Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2018

தமிழர் தாயகத்தில் சிறப்பாக நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒளிப்படத் தொகுப்பு


தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

சிறிலங்கா அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழர் தாயகத்தில், நேற்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவிடங்களிலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு-

முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தில்-

கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில் – விஸ்வமடு தேறாவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர்நாள்

முல்லைத்தீவு- அளம்பில் துயிலுமில்லத்தில்-

யாழ்ப்பாணம் -கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக –

கடற்புலி மாவீரர்கள் நினைவாக – முல்லைக்கடற்கரையில். மாவீரர்நாள்

அம்பாறை – கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில்-

மட்டக்களப்பு – வாகரை துயிலுமில்லத்தில் –

யாழ்.- உடுத்துறை துயிலுமில்லத்தில்- யாழ் பல்கலைக்கழகத்தில்  மாவீரர் நாள் நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் 

யாழ்.சாட்டி துயிலுமில்லத்தில்-

முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்-

யாழ். வல்வெட்டித்துறை மாவீரர் நினைவுத் திடலில்-

மட்டக்களப்பு- தரவை துயிலுமில்லத்தில் – 

மட்டக்களப்பு – தாண்டியடி துயிலுமில்லத்தில்-

மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்- மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் நாள் நிகழ்வு

மட்டக்களப்பு கோவில்குளம் உயர்தொழில்நுட்ப கல்லுரியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை  மாவீரர் நாள்

முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

முதலாவது மாவீரர் லெப்.சங்கர் எரியூட்டப்பட்ட இடத்தில் ஏற்றப்பட்டது பொதுச்சுடர்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் லெப். சங்கர் உடல் எரியூட்டப்பட்ட கீரைத்துரை சுடுகாட்டில் மாலை சரியாக 6.05க்கு விளக்கேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டளைத் தளபதி சங்கர், சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் படுகாயமுற்று குடல் சரிந்த நிலையில், மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மாலை மேதகு வே.பிரபாகரன் மடியில், மதுரை மண்ணில் உயிர் நீத்தார். சங்கர் வீரச்சாவடைந்த அதே நாளன்று இரவு விடுதலைப் புலிப் போராளிகள் மதுரை வந்து இராணுவ மரியாதையோடு தளபதி சங்கரின் பூத உடல் இதே கீரைத்துரை மயானத்தில் எரியூட்டப்பட்டது என்பது வரலாறு.

மாவீரன் சங்கர் மரணமடைந்த அந்த நாளைத்தான் மேதகு வே.பிரபாகரன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் புலிகளின் மாவீரர் தினமாக அறிவித்ததுடன், தனது மடியில் சங்கர், தலை வைத்து உயிர் நீத்த அந்த மாலை 6.05 மணிக்கு தனது மாவீரர் உரையை வாசிப்பதும் மயிர்கூச்செரிய வைக்கும் வரலாறு.

புதுச்சேரியில் மில்லர் அரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்.

மாவீரர் நாள் சோழமண்டலம் 

தாய்த் தமிழகத்தின் தஞ்சையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

லெப்.போசன் கல்லறை நிகழ்வு!

தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வு

27.2018 மாலை தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் எழுச்சியாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், ஓசூர், சென்னை, உள்ளிட்ட பல இடங்களில் நடந்தேறியது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவீரர்களின் ஈகங்களை போற்றியும் தமிழீழம் அடுத்த கட்ட செயல்வடிவ போராட்ட முன்னெடுப்புகளையும் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் முன்னிறுத்தி எழுச்சியுரையாற்றினார்.

அதேபோல் திருச்சி, குடந்தை உள்ளிட்ட இடங்களில் த.தே.பே. பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி நினைவேந்தல் உரையாற்றினர்.

விதைப்பதும் முளைப்பதும் கார்த்திகையே

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

   1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை….

மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

மேலும் பார்க்க ……………

**

**

**

தமிழ்த் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து அகண்ட தமிழ் இராட்சியம் அமைப்போம்

தமிழினம் தனது தலைவரின் பிறந்த தினத்தை மிகவும் உணர்வு பூர்வமாக உலகம் எங்கும் கொண்டாடி வருகின்றது. யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை, யாரும் இலவசங்கள் வழங்கவில்லை ஆனாலும் தமக்குள் இருந்து எழும் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாக இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வயது வேறுபாடின்றி தம் தலைவனை கொண்டாடுகின்றனர்.

தலைவரின் புகைப்படத்தை கைகளில் ஏந்துவதில் பெருமை கொள்கின்றனர். யாரை பயங்கரவாதி என சிங்கள தேசமும், இந்தியாவும், மேற்குலகமும் முத்திரை குத்தியதோ இன்று அந்த தலைவரின் பிள்ளைகள் கொண்டுள்ள எழுச்சியை கண்டு அனைத்துலகமும் ஆச்சரியமடைந்துள்ளது.

