Search

Eelamaravar

Eelamaravar

Month

April 2017

மே 18 ஐ நினைவு கூர்வது எப்படி?

இம்மாதம் 6ஆம் திகதி கனடாவின் ஒன்றாரியோ மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை அத்தீர்மானம் ஓர் இனப்படுகொலை என்று சித்திரித்திருந்தது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவுகளை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் மேற்படி தீர்மானம் கனடாவில் உள்ள சக்திமிக்க சீக்கிய டயஸ்பொறாவிற்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். 1984இல் அப்போது இந்தியப்பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவருடைய மெய்க்காவலர்களான இரு சீக்கியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதையடுத்து தலைநகர் டில்லியிலும், பிற பகுதிகளிலும் சீக்கியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படுகொலையை ஓர் இனப்படுகொலையாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானத்திற்கான முன்மொழிவு கடந்த ஆண்டும் ஒன்றாரியோ சட்டசபையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வெற்றிபெறவில்லை. இந்த ஆண்டு வெற்றி பெற்றிருக்கின்றது. இது நடந்தது 6 ஆம் திகதி.

நேற்று, அதாவது 22ஆம் திகதி பிரான்சின் தலைநகராகிய பரிசில் ஆர்மினியர்கள் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்தார்கள். திருச்சபைப் பிரதானிகள் பங்குபற்றிய அந்நிகழ்வில் ஆர்மினிய இனப்படுகொலையின் 102 ஆவது ஆண்டு நினைவு கூரப்பட்டது. ஆர்மினிய இனப்படுகொலை எனப்படுவது கடந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையாகும்.

இவ்வாறான ஓர் அனைத்துலகப் பின்னணியில் இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று குறிப்பிடப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிறது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளானது ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் அனுஸ்;டிக்கப்பட்டது. வட மாகாணசபை அதை உத்தியோகபூர்வமாக நினைவு கூர்தலுக்கான நாளாக அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு வெகுசன நிகழ்வாக அனுஸ்டிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் எதையும் உத்தியோகபூர்வமாக செய்திருக்கவில்லை. தன்னிடமுள்ள நிறுவனபலம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி நினைவு கூர்தலை ஒரு பொதுசன நிகழ்வாக ஒருங்கிணைத்திருக்க வேண்டிய வடமாகாணசபை அதை பெருமளவிற்கு அரசியல்வாதிகளின் நிகழ்வாகவே அனுஸ் டித்தது.

குறைந்தபட்சம் மாகாணசபையின் நிர்வாகத்திற்குள் வரும் அரச அலுவலகங்களிலாவது அதை எப்படி அனுஸ்டிப்பது என்பது தொடர்பில் சிந்திக்கப்படவில்லை.

குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அதை எப்படிப் பொருத்தமான விதங்களில் அனுஸ்டிக்கலாம் என்று சிந்திக்கப்படவில்லை.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை ஒரு வெகுசன நிகழ்வாக ஒருங்கிணைக்கத் தேவையான அரசியல் தரிசனம் எதுவும் வடமாகாண சபையிடம் இருக்கவில்லை. இனப்படுகொலைத் தீர்மானத்தை ஒரு கொள்கைத் தீர்மானமாக நிறைவேற்றியதற்கும் அப்பால் அதை ஒரு செய்முறையாக முன்னெடுப்பதற்கு வேண்டிய அரசியல் தரிசனமும் பிரயோகப் பொறிமுறையும் இல்லாத ஒரு மாகாண சபையிடம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பிலும் கூடுதலாக எதிர்பார்க்கக் கூடாதுதான்.

இப்படியாக ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு எதுவுமற்ற ஒரு பரிதாகரமான வெற்றிடத்தில் ஒவ்வொரு கட்சியும், அமைப்பும், மத நிறுவனங்களும் தத்தமது சக்திக்கேற்ப கடந்த ஆண்டு நினைவு நாளை அனுஸ்டித்தன. இவ்வாறு அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வுகளில் மொத்தமாக சில ஆயிரம் பேரே பங்கேற்றியிருந்தார்கள். அதற்கும் சில நாட்களின் பின் வந்த வற்றாப்பளை அம்மன் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

இப்படி ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத காரணத்தால் பெருமளவிற்கு அரசியல்வாதிகளின் நிகழ்வாகவே கடந்த ஆண்டு மே 17 அனுஸ்டிக்கப்பட்ட ஓர் அனுபவத்தின் அடிப்படையில் இவ்வாண்டாவது அதை ஒரு வெகுசன நிகழ்வாக அனுஸ்டிப்பதற்கு முன் வரப்போவது யார்?

ஒரு நண்பர், அவர் ஒரு கூர்மையான அரசியல் அவதானி, தன்னுடைய கைபேசியிலிருந்து எல்லா அரசியல்வாதிகளையும், ஊடகங்களையும் இடையறாது அழைத்து கேள்வி கேட்பவர். போராட்டத்தில் இழப்புக்களைச் சந்தித்த ஒருவர். அவர் பின்வருமாறு சொன்னார். “முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பதை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடிக்க வேண்டுமே தவிர அதை வேறு எங்கோதான் தொடங்க வேண்டும். ஈழப்போரில் சாதாரண பொதுமக்கள் கொத்தாகக் கொல்லப்பட்ட முதல் சம்பவம் எங்கு நிகழ்ந்ததோ அங்கிருந்து தொடங்க வேண்டும். அங்கேதான் முதல் விளக்கு ஏற்றப்பட வேண்டும்.

அங்கிருந்து தொடங்கி அது போன்று கொத்துக் கொத்தாக பொது மக்கள் கொல்லப்பட்ட எல்லா இடங்களுக்கும் தீபம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஒலிம்பிக் தீபத்தை எடுத்துச் செல்வது போல. இப்படியாக எல்லா இடங்களிலும் விளக்கேற்றும் நிகழ்வை அவ்வப்பகுதி உள்ளூர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், மத நிறுவனங்கள் பொறுப்பேற்கலாம். இவ்வாறு எல்லா இடங்களிலும் ஏற்றப்பட்ட தீபங்களில் இறுதியானதும், பெரியதுமாகிய தீபத்தை முள்ளிவாய்க்காலில் ஏற்றலாம்…..” என்று.

நல்ல திட்டம் – இப்படிச் செய்யும் போது நினைவு கூர்தல் எனப்படுவது கிராமங்களை நோக்கி பரவலாக்கப்படும். அதிலும் குறிப்பாக ஒரு கிராமத்தில் நடந்த படுகொலையை அக்கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றி நினைவு கூரலாம். இதனால் நினைவு கூர்தலை ஆகக்கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்தலாம். அது சாதாரண சனங்களுக்கு ஆறுதலைக்கொடுக்கும். நினைவு கூர முடியாதிருந்த ஒரு முட்டுத்தாக்கை நீக்க அது உதவும். அது உளவியல் ரீதியாக ஒரு குணமாக்கற் செய்முறையாகும். அது மட்டுமல்ல அது ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டுரிமை. அதோடு, நிலைமாறுகால நிதிப்பொறி முறைகளில் இழப்பீடு என்ற பகுதிக்குள் அது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகும். அதாவது நினைவு கூர்தலுக்கான உரிமை.

ஆனால் யார் இதையெல்லாம் ஒருங்கிணைப்பது? இப்படித் திட்டமிட்டு நினைவு கூர்தலைச் செய்வதென்றால் அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக்குழு அல்லது அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்குள் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும், சிவில் சமூகப்பிரதிநிதிகளும், மதநிறுவனங்களும், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரும் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கென்று ஒரு பொது நிதியும் திரட்டப்பட வேண்டும். இவ்வாறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தான் மே 18ஐ ஒரு பொதுசன நிகழ்வாக ஒருங்கிணைக்க முடியும். அதை யார் செய்வது?

