Search

Eelamaravar

Eelamaravar

Month

February 2019

பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா !

இலங்கை விடயத்தில் விதியை மீறிய இந்தியா: சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மட்டும் மதிக்க வேண்டும் என கோருவது ஏன்?

இந்த சிறுவனை அதே சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் எனக் கோராதது ஏன்?

தனது நாட்டிற்குள் எல்லைதாண்டி வந்த இந்திய வீரரை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரியுள்ளது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய வீரரை கௌரவமாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மக்களும் கேட்டுள்ளனர்.

அதன்படி கைது செய்யப்பட்ட வீரரை பாகிஸ்தான் அரசு சர்வதேச சட்டப்படி கௌரவாக நடத்தி வருகிறது. அதனை சம்பந்தப்பட்ட அவ் வீரரும் காப்பி அருந்தும்படி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் இலங்கை அரசும், இந்திய அரசும் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த 40,000 தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சர்வதேச சட்டத்திற்கு மாறாக சுட்டுக் கொன்றார்கள்.

குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுத்துவிட்டு சுட்டுக் கொன்றார்கள். சரணைடைந்த இசைப்பிரியா உட்பட பல பெண்களை சர்வதேச விதிகளுக்கு மாறாக பாலியல் வல்லறவு செய்து கொன்றார்கள்.

இதில் வேதனை என்னவெனில் இன்றும்கூட இப் படுகொலையாளிகளை ஜ.நா.வில் இந்தியாவே பாதுகாத்து வருகிறது. யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் சர்வதேச விதிகளை மீறிய இவ் இனப்படுகொலையாளிகளை விசாரணை செய்யக்கூட இலங்கை அரசு மறுத்து வருகிறது.

ஒருபுறம் சர்வதேச விதிகளை மீறிய இலங்கை அரசை ஆதரிக்கும் இந்திய அரசு மறுபுறம் பாகிஸ்தான் சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும் எனக் கோருகிறது. எந்த முகத்துடன் இந்தியா இதனைக் கோருகிறது? அல்லது இதனைக் கோருவதற்கு இந்தியாவுக்கு தகுதி இருக்கிறதா?

https://platform.twitter.com/widgets.js

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய அந்த நேரம்! பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துள்ளிக் குதித்த வீடியோ

https://platform.twitter.com/widgets.js

இந்திய விமானங்களை பாகிஸ்தான் படை வீழ்த்திய போது, பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடி வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் தீவிரவாதிகள் இறந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதுவரை வெளியாகவில்லை.

இது போன்ற பதற்றமான நிலையில் தான் பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அப்போது நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானங்கள் சுட்டி வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து வந்த தகவல்களில் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதியானது. அதுமட்டுமின்றி இந்திய விமானி ஒருவரையும் பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்துள்ளது.

சிறை பிடித்த இந்திய விமானியை பாகிஸ்தானியர்கள் அடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியானதால், இந்தியா மக்கள் கடும் கோபத்தில் உள்ளன. இது போன்ற நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் இரண்டு விமானங்களை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துல்லியமாக தாக்கியதைக் கண்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துள்ளிக் குதிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கைது செய்யப்பட்ட போதும் பாக். இராணுவத்திடம் துணிச்சலாக பேசிய தமிழனாம் ! இதில் வைரலாகும் காணொளியாம் வேறு !

 

தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் எரிமலை இதழுக்கு வழங்கிய நேர்காணல்.!

தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் இராண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் எரிமலை இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலை  மீள் வெளியீடு செய்கின்றோம் .

இன்று தமிழீழத்தின் முதன்மைப் பாடகராக விளங்கும் உங்களின் இளமைக்காலம் பற்றியும் நீங்கள் இசைத்துறைக்கு வந்த உங்களது பின்னணி பற்றியும் கூறுங்கள்.

நான் என்னுடைய பன்னிரண்டு வயதில் கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிரேசன் கோவிலில் நினையாய்ப் பிரகாரமான மேடையேறினேன். அங்கே தான் என்னுடைய முதல் நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இளமைக்காலம் இசைத்துறைக்கு வருவதா அல்லது ஒரு வியாபாராத்தில் ஈடுபடுவதா என்று பெரும் இழுபறி நிலையில் இருந்தது. பின்பு என்னை இசைத்துறையே ஈர்த்துவிட்டது. நான் அப்பொழுதும் இப்பொழுதும் இசையையே உயிராக நேசிக்கின்றேன்.

தொடர்ந்து பாடகனாய் வரும்வரை என்ன செய்தீர்கள்.

நான் இசையில் ஈடுபடுவதை,பாடிக்கொண்டு திரிவதை என்னுடைய தந்தையார் விரும்பவில்லை. நிரந்தரமான ஒரு தொழிலை, வருவாயைப் பெற
வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. ஒரு நாள் கொழும்பில் ஓரிடத்தில் சிலரின் விருப்பத்திற்காகப் பாடிக்கொண்டிருந்தேன்.இப்பொழுது எனக்கு பத்து வயது இருக்கும்.என்னுடைய பாடலைக் கேட்டபடி அவ்விடத்திற்கு ஒருவர் வந்தார்.பெரிய முறுக்கு மீசை,பெரிய தோற்றம் இன்னும் பாடும்படி கேட்டார்.நான் பாடினேன். அவருக்குப் பிடித்துவிட்டது. என்னுடைய விபரத்தைக் கேட்டபின், நாளைக்கு வான் ஒன்று வரும் அதில் ஏறி வா என்று சொல்லிவிட்டுப் போனார். அவர்தான் இலங்கை வானொலியில் முகத்தார் என்ற பெயரில் புகழ்பெற்ற யேசுரட்ணம். அவருடைய ஏற்பாட்டில் சிறுவர் மலர்,வாலிபவட்டம், ஆகிய நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்கு பற்றினேன்.அப்போது என்னுடன் சிறிதர் பிச்சையப்பாவும் அந்த நிகழ்ச்சிகளில் இணைந்திருக்கின்றார்.

இசைநிகழ்ச்சிகளில் மேடைப்பாடகராக இருந்த நீங்கள் தாயக விடுதலைப் பாடகராக வந்த விதம் குறித்துச் சொல்லுங்கள்.

இந்திய இராணுவம் எமது மண்ணில் இருந்த காலத்தில் மாவீரர் நாளுக்காக கிளிநொச்சியில் பெரு கணேசன் என்பவர் ஒரு பாடலை இயற்றியிருந்தார்.
அந்தப் பாடலை பின்பு புதுவை அண்ணா “இந்த மண் எங்கள் சொந்த மண்” என்ற ஒளிப்பதிவு நாடாவில் என்னைப் பாடவைத்தார். (அப்போதும் அதற்கு முன்பும் நான் என்னுடைய பெயரில் இசைக்குழு ஒன்றை வைத்திருந்தேன்.) தொடர்ந்து பாடிவருகின்றேன்.

ஒரு தேர்ந்த பாடகனுக்கு இசை ஞானமும் சுருதி சுத்தமும் வேண்டும் என்பது மிகமுக்கியம். இந்த இரண்டுமே தங்களிடம் இருப்பதை உங்களின் பாடல்களைக் கேட்கும்போது உணர முடிகிறது. இதை எப்படி நீங்கள் வசப்படுத்திக் கொண்டீர்கள்..?

நான் ஒரு முருகபக்தன், எனக்கு இவைகளை இறைவன் தந்ததாகவே நினைக்கிறேன்.

இன்று தமிழர் வாழுமிடமெல்லாம் உங்கள் பாடல்களின் ஊடாக அறிமுகமாகி இருக்கிறீர்கள். பல இசையமைப்பாளர்களின் இசையாள்கையில் பலவகையான பாடல்களையும் பாடியிருக்கிறீர்கள். இவ்வாறானபோதெல்லாம் பல அனுபவங்களும் சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கும்.
அவை பற்றிக் கூறுங்கள்.

புதுவை அண்ணாவுடன் சேர்ந்து ஒளிப்பதிவு செய்வது சுவாரசியமாய் இருக்கும்.பாடலின்போது நான் தமிழை ஒழுங்காக உச்சரிப்பதற்கே அவர்
தான் காரணம்.

தாயக எழுச்சிப் பாடல்களை அன்று தொட்டு இன்றுவரையிலும் தொடர்ந்து ஒருபணியாக பாடி வருகிறீர்கள். இதைப் பாடல்கள் நேற்று இன்று என ஒரு வளர்ச்சிப்படியில் இருந்து வருகின்றன. இந்த வகையில் இனி உருவாகும் பாடல்கள் எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிறீர்கள்.

தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். எங்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆவணம். எனவே இசையும் சம்பவங்களை உணர்த்துவதாக இருக்கவேண்டும்.

உங்களுடன் இணைந்து பாடிய பாடகர்களுடனான அனுபவங்களையும் நெகிழ்வுட்டும் நினைவுகளையும் பற்றிச் சொல்லுங்கள்.

போராளியாகவும் பாடகராகவும் இருந்து மாவீரரான மேஜர் சிட்டுவை மறக்கமுடியாது. அவரை நினைக்கும் போதெல்லாம் மனம் ஒருமுறை கனக்கும்.

நாடகத்துறையில் உங்களுக்கு ஈடுபாடுண்டு. மக்கள் உங்கள் நாடகங்களும் நடிப்பும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்.

பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடித்திருக்கிறேன். சாம்ராட் அசோகன் நாடகத்தில் கௌதம புத்தராக நடித்தேன். பலரும் பாராட்டிய நாடகமும் நடிப்பும் அது. அனுராதபுரம் வரையிலும் ஒரு போட்டியாக அந்த நாடகம் சென்றது.இசைநாடகத்தில்தான் பின்னாளில் நடித்துவருகிறேன். என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொள்ளாமல், எனது முயட்சிக்கு ஒத்துழைக்கச் சிலர் மறுத்ததையும் இங்கே குறிப்பிடவேண்டும் என்றாலும் பின்பு யாழ்ப்பாணத்தில் அரியாலை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் சந்திரமதியாக நடித்திருந்த செல்வராசா, அரியாலை ரத்தினம் ஆகியோரும் என்னை இந்தத்துறையில் ஊக்கப்படுத்தி வளர்த்தவர்கள். அவர்களுடன் ஹரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி என்ற நாடகங்களில் நடித்தேன்.

ஒரு விடுதலைப் பாடகன் என்ற வகையில் மக்கள் முன்னிலையில் நீங்கள் பாடிச்செல்லும்போது நீங்கள் பெறும் உணர்வும் அனுபவமும் எப்படியிருக்கிறது.

ஒரு முறை எங்களின் நிகழ்ச்சி தொடங்கமுன்பு பெண்போராளி ஒருவர் உரையாற்றினார். பின்பு நாங்கள் பாடினோம். பாடும்போது நான் அழுதுவிட்டேன்.
எங்களின் மண்ணில் எத்தனையே அற்புதமான நிகழ்வுகள் இந்தப் போராட்டத்தில் நடக்கின்றன. அதில் ஒன்றையே அந்தப் போராளி கூறியிருந்தார். அது எங்களின் உணர்ச்சியைப் பெருக்கி அழவைத்துவிட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தபின் எம்மைத்தேடி வந்தவர்களில் ஒருவர் நீங்கள் நல்ல பாடகர் மட்டுமல்ல நல்ல நடிகராகவும் இருக்கிறீர்கள் என்றார் எம்மைப் புரிந்து கொள்ளாமல்.

மலர்கொண்டு வாழ்த்துவோரும் இருக்கின்றனர். கல்லால் அடிப்போரும் இருக்கின்றனர். எப்போதும் விடுதலைப் பாடல்களைப் பாடும்போது எம்முன் ஒரு
பெருமித உணர்வும் மகிழ்வும் தேசவிடுதலைக்கனவும் பெருகியபடியே இருக்கும்.

பிரபல பாடகராக விளங்கும் நீங்கள் மிக எளிமையாக போர்க்காலத்தில் சுமையைத் தாங்கியபடி வாழ்ந்து வருகிறீர்கள். இதுபற்றிக் கூறுங்கள்.

இப்படி வாழ்வதில் நான் நிறைவடைகிறேன். இந்த மண்ணில் இந்தக் காலத்தில் வாழ்வதிலும், என்னாலான பணிகளை இந்தப் போராட்டத்திற்குச்
செய்வதிலும் மகிழ்வடைகிறேன். இதுவே போதும் எனக்கு.