பிரபாகரன் என்ற நாமத்தை அழிக்க வேண்டும் என்பது சிங்கள இந்திய ஆதிக்க சக்திகளின் திட்டம் ஆனால் இன்று அந்த நாமம் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உயிர் மூச்சாக பரிணமித்துள்ளது.

உலகை ஆண்ட மூத்த இனம் ஒன்று அடிமைப்பட்டுக் கிடப்பதையும், தனது கண்முன்னால் தனது மக்கள் அடிமைகளாக வாழ்வதையும் கண்டு பொறுக்கமுடியாத பலகனாக களம் புகுந்த எமது தலைவரிடம் அன்று ஆயுதங்களும் இல்லை அவருக்கு ஆதரவுகளும் இல்லை.

ஆனாலும் தனி ஒருவராக இயக்கத்தை கட்டி எழுப்பி ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை தமிழ் இனத்துக்கு என ஒரு தேசத்தையும், அதற்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும், படைக்கட்டமைப்புக்களையும் கொண்டதாக மாற்றம் பெற வைத்தது என்பது அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பாகும்.

உலகத்தின் நான்காவது மிகப்பெரும் இராணுவத்தையும் உலக நாடுகளின் ஆதரவுடன் பல இலட்சம் படைகளைக் கொண்ட சிங்கள இராணுவத்தையும் கதிகலங்க வைத்த வீரமும், விவேகமும் தமிழ் இனத்தின் சரித்திரத்தை மீண்டும் எழுதிச் சென்றுள்ளது.

தமிழீழமும், தமிழகமும் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது, அதற்கு ஆதரவாக அனைத்துலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் களமிறங்கியுள்ளனர். மக்களின் எழுச்சியை அடக்கமுடியாத நிலையில் சிங்களமும், இந்தியாவும் உள்ளன.

தமிழனை ஆளவேண்டும் என்ற வேற்று இனத்தவனின் கனவுக்கு இந்த எழுச்சியானது சாவு மணியடித்துள்ளது. பிரபாகரன் என்ற நாமத்தை நாம் உச்சரிப்போமேயானால் எம்மை ஆள்வதற்கோ அல்லது எம்மை அணுகுவதற்கோ எதிரியும், துரோகியும் அச்சப்படுவான்.

தமிழகத்தில் தமிழ் மக்களின் ஆட்சி மலரும் போது தமிழ் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த தினம் அரச தினமாக அறிவிக்கப்படும் என்ற கருத்துக்களும் உண்டு. அவ்வாறு நாம் அறிவித்தால் அன்று எமது இனத்தின் விடுதலைக்கான கதவானது திறக்கப்படும் என்பதே யதார்த்தமானது.

எதிரிகளால் அழிக்க நினைத்த தமிழ் இனத்தின் வரலாற்றை மீண்டும் எழுதிய பெருமை மட்டும் எமது தலைவருக்கு உரியதல்ல, உலகம் எங்கும் சிதறிக்கிடந்த தமிழ் இனத்தை ஒரு அணியில் இணைத்த பெருமையும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கே உரித்தானது.

சாவதற்கு துணிந்துவிட்டால் சாதாரதண மனிதன் கூட சரித்திரம் படைக்க முடியும் என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்தியதும் அவர் தான். இன்று தமிழ் மக்கள் உலகத்தின் சரித்திர நாயகர்களை நினைவில் கொள்வதில்லை, அவர்களின் ஒரே நாயகன் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் மட்டுமே.

எம் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடுவதுடன், அவரின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு அகண்ட தமிழ் இராட்சியத்தை அமைப்பதற்காக நாம் அனைவரும் ஒருங்கியைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஈழம் ஈ நியூஸ்

பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க

பிரபாகரம் தமிழரின் வரம்
அண்ணன் பிறப்பால் நிறைந்தது
பாரினில் வாழும் தமிழரின் பலம்
உலக தமிழரின் ஒப்பற்ற தலைவன்
எங்கள் அண்ணன் பிரபாகரன்…

கரிகாலன் எங்கள் காவல் தெய்வம்
தமிழர் தன்மானத்தின் காப்பரண்
தமிழர் தேசத்தின் விடி வெள்ளி
எம் இனத்தின் வழிகாட்டி
புலிப்படையின் தேரோட்டி
அண்ணன் தானே எம் உயிர் மூச்சு…

ஆண்டுக்கு ஒரு முறை
“என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய
தமிழீழ மக்களே “….
என தொடங்கும் உங்கள்
உன்னதமான பேச்சு
எம் காதில் ஒலித்து பல வருடமாச்சு
ஆனாலும் காத்திருக்கிறோம்
உங்கள் வரவுக்காய் எம் தலைவா..