அப்படிச் செய்யக் கூடிய ஒரு தலைமையோ அல்லது ஒரு அமைப்போ இல்லாத வெற்றிடத்தில் தான் நினைவு கூரலை முன்னட்டு உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தப்போவதாக ஓர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு ஏற்கெனவே தமிழ்ப்பகுதிகளில் வேறு சில செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறது. மே 18 ஐ நினைவு கூர வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தது சரியானது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதில்தான் அவர்களிடம் பொருத்தமான ஓர் அரசியற் தரிசனம் இருக்கவில்லை.

அந்த அமைப்பிடம் மட்டுமல்ல தற்பொழுது தமிழ்ப்பகுதிகளில் துடிப்பாகச் செயற்படும் பல அமைப்புக்களிடமும் பொருத்தமான அரசியற் தரிசனம் எதையும் காண முடியவில்லை. ஓர் இளம் தலைமுறை பொருத்தமான அரசியல் தரிசனம் இன்றிச் செயற்படுகின்றது என்று சொன்னால் அதற்கு அச்சமூகத்திற்குத் தலைமை தாங்கும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், செயற்பாட்டாளர்களும், படைப்பாளிகளும், ஊடகங்களுமே பொறுப்பேற்க வேண்டும். கடந்த எட்டாண்டுகாலப் பகுதிக்குள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட செயல்வாதம் ஒன்று பல தளங்களிலும் முன்னுக்கு வந்து விட்டது. பொழுது போக்கிற்கும் செயல்வாதத்திற்கும் இடையில் வேறுபாடு தெரியாத ஒரு பகுதி இளையோரை உற்பத்தி செய்தமைக்கு முழுத் தமிழ்ச் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக தமிழ்த் தலைமைகளும், கருத்துருவாக்கிகளும் இது தொடர்பில் ஆழமாகச் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டும்.

முழுத்தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பைத் தீர்மானிக்கும் விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த்தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒட்டு மொத்தத் திட்டமோ, அரசியல் தரிசனமோ, வழிவரைபடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப்பிரக்ஞையாகும். ஒரு மக்கள் கூட்டத்தை புரட்சிகரமான வழிகளில் திரளாக்கும் எல்லாச் செயற்பாடுகளும் தேசியத்தன்மை மிக்கவைதான். மாறாக, ஒரு மக்கள் திரளை கூறுபோடும் அல்லது துண்டு துண்டாக்கும் எல்லாச் செயற்பாடுகளும் தேசியத்துக்கு எதிரானவைதான்.

தமிழ் மக்களின் துக்கம் ஒரு கூட்டுத் துக்கம். அவர்களுடைய காயங்களும் கூட்டுக் காயங்கள். அவர்களுடைய மனவடுக்களும் கூட்டு மனவடுக்கள் தான். எனவே அவற்றிற்கான தீர்வும் ஒரு கூட்டுச் சிகிச்சையாக ஒரு கூட்டுப் பொறிமுறையாகவே அமைய வேண்டும். எனவே தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவையும் கூட்டாக எடுக்கப்பட வேண்டும். இக் கூட்டுப்பொறுப்பை உணர்ந்த தமிழ்த்தலைவர்கள் எத்தனை பேர் எம்மத்தியில் உண்டு?

ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் மட்டுமல்ல ஒரு மாவீரர் நாளில் மட்டுமல்ல, ஜெனீவாவைக் கையாள்வது தொடர்பில் மட்டுமல்ல இவை போன்ற பல விடயங்களிலும் தமிழ் மக்கள் ஒரு மையத்திலிருந்து சிந்திக்காத ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது.

அண்மை மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களில் ஒரு வித தளர்வை அவதானிக்க முடிகிறது. ஜெனீவாக் கூட்டத்தொடரின் பின் இப் போராட்டங்கள் தொய்வுறத் தொடங்கிவிட்டன. ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாமையே இதற்குக் காரணம். இது விடயத்தில் போராடும் தரப்புக்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு எந்த ஒரு கட்சியாலும் முடியவில்லை. எந்தவொரு பொது அமைப்பாலும் முடியவில்லை.

முள்ளிக்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் ஆயர் இல்லத்தால் கடந்த புதன்கிழமை ஒரு அமைதிப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் கூடுதலாக பிரமுகர்களே பங்குபற்றியிருக்கிறார்கள். மன்னாரில் ஆயரின் அழைப்பை ஏற்று அதிக தொகை மக்கள் வராதது ஏன்?

அண்மையில் வவுனியாவில் ஒரு கோப்ரேற் நிறுவனம் கட்டிக் கொடுத்த வீடுகளைக் கையளிப்பதற்கு ரஜனிகாந்த் வர இருந்தார். அதற்கு எதிர்ப்புக் காட்டப்பட்டதையடுத்து அவரது வருகை நிறுத்தப்பட்டது. அவரது வருகை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டன, நல்லூரில் ஒரு சிறு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. அதை மேற்படி கோப்ரேற் நிறுவனமே ஒழுங்கு படுத்தியதாக நம்பப்படுகிறது. அதே சமயம் மற்றொரு கோப்ரேற் நிறுவனம் இந்தியாவிலிருந்து கலைஞர்களை வரவழைத்து லண்டனில் பெருவிழா ஒன்றைச் செய்திருக்கிறது.

கடந்த புத்தாண்டுத் தினத்தன்று நந்திக்கடற்கரையில் மாட்டுவண்டிச்சவாரி நடாத்தப்பட்டது. ஆனால் சவாரித்திடலிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் கேப்பாபிலவில் சிறு தொகை மக்கள் தமது காணிகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதே நாளில் யாழ்ப்பாணம் பண்ணாகத்தில் பெருமெடுப்பில் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மருதங்கேணியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வற்குக் கூடக் காசில்லை என்று கூறப்படுகிறது. ஒரு புறம் பெருமெடுப்பிலான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், இன்னொருபுறம் கறுப்பாடை அணிந்தபடி கிளிநொச்சியில், வவுனியாவில், கேப்பாப்பிலவில், முல்லைத்தீவில் முள்ளிக்குளத்தில், மருதங்கேணியில் திருகோணமலையில் சிறுதொகை மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தாண்டுத் தினத்தன்று காணப்பட்ட இந்த முரண்பாடான காட்சி தற்செயலானது அல்ல. தமிழ் மக்கள் ஒரு திரளாக இல்லை என்பதையே புத்தாண்டு நிரூபித்திருக்கிறது. வரவிருக்கும் மே நாள் நிகழ்வுகளும் அதை நிரூபிக்கப் போகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவு நாளும் அதை நிரூபிப்பதாக அமைந்து விடுமா?

நிலாந்தன்

கடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் !

