்தீவினில் காயப்பட்ட போராளிகளை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு போகினமாம்” “இராணுவ முகாம் முக்கால்வாசிப் பகுதியினையும் பிடிச்சாச்சாம்.” அன்று காலை ஊர் முழுவதும் இதுதான் பேச்சு. காலை 8.30 மணிபோல் 15க்கு மேற்பட்ட பஸ்வண்டிகள், லொறிகள், இழுவை இயந்திரங்களில் வந்த போராளிகள் “முல்லைத்தீவு முகாமில் இருக்கும் ஆயுதங்களை சாமான்களையும் அள்ளிறத்துக்கு ஆட்கள் தேவை, எங்களோட வரவிரும்பிற ஆட்கள் இதுகளிலே இருங்கள் என்று சொல்லி முடிக்க முன்னர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாமாகவே ஓடிவந்து வண்டிகளில் ஏறிக்கொண்டனர்.
அவர்களில் இளைஞர்கள் மட்டுமல்ல வயோதிபர்களும், குடாநாட்டில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளும், அரச ஊழியர்களும் கூட இருந்தனர். “ஐயா நீங்கள் போறது ஆபத்தான இடம். காம்பில் இருந்து தப்பியோடிப்போன ஆமிக்காரங்கள் பற்றைகள் வழியே ஒழிந்து நின்று ரவுண்ஸ் அடிப்பாங்கள்” அந்தப் போராளிகள் கொடுத்த முன்னெச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாமல் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தனர். “தம்பி எங்கட மண்ணை அந்த சிங்களவனிடம் இருந்து மீட்க நீங்கள் செய்கிற இந்த தியாகத்திற்கு நாங்கள் இதுகூடச் செய்யாவிட்டால்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு பஸ்வண்டியில் ஏறினர். உற்சாகமும் உத்வேகமும் நிறைந்த அந்த மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அந்த இளம் போராளிகளின் உள்ளம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. ஆம் அங்கே ஒரு மக்கள் போராட்டம் முனைப்பெடுத்துக் கொண்டு இருந்தது. அந்த மக்களை ஏற்றி நிறைத்துக் கொண்ட பஸ்வண்டிகள் தகர்க்கப்பட்ட முல்லைத்தீவு இராணுவ முகாம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தன.
புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு பிரதான வழியாகச் சென்றுகொண்டிருந்த அந்த பஸ்வண்டிகளும் லொறிகளும் சிவன் கோயிலைத் தாண்டி முள்ளிவாய்காலையும் பரந்தன் வெளியினூடாக கடந்து சென்றது. இடையிடையே வானத்தில் சுப்பர் சொனிக் விமானங்கள், கிபிர் குண்டுவீச்சு விமானங்களின் மிரட்டல் ஓடிக்கொண்டிருந்த வண்டிகளில் இருந்தவர்களைக் கலக்கிக்கொண்டிருந்தது. அந்த மக்களின் தொடர் வண்டிகள் அடர்ந்த காட்டுப் பகுதியூடாக சென்று வெட்டுவாய்க்கால் பாலத்தின் முன்பு நிறுத்தப்பட்டதும், அவற்றில் இருந்து இறங்கியவர்களின் இதயங்கள் படபடவென அடித்துக் கொண்டிருந்தன. “பாலத்தாலை இப்ப உள்ளுக்குப் போக ஏலாது. கடலுக்கு இறங்கிச் சுற்றித்தான் போகவேண்டும்.கொஞ்சத்தூரம்தான் போகவேண்டும்” அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற போராளி சிரித்துக் கொண்டு கலளிநூடாக நடக்கத் தொடங்கினான்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பெரும் பழமை வாய்ந்த கடலேரிதான் அது. நந்தி உடையார் என்பவரால் அணை கட்டப்பட்டதால் அது நந்திக்கடல் எனப் பெயர் பற்றதாக ஒரு ஐதீகம். அந்த சிறிய ஏரி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் விலை கடலாக இருந்தது. கடல் நீரும் நன்னீரும் சங்கமிக்கும் அந்த நந்திக்கடலில் இறால் வளர்ப்பு பிரபல்யம் வாய்ந்த ஒரு தொழிலாக இருந்து வந்தது. அந்த பெரிய இன இறால்களை வளர்த்து வருவதர்கேற்ற இயற்கை சூழல் இருந்ததால் பெருமளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய இறால் பண்ணையாக அந்த நந்திக்கடல் இருந்தது. (இப்போது 2009ம் ஆண்டு ஓர் வரலாறாக…. இந்தக் கட்டுரை 1996 வரையப்பட்டது ஆயினும் காலத்தின் தேவை உணர்ந்து தேசக்காற்று இணையம் வராலார்ருடன் மீள்பதிவாக்கிறது)
1990ம் ஆண்டின் பின்னரான இராணுவ முற்றுகையைத் தொடர்ந்து அந்தப் பிரதேச மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டுவிட்டது. தமிழீழ மாவட்டங்களில் வளம் செழிக்கும் மாவட்டமாக விளங்குவது முல்லை மாவட்டம் ஒன்றுதான். ஆம் கடல்வளம், காட்டுவளம், மண்வளம், நீர்வளம் என எல்லாமே ஓரிடத்தில் இருப்பதாலோ என்னவோ இங்கு வாழும் மக்களும் வந்தோரை வரவேற்கும் பண்புள்ள பரந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்த மண்ணில் கால் வைத்ததும் அந்த மக்களில் ஒன்றாகச் சென்ற வேலாயுதம் என்ற வயோதிபர் ஒருவர் நந்திகடலைத் தொட்டுக்கும்பிட்ட காட்சி நெஞ்சை உருக்கியது. அவரும் அந்த மண்ணிலேயே காலம் காலமாக வாழ்ந்து பரம்பரை பரம்பரையாகச் சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டு உடுப்புக்களுடன் ஒரு சில சமையல் பாத்திரங்களுடன் மட்டுமே வெளியேறி இன்று அகதியாய் புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார். ஆம் மரணித்துப் போன அந்த நகரத்தை நோக்கி உயிர்த்துடிப்புள்ள மனிதர்களின் பயணம் அந்த நந்திக்கடல் நீரேரியூடாக ஆரம்பமாகியது. கோரைப் பற்றைகளும் பனைமரங்களுமகாக் காட்சியளித்த அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம் பேய்வாழ்ந்த வீடு போல் இருந்தது. உடைந்த கட்டிடங்கள் பற்றைகளால் மூடிப்போய் பாழடைந்து கிடந்தன. தூரத்தில் தெரிந்த இராணுவக் காவலரன்கள அந்தப் போர்ச் சூழழில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.
அவர்களை அழைத்துவந்த போராளிகள் முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீர் ஊடாக நடந்து சென்று கொண்டிருந்தான்ர். அந்த ஆழம் குறைந்த நந்திக்கடளையும் கடந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு அங்கு இருந்த காட்சி பென்கெர் ஆங்கிலத் திரைப்படம் பார்த்தது போன்று திகிலூட்டுவதாக இருந்தது. அந்தக் கடற்கரை நீளத்திற்கு இரண்டு மூன்று அடிகளுக்கு ஒன்றாக ஆயுதம் தாங்கிய போராளிகளின் பெருந்தொகையாக தயார் நிலையில் நின்றனர். கடலில் கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான அதிவேகப் பீரங்கிப்படகுகள் அணிவகுத்து நின்றன. அங்கிருந்து சுமார் மூன்று மெயில் தூரம் வரை கடற்கரை மணலிநூடாக நன்னது சென்று முல்லைத்தீவு இராணுவ முகாமின் மையப்பகுதியை அடைந்தனர். அங்கே இராணுவத்தினரின் மிகப் பெரிய தகவல் தொடர்புக் கோபுரம் சரிந்துபோய்க் கிடந்தது. சுற்றுப்புறமும் கிடக்கும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் சடலங்கள் சிதறிக் காணப்பட்டன. அந்த சடலங்களையும் கடந்துபோவதற்கு அவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆம் தமிழ்மக்களை குண்டு வீசிக் கொன்றவர்கள், தமிழர் சொத்துக்களை நீர்மூலமாக்கி அழித்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து அடித்துத் துரத்தியவர்கள். அந்தப் போர் வெறியர்களின் இறந்த சடலங்கள் தெருவீதிகளிலும் கட்டிட இடிபாடுகளிலும் காவலரண்களிலும் முட்கம்பிகளிலும் தொங்கிக்கிடந்தன.
கடந்த சில வாரங்களாக முல்லைத்தீவு இராணுவ முகாமில் இருந்து ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்லறி எறிகணைகள் பசு மாடுகளை மட்டுமா கொன்றொழித்தன? தினமும் குறைந்தது ஒருவர் என்ற கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டு வந்தன. முள்ளியவளை விநாயகர் ஆலயத் தேரில் விழுந்த செல் அந்தத் தேரையும் ஆலையத்தையும் சிதைத்து 15 இலட்சம் ரூபாவிற்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த முகாம் வளவினுள் சென்ற பொதுமக்கள் வியப்புடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் இந்தப் பாரிய படைத்தளத்தினுள் வருவார்கள் என நினைத்துக்கூடப் பார்த்து இருக்கமாட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வீடுகளை விட்டு வெளியேறி இனி தங்க தங்கட வீடுகளுக்கு எப்போ போகப் போகிறோம் என்றிருந்த அவர்களுக்கு முல்லைத்தீவு நகரம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்து விட்டது. அங்கே உதவி செய்வதற்காக விளிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவில் வாழும் ஒருவரும் வந்திருந்தார். அந்தக் காட்சி அவர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. “ஐயா தம்பிமாரே கெதியாயாய் ஓடி வாருங்கள். இந்தப் பெட்டிகளைக் கொண்டுபோய் வள்ளத்திலும், டிரக்கர்களிலும் ஏற்றுங்கோ” அங்கே நிற ஏனைய போராளிகளுக்கு கட்டளையிட்டுக்கொண்டு நின்ற ஒருவர் உரக்கக் கத்திக்கொண்டு நின்றார். அவரின் அந்த வேண்டுகோளைத் தொடர்ந்து முகாமின் மையப்பகுதியில் இருந்த மூட்டைகள் பெரிய பெரிய பேட்டிகள் எல்லாம் வெளியே கொண்டு வரப்பட்டன. கடலில் நின்ற வளங்களிலும் டிராக்டர்களிலும் இவை ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான பெண் போராளிகளும் ஆண்போராளிகளும் நின்று இயந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டு நின்றனர். போராளிகளுடன் சென்ற இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் கூட உற்சாகமாகச் செயல்பட்டுக் கொஞ்சத்தூரம் தூக்கிக் கொண்டுவந்து தாங்கோ” அங்கே ஒரு பெண்போராளி பெரிய பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார். சிரல் ஓடிப்போய் அவற்றை வாங்கி தூக்கிக் கொண்டு போய் டிராக்டரில் ஏறினர். அதைப் போல் ஆயிரக்கணக்கான பெட்டிகள் வள்ளங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சிலர் இரனுவமுகாமின் ஏனைய பகுதிகளுக்கும் ஓடிச் சென்று ஆசை தீரப் பார்த்து பிரமித்துப்போய் நின்றனர். அங்கே கண்ட காட்சிகள் அவர்களை மலைக்க வைத்துவிட்டன.
