Search

Eelamaravar

Eelamaravar

Month

September 2016

யாழில் இந்திய அரசின் மறைமுக ஏற்பாட்டில் S. P. Bயின் நண்பேன்டா இசை நிகழ்ச்சி !

sp-gangai-jaffna

அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் இலங்கை அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN) இலங்கை அரச வானொலி வசந்தம் FM ( ITN ) மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகிந்த சிந்தனையில் உருவான ஒரே குரல் ஒரே தேசம் அரச தொலை தொடர்பு நிறுவனம் (SRILANKA TELECOM) ஆதரவில் தென்னிந்திய இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரி பாஸ்கர் மற்றும் மலையகத்தை பின்னணியாக கொண்ட ஐங்கரன் மீடியா நிறுவனத்திற்க்கு பணம் கொடுத்து பொருத்தமற்ற சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியை இந்தியத் தூதரகம் மறைமுகமாக நடாத்த உள்ளனர் .

இந்நிகழ்வானது செப்டம்பர் 24 ம் திகதி மிகவும் வெற்றிகரமாக யாழில் இடம்பெற்ற ” எழுக தமிழ்” மாபெரும் எழுச்சி பேரணிக்கு கிடைத்த வெற்றியை மழுங்கடித்து கேலியாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில்தான் இந்நிகழ்வு நடைபெற உள்ளது

• இராணுவத்தால் கையடக்கபட்ட மக்களின் நிலங்கள் திருப்பி வழங்காமை
• விசாரணை இன்றி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் தற்போதைய உண்ணாவிரத போராட்டம்
• தமிழர் பிரதேசங்கள் புத்த மயமாக்கல்
• சிங்கள குடியேற்றம்
• காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல்
• இனப்படுகொலைக்கான அனைத்துலக விசாரணை
• இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்படாமை
• சரணடைந்த போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டைமை
• வடக்கில் அபிவிருத்தியும் தொழில் வாய்ப்பும் புறக்கணிக்கப்பட்டவை
இது போன்ற பல பிரச்சினைகளுக்கு ஈழத் தமிழர் முகம் கொடுத்து இருக்கும் வேளையில் திரை மறைவில் இந்திய அரசின் தேவைக்கு ஏற்ப இன் நிகழ்ச்சி இப்போது நடைபெறுவது வருந்ததக்கது .

தமிழீழ தமிழ் மக்கள் என்றென்றும் S. P. பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பாசமும் கொண்டவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்போது இதுபோன்ற மேலும் பல்வேறு நிகழ்சிகளை யாழ் மக்கள் வரவேற்பார்கள்.

Death of gandhism and indian medias

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும்.

காந்தி தேசத்திற்கு காந்திய மொழியில் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை உணர்த்துவதற்காக தன்னையே உருக்கி பன்னிரு நாட்கள் ஒரு துளி நீரேனும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து வீரமரணமடைந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவானது பாரத தேசத்தின் தமிழினத்துரோகத்தின் சாட்சியாகவே காலமுள்ளவரை நினைவுகொள்ளப்படும்.

அந்த துரோக வரலாற்றை புதுப்பிக்கும் முயற்சியாகவே யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் முன்னேற்பாட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

உலக அகிம்சை வரலாற்றையே தனது தியாகத்தால் புரட்டிப்போட்டு புதிய வரலாறு படைத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளிற்கு அண்மித்த நாளில் அவரது நினைவிடத்திற்கு அண்மையிலேயே இந்நிகழ்வை நடத்துவதென்பது எமது தேசிய ஆன்மாவை அசைத்துப்பார்க்கும் முயற்சியாகும்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பேயாட்சியில் எமது விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சான்றுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் எமது தேசிய ஆன்மாவின் அத்திவாரமாக விளங்கும் மாவீரர்கள் துயில்கொள்ளும் துயிலுமில்லங்கள் உழுதெறியப்பட்டும் உள்ள நிலையில் யாழ்.இந்தியத் துணைத்தூதரகமும் தேசியத்தை சிதைக்கும் முயற்சியில் தன்னையும் இதன் மூலம் இணைத்துக்கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினவிடங்களையும் நினவுச்சின்னங்களையும் அழித்தொழித்தது போதென்று எமது நினைவில் இருந்தும் அழித்துவிடலாமென்றே இவ்வாறான நிகழ்வுகள் எம்மிடையே வலிந்து திணிக்கப்படுகிறது. இவ்வாறான விசம முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

