Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2016

தளபதி சொர்ணத்தை அசிங்கப்படுத்தும் லங்காசிறி குழுமம் !

lankasri sornamவிடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல் போன கதைகள் நிறைய இருந்தன. நீண்டகாலத்திற்கு இந்த அந்தஸ்துடன் இருந்த பெயர்கள் மிகஅரிதானவை. பொட்டம்மான், பால்ராஜ், சொர்ணம் என மிகச்சிறிய பட்டியல் அது.

சொர்ணம் எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்பது சற்று வியப்பிற்குரியது. சிந்தனைக்குரியது. ஏனெனில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அளவில் அவர் எந்த காலத்திலும் பிரகாசித்து கொண்டிருந்தவர் அல்ல. அந்த அமைப்பில் இருந்து மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்த ஒரு தளபதியாகவும் அவர்தான் இருந்தார்.

http://www.asrilanka.com/2016/03/29/29236

இப்படி அந்த கட்டுரை தொடர்கின்றது .. ஆரம்பத்தில் நல்லவர் வல்லவர் என்று தொடங்கி பின்னர் அசிங்கப்படுத்துகின்றது  தடவிக் கொடுத்து பின்னர் கழுத்தறுப்பது போல் இருக்கின்றது அந்தக் கட்டுரை..

புலிகளை விமர்சிப்பதற்கு இந்த செத்தவீட்டு குழுமத்திற்கு என்ன தகுதி இருக்கின்றது .. ?   போராளி -புலிகளை விமர்சிப்பதற்கு அவர் இன்னொரு போராளி -புலியாக இருக்க முடியும் ………..வீரமரணம் அடைந்த  மாவீரரை விமர்சிப்பதானால் அவர் வீரமரணம் அடைந்திருக்க வேண்டும் சுருக்கமாகச் சொன்னால் மாவீராக மட்டுமே இருக்க முடியும்…

புலிகளை ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தவர்களல்ல அவர்களும் எம்மைப் போன்று சாதாரண உணர்வுகளைக் கொண்டவர்கள் தான் அவர்களிடம்  வீரம் மட்டுமல்ல குறைகளும் இருக்கத் தான் செய்யும்.  குறைகள் திருத்தப்பட வேண்டியவை  அவை ஒன்றும் துரோகங்கள் அல்ல ! அவற்றை அந்த காலகட்டங்களில் விமர்சித்திருக்க வேண்டும் .

ஆனால் தற்போது புலிகளையோ மாவீரரையோ விமர்சிக்க வேண்டிய அவசியமோ ,தேவையோ கிடையாது,  விமர்சனத்தால் யாரையும் திருத்தவும் முடியாது ! அதை எந்த தேவையும் அற்ற இந்நேரத்தில்  விமர்சிப்பது புலிகளை தூற்றும் துரோகத்தனமே ! போராளிகளின் போராட்ட உணர்வை மதிப்பதும்,  போராட்டத்தை விமர்சிப்பதும் துரோகத்தனமே!

மாறாக இப்படியான அவதூறைக் கூட விமர்சிப்பதற்கு இங்கு யாரும் இல்லை என்பது தான் வெட்கக்கேடு !

-ஈழப்பார்வை குழுமம் –TamilEelam leader

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பிரித்தானியா உதவி?

இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்தேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரும் பிரித்தானியா, போர்க்காலத்தில் போர்க்குற்றங்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.blair bush war criminals

இரகசிய ஆவணங்கள் மூலம் இவை தெரியவந்துள்ளதாக வைஸ்.கொம் தெரிவித்துள்ளது.

http://www.vice.com.uk என்ற இணையத்தளம் இந்தக்குற்றச்சாட்டை, Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lanka என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டேவிட் மிலிபேன்ட்டின் தகவல்படி பிரித்தானியாவின் உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு உதவுவதாக அமைந்தன என்று வைஸ்.கொம் தெரிவித்துள்ளது

2008ஆம் 2009ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இலங்கையின் பொலிஸ் படைக்கு பிரித்தானியா பொலிஸ் உதவிகளை வழங்கியது.

இலங்கையில் போர்க்காலத்தில் அமைக்கப்பட்ட சமூக பொலிஸ் படை தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள சமூகத்தில் புலனாய்வாளர்களை ஈடுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட்டது என்று இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் ஊடகவியலாளர் பாஷன அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனடிப்படையிலேயே சித்திரவதைகளும் அதிகரித்திருந்தன.