நீங்கள் ஒரு மாவீரனதும் ஒரு போராளியினதும் தந்தையாக இருக்கிறீர்கள். எழுச்சிப்பாடல்களைப் பாடும்போது இந்த உணர்வுகள் எப்படியெல்லாம் பாதிக்கின்றது..? இந்தப் பாதிப்புக்கள் எப்படியெல்லாம் பாடல்களில் பிரதிபலிக்கின்றன…?

மாவீரர் துயிலும் இல்லத்திற்காகப் பாடிய பாடலில் வரும் “மடியில் தவழ்ந்த மகனே” என்ற வரியை உச்சரிக்கும்போது நான் உண்மையிலேயே கரைந்துபோனேன்.
நீங்கள் தமிழீழ தேசியத் தலைவருடன் நேரடியாகப் பரிச்சயமுள்ளவர் என்ற ரீதியிலும் அவரிடம் பரிசுகளைப் பெற்றவர் என்ற வகையிலும்

பல போராளிகளுடன் நெருங்கிப் பழகுபவர் என்பதாலும் இவர்களை பற்றியும் இந்தப் போராட்டம் பற்றியும் இந்தப் போராட்டத்திற்குச் செய்யவேண்டிய பணிகள் பற்றியும் கூறுங்கள்.

தமிழினத்துக்கென்று இறைவனால் தரப்பட்ட தலைவரைப் புரிந்துகொண்டு அவருடன் இணைந்து நாம் எல்லோருமாகப் போராடி வெற்றிபெறவேண்டும்.
தலைவரையும் போராளிகளையும் நான் கண்கண்ட தெய்வங்களாகவே கருதுகிறேன்.

வெளியீடு : எரிமலை இதழ் -ஓகஸ்டு 2001

—-

பாலியல் லஞ்சம் கேட்காதீர்கள்! – மாவீரரின் மனைவி

அறைக்கதவை உள்பக்கமாக தாளிட்டு விட்டு சுவரோடு சாய்ந்து நின்றேன்,என் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்துபோய் இருந்தது, நிலத்தில் கால்களை வைக்கவே முடியாமல் இருந்தது.மொத்தத்தில் பிரமை பிடித்தவளிற்குரிய நிலையில் இருந்தேன், என் இரண்டாவது மகனிற்கு நான் எப்படி இந்த நிலையை விளங்கப்படுத்தப்போகிறேன்,

அம்மா அந்தமாமா தானே சொக்லேற் கொண்டுவந்து தாறன் எண்டவர்.ஏனம்மா அந்தமாமா உங்களைக் கட்டிப்பிடிச்சவர்,ஏனம்மா அந்தமாமாவை தள்ளிவிட்டீங்க..,? அவர் கூடாதவரா..? அப்படியின்றா அண்ணாவும் நானும் போய் அடிச்சுப்போட்டு வரட்டுமாம்மா என்ற கேள்விகளை அடுக்கியவாறு இருந்தான் என் இளைய மகன்,

நான் என்ன செய்வேன் கடவுளே,என்ர பிஞ்சுபாலன்ர மனசில இந்தசம்பவம் பதிஞ்சு போகப்போகுது,கட்டாயம் காரணம் கேட்பானே நான் என்ன செய்வேன் கடவுளே எனக்கு நல்ல தெளிவைத்தரவேண்டும் என்று எண்ணுவதற்குள் என் மகன் அம்மா கதவை திறவுங்கம்மா கதவைத்திறவுங்கம்மா என்று கத்துவது கேட்கிறது,

கீழ்த்தரமான எண்ணம்கொண்ட ஒரு பச்சோந்தியானவனை பற்றி எப்படி கூறுவேன் என் மகனிற்கு..?.எத்துன்பம் வந்தாலும் நமக்குத்தானே அனைத்தும் வருகுது, 2009 ஆம்ஆண்டிற்கு முற்பட்ட காலமாக இருந்திருந்தால் அவனிற்கு என்நிலையை நன்றாக புரியவைய்த்திருப்பேன்.என்ன செய்வது இக்காலத்தில் இந்த சமூகத்தில் நல்லதிற்கு காலமில்லை,ஒரு பெண் தனித்திருந்தால் அவளை வாயில் வந்தவாறு கதைப்பார்கள்.அதனால் நான் அவதானமாக இருந்தும் இன்று இப்படி நடந்துவிட்டதே. நான் என்ன செய்வேன் ..?

என் பழைய நினைவுகளோடு ஒன்றித்துப்போகிறேன்….

எனது கணவன் ***** இன்று ஓர் மாவீரன்,நான் பொதுப்பெண்ணாகவே அதாவது போராட்டத்தோடு தொடர்பற்ற ஒரு பெண்ணாகவே இருந்தேன்.எனது மாமாவின் மகன் ஓர் போராளியாக இருந்தபோது விடுமுறை நாட்களில் அவனுடன் வருபவர்தான் என் கணவரானவர் .அவரிற்கு என்னைப்பிடித்தப்போக விரும்பம்கேட்டு போராட்டமுறைப்படி திருமணம்செய்து என்னை மனைவியாக்கிக்கொண்டார்.

என் குடும்பத்தில் அம்மா எப்போதும் கறாராக இருந்தபடியால் என்வீட்டினருக்கு நான்போராளியை திருமணம் செய்துகொள்வது விருப்பம் இல்லை.அதனால் விருப்பமில்லா திருமணமாகவே நடந்துமுடிந்தது,

ஆனால் எனக்கு என் வாழ்க்கை மகிழ்வாகவே கழிந்தது, போராளியை திருமணம் செய்தால் சந்தோசமாக இருக்கமாட்டாய் என்று அம்மா சொன்னது இன்று என் மனதைத்தொட்டுச் சென்றது. ஏன் என் கணவன் இல்லாவிட்டாலும் அவனிற்கு பிறந்த இரண்டு புலிக்குட்டிகள் இருக்கு அதுபோதும் எனக்கு என்று பலதடவை என் மனதை நான் தேற்றிய நாட்கள் பல உண்டு,

இன்று நடந்த சம்பவத்திற்கு நான்கூறப்போகும் கருத்தில்தான் என் மகனின் எதிர்காலமே தங்கியுள்ளது,என் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்,எமது இல்லறவாழ்க்கையின் மகிழ்வில் கிடைத்த முத்துக்கள்தான் என் இரு செல்வங்களும் மூத்தவன் அகவீரன். இளையவன் முகிலன், இப்பெயர்களை என் கணவன் வைப்பதற்குக்காரணம்கூட தன்னோடு களமுனைகளில் ஒன்றாக இருந்து போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெயர்களே, மூத்தவனிற்கு 15 வயதும் இளையவனிற்கு 12 வயதும் கடந்திருந்தது,

திருமணம் முடித்து பிள்ளைகள் பிறந்தபடியால் எனது கணவன் பெரிதாக களமுனை செல்வதில்லை,பின்தளத்தில்தான் வேலைகள் செய்தார். ஏதும் களமுனைஅலுவல் என்றால் மட்டுமே போய்வருவார்,அப்படிபோய்வரும் போதுதான் இராணுவ செல்தாக்குதலில், 2008 ஆம் ஆண்டு 02 மாதம் 27ஆம் திகதி எனது கணவன் களமுனையில் லெப்.கேணலாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார், பலநூறு போராளிகளின் ஓர்பிடி மண்ணோடு கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டார்.

போராளியை திருமணம் செய்தபடியால்தானோ என்னவோ நான் எதற்கும் கலங்கிநின்றதில்லை,இராணுவத்திடம் சரணடைந்து முகாம்வாழ்வு முடிந்து மீள்குடியேற்றமாகி வீட்டுத்திட்டம் தந்து கடன்பட்டு கிழமைலோன் எடுத்தே இப்போது நாம்இருக்கும் வீட்டுவேலையையும் முடித்திருந்தேன்,

இரு பிள்ளைகளையும் இன்றைய சூழலில் வளர்ப்பதென்பது சவால் நிறைந்தவையாக உள்ளது,நாங்கள் சாப்பிட்டமோ இல்லையோ யாரிட்டயும் உதவியென்று போனதில்லை.உதவி செய்யவருபவர்கள் பலர் தமது சுயநலத்திற்காக வருபவரும் உண்டு,

தேவையில்லாமல் அவமானப்படக்கூடாது என்பதே என் ஆசை., நான் கிளிநொச்சியில் உள்ள வாணிபம் ஒன்றில் கணக்காளர் வேலை பார்த்துவருகிறேன்,அந்த சிறுதொகை பணத்தை வைத்துத்தான் சாப்பாடுட்டுச் செலவு பிள்ளைகளிற்கு உடுப்பு,ரியூசன் காசு என்று எல்லாவற்றையும் சமாளிச்சுவருகிறேன்,

எனது கணவனை தெரியும் என்றுகூறி புலம்பெயர் தேசமொன்றில் இருந்து ஒருவர் சிலநாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்திருந்தார்,என் வீட்டிற்குவந்து எனக்கு உதவுவதாக கேட்டபோதுகூட நான் மறுத்துவிட்டேன்

,இல்லை இது என்கடமை,எங்களிற்காக போராடபோய் மாவீரனானவனின் குடும்பத்திற்கு நாங்கள் உதவவேண்டும்,புலம்பெயர் மக்கள் உதவாமல் யார் உதவுவது,.?

நான் நிறைய உளைச்சு போதியளவு வச்சிருக்கிறன்,உங்களாலதான் நாங்கள் இன்று வீசாகிடைச்சு மகிழ்வா லீவிலவந்துபோறம், ஓர்மாவீரனின் குடும்பத்திற்கு உதவ நான் கொடுத்துவைத்திருக்கவேனும் என்று பலகதைசொல்லி நின்றான்,

சொல்லி மறுகிழமை ஓர் நல்இன பசுவும் கொட்டில்போட தகரமும் கொண்டுவந்து தந்துவிட்டுபோகும்போது மறுமுறை வரும்போது என் பிள்ளைகளிற்கு சொக்லேற் கொண்டுவருவதாக கூறியிருந்தான்,எனக்கு இவற்றில் உடன்பாடில்லை,என் இளைய மகனிற்கு சொக்லேற் என்றால் விருப்பம்,

ஆனாலும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்,சில நாட்கள் சென்றபின் என் பிள்ளைகள் இருவரும் தனியார் வகுப்பிற்கு சென்றபின் நயவஞ்சக எண்ணத்தோடு வந்த கண்ணன் என் பிள்ளைகள் இல்லை என்பதை அறிந்துகொண்டு நாட்டிற்காக போராடப்போன மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காமல் தன்உடல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள என்னை பலவந்தபடுத்தினான்,

நானும் என்னாலான பலபோராட்டம் நடத்தினேன்,எத்தனையோ நல்ல உள்ளங்கள் வெளிநாட்டில் இருந்துவந்து போராளி மாவீரர் குடும்பங்களிற்கு உதவி புரிந்துவிட்டு போகிறார்கள்,இவனைப் போல கேவலங்கெட்ட வக்கிரபுத்தியுடையவனை நான் காணவில்லை.என்ன செய்வது கத்தினால்கூட பெண்ணை தப்பாக பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்,

என்னைத்தான் தப்பாக கதைப்பார்கள்,இந்த கல்நெஞ்சம் கொண்டவனிடமிருந்து விடுபட போராடும்போராடிக்கொண்டிருக்கும் போதே வகுப்பு முடிந்து என் இளைய மகன் வந்திருந்தான்,கையில்கிடைத்த பூவாசால் எறிந்ததில் வெளிநாட்டுகாறனுக்கு மண்டையும் உடைந்துவிட்டது,அந்தகோபமே அவன் என்னை மேலும் பலவந்தபடுத்தகாரணமாக அமைந்துபோனது,எனது மகனைக்கண்டதும்தான் என்னை தள்ளிவிட்டு வெளியில் ஓடினான்,

எனக்கு என்னசெய்வதென்றே தெரியாமல் போனது,அம்மா என்று ஓடிவந்த மகனை விலத்திவிட்டு அறைக்குள் சென்றுகதவை தாளிட்டேன். இளையமகன் வெளியில் நின்று அம்மா கதவை திறவுங்கம்மா பிளீஸ் அம்மா,கதவதிறவுங்கம்மா என்று கதறுவது கேட்டகிறது,அவன் பயந்துபோயிருக்கிறான் இன்று நான் கூறும் பதிலே அவனது எதிர்காலத்திற்கு உதவும்,

அம்மாவை கொடுமைப்படுத்த நினைத்தவனை பழிவாங்கவேணும் என்று என்மகன் நினைக்ககூடாது,வெளிநாட்டுக்காறனின் மாடு வீட்டில் நின்றால் என்மனம் இந்த நினைவில் இருந்துமீளாது,பணம் இருக்கின்றது என்பதற்காக ஒரு விதவையை அனுபவிக்க துடிக்கிறானே

, அதுவும் ஓர் மாவீரனின் மனைவி என்றுகூட பார்க்காது. இவளவு கீழ்த்தரமான சிந்தனையுடன் என்னை அணுகியவன் இன்று எனக்கு செய்ததுபோல்தானே இந்த பணத்தை காட்டி நாளை இன்னொரு குடும்பத்திற்கு செய்யப்போகிறான்..?