“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன. குளிப்பதற்கு மட்டுமென்றே ஒரு ஆறும் இருந்தது. கடலிலே போய் மீன்பிடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் வாய்க்கால்களில் மீன்பிடிப்போம். பயிர்ச்செய்கை, மாடு, கோழி, எருமை என அனைத்தும் அபரிமிதமாகவும், உண்பதற்கும் பருகுவதற்கும் போதுமானதாகவும் இருந்தது. மாலைவேளைகளில் ஒன்றுகூடி நடன, நாடக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து அனைவரும் அகமகிழ்ந்தோம். எமது முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததுடன், யுத்தகாலத்தில் தாக்குதல் தீவிரமடையும் போதெல்லாம் அவர்களுடனேயே தங்கியிருந்து, நிலைமை சுமூகமடைந்ததும் வீடு திரும்புவது வழக்கம். நிச்சயம் இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு நல்லது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன். நாங்கள் எல்லோரும் ஒன்றாக சமாதானமாக வாழ்வோம் என ஒவ்வொரு நாளும் நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் இந்த மண்ணைவிட்டுப் போகுமுன்பாவது அது நடந்துவிடவேண்டும்”

2007ஆம் ஆண்டிலிருந்து வீடுதிரும்ப முடியாமல் இருக்கின்ற, முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 88 வயதான எம். பிரான்சிஸ் வாஸ் என்கிற முதியவர் தனது நினைவுகளை இவ்வாறு மீட்டினார்.

  வீடுதிரும்புவதற்கான தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பம் !

மூன்று நாட்களுக்குள் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்கிற வாக்குறுதியுடன் செப்டெம்பர் 8, 2007இல், இராணுவத்தினரால் மூர்க்கமான முறையில் முழுகிராமமும் வெளியேற்றப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பின்னரும்கூட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்கு, இன்னமும் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறார்கள். 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டதிலிருந்து முழு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் வட மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள், மனுக்கள்[i], உரையாடல்கள், போலி வாக்குறுதிகள்[ii] என ஒரு தசாப்தகாலமாக நீட்சிபெற்று வந்த போராட்டமானது, உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற பாதிக்கப்பட்ட ஏனைய மக்களின் செய்திகள் கொடுத்த உந்துதலினாலும், இனமத வேறுபாடின்றி பலர் கொடுத்த ஆதரவினாலும், தற்போது மீண்டும் இவ்வூர் மக்களை வீதிகளுக்குக் கொண்டுவந்திருக்கின்றது.

முள்ளிக்குளத்தைச் சேர்ந்த இம்மக்கள், மன்னார் -புத்தளம் பிரதான வீதியிலிருந்து தமது மூதாதையரின் கிராமத்திற்குத் திரும்புகின்ற வளைவில் அமைந்துள்ள முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, ஆதரவும் அனுதாபமும் மிக்க ஒருவரின் வீட்டுவளாகத்தினை தங்கள் அண்மைய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவுசெய்தமையிலிருந்து, அப்பிரதேச முதியவர் பிரான்ஸிஸ் வாஸ் கூறியபடி, கஷ்டப்படுகின்றவேளைகளில் ஊரையொட்டி அமைந்துள்ள மரிச்சுக்கட்டு பிரதேசவாழ் முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துவந்ததாக அவர் மீட்டிய நினைவுகள் மீள்உறுதிசெய்யப்பட்டு உயிரூட்டப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில் வடக்கு – கிழக்கு முழுவதும் காணிகளை மீளக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையும் நீதியும் வேண்டியும் பரந்த அளவில் நடாத்தப்படுகின்ற தொடர் ஆர்ப்பாட்ட அலைகளின் தாக்கமானது, 2007 முதற்கொண்டு சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற தம் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கான முள்ளிக்குளம் வாசிகளின் போராட்டத்திற்கு ஒருவகையான புத்துயிரைக் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டமொன்றில் (மேரி மாதா சங்கம்) முள்ளிக்குளத்தைச் சேர்ந்த வயதானப் பெண்கள், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கேப்பாபுலவு மக்களின் காணிமீட்பு போராட்டத்தைப்பற்றி கலந்துரையாடி, தாமும் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக மீள்-போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். அதன்பின்னர் அவர்கள் கிராமத்தில் உள்ள ஆண்களிடம் தங்கள் தீர்மானத்தைக் கூற அவர்களும் அதற்கு ஒத்துழைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

தற்போது சுமார் 120 குடும்பங்கள் மலன்காட்டிலும்[iii], 150 குடும்பங்கள் காயாக்குழியிலும் தற்காலிகமாக குடியேற்றப்பட்டு இருக்கின்றனர். அத்துடன், போர் மற்றும் இடப்பெயர்வின் நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள சுமார் 100 குடும்பங்கள் காணிகள் மீட்கப்படும் பட்சத்தில் மீண்டும் நாடு திரும்புவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 8 மணியளவில் நாம் (மலன்காடு மற்றும் காயக்குழி பிரதேசத்திலிருந்து சுமார் 50 கிராமத்தவர்கள்) எமது காணிமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அப்போது கடற்படையினர் அங்கு வந்து “ஏன் இங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள், ஏன் மாவட்டச் செயலகத்துக்கு முன் செய்யவில்லை? அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு பேரூந்துகளைக்கூட வழங்குகிறோம். நாங்கள் உங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும் நீங்கள் எங்களுக்கு எதிராக செயற்படுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்” என அந்த மக்கள் கூறினர். “அவர்கள் எங்கள் காணிகளை திருப்பித்தந்தால், அவர்கள் எங்களுக்கு உதவவேண்டிய அவசியமேயில்லையே” எனவும் கூறினர்.

முள்ளிக்குளத்திலிருந்து இடப்பெயர்வும் அதன்பின்னரான பிரச்சினைகளும் !

“2007இல் நாங்கள் வெளியேறியபோது, கிட்டத்தட்ட 100 வீடுகள் நல்ல நிலையிலும் 50 மண்குடிசைகளும் காணப்பட்டன. அத்துடன், எங்கள் ஞாபகத்திற்கேற்ப இங்கு ஒரு கிறிஸ்தவ திருச்சபையும், கூட்டுறவுத்துறை நிலையமும், மூன்று பாடசாலைகளும், ஒரு முன்பள்ளியும், இரு மருத்துவமனைகளும், ஒரு நூலகமும், தபால் நிலையமும், மீனவர் கூட்டுறவுச்சங்கமும், ஆசிரியர் விடுதியும், மாவட்டசெயலாளர் கட்டடமும் ஆறு பொதுமக்களுக்கான மற்றும் நான்கு தனிநபர்களுக்குச் சொந்தமான கிணறுகளும் ஒன்பது நீர்த்தாங்கிகளும் இருந்தன” என இக்கிராமத்தவர்கள் நினைவுபடுத்திக்கொண்டனர். தற்போது அந்த நீர்த்தாங்கிகளையும் பொதுஇடங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதுடன், பயிர்ச்செய்கை நிலத்திற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியே இருக்கிறது.