2008ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் அதிகரித்த நிலையில் அதனை முன்னெடுத்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது.

இலங்கையின் அன்றைய போர்க்குற்ற அரசாங்கத்துக்கு ஏன் பிரித்தானியா உதவியளித்தது என்பது தெரியவில்லை.

எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அதற்கான காரணத்தை விளக்கினார்.

இந்து சமுத்திரத்தின் முக்கிய இடத்தில் அமைந்திருப்பதாலும், சர்வதேச ஸ்திரதன்மையை பேணவும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக பொக்ஸ் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்தின் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்,

2009ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆலோசர் பீட்டர் வில்சன் இலங்கைக்கு இரகசியமாக விஜயம் செய்தார்.

அவர் இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்துறை தலைவராக இருந்த சஞ்சய கொலன்னேயை சந்தித்தார்.

இதனையடுத்து போர் முடிந்தபின்னர் கொலன்னேயும் அவரது மனைவியும் லண்டனுக்கு சென்று பிரித்தானிய வரியிறுப்பாளர்களின் செலவில் இராப்போசனம் உண்டதாக வைஸ். கொம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு போர் நடவடிக்கைகளுக்கு உதவிய பிரித்தானியா தற்போதும் இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அதேநேரம் மனித உரிமைகளை பொலிஸார் மத்தியில் முன்னேற்ற தொடர்ந்தும் பிரித்தானியா உதவிவருகிறது.

அத்துடன் இலங்கையில் நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளையும் முன்னேற்ற தமது நாடு 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அண்மையில் அறிவித்தல் விடுத்திருந்தமையையும் வைஸ்.கொம் சுட்டிக்காட்டியுள்ளது.

How Britain Funded Possible War Crimes in Sri Lanka

blair bush war criminalsExclusive: Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lanka [March 31, 2016]

In 2009, as the Sri Lankan civil war reached its bloody conclusion, David Miliband touched down in Colombo to appeal for peace. “Now is the time for the fighting to stop,” Miliband warned. “Protection of civilians is absolutely paramount in our minds.”
However, Miliband’s public plea stood in direct contrast to what his department was doing in private, secret Foreign Office documents seen by VICE can reveal. British aid to Sri Lanka helped set up a vigilante network that supplied police with intelligence at the height of a bloody government crack down. The documents show that the UK was aware of the risk of human rights abuses but continued nonetheless. This raises questions of British complicity in war crimes

[By Phil Miller][vice.com] Read More…….

Abbott’s Sri Lanka comments ‘excuse war crimes’, Tamil refugee advocates say

srilanka is not so paradise islandAbbott’s Sri Lanka comments ‘excuse war crimes’, Tamil refugee advocates say

The former prime minister Tony Abbott has excused war crimes in comments that the Sri Lankan government’s actions in its civil war were “probably unavoidable”, Tamil refugee advocates have said. In an article in Quadrant magazine Abbott defended his national security record as prime minister: “I’m sure that the Sri Lankan president was pleased that…

[The Guardian ]- more …


Sri Lanka: Gotabaya Rajapaksa Is Still Dangerous

Could Gotabaya Rajapaksa, Sri Lanka’s former defense secretary (and brother of previous president Mahinda Rajapaksa), bring the Sri Lanka Freedom Party (SLFP) together? Evidently a member of the country’s joint opposition has suggested that Rajapaksa be appointed to parliament, the implication being that this move would help to unify a..

[huffington post] Read Post


Political Prisoners and Sri Lanka’s Sincerity Crisis

In Sri Lanka, President Maithripala Sirisena had promised progress regarding Tamil political prisoners, although we’ve seen little of that. Unfortunately, the president’s dithering project has continued — with no end in sight.