கடவுளே என்கணவன் தாய் மண்ணைத்தானே முதலாவதாகவும் உயிராகவும் நேசித்தான். தன்மனைவி பிள்ளைகளை இரண்டாவதாகவே நேசித்தவன்,எம்மக்கள் சந்தோசமாக வாழவேணும் என்று போராடிமடிந்துபோனவன்

ஆனால் இன்று அவன் குடும்பத்திற்கு மற்றவர்கள் தரும் கௌரவம்…..? மாட்டை காணும்பேதெல்லா அந்த காமுகனின் நினைவுதான்வரும்,நாங்கள் ஏழைகள்தான் ஆனால் இவர்களைப்போல கோழைகள் இல்லை.

அதனால போய் மாட்டை அவிட்டு எங்காவது விட்டிட்டுவந்து என் செல்லமகனிற்கு நல்ல தெளிவான பதிலைக்கொடுக்கவேண்டும் என்று கதவைத்திறந்துவெளியே போகிறேன் தெளிந்த சிந்தனையோடு.

*பிரபாஅன்பு*

—–

பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்ட சிறிதரன் எம்.பி.யின் செயலாளர்? (ஆதாரங்கள் இணைப்பு) By விதுஷன் –
09/04/2017

பாராளுமன்ற உறுப்பினரும் சி.சிறிதரனின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் உதவி கோரும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஆயினும், இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், அப்பெண்ணிடம் இவர் எழுதிய (சட் பண்ணிய) ஆதாரங்கள் பகிரங்கப்பட்டுள்ளது.

சிலர் வறுமை,தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும், அதில் ஒரு சகோதரியின் உதவியுடன் சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன எனவும் குறிப்பிட்டு சில ஆதாரங்களும் வெளிவந்துள்ளது.


பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகள்

வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் அதிகாரிகளினால் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, வடக்கில் செயற்படும் தன்னார்வ அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களே அதிகம் உள்ளனர். வீடு வழங்குதல் , சுய தொழில் வாய்ப்புகள் வழங்குதல், ஆடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கும் போது, பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோருகின்ற போதிலும் இது தொடர்பில் இதுவரையில் 5 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் அவமானம் காரணமாக தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் பட்சத்தில், கிடைக்கும் வாழ்வாதார உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விடுத்துள்ள ஐ.நா.வுக்கான வேண்டுகோள்!

கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஐ.நா.சபை காலந்தாழ்த்தாது தீர்வினைப் பெற்றுத்தருமாறு இப்போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்விடயங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐ.நா. மனிதவுரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னதாக எங்கள் துயரத்தை உங்களது அவதானத்துக்கு கொண்டுவருகின்றோம்.

கடந்த 2019 மே மாதம் போரின் முடிவில் எங்களில் பலர் குழந்தைகள் சிறார் உள்ளிட்ட எங்கள் குடும்பத்தினர் பலரை சிறிலங்கா பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தோம்.

அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது என்று தரப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே அவர்களை ஒப்படைத்தோம். ஆனால் அவர்களிடம் ஒப்படைத்து பத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் எங்களால் கையளிக்கப்பட்டவர்களைப் பற்றி அரசாங்கத்திடமிருந்து பதில் இல்லை.

நாங்கள் தொடர்ந்து எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடியலைகின்றோம். சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளும் இராணுவ உளவுத் துறையும் சிறிலங்காவில் மட்டுமின்றி ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் செய்யும் அத்துமீறல் உள்ளிட்ட பற்பல தடைகளையும் மீறி எங்கள் தேடல் தொடர்கிறது.

இந்நிலையில் எமது உறவுகள் உயிரோடிருக்கிறார்களா? எங்கள் குழந்தைகள் என்ன ஆனார்கள்? எங்கள் புதல்வியர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனரா? அவர்களைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றனரா? என்ற மனவலியோடு வாழ்கின்றோம்.

சிறிலங்கா அரசாங்கம் பன்னாட்டுச் சமுதாயத்தையும் பாதிப்புற்றவர்களையும் ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது.

எனவே, “சிறிலங்கா விரிக்கும் “உண்மையும் மீளிணக்கமும்” போன்ற வலையில் விழுந்து விடாதீர்கள். சிறிலங்காவுக்கு எவ்வித கூடுதல் கால அவகாசமும் கொடுத்து விடாதீர்கள். கால நீட்டிப்புத் தருவது தமிழ் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் தங்கள் உரிமை மீறல்களைத் தொடர்ந்து செய்யவும், முக்கியமான போர்க்குற்ற சான்றுகளை அழிப்பதற்கும் உதவுவதாகி விடும். மேலும், கூடுதல் கால அவகாசம் கொடுப்பது தமிழர்களுக்கு நிரந்தரமாக நீதியை மறுப்பதாகி விடும்.

அத்துடன் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது சிறிலங்காவுக்கென்றே அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்புங்கள். போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், மனித உரிமை தொடர்பான ஏனைய சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை மனிதவுரிமைப் பேரவைக்கு அறிக்கை அளிப்பதற்கென சிறிலங்காவுக்கான சிறப்பு அறிக்கையாளரை அமர்த்துங்கள்” என்று குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி போராட்டத்தில் பல அரசியல் பிரமுகர்கள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கெடுத்தனர்.

அரசியல் பேதங்கள் இன்றி குறித்த போராட்டத்தில் தமிழ் அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கு பற்றியிருந்தனர்.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான  சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடக் வடக்கு மாகாணம் முழுமையாக ஹர்த்தால் காரணமாக இன்று முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு இனியும் காலஅவகாசம் கொடுக்காதீர்கள்! சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

நாட்டின் பிரதமர் சில வாரங்களுக்கு முன் விசாரணை எதுவும் தேவை இல்லை என்று கூறி இருப்பது எமது மக்களின் மனங்களைப் புண்படுத்தி உள்ளதுடன் எமது நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தற்போது இடம்பெற்றுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்தும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கவே நாம் இங்கு கூடி வந்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒன்று திரண்டு சாத்வீக வழிமுறையில் இன்றைய நாளில் மேற்கொள்ளும் இன்றைய போராட்டத்தின் தாற்பரியத்தை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் சபை தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத் தானே ஏமாற்றுவதோடல்லாமல் பாதிக்கப்பட்ட எமது மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

போர்க்குற்ற விசாரணை உட பட மனித உரிமைகள் சபை தீர்மானத்தின் பல விடயங்களை நிறைவேற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் கால அவகாசம் எதற்காக என்பதை உறுப்பு நாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையாளரும் சிந்தித்துப் பார்த்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும்.

அதனால் தான் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாள வேண்டும் என்று கோரியுள்ளோம்.

அது சாத்தியப்படாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவான பொருத்தமான ஒரு பொறிமுறையின் கீழ் மனித உரிமைகள் சபை இதனைக் கையாள வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் பேரவை ஊடாகத் தீர்மானம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளோம்.

அதேவேளை, தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு மற்றும் கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் சர்வதேச விசாரணை ஒன்றை ஐ. நா மனித உரிமைகள் சபை மேற்கொள்வதை இலங்கை அரசாங்கம் சவாலுக்கு உட்ப்படுத்திவரும் விதம் எதிர்காலத்தில் மனித உரிமைகள் சபையின் இறைமையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் கொலைசெய்யப்பட்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது பாதுகாப்பதற்கான தனது பொறுப்பில் (Responsibility to Protect) (R2P) இருந்து தவறிய ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் போருக்குப் பின்னராவது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றில் காத்திரமான ஒரு வகிபாகத்தை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்து எமது மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பில் இலங்கைக்கு இருக்கின்ற கடப்பாடுளை வலியுறுத்தி 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் சபையும் சர்வதேச சமூகமும் தேவைக்கு அதிகமாகவே சகல விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ்ந்த தமது தன்மையை காட்டி இருக்கின்றன.

ஆனால் இவற்றைத் துஷ்ப்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் கண்துடைப்பு நடவடிக்கைகளிலேயே இலங்கை அரசாங்கம் கடந்த 4 வருடங்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகம் இன்று செயல் இழந்துள்ளது. ஏற்கனவே அதன் செயற்பாடுகள் அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாகவே அமைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருந்தார்கள்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்தும் எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் கூட இன்னமும் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவோம்.

விசாரணை எதுவும் தேவை இல்லை என்று நாட்டின் பிரதமர் சில வாரங்களுக்கு முன்னர் கூறி எமது மக்களின் மனங்களைப் புண்படுத்தி இருப்பதுடன் எமது நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளார்.

ஆகவே, தான் இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு குறிப்பாக போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதில் இனிமேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் வடக்கு கிழக்கில் ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகங்களை அமைப்பது உட்பட மாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி போராட்டத்தில் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களால் குழப்பம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வருகை தந்த அரசியல் வாதிகளின் ஆதரவாளர்கள் சிலர் போராட்டத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தி ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பெருமளவான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று திரண்டு இன்று பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த போராட்டத்திற்குள் புகுந்த அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும், வெளிநாடுகளுக்கு சென்று மனிதாபிமான குடியுரிமை பெறும் திட்டத்துடன் வந்த சிலரும் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடாத்திய போராட்டத்தை மழுங்கடித்துள்ளதுடன், ஊடகவியலாளர்களையும் செய்தி சேகரிக்க விடாத வண்ணம் இருட்டிப்பு செய்யும் நடவடிக்கைகளை மிக கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஆட்சியில் மகிந்த அரசுடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது ஆதாரவாளர்களும் 2013ம் ஆண்டில் இலங்கை அரசை ஐ.நாவிடமிருந்து பாதுகாக்க இறுதி யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை.

சரணடைந்தவர்கள் அனைவரும் புலிகளே என்று மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டு இன்று கலந்து கொண்டமை தொடர்பில் அதற்கெதிராக ஒரு குழுவினர் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் எனக் கோசமிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் வேண்டும் என கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன்போது , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் வேண்டாம் என கூறியுள்ளனர். பின்னர் மக்கள் அங்கிருந்து ஐ. நா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போதும் மக்கள் கைகளில் ஏந்தி வந்த பதாகைகளை மறைத்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தினை குழப்பும் விதமாக அரசியல் கட்சியினர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி போராட்டத்தில் அடிதடியில் ஈடுபட்ட சிறிதரனின் அடியாட்கள்…!! ‘கறுப்புச் சட்டைக்காரர்கள்’

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.

இன்றைய போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில், கறுப்புச் சட்டை அணிந்து வந்த அரசியல் கட்சியினர் சிலர் குழப்பங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் முன்னே சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பதாதையை மறைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதுடன், பேரணியின் போதும், இடையிட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.

திடீரென பேரணியில் சென்றவர்களை வீதியில் அமர உத்தரவிட்டு, ஒழுங்கமைப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் ஒழுங்கமைப்பு மேற்கொண்ட ஒருவரையும் அவர்கள் தாக்கினர்.

இவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளை படம்பிடித்த ஊடகவியலாளர்களையும் கறுப்புச்சட்டை அணிந்தவர்கள் தாக்க முற்பட்டனர்.

காணாமல் போனோர் பணியகம் வேண்டாம் என்று முழக்கம் எழுப்பிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை தலைவர் ஒருவர் தடுக்க முயன்றதாலும் குழப்பம் ஏற்பட்டது.

குழப்பம் விளைவித்தவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களும் அடங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் நடவடிக்கைகளால், போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், பொதுமக்கள், மற்றும் ஊடகவியலாளர்களும், அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4

பாடம்-4: ஒரு வலுவான பண்பாட்டினால் மட்டுமே வலுவான சமூகத்தையும் சமூக  அமைப்புகளையும்  கட்டி எழுப்பமுடியும்.

உலகின் தலைசிறந்த இராணுவ தத்துவமேதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், இராணுவ உத்திகளைவிட இராணுவ வீரர்களின் உளவியல்தான்  போரில் அதிமுக்கியமானது. எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் கோழைகளை  வைத்துக் கொண்டு ஒரு இராணுவம் இம்மியளவும் நகரமுடியாது.