150 வீடுகளில் 27 வீடுகளே தற்போது எஞ்சியிருப்பதுடன், அதில் கடற்படை அதிகாரிகள்[iv] குடியிருக்கின்றனர். மீதி வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் கூறுகின்றார்கள். வேறொரு வழியினூடாகவே தேவாலயம் செல்லக்கூடியதாக இருப்பதுடன், வாய்க்கால் – வரப்பினூடான குறுக்குப்பாதை கடற்படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. விரும்பும்போதெல்லாம் தேவாலயம் சென்று பிரார்த்திப்பதற்கு பல முதியவர்கள் சிரமப்படுகிறார்கள், ஞாயிறு திருப்பலிப்பூசைக்கு சென்றுவருவதற்கு கடற்படையினரின் பேரூந்துசேவையில் தங்கியிருக்கவேண்டியிருக்கிறது. ஆலயத்திற்குச் செல்வதற்கு 50-100 மீற்றராக இருந்த நடைதூரம், தற்போது மலன்காட்டிலிருந்தும் காயற்குழியிலிருந்தும் 3 கி.மீ – 10 கி.மீ தூரமாக மாறியுள்ளது. சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்றுவருவதற்கு, கடற்படையினர் தினசரி பேரூந்து வசதி செய்துகொடுப்பதுடன், அப்பாடசாலையில் ஆண்டு 9 வரையிலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்குப் பின் அண்மையிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச்[v] சிறுவர்கள் தாமாகவே சென்றுவரவேண்டிய அல்லது தூரமாக இருந்தால் விடுதியில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

முள்ளிக்குளம் மக்கள், பிரதானமாக விவசாய மற்றும் மீனவ சமூகமாகவே இருப்பதால் கடலுக்கு அண்மித்திருப்பது, அவர்களுக்கு அத்தியாவசியமானது. முதலில் இறால் மற்றும் ஏனைய நன்னீர் மீன்பிடிப்பதற்கான 9 ‘பாடு’களுக்கு[vi] (கரைவலை அனுமதி) அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் தற்போது நான்கிற்கு[vii] மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய கரைவலைகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்தக் கிராமத்தவர்கள் 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அகற்றப்பட்டபோது பின்வருவன ஒவ்வொன்றிலும் எண்ணிக்கைப்படி 64 மீன்பிடிசாதனங்களை விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர் – நவீன படகுகள், மோட்டார்கள், வலைகள், கயிறுகள், வேறும் மீன்பிடி உபகரணங்கள், 90 தெப்பங்கள் மற்றும் 3 இழுவை-வலைகள்.[viii]

கண்காணிப்பும் அச்சுறுத்தலும் !

“நீங்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தாவிடில், நாங்கள் கடலில் எங்கள் அதிகாரத்தை உங்களுக்குக் காண்பிப்போம்” என்று ஆர்ப்பாட்டத்தின் முதல்நாளிலேயே கடற்படையினர் மக்களை மிரட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதும் அவர்களை வெளிப்பகுதிகளில் இருந்து சந்திக்க வருபவர்களின் மீதும் கடற்படையினராலும் சிலாவத்துறை பொலிஸாரினாலும் (போக்குவரத்து பொலிஸ் உட்பட) பாரிய அளவிலான கண்காணிப்பும் அச்சுறுத்தலும்[ix] ஆரம்ப நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், 2ஆவது வார போராட்டங்களின் போது கடற்படை அதிகாரிகள், தங்கள் வீரியத்தை குறைத்துக்கொண்டதுடன், கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறையின் எந்தத் தீர்மானத்திற்கும் ஏற்ப செயற்பட, தாம் தயாராக இருப்பதாக, இந்தப் பகுதிக்கான கடற்படைத் தளபதியும் ஏனைய அதிகாரிகளும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் தேவாலயத் தலைவர்களுக்கும் தெரிவித்தனர். ஆனாலும் கிட்டத்தட்ட இருவாரங்களாக தேவாலய தலைவர்களின் முயற்சிக்கும் அப்பால், இந்தவிடயத்தில் கொழும்பு மௌனமாகவே இருந்துவருகின்றது.

காணியின் சட்டரீதியான நிலையும் மாவட்ட செயலகத்தின் பதிலுரையும் !

தனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளை, கடற்படையினர் தகாதமுறையில் ஆக்கிரமித்துள்ளனரென இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், வேறுகாணிகளை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கும் பட்சத்தில் மக்களின் பூரணசம்மதம் கருத்திற்கொள்ளப்படவேண்டுமெனவும், வேறு இடங்களில் குடியேறும்படி அவர்களை வற்புறுத்தக்கூடாதெனவும் சிபாரிசுசெய்துள்ளது.[x]

மாவட்டச் செயலாளரும் அவரது பிரதிநிதிகளும் மார்ச் 23ஆம் திகதியே மக்களைச் சந்தித்து, போராடுவதினால் பெரிதாக எதுவும் அடையமுடியாது எனவும் மக்களின் கோரிக்கைகளை ஒரு கடிதத்தில் வரைந்து தம்மிடம் கொடுக்கும்படியும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தாம் அதனை மேலதிகாரிகளிடம் கையளிப்பதாகவும் கூறியுள்ளனர். காணிகளின் பெரும்பான்மையான பகுதி தனிப்பட்ட நபர்களுக்கும், மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமானது. நிலங்களின் ஏனைய பகுதி, காணிஅபிவிருத்தி கட்டளையின் பிரகாரம் வழங்கப்பட்ட அனுமதி மற்றும் மானியம் அடிப்படையிலானவையும் அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானவையும் ஆகும்.

மாற்றுவீடுகள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் ஏன் இன்னமும் போராடுகிறார்கள் என மாவட்ட செயலாளர் அவர்களிடம் வினவியுள்ளார். சொந்த நிலங்களைக்கோரி தாம் தொடர்ச்சியாகப் போராடிவந்ததாகவும், இடைக்காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடமைப்பை விருப்பமின்றியே ஏற்றுக்கொண்டதாகவும் கிராமத்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குரலெழுப்பினர். “வீடு திரும்பவேண்டுமென்கிற நிலைப்பாட்டுடனேயே நாங்கள் எப்போதும் இருந்தோம்” என்றனர்.

“எம்மிடம் அனைத்தும் இருந்தது. இப்போதோ காட்டில் வாழ்கிறோம். இவ்வாறு எப்படி வாழ முடியும்? எல்லாவற்றையும் நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வோமென எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாவது நாங்கள் வளர்ந்த வீட்டைக் கண்டுகளிக்கவேண்டும்” என்பதே ஊர் முதியவர் பிரான்சிஸ் வாஸின் ஆசையாகும்.

மரிசா டி சில்வா, நில்ஷான் பொன்சேகா, ருகி பெர்னான்டோ

மாற்றம்

****

[i] Sky No Roof, Edited by Kusal Perera, Annexes – Letter by villagers of Mullikulam to the President dated 13th September, 2011 – https://drive.google.com/file/d/0BzO8SAlmDKanZmN0TXRRdjNyR1k/view

[ii] WATCHDOG, Sri Lanka Navy vs. the people of Mullikulam – http://groundviews.org/2013/01/24/sri-lanka-navy-vs-the-people-of-mullikulam/

[iii] Ruki Fernando, The struggle to go home in post war Sri Lanka: The story of Mullikulam – http://groundviews.org/2012/08/01/the-struggle-to-go-home-in-post-war-sri-lanka-the-story-of-mullikulam/

[iv] WATCHDOG, Mullikulam: The continuing occupation of a school by the Sri Lankan Navy – http://groundviews.org/2012/09/11/mullikulam-the-continuing-occupation-of-a-school-by-the-sri-lankan-navy/

[v] Schools in Nanattan, Mannar town, Kondachchi, Silavathurai, Murunkan and Kokkupadayan.

[vi] 1 Paadu = 450 meters.

[vii] WATCHDOG, Mullikulam: Restrictions on fishing, cultivation, access to the church and school continue – http://groundviews.org/2013/03/15/mullikulam-restrictions-on-fishing-cultivation-access-to-the-church-and-school-continue/

[viii] WATCHDOG, Mullikulam: Restrictions on fishing, cultivation, access to the church and school continue – http://groundviews.org/2013/03/15/mullikulam-restrictions-on-fishing-cultivation-access-to-the-church-and-school-continue/

[ix] Heavy surveillance by #Navy Intel & #Police at #Mullikulam protest today. OIC asked us who we were & why we had come – https://twitter.com/Mari_deSilva/status/845184613085462529 & https://twitter.com/Mari_deSilva/status/845187308412272643

[x] Sky No Roof, Edited by Kusal Perera, Private Land Occupied by the Security Forces – Mullikulam, study report by the National Protection and Durable Solutions for Internally Displaced Persons Project of the Human Rights Commission of Sri Lanka, June 2011, Pg. 5 – https://drive.google.com/file/d/0BzO8SAlmDKanZmN0TXRRdjNyR1k/view

சாதித்த கனடிய இளையோர் !