பாரத தேசத்தின் தமிழினத்துரோகத்தின் அழியா சாட்சியாக விளங்கிவரும் தியாக தீபம் திலீபன் அவர்கள் பிறந்த யாழ் மண்ணில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதென்பது நன்கு திட்டமிடப்பட்ட தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது தாயக உறவுகள் இந்நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் துணைத்தூதரகத்தை அமைத்து அதனை தளமாக்கொண்டு தமிழர் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இலங்கை துணைத்தூதரகம் தமிழீழ ஆதரவாளர்களின் போராட்ட மைய்யமாக்கப்பட்டு இறுதியில் துணைத்தூதரகத்தையே வெளியேற்ற வேண்டும் என்ற நிலையை எட்டியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

சென்னையில் வெறுமனே கொடிபிடித்து கோசம் போடும் போராட்டத்துடன் வரையறுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டமானது யாழ் மண்ணிலும் அவ்வாறே இருந்துவிடுமென நினைத்துவிடாதீர்கள்!

யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் வெறுமனே தூதரக வேலைகளுடன் நிறுத்திக் கொள்வதன் மூலம் அதன் கண்ணியத்தினை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தமிழீழ மண் என்றும் துரோகங்களை நீண்ட நெடிய காலம் அனுமதித்ததில்லை என்ற வரலாற்றுப் பேருண்மையினை யாழ்.இந்தியத் துணைத்தூதரக விடயத்திலும் நிரூபனமாவது திண்ணம்.

தூதரக வேலைகள் தவிர்த்து எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கு ஊறுவிழைவிக்கும் செயற்பாடுகளில் யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் இனியும் ஈடுபடுமாக இருந்தால் இருந்த சுவடே தெரியாமல் துடைத்தழிக்கப்படுவது உறுதி.

ஆசிரியர்.
குறியீடு இணையம்.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை வழங்க இராணுவம் மறுப்பு!

surrendered-ltte-members-2009இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பாக இராணுவம் முரண்பட்ட தகவல்களை வழங்கிவருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினரான எழிலன் என்று அழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட 5பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட மேல்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையானது முல்லைத்தீவு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியான சும்சுதீன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிறீலங்கா இராணுவத்தின் 58ஆவது பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரட்ணவேல் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்போது, இராணுவ அதிகாரி கடந்த வழக்கின்போது மன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கும், இன்று, மன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக சட்டத்தரணி ரட்ணவேல் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

மேலும், சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் பட்டியல் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்த 58ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சானக்க குணரத்ன, சரணடைந்து விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்களை மன்றில் ஒப்படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இராணுவத்தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மனுதாரர் தரப்பு சட்டத்தரணியான கே.எஸ்.ரட்ணவேல் அரசியல்வாதி போன்று செயற்படுவதாக மன்றில் விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

23

PDF ltte surrenders may 2009 2

bala

 

 

m3 m1 isaipriya-1 isai_perija_1852009_4 isai_perija_1852009_3

5 years on: The White Flag Incident (2009 — 2014)[ White-flags.org ][ May 18 00:38 GMT ]

This is the story of the killing or disappearance of several groups of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who surrendered to the Sri Lankan army on or about 18 May 2009 at the end of Sri Lanka’s civil war. They were told by the government if they carried a while flag they would be safe crossing the frontline. But when they surrendered it became apparent they had been lured into a trap.Several were executed in cold blood – others have never been seen since. [ full story |

Pdf STOP_report

Pdf Srilanka White Flag Killings

Video


http://www.stop-torture.com/


Beyond the beach Sri Lanka 5 years on
Beyond the beach: Sri Lanka, 5 years on Five years after one of the bloodiest conflicts in recent history, a traumatised society hovers between war and peace. [ more ]