“Clausewitz’s greatest contribution to the theory of war was in emphasizing psychological factors…he showed that the human spirit is infinitely more important than operational lines and angles.” [1]

ஈழப்போரில் ஒரு பெரிய புதிர் என்னவென்றால் புலிகளால் எவ்வாறு மனபலத்தில் உலகிலேயே நிகரற்ற இதற்குமுன் வரலாற்றில் எங்கும் காணாத படையை உருவாக்க முடிந்தது என்பதுதான். இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துள்ளனவா எனத் தேடினேன். பெரும்பாலான ஆராய்ச்சிகள் புலிகள் “பயங்கரவாதிகள்” என்ற முடிவுக்கு வந்துவிட்டு அதற்கேற்ற உளவியலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் [2,3].  அதிலிருந்து நாம் கற்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  ஆனாலும் பெரும்பாலோனோர் புலிகள்தான் உலகிலேயே மனபலத்திலும் தாக்குதலிலும் நிகரற்றவர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். புலிகள் ஒரு பலமான விடுதலை இயக்கமாக வளர்வதற்கு என்ன உளவியல் காரணங்கள் என்பது தான் நமது பார்வையில் முக்கியம்.  நான் தேடிய அளவில் அதுபோன்ற ஆராய்ச்சிகளைக் காணமுடியவில்லை.   இக்கட்டுரையின் நோக்கம் அந்தத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதே.  இது நான் அறிந்த வரலாற்றுத் தகவல்களையும் உளவியல் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்பதால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல. இதை ஒரு ஆரம்பமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதில் தமிழர்களின் பண்பாடு என்ன என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது நண்டு கதைதான். நண்டுகள் எவ்வாறு ஒன்றை ஒன்று பின்னுக்கு இழுக்கிறதோ, அதுபோல ஓர்  ஒற்றுமையற்ற சமூகம்தான் தமிழ்ச்சமூகம். இதை “நண்டுப்பண்பாடு” என்று எடுத்துக் கொள்வோம்.

நண்டுப் பண்பாடு:

  • சுயநலம்தான் குறிக்கோள். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும். மற்றவற்றைப் பற்றி பெரிய  கவலை இல்லை. யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ, அதுதான் நடக்கும்.
  • சமூகத்தில் இருக்கும் மற்றவரைப் போட்டியாகக் கருதுவர். ஒருவரின் முன்னேற்றம்/இலாபம் மற்றொருவரின் நட்டமாகப் பார்க்கப்படும். இதன் விளைவாக ஒருவருக்கொருவர் நண்டுபோல இழுத்துக்கொண்டு ஒத்துழைப்பற்று இருப்பர்.
  • ஒழுக்கம் என்பது அவரவர் விருப்பம்
  • இன்பம்: எளிமையான காமம், பொழுதுபோக்கு, போதை என்கிற மாயைகளுக்குள் சிக்கிக் கொள்வர். இவை இன்பம் தருவதுபோலத் தோன்றினாலும்,  முடிவில் துன்பத்தையே கொடுக்கும்.
  • சமூக கட்டமைப்புகள்: மக்களிடையே ஒத்துழைப்பின்மையால், மக்களால் இயக்கப்படும் பொதுநல அமைப்புகள் குறைவாகவே இருக்கும். மேலும் அனைத்து அரசு மற்றும் பொதுநல அமைப்புகளிலும்  நண்டுகள் புகுந்து  அமைப்புகளை சீர்கெடுக்கும். குடும்ப நிறுவனங்களை அதிகமாக் காணலாம். அரசியல் கட்சிகளும் குடும்ப நிறுவனங்களாக மாறும். சட்டங்கள் கேலிக் கூத்தாகும். யாரும் அதைப் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள். அனைத்திற்கும் சமூகம் அரசையே நம்பி இருக்கும், ஆனால் அரசு அமைப்புகளும் மிக மோசமான நிலையிலேயே இருக்கும். மிக முக்கியமாக  இப்படிப்பட்ட சமூகத்தால் சிக்கலான அமைப்புகளை உருவாக்கி சிக்கல்களைத் தீர்க்கும்  வல்லமை  இருக்காது.
  • இதுபோன்ற சமூகங்களில் நண்டாக இருந்தால்தான் பிழைக்க முடியும். நேர்மையாக இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்குப் பிழைக்கத்தெரியாதவன் என்ற பட்டம் கட்டப்படும். இவ்வாறான சமூக உருவாக்கத்திற்கு தனி மனிதனைக் குற்றம் கூறமுடியாது. அந்தப் பண்பாட்டில் அவ்வாறு இருந்தால்தான் பிழைக்க முடியும். இங்கு பிழை என்பது பண்பாட்டில்தான் உள்ளது. நெரிசலில் (Stampede) மாடுகள் எவ்வாறு குருட்டுத்தனமாக ஒன்றின்பின் ஒன்றாக  ஓடுகிறதோ, அதுபோல சமூகம் ஓடும். இதுபோன்ற நிலையில் சமூகம்  அழிவதற்கு  வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு செயல்படும் நண்டுகளை வைத்து ஒரு பெரிய இயக்கத்தைக் கட்டி எழுப்புவதென்றால்,

அது முடியாத காரியம். இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாற்றுப் பண்பாடுதான். அதை உணர்ந்து பிரபாகரன் அவர்கள் உருவாக்கியதுதான் “புலிப் பண்பாடு”.  எதற்கும் உதவாத நண்டுகளை  எடுத்து உலகில் அனைவரையும் விஞ்சிய புலிகளாக எப்படி  உருவாக்க முடிந்தது?

புலிப் பண்பாடு:

ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்கு பலமான அடித்தளம்  வேண்டும், அதுபோல ஒரு பெரிய  இயக்கத்தை கட்டி எழுப்ப, அதற்குத் தேவையான அடித்தளம் என்பது பண்பாடு தான். ஆயுதப் போராட்ட ஆரம்பகாலத்தில் பலவேறு குழுக்கள் இருந்தாலும், முதன் முதலில் பண்பாட்டுத் தேவையை உணர்ந்து, ஓர் அதியுச்ச ஒழுக்கமான பண்பாட்டை பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார்கள்.

அந்த பண்பாட்டின்  முக்கிய அங்கங்களாக நான் கருதுவது:

  1. தனிப்பட்ட சமூகம் (Community):

ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கு ஒரு “தனிப்பட்ட சமூகம்” முக்கியமானது. அச்சமூகத்திற்கு யார் உறுப்பினர், யார் இல்லை என்பதை தெளிவாக வரையறுக்கும் எல்லை இருக்கவேண்டும்.  சமூகத்தில் ஒரு மனிதனின் செயல்பாட்டை பெரும்பங்கு தீர்மானிப்பது, அச்சமூகத்தில் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதுதான்.  தன்னை சுற்றி இருப்பவர்கள் நண்டுகளாக இருந்தால், ஒருவர் நண்டாக மாறுவார். சுற்றி இருப்பவர்கள் புலிகளாக இருந்தால், புலியாக மாறுவார்[22,23]. இதுதான் அடிப்படை உளவியல்.  ஒரு தனிச் சமூகத்தை உருவாக்கும்பொழுது எளிதாக புதிய விதிகளையும் நடைமுறைகளையும்  உருவாக்கி அதிக ஒத்துழைப்பான சமூகத்தை உருவாக்கிவிடலாம். புலிகள் ஒரு போர் புரியும் கொரில்லா இயக்கம் என்பதால், காடுகளில் ஒரு சமூகமாக தனித்து இயங்குவது அவர்களுக்கு இயற்கையிலே அமைந்தது. பிரபாகரன் அவர்கள் அதீத ஒத்துழைப்பான இயக்கம் தேவை என்பதை முதலில் உணர்ந்து, அதற்கேற்ற விதிகளை உருவாக்கினார்.  இதுதான் தான் அவர்களின் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி[5]. மற்ற போராட்ட  இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தாதனால் அவர்களால் பெரிதாக வளர முடியவில்லை.

  1. சுயம் (Self):

ஒரு மனிதனின் குணங்கள் பிறப்பில் தீர்மானிக்கப் படுவதல்ல. மனிதனின் குணங்களை  மரபணுக்களும்  பண்பாடும் இணைந்து உருவாக்குகின்றன. பிறக்கும்போது மனிதன் குறிப்பிட்ட பண்புகளுடன்  பிறக்கிறான், ஆனால்  பின்பு வளரும்பொழுது  அவன் வாழும் சமூக சூழல்  அப்பண்புகளை  சூழலுக்கு  ஏற்றவாறு மாற்றுகிறது.  இந்தப் பண்புகள் வளர்ந்து பெரியவனானபின்  மாற்றுவது கடினமானது, ஆனால் முடியாத காரியம் இல்லை [7].

ஒரு விடுதலை இயக்கத்திற்கு முக்கியமான  பண்பு  “நான் யார்” என்ற சுய அடையாளம்.  ஒருவனுக்கு சுயம் உருவாகியபின் அந்த சுயத்தைக் காப்பதுதான் அவன் குறிக்கோள். சுயத்திற்கு தீங்கு ஏற்பட்டால் வலிக்கும், கடுங்கோபம் வரும். சுயம் என்பது ஒருவனின் உடல் மட்டுமல்ல. எதற்கெல்லாம் வலிக்கிறதோ, அவற்றை எல்லாம் அவன் சுயத்தில் அங்கமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒருவரின் புதிதான வண்டியில் (car) ஒரு கீறல் ஏற்பட்டு அவர் துடித்தால், அவரின் வண்டியும் அவரின் சுயத்தில் அங்கமானதே.

புலிகளின் வெற்றியைப் புரிந்துகொள்ள அவர்களின் சுயம் என்ன என்ற புரிதல் முக்கியமானது.

  • ஒரு புலி வீரனின் சொத்து என்பது ஒரு துவக்கும் சயனைடு குப்பியும்தான். புலி வீரர்கள் முதல் ஐந்து வருடங்கள் திருமணம் கூடாது என்பதாலும், பற்று வைக்க குடும்பமும் இல்லை.
  • புலி வீரர்களின் ஒரே இலக்கு என்பது  “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று அனைவரும் அறிந்ததே. அதனால் ஈழம் தான் புலிகளின் சுயம் என்று ஆனது.
  • பெரும்பாலோனோர் இளவயதில் இயக்கத்தில் இணைவதால், அவர்களின் சுயத்தை வடிவமைப்பது எளிதாகிறது. மேலும் சுற்றியுள்ளோர் அனைவரும் ஈழம் தான்  சுயம் என்று இயங்கும் பொழுது,  புதியவர்களுக்கும் அந்த  சுயம் வந்துவிடுகிறது.
  • ஈழம்தான் ஒருவரின் சுயம் என்று ஆனபின், தங்கள் சுயத்தை காக்கவேண்டும் எனில், அவர்கள் ஈழத்தைக் காக்கவேண்டும். அவர்களுக்கு போரில் இறப்பது பெரிய துன்பம் அல்ல. தான் உயிர் துறந்தாலும், ஈழம் வாழ்ந்தால் அந்த சாவும் வாழ்வாகவே அவர்கள் பார்வையில் தெரியும். இவ்வாறு உயிர் பயம் முற்றிலும் போய்விட்டதால், எந்த கொம்பனையும் எதிர்க்கும் வல்லமை பெற்றார்கள். இந்தியா வந்து மிரட்டிய போதும், அவர்கள் குறிக்கோளில் நகரவில்லை. முடிவில் இந்தியாதான் மிரண்டு  ஓடியது.
  • பிரபாகரன் அவர்களே “ஈழக் குறிக்கோளில் இருந்து பின் வாங்கினால் என்னை சுட்டுவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார்கள். அவர்களின் சுயம் என்பது “ஈழம்” மட்டுமே. அதில்லாமல் அவர்களால் உயிர் வாழமுடியாது.

ஈழ இனவழிப்பின் காரணமாக,  உலகில் பல தமிழர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார்கள். இதற்குக் காரணம் அவர்களின் சுயத்திலும் ஈழம் ஒரு பாகத்தைக் கொண்டிருக்கிறது. ஈழ அழிப்பு என்பதை தங்களின் ஒரு பாகம் இறந்து போனதாகவே உணர்வர். ஈழத்தை முழுதாக சுயத்தில் உள்வாங்கிய முத்துக்குமார், முருகதாசன் போன்றவர்கள், வாழ்வை   மாய்த்துக் கொண்டார்கள். அதே நேரம் பல தமிழர்கள் “மானாட மயிலாட” பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்கள். இதற்குக் காரணம், அவர்களின் சுயத்தில் தமிழர் என்ற அடையாளமோ அல்லது ஈழமோ இல்லை. இது அவர்களின் குற்றமில்லை. குறிப்பாக அவர்கள் வளரும் வயதில் அவர்களுக்கு அமைந்த சூழல்தான் அடிப்படைக் காரணம்.