அந்த அரை முழுவதும் பலகோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் மட்டும் அடுக்கடுக்காய் இருந்தான். சீஸ்கட்டிகள், நூடில்ஸ் பைகள், லிப்டன் தேயிலைப் பைகள், ஓவல்டின், மைலோ, நெஸ்டமோல்ட் பெட்டிகள், கொடியால் வகைகள், அரிசி மூடைகள், மா மூடைகள், என்று ஏராளமான உணவுப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டு இருந்தன. இந்தப் பண்டகசாலைகளில் செமிக்கபட்டிருந்த உணவுப் பொருள்களே பலகோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று பார்த்தவர்கள் கூறிக்கொண்டார்கள். இவை யாவும் போதாதென்று பெட்டி பெட்டியாக சிகரட் பக்கெட்டுக்கள், வைன், பியர், சாராயம் போன்ற பல்வேறு மதுபான வகைகளும் கூட பெட்டி பெட்டியாக அடுக்கப்பட்டிருந்தன. “மச்சான் இதுகளை ஏற்றுவதற்கே பத்துநாட்களுக்கு மேல் போகும்” காலமையிளிருந்து வெயிலுக்க வேலை செய்கின்றோம். ஒரே தண்ணி விடாயாய் இருக்குது என்றான் இளையவனான முரளி. “டேய் முரளி அங்க பார் அந்தத் தட்டு நிறைய யூஸ் போத்தல்கள் அடுக்கிக்கிடக்குது” அவனும் அவனுடன் நின்ற ரமேஷும், அந்த அரை மூலையில் இரண்டு தட்டில் நீளத்திற்கு அடுக்கடுக்கா வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பலரக பழச்சாறு யூஸ் போத்தல்களைக் காட்டியதும் இருவரும் ஓடிச்சென்று அதில் ஒன்றை வாயில் கொட்டினர். அத்தகைய வெயிலிலும் தண்ணீர் தாகத்திலும் அனைவரும் ஓயாது வேலை செய்தனர். வெளியில் கொச்சி நீளத்திற்கு நின்ற டிரக்ரர்களிலும் லொறிகளிலும் பெட்டி பெட்டியாக ஆயுத தளபாடங்களையும், எறிகணைகளையும், ரவைகளையும் ஏற்றி நிறைத்ததும் அவை ஒவ்வொன்றாக முகாமைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. வழியில் ஒரு சிறிய வீட்டின் முனால் அழகான “பொமேரியன்” நாய்க்குட்டிகள் இரண்டுகளில் ஒன்று கத்திக்கொண்டு இருந்தது. அந்த அழகான பேட்டை நாய்க்குட்டு வருவோர் போவரைக் கைகாட்டி அழைப்பது போன்று முன்னம் கால்களை ஆட்டி ஆட்டிக் குரைத்துக் கொண்டிருந்தது. அது பிரிகேடியர் வளர்த்த செல்லப் பிராநியாம். அதனுடைய அழகையும் செயல்காளையும் கண்ட ஒரு போராளி ஓடிப்போய் அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து அவனது வாகனத்துக்குள் ஏற்றி விட்டான்.
ஆடி மாதம் 17ம் திகதி இரவு 12.30 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் படையணிகளினால் தொடுக்கப்பட்ட இந்த அதிவேகத் தாக்குதலுக்கு “ஓயாத அலைகள்” எனப் பெயரிடப்பட்டது எவ்வளவு பொருத்தமானது. அன்றைய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஓடி சுமார் நூறு மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் ஏறி இருந்து தப்பிச் சென்ற இராணுவ கோப்ரல், பி.பி.சி நிறுவனத்திற்கு அளித்த பெட்டி சண்டையின் அகோரத்தை வெளிக்காட்டியது. “நாங்கள் அன்றும் வழமைபோல் இராணுவக் காவலரண்களில் உசாராக இருந்தபோது அலை அலையாக ஆண்புலிகளும், பெண்புலிகளும் ஓடிவந்து அதிவேகத்தில் சுட்டுக் குண்டு நாலாபுறத்திலும் இருந்து தாக்கினார்கள். அந்த நேரத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது திணறிவிட்டோம். முடிந்தவரை நாங்களும் எதிர்த்து சுட்டுக் கொண்டிருந்தோம். அவர்களின் துரிதமான அடியின் வேகம் தாங்க முடியாமல் என்னிடம் இருந்த ரவைகள் தீர்ந்ததும் ஓடிப்போய் தென்னை மரத்தில் ஏறி ஒழிந்திருந்தேன். பின்னர் ஒரு ஜீப்பில் ஒரு புலி வந்து தமிழில் எதோ கூறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து ஆயுதங்களையும், போருலகளையும் இறந்த எங்களுடைய இராணுவத்தின் உடல்களையும் டிரக்டரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். புலிகள் மற்ற தளத்திற்கு சென்றதும் நான் மரத்திலிருந்து இறங்கி தப்பிச் சென்றேன்.” அந்தப் 19 வயது சிங்களச் சிப்பாய் புலிகளின் இந்தப் புயல்வேகத் தாக்குதலினால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அவரது மருண்ட வெளுறிய முகம் காட்டிக் கொண்டிருந்ததாகச் செய்தியாளர் கூறினார்.
ஆம் கொரில்லா இயக்கமாகத் தோற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் காலப்போக்கில் தரை, கடல், விமான வழித்தாக்குதல் ஊடாக வளர்ச்சி பெற்று ஒரு மரபு வழிப் படையணியாக முதிர்ச்சி பெற்றது. உலகில் விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த முல்லைத்தீவு முகாம் சமர் தலைவர் பிரபாகரனால் நன்கு திட்டமிடப்பட்டு, நேரிப்படுத்தப்படுத்தப்பட்டு பல மூத்த தளபதிகள் மூலம் வழிநடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் ஆகும். “ரிவிரச” இராணுவ நடவடிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டோம். அவர்கள் பின்வாங்கிப் போயுள்ளார்கள். அவர்களால் இனியொரு மரபு வழிப்போரை மேற்கொள்ள முடியாது. ஒழித்திருந்து கொரில்லாத் தாக்குதலையே மேற்கொள்ள முடியும். இன்னும் 25 வீதமான புலிகளே இருக்கின்றனர். அவர்களையும் விரைவில் ஒழித்து நாட்டில் அமைதி நிலையை ஏற்படுத்துவோம்” என்று உலகத்திற்கு பாதுகாப்பு பிறது அமைச்சர் அனுரத்த ரத்வத்த அவர்கள் அறிக்கை விடுத்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. இந்தப் பாரிய முகாம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. சிறீலங்கா அரசுக்கும் அவருக்கும் பேரதிர்ச்சியையும், உலகுக்கு திகைப்பையும் கொடுத்துள்ளது.
இரவு 12.30க்கு ஆரம்பித்த தொடர்ச்சியான மோட்டார் தாக்குதலின் பின்னர் இராணுவ முகாமில் இருந்த எறிகணை பீரங்கிகளையும், கவசவாகனங்களையும் புலிகள் கைப்பற்றிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவ சிப்பாய்கள் எதுவும் செய்யமுடியாத அளவுக்கு ஆயுரக்கனக்கான புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். அன்று அந்த முகாமில் இருந்த 2 ஆட்லறி எறிகணைப் பீரங்கிகளை கைப்பற்றிய போராளிகள் அதனை உடனடியாக வெளியே கொண்டுவர முடியாமற் போய்விட்டது அங்கே நின்ற பொதுமக்கள் அவற்றை அப்புரபப்டுத்த படாதபாடுபட்டனர். அங்கே ஓடிவந்த சிலர் தங்கள் தோள்களைக் கொடுத்து ஆட்லறியைத் தூக்க முயன்ற காட்சியைப் பார்த்து, வீர்ரச்சாவு அடைந்தாலும் பரவாயில்லை என்றே அங்கே நின்ற ஒரு போராளி உணர்ச்சி போங்க கூறிக்கொண்டு நின்றார். ஆம் எமது மக்களைக் கொன்று, எமது மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய அந்தப் பிரமாண்டமான ஆட்லறுப் பீரங்கி முகாமின் முன் பகுதி மூலமாகக் கொண்டு வரப்பட்டு கடற்கரை வழியாக இழுத்துச் செல்லப்பட்டது. பூநகரித் தளம் விடுதலைப் போராட்டத்தில் டாங்கிப் பலத்தைக் கொடுத்தது. இன்று முல்லைத்தீவு தளம் ஆட்லறிப் பலத்தை பெற்றுக்கொடுத்தது. ஒரு மரபு வழி அணிக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளையும், வளங்களையும் பெற்றுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இப்பொழுது புதிய பரிமாணத்தை அடைவதற்கு தளம் அமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
“ஏய் தம்பிமாரே கேலிகள் வருது அடிக்கப்போகிறாங்கள். அப்படியே விழுந்து படுங்கோ” அந்தமுகாம் பகுதியில் துரிதமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த மிக எடுப்பான தோற்றத்தைக் கொண்டிருந்த மூத்த போராளி ஒருவர் உரத்துக் கூறியபடி அங்கு ஓடி வந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார். அந்தத் தீடீர் எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கே இருந்த பொதுமக்கள் சிதறி ஓடி தரையில் விழுந்து படுத்தவர்கள் ஒருபுறமும், கட்டிடங்களுக்குள் ஓடியவர்கள் ஒருபுறமும், தண்ணீர்த் தொட்டியின் கீழ் ஒழிந்து கொண்டவர்கள் எனவும் பதுங்கினர். கீழே விழுந்து முகம் குப்பறப்படுத்தவர்களில் பலர் இறந்து சிதறிக்கிடந்த இராணுவச் சிப்பாய்களின் மத்தியில் கூட படுத்து இருந்தனர். அந்த நேரம் கடலோரமாக வரிசையாககப் பறந்து கொண்டிருந்த ஹெலிக்கொப்டர்களில் இருந்து சரமாரியாக ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர். அவற்றிலிருந்து ஏவப்பட்ட பல ரொக்கட்டுகளும் குண்டுகளும் கடற்புலிகளின் பீரங்கிப் படகுகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டன. கடற்புலிகள் கீழே இருந்து எதிர்த்தாக்குதல் செய்ததை அடுத்து அவைகள் மேலே ஏறி உயரத்தில் பறந்து மறைந்தன.