As Sri Lanka Bans Commemoration of Tamils It Killed, UN Silent As on Rapes [ May 13, 2014 10:48:45 GMT ] [ Inner City Press ]

With the approach of the fifth anniversary in Sri Lanka of what even the UN called the “Bloodbath on the Beach,” Inner City Press on May 12 asked UN spokesman Stephane Dujarric about the Mahinda Rajapaksa government banning commemorations of those deaths in the North: Inner City Press: I want to ask you on Sri Lanka, this coming Sunday is viewed as the fifth anniversary as the end of the conflict and the Government is going to celebrate its victory, but they’ve basically outlawed any memorial of those killed in the Northern Province. And since this is seen as kind of a reconciliation issue and I know that, in fact, the Human Rights Council has called for an inquiry of the killing of those people in the Northern Province. [ Full Report ]

ltte surrenders may 2009 2

ltte surrenders may 2009 3

ltte surrenders may 2009 4

ltte surrenders may 2009 5

ltte surrenders may 2009 6

ltte surrenders may 2009

2004 ஆண்டின் ஒளிவீச்சு முழுநீளக் காணொளி

2003-dvd

உயிராயுதங்கள்[ கரும்புலிகள் ]பாகம் 1-8 காணொளிகள்

black-tigers-1-3

நிலமும் வானும் கடலும் அதிர்ந்தது மேஜர் சிட்டு பாடல்

கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தாக்குதல்

காட்டூன் கலைஞன் அஸ்வின் சுதர்சன் மறைவு!

கண்ணீர் அஞ்சலி

cartoonist-aswinமாதகலை சொந்த இடமாக கொண்ட அஸ்வின் சுதர்சனின் பிரிவில் துளியம் குழுமத்தினராகிய நாமும் பங்குகொள்கின்றோம்.

எமது ஊடகத்தின் ஊடாகவும் தனது படைப்புக்களை வெளிக்கொண்டுவந்த அன்னாரின் இழப்பு மிகவும் கவலை தருகின்றது.

ஒரு சிறிய காலத்தில் அவருடன் உண்டான தொடர்பும் சமூக அக்கறையுள்ள அவரது பார்வையும் எம்மை இன்னும் வருத்துகின்றது.

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருடனும் அவரது நண்பர்களுடன் எமது கரங்களையும் இறுக பற்றிக்கொள்கின்றோம்.

காட்டூன்கள்

tamilini book cartoon

துளியம் ஊடக குழுமம்ex-ltte-poisionedtna sampanthan lanka tamils

பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நடந்த தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள்

இந்திய-சிறிலங்கா அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில், நேற்றுக்காலை அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் இங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

thileepan-2016-jaffna

thileepan-2016-jaffna-university-2

thileepan-2016-jaffna-university

அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும், தியாகதீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகள் பகிரங்கமாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரியும் புகழும் தலைவர் பிரபாகரன்!

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான போர் முடிவுற்ற பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் தனித்துவமானவராகவே காணப்படுகிறார்.kamal-gunaratne-about-prabakaran-english

வன்னியில் இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இரானுவத்தினரால் வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டது.

ஆயினும் யுத்த வெற்றி பற்றி உரையாற்றிய போதும் அரசு தரப்பிலோ இராணுவ தரப்பிலோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எக்கருத்தையும் வெளியிடவில்லை. அத்தோடு தமிழ் மக்கள் இன்றும் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர், இருக்கவேண்டும் என பிரார்த்திக்கின்றனர்.

30 வருட விடுதலைப் போராட்டமானது தமிழர் சார்பில் சாதக, பாதக விடயங்களை கொண்டிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் மதிக்கப்பட்ட உறுதிமிக்க தலைவராக பிரபாகரன் எப்போதும் நிமிர்ந்து நிற்கிறார். அத்துடன் விடுதலை போராட்டதிற்கு தமிழ் மக்கள் ஆதரவழித்து உறுதுணையாகவும் நின்றனர்.