  1. நடத்தை, விதிகள்:  அதீத  ஒழுக்கத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் ஏற்றவாறு விதிகளும் பழக்கவழக்கங்களும்  உருவாக்கப்பட்டன

புகைப்பிடித்தல், மது அருந்துதல், பாலியல் ஒழுக்கமின்மை  தடை செய்யப்பட்டது.  உலகிலேயே பாலியல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே இராணுவம் புலிகள்தான்.

சாதி மத வேறுபாடுகள் களையப்பட்டு அனைவரும் தமிழர்  என்ற உணர்வு கொண்டுவரப்பட்டது. வெவ்வேறு மதத்தினர் ஆனாலும், அனைவருக்கும் மத சார்பற்ற தமிழ்ப்பெயர் வழங்கப்பட்டது. அனைவரும் அண்ணன் தம்பி, அக்காள் தங்கை உறவுமுறை கொண்டு   பெரிய குடும்பமாக ஒற்றுமையாக செயல்பட்டார்கள்.

எதிரிகளிடம் பிடிபடக்கூடாது; அவ்வாறு பிடிபட்டால் சயனைடு அருந்தவேண்டும் என்ற பழக்கம் கொண்டுவரப்பட்டது. உலகில் இதுபோன்ற ஒழுக்கமுள்ள, எதிரிகள் நடுங்கும் ஒரு படை இருந்ததென்றால் அது சப்பானியர்களின் சாமுராய் படைகள்தான். அவர்கள் இரு கத்திகள் வைத்திருப்பார்கள்; பெரிய கத்தி போர் புரிவதற்கென்றும், சிறிய கத்தி எதிரிகளிடம்  பிடிபடாமல் இருப்பதற்காகவும்  மானத்தைக் காப்பதற்காகவும்  வயிற்றைக் கிழித்து தற்கொலை செய்துகொள்ள பயன்படுத்தினார்கள்.  இதுபோன்ற பழக்கம் வீரர்களிடம் மரண பயத்தை முற்றிலும் நீக்கி,  எதிரிகளிடம்  மரண பயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

  1. இன்பம்:

நீங்கள் நினைக்கலாம், இவ்வளவு ஓர் ஒழுக்கமான இயக்கம் என்றால், அவர்கள் எந்திரம் போல எந்த இன்பமும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள் என்று. இது ஏனென்றால், நாம் பெரிதாக சாதிக்கவேண்டுமென்றால் தியாகம் செய்து துன்பங்களை ஏற்று உழைத்து வெற்றிகொள்ளவேண்டும் என்று நாம் சிந்திக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், இவ்வுலகில் புதுமையைப் படைத்த எவரும், அவர்கள் செயலில் துன்பம் கண்டு  சாதிக்கவில்லை, மாறாக இன்பம் கொண்டே சாதிக்கின்றனர்.  சிறந்த அறிவியலாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள், புலவர்கள்  அனைவரும் அவர்களின் படைப்பில் எல்லையில்லா இன்பம் காண்கிறார்கள், அதனால்தான் அவர்கள் அதிக வெற்றிபெறுகிறார்கள். துன்பப்படும் மனதால் புதுமையைப் படைக்கமுடியாது. இந்த இன்ப நிலையை உளவியலாளர் Mihaly Csikszentmihali  “ஓட்டம்” (flow) என்கிறார் [8]. ஒருவர் தொடர்ந்து கற்று, தன்னை வளர்த்துக்கொண்டு,  புதுமைகளைப் படைக்கும்பொழுது அவர்கள் இந்த ஓட்ட நிலையை அடைகின்றனர்.  அப்பொழுது இன்ப நிலையையே அடைந்து,   காரியத்தில் குறியாக நிற்காமல் தொடர் ஓட்டத்தில் இருப்பர். மற்றவர்களுக்கு அதுபோன்றவர்களை பார்ப்பதற்கு  இயந்திரம் போலத் தெரியலாம், ஆனால் உண்மையில் அவர்கள் அதியுச்ச இன்பநிலையில் இருப்பர். அதனால்தான் அவர்களால் அவ்வாறு செய்ய முடிகிறது.  ஒருவரின் மனதில் ஈடுபாடு இல்லை என்றால், அந்தக் காரியத்தை நீண்ட நேரம் செய்ய இயலாது.

புலிகள் கண்ட இன்பமும்  இதுபோன்ற ஓட்ட நிலையில் கிடைக்கும் இன்பமே. அவர்கள் இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து படு வேகமாக கற்று, வளர்ந்து, பல வெற்றிகளை ஈட்டி மாபெரும் சாதனைகளைப் படைத்தார்கள். அவர்கள் பெற்ற வெற்றிகளில் உலகத் தமிழர்கள் எல்லாம் துள்ளிக் குதித்தார்கள் என்கிறபொழுது, களத்தில் வெற்றிகண்ட அவர்கள்  எதுமாதிரியான இன்ப நிலையில் இருந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கலாம்.

ஈழ இனவழிப்பிற்குப்பின்  இன்றைய  தமிழ்ச்சமூகம் ஒரு துன்பநிலையை அடைந்துள்ளது. இதிலிருந்து மீண்டு இன்ப நிலையை அடைய வேண்டுமானால், புலிகளைப்போல ஒரு ஓட்ட நிலையை நாம் அடையவேண்டும். அதற்கு இன்றைய தேவைக்கேற்ப தொடர்ந்து கற்று, புதுப்புது அமைப்புகளை உருவாக்கி நாம் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும். வேறுவழி  இல்லை.

  1. சடங்குகள்:

சடங்குகள் ஒரு சமூகத்தை “நாம்” என்று ஒற்றுமைப்படுத்தி, ஒத்துழைப்பைப் பெருக்கி, எது முக்கியம் என்று உணரவைத்து மக்களை திரள வைக்கிறது[9,10].

“Ritual practices..turn out to be the solution to one of the hardest problems humans face:  cooperation without kinship.” [9]

புலிகள் உருவாக்கிய ஒரு பெரிய சடங்கு மாவீரர் நாள். கார்த்திகை மாதமே  மாவீரர் மாதம் என்றானது. இது  புலிகளையும் மக்களையும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”  என்று ஒன்றைக் குறிக்கோளில் உணர்வுப்பூர்வமாக இணைத்தது. மக்களுக்கு இது வருடம் ஒருமுறை வரும் சடங்காக இருக்கலாம், ஆனால் புலிகளுக்கு இது தினந்தோறும் நடக்கும் சடங்கு. சடங்குகளின் பலம் என்பது அது உருவாக்கும் உணர்வுகளிலிருந்து வருகிறது.  ஒவ்வொரு புலிவீரன் விதைக்கப்படும் பொழுதும், மற்ற வீரர்களிடம்   குறிக்கோளின் மீதான பற்று மேலும் உறுதியாகிறது..

மனிதனை இயக்குவது அவனது உணர்வுகளே. மனிதனின் பகுத்தறிவு என்பது அவனது உணர்வுகளுக்கு அடிமை என்று உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது [9]. மக்களை பகுத்தறிவு பேசி ஒன்று திரட்ட முடியாது, அவர்களை உணர்வுகளின் மூலமே ஒன்று திரட்ட முடியும். அந்த உணர்வுகளை உருவாக்குவதில் சடங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புலிகளுக்கும் மக்களுக்கும் மாவீரர் சடங்குகள் அந்த உணர்வை அளித்து அவர்களை வீரியமுடன் செயல்பட வைத்தது.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க மக்களை ஒன்று கூட்ட முடியாமல் போவதற்கு,   தமிழர் என்ற உணர்வை அளிக்கும்   சடங்குகள் இல்லை என்பது ஒரு முக்கிய காரணம். சாதி மதங்கள் அவர்களுக்கென்று பல சடங்குகள் வைத்திருக்கிறார்கள், அதனால் மக்களை எளிதாக சாதி மதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்று திரட்ட முடிகிறது. தமிழருக்கென்று இருக்கும் ஒரே சடங்கு பொங்கல்தான். அந்த சடங்கு உருவாக்கிய உணர்வினால்தான் மக்கள் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு வரலாறு காணாத மக்கள் போராட்டம் நடந்தது. மக்கள் சிந்தித்து செயல்படுவதில்லை, உணர்வுகளின் உந்துதலினால் செயல்படுகின்றனர் என்ற உண்மையை உணர்வது முக்கியம். மாவீர்ர் நாளை ஒவ்வொரு தமிழரும் அனுசரிப்பதற்கு வழி செய்யவேண்டும். மேலும் வருடம் முழுவதும் தமிழர் என்ற உணர்வைக் கொண்டுவர மேலும் பலசடங்குகள் உருவாக்கப்படவேண்டும்.  அவ்வாறு செய்தால் மக்களை ஒன்று திரட்டி சிக்கல்களைத் தீர்ப்பது எளிதாகும்.

  1. வரலாற்று சாயல்:

ஒரு தேசத்தின் வரலாறு என்பது ஏதோ பழையது, எந்தவொரு விளைவும் இல்லாதது அன்று.  ஒரு தேசத்தின் இறந்தகால வரலாறுதான்  தேசியத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கிறது. மக்கள்   நிகழ்கால சூழ்நிலையையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தை படைக்கிறார்கள். முன்னோர்களின் பாரம்பரியம் வாழும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து அவர்களை ஆட்டுவிக்கிறது [11, 20].  எப்பொழுது தேசிய இயக்கங்கள் வரலாற்றை சாதகமாகப் பயன்படுத்துகிறதோ, அப்பொழுதே மக்களின் ஆதரவு பெருகும். இதை உலகின் அனைத்து தேசிய இயக்கங்களிலும் காணலாம். மனிதர்களின் உளவியல் அவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது [12].

புலிகள் வரலாற்றின் முழுபலத்தைக் கொண்டு இயக்கத்தை கட்டி எழுப்பினார்கள். அவர்கள் தமிழர் வரலாற்றில் யாரும் படைக்கமுடியாத புதுமைகளைப் படைத்த இயக்கம் என்றாலும், அவர்கள் பழமையின் சாயலில் கட்டி எழுப்பப்பட்ட இயக்கம்:

  • புலி என்பதே சோழர்களிடம் இருந்து வந்தது.
  • உயிர்க்கொடை என்பது வரலாற்றில் “நவகண்டம்” என்பதிலிருந்து வந்தது.
  • வீட்டுக்கு ஒருவர் போருக்கு அனுப்பும் முறை
  • பெண்கள் படைகளில் சேர்ந்து போரிடுவதற்கு, பண்டைய வரலாற்றில் பெண்கள் முறத்தால் புலியை விரட்டிய கதையை உதாரணமாக  எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு வீரத்தாய் கணவனையும், தந்தையையும் போரில் பலிகொடுத்தபின், தனது சிறு மகனையும் போருக்கு அனுப்பி, அவன் மார்பில்  வேல் பாய்ந்து வீரமரணம் அடைவதைக் கண்டு பூரிக்கும் கதை.  இதுபோன்ற வீரத்தாய்கள் ஈழத்தில் ஏராளம்.
  • போரில் இறந்தவர்களுக்கு நடுகல் இட்டு வழிபடுவதை அடிப்படையாக வைத்து துயிலும் இல்லங்கள் கட்டி மாவீரர் நாள் அனுசரிக்கப் பட்டது.

இவ்வாறு வரலாற்றைப் பயன்படுத்தியதனால்தான் புலிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகி மாபெரும் இயக்கமாக வளர்ந்தார்கள். மேலுள்ள வரலாற்றுப் பயன்பாட்டை நீக்கிவிட்டால்,  புலிகள் இயக்கம் வெற்றி பெற்றிருக்குமா என்பதே ஐயம்தான். ஒருவகையில் புலிகள் இயக்கம் என்பதே பண்டைய தமிழர் வரலாற்றின் மீளுருவாக்கம் என்பதாகவே பார்க்கவேண்டியுள்ளது. இப்பொழுது புலிகள் பண்டைய வரலாற்றை விஞ்சி புதிய வரலாறுகளை படைத்திருக்கிறார்கள்.