“இது என்ற வாழ்க்கையில் என்றைக்கும் மறக்கேலாது.” அங்கு நின்ற பொதுமக்களில் ஒரு நடுத்தர வயதுடைய அரச ஊழியராகிய செல்லத்துரை சொன்னார்.
1990ம் ஆண்டு முல்லைத்தீவு நகரை விட்டு இராணுவத்தினரால் வெளியோற்றப்பட்டோர்களில் அவரும் அவரின் குடும்பத்தினரும் அடங்குவர். அவர்கள் முள்ளியவளையில் அகதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இன்று ஆறு வருடங்களின் பின் தான் பிறந்த மண்ணை முத்தமிட்ட மகிழ்ச்சியில் அவரது உள்ளம் குதூகலித்துக் கொண்டிருந்தது. முல்லைத்தீவு முகாமின் மையப்பகுதியில் ஆட்லறி நிலைக்கு அடுத்து பிரதான தபாற்கட்டிடம் உள்ளது. அதைத் தொடர்ந்துள்ள அரசுக் கட்டிடங்களான கச்சேரி, பொது வெளிப்பகுதி, நீதிமன்றக் கட்டிடங்கள், சிறீலங்கா காவல்துறை, அதற்கெதிராக இலங்கை வங்கிக் கட்டிடம் அதையடுத்து பொது நூலிநிளையம் என்பன அமைந்துள்ளன. அங்குள்ள பெருமளவு அரச கட்டிடங்களில் பெருந்தொகையான புத்தம் புதிய ஆயுதத் தளபாடங்கள், உணவுப் பண்டங்களும் சேமிக்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே நின்ற பல வீடுகளின் கூரைத்தகடுகளும் மரங்களும் கழற்றப்பட்டு மொட்டியாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. அந்த வீடுகளின் கூரைத் தகடுகள் இராணுவக் காவலரண்கள் அமைக்கவும் போலி அரண்கள் அமைக்கவும் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தன. பல வீடுகள் இராணுவப் படையணிகளின் பல்வேறு பிரிவுப் பொறுப்பாளர்கள் மேஜர், கப்டன் தரப்பினர் தங்கப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த வீடுகள் மிக அழகாகவும் நவீன வசதிகளுடன் இருந்தன. அங்கே சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் போராளிகளுடன் சேர்ந்து அந்த முகாமைத் துடைத்து வழித்துக் கொண்டு இருந்தனர். சில வீடுகளில் இராணுவத்தினரின் பிடியில் சிக்குப்பட்டு கைதிகளாக இருந்த பொதுமக்கள் சிலரை போராளிகள் அழைத்து வந்து லொறிகளில் ஏற்றினார்கள். அவர்களில் ஒரு வயோதிபப் பெண் நடக்கமுடியாது கஷ்டப்பட்டபோது இரண்டு போராளிகள் அவரைத் தூக்கி வந்ததைப் பார்த்த மக்கள் ஒரு நல்ல மீட்பராகவே அவர்களை அங்கு கண்டனர். 1990ம் ஆண்டு இராணுவ முற்றுகையின் போது அந்த நகரமே இடம் பெயர்ந்து ஓடிய போது உறவினர்களாலும், உடன்பிறப்புக்களாலும் கைவிடப்பட்ட பதினேழு பேர் இராணுவத்தின் கையில் சிக்குண்டு அடிமை வாழ்வுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். அந்த இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட 60 வயதுடைய பெண் ஒருவரிடம், இந்த ஆறு வருட காலமும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று விசாரித்தபோது, நாங்கள் 17 பேர் மட்டுமே இராணுவத்துடன் இருந்தோம். எங்களுக்கெனத் தனியாக ஒரு செய்யமுடியாது. ஆடுகள் வளர்ப்பதும் அவற்றிற்கு வேண்டிய உணவுகளை சேகரிப்பதுமே தொழில். அவற்றை இராணுவத்திற்கு கொடுக்க வேண்டும். அவர்கள் மூன்று நேரமும் சோறு தருவார்கள் என்று கூறினார். தனது கொத்தடிமை வாழ்வு பற்றி குறிப்பிட்ட அந்த பெண்ணின் முகத்தில் விடுவிக்கப்பட்ட பூரிப்பு இருந்தது.
வானத்தில் தொடர்ச்சியாகப் பறந்துகொண்டிருந்த சுப்பர் சொனிக், கிபீர், புக்காரா குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல் ஒரு முறமும், மண்கிண்டிமலை இராணுவ முகாமில் இருந்து விட்டுவிட்டு ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ர ஆட்லறி எறிகணைகள் ஒரு புறமுமாக அந்தச் சின்னஞ்சிறிய நகரம் ஒரு யுத்தக்கலாமாகவே இருந்தது.
இடையிடையே முகாம் பகுதியிலும் கிறனேற் வெடிகுண்டுகளின் சத்தமும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தமும் கேட்ட வண்ணமாகவே இருந்தன. முகாம் தகர்ப்பின் போது தப்பி ஓடிய சிப்பாய்களை ஆங்காங்கே பரந்துள்ள கட்டிடங்களுக்குள்ளும், பற்றைக்காடுகளுக்குள்ளும் ஒழிந்திருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள் இராணுவத்தினர், டிப்போவுக்கும் அருகில் இருந்த பழைய இராணுவ முகாம் பகுதிகளுக்குள்ளும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கட்டிடத்திற்குள்ளும் ஓடிப்போய் ஒளித்துக்கொண்டிருப்பதாகக் கூறிய ஒரு போராளி.
“இன்று இரவுக்குள்ளை அவங்கள் எல்லோரையும் பிடிச்சுப்போடுவம்…” என்று சிரித்துக்கொண்டே கூறியபடி தனது துப்பாக்கியை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு போனான்.
ஏ.கே.எல்.எம்.ஜி இலகுவாகத் தூக்கித் தோளில் மாட்டியபடி மேற்குத் திசையை நோக்கி நடந்த அந்தப் போராளியின் உறுதியையும், தன்னம்பிக்கையையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களினது மனதிலும் ஒரு உறுதி பிறந்தது.
அந்தப் போராளிக்கு சுமார் 20 வயதுதான் இருக்கும். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் கொடூரச் செயலினால் தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்துக் காட்டுப்பாதையூடாக தப்பி வன்னி மண்ணுக்கு வந்து போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவன். தனது சொந்த மண்ணில் இருந்து ஆதிக்க வெறியர்களை விரட்டிச் சுதந்திரமாக நடமாடவேண்டும் என்ற இலட்சிய தாகத்துடன் அவன் இன்று ஒரு போராளியாக அந்த முல்லை மண்ணில் உலாவருகின்றான்.
ஒரு இலட்சியத்துக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தை அடையும் வரை ஓயாப்போவதுமில்லை, மரணத்திற்கும் அஞ்சுவதில்லை என்பதை அவனது போக்கு எடுத்துக்காட்டியது.
அன்று காலையில் இருந்தே போராளிகளுடன் இணைந்து தோளோடு தோள் கொடுத்து இயங்கிக்கொண்டிருந்த மக்களின் மனதிலே பிறந்த உற்சாகம், ஒரு புதிய தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான அத்திவாரமாக இருந்தது.
அன்றைய ஆனந்தக் கலப்பில் தன்னையும் அர்பணித்து வானத்தில் வனம் வந்து ஒளிவீசிக்கொண்டிருந்த சூரியனும் மெல்ல மெல்ல மேற்கு வானினுள் பிரிய மனமின்றி மறையத் தொடங்கிய நேரம்….
“நல்லாக் களைச்சுப் போனியல்….. இனைடைக்கு நீங்கள் செய்த இந்தப்பணி எங்கடை போராட்டத்திலை ஒரு திருப்பு முனையாகத்தான் இருக்கப்போகுது…… எங்கடை போராளிகளுக்கும் ஒரு உற்சாகத்தையும் தாங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்ல என்ற உணர்வையும் ஏற்படுத்தி விட்டியல்”.
யுத்த முனையில் ஒரு பிரிவுப் போராட்ட அணியின் கட்டளைத் தலைவனாக நின்று வழிநடத்திக் கொண்டிருந்த ஒரு போராளி அங்கே நின்ற அந்த மக்கள் கூட்டத்தை நோக்கி வந்தார்.
தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தி தாம் எந்தத் தீர்வையும் திணித்து தமிழர் தாயகத்தியும், தமிழர்களையும் அடிமை கொண்டுவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு அங்கே முனைப்போடு நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்களிப்பு மரண அடி கொடுத்தது போல் இருந்தது.
“தம்பிமாரே!….. இந்த ஸ்டோரில இருக்கிற உங்களுக்கு விருப்பமான எதையாவது எடுத்துச் சாப்பிடுங்கோ…. ஆனால், அங்கே இருக்கிற சாராயம், பியர் ரின்கள், வைன் ரின்கள், சிகரட் பக்கட்டுகளை தொடாதீங்கோ…..”