கனடிய அரசியல் களம் சமீப காலங்களாக தமிழர் பிரவேசங்களால் சூடு பிடித்தாலும் தமிழ் இளையவர்கள் இதில் இருந்து தள்ளி நிற்கின்றார்களோ என்ற கவலை பலரிடம் இருந்ததை காண முடிந்தது. இல்லை நாங்களும் களத்திற்கு வந்துவிட்டோம் எனக்கூறிக்கொண்டு கனடிய தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான விஜய் தனிகாசலம் களத்தில் குதித்துள்ளார்.

கனடிய பட்டதாரியான இவர் தமிழ் இளையோர் செயற்பாடுகளின் ஒருங்கமைப்பாளராக தொழிற்பட்டு தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தற்போது புதிதாக உருவாகியுள்ள ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவுத் தேர்தல் நடந்து முடிந்து விஜய் தனிகாசலம் வெற்றியீட்டியுள்ளார்.

இவற்றை எல்லாம் தாண்டி இளையோர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி சூடியது பாராட்டப்பட வேண்டியதே ! வாழ்த்துக்கள் !

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு!

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை (2008)

Statement from Ontario PC Leader Patrick Brown on the nomination of Vijay Thanigasalam
April 23, 2017

“I congratulate Vijay on his nomination as the Ontario PC candidate for Scarborough-Rouge Park.

“Vijay brings a wealth of experience to our modern, inclusive and pragmatic Ontario PC team. A young professional who has been an active community volunteer for the past decade, I know Vijay will work tirelessly on behalf of the residents of Scarborough.

“After 14 years in power, life is harder with the Liberals. Ontario families are working hard, paying more, and getting less. Ontario deserves better. It’s time for a change in Ontario.

“In Scarborough and across the province, the Ontario PC Party will continue to work hard for a better future. I look forward to working with Vijay as part of our Ontario PC team as we share our positive message of change.”

கட்டுரையை தற்போது முழுமையாக பிரசுரிக்கவில்லை ஆனால்  பின்னர் பிரசுரிக்கப்படும் !

இருப்பினும் எம்மால் பலருடைய பல மாத உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதால் தற்போது அமைதி காக்கின்றோம் ,  அதே நேரத்தில் மக்களிடத்தில் உண்மைகளை  உரைக்காமல் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்பதும், சுட்டு விரல் காட்டும் இடத்தில் ஓட்டுப்போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் ஆகும்  !

கூலிக்கு மாரடிக்கும் ஊடங்களில் வரும் பொய்கள் தான் இப்போது செய்திகளாகி விட்டது !

அமைப்புக்களும் ஊடகங்களும் உண்மைகளை உரைக்க வேண்டும் !

நன்றி

நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுப்பது கூடத் தவறா?

இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் அதிகம் அழுத்தம் கொடுத்தால் அது மோசமான ஆட்சியாளர்கள் வருவதற்கு இடம் வைத்துவிடும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை. சேனாதிராசா அவர்கள் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த அரசாங்கம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணத்தவறினால் எங்களுக்கு சர்வதேசம் உதவி செய்யும் என்பதும் அவரின் உரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுத்தால் அது பொல்லாத ஆட்சியினர் வருவதற்கு வழிவகுக்கும் என்பது மாவை.சேனாதிராசாவின் கருத்து. இக் கருத்து எந்தவகையிலும் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கமுடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே இதனைக் கொள்ளவேண்டும்.

அப்படியானால் நல்லாட்சி நிலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது என்பது அவரின் கருத்தெனப் பொருள் கொள்ள முடியும்.

இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என்று நாம் கூறுவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. இந்த அரசாங்கம் நல்லாட்சியா இல்லையா என்பதை அதன் ஆட்சிக்கால நிறைவிலேயே சொல்ல முடியும்.

எனினும் நல்லாட்சி என்ற சொற்பதம் வழக்கத்திற்கு வந்து விட்டது. அதிலும் நல்லாட்சி என்பது யுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் சொல்லமுடியுமேயன்றி யுத்தத்தால் பாதிப்புக் குள்ளானவர்கள் இதனை நல்லாட்சி என்று சொல்வார்களா? என்பதை பொறுத்தும் நல்லாட்சி என்ற பதம் பயன்படுத்தக்கூடியது.

எது எவ்வாறாயினும் தங்கள் சொந்த நிலங்களை படையினரிடம் பறிகொடுத்து விட்டு இரவல் இடங்களில் தங்கள் வாழ்க்கையை கழிப்போர், காணாமல்போன தங்கள் உறவுக ளைத் தேடுவோர், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் அவர்களின் உறவுகள் என யாரும் இவ் அரசை நல்லாட்சி என்று கூற மறுப்பர்.

இதற்கு காரணமும் உண்டு. அதாவது போரி னால் தமக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திக்காத அரசை நல்லாட்சி என்று சொல்வதற்கு அவர் கள் ஒருபோது உடன்படமாட்டார்கள் என்பது நியாயமானதே.

எனவே ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரின் அரசாட்சி நல்லாட்சியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இது ஒருபுறம் இருக்க நல்லாட்சிக்கு இது வரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத் ததான தகவல்கள் எதுவும் இல்லை.

அழுத்தம் கொடுத்தால் நல்லாட்சி போய்விடும் என்றால் அழுத்தம் கொடுக்காமல் தமிழ் மக்கள் தாம் அனுபவிக்கின்ற அவலங்களோடு தொடர்ந்தும் வாழவேண்டும் என்று பொருள் கொள்வதிலும் தவறிருப்பதாக தெரியவில்லை.

எங்களை ஏமாற்ற நினைத்தால் மகிந்த ராஜபக்ச­விற்கு நேர்ந்த கதிதான் இந்த அரசுக்கும் ஏற்படும் என்பது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் கருத்து.

அதேவேளை இலங்கை அரசு ஏமாற்ற நினைத்தால் சர்வதேசத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு நாம் வர நேரிடும் என்று மாவை.சேனாதிராசா அவர்கள் புங்குடுதீவில் ஆற்றிய உரை நல்லாட்சிக்கான எச்சரிக்கை.

இவையெல்லாம் சரி. இப்போது நமக்கு ஏற் படுகின்ற சந்தேகம், நாம் அழுத்தம் கொடுத்து பொல்லாத ஆட்சி வந்தால் அவர்களை சர்வதேசம் பார்த்துக்கொள்ளாதா? அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் சர்வதேசத்துடன் உடன்பாட்டிற்கு வரமுடியாதா? என்பது தான்.

அட, நல்லாட்சிக்கான அழுத்தம் என்பது தமிழ் மக்கள் இப்போது நடத்துகின்ற தொடர் போராட்டங்கள் மட்டுமே. இந்தப் போராட்டங்கள் எங்கள் அரசியல் தலைமைக்கு இடைஞ்சலாக இருக்கிறதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

*

மக்களின் தொடர் போராட்டமே காணி விடுவிப்புக்கு காரணம்

காணி விடுவிப்புத் தொடர்பில் எவரும் அரசியல் இலாபம் தேடுவதை முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும்.