நாம் ஒருவகையில் வரலாற்றின் பிடியில் சிக்கி  இருக்கும் கைதிகள். வரலாறு காலத்திற்கு ஏற்ப  நம்மை செதுக்கி வழிநடுத்துகிறது. அவ்வாறான வரலாற்றின் வழிநடத்தலில் செல்லும் இயக்கங்களே எதிர்காலத்திலும் வெற்றி பெரும். ஒன்றை மற்றும் உறுதியாகக் கூறலாம்: எதிர்கால தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் புலிகளின் சாயலிலேதான்  கட்டியமைக்கப்படும்; அவர்கள் புலிகளின் சாதனைகளையும் விஞ்சுவார்கள்.

(குறிப்பு: புலிகளின் சாயல் கொண்ட இயக்கம் என்றால், அது கண்டிப்பாக ஆயுத  இயக்கமாக இருக்கவேண்டிய  அவசியம் இல்லை. அதே புலிகள் இயக்கத்தில்தான் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனும் இருக்கிறார்.)

  1. சுயநல ஒழிப்பு:

ஒரு சமூகத்தில் கூட்டு ஒத்துழைப்பை  உருவாக்குவது  என்பது அவ்வளவு எளிதல்ல. இதுவரை பார்த்த  பல்வேறு உளவியல் மற்றும் ஒழுக்க விதிகளைப் பின்பற்றியே மக்களை ஒத்துழைக்க வைக்க முடிகிறது. இவ்வளவு செய்தும்  அந்த ஒத்துழைப்பு நிரந்தரமல்ல. அது எப்பொழுதும்  எளிதில் சிதையும்  அபாயத்திலேயே இருக்கிறது [13].

இந்த ஒத்துழைப்பு சிக்கல் மனித சமூகத்திற்கு மட்டும் இருப்பதல்ல. இது பரிணாம வளர்ச்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் ஒத்துழைத்து வேலை செய்வதால்தான் நாம் உயிரோடிக்கிறோம். ஒரே ஒரு செல் ஒத்துழைக்காமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அதுதான் புற்றுநோய் என்பது. அது குட்டிப்போட்டு பல்கிப் பெருகி நம்மைக் கொன்றுவிடுகிறது. அதற்குத் தீர்வு  புற்றுநோய் கொண்ட செல்களைக் கொல்லவேண்டும்,  இல்லை அவ்வுறுப்பை அறுத்தெறியவேண்டும். நமது உடல்களில் உள்ள ஒவ்வொரு செல்லும் தன்னை சுற்றியுள்ள செல்களைக் கண்காணிக்கும். ஏதாவது ஒரு செல் ஒழுங்காக வேலை செய்யவில்லை எனில், அதை சுற்றியுள்ள செல்கள் கொன்றுவிடுகிறது (Apoptosis). சிலநேரம் புற்றுசெல்கள் இதிலிருந்து தப்பித்துவிடுவதால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது. மனித சமூகமும் இதுபோன்ற நிலையிலேயே இருக்கிறது. ஒருவர் சுயநலத்துடன் செயல்பட்டால், அந்த சுயநலம் மற்றவர்களிடம் புற்றுநோய் மாதிரி பரவ ஆரம்பிக்கிறது. முடிவில் அது முழு சமூகத்தையும் விழுங்கிவிடுகிறது.

புலிகள் ஓர் அதி ஒத்துழைப்பான இயக்கத்தைக் கட்டி எழுப்பினாலும், அதில் சுயநலத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் அது இயக்கத்தை விரைவில் வலுவிழக்கச்செய்யும். இதை பிரபாகரன் அவர்கள் மிகநன்றாகவே உணர்ந்தவர். அவருக்கு இருந்த அதிகாரத்தைக் கொண்டு தன் மூன்று பிள்ளைகளில் ஒருவரையாவது வெளிநாட்டில் தப்பிக்க வைத்திருக்க முடியும். ஏன் செய்யவில்லை? ஏனென்றால் அதுதான் இயக்கத்தில் தோன்றும் புற்றுநோய்க்கு ஆரம்பமாக இருந்திருக்கும். அவரின் நேர்மை கேள்விக்குள்ளாகும், மற்றவர்களுக்கும் சுயநலம் தலைதூக்கும், பின்பு இயக்கம் அழிவதற்கு எதிரிகூடத் தேவையில்லை.  ஒத்துழைப்பை உருவாக்குவது கடினமானது, அதைப் பேணிக்காப்பது அதைவிட கடினமானது.  ஒத்துழைப்பை தொடர் கண்காணிப்பின் மூலமே காக்கமுடியும். ஒத்துழைக்காதவர்களை  ஓர்  அமைப்பில் இருந்து வெளியேற்றாவிட்டால், அந்த அமைப்பு வெகுவிரைவில் புற்றுநோய் பிடித்து செயல் இழக்கும்.

புலிகள் பல சாதனைகளைப் படைத்ததற்கு இறுதிவரை அந்த ஒத்துழைப்பை இயக்கத்தில் பேணியதே காரணம். ஒரு கேள்வி எழலாம்: ஏன் இயக்கம் இறுதியில் பிளவுண்டது? எனது அனுமானம் என்னவென்றால் போர் நிறுத்தம் புலிப்பண்பாடு கொண்ட புலிகளையும்  நண்டுப்பண்பாடு கொண்டவர்களையும் பொதுவில் கலந்தது. இந்த கலப்புதான் இயக்கத்தில்  சிலருக்கு  சுயநல புற்றுநோயை உருவாக்கி இயக்கத்தை பிளவுபடுத்தியது. ஒரு புலியைச் சுற்றி நண்டுகளாக இருந்தால், அந்த புலியும் நண்டாக மாறும் வாய்ப்புகள் அதிகம். அதுதான் நடந்தது.

என்னுடைய பார்வையில் இதுவரை பார்த்த ஏழு செயல்பாடுகள்தான் புலிகளை ஒரு பலம் வாய்ந்த இயக்கமாகக் கட்டி எழுப்புவதற்கு அடித்தளமிட்டது. இவை  எனக்குத் தெரிந்தவை மட்டுமே. புலிகளின் முழு செயல்பாடுகளை ஆழமாக ஆராய்வதின்  மூலமே நாம் மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.  நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒன்றை உணரலாம். இந்த ஏழும் தனித்து நிற்பவை அல்ல; அவை ஒன்றை ஒன்று வலுப்படுத்தி சேர்ந்து இயங்கும்  ஒரு நெறி முறை (moral system), இதில் ஒன்று செயலிழந்தாலும் இயக்கம் பெரிதாக பாதிக்கப்படும்.

Moral systems are interlocking sets of values, virtues, norms, practices, identities, institutions, technologies, and evolved psychological mechanisms that work together to suppress or regulate self-interest and make cooperative societies possible. [9]

பிரபாகரன் அவர்கள் மாபெரும் படைத் தலைவர், இராணுவ உத்திகளில் சிகரம் தொட்டவர், இரண்டு நாட்டு இராணுவங்களை பலமுறை தன்னந்தனியாக எதிர்த்து  தோற்கடித்தவர் என்பது உலகறிந்தது. ஆனால் அவரின் இன்னொரு மாபெரும் சாதனை கண்டு கொள்ளப்படவில்லை. அதுதான் அவரின் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாக இருந்த புலிப் பண்பாடு.  .

பண்பாடு என்பது இராணுவ அமைப்புகளுக்கும் மட்டுமல்ல, மனிதர்களை உள்ளடக்கிய எந்த ஒரு சமூக அமைப்பிற்கும்  முக்கியமானது. ஒரு அமைப்பின் பண்பாடுதான் அந்த அமைப்பின் வெற்றிக்கு அடித்தளமிடுவது. எந்த ஓர் அமைப்பிலும்  மிகப்பெரிய மாற்றத்தைக்  கொண்டுவர நினைப்பவர்கள் முதலில் மாற்றுவது பண்பாட்டைத்தான்.  அவ்வாறான  பண்பாடு மாற்றம் மூலமே மக்களிடமுள்ள  முழு ஆற்றலை வெளிக்கொணர முடியும்.

Greatest shapers don’t stop at introducing originality into the world; they create cultures that unleash the originality in others – Adam Grant [14]

பிரபாகரன் அவ்வாறான ஒரு புலிப்பண்பாட்டை உருவாக்கியே, நண்டுகளை எடுத்து உலகம் வியக்கும் புலிகளாக மாற்றிக்காட்டினார். இதுதான் அவர் படைத்த புதுமைகளில் ஒரு  முக்கியமான புதுமை.

அடுத்து என்ன?

இறுதிப் போருக்குப்பின் நடந்த ஈழம் சார்ந்த போராட்டங்கள் விரல்விட்டு என்னும் அளவிலேயே இருக்கிறது. “ஒரு அடியிலேயே எதிரியை மட்டுமல்ல உலகத்தையே கிடுகிடுக்க வைத்த ஒரு இனத்தின் போராட்டம் எவ்வளவு வேகமாக தன்னை உள்ளிழுத்துக் கொண்டுள்ளது” என்று ஆய்வாளர் பரணி கிருஷ்ணராஜனி குறிப்பிட்டிருந்தார் [6]. புலிகளால் கிடுகிடுவென வளர்ந்து மாபெரும்  சாதனைகளை நிகழ்த்த முடிந்தது, ஆனால் அதே தமிழினத்தால் புலிகள் சாதித்ததில் ஒரு சதம் கூட பத்தாண்டுகளில் செய்யமுடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம்  என்னவென்றால் புலிகளுடன் 2009-இல் புலிப்பண்பாடும் அழிந்தது. இன்று இருப்பது நண்டுப்பண்பாடு மட்டுமே. இதற்கு எந்த ஒரு தனிமனிதனும் காரணம் அல்ல. பிழை பண்பாட்டில்தான் உள்ளது.

இன்றைய தமிழ்ச்சமூகம் ஓர் ஒத்துழைப்பற்ற சுயநல நண்டுச் சமூகம். இதை  வைத்துக்கொண்டு ஓர் உருப்படியான  உள்ளூர் ஆட்சி செய்யும்  அமைப்பைக்கூட உருவாக்கமுடியாது. இதிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரே வழிதான் இருக்கிறது. அதிலிருந்து விலகி ஓர் அதி ஒத்துழைப்பான புலிப்பண்பாட்டு சமூகத்தை உருவாக்கி, சிறிது சிறிதாக நண்டுகளைப் புலிகளாக மாற்றி முழுச் சமூகத்தையும் புலிப்பண்பாட்டில் கொண்டு வருவதே வழி.  அவ்வாறுதான் புலிகள் சிறு குழுவாக இருந்து மாபெரும் இயக்கமாக வளர்ந்தார்கள்.  நபிகள்  ஆரம்பித்த சிறிய குழு உலகலாவப் பரவி மாபெரும் நாகரீகமாக  மாறியதும் இவ்வாறே [15]. கிறித்தவமும் அவ்வாறே முழு ரோமப் பேரரசை விழுங்கியது [16]. அவை அதி ஒத்துழைப்பான சமூகங்களாக இருந்ததனால்தான் இது சாத்தியமானது.  ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால்,  புலிகள் உருவாக்கிய பண்பாடு மற்ற அனைத்தையும் விழுங்கும் மதசார்பற்ற அதியுயர் ஒத்துழைப்பு பண்பாடு, இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்குத் தேவையான பண்பாடு  (மதசார்பற்ற என்றால் கடவுள் மறுப்பு  அல்ல, அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது ).   புலிகள் இராணுவ உத்திகளில் உலகில் முன்னோடிகளாக இருந்தார்கள். புலிப்பண்பாட்டை உள்வாங்கிய தமிழ்ச்சமூகம் உலகின் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருக்கும். மொத்தத்தில் அனைத்திலும் புலியாக இருப்பார்கள். நோபல் பரிசுகளில் யூதர்களை விஞ்சினாலும் ஆச்சரியமில்லை. அனைத்திற்கும் தேவையானது ஒழுக்கம், அதில் புலிப்பண்பாட்டை யாரும் விஞ்சமுடியாது.