அந்தப் போர்க்கள நெருக்கடியிலும், வெற்றிக்களிப்பிலும் கூடத் தனது இனம் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்படக்கூடாது என்பதில், மிகவும் நிதானத்துடன் இருந்த அந்தப் போராளியை அங்கே நின்ற இளைஞர்கள் வியப்புடன் பார்த்தார்கள்! அந்தப் போராளி அங்கே நின்ற இளைஞர்களையும் கூட்டிக்கொண்டு தபால் கந்தோர் கட்டிடத்திற்குள் போனார்.
பெருமளவு உணவுப் பொருட்களை ஏற்றி முடித்தும் கூட இன்னும் பெருமளவு அங்கே குவிந்திருந்தது. அந்த அறையினுள் சென்றதும் அவரவர் தமக்கு விருப்பமான உணவுப் பொருட்களை எடுத்துச் சாப்பிட்டார்கள். சிலர் அங்கே வந்ததன் நினைவுச் சின்னமாக, சீஸ்ரின், இறைச்சி ரின், கண்டோஸ் பக்கற் போன்றவற்றுள் சிலவற்றை எடுத்து தமது காற்சட்டைப் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர்.
அவர்களது செய்கைகளை தள்ளி நின்று பார்த்துக்கொண்டு நின்ற போராளிகளுக்கு சிரிப்புத்தான் வந்தது….. அவர்கள் முன்னால் பிளாஸ்ரிக் வாளிகளில் பிரியாணிப் பார்சல்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன.
அவற்றில் “கமகம” என்று இறைச்சி வாசனை மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. முல்லைத்தீவுச் சந்தியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ குரோட்டன் மேடையருகில் அவற்றை வைத்துவிட்டு ஏனைய போராளிகளையும் கூவி அழைத்தனர். எவருமே அந்தப் பிரியாணிப் பார்சல்களை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. அந்தளவிற்கு அந்த கட்டிடங்களுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் ஓடி ஒளிந்திருந்த நூற்றுக்கணக்கான சிங்களப் படையினைத் தேடி அலைவதில்தான் உற்சாகமாக இருந்தார்கள்.
மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியதும். அந்த மக்களை அழைத்துவந்த போராளிகள் அவர்களை நோக்கி வந்து, அண்ணை…… இருட்டுப்பட்டுக் கொண்டு வந்திட்டுது….. உங்களுக்கான ரக்ரர்கள் தயாராக இருக்கு. இருங்கோ என்று கூறியதும் சற்றுத் தள்ளி நிப்பாட்டப்பட்டு நின்ற ரக்ரர்களில் ஏறத்தொடங்கிவிட்டனர்.
இருளும் நேரத்தில் அங்கே இவ்வளவு பெருந்தொகையான பொதுமக்களை வைத்திருப்பது ஆபத்தானது என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்….. விரைவாக அவர்களை அழைத்து வந்த பாதை வழியே கூட்டிச் சென்றார்கள்.
ஆறு வருடங்கள் மக்களை இழந்து வாடி வதங்கிய….. முல்லை மண் அன்று புத்துயிர் பெற்றது போல் பூரித்திருந்தது.
நீண்ட காவலரண் சுவர்கள் முள்கம்பிகளையும் கடந்து அவர்களை ஏற்றிய ரக்ரர்கள் கடற்கரை வழியாக நந்திக்கடல் வரை சென்றது. அங்கிருந்து ரக்ரர்களில் இருந்து இறங்கி நந்திக்கடலைக் கடந்து நடந்து சென்றவர்களை ஏற்றிச்செல்வதற்காக வெட்டுவாய்க்கால் பலத்திற்கு அப்பால் சுமார் 20 பஸ் வண்டிகள் ஆயத்தமாக இருந்தன….
பஸ் வண்டிகளில் ஏறியிருந்த ஒவ்வொருவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் இருந்தாலும் அந்த வளம்கொழிக்கும் முல்லை நகரை விட்டு விட்டு வெளிஎரிக்கொண்டிருப்பது ஏதோ ஒரு இனம் புரியாத கவலையைக் கொடுத்திருக்க வேண்டும். எவருமே ஒருவரோடு ஒருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை….
அந்தச் சுமை நிறைந்த உள்ளங்களை ஏற்றியபடி ஒன்றின் பின் ஒன்றாக அந்த பஸ்வண்டிகள் புதுக்குடியிருப்பை நோக்கி விரைந்து கொண்டிருந்தன.
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்”
அந்த வண்டித் தொடரில் முதலாவதாக விரைந்துகொண்டிருந்த பஸ் வண்டியில் பூட்டப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த தேனிசை செல்லப்பாவின் வெண்கலக் குரலிலான அந்தப் புகழ்பெற்ற பாடல் காற்றினூடாகப் பரவி முல்லைவரை விரைந்து சென்று கொண்டிருந்தது.
முல்லைத்தீவு இராணுவத்தளம் கைப்பற்றப்பட்டதும், 18ம் திகதி 1ம் நாள் போரிலே பெரும்தொhu.கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் அங்கிருந்து பலவகை பெரும்தொகையான நவீன கனரக புத்தம் புதிய ஆயுதங்கள், கவசவாகனங்கள், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டதும் கனவுபோல் இருந்தது. இது தொடர்பாக உண்மையை அறிவதற்காக அன்று பதினெட்டாம் திகதி இரவு இலங்கை வானொலியில் செய்தியறிக்கையைக் கேட்டவர்கள் மலைத்துப்போய் இருந்தார்கள்.” வடபகுதியில் முல்லைத்தீவு முகாம் மீது இன்று அதிகாலை தெற்குப் புறமாகவும், கிழக்குப் புறமாகவும் இருந்து எல்.ரி.ரியினர் புதிய ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க எடுத்த முயற்சி படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதும். இப்பொழுது இராணுவ முகாம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எல்.ரி.ரியினரை தேடி அழிப்பது தொடர்பாகவும் பாதுகாப்புத் தலைமையகம் தெரிவித்துள்ளது.” இவ்வாறு இலங்கை வானொலியில் செய்தியறிக்கையில் குறிப்பிட்ட போது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமகாவும் இருந்தது.
எனவே புதுக்குடியிருப்பிலிருந்தும் அயலிளிருந்தும் பெரும்தொகையான பொதுமக்கள் புலிகள் கைப்பற்றிய இராணுவ முகாமுக்குள் போய் ஆயுதப் பெட்டிகளையும், உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்ததாகக் கூறி ஒருவர் தான் போனதற்கு அடையாளமாக ஒரு சிறிய ரின்னை எடுத்துக்காட்டி அங்கு நடந்த சம்பவத்தை விபரித்து 5 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் இலங்கை வானொலி இப்படிக் கூறியது அங்கிருந்தவர்களுக்கு பெரிய குழப்பமாய் போய்விட்டது. இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்து இருந்தபோதும் இப்படியான உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் திரித்துக்கூறி மக்களையும் உலகத்தையும் குழப்பி வந்தனர். அன்று மூடி மறைத்த உண்மைகளெல்லாம் பின்னர் வெளிவந்த போது இந்தியா தனது முகத்தில் தானே கரியைப் பூசிக்கொண்டது. சிறீலங்காவில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர் செய்தித் தணிகையை கடுமையாக அமுல்படுத்தி தமிழீழப் பகுதிகளில் மேற்கொண்டுவருகின்ற இனப்படுகொலைகளையும், கொடூரங்களையும் உலகின் ஊனக்கங்களில் இருந்து மறைத்து வருகின்ற கொடுமை உலகில் வேறு எந்த ஜனநாயக நாட்டில்தான் இருக்கமுடியும்.
சிறீலங்காவில் எதேச்சாதிகரமணா அடிப்படை மனித உரிமைகாளியும் மீறல்களையும் போக்கிரித்தனத்தையும் கண்டித்து சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் அதன் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பேசுகையில் “முல்லைத்தீவு இராணுவ முகாமில் பல இராணுவத்தினர் கொல்லபப்ட்டுவிட்டனர். எவ்வளவு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்பதை அரசு இனமும் வெளியிடவில்லை. பெருந்தொகையான ஆயுத தளபாடங்களை வாங்கி வைத்தும், சக்தி வாய்ந்த முப்படைகளையும் வென்றுவிட விடுதலைப் புலிகளால் முடியும் எனப்[அது நிரூபிக்கப்பட்டு விட்டது. புலிகள் மாபெரும் சக்தி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தவிர்க்கப்பட முடியாததாகிவிட்டது. புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறீலங்கா அரச பத்திரிகைத் தணிக்கையை வைத்துக்கொண்டு உண்மையினை மறைப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பத்திரிக்கையை சுதந்திரமாக எழுத விடுங்கள். அவற்றின் பனி விமர்சனம் செய்வதுதான். எந்தவிதமான கசப்பான செய்திகளையும் உண்மைகளையும் நாம் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.” என்று குறிப்பிட்டது அரசின் கபடத்தனத்தை வெளிக்காட்டுவதுடன் சிங்கள அரசின் தலைவர்கள் போராட்டத்தை உணர்ந்து வருவதையும் வெளிக்காட்டுவதாகவும் இருந்தது. உள்ளூர் பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ள சிறீலங்கா அரசு முல்லைத்தீவு சமரின் உண்மைகளை எழுதிய வெளிநாட்டுப் பத்திரிக்கைகளைக் கூட இலங்கையில் விற்பனையாக விடாது தடுத்ததை இந்த அரசின் மீது உலக நாடுகள் வைத்திருந்த நம்பிக்கையை சிதறடித்துள்ளது.
‘ஓயாத அலைகள்” ஆரம்பித்து இரண்டாவது நாளன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒரே பரபரப்பும் பதட்டமுமாகவே இருந்தது. பரவலாக எல்லா இடமும் விமானக் குண்டு வீச்சுக்களும் எறிகணைத் தாக்குதல்களும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் மிக மோசமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அன்றுகூட ஆணையிரவு முகாமிலிருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ஆட்லறி எறிகணைகள் கிளிநொச்சி வைத்தியசாலை, செஞ்சிலுவைச் சங்கப் பணிமனை, பாடசாலைகள் போன்ற மனிதர் நடமாடும் பகுதிகளை விழுந்து வெடித்ததில் பலர் படுகாயமடைந்ததுடன் ஆருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறிக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு இராணுவ முகாமில் அரச படையினருக்குள் ஏற்பட்ட படுதோல்விகளை சீரணிக்க முடியாது சிங்களப் பேரினவாதிகள் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் குண்டு வீசி அப்பாவிப் பொதுமக்களை கொன்று பழிதீர்த்துக்கொள்ள முனைகிறது.