போர் முடிந்து எட்டு ஆண்டுகளாகிவிட்ட போதிலும் காணி விடுவிப்புத் தொடர்பில் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் தங்கள் காணிகளை எப்படியும் விடுவிப்புச் செய்வதென முடிவு செய்தனர்.
அதற்காக இரவு பகல் என்று பாராது வெயில் குளிர் என்று நோவாது தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அவர்களின் காணிகளை விடுவிக்க வேண் டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

எனினும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையாலும் ஜனாதிபதித் தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவுமே நில விடுவிப்பு நடப்பதாக பச்சைப் பொய் கூறுகின்றனர்.

இவ்வாறு கூறுவது மிக மோசமான ஒரு செயலாகும். எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் தேட நினைப்பது அவ்வளவு நல்லதல்ல.

உண்மையில் காணி விடுவிப்பு என்ற விடயம் ஓரளவு வெற்றி அடைவதற்கு தமிழ் மக்கள் நடத்திய தொடர் போராட்டமே மூல காரணமாகும்.

தாமாக உணர்ந்து இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலத்தை மீட்பதென முடிவு செய்தனர்.

இம்மக்களின் நியாயமான போராட்டத்துக்கு மனிதநேயமுள்ளவர்கள் தமது ஆதரவை வழங்கினர்.
தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் மக்கள் நடத்திய போராட்ட பக்கமே தலைவைக்கவில்லை.
இதுவே நிலைமையாக இருக்கையில்,

தங்களால்தான் காணி விடுவிப்பு நடந்தது என உரிமை கோருவது மிகப்பெரும் துரோகத்தனமாகும்.
மக்கள் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெடுத்தனர் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அந்த மக்களைப் பாராட்டுவதே நியாயமானதாகும்.

இதைவிடுத்து ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவித நிபந்தனையும் இன்றி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கி விட்டு நில மீட்புத் தொடர்பில் ஏலவே உடன்பாடு உண்டு எனக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பதற்கு ஒப்பானதாகும்.

ஏலவே உடன்பாடு இருந்தால் அதை ஏலவே செய்யாதது ஏன்? ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாட்டில் மக்கள் தங்களை வருத்தி போராட்டம் நடத்தினால்தான் அவர்களின் நிலத்தை விடுவிப்போம் என்ற உடன்பாடுகளும் இருந்தனவா என்ன?

ஆக, போரில் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்த மக்கள் தம்மளவில் ஒன்றுபட்டு நடத்திய தொடர் போராட்டமே நில விடுவிப்புக்கு காரணமாகும்.

இதில் பலர் உரிமை கோர நினைத்தாலும் அது உரிமை கோருபவர்களுக்கு மிகப்பெரும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.

கூட்டமைப்புத் தலைவர்களிடம் ஒரு வித்தியாசம் தெரிகிறது

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தர்,

மாவை.சேனாதிராசா ஆகியோரின் உரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றம் தெரிவதைக் காணமுடிகிறது.

புங்குடுதீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மாவை.சேனாதிராசா அவர்கள் அரசாங்கம் ஏமாற்றினால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

அட! இது நல்ல கதையாக இருக்கிறதே! அந்தத் தீர்மானம் என்னவாகவிருக்கும் என்று அறிய மனம் அவாப்பட்ட போது,

அந்தத் தீர்மானம் என்ன என்பது எங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும்தான் தெரியும் என்றும் மாவை.சேனாதிராசா அவர்கள் கூறியுள்ளார்.

குறித்த தீர்மானம் இலங்கை அரசுக்குத் தெரிய வந்தால் அது தீர்மானத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அவர் தீர்மானம் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

எதுவாயினும் இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் ஒரு வலுவான தீர்மானத்தை வைத்துள்ளன என்பது நம்பிக்கை தருகிறது.

இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்ற நினைத்தால், ஐயா! நீங்கள் கூறிய அந்தத் தீர்மானத்தை செய்யுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவை தமிழ் மக்கள் கேட்கக்கூடிய ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆனால் அந்தத் தீர்மானம் என்ன என்பது குறித்து நாம் ஆராயாமல் விட்டாலும் அப்படியொரு தீர்மானத்துடன் இருக்கக்கூடிய நம்பிக்கையைத் தந்த மாவை.சேனாதிராசாவுக்கு நாம் நன்றி கூறிக்கொள்ள வேண்டும்.

இதேபோன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழ் மக்களின் நிலத்தை விடுவிக்கும் படி படைத்தரப்பை சந்தித்துள்ளார்.

அச்சந்திப்பில் ஜனாதிபதி உத்தரவிட்டால் தமிழ் மக்களின் நிலத்தை விடுவிப்பதில் படையினருக்கு எந்த இடைஞ்சலும் இல்லை என்று கூறியுள்ளனராம்.

அப்படியானால் தமிழ் மக்களின் நிலத்தை படையினர் விடுவிக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி தான் காரணம் என்பது போல விடயம் அமைகிறது.

ஆக, படையினர் கூறியதை சம்பந்தர் ஐயா, முற்றுமுழுதாக நம்பியுள்ளார் என்றே கருத வேண்டும்.
மக்களின் நிலங்களை விடுவிக்க முடியாது என்று படை அதிகாரிகள் கூறிய செய்திகள் ஊடகங்களில் ஏற்கெனவே வெளிவந்துள்ள போதிலும் இது தொடர்பான தகவல்கள்,தரவுகள் எதுவுமின்றி படையினரைச் சந்தித்தால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை எனலாம்.

எதுவாயினும் படையினரைச் சந்தித்த சம்பந்தர் ஐயா, அடுத்து அவசர அவசரமாக ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும்.

அவரைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க படையினர் தயார், நீங்கள் தான் உத்தர விடவில்லையாம் என்று கூற வேண்டும்.

அப்போது தான் ஜனாதிபதியும் படைத்தரப்பும் முறுகிக்கொள்ளும் நிலைமை வரும். இதை சம்பந்தர் ஐயா உடனடியாகச் செய்வார் என நம்பலாம்.

வலம்புரி

கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா?

தமிழர்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் ஆச்சரியம் தருபவைகளாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவற்றுள் சில செய்திகளையும் அவற்றின் பின்னணிகளையும் அவை தொடர்பான பொதுமக்களின் வியாக்கியானங்களையும் இந்தப் பத்தியில் நோக்க வேண்டிய தேவையுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி நிகழ்த்திய உரையொன்றுக்கு பல ஊடகங்களும் முக்கியத்துவமளித்து முன்பக்கத் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டிருந்தன.

அவரது உரை பின்வருமாறு இருந்தது “பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீளளிக்குமாறு நான் உத்தரவிட்டும், படைத்தரப்பினர் அதனை செயற்படுத்தாது இருப்பது எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது” என்று ஜனாதிபதியின் உரை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியானவர் அப்பதவி வழியாக சகல அதிகாரங்களையும் கொண்டவராக விளங்குவார். 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு நிறைவேற்றிய புதிய அரசியல் யாப்பே இத்தனை அதிகாரங்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது பாணியில் விபரிக்கையில், ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதியாகிய தாம் கொண்டுள்ளதாக மிடுக்கு வீரத்துடன் தெரிவித்திருந்தார்.

அதே அரசியல் யாப்பின் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாகவே மைத்திரிபால சிறிசேனவும் இருக்கின்றார். அப்படியானால் தமது உத்தரவுகளை படையினர் செயற்படுத்தவில்லையென்று இவர் கூறினால் அதனை யார் நம்புவர்? அதனை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? பொய்யோ உண்மையோ ஓரளவுக்காவது நம்பக்கூடியதாக இருக்க வேண்டுமல்லவா?