புலிகள் புலிப்பண்பாட்டை  ஒரு இராணுவ அமைப்பிற்கு உருவாக்கினார்கள். ஆனால் அதை பொதுச் சமூகத்திற்கு ஏற்ப மாற்றுவது என்பது கடினமான வேலை இல்லை. எதிரிகளை கிடுகிடுக்க வைத்த புலிப்பண்பாட்டால் ஒன்றுக்கும் உதவாத நண்டுபண்பாட்டை ஒழித்து மக்களை புலிப் பண்பாட்டிற்குள் இழுப்பது என்பது ஒரு கடினமான காரியமே இல்லை. அதுவும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான  மக்கள் தொகையினர் புலிகளை தெய்வங்களாக பார்க்கும்பொழுது, இது செய்து முடிக்கக்கூடிய காரியமே.  மக்கள் நண்டுப்பண்பாட்டில் வேறு வழி இல்லாமல்தான்  இருக்கிறார்கள். ஓர் அதி ஒத்துழைப்பான மாற்று பண்பாடு இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து இணைவார்கள். அவ்வாறுதான் புலிப்பண்பாடு முழு சமூகத்தையும் விழுங்கவேண்டும். அவ்வாறுதான் ஒத்துழைப்பைப் பெருக்கும்  மதங்களும் வளர்ந்தன. பரிணாமம் என்பது போட்டி மட்டுமல்ல, ஒத்துழைப்பும் சேர்ந்ததுதான் [19]. எந்த பண்பாடு நன்றாக ஒத்துழைப்பைப் பெருக்கி பலம் பெறுகிறதோ, அவை பரிணாமப் போட்டியில் வெல்கின்றன.

இது போன்ற பண்பாட்டு மாற்றத்திற்கு ஒரு நல்ல உதாரணம் சப்பானியர்கள்தான். அன்றைய சப்பான் பல வர்க்க வேறுபாடுகளுடன் ஒருவித சாதிக் கட்டமைப்புடன் இருந்தது. படை வீரர்களான சாமுராய்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர்.  இது நவீன சப்பானை உருவாக்க பெரிய தடங்கலாக இருந்தது. வர்க்க வேறுபாடுகளை ஒழித்து நவீன சப்பான் கட்டி அமைக்கப்பட்டது என்று ஏற்கனவே பாடம்-1 -இல் பார்த்தோம் [17]. சாமுராய்கள் ஒழிக்கப்பட்டாலும், சாமுராய்களின் ஒழுக்கமும் பண்பாடும் ஒழிக்கப்படவில்லை. மாறாக அதை முழு சப்பானிய சமூகமும் உள்வாங்கிக்கொண்டது. இப்பொழுது உள்ளவர்களிடம் இரண்டு கத்திகள் இல்லை, ஆனால் ஒவ்வொருவரின் உள்ளுக்குள் ஒரு சாமுராய் இருக்கிறார். உதாரணாமாக ஆழமான அறிவியல் கருத்துக்களை கொண்ட ஒரு சப்பானியரை உற்று நோக்கினால், அவருக்குள் ஒரு சாமுராய் தெரிவார் என்கிறார் நிடோபே. இவ்வாறு அவர்கள் சாமுராய்களின் ஒழுக்கத்தை உள்வாங்காவிட்டால்,  நவீன சப்பான் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே.

Scratch a Japanese of the most advanced ideas, and he will show a samurai.[18]

அதேபோல இரண்டாம் உலகப்போரில் சப்பான் சரணடையும் நிலை ஏற்பட்டபொழுது, சரணடைவதில் விருப்பமில்லாத இராணுவ உயர் அதிகாரிகள் சாமுராய்களைப் போல தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைந்தனர் [21]. சாமுராய்களின் பண்பாடுதான் அவர்களை இன்றும் உள்ளிருந்து இயக்குகிறது.

ஒரு சமூகம் தனக்கு அளிக்கப்பட வரலாற்றைக் கொண்டே அடுத்த கட்டத்திற்கு நகரும் [11,12]. இதை உலகில் அனைத்து  நாடுகளின் வரலாற்றிலும் காணலாம். தமிழினத்திற்கு புலிகளின் வரலாறு கிடைத்துள்ளது. இதை நிராகரித்துவிட்டு சமூகம் எதையும் செய்யமுடியாது. தமிழ்த்தேசியம்  புலிகளை உள்வாங்கியே அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும்.   ஆனால் எதிரிகளுக்கு இது நன்றாகவேத் தெரியும். அதனால்தான்  எதிரிகள் எப்படியாவது புலிகளின் வரலாற்றை தமிழர்களிடமிருந்து மறைத்து அழித்துவிடவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்கள்.

சப்பானியர்கள் எப்படி சாமுராய்களின் பண்பாட்டை  உள்வாங்கி அனைவரும் சாமுராய்கள் ஆனோர்களோ, அதுபோல தமிழர்கள் அனைவரும் புலிப்பண்பாட்டை  உள்வாங்கி புலிகளாக மாற வேண்டும். அதுதான் தமிழ்த்தேசியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பலமான அடித்தளமாக அமையும். புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் எதிரிகளுக்கும்,  பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என்று ஒரு விடுதலை இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவோருக்கும்,  முழுச்சமூகமும் புலிகளாக மாறி நிற்பதுதான் சரியான பதிலாக அமையும்.

பி.கு 1: உங்கள் கருத்தை கீழே கருத்துப் பகுதியில் தெரிவித்தால் உதவியாக இருக்கும்

பி.கு.2: புலிகள் எந்த தவறும் செய்யாத இயக்கம் என்று நான் கூறவில்லை. இதை ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவு படுத்தியே வருகிறேன். அவர்களிடம் இருந்து என்ன கற்கலாம் என்பதுதான் எனது கட்டுரைகளின் நோக்கம்.

உசாத்துணை:

  1. Strategy, Liddel Hart
  2. Hudson, Rex A. “The sociology and psychology of terrorism: Who becomes a terrorist and why?.” Library of Congress Washington Dc Federal Research Div, 1999.
  3. Kruglanski, Arie W., et al. “The psychology of radicalization and deradicalization: How significance quest impacts violent extremism.” Political Psychology 35 (2014): 69-93.
  4. Battle, Stephen L. Lessons in Legitimacy: The LTTE End-Game of 2007-2009. NAVAL POSTGRADUATE SCHOOL MONTEREY CA DEFENSE ANALYSIS DEPT, 2010.
  5. பரணி கிருஷ்ணரஜனி, https://www.facebook.com/parani.krishnarajani/posts/2321748251211367
  6. பரணி கிருஷ்ணரஜனி , தமிழின அழிப்பு / பத்து வருடங்கள் / எதிர்ப்பு அரசியல் https://www.facebook.com/parani.krishnarajani/posts/2337911159595076
  7. Richerson, Peter J., and Robert Boyd. Not by genes alone: How culture transformed human evolution. University of Chicago press, 2008.
  8. Csikszentmihalyi, Mihaly. “The evolving self.” (1994).
  9. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
  10. Rappaport, Roy A. Ritual and Religion in the Making of Humanity. Vol. 110. Cambridge University Press, 1999.
  11. Smith, Anthony, and Anthony D. Smith. Nationalism and modernism. Routledge, 2013.
  12. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
  13. Nowak, Martin, and Roger Highfield. Supercooperators: Altruism, evolution, and why we need each other to succeed. Simon and Schuster, 2011.
  14. Grant, Adam. Originals: How non-conformists move the world. Penguin, 2017.
  15. Wright, Robert. The evolution of God: The origins of our beliefs. Hachette UK, 2010.
  16. Stark, Rodney. The triumph of Christianity: How the Jesus movement became the world’s largest religion. Harper Collins, 2011.
  17. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
  18. Nitobe, Inazō. Bushido, The soul of Japan: An exposition of Japanese thought. GP Putnams̓ sons, 1905.
  19. Wright, Robert. Nonzero: The logic of human destiny. Vintage, 2001.
  20. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்
  21. Seppukku Suicide, Encyclopaedia Britannica, https://www.britannica.com/topic/seppuku
  22. Pentland, Alex. Social physics: How good ideas spread-the lessons from a new science. Penguin, 2014.
  23. Vogl, Charles. The art of community: Seven principles for belonging. Berrett-Koehler Publishers, 2016.

Sethu

நந்திக்கடல் -மேரி கொல்வின்.

” ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு சந்தேகத்திற்கிடமானது.
அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.

நடேசன் தமது பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்று கூறினார்.

நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது.

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.
அவர்கள் போனார்கள்.

ஆனால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்கே இந்த தவறு நடந்தது? விரைவில் கண்டுபிடிப்பேன்.” #மேரிகொல்வின்/ BBC

ஆனால் மேரி கொல்வினும் சிரியாவில் கொல்லப்பட்டுவிட்டார்.

இது ‘அவர் ஏன் கொல்லப்பட்டார் ?’என்ற கதையின் பின்புலம் மட்டுமல்ல, போராடும் தேசிய இனங்கள் அரச பயங்கரவாதத்திடம் ‘சரணடவதிலுள்ள’ ஆபத்துக்கள் குறித்த – அந்த அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை கட்டிக் காக்கும் உலக ஒழுங்கு குறித்த எச்சரிக்கை மற்றும் பொறிமுறைகளை வகுத்த ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள் உருவான கதையின் பின்புலமும் இதுதான்.

00000000

“ஆயுதங்களை கைவிடுதல் என்பது ஒரு வகையில் சரணடைவுதான், ஆனாலும் என்னிடம் பேசிய நடேசன் ‘சரணடைவு’ என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார் – அதில் இறுக்கமாகவும் இருந்தார்”. #மேரிகொல்வின்/ BBC

மேரி கொல்வின் தமிழின அழிப்பின் ஒரு அனைத்துலகச் சாட்சி மட்டுமல்ல, புலிகள் தமது ‘மவுனத்தை’ ஒரு கோட்பாட்டுருவாக்கம் செய்யும் முனைப்பில் இருந்ததற்கான வரலாற்று சாட்சியும் கூட..

கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே புலிகள் குறியாக இருந்தார்கள் . ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.

இதுவே பின்னாளில் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக கருத்துருவாக்கம் பெற்றன.

Parani Krishnarajani

உலக தாய்மொழி தினம் !

  மாசி 21 ம் திகதி உலக தாய்மொழிதினம். மொழி ஒரு கருவி. மனிதன் மொழிகொண்டுதான் வாழ்கின்றான். மொழியால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றான். மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை. மூச்சைப் போல் மொழியும் முக்கியம்.

பேச்சைப் போல் அதில்உள்ளுறைந்து வாழ்வின் வழியை நமக்குக் காட்டும் தாய்மொழி அதைவிட முக்கியம். அறிதலுக்கும் தெரிதலுக்கும் புரிதலுக்கும் உணர்தலுக்கும் ஆராய்தலுக்கும் காரணமான உயிர் ஊடகம் மொழிதான். மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக் காக்கும் மொழி தாய்மொழி.

தமிழ்க்குடியின் நீண்ட வரலாறும் அதன் தொன்மையும் தொடர்ச்சியும் நம் தாய்மொழியில்தான் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. ‘5000 ஆண்டு பழமை உடைய ஹராப்பா, மொகஞ்சாதரோ புதைபொருட்களில் இடம்பெற்றுள்ள உருவ எழுத்துகள் தமிழ் எழுத்துகளே’ என அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் எழுத்துமொழி மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக்கொண்டால், தமிழ்ப் பேச்சுமொழி ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று புரிந்துகொள்ளலாம்.

திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாகத் திகழ்வது தமிழ்தான் என்றும், தமிழில் இருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின எனவும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவின் வளர்ச்சி தாய்மொழியால் மட்டுமே சாத்தியம். தாய்மொழியே நம் அடையாளம், பண்பாட்டின் நீட்சி. சிந்தையில் விந்தையை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. மக்களால் பேசப்படாத மொழி மரித்துப் போகிறது. உலகில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து அழிந்துபோகிறது. மொழியின் உயிர்ப்பு மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

நோபல்பரிசு பெற்ற தாகூரின் ‘கீதாஞ்சலி’ அவர் தாய்மொழியான வங்கமொழியில்தான் முதலில் எழுதப்பட்டது. மகாத்மா காந்தி சுயசரிதையை, தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார். நம் சிந்தனைகளை தாய்மொழியில் மட்டுமே தங்குதடையில்லாமல் நம்மால் தரமுடியும்.

மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி, மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இந்த நுாற்றாண்டிலும் இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. உலக நாடுகளில் 90 மில்லியன் மக்களாலும் பேசப்படும் மொழியாக நம் அன்னைத் தமிழ் திகழ்கிறது.

ஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும் சிந்திக்கவும் கருத்துக்கள பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உகந்ததும் தாய்மொழி எனலாம்.

ஒருவன் தன்கருத்துக்களை முதன்முதலில் வெளியிடப்பயன்படுத்தும் மொழி அவனின் தாய்தந்தையரின் மொழியாக இருக்கவேண்டுமென்பதில்லை. முதன்முதல் அவன் பேசக்கற்றுக்கொண்ட மொழியாகவும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சில காரணங்களினால் ஒரு மனிதன் முதன்முதலில் பேசப்பழகிய மொழியை முற்றாக மறந்துவிடவும்கூடவும். எனவேதான் பெற்றோரின் தாய்மொழி பிள்ளைகளுக்கு வேற்றுமொழியாகஅமையலாம்.