More broadly, the Sri Lankan government has made big commitments regarding transitional justice and those changes, if they…

[huffington post] Read Post


Colombo media conceals rape by military in Jaffna village with discovery of explosives[tamilnet]

An abusive and criminal Tamil man, recruited into the ranks of genocidal military of Colombo and deployed against Tamils, abducted a 16-year-old Tamil girl two weeks ago from Madduvil village in Thenmaraadchchi in Jaffna. The sexually abused girl managed to escape from the custody of the SLA soldier from the nearby Ma’ravaan-pulavu village on Tuesday. As the incident prompted anger among the public, the SL Police was forced to launch a search operation to capture the SLA trooper. During the search operation, the SL Police entered the house of a 31-year-old man and located explosives at Ma’ravanpulavu on Tuesday evening. In the meantime, Colombo-based media, including Indian and Western agencies, engaged in agenda-driven reporting, conveniently censored the chain of events and highlighted only the discovery of explosives. Full story >>


The Tamils of Sri Lanka are still stuck between a bloody past and hope

“Sinhala politicians are paranoid about the next uprising. But, we cannot build trust among these people if we keep so many armed personnel there,” says Sanjana Hattotuwa, Colombo-based founder of the Groundviews, dubbed Sri Lanka’s first citizen journalism portal. “Military presence reminds Tamils about what the state did to them.” Nilanthan says, “We…

[Quartz ] more …


The Right To Truth: Mapping The Displaced

The right to truth is often linked to healing in the wake of trauma. The International Centre for Transitional Justice says “truth can assist in the healing process after traumatic events; restore personal dignity, often after years of stigmatization; and safeguard against impunity and public denial.” Sri Lanka has its own stories of people who have slipped…

[Groundviews ] more …

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

Col Kopithசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

கேணல் கோபித்

அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி
எங்கள் “கேணல் கோபித் அண்ணா !

இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில்
கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே
எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த
காடுகளுக்கு கூட இனம் புரியாத
ஒரு புத்துணர்ச்சி வரும் !

பாசம் எனும் கூட்டில் விழாமல்
தேசம் எனும் நேசம் கொண்டு
சாள்ஸ் அன்ரனி படையணியை
திறம்பட கோலோச்சிய பல
சாதனைகளின் சரித்திர நாயகனே !

உன்னுடைய நிதானமான
பேச்சும், மற்றவர்களிடையே
அன்பாக பம்பலாக
நீ பழகும் விதமும் இன்றும் என்
மனத்திரையில் அண்ணா !Col Kopith with leader

இரட்டைவாய்க்கால் என
உச்சரிக்க முடியவில்லை எம்மால்
சிங்களத்தின் சீரழிந்த செயலால்
உன்னை இழந்து ஆண்டுகள் தான்
ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,
அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள் அழியாத கோலங்களாய்…..

அழகாய் பூத்திடும் எம் தமிழீழம்
அதில் மொட்டாக மலர்ந்திடும்
உன் திருமுகம்!

அன்றும் இன்றும் என்றும் உன்
தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !

ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் !

நினைவுபகிர்வு
மார்ஷல் வன்னி..

“ROHYPNOL” மாத்திரை சிங்கள பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…!

gnag rapeவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம்.

அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..! மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.

மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…! ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….!

குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!!

இணக்க அரசியலுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவென்று சம்பந்தன் ஐயா மோசடி

வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் கூட ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தயாராகவுள்ளோம் எனக் கூறக்கூடிய அளவுக்கு நாம் நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம் என த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயா கூறியிருப்பதானது மாபெரும் மோசடியாகும். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையானது தேன் தடவிக்கொடுக்கும் ஆலகால விசத்திற்கு ஒப்பானதாகும்.genocide tamil agents

ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் எதிர்காலமே சூன்யமாகிப்போன நிலையில் உலகத் தமிழர்கள் நிர்க்கதியாக நின்றது முதல் இன்றுவரை சம்பந்தன் அவர்களின் பேச்சும் செயற்பாடும் உலகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு நேர் விரோதமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், ‘நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம்’ என்று அதிரடியாக பேசி, ஆண்ட இனம் அதிகாரப் பகிர்வு கேட்பதில் என்ன தப்பு…? என்று மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

நாட்டைப் பிரிப்பதற்கு இடமில்லை. ஒன்றுபட்ட நாட்டுக்குள் ஒரு தீர்வை நாம் காண வேண்டும். ‘இதில் இரண்டாம் கதைக்கு இடமில்லை’ இதற்கு நாமெல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற ஆலகால விசத்தை உலகத்தமிழர்களிடையே திணிப்பதற்காகவே இவ்வாறு உலகத்தமிழர்களின் எண்ணங்களுக்கு அண்மித்ததான தேனொழுகும் தித்திப்பான பேச்சை பேசியுள்ளார் சம்பந்தன்.