அன்று கலை எட்டு மணிக்கு மல்லாவியைச் சேர்ந்த ஒரு அதிபரின் மோட்டார் சைக்கிளில் முல்லைத்தீவு போவதற்குத் தயாரானோம். எங்களுடன் கல்வி உயர் அதிகாரி ஒருவரும் புறப்படத் தயாரானார். முல்லைத்தீவுக் கல்வித் திணைக்களக் கட்டடம் எப்படியிருந்தது என்று பார்த்தோம். அங்கு எவ்வளவு இலட்சக்கணக்கான கல்வி உபகரணங்கள், தளபாடங்கள் எல்லாம் இருந்திருக்கும். அந்தப் பிராந்தியத்தில் சிதைந்துபொன் கல்வியும், கல்வி அபிவிருத்தியையும் கட்டி எழுப்பவேண்டும் என்ற ஆவல் அவரை அங்கு போவதற்குத் தூண்டியது. நாங்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி முகாம் பகுதியை அடைந்துவிட்டோம். வெட்டுவாய்க்கால் பாலத்தில் ஒரு சில அடி தூரத்தில் அங்கே காவலரண் அமைந்து இருந்த ஒரு போராளியால் தடுத்து நிறுத்தப்பட்டோம். “ஐயா குறைநினைக்காதீர்கள். நாங்கள் இன்று ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உங்களையும் போக விடேலாது” அந்தக் காவலரனுக்குப் பொறுப்பாக இருந்த அந்தப் போராளி சிறிது கடுமையாகவே கூறிக்கொண்டிருந்தார்.
எங்களுடைய மோட்டர் வாகனத்திற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த போராளிகளைக் கூட திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். “முகாம் தாக்குதல் நடந்த பின் இரவோடிரவாக தப்பி ஓடிய சில ஆமிக்காரங்கள் பற்றைக்காட்டுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் ஒளித்திருந்து ரவுண்ஸ் அடிக்கிறார்கள். அதுதான் நாங்கள் யாரையும் உள்ளே போகவிடவில்லை. அவங்களைத் தேடித் பிடித்து அழிக்கிற வேலை தொடர்கிறது”. அங்கேயிருந்த இன்னுமொரு போராளி கூறியதும் நிலைமையைப் புரிந்துகொண்டோம். அந்த இடத்தில் நிற்கும்பொழுது அந்தப் பகுதியெங்கும் எறிகணைத் தாக்குதலும் விமானக்குண்டு வீச்சுமாக ஒரே இரைச்சலாக இருந்தது. அந்தக் காவலரணின் முன்னாள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மினி வானில் வாகனத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்களை இன்னொரு லொறிக்கு அங்கிருந்த போராளிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். டொங்கான், மோட்டார்கள், ஏ.கே.துப்பாக்கிகள் என்று பலவகையான ஆயுதங்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. போரின் போது இறந்த இராணுவத்தினரின் ஆயுதங்கள்தான் அவை என்று அங்கிருந்த ஒருவர் கூறிக்கொண்டிருந்தார்.
போர் ஓய்ந்தபாடில்லை. முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் ஒரே ஷெல்களும், விமானங்களின் இடியோசைகளும் அதிரவைத்துக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளினால் முகாம் கைப்பற்றப்பட்டு அங்கிருந்து தம்பியோடிய எஞ்சிய படையினரை மீட்கவும் இழந்து போன முகாமை மீண்டும் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. களத்தில் காயமுற்ற படையினரை மீட்க முடியாது திண்டாடும் படையினருக்கு அந்த முகாமின் நிலை அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். மேலும் பெருந்தொகையான படையினரை முகாமுக்குள் அனுப்பிவிட்டால் புலிகளை நிலைகுலையச் செய்து முகாமைத் தமது பிடிக்குள் கொண்டுவந்து விடமுடியும் என்ற ஒரு வரட்டுத் துணிவினால் முல்லைத்தீவிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலேயே உள்ள சிலாவத்துறையில் இரண்டு ஹெலிக்கொப்டர்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் தரையிறக்கப்பட்டனர்.
அதேவேளை அலம்பில் பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் தீடிரென தரையிறக்கப்பட்டனர்.இரண்டாவது நாள் முற்றுகையின் போது, உலங்க்குவானூர்த்திகளால் தரையிறக்கப்பட்ட கொமாண்டோப் பிரிவினர் மீது போராளிகள் மிக உக்கிரமாக தாக்குதல் மேற்கொண்டதும் அந்தப் படையணிப் பொறுப்பான படைத்தளபதி லெப்.கேணல் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்ட இராணுவக் கொமாண்டோக்களும் அழிக்கப்பட்டனர். தளபதியை இழந்துவிட்ட அந்தப் படையணி நாலாபக்கமும் சிதறியோடத் தொடங்கியது. போராளிகள் இல்லாத ஒரு இடத்தில் இரகசியமாக படைகளை இறக்கி முகாம் நோக்கி நகர்வைத் தொடங்க இருந்தவர்களுக்கு திடீரென நாலா புறத்திலும் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அந்தப் பகுதியில் மட்டும் பொறிக்குள் அகப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் போராளிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டனர். கடற்படையின் பாரிய போர்க்கப்பலும் பெருமளவுக்கு துருப்புக்களைக் காவியிறக்கும் ‘லாண்டிங் கிறாப்’ என்னும் கப்பலும் ‘டோரா’ அதிவேகக் கப்பல்களுமகா சுமார் 20க்கு மேற்பட்ட கடற்படைக் கலங்கள், பாரிய ஆயுதங்கள் சகிதம் 6 உலங்குவானூர்த்திகள் 50 கலிபர் துப்பாக்கிகளினால் வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டிருக்கையில் படையினரைத் தரையிறக்கும் முரர்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கே கடலில் காத்து நின்ற கடற்புளியினருக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையே நேருக்கு நேரான கடும் கடற்சமர் நடைபெற்றது.
இரண்டு பக்கங்கள்ளிலும் இருந்து எழுந்த வெடியோசைகள் வானமே இடிந்து விழுவது போல் அதிர்ந்துகொண்டிருந்தன. அந்த அளவிற்கு இரண்டு பக்கங்களிலிருந்தும் அதிநவீன ஆயுதப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரம் வெடிமருந்து ஏற்றிய கடற்கரும்புலிகளின் மூன்று படகுகள் கடற்படைக் கப்பல்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும், உக்கிரமான தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்த அதிவேகப் போர்க்கப்பலானpaariya சீன சங்கே 3 ரகத்தைச் சேர்ந்த “ரணவிரு” கப்பலில் மோதி வெடித்துச் சிதறின. அந்தப் பாரிய போர்க்கப்பல் தீப்பிழம்பென வெடித்து மூழ்கத் தொடங்கியது. அதிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட படையினரும் அப்படியே கடலில் மூழ்கி தம்மை சங்கமித்துக்கொண்டிருன்தனர்.
அளம்பிலில் தரையிறங்கி முன்னேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த படையினருக்கு உதவுவதற்காக மூன்றாவது நாள் வந்த எம்.ஐ. 24 வகைக் உலங்குவானூர்த்தி போராளிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து அடிக்கு மேல் அடி வாங்கிக்கொண்டிருந்த படையினரால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அலம்பிலில் இறக்கப்பட்ட படையினரில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களில் எஞ்சியிருந்தவர்களுடனான தகவல் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரியான கட்டளை அதிகாரி இல்லாததால் சிதரியோடிக் கொண்டிருந்தனர். சிலர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தார்கள். மேலும் 6வது நாளாவதாக கடல் வழியாகப் பெருமளவு படையினரை தரையிறக்க ஆயத்தப்படுத்தினர். தரையில் நின்ற போராளிகளினால் மோட்டார் தாக்குதல்கள் கடற்படைக் கலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டதில் எறிகணைகளில் ஒன்று கப்பலின் முன் பகுதியில் வீழ்ந்ததில் அப்பாரிய கப்பல் பலத்த சேதத்திற்கு உள்ளாகியதுடன் அதிலிருந்த 30 படையினர் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைத் தலைமையகம் தெரிவித்தது.
இந்தத் தொடர்ச்சியான நெருக்கடியின் மத்தியிலும் கொழும்பிலிருந்து இயங்கும் சிறீலங்காவின் வோநோளியிலும் தொலைக்காட்சியிலும் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிக “அலம்பிலில் தரையிறக்கப்பட்டுள்ள படையினர் முல்லைத்தீவை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் முகாமுக்குள் இராணுவத்தினருடன் முன்னேறிச் செல்லும் படையினர் இணைந்துகொள்வார்கள். இது வரை நடந்த போரில் நூறிற்கும் மேற்பட்ட எல்.ரி.ரியினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.” என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்தமையால் கேட்பதற்கு பரிதாபகரமாக இருந்தது. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்னும் தமிழ்ப் பழமொழி போல் இப்போது பாதுகாப்பு அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வளவு பொருத்தம் என்பது அவர்களது யோசனையற்ற செயல்கள் சாட்சி அளிக்கின்றன. ஏற்கனவே தாக்கியழிக்க்கப்பட்ட முகாமில் படையினர் பெருந்தொகையாக கொல்லப்பட்டும் முகாம் முற்றாக தாக்கப்பட்டும் கூட அங்கு இருப்பவர்களோடு எந்தத் தொடர்புளில்லாத நிலையிலும் புதிய இடத்தில் பல படையினரை இறக்கி அவர்களுக்கு கைகொடுக்க முன்வந்த பாதுகாப்பு அமைச்சின் போக்கு சிறீலங்காவின் நிதானமற்ற போக்கை உலகிற்கு அம்பலப்படுத்தியது.