எனவேதான் யுனெஸ்கோ தாய்மொழி என்றால் என்ன என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றது.

(The use of vernacular languages in Education ,Report of the UNESCO ,Paris 1953)

1.பெற்றோர்களுடைய தாய்மொழியும் பிள்ளைகளின் தாய்மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை.

2.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழியும் ஒருவனுக்குத் தாய்மொழியாக அல்லது தாய்மொழிகளாக அமையும்.

3.ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழி மாறிக்கொண்டே போகலாம்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்

பெற்ற தாயைவிட சிறந்தது தாய்மொழியாகும். எந்நாட்டவராக இருப்பினும் அவரவர் தாய் மொழியிலேயே கல்வி கற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம் மாகாணம். நாடு கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு தாய்மொழி இருக்கும்.

இவற்றின் தனித்தன்மை பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும் அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பெப். 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பெப்.21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ் மொழி 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும் புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ் செம்மொழி ஆக்கப்பட்ட பின் ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ் வானவியல் சாஸ்திரம் கணிதம் குறித்த சொற்கள் பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல் பெயர்களை தமிழில் சொல்ல முடியவில்லை என கூறமுடியாது. தமிழனைப் போல அகம் புறம் என வாழ்க்கையை பிரித்துஇஅதன்படி வாழ்ந்தவர்கள் வேறு நாட்டில் கிடையாது.

உலகில் முன்னிலையிலுள்ள 20 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஜரோப்பியமொழிகளே உலகின் அரைவாசிப்பேர் பேசுகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.

உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6200 ஆக இருந்த மொழிகள் இன்று 3000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்த சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும். தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை குழந்தை கற்றுக் கொள்கிறது.

தாய்மொழியை அறிமுகப்படுத்துவது தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள் வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே குழந்தைகளால் கற்றுக் கொள்ள முடியும்.

மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான நமது மொழியின் அருமை தெரியாமல் பிறமொழி மோகத்தில் தமிழை தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை இனிமையை மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.

தாய்மொழி வழி கல்வியின் சிறப்பு

தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்று கூறுவதனால் பிற மொழிகளைக் கற்க வடாது என்பது பொருள் அல்ல. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.

தாய்மொழி கல்வி குறித்த காந்தியடிகள்

தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல ஜெகதீஸ் சந்திரபோஸ்களும் பி.சி. ராய்களும் தோன்றியிருப்பார்கள் என்று காந்தியடிகள் கூறுகிறார். மனிதர்களின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே சிந்தனை வளர்ச்சிக்கு தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது.

தாய்மொழியில் அறிவியல் கல்வி

ஜப்பான் ஜெர்மன் ரஷ்யா போன்ற அயல்நாட்டு மக்கள் அந்நிய மொழியை புறக்கணித்துதாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தாய் மொழியிலேயே கல்வி பயின்றதால்தான் இன்று உலக மேதைகளாக இருக்கிறார்கள்.

புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்குவதிலிருந்து கோள்களை ஆராய்ச்சி செய்வது வரை அவர்கடள் உலக அரங்கில் புகழ் பெற்றள்ளனர்.

உலகிலுள்ள பிற நாடுகளில் எல்லாம் அறிவியலை அவரவர் தாய்மொழியிலயே கல்வி பயின்றதால்தான் இன்ற உலக மேதைகளாக இருக்கின்றனர். புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்குவதிலிருந்து கோள்களை ஆராய்ச்சி செய்வது வரை அவர்கள் உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளார்கள்.

தாய்மொழியில் அறிவியலைப் போதிப்பதற்கான கலைச் சொற்கள் அதிகம் இல்லை என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். அது தவறான கூற்று. புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்களை தமிழில் உருவாக்க வேண்டும்.

உலகிலுள்ள பிற நாடுகளில் எல்லாம் அறிவியலை அவரவர் தாய்மொழியிலேயே கற்கின்றனர். அவர்கள் மொழியிலெல்லாம் அறிவியலுக்கான கலைச் சொற்கள் இருக்கும் போது உலகின் தொன்மை மொழியான உயர்தனிச் செம்மொழியான நம் தாய்மொழியில் கலைச் சொற்களை உருவாக்குவது கடினமல்லவே.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதியார்.கூறியுள்ளார். பல மொழிகளை கற்றறிந்தவர் பாரதியார். அவர்கள் கற்ற அத்தனை மொழிகளிலும் இனிமை உள்ளது என்று பாரதி கூறியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகிலுள்ள மற்ற நாடுகள் தாய்மொழியில் கல்வி கற்று சிறந்த விளங்குவிது போல நாமும் தாய்மொழியில் கல்வி கற்று சாதனைகள் பல படைக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வி

தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் தாங்கள் பேசுவதுடன் அல்லது சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். அதனால் அவர்கள் எளிதில் கற்கின்றனர். அதனால் அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதம் வேறு மொழியில் கற்பவர்களை விட மாறுபடுகிறது. இவை அனைத்தும் கற்கும் திறனை நாளடைவில் அதிகரிக்கச் செய்கிறது. இது கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் கற்றுத் தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு சரியாக போதிக்க முடிகிறது. இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கை கூடுகிறதுஇ பேச்சாற்றல் வளர்கிறது மற்றும் ஆக்கத்திறன் கூடுகிறது.

இதனை உணர்ந்துதான் தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.

தாய்மொழிக் கல்வி பற்றி உநெஸ்கோ(UNESCO) அமைப்பு:

தாய்மொழியில் கல்வி பற்றி ஐ.நா. சபையின் உநெஸ்கோ – –UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC and CULTURAL ORGANISATION (UNESCO) அமைப்பு பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சில தகவல்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதலாவதாகத் தாய்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர். இது அனைத்து வயதினருக்கும் அளிக்கப்படும் கல்விக்கும் பொருந்தும்.

உநெஸ்கோ நிலைப்பாடான தாய்மொழியில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த உநெஸ்கோ பல கூட்டங்களை நடத்தி அதன்மூலம் பல தீர்மானங்களை அறிவித்துள்ளது. அந்த தீர்மானங்களின் தொகுப்பு:

  •  கல்வியின் தரத்தை உயர்த்த தாய் மொழியில் கல்வியை ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது.
  •  பள்ளிகளில் அனைத்து நிலைகளிலும் இரு மொழிகளில் அல்லது பன்மொழிகளில் கல்வியைக் கற்றுத்தர ஊக்கப்படுத்துவது.
  •  கலாச்சாரப் பரிமாற்றக் கல்வியில் மொழியை முன்னிறுத்துவது.

சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி:

மாசி 21, அனைத்துலகத் தாய்மொழி தினம்.

யுநெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது. எந்த மொழியைக் கற்றாலும்,எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான்.

தாய்மொழிக் கல்வி கற்பதனால் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி தவறான கருத்தாகும். ஏனெனில் தாய்மொழிக் கல்வி வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.தாய்மொழிக் கல்வி போதனையில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதுடன் அதன் மேம்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும்.

மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி அது மக்களின் கலாச்சாரங்களைத் தாங்கி நிற்கும் சாதனமாக உள்ளது. அது மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. தாய்மொழிக் கல்வியால் கலாச்சாரங்களை ஒட்டி கல்வி கற்க முடிகிறது. மக்கள் தங்கள் கலாச்சாரங்களைத் தழுவி வாழ்கின்றனர். இதனால் உலகில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்க முடிகிறது.

உலக நாடுகள் அனைத்தும் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்துள்ளன. நம் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் மொழி கல்வியை ஆதரித்தால் தான் ஒரு வலிமையான தலைநிமிர்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

மலையக செந்தமிழர் பேரவை

பன்னாட்டுத் தாய் மொழி நாள் – ஐயா பெ. மணியரசன்

————

பெப் 21 உலக தாய் மொழி நாள்.

மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.

அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட.

‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.

இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு அமைந்திருந்தது.

அதுதான் நாம் இதை இன அழிப்பு என்கிறோம் – பலியெடுக்கப்பட்ட உயிர்களின் கணக்கை வைத்து நாம் இதைக் கூறவில்லை..

ஐநா வின் சரத்துக்களும் இன அழிப்பை இந்த அடிப்படையில்தான் வரையறுக்கின்றன.

ஆனால் அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் பிரகாரம் ஐநா தமிழின அழிப்பு தொடர்பாக இன்று வரை கள்ள மவுனம் சாதிக்கிறது.

வங்க மொழிப் போராட்டத்தின் விளைவாக அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நாளை ஐநா பிரத்தியேகமாக அறிவித்திருக்கிறது.

ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளை முன்னிட்டு வருடா வருடம் வெவ்வேறு குறிப்பிட்ட கருதுகோள் அடிப்படையில் இந்த நாள் நினைவு கூரப்படுகிறது.

இந்த வருடத்தின் கருது கோள் அமைதியைக் கட்டியெழுப்பவும்/ நல்லிணக்கத்தைப் பேணவும் தாய்மொழிகள் அங்கீகரிக்கப்பட வேணும் என்கிறது ஐநா.
(Indigenous languages matter for development, peace building and reconciliation).

ஆனால் இன அழிப்பு அரசு இதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப் போவதில்லை என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இந்த நாளிலாவது தொடரும் இன அழிப்பை அம்பலப்படுத்தாமல் இன அழிப்பு அரசுக்குத் தொடர்ந்து முண்டு கொடுக்கும் நமது அரசியல்வாதிகளை என்ன செய்வது?

எல்லாம் காலக் கொடுமை.

எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும்.

Parani Krishnarajani

தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.

2009 பெப்ரவரி 20 ம் திகதி இரவு ‘தமிழீழம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு வான் கலங்கள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு வான்பரப்பை ஊடறுத்து பறந்து ‘சிறீலங்கா’ அரசுக்கு சொந்தமான இராணுவ – பொருண்மிய நிலைகள் மீது குண்டுகளை வீசுகின்றன.

இறுதியில் ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலை வேட்கையை உலகறித்துவிட்டு, அந்த இனத்திற்கேயுரிய தனித்துவமான கர்வத்தின் – அடங்காமையின் – சினத்தின் வெளிப்பாடாக எதிரி நாட்டு நிலைகள் மீது மோதி வெடிக்கின்றன.

தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.

எதிரிகளை விடுவோம் – வெளித் தரப்பையும் விடுவோம். ஆனால் இன்று நம்மவரே இந்த வரலாற்றை மறந்து பிதற்றுவது எத்தகைய அயோக்கியத்தனம்?

அந்த வான் தாக்குதல்களினூடாக எதிரியின் வல் வளைப்பை தடுத்து நிறுத்த முடியாது என்பது தலைவருக்குத் தெரியும். ஆனாலும் கட்டளையிட்டார்.

ஏனென்றால் தலைவர் இறுதிவரை வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்.

ஏனென்றால் இது தமிழீழத்தின் வரலாற்று தவறாக மட்டுமல்ல உலகெங்கும் போராடும் தேசிய இனங்களின் வரலாற்று தவறாக மாறிவிடும் அபாயத்தை அவர் முன்னுணர்ந்திருந்தார்.

எனவேதான் அடிபணிய மறுத்தார்.

இந்த சிந்தனையே ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.

Parani Krishnarajani

பார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…!

முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான்

ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் “என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?” என்று கேட்பார்களாம்.

இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் “இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது. கருத்தரித்த இந்த பெண் தினமும் இந்த இடத்தில் இருக்ககூடாது” என்று பார்வதியம்மா அங்கு செல்வதை தடுத்தார்களாம். ஆச்சரியமான தகவலாக அது இருந்தது. பின்பு நடந்தது உலகறிந்த வரலாறுதானே..

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் வன்னியிலுள்ள ஒரு நண்பர் இன்று பேசும்போது ஒரு கர்ப்பிணி தமிழ்பெண் அழிக்கப்பட்ட மாவிரர் துயிலுமில்லத்திற்கு அண்மையாக வெறித்து பார்த்துக்ககொண்டிருப்பதை தான் அடிக்கடி காண்பதாக குறிப்பிட்டார். மீண்டும் “வரலாறு” படைக்க மாவீரர்கள் கருக்கொண்டு விட்டார்கள். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல்..!!!

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை அவர்கள் விதைக்கதான் படுகிறார்கள்..!!!
எம் தேசியத் தலைவனின் தலைமையில் தமிழீழம் அமைவது உறுதி இதையாரும் மறுக்க முடியாது…!!!

Up ↑