இது ஒருபுறமிருக்கட்டும்! தொடர்ந்து இடம்பெறும் தமிழ் மக்களின் பலவேறு வடிவங்களிலான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு முகம் கொடுக்க முடியாத அவலம் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழர் வாழும் பிரதேசங்கள் எங்கும் அரசாங்க அதிகாரிகளுடனும் படைத்தரப்பினருடனும் காணிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் இச்சந்திப்புகளுக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இச்சந்திப்பொன்று தொடர்பாக வெளியான ஒரு செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது. “ஜனாதிபதி கூறினால் பொதுமக்கள் காணிகளிலிருந்து உடனடியாக இராணுவ முகாம்களை நீக்கி அங்கிருந்து வெளியேறுவோம் என படைத்துறை அதிகாரி ஒருவர் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்” என்று அந்தச் செய்தி அமைந்திருந்தது.

இந்தத் தகவலை கூட்டமைப்பினரே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் என்பதையும் அந்த ஊடகங்கள் குறிப்பிடத் தவறவில்லை.

படைத்தரப்பு இப்படிக் கூறுவது உண்மையானால், தாம்; உத்தரவிட்டும் படையினர் அதனைச் செயற்படுத்தவில்லையென்று ஜனாதிபதி முன்னர் தெரிவித்தது அப்பட்டமான பொய்யா என்ற கேள்வி எழுகிறது.

அல்லது, ஜனாதிபதி சொன்னதுதான் உண்மையென்றால், படைத்தரப்பினர் கூட்டமைப்பினரிடம் சொன்னது பொய்யா என்று கேட்கத் தோன்றுகிறது.

இரு தரப்புடனும் பேச்சு வார்த்தை நடத்திவரும் கூட்டமைப்பினர் நினைத்தால் இதனைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஷசன்டே லீடர்| பத்திரிகை இந்த மாதம் 16ம் திகதிய இதழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை எச்சரிக்கிறது. (TNA warns government) என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது .

கூட்டமைப்பினால் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் என்ற நேரடி எச்சரிக்கைப்பாங்கில் இது எழுதப்பட்டிருந்தது. “வடக்கிலுள்ள தமிழர்களின் முக்கிய விடயங்களில் சிலவற்றையாவது உடனடியாக இந்த அரசு கவனிக்கத் தவறினால், அரசாங்கத்தை மாற்றும் விடயத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்” என்பது இந்த ஆங்கிலச் செய்தியின் முதற்பந்திக்கான தமிழாக்கம்.

வவனியாவில் தனியார் நிறுவனம் ஒன்று அன்பளிப்பாக வழங்கிய 150 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் கூட்;டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று இச்செய்தி கூறுகின்றது.

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா?

இது எதனையுமே குறிப்பிட்டுச் சொல்லாது மொட்டையாக நிகழ்த்தப்பட்ட இந்த உரைக்கான மூலவிளக்கத்தை கூட்டமைப்பிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் சரிந்து செல்லும் தங்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த, இப்படியான வெடிகுண்டுகளைத் தேவைப்படும் வேளைகளில் வீசுவது கூட்டமைப்புக்குக் கைவந்த கலை. இத்தொடரில் இறுதியாக வெளிவந்த இராணுவத்தரப்புச் செய்தியொன்று மிக முக்கியமானது.

கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் தொடர்பாக அங்குள்ள இராணுவத்துடன் கூட்டமைப்பினர் பேச்சு நடத்தியபோது, எக்காரணம் கொண்டும் முழுக் காணிகளையும் மக்களிடம் மீளளிக்க முடியாதென்று படைத்தரப்பு கூறியுள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள போராட்ட மக்கள், முழுக்காணிகளையும் ஒப்படைக்காதவரை தங்கள் போராட்டம் தொடருமென அறிவித்ததுடன், அறுபது நாட்களுக்கும் மேலாக அதனைத் தொடர்கின்றனர்.

பொதுமக்கள் காணிகள் மீளளிப்புத் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று விதமான, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளிவந்துள்ளதை இதுவரை பார்க்க முடிந்தது.

அரசாங்கம் இவ்விடயத்தில் எதனையுமே செய்வதற்குத் தயாரில்லையென்பதையே இதனூடாகப் பகுத்துப் பார்க்கலாம்.

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட அவகாசம் வழங்கப்பட்டு ஒரு மாதம் முடிந்துள்ளதாயினும், எந்தவொரு மாற்றத்தையும் காணமுடியவில்லை.

ஆனால், கூட்டமைப்பினரின் பேச்சுகளும் அறிக்கைகளும் ஏதோவொரு மாற்றத்தைக் காட்டுவதை சில ஊடகங்கள் சுட்டியுள்ளன.

எதற்கெடுத்தாலும், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என உச்சத்தில் குரலெழுப்பும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, போராடும் மக்களுடன் இணைந்து நாமும் போராடுவோம் என்று அண்மையில் கூறியதை இரு வாரங்களுக்கு முன்னர் இங்கு எழுதியிருந்தோம்.

இப்போது, அந்த ஏணியில் ஒருபடி மேலே ஏறி நின்று மற்றொரு கருத்தை இவர் வாய்மொழிந்துள்ளார்.
இந்த அரசு எம்மை ஏமாற்றுமானால், சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்குமென்பது மாவையரின் வாய்மொழி. அது என்ன தீர்மானமோ?

சர்வதேச சமூகத்துடன் சேர்ந்துதானே இலங்கைக்கு இரண்டு வருட காலநீடிப்பை கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்தது.
இப்போது அதே சமூகத்துடன் சேர்ந்து இன்னொரு தீர்மானமா? தமிழரின் காதுகளில் இனியும் பூ வைப்பதற்கு இடமில்லையென்பதை கூட்டமைப்பினருக்கு யார் எடுத்துக் கூறுவது?

இவைகள்தான் கூட்டமைப்பினரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்றால், இதற்குக் காரணம் ஏமாற்றமா? அல்லது மனமாற்றமா?
பனங்காட்டான்

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.)

உலகப் போரியல் வரலாற்றின் சாதனைச் சமரான குடராப்பு தரையிறக்கமும் 34 நாட்கள் நீண்ட இத்தாவில் சமர்க்களத்தின் விளைவாக தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.)

ஆனால் மறுவளமாக இலங்கை இந்திய அரசுகளின் குறியாக இருந்த தமிழர் சேனை மேற்கு நாடுகளினதும் குறியாக மாறிய தாய்ச்சமர்க்களம் அது.

மறைந்த படைத்துறை ஆய்வாளர் தராகி சிவராம் எங்களோடு பேசும் போது கூறியது பின்வருமாறு ” நான் அமெரிக்க படைத்துறை கல்லூரிக்கு அழைக்கப்பட்ட போது என்னைச் சூழ்ந்த அமெரிக்க அதிகாரிகள் பிரபாகரன் எப்படி இந்த திட்டத்தை வரைந்தார்? 34 நாட்கள் எப்படி 1200 போராளிகள் 40000 படையினரை சமாளித்தார்கள்? பிரபாகரன் என்ன நம்பிக்கையில் தனது மூத்த தளபதியை (பால்ராஜ் ) தரையிறக்கினார்? நாம் புலிகளை சாதாரணமாக எடைபோட்டு விட்டோம். கற்பனையில் கூட யோசிக்க முடியாத போர்த் தந்திரோபாயம் அது. பிரபாகரன் உண்மையிலேயே ஒரு மிலிட்ரி ஜீனியஸ்” என்று புகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் அவர்கள் இதன் விளைவாக புலிகளை அழித்தொழிக்கப்பட வேண்டிய இலக்குகளாக தெரிவு செய்து விட்டார்கள் என்ற உண்மையையும் அப்போது கூறினார்..