18ம் திகதி அதிகாலையிலேயே முல்லைத்தீவு இராணுவமுகாம் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதும் அங்கே கொல்லப்பட்டதும், சிதறி தப்பியோடியபோது சுடப்பட்டும் இறந்த இராணுவத்தினரது சடலங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டன.
இறந்த இராணுவத்தினரின் சரியான தொகையை மூடிவைத்து மறைத்துவந்த அரசு போர் நடந்து 11 நாட்களின் பின் 28ம் திகதி செய்தியாளர் மகாநாடு ஒன்றில், வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரினால்,
“முல்லைத்தீவு முகாம் முற்றாக புலிகள் வசமானது உண்மைதான். அங்கு சுமார் 1500 படையினர் வரை இருந்தனர். அவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டிருக்க வேண்டும்” என்ற உண்மை வெளிப்பட்டது.
“பிணநாற்ற….!” என்று சொல்வார்களே?…. அங்கு ஒரு பிணமல்ல ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட சடலங்கள் அழுகி உடல் உப்பி பெருத்த நிலையில் அங்குமிங்குமாக தேடி ஐக்கப்பட்டு பக்குவமாக லொறிகளிலும் ஏற்றி கிளிநொச்சி சந்திரன் பூங்காவுக்கு கொண்டு செல்லவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அங்கே நின்று சடலங்களைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் “இந்தச் சடலங்களைப் பேசாமல் இஞ்சையே எரித்துப்போட்டுப் போறதுக்கு வீணாகச் செலவழித்து இதைக்கொண்டுபாய் கொடுக்கிறதோ? இதுகளைக் கொண்டு போறதை விட இங்கிருந்து ஏதாவது மிச்ச சொச்ச ஆயுதப்பெட்டிகளையாவது கொண்டுபோய் சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும்” என்றுsalippudan கூறினார்.
“ஐயா! நீங்கள் அப்படிக் கதைக்கிறது சரியில்லை. எங்கட எதிரியாக இருந்தாலும் அவன் போர்க்களத்தில் இறந்துவிட்டதால் அதற்குரிய மரியாதையை நாங்கள் செய்யவேணும். என்ன இருந்தாலும் அவர்களும் போர்வீரர்கள் தானே. எங்கட தலைவர் இந்த விடயத்திலை எவ்வளவு நிதானமாக செயல்படுகிறார் என்று தெரியும்தானே.” அந்த மக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு நின்ற ஒரு போராளி கூறியதும் எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
“இந்த சின்ன வயசில் இப்படியொரு உயர்ந்த சிந்தனை உள்ளவனாக இருக்கிறானே! எல்லாம் தலைமைத்துவப் பண்பின் சிறப்புத்தானே.
அங்கே நின்றவர்கள் அந்தப் போராளியின் உணர்வை வியந்து தமது செயலுக்காக வருத்தப்பட்டுக்கொண்டனர்.
வலிகாமம் பகுதி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் நடந்து கொண்ட மிலேச்சத்தனமான அநாகரிகமான செயல்களைப் பார்த்தால் அவர்கள் நாகரிகமான ஒரு இனமா என்றுதான் கடகத் தோன்றும்.
இந்த மண் மீட்புக்காகான போரிலே, தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் கல்லறைகளை உழுது தரைமட்டமாக்கிய வெறித்தனம் ஆடியமை!
அரச அழுத்தங்களினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உளப்பாதிப்புற்று வாழும் எமது குழந்தைகளுக்கென அமைக்கப்பட்ட பூங்காக்களை இடித்து அழித்து கொடுமைகள் புரிந்தமை…!
இந்திய – இலங்கை கூட்டுச்சதியால் தம்மை அழித்து ஆகுதியாக்கிவிட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளுக்கு வல்வெட்டித்துறை தீருவிலில் அமைக்கப்பட்ட தூபியை வெடிவைத்து தகர்த்த கொடுங்கோண்மை….!
இவர்கள்தான் யுத்தம் மூலம் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி சந்திரிக்காவினால் அனுப்பிவைக்கப்பட்ட வேடம் போட்ட வேட்டை நாய்கள்.
தீருவில் பன்னிரு வேங்கைகளின் நினைவுத் தூபி 1988ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்பினாலேயே உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் நினைவாலயம். ஆரம்பத்தில் அதனைக் கட்டுவதற்கு பல தடைகளை இந்திய இராணுவத்தினர் ஏற்படுத்தி, பலரை மிரட்டி கைதுசெய்து சித்திரவதை செய்தபோதும், ஒன்றுதிரண்ட மக்கள் சக்தியினால் அந்த மாபெரும் நினைவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் அது பூசிக்கப்பட்ட நினைவாலயம் ஆக்கப்பட்ட பின்னர் எந்த ஒரு இந்திய ஜவானும் அதன் மேல் பாதணிகளுடன் ஏறியது கிடையாது…. அந்தளவுக்கு கல்லறைகள் பூசிக்கப்பட வேண்டியதொரு தார்மீகக் கோட்பாட்டைக் கொண்டிருந்தன.
அங்கிருந்து மீட்கப்பட்ட 1208 சடலங்களையும் ஏற்றிக்கொண்டு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட லொறிகளும் ரக்ரர்களும் முல்லைத்தீவுச் சாலை வழியாக கிளிநொச்சிக்குப் போய்க்கொண்டிருந்தன.
முல்லைத்தீவுச் சமரில் கொல்லப்பட்ட பல படையினரின் சடலங்களை மனிதாபிமான முறையில் கையளிக்க முன்வந்த போதும் அவ்வளவு பெருந்தொகையான சடலங்களை பொறுப்பேற்க அரசு மறுத்து விட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து 55 சடலங்களை மட்டுமே அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மிகுதிச் சடலங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் கையளிக்கப்பட்டு அவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன.
போர் வெறி கொண்ட சிங்கள தேசத்திற்காக இனங்களுக்கிடையிலான செளசன்யம் வளரக்கூடாது என்ற நோக்கில் நித்தியா சுபபோகத்தை அனுபவிக்க முனையும் சிங்கள ஆட்சியாலர்களுக்காக தமது இன்னுயிர்களை அர்பணித்த அந்த எழிச் சிங்கள சிப்பாய்களின் உடலைக்கூட அரசு பொறுப்பேற்க மறுத்துவிட்டது அரசின் மீதான சிங்களவர்களின் நம்பிககியை சிதறடித்துவிட்டது. வெறும் பணத்திற்காக ஏழைச் சிங்களத் தாய்மார்களின் பிள்ளைகளை தமிழர்களின் தாயக விடுதலைக்கு எதிரான போரில் இன்றுmadinthu கொண்டிருக்கிறார்கள்.
‘பாதுக்கை’ என்ற ஒரு சிங்களக் கிராமத்தில் தித்தேனிய என்ற இடத்தைச் சேர்ந்த சோமாகுல என்ற ஏழைத்தாய் முல்லைத்தீவு முகாமில் போர்க்கள முனையில் நிற்கின்ற தன்னுடைய மகனுக்கு 05.12.1995ல், “ஆதரயே மமே சுது புத்தா” என்ற ஆரம்பித்து எழுதிய கடிதத்தில் அந்த சிங்களக் குடும்பம் ஏன் இந்த யுத்தத்தில் பலியாக வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
சிறீலங்கா அரசின் பொய்ப் பிரச்சார மாயையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை அறியாது, தமியால்ர்கள் எந்த இலட்சியத்திற்குப் போராடி வருகின்றார்கள் என்று கூடப் புரியாத ஆயிரக்கணக்கான சிங்களத் தாய்மாரின் பிரதிபலிப்பாகவே சோமாவும் இருக்கின்றாள் என்பதில் வியப்பில்லை.
சிங்களப் பேரினவாதிகளினதும் மூர்க்கத்தனமான பொக்குஇடைய பிக்குகளின் போதனைகளின் மத்தியிலும் அவலப்படுகின்ற அவர்களால் எப்படித்தான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்? மீகவத்தை, பாதுக்கை என்ற கிராமத்தில் இருக்கும் சோமா என்ற அந்தத் தாயின் கடிதத்தில்
‘உனது சுகம் அறிய ஆவல் …..உனக்கு இப்போ காலம் சரி இல்லையாம் சனி தோஷம் இருப்பதால், போதி பூஜை செய்து கிரகத் தோத்திரம் பாடி ஏழு நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது…. மகனே உனக்குக் கூடாத காலம் அவதானமாக நடந்து கொள்…. எமது சிறீலங்கா இராணுவ வீரர்கள் திராவிட இனத்திடம் இருந்தும் பிரிவினைவாதிகளிடமிருந்தும் இருந்தும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதில் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் எதற்கும் நீ அவதானமாக நடந்து கொள். ஆனது அக்காவின் கடனில் 10600 ரூபா கொடுத்து நீ அனுப்பிய 10000 ரூபா வைத்தான் பெற்றுக்கொண்டேன்.. எனது தங்கமகனே!… நீ உயிரோடு சுகமே திரும்ப வேண்டும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படவும், உனது அம்மா சோமா”
அந்தத் தாயின் கடிதத்தில் போருக்குச் சென்றுவிட்ட தன் மகனின் சுகம் பற்றியே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்தது. பலத்த இராணுவச் சோதனையின் பின்பு தான் அந்தக் கடிதம் தன் மகனிடம்செர்பிக்கப்படும் என்று சோமா அறிந்திருந்தும், மகனை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் “கண்டபடி போருக்கு முன்னுக்குச் செல்லக்கூடாது” என்று மறைமுகமாக எச்சரிக்கத் தவறவில்லை!
அத்தகைய சிங்களத் தாயின் அபிலாசைகள் எங்கே…? அவளுடைய இறந்துபோன அந்த மகனைப் பொறுப்பேற்று உயிரற்ற உடலைக்கூட கொடுக்க மனம் இல்லாத சிங்களப் பேரினவாதிகளுக்காகவா அவனைப் போன்ற சிங்கள இளைஞர்கள் தமிழீழ மண்ணிலே மடிய வேண்டும்….?