எம் இனத்துக்கு முகவரி தந்தவன்
அன்னை மொழிக்கு உயிர் கொடுத்தவன்
எம் தலைவனின் முப்படையும்
அப்படையின் போரியல் வல்லமையையும்
கண்டு பெரும் வல்லரசுகளையே
கதிகலங்கிட வைத்த வல்வை
மண்ணின் வல்லவன் எம் பகலவன்…

ஈழத்தில் தனியரசு ஒன்று அமைத்து
பெரும் வரலாறு படைத்த நாயகன்
எங்கள் தாயுமானவன் எம் தலைவன்
அவதரித்த புனித நாளில்
என் கண் கண்ட பிரபாகர கடவுளை
கரம் கூப்பி வாழ்த்துவோம்
எங்கிருந்தாலும் எமக்காய்
வாழ்ந்த உத்தமரே நீங்கள்
பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க …

யாழவன் ராஜன்

தங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

prabakaran birthday wishes 2015

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

praba birthday wish 2015

CLICK HERE FACEBOOK

 


prabakaran 1ஈழமறவர் / ஈழம் / பிரபாகரன் / வீரவரலாறு

யார் இந்த கரும்புலிகள் ? – காணொளி

தாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி

1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் !

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள்.ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.


1989 முதல் 2008 வரை மாவீரர் நாள் நிகழ்வில் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரைகள்

Leader V Prabakaran’s Heros day speeches from 1989 to 2008

காணொளியில்
எழுத்து வடிவம்
English Translation
2008 எழுத்து வடிவம் 2008
2007 எழுத்து வடிவம் 2007
2006 எழுத்து வடிவம் 2006
2005 எழுத்து வடிவம் 2005
2004 எழுத்து வடிவம் 2004
2003 எழுத்து வடிவம் 2003
2002 எழுத்து வடிவம் 2002
2001 எழுத்து வடிவம் 2001
2000

எழுத்து வடிவம்

2000
1999

எழுத்து வடிவம்

1999
1998 எழுத்து வடிவம் 1998
1997 எழுத்து வடிவம் 1997
1996 1996
1995
1994
1993
1992
1991
1990
1989

 

CLICK HERE FACEBOOK

 

# Hon.Velluppillai Prabhakaran, # Maaveerar day , #ltte,# Tamileelam

தற்போது பிரபாகரனின் கணிதம் கொழும்பு நெருக்கடியாக வெளிப்பட்டிருக்கிறது.

முன்பு ஒரு தடவை ‘கொழும்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் பிரபாகரன்” என்று எனது கட்டுரை ஒன்றிற்குத் நான் தலைப்பிட அதை “தெற்காசியாவின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் பிரபாகரன்” என்று மாற்றி விட்டு அதற்கு ஒரு விளக்கமும் தந்தார் தமிழீழத்தின் மூத்த ஆங்கில ஊடகவியலாளர் சிவநாயகம் ஐயா அவர்கள்.

“கொழும்பின் நிகழ்ச்சி நிரல் என்பது அது கொழும்பினுடையதல்ல , அது பிராந்திய அரசுகளினால் தீர்மானிக்கப்படுவது அதைத்தான் தலைவர் தற்போது தீர்மானித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் மேற்குலகம் கொழும்பின் நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்தும் அப்போதும் தலைவர்தான் அதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் அப்போது இந்த தலைப்பிற்கும் அப்பால் புவிசார் அரசியலில் தலைவரின் வகிபாகம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கும்” என்றார்.

போராட்டத்தை நேர்மையாக அணுகிய ஒரு பத்திரிகையாளனின் தீர்க்க தரிசனம் அது.

அதையொட்டியே பின்னாளில் “நந்திக்கடல் கோட்பாடுகளை” நான் பின்வருமாறு வரையறுத்தேன்.

” நந்திக்கடல்/ உலக பயங்கரவாத அரசுகள் அதை தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் வகுத்து வைத்திருந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்து உலகில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான விடுதலைக்கோட்பாடு பிரசவிக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் தாய்ச் சமர்ககளம். பற்றைகளும், புற்களும், சேறும், சகதியும் நிறைந்த ஒரு நிலப்பரப்பு ஒரு வரலாற்று நாயகனை ‘உள்வாங்கி’ ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டை வெளித்தள்ளியது. போராடும் இனங்களுக்கான படிப்பினையும் பாடமும் மட்டுமல்ல வழிகாட்டியுமாக உலக ஒழுங்குக்கு சவாலாக அச்சமாக எல்லாமுமாக அது அந்த மண்ணிலிருந்து வெளித் தள்ளப்பட்டது. வரலாறு ‘பிரபாகரனியம்’ என்று அதை பதிவு செய்து கொள்கிறது.”

தற்போது பிரபாகரனின் கணிதம் கொழும்பு நெருக்கடியாக வெளிப்பட்டிருக்கிறது.

அதைச் சமன் செய்ய பிராந்திய/ மேற்குலக அரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

Parani Krishnarajani

2004 தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் காணொளிகள் தொகுப்பு

கடல்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வு காணொளி

Up ↑