தென்னிலங்கையில் பிரபாகரன் பயங்கரவாத இனவெறி பிடித்த தலைவராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுகந்திரக்கட்சி ஆட்சியாளர்களாலும் கடும்போக்கு சிங்கள இனவாதிகளாலும் சித்தரிக்கப்பட்டார். தென்னிலங்கை மக்களும் அதனை அப்படியே நம்பினார்கள். மேற்குலகமும், இந்தியாவும் அப்படியே நம்பின.

தமிழினத்தின் தலைவரான பிரபாகரனது தலைமைத்துவம் மிகச்சிறப்பானதாக இருந்ததாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குனரத்ன புகழ்ந்துரைத்திருக்கின்றார்.

இந்த மாதம் ஆறாம் திகதி பதவியிலிருந்து ஒய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணவர்த்தன 800 பக்கங்கள் அடங்கிய “நந்திக் கடலுக்கான பாதை” என்ற நூலினை எழுதி வெளியிட்டார். இது சம்பந்தமாக வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரபாகரன் பற்றிய உள்ளார்ந்த பல விடயங்களை சொல்லி இருந்தார். போர் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பல நாட்டுப் பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் இருந்த ஆட்சியாளருக்கு சவாலாகவும், படைத்தலைவர்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் அவருடைய ஆளுமை வெளிப்பட்டு இருந்தது. நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரான எரிக்சொல் ஹெய்ம் கடந்த 2014ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்தில், விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு நோர்வே அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. விடுதலைப்புலிகளின் போராட்டம் தமிழ் மக்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகும்.

பயங்கரவாதம் உலக நாடுகளுக்கு சவாலாக இருந்ததாகவும், பன்னாட்டுச் சட்டத்திட்ட ஒழுங்குகளின் படி அதனை அழித்தொழிப்பதே வரலாறாகும். அதனையே உலகநாடுகள் செய்துள்ளன. பிரபாகரனின் போர்த் தந்திரோபாயங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது தனது தனிநாட்டுக்கான உறுதியிலிருந்து இறுதி நிமிடம்வரை அவர் மாறவில்லை.

ஆகவே அவர் அரசிற்கு விலைபோகாத மாபெரும் தலைவர் என தமிழ் மக்களால் போற்றப்படுவதாக தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருக்கிறார் என்கிறார். முன்னால் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகோ குறிப்பிடுகையில் மகிந்தவைப்போல் பிரபாகரன் கொடூரமானவர் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் முன்னாள் இந்திய இரானுவத்தின் உயரதிகாரியான கேணல் ஹரிகரன் பிரபாகரனின் போர்த் திறமைகளை சில வருடங்களுக்கு முதல் புகழ்ந்திருந்தார்.

போர் முடிந்த பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளாக பிரபாகரன் குறித்தும், விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்தும் அதன் லட்சியங்கள் குறித்தும் மகிந்த தரப்பினர்கள் மட்டுமன்றி ஏனைய அரசியல், படைத்துறைத் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி, தமிழ் மக்கள் பேரவை போன்ற தமிழ் அமைப்புக்கள் மட்டுமன்றி தென்னிலங்கையின் இருபெரும் அரசியற்கட்சிகளின் வடக்கு கிழக்கு பிரமுகர்களும், சர்வதேச தமிழ்ப் பிரதிநிதிகளும் குறிப்பாக தமிழ்நாட்டில் சீமான், வைக்கோ, நெடூமாறன் போன்ற தமிழ்த்தேசிய பரப்பில் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைப்பவர்களும் பிரபாகரனை ஒரு கருவியாகவே பார்க்கின்றனர் அல்லது தமது அரசியலுக்கு அவரது பெயரை பயன்படுத்துகிறார்கள்.

இலங்கை அரசியலில் எவர் வேண்டுமானாலும் பிரபாகரனது பெயரை கையில் எடுக்கலாம். அது வேறு விடயம். விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் எவ்வாறு செல்வாக்கு பெற்றிருக்கின்றது என்பதை தேர்தல் காலங்களில் பார்க்கலாம். தமிழ்த் தலைமைகள் பிரபாகரனை போற்றிப்பாடி வாக்குப்பிச்சை எடுப்பார்கள். தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரபாகரனை தூற்றி வாக்குப்பிச்சை எடுப்பார்கள். பிரபாகரனை வைத்து எந்த அளவுக்கெல்லாம் அரசியல் நடத்தமுடியுமோ அந்த அளவிற்கு நாட்டின் இன்றைய அரசியல் நடைபெறுகிறது.