தமிழீழ இளைஞர்கள் ஒரு இலட்சியத்திற்கான போராட்டத்தை முன்னேடுத்துக்கொண்டிருக்க சிங்கள இளைஞர்களோ ஆட்சியாளர்களின் அர்த்தமற்ற “சமாதானத்திற்கான யுத்தம்” என்றபோர்வையில் பணத்திற்காகவும், குடியிருப்புக்கான வீட்டுக்காகவும்arpa சலுகைகளுக்காகவும் மடிகின்றனர். ஆனால் களத்தில் நின்றும் விலகியிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களோ லண்டன் நகர விடுதிகளிலும், கொழும்பு ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் உல்லாசமாகப் பொழுதைப் போக்குகின்றனர். அவர்களைப் பொருத்தவரையில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்து விட்டால் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எல்லாச் சுகபோகங்கலுமே பறிபோய் விடும் என்ற அச்சத்தில் பிரச்சினைகள் முடியாதிருக்க யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துகின்றார்கள். ஆனால் “எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள்” என்று அழுது புலம்பி சோமா போன்ற ஆயிரக்கணக்கான எழிச் சிங்களத் தாய்மார்களுக்கு அவர்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்..?
அந்த உண்மையை அறிவு பூர்வமாக உணரும்வரை சிங்கள இளைஞர்களின் சடலங்களும் தமிழீழ மண்ணிலே, புதைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகவே போகும்….!
முல்லைத்தீவு நகரை மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும், அந்த நகரத்தின் மூளை முடுக்கெங்கும் சுற்றிவர வேண்டும் என்ற ஆவல் எழ ஏழாவது நாளான அன்றும் புறப்படுவதற்குத் தயாரானேன்.
“முல்லைத்தீவுப் பக்கம் போனால் எங்கடை வீட்டையும் ஒருக்கால் போய்ப் பார்த்து வாருங்கோ” முல்லைத்தீவில் இருந்து தன் அழகான கல்வீட்டை இழந்து அகதியாய் ஓடிவந்து புதுக்குடியிருப்பில் மண் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்ற தோட்டக் கல்வி அதிகாரி ஒருவர் தன் ஆவலை வெளிக்காட்டினார். தான் வாழ்ந்து, உண்டு, படுத்து எழும்பிய அந்த வீட்டை மீதும் பார்க்கத் துடிக்கும் ஆதங்கத்தை அவரது முகம் காட்டிக்கொண்டிருந்தது.
அன்று பிற்பகல் ஐந்துமணி போல் எனது ஒன்றுவிட்ட சகோதரனான சொல்வராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுப் போகும் பொழுது, ஆளரவம் குறைந்த நேரத்தில் தனிமையில் செல்வது சிறிய பயமாக இருந்தது.
அந்த நகரம் ஆவிகள் உலாவும் நகரம் போல் காட்சியளித்ததுக் கொண்டிருந்தது!
“சே!…….. பயப்படாதயுங்கோ அண்ணை! என்ன ஆகப் போனால் கால்தான் போகும்..”
செல்வராஜா பகிடியாகக் கூறியபடி, மோட்டர் சைக்கிளில் வேகத்தைக் கூட்டியது, அது காற்றையும் கிழித்துக் கொண்டு பறந்தது.
வெட்டுவாய்க்கால் (வட்டு வாசல்) பாலத்தில் இருந்த முல்லைத்தீவு முகாம் நோக்கி நீண்டு செல்கின்ற தார் ரூட்டில் இரு புறமும் விடத்தல் முள்ளும் பற்றைகளும், சாரல் பற்றைகளும் படர்ந்து வளர்ந்திருந்தன அந்தப் பகுதிகளைப் பல போராளிகள் நின்று துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள்.
“அலம்பில் சிலாவத்தத்துறையில் இறக்கிவிட்ட ஆமி முகாம் நோக்கி முன்னேறி வாராங்களாம் அதுக்கிடையிலை ஏன் இப்ப பாதையை வெளியாக்கிறியள்?”
அந்தச் சாலையின் இருபக்கத்திலும் நின்று சென்மன் புளுதி படிந்த வெள்ளை பெனியனுடனும், அரைக் காற்சட்டையுடனுமாக வேலை செய்துகொண்டு நின்ற ஒரு போராளியிடம் கேட்டோம்.
“ஐயா!… இஞ்சை இருந்தவன் சும்மா செத்துப் போகேல்லை… பதினையாயிரத்திற்கும் மேற்ப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனக்கண்ணி வெடிகளையும்களையுமெல்லா புதைத்து வைச்சிருக்கிறான்… நேற்றுக்கூட மைன்ஸ் கிளியர் பண்ணேக்கை எங்கடை பெடியன் ஒருத்தனுக்குப் பாதம் போச்சுது…..”
அந்தப் போராளி மிக்கச் சாதாரமாகக் கூறிவிட்டு பாதையை மெது மெதுவாகச் சுத்தப்படுத்தத் தொடங்கிவிட்டான். இரண்டு பக்கமும் மூடி வளர்த்திருந்த விடத்தல் முள்ளுகள் எங்களுடைய கன்னங்களையும் சட்டைகளையும் பதம் பார்த்துவிட்டன.!
வெட்டு வாய்க்கால் பாலத்தையும் கடந்து வளைவான பாதையில் திரும்பும் பொழுது சிறிது தூரம் தள்ளி இடதுபுறமாகamaithiyaana ஒரு சூழழில் இருந்த கன்னிமார் கோயில் பாழடைந்து போய் இருந்தது. சப்த கன்னிகைகளும் ஆலயம் அமைத்து வழிபட்டு வந்த அந்தப் பெண் தெய்வ வழிபாட்டு முறை முல்லைத்தீவில் இருந்திருக்கிறது. அந்த ஆலயத்தைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டு, பற்றைகளும், மரங்களும் வளர்ந்து ஒரே புதிராகக் காட்சியளித்தது.
அங்கிருந்து சிறுது தூரத்தில் வெட்டு வாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புத்தர்களால் முடிப்பாய் இருந்தது. முல்லை நகர் ஆக்கிரமிக்கப்பட்ட பொழுது அங்கு காலம் காலமாக வளர்ந்த மக்கள் மட்டும் அகதிகளாக்கப்படவில்லை…… அந்த மக்களால் பூசித்தும் நேசித்தும் வளர்க்க்கப்பட்ட கல்விச் சாலைகளும் கூடவே அகதிகளாக்கப்பட்டன. அந்தப் பாடசாலைகளை அழித்துக் கல்வி கற்பதன் மீது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியமை, தமிழரின் கல்வி சிதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றியதாகத்தான் இருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நூற்றி நான்கு பாடசாலைகளில் கரைத்துரைப்பற்றுக் கோட்டத்தில் உள்ள முல்லைத்தீவு மகாவித்தியாலயமும், முல்லைத்தீவு றோ.க. பெண்கள் பாடசாலை முல்லைத்தீவு முஸ்லிம் வித்தியாலயம், வெட்டுவாய்க்கால் அ.த.க. பாடசாலை. முல்லைத்தீவு இந்து வித்தியாலயம். சிலாவத்தை இந்து தமிழ் கலவன் பாடசாலை, சிலாவத்தை றோ.க. பாடசாலை ஆகிய எட்டுப் பாடசாலைகளும் இராணுவ முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன! அதனைத் தொடர்ந்து, அந்தப் பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 2400 மாணவர்களும் நிர்க்கதியாக்கப்பட்டனர்.
இந்த நாட்டில் சகல இன மக்களும் சமமான கல்வி வசதி வளப் பங்கீடு என்பவற்றை ஏற்படுத்தி, நாட்டின் 10000 பாடசாலைகளையும் இன மொழி வேறுபாட்டின்றி தரம் உயர்த்த உழைப்போம் என்று கூறிப் பெருமளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்குவிக்கும் ஆட்சியாளர்கள், இங்கே ஒரு தூய தமிழ்க் கிராமத்தில் உயிர்ப்போடு இயங்கிய எட்டுப் பாடசாலைகளையும் முடக்கி விட்ட அந்தக் கொடுமையையும் உலகுக்குக் கூறுவார்களா….?
கன்னிமார் கோயிலையும் கடந்து அந்தக் தார் ரோட்டு வழியே செல்லும் பொழுது ஆயிரக்கணக்கான சீமேந்து கற்கள், மண் ஆகியவற்றால் உரமாக அணைகட்டி, முகாமின் வெளிப்புற வளையமாக பலமான காவலரண்கள் நூற்றுக்கணக்கில் 20 அடிக்கு ஒன்றாக அமைக்கப்பட்டிருந்தன!…. அதில் இருந்து சில மீற்றர்கள் தூரம் சென்றதும் அடர்ந்த முட்கம்பி வளையங்கள் ஒரு பாதுகாப்பு வலயமாக இருந்தன.
அந்தப் பாதையின் ஒரு பக்கங்களிலும் உள்ள வயல் வெளிகளில் ஆங்காங்கே இறந்து போருமிப்போன பல சடலங்கள் இன்றும் அங்கே கிடந்தன.
“வயல் வெளிகளில் நிறைய மைன்ஸ் இருகிறதாலை அந்தச் சடலங்களை எடுக்கலையாம்…”
மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் பொழுதே செல்வராஜா அந்தப் பகுதியைக் காட்டிக் கொண்டு போனார் அந்த முகாமின் மூன்றாவது பாதுகாப்பு வலயத்தையும் கடந்து மையப்பகுதிக்குத் சென்றோம். அந்தப் பகுதியில் உள்ள புல்நிலங்கள் நெருப்பு வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தன.
“ஷீ…. இவ்வளவு பாதுகாப்பு வளையங்களையும் கடந்து இந்தப் பெரிய முகாமை எங்கடை பொடியல் எப்படித்தான் தாக்கியளித்தார்களோ?”
அந்த வியத்தகு சாதனையை நினைத்துப் பார்க்கவே உடல் புல்லரிக்கின்றது. சிறுவயதில் வேதாளன் கதைகள், மாயாவிக் கதைகளைப் படித்து அதில் வரும் அற்புதமணா வெற்றிகளையெல்லாம் நினைத்து மெய்மறந்திருக்கிறேன்.
அது கற்பனை….. ஆனால் எமது கண்முன்னால் நியமாகவே ஒரு அற்புதத்தை, நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு தீரத்தைக் கண்டுவிட்ட பிரமை இன்னும் மாறவில்லை!