ஒருமித்த – ஒற்றுமையான – பிரிவுபடாத நாட்டுக்குள் எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கப்பட்டு நாம் சமாதானமாக, ஒற்றுமையாக வாழ வேண்டிய நிலமை ஏற்படவேண்டும் எனக் கேட்கின்றோம். அதற்காக தமிழீழக் கோரிக்கையை நாம் கைவிட்டுள்ளோம் எனக்கூறியதுடன் நிற்காமல் புலம்பெயர் தமிழர்களையும் இதற்கு ஒத்துழைக்க வைத்துவிட்டோம் என்று பேசியதன் மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றி மாபெரும் மோசடி செய்துள்ளார்.

சிங்களம் மற்றும் சக்தி வாய்ந்த நாடுகளின் சதிகார நச்சுவட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள மதிப்பிழந்து போன சில புலம்பெயர் அமைப்புகளை மனதில் கொண்டு ஒட்டுமொத்த புலம்பெயர் மக்களையும் மாற்றிவிட்டதாக மோசடி செய்வதன் மூலம் உலகத்தமிழர்களை தம்பின்னால் வரவைத்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறார் போலும்.

தமிழினத்தின் விடுதலையில் உறுதிதளராத தமிழீழத் தேசியத் தலைவரைத் தவிர்த்து இன்னொருவரை உலகத்தமிழர்கள் தமது தலைமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வரலாறு புதிப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் சம்பந்தன் அவர்களை சிங்கள தேசமே எதிர்க்கட்சி தலைவராக்கியுள்ளதுடன் இவ்வாறெல்லாம் பேசவும் வைக்கின்றது.

தமிழீழத்திற்கு மாற்றான ஒரு தீர்வு என்பது உலகத்தமிழர்களது எண்ணங்களின் அருகில் கூட எப்போதுமே வரமுடியாது. கடந்த கால வரலாற்று படிப்பினைகள் வழிநடத்த அந்த இலக்கு நோக்கிய பாதையில் உலகத்தமிழர்களது எண்ணங்களை சுமந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பயணித்துவருகிறது.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

வழக்குக்காக வேட்டையாடப்படும் அகதிகள்!

திருச்சி சிறப்பு முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இலங்கைத் தமிழ் அகதிகள். தேர்தல் நெருக்கத்தில் இதை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என கவலையில் ஆழ்ந்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.tamilnadu prison camps

இதுபற்றி நம்மிடம் பேசிய தடுப்பு முகாம் சிறைவாசி ஒருவர்,

இருபது வருஷமாக அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கோம். கிடைக்கற வேலையைப் பார்த்துட்டு குடும்பத்தைக் கவனிச்சிட்டு இருந்தோம்.

திடீரென சதித்திட்டம் தீட்டினோம்னு கைது பண்ணி சிறப்பு முகாம்ல அடைச்சிட்டாங்க. எங்கள்ல பல பேர் ஒன்பது வருஷமாக உள்ள இருக்காங்க. எந்த வசதியும் கிடையாது.

குடும்பத்தைப் பார்க்க அனுமதியும் கிடையாது. வழக்கு விசாரணை நடக்குது. ஆனா, குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் பண்ணலை. எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் இல்லை.

எங்களை விட்டுட்டு குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது. இதுபத்தி முதலமைச்சர், உள்துறை செயலாளர் வரைக்கும் மனு போட்டு பார்த்துட்டோம். யாரும் பதில் தர்றதில்லை.

ஒன்னு, எங்களைக் குடும்பத்தோட வாழவிடுங்க. இல்லைன்னா, அவங்களையும் எங்களோட சேர்த்து அடைச்சு வைங்க.

இது எது நடக்கலைன்னாலும் சாகற வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம். இதுல எந்த மாற்றமும் இல்லை என்றார் வேதனையோடு.

நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முகாம் சிறைவாசிகள் தொடங்கியுள்ளனர்.

15 பேர் வரையில் பங்கேற்றுள்ள இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது.

