இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடும்பஸ்தரின் உயிர்காக்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தசாமி ஈஸ்வரன் (45) என்னும் 4 பிள்ளைகளின் தந்தைக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
புலோப்பளை மேற்கு, பளை என்னும் முகவரியில் வசித்துவரும் கந்தசாமி ஈஸ்வரன்(45) என்பவர் இருதய நோயினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவரது நோய் தீவிரமடைந்துள்ளமையால் இருதய சத்திர சிகிச்சை அவசரமாகச் செய்ய வேண்டும் என மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.
இவருக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு 1000000 (பத்து இலட்சம்) ரூபா பணம் தேவைப்படுவதாக இவரது மனைவியாராகிய ஈஸ்வரன் அற்புதராணி என்பவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது குடும்பம் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் இவரது உடலிலும் எறிகணை வீச்சினால் ஏற்பட்ட காயங்கள் காணப்படுகின்றன.
அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த மேற்படி குடும்பஸ்தர் கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதனால் இவரது குடும்பம் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவரது குடும்பத்தால் கொழும்பு மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான 1000000 (பத்து இலட்சம்) ரூபா பணத்தினைப் பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் தனது கணவனின் இருதய சத்திர சிகிச்சைக்கான பணத்தினை வழங்கி உதவுமாறும் கருணை உள்ளம் கொண்ட பரோபகாரிகளிடம் பணிவன்புடன் அவரது மனைவி உதவியை எதிர்பார்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
கருணை உள்ளம் கொண்டவர்களே உயிர்காக்க உதவுங்கள்.
தங்களது உதவிகளை வழங்குவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் (ஈ.அற்புதராணி) – +94779290816 மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் – 80742451 (இலங்கை வங்கி) என்பவற்றினூடாகத் தொடர்புகொண்டு வழங்க முடியும்.
மேலதிக தகவல்களை, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல.+94776913244 உடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.
மேற்படி குடும்பஸ்தரது வைத்தியசாலை சான்றிதழ், கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
Recent Comments