பிரபாகரன் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்க நெறிகளை பின்பற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை கண்ணியத்துடன் நடத்தினார். அவர் அனைத்து போராளிகளையும் ஈழத் திருநாட்டின் பிள்ளைகளாகவும் தனது பிள்ளைகளாகவுமே எண்ணினார். எந்த ஒளிப்படத்திலும் பிரபாகரன் மதுபானக் கோப்பையுடன் நாம் கண்டதில்லை. அவர் ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் உலகத்தலைவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தடம்பதித்திருந்தார். பலரும் கற்கவேண்டிய பண்புகள் அவரிடம் உண்டு. பிரபாகரனின் தலைமைத்துவம் இறுதி நிமிட சமர் வரையில் மிகத் திறமையானதாகவே இருந்தது. அவரிடம் நிறையப் பொறுமை இருந்தது. இதுதான் என முடிவெடுத்தால் அவசரப்படமாட்டார். சரியான தருணம் வரை தனது பயணங்களுக்காகக் காத்திருக்கவே செய்வார்.

தமிழ்த் தலைவர்கள் பயங்கரவாதத் தலைவராக பிரபாகரனை பார்க்கவில்லை. தமது இனத்தின் தலைவராகவே ஒவ்வொரு தமிழரும் பார்த்தனர். பிரபாகரன் ஆயுதம் ஏந்துவதற்கு கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களே காரணம் என்பதை அவர்கள் தற்போது தெரிந்தும் தெரியாமலும் ஒத்துக்கொண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

பிரபாகரன் உலகின் பார்வையில் முள்ளிவாய்க்கால் போர் முடியும் வரையில் பயங்கரவாதியாகவே இருந்தார். ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு அவர் ஒத்தியங்கவில்லை. எவருக்கும் அடிபணிவதில்லை. மற்றவர்களின் பேச்சைக்கேட்டு தன்னினத்தை அடகு வைக்கவில்லை. தன்னை நம்பிய தமிழினத்தை விட்டுக்கொடுக்கவும் இல்லை.

இதைத்தான் “A FLECTING MOMENT IN MY COUNTRY ” என்ற நூலில், பெண்ணிய செயற்பாட்டாளரும் மனித உரிமையாளருமான ந.மாலதி , “பிரபாகரனையும் நெல்சன் மண்டேலாவையும் ஓப்பீடு செய்யமுடியுமா? மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு பிரபாகரன் ஒத்துப்போகவில்லை. மண்டலோ, பிடல்காஸ்டோ, சேகுவேரா, கோசிமின் போன்ற தலைவர்கள் வரிசையில் பிரபாகரன் தனித்துவமானவர்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமல்ல உலகெங்கும் போராடும் இனங்களுக்கு மண்டேலாவின் முன்பாதி வாழ்வுதான் எடுத்துக்காட்டேயொழிய, பின்பாதி வரலாறு அல்ல. ஆனால் பிரபாகரனின் வாழ்வு அப்படிப்பட்டதல்ல. போராடும் இனங்களின் ஆன்மா அது. உலக அரங்கை நிர்மூலம் செய்து அது போராட என்றும் உந்துதலாகவேயிருக்கும் எனவே பிரபாகரனை மண்டேலாவுடன் ஒப்பிடுவது தவறு” என விவரித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில் மேஐர் கமால் குணவர்த்தன விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு முன்னிலை வகித்த தளபதி ஆவார். பிரபாகரனை ஒருபுறம் பாராட்டி இருந்தாலும் யுத்தகளத்திலே பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு முன்னின்று பாடுபட்டவர் இவராவார்.