கைதிகள் பிடிவாதமாக இருப்பதால் அவர்களை வழிக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம் பற்றி நம்மிடம் பேசிய சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி,

கியூ பிரிவு போலீஸாருக்கு தற்போது எந்த வேலையும் இல்லை. வெறுமனே அரசிடம் இருந்து சம்பளம் வாங்குவது என்றைக்காவது விசாரணைக்கு வரும் என்பதால்தான் பொய் வழக்கு போடுகிறார்கள்.TamilNadu-police-CID-India

கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதுவும் எப்படியென்றால், திருச்சி பஸ் நிலையத்தில் ஆறு பேர் உட்கார்ந்து கொண்டு, நியூஸிலாந்து தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும், அங்கு வந்த கியூ போலீஸார் கைது செய்ததாகவும் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.

பிடிபட்ட ஆறு இலங்கைத் தமிழர்களிடமும் பாஸ்போர்ட் இல்லை. அவர்கள் எப்படி நியூஸிலாந்து தப்பிச் செல்ல முடியும்?

நல்லா இருந்து ஊருக்குள் கியூ பிரிவில் பணியாற்றும் நான்கு போலீஸார் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

2009-ம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளைக் கணக்குக் காட்டி கைது செய்தார்கள்.tamilnadu-police

அதன்பிறகு,அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்தார்கள் என பொய் வழக்கு போட்டார்கள்.

அவுஸ்திரேலியா அகதிகளுக்கு இடமில்லை என்று சொன்னதால், தீவிரமாக யோசித்து நியூஸிலாந்து என சொல்ல ஆரம்பித்திருக்கிறது கியூ பிரிவு.

இந்தக் கைப்புள்ளைகளால இன்னும் எத்தனை தலை உருளப் போகுதோ தெரியலை” என்றார் காமெடி கலந்த வருத்தத்தோடு.

இந்தமுறை அரசைப் பணிய வைக்காமல் ஓயப் போவதில்லை என உண்ணாவிரதத்தில் தெளிவாக இருக்கிறார்கள் அகதிகள். முடிவு அரசின் கையில்…!.

[ விகடன் ]

முன்னால் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் !

LTTE Women_at_warதமிழீழ விடுதலைப் போராட்டம் காலம் காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிரான போராட்டமாக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு மாபெரும் எழுச்சியை விதைத்து முன்னுதாரணமாக திகழ்ந்தது.

மண்ணையும் மக்களையும் காக்க தமது இளைய இனிய உயிர்களை அர்ப்பணித்தவர்கள் எம் போராளிகள்.

ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இன்றி மண்ணை காக்க புறப்பட்ட போராளிகளை காவல் தெய்வங்களாகவே எம் மக்களும் போற்றினார்கள்.

2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் அமைதி எய்திய பின் ஆக்கிரமிப்பாளர்கள் புலனாய்வாளர்கள் முன்னிலையில் எம் மக்கள் அச்சத்தின் காரணமாக எம் போராளிகளுடனான தமது அன்பை, மதிப்பை வெளிப்படையாக காட்ட முடியாது போன நிலை உருவாகியது.

மக்களை காக்க போராட சென்ற குற்றத்திற்காக அந்த மக்களாலேயே போராளிகள் புறக்கணிக்கப்படும் கொடுமைகளை எம் மண்ணில் சந்திக்கும் சோகத்தை எதனாலும் துடைத்தெறிய முடியாது.

அதிலும் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் துன்ப துயரங்கள் மிக மிக கொடுமையானவை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கூட்டு பாலியல் வன்புணர்வுகள் படுகொலைகள், நிர்வாணப்படுத்தல்கள், பிணங்களை கூட கொன்று புணர்தல் என கொடுமைபடுத்தி துன்புறுத்திய சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகள் கடந்து தப்பியவர்கள் சிறைகளில் இருந்து பின்பு புனர்வாழ்வு என விடுவிக்கப்பட்டு வெளி வந்த சிலர் எங்கள் சமூகத்தில் வாழ வந்த பொழுது எங்கள் சமூகம் அவர்களை இழிவு படுத்தி ஏற்றுக் கொள்ளாமல் அவமானப்படுத்தும் கொடுமையானது கண்ணீர் வரிகளால் எழுதப்படும் கொடுமைகளாக இருக்கின்றன.