பிறகு நடந்தது வரலாறு..

அப்போது சிவராம் கூறியது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

” புலிகளை இலங்கை இந்திய அரசுகளால் மட்டுமல்ல யாராலும் சண்டையிட்டு அழிக்க முடியாது. ஆனால் அனைவரினதும் பின்கதவு கூட்டு சதியும் சூழ்ச்சியும் துரோகமும் அவர்களை அழிக்கலாம்”

-Parani Krishnarajani

http://www.eelamview.com/2014/04/21/elephant-pass-battle-day-3/

இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிர்காக்க விரைந்து உதவுங்கள் !

இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடும்பஸ்தரின் உயிர்காக்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தசாமி ஈஸ்வரன் (45) என்னும் 4 பிள்ளைகளின் தந்தைக்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

புலோப்பளை மேற்கு, பளை என்னும் முகவரியில் வசித்துவரும் கந்தசாமி ஈஸ்வரன்(45) என்பவர் இருதய நோயினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது நோய் தீவிரமடைந்துள்ளமையால் இருதய சத்திர சிகிச்சை அவசரமாகச் செய்ய வேண்டும் என மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.

இவருக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு 1000000 (பத்து இலட்சம்) ரூபா பணம் தேவைப்படுவதாக இவரது மனைவியாராகிய ஈஸ்வரன் அற்புதராணி என்பவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது குடும்பம் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் இவரது உடலிலும் எறிகணை வீச்சினால் ஏற்பட்ட காயங்கள் காணப்படுகின்றன.

அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த மேற்படி குடும்பஸ்தர் கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதனால் இவரது குடும்பம் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவரது குடும்பத்தால் கொழும்பு மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான 1000000 (பத்து இலட்சம்) ரூபா பணத்தினைப் பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் தனது கணவனின் இருதய சத்திர சிகிச்சைக்கான பணத்தினை வழங்கி உதவுமாறும் கருணை உள்ளம் கொண்ட பரோபகாரிகளிடம் பணிவன்புடன் அவரது மனைவி உதவியை எதிர்பார்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கருணை உள்ளம் கொண்டவர்களே உயிர்காக்க உதவுங்கள்.

தங்களது உதவிகளை வழங்குவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் (ஈ.அற்புதராணி) – +94779290816 மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் – 80742451 (இலங்கை வங்கி) என்பவற்றினூடாகத் தொடர்புகொண்டு வழங்க முடியும்.

மேலதிக தகவல்களை, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல.+94776913244 உடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

மேற்படி குடும்பஸ்தரது வைத்தியசாலை சான்றிதழ், கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்துக்குள் உள்ள புற்றுநோய் !

ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த சிறிலங்கா இராணுவ வீரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ற்றியில் எவ்வாறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தொடர்பான அதிர்ச்சியான ஒரு பதிவை The Associated Press ஊடகம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

அமைதி காக்கும் படையில் பணியாற்றிய சிறிலங்கா இராணுவத்தினர் 12 வயதுச் சிறுவர் மற்றும் சிறுமிகளைக் கூடத் தமது பாலியல் இச்சைகளுக்காகப் பயன்படுத்த விரும்பியதாக இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டனையை எதிர்நோக்குவதென்பது மிகவும் அரிதானதாகும். இதனால் பாலியல் வன்முறைகளுக்கு உட்படும் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக் கொள்வதுமில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதி காக்கும் படையினர் மீது 2000 வரையான பாலியல் மீறல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைதி காக்கும் படையினர் மற்றும் இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் மீறல்கள் என்பது முன்னரை விடத் தற்போது மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறான மீறல் குற்றச்சாட்டுக்களில் 300 வரையான சம்பவங்கள் சிறுவர்கள் மீதான பாலியல் சம்பவங்களாகும். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குற்றவாளிகளே தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாலியல் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் ஐ.நா அதிகாரிகள், விசாரணையாளர்கள் மற்றும் ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பாலியல் மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 23 நாடுகளிடமும் AP ஊடகம் நேர்காணலை மேற்கொண்டது.

இவ்வாறான பாலியல் மீறல்களில் ஈடுபட்ட பல இராணுவ வீரர்கள் தொடர்ந்தும் தமது நாட்டு இராணுவத்தில் அங்கம் வகிப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ‘ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த போது பாலியல் மீறல்களில் ஈடுபட்ட சில சிறிலங்கா இராணுவ வீரர்கள் தற்போதும் தமது இராணுவத்தில் பணியாற்றுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தொடர்ந்தும் ஹெய்டி மற்றும் வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். சிறிலங்கா இராணுவ வீரர்கள் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் ஐ.நா தொடர்ந்தும் சிறிலங்கா வீரர்களைத் தனது அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது’ என AP ஊடகம் மேற்கொண்ட நேர்காணலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 200 வீரர்கள் மாலிக்கு அனுப்பப்படும் ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கவுள்ளதாக அண்மைய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. சிறிலங்காவானது தனது பாதுகாப்புத் துறையைச் சீர்திருத்துவதில் அக்கறை காண்பிக்கின்றது என்பதை நம்புவதற்கு எவ்வித காரணங்களும் காணப்படவில்லை.

ஹெய்டியில் பணியில் ஈடுபடும் அமைதி காக்கும் படையினரில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் மீறல்களில் ஈடுபட்டனர் என்பது மட்டுமல்லாது சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதும் 2015ல் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் கூட சிறிலங்கா இராணுவத்தினர் பல்வேறு பாலியல் மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான சாட்சியங்கள் உள்ளன என்பதையும் எவரும் மறந்துவிடக் கூடாது.

சிறிலங்காவிற்குள் இடம்பெற்ற வன்முறைகளை ஆராயும் போது இனம் என்கின்ற காரணியை நினைவிற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா இராணுவத்தில் அங்கம் வகிக்கும் இராணுவத்தினர் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழர்களாவர்.

ஆங்கிலத்தில் – Taylor Dibbert
வழிமூலம் – The diplomat-The Cancer Within Sri Lanka’s Military
மொழியாக்கம் – நித்தியபாரதி

AP Exclusive: UN child sex ring left victims but no arrests

Elephant pass Victory Day 2000 April 22nd !

17 years ago, on April 22nd, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) hoisted their flag in the heart of what was once one of the most fortified military garrisons in South Asia. The fall of Elephant Pass, described as “impregnable” by a US army officer who visited the garrison months earlier, established the Tigers as the only non-state military force in the world today capable of complex manoeuvre war fighting.

Infantry formations and crack commando units of the LTTE overran the sprawling Sri Lanka army base complex straddling the gate way to Jaffna on 21 April.

On its southern front facing the LTTE’s military formations, the garrison was fortified heavily with three main lines of defence, in the Elephant Pass lagoon, its beach and on the land by the coast. These were reinforced with miles of concrete and steel structures, minefields, layers of concertina, minefields and beds of deadly spikes.

The Sri Lanka army had carefully studied the loopholes and weaknesses in the defences of its camps in Pooneryn (November 93), Mullaithivu (July 96), Kilinochchi (September 98) which the Tigers had exploited when they overran these garrisons; and with advisory input from US and British militaries planned and built a formidable system of fortifications to hold the strategic gateway to Jaffna.

Read more …………

http://www.eelamview.com/2014/04/21/elephant-pass-victory-day-2000/

Up ↑