கோகுலன்

தமிழினியின் கூற்றை பொய்யாக்கும் கமால் குணரத்ன

“நந்திக் கடலுக்கான பாதை” என்ற நூல் தற்போது பரபரப்பாக பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துகளுக்கு காரணமாக அமைந்து விட்டது அதே போல பல்வேறு வகையான சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.tamilini book cartoon

யுத்த நிறைவிற்கு பின் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அவர் புத்தக வெளியீட்டுக்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு அவரின் கருத்து மூலமாகவே பதில் கிடைத்து விட்டது எனலாம்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் கூறப்பட்ட, புலிகளின் தோல்விக்கான காரணம் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது புத்தகத்தின் ஊடாகவும் அவர் வெளியிட்ட கருத்துகள் மூலமாகவும் மறுக்கப்படுகின்றது.

அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்பதும், புலிகள் அமைப்பில் இருந்து அரைப்பங்கு போராளிகளுடன் கருணா பிரிந்து சென்றதையும் தோல்விக்கான காரணம் என தமிழினியின் கூர்வாளின் பதிவு கூறுகின்றது.

இதே வேளை பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. விடுதலைப்புலிகள் திறமையாக போரிட்டனர்.kamal-gunaratne-about-prabakaran-english

தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. கொரில்லாப் போர் முறையில் இருந்து பிரபாகரன் விலகியமையே தோல்விக்கான காரணம் என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியிருந்தார்.

30 வருடங்கள் முன்னேற்ற பாதையில் இருந்த விடுதலைப்புலிகள் போர் முறைப்பற்றி அறிந்திருக்காமல் போர் செய்ய துணிந்திருக்க மாட்டார்கள் என்பதும் அறிந்த விடயமே.அவ்வாறெனின் எப்படி தோல்விக் கருத்தை மேஜர் முன்வைக்க இயலும்.

இதேவேளை இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேசத்தின் முன்னாள் குற்றவாளிகளாக்கப்பட்டு கொண்டு வரும் இவ்வாறான வேளையில் அதனை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாகவும் போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்ற கூற்றை வலியுறுத்துவதற்காகவும் மட்டுமே இவர் மூலம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாறாக தனது 800 பக்க புத்தகத்தில் யுத்தம் பற்றி உண்மையான தகவல்களை அவர் கூற வில்லை, அப்போதைய படைத்தளபதி சரத் பொன்சேகாவின் கருத்துகளுக்கும் மாற்றுக் கருத்துகளையே இவர் கூறியிருக்கின்றார்.

ஒரு புத்தகம் எனும் ரீதியில் அவை தொகுப்பாக பிரதிபலிப்பாக அமைய வேண்டும் ஆனால் இவர் தனது புத்தகத்தில் போர் தொடர்பில் தெளிவாக விபரிக்கவில்லை அவ்வாறு விபரித்தால் அவரும் ஒரு போர்க்குற்றவாளியே போர்க்குற்றத்தை வெளியிட மாட்டேன் அதனை அறிந்து கொள்ள கல்லறைக்கு வாருங்கள் என்றும் கூறிவிட்டார். அப்படியானால் எதற்காக புத்தகம்?

நிலமை இவ்வாறிருக்கும் போது அவர் எத்தகைய உண்மைத்தன்மையினை வெளியிட்டிருக்க முடியும். ஆக போர்க்குற்றத்தில் இருந்து இராணுவத்தை காக்க இராணுவம் செய்த செயலே இந்த நந்திக்கடல் புத்தக வெளியீடு என கூறப்படுகின்றது.

இதேவேளை இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எனவும் கமால் குணரத்ன தெரிவித்திருந்தார்.

இங்கு அவர் கூற முற்பட்டது அப்போதைய அரசின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையே என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. இராணுவத்தளபதி மௌனமாகவும் படைப்பிரிவு தளபதி புத்தக வெளியீட்டிலும் அதுவும் இராணுவத்தளபதியின் கூற்றிக்கு முரண்பட்ட கருத்துகளை கூறியும் வருகின்றார்.

இவற்றைப்பார்க்கும் போது யுத்தம் தொடர்பில் தமக்கு சாதகமானவற்றை மட்டும் முன்வைக்கவே புத்தகம் எனும் போர்வை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

2003 ஆண்டின் ஒளிவீச்சுகள் முழுநீளக் காணொளிகள்

2002-dvd

2003-dvd

Up ↑