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்னும் திருமணமாகாமல் வாழ்கின்றார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை. கேட்டால் இராணுவம் சிதைத்த பெண்கள் என பார்கிறார்கள். அப்படி தான் இருந்தாலும் தவறு செய்த இராணுவம் எங்கள் நிலத்தில் உலவுவதை அனுமதிக்கும் மக்கள் பலியான பெண்களை புறக்கணித்து தனிமைப்படுத்தி வதைப்பது ஏன்?

விடுதலைப் புலிகள் காலத்தில் பெண் போராளிகள் மீது எங்கள் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பக்தி இப்போது அப்படியே நன்றியில்லா துரோகங்களாக மாறி உள்ளமை உண்மையில் கொடுமையிலும் கொடுமையானது.

இப்போது அவர்களை தனிமைப்படுத்தி ஒதுக்குதல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத் தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என சமூகம் அவர்களை கையாண்டு வரும் செயல்கள் யாவுமே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையும் உடன் மாற்றியமைக்க வேண்டியவையும் ஆகும். .

தங்களது இளமைக் காலத்தில் தங்கள் இன்ப துன்பங்களை மக்களுக்காக துறந்து போராடப் புறப்பட்ட பெண்கள் உடல் ரீதியாகவும் பல வலிகளை அனுபவித்து சிலர் கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரியாமல், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நிரந்தரமாக நடக்க முடியாமல், உடம்பில் இரும்புத் துண்டுகளை சுமந்து கொண்டு என பலவாறான வலிகளோடு வாழ்ந்து வரும் நிலையில் புறக்கணிக்கும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள்.

“சமூகம் எம்மை அரவணைக்கும்” என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியில் வந்தவர்களை, “சண்டையிலேயே செத்திருக்கலாம்” என்ற முடிவுக்கு தமிழ் சமூகத்தினர் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் துரோகத்தை என்ன என்று சொல்வது.

பெண் போராளிகள் விடுதலை சிந்தை கொண்டவர்கள் ஆதலால் ஆண்களுக்கு அடிமைகளாக வாழ மாட்டார்கள் குடும்பத்தில் ஒத்துப் போக மாட்டார்கள் எனும் பார்வையாலும் வதைக்கப்படுகின்றார்கள் எம் போராளிகள். சமத்துவத்தை விடுதலைப் புலிகள் இருந்த போது மதித்து வந்த மக்கள் இன்று அதையே குறையாக சொல்லி போராளிகளை வதைப்பது கொடுமையானது.

எங்கள் சமூகம் முற்போக்கு உள்ள இளையவர்களை தொலைத்து இன்று மீண்டும் அடிமைப்படுத்தும் ஆணாதிக்கவாதிகளை கொண்டு இருப்பது வேதனையான நிலையாகும்.

“ஏன் வாழ்கின்றோம்?” என கண் கலங்கி அவர்கள் வாழும் நிலைக்கு ஒவ்வொரு தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

போராளிகளை திருமணம் செய்ய உள்நாட்டில் ஒருவர் இல்லாமல் வெளியூரில் இருக்கும் தமிழ் இளைஞர்களை யார் எவர் எப்படிப்பட்டவர் என பாராமல் கொள்கை புரிதலும் இல்லாமைகள் திருமணம் செய்து வைத்தவர்கள் சிலர் பின்பு அந்த ஆண்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் தவறானவர் என “குய்யோ முறையோ” என கதறுகிறார்கள்.

2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில தம்பதிகள் கூட சாதியின் பெயரால் இன்று பிரிந்துள்ள செய்திகளும் கொடுமையானவை.

படுகாயங்களுக்கு உள்ளான பல பெண் போராளிகள் சாப்பிடுவதற்கே வழியின்றி ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் உண்டு வாழ்ந்து வருகின்றனர் என்ற கொடுமையை உலகில் எத்தனை பேர் அறிவார்கள்?

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் விசாரணை நடத்த 2, 3 மாதத்துக்கு ஒரு தடவை வந்து போன புலனாய்வுப் பிரிவினர் நல்லாட்சி அரசாங்கத்திலும் வரத் தவறுவதில்லை என்றும் புனர்வாழ்வு முடிந்து விடுதலையான பின்னரும், அதுவும் நல்லாட்சியிலும் புலனாய்வுப் பிரிவினரின் வருகை நொந்து போயிருக்கும் பெண் போராளிகளை இன்னும் நோகடிக்கச் செய்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்த அநீதிகளை தடுத்து நிறுத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் அரசியலாகவும் முன் வராதமை பெரும் கொடுமை.