‘அண்ணை! கெதியாய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வாங்கோ…. நான் ஒரு போடியநிட்டை போட்டுவாறன்…’ செல்வராஜா என்னைத் துரிதப்படுத்திவிட்டு, ஆலமரத்தின் கீழ் நின்ற சில போராளிகளை நோக்கிப் போனார்.
அழகான கடற்கரை… வெண்மணற் பரப்பை முத்தமிடும் வகையில் பொங்கி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அங்கே பல போராளிகள் ஓடிப்பாடித் திரிந்துகொண்டிருந்தார்கள். சிலர் குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
கடைத்தெருப் பக்கமாக நீளத்திற்கு அழகாக இருந்த கடைகளில் அப்துல் சமது, கன்கோவஸ்தியாம் பிள்ளை வைன் ஸ்ரோர்…. ஆகிய பல கடைகள் மேற்கூரைகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்தன. அங்கே இராணுவத்தினரின் கொத்தடிமைகளாக இருந்தவர்களால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் அநாதரவாக நின்று மேய்ந்துகொண்டிருந்தன. அந்தக் கடைகளுக்கு எதிர்ப்புறமாக உள்ள ஒரு வீட்டில் மேல் கூரையில் ஒரு சிங்கள சிப்பாய் காய்ந்து கருகிப்போன உடல் முகம் குப்புறக் கிடந்தது. அதன் கீழ் அஸ்பெஸ்ரஸ் சீர்ருக்கும் ஓட்டுக்கும் இடையில் ஒரு சிப்பாயின் உடல். இப்படி ஒன்றா இரண்டா ஏற்கனவே கணக்கில் அடங்காத சடலங்கள் இன்றும் மீட்க்கப்படாமல் இருந்தன.
‘ஐயா… அங்காலை ஒரு பங்கருக்குள்ளை இருபத்தேழு ஆமிக்காரங்க்கடை சடலங்கள் கருகிப் போய்க்கிடக்குது. அதுக்குள்ளே இருந்து அவங்கடை ஆயுதங்கள் கூடக் கருகிப்போய்க் கிடக்குது….. வாருங்கோ காட்டுறன்….’
நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதை அறிந்தோ என்னவோ ஏதோ ஒரு ஆர்வத்தில் இந்தப் போராளி என்னை அழைத்தான்…..
“இல்லைத் தம்பி இவ்வலோளவும் போதும் நன்றி…” அந்த அழகான நகரத்தை ஆசைதீரக் கண்டுகளித்த எனது மனம் மீண்டும் அந்தக் காட்சியைக் காணவிரும்பவில்லை!
முல்லைத்தீவு….! மாமன்னன் சூரபத்மனின் அற்புதமான மாகேந்திரபுரி போன்று மிக மிக அழகாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று களை இழந்து ஓளி இழந்து போய் இருக்கின்றது….. வடக்கே பொங்கிப் பிரவகிக்கும் கடல் தெற்கே ஒரு புறமாக அரச திணைக்களக் கட்டடங்கள், கிழக்கே அழகான வீடுகளும், கடைகளும் அமைந்த கடைத்தெரு. விசாலமான விளையாட்டரங்கு, திரையரங்குகள்….. என்று மிக அற்புதமாகத் திட்டமிட்டு, அழகாக அந்த நகரம் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழீழ சிங்கள தேசப் போரில் முல்லைத்தீவு ஒரே ஒரு கேந்திர முக்கியத்துவம் பெற்றது மட்டுமன்றி அது ஒரு பூர்விக வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது என்ற பெருமையையும் உடையது.
ஆம்! பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தமிழீழப் பகுதியின் பல்வேறு நிலபப்ரப்புக்களையும் ஆண்டு வந்த சங்கிலியன் தொடக்கம் குளக்கோட்டன் வரையிலான பல தமிழ் அரசர்கள் எல்லோரும் தோற்கடிக்கப்பட்ட போது ‘வன்னி’யை மட்டும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு அடங்க மறுத்தது. தனித்தமிழர் இராச்சியமாக நிமிர்ந்து நின்றது. அன்று கடைசித் தமிழ் மன்னனாக வீரத்துடன் வாழ்ந்த பண்டாரவன்னியன் ஆளுமைக்குள் இருந்த தமிழர்கள், தன்மானத்துடனும், வீரத்துடனும், செல்வம் கொழிக்கும் வளத்துடன் வாழ்ந்தார்கள்…..! ஆனால், யாழ்ப்பாணத்தில் சங்கிலியன், தோற்கடிக்கப்பட்டதும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கொடூரங்களுக்கு அஞ்சிய தமிழர்கள், வன்னிப் பெர்நிலப்பரப்புக்கே ஓடி வந்து முல்லைத்தீவுப் பகுதியில் தக்ஞ்சமடைன்தனர்!
கரிக்காட்டு மூலை என்ற இடத்தில் தன் தளத்தை அமைத்து பிரித்தானிய அரசுக்கு எதிராக இறுதிவரை போராடிய பண்டார வன்னியன், பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்டுக் கற்சிலை மடுவரை போராடியபடி பின் வாங்கிச் சென்று இறுதியில் அந்தத் தனித் தமிழ் மறவன் அங்கே வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.
இன்றும் கூட கற்சிலைமடுவில் அந்த மாவீரன் பண்டாரவன்னியனின் கல்வெட்டு வன்னியின் அடங்கா வீரத்தைக் காட்டி நிற்கிறது! (ஆனால் இன்று அவை சிங்கள இனவெறிப் படைகளாலும் மற்றும் கைக்கூலிகளாலும் சிதைக்கப்பட்டுவிட்டது வரலாறைத் தழுவிய இக்கட்டுரை 1996 வரையபபட்டது . )
மாலை மயங்கும் நேரத்தில் அந்த மாவீரன், புனித பாதம் பட்ட பூமியில் நிற்கும்பொழுது என் நெஞ்சிலெல்லாம் பூரித்தது. சந்திக்கு எதிர்புறமாக இருந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தலைமைப் பணிமனைக் கட்டிடத்தின் முன்னால், சில போராளிகள் குவிந்து நின்றனர். அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்னால் மிக உயரமான் ஒரு கொடிக்கம்பத்தில் சிங்கள ஆக்கிரமிப்பின் சின்னமான ஆறு வருடங்களாகப் பரந்துகொண்டிருந்து துப்பாக்கிச் சன்னங்கள் பட்டுத் துளை விழுந்துசுருங்கிப் போய்க் கிடந்த வாளேந்திய சிங்கக் கொடியை ஒரு போராளி இறக்கிக்கொண்டிருந்தான்!
1995ம் ஆண்டு மார்கழி மாதத்தில் தூய தமிழ் அரசோச்சிய யாழ் மண்ணிலே சிறீலங்காப் பாதுகாப்புத் துணை அமைச்சர் அநுருத்த ரத்வத்தை ஆக்கிரமிப்பின் கொடியை ஏற்றித் தென்னிலங்கையில் தன்னை ஒரு துட்டகைமுனுவாகக் காட்டி பெருமை பெற்ற அந்தச் சிறுமையை நினைத்துப் பார்க்கிறேன்.
ஒ…. இன்று ஒரு முகாம் மட்டும் கைப்பற்றப்படவில்லை பேயாட்சி செய்த ஒரு தமிழ் நகரமும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுவிட்டது!
அந்தப் பூரிப்பில் முல்லை மக்கள், தாம் இழந்துவிட்ட வீடுகளை, தவழ்ந்து, ஓடி உருண்டு விளையாடிய மண்ணைப் பார்த்து மகிழத் தயாராகிவிட்டார்கள்.
“முல்லைத்தீவு முகாம் முற்றாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அளம்பில் பகுதியில் பெரும் எடுப்புடன் தரையிறக்கப்பட்ட முப்படைகளின் ‘திரிஹார’ இராணுவ நடவடிக்கை மூலம் மீண்டும் முல்லைத்தீவை முற்றுகையிட முனைந்த இராணுவத்தினர் தமது பெருமளவு ஆயுதங்களையும் இறந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் சடலங்களையும் கைவிட்டு கடல் மூலம் ஓடித் தப்பிவிட்டார்கள்…”
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழீழ மண் ஒருகணம் துள்ளிக் குதித்தது.
ஒ…. அன்று குளக்கோட்ட மன்னனால் திருகோணமலையில் செதுக்கப்பட்ட கல்வெட்டின் தீர்க்கதரிசனம்inru நிதர்சனமாகி வருகின்றது…..
“முன்னே குளக்கோட்ட மன்னனால் திருகோணமலையில் செதுக்கப்பட்ட கல்வெட்டின் தீர்க்கதரிசனம் இன்று நிதர்சனமாகி வருகின்றது.
“முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியை பின்னே பரங்கி பிரிக்கவே மன்னவ பின் பொண்ணாததனையியற்ற வழித் தெவித்து எண்ணாரே பின்னரசர்கள்….”
என்ற அடிப்படையைத் தொடர்ந்து வரும் அடியில்
“பறங்கிக்கண், பூனைக்கண், புகைக்கண், மான் கண் மாறிய பின்னே வடுகாய்விடும்…..” என்ற இந்த அடிகள் மூலம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவா என அன்னிய ஆக்கிரமிப்பலர்க்ளின் ஆட்சிக்குள் சிக்குண்டு தவிக்கும் தமிழீழம் மீண்டும் இறுதியில், ‘வடுக்கா’ என குறிப்பிடும் தமிழர்கள் வசமாகும் அனக் குறிப்பிடப்பட்ட அந்தத் தீர்க்கதரிசனமான அந்தக் கோணேசர் கல்வெட்டு எங்கள் குனிந்த தலைகளை மீண்டும் நிமிரச் செய்யும்!
அப்பொழுது இன்று மீட்க்கப்பட்ட களிப்பில் மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவில் மட்டுமல்ல தமிழர் வாழும் தமிழீழம் எங்கும் எங்கள் புலிக்கொடி பறக்கும்! அவை வானில் பட்டொளி வீசி எங்கள் வீரத்தின் புகழ் பாடும்!!
– வல்வை ஆனந்தன்.
எரிமலை 1996 இதழிலிருந்து
Recent Comments