அனைத்து போராளிகளையும் வாழ வைக்கவும் பெண் போராளிகளுக்கு மறுவாழ்வு திட்டங்களூடாக வளப்படுத்தவும் வடமாகாண சபையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மறுவாழ்வு கல்வி வேலை வாய்ப்புகள் என போராளிகள் வாழ்வை வளப்படுத்த வடமாகாண சபை மூலம் புலத்து மக்கள் உதவியோடும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

“போராளி, மாவீரர் குடும்பங்களைப் பதிவு செய்தார்கள், உதவி செய்யப் போகிறார்கள் என்றார்கள். பதிவு செய்தேன். போய்ப் பார்த்தால், அங்கர் பெட்டியொன்றும், நுளம்பு நெட் ஒன்றும் தருகிறார்கள்” என்கிறார் மகளை இழந்த தாயொருவர்.

7 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒரு போராளி காயம் காரணமாக விலகி கடைசி காலப் பகுதியில் காயப்பட்டவர்களுக்கு உதவ வைத்தியசாலைப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.

“இடம்பெயரும் போது எங்கட குடும்பமே சின்னாபின்னமாக பிரிந்தது. பிறகு நானும் அம்மாவும் மட்டும் தனித்துப் போயிட்டம். ஷெல் விழ விழ கிட்டத்தட்ட நூறு கொட்டில்கள் மாறிக் கொண்டே திரிஞ்சனாங்கள். இனிமே சாகத்தானே போறம் என்டு சனங்களோடு ஹொஸ்பிட்டல்ல இருந்த காயக்காரர்களுக்கு உதவ வெளிக்கிட்டம்” என்கிறார் அவர்.

3 வயது பெண் பிள்ளையின் தாயான இவர் 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்திருக்கிறார். தடுப்பிலிருந்து வந்தவுடன் திரும்பவும் இராணுத்தினர் தொந்தரவு கொடுப்பார்கள் என்ற பயத்தில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார் அவர்.

“தடுப்பு முகாம் போய் வந்து திருமணம் செய்தது என்னத்துக்கு என்டா, திரும்பவும் எனக்கு ஏதும் பிரச்சினை வந்துரும் என்ட பயத்தாலதான். தனியாளா இருந்தா நிறைய பிரச்சினதானே. சந்தேகப்பட்டு விசாரிக்க வருவினம் என்டதால திருமணம் செய்தனான்” என்கிறார்.

இவரின் நெருக்கடியான நிலையை பயன்படுத்திக் கொண்ட ஒருவர், முன்னாள் போராளி ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி இவரை அணுகியிருக்கிறார்.

அவர் ஏற்கனவே திருமணம் செய்ததை சொல்லாமல் திருமணம் செய்து இருக்கிறார் என்பதை அறிந்ததும் கலங்கி இருக்கிறார்.

“இயக்கத்தில் இருந்தா ஒழுக்கமா இருப்பாங்க என்ட எண்ணத்தோடதான் அவரை கல்யாணம் செய்தனான்.. ஆனால், பிறகு என்ன சந்தேகப்பட்டு தொல்லை குடுக்கத் தொடங்கினவர். பொறுக்க முடியாமல்தான் அவர விட்டு பிரிஞ்சனான்” என்று கலக்கத்தினை மறைத்து கூறினாலும் ‘பனையால் விழுந்தவர்களை மாடு ஏறி மிதித்தது போன்ற அநீதிகளே இவையாகும்.

இரு கண்களும் தெரியாத40 வயதை தாண்டி இருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் போரின் போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கண்பார்வையை இழந்த நிலையில் “பொழுது பட்டாலே வீட்டுக்குள்ள படுத்திறுக்கிறதே பயமா கிடக்கு. றோட்ல தனியா திறியிறதென்கிறது சாத்தியம் இல்ல. பெண்கள் வாழுறதென்டா பயம்தான். இரவு எட்டு எட்டரைக்கெல்லாம் கேட்டெல்லாம் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள இருக்கிற நிலமதான். வீட்டுல. ஒரு ஆண் இருந்தா பிரச்சின இல்ல,.தனிய பெண்கள் இருந்தா பயம்தான்” என்று கூறுகிறார்..

வாழ்வாதாரத்திற்கும் வருமானத்திற்கும் போராடும் இவர்கள் அவல வாழ்வு எவராலும் ஏறெடுத்துப் பார்க்காத கொடுமைகளாக இருக்கின்றன.

போராளியான இவரது திருமணத்தை விடுதலைப் புலிகள் அமைப்பினரே செய்து வைத்துள்ளனர். மே மாதம் 16ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாகக் கூறிய போதும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் தன்னைக் கைது செய்யவில்லை என்று கூறுகிறார்.

“இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்து விசாரிச்சினம். வேற ஆக்கள்ட்டயும் விசாரிச்சிரிக்கினம். அவ இயக்கத்தில இருந்தவவோ? என்ன நடந்தது என்டு?” அரசாங்கம் மாறியும் எந்தவித வித்தியாசத்தையும் உணராதவராக பேசுகிறார்

அவர். “என்ட கால் அடிப்பாதம் தேய்ஞ்சி போயிருக்கு. புதுசா ஒன்டு செஞ்சி எடுக்க அலைஞ்சி திரியணும்–” காலைத் தூக்கிக் காட்ட அடிப்பாதம் தேய்ந்து ஓட்டையொன்றும் உருவாகி விட்டது.

இந்த போராளிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஒரு ஊடகவியலாளர் அவதானித்த உண்மைகளை அடிப்படையாக கொண்ட கொடுமைகளின் சில துளிகள் மட்டுமே இவையாகும்.

அண்மையில் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயைச் சந்தித்து அந்த ஊடகவியலாளர் பேசிய பொழுது.

16 வயதிலேயே அமைப்பில் சேர்ந்து, தடுப்பிலிருந்து வந்து 3 வருடங்கள் மட்டுமே தன்னுடன், அதுவும் தூர விலகி இருந்ததாகக் கூறுகிறார் தமிழினியின் தாய்.

தடுப்பிலிருந்து விடுவிக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என்று கூறும் அவர், அவ்வாறு விடுவித்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் தன்னுடன் இருந்திருப்பார் என்றும் கூறுகிறார்.

அருகில் தமிழினியின் தம்பி உட்கார்ந்து, அக்கா உயிரிழந்ததை வைத்து நிறையப் பேர் உழைத்ததாகக் கூறுகிறார்.

எடுத்து சொல்ல இது போல் ஏராளம் கண்ணீர் கதைகள்.

பெண் போராளிகளின் அவலங்களை போக்க நினைக்காத நல்லாட்சி அரசு இன்னமும் புலனாய்வு துறை உருவில் தொந்தரவுகளை தொடரும் கொடுமைகள் ஒரு புறமிருக்க இராணுவ ஆக்கிரமிப்புகள் பாதுகாப்பற்ற நிலையை அச்சுறுத்த சமூகம் புறக்கணிக்க உறவுகள் தள்ளி வைக்க அத்தனை கண்ணீர் அவமானங்கள் வேதனைகளை கடந்தும் வலிமையாக வாழ்வோடு போராடி கண்ணீரை தமது வாழ்வாக்கி வாழ்கிறார்கள் எம் மண்ணை காக்க சென்ற பெண் போராளிகள்.

இவர்களை வாழ வைக்க ஆண்கள், சமூகம், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு புலம்பெயர்ந்து வாழும் மக்கள், அமைப்புகள் முன் வர வேண்டும்.

புலத்தில் இருக்கும் ஆண்கள் தாயகத்தில் வலி சுமந்து வாழும் எம் முன்னாள் போராளிகளை திருமணம் செய்ய முன் வர வேண்டும்.

தாமதிக்காமல் தீர்க்க வேண்டிய சமூக சிக்கலை போக்கி எம் பெண் போராளிகளை ஆளுமை கொண்ட பெண்களாக இயல்பு வாழ்வை நிம்மதியாக பாதுகாப்பாக மன மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுக்கும் பொறுப்பை தமிழ் சமூகமாக கட்டி எழுப்புவோமாக.

செந்தமிழினி பிரபாகரன்

*************

அவலங்கள்

Up ↑