Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2015

எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாக கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன்.jaff_laibrary_viki

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன.

அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக்குடியேற்றங்களின் காரணம் என்பது தெரியவரும்.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிலமும் நாங்களும் என்னும் கருப்பொருளிலான போருக்கு பின்னைய கால காணி பிரச்சினைகளை புரிந்து கொள்ளல் தொடர்பான கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக் கையாளும் மாலையாக இன்றைய மாலை பரிணமித்துள்ளது. “நிலமும் நாங்களும்” என்ற பொருள்பற்றி ஆராயக்கிடைத்துள்ளது.

ஒரு பாரம்பரிய சமூகத்தின் அடையாளமே அது வாழ்ந்து வரும் நிலந்தான். பாரம்பரிய நிலத்தில் இருந்து சமூகத்தைப் பிரித்தால் பிரிக்கப்பட்ட சமூகம் அநாதையாகிவிடும்.

அதன் உறுப்பினர்கள் அகதிகளாகிவிடுவர். அகதிகள் என்றால் புகலிடம் அற்றவர் என்று அர்த்தம். கதி என்ற சொல்லுக்கு ஒரு அர்த்தம் “புகலிடம்”. ஆகவே அ(சக)கதி என்றால் புகலிடம் அற்றவர் என்று பொருள்படுகிறது.

எமது பாரம்பரிய சமூகத்தைப் புகலிடம் அற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.

2009ம்ஆண்டு மே மாதம், யுத்தமானது முடிவுக்கு வந்தது. யுத்த ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுத்து வந்தவர்கள் யுத்தம் முடிந்ததென்று தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவில்லை.

எமது பாரம்பரிய நிலங்களில் பாரிய பகுதியைப் படைகள் தம் வசம் பற்றிவைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்நிலங்களில் உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் நிராதரவாக, நிர்க்கதியினராக பிறர் நிலங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக இவ்வாறான இடர் வாழ்க்கையில் இருந்து வருகின்றார்கள்.

இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் இதர நாடுகளிலும் வாழும் இப்பேர்ப்பட்ட மக்கள் தமது பாரம்பரிய இடங்களைப் பறி கொடுத்துவிட்டே அங்கு வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் துயருற்ற எமது அகதிகளக்கு அண்மைக் காலமாகப் பல்வித உறுதி மொழிகளை அளித்து வந்திருந்தாலும் அவர்களைத் தத்தமது பாரம்பரியக் காணிகளில் மீள்க்குடியமர்த்துவதில் சிக்கல்களும் தாமதங்களுமே மிஞ்சி இருக்கின்றன.

இடம்பெயர்ந்த எம் மக்களைக் குடியமர்த்த வேண்டும் என்பதில் அதிகாரத்தில் உள்ளோருக்குப் போதிய கரிசனை இருக்கின்றதோ என்பதில் எமக்குச் சந்தேகமாக இருக்கின்றது.

காணிகளை விடுவிப்போம் என்றார்கள். அதில்த்தாமதம். அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இப்பொழுது விசேட நீதிமன்றம் அமைக்கப் போவதாகக் கூறுகின்றார்கள். ஆகவே எங்கள் சந்தேகங்கள் நியாயமானவை.

காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாகக் கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே நான் அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக்குடியேற்றங்களின் காரணம் என்பது தெரியவரும்.

1983ம் ஆண்டின் இனக் கலவரத்தின் பின்னர் 1985ம் ஆண்டில் பிரித்தானிய பாராளுமன்ற மனித உரிமைகள் குழு தயாரித்த தனது அறிக்கையில் அது பின் வருமாறு கூறியது,

அதாவது “ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியிருத்த முனைந்துள்ளது.” என்றார்கள்.

இதற்கான காரணங்களை அரசாங்கத்திடம் கேட்ட போது அவர்கள் அன்று அளித்த காரணம் “இலங்கை ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரே நாடு. வளங்களைத் தேடிச் சென்று இலங்கை வாழ் மக்கள் அவற்றைப் பகிர விடப்பட்டுள்ளார்கள்” என்பது.

இது தவறு. அதாவது வளமுள்ள இடங்களுக்கு மக்கள் ஆற்றுப்படுத்தப்பட்டார்கள் என்று கூறியது தவறு. இந் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்க முன்பிருந்தே ஈரலிப்பான வளம் மிகுந்த இடங்களில் இருந்து வரண்ட வளம் குறைந்த இடங்களுக்கே பல்லாயிரம் மக்கள் “குடியானவர்கள் குடியிருத்தல் திட்டங்களின்” கீழ்க் குடியமர்த்தப்பட்டார்கள்.This Land Belongs to the Army

இவ்வாறான குடியேற்றத் திட்டங்களால் பாரம்பரியமாகத் தமிழ்ப்பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் அவர்களினிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டன.

உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் தொகையானது 1911ல் இருந்து 1981 வரையான காலகட்டத்தில் 3.8 சதவிகிதத்தில் இருந்து 33.6 சதவிகிதத்திற்கு மேலேழுந்தது. அதே காலகட்டத்தில் தமிழ் மக்களின் தொகையானது 56.8 சதவிகிதத்தில் இருந்து 33.7 சதவிகிதத்திற்குக் கீழிறங்கியது.

அதே காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் சனத் தொகை 7 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதத்திற்கு மேலெழுந்தது. தமிழ்ப் பேசும் மக்களின் தொகை 37 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதத்திற்கு கீழிறங்கியது. இது 1983ம் ஆண்டுக்கு முன்னைய புள்ளி விபரங்கள்.

இவ்வாறான இன அடிப்படையிலான மாற்றங்கள் தான் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சேருவில, அம்பாறை போன்ற தேர்தல்த் தொகுதிகள் 1976ம் ஆண்டில் உருவாக வழியமைத்தன.

இதே மாதிரியான மாற்றங்கள் தற்பொழுது வட மாகாணத்தின் தென் பகுதிகளிலும் ஆரம்பமாகிவிட்டன. இன அழிப்பு பற்றி நாங்கள் கொண்டுவந்த பிரேரணையை எதிர்ப்பவர்கள் இவை பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் இளைஞர்கள் வன்முறையில் இறங்கியதைக் காரணமாகக் காட்டி இவ்வாறான இன விரட்டல்க் காரியங்கள் மேலும் உக்கிரப் படுத்தப்பட்டன.

அதாவது கிளர்ச்சிகளைத் தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாகக் காட்டி 1980ம் ஆண்டுகளில் பாதுகாப்பு நிலையங்களை உருவாக்குவது பற்றியதான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

முதலில் பாதுகாப்பு நிலையம் அமைத்து அதன் பின் அதனைச் சுற்றிய இடங்களைப் பாதுகாப்பு வலையங்கள் ஆக்கி அதன்பின் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்கள் தாபிக்கப்பட்டன.

பாதுகாப்பு நிலையங்ளைச் சுற்றிய பிரதேசங்களை அண்டிய பல சதுர கிலோ மீற்றர் காணிகள் பாரம்பரிய மக்களை அங்கு குடியிருக்க விடாமல் தடுத்து வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டன.

அது மட்டுமல்லாமல் இடைநிலைப் பாதுகாப்பு வலையங்கள் அல்லது Buffer Zones என்று கூறி மக்களை விரட்டிப் படையினர் கைவசம் அவர்களின் காணிகளைக் கையேற்கும் இன்னொரு கைங்கரியமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இருந்து ஆயிரம் மீற்றர் தூரத்திற்கு ஆட்கள் எவரும் இருக்கப்படாது என்று பிரகடனம் செய்ததால் பலாலி போன்ற இடங்களில் சுற்றுவட்டார மக்கள் யாவரும் குடிபெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது காலஞ் செல்லச் செல்ல பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது உள்நாட்டில் காணிகளுக்கு ஏற்பட்ட விபத்து. மக்களுக்கு ஏற்பட்ட விரட்டு.

அதே போல் கடற்படை கண்காணிப்பு வலையங்கள் வடக்கு, கிழக்கு, வடகிழக்குக் கரையோரப் பகுதிகளில் 1985ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனால் கரையோரத் தமிழ்ப் பேசும் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, இந்தியா போன்ற நாடுகளில் தஞ்சம் புக வேண்டி வந்தது.

இவ்வாறு கடற்கரையோரங்களில் இருந்தும் உள் நாட்டில் பல இடங்களில் இருந்தும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலங்களில் இருந்து விரட்டப்பட்டதன் காரணத்தை அறிய விளைவோம்.

“1971ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரையிலான காலத்தில் இலங்கையில் அரசியல் வன்முறை” என்ற நூலில் பேராசிரியர் காமினி சமரநாயக்க என்பவர் வடமாகாணத்தைச் சுற்றி 2 இலட்சம் குடியானவர்களைக் குடியேற்றுவது என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட முடிவு.

அதனால் வடக்கைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலையத்தை உண்டாக்க வேண்டும் என்றே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

அவரின் கூற்றை உறுதிப்படுத்துவது போல் பெப்ரவரி 1985ல் ஒன்பது அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41வது அமர்வின் போது பின் வருமாறு கூறப்பட்டது.SL Army Grabbing Of Tamil Lands

அதாவது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தேசிய சனத்தொகை விகிதமான சிங்களவர் 75 சத விகிதம் மற்றையவர் 25 சத விகிதம் என்ற உண்மையைப் பிரதிபலிக்குமுகமாக தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலுஞ் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இச்செய்கையானது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வண்ணமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

ஒரு முக்கிய உண்மையை சிங்கள அரசியல்வாதிகள் என்றென்றும் மறந்து விடுகின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகாலம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் தான் பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளனர்.

வேறெவரும் அங்கு அவ்வாறு பெரும்பான்மையினராக இருந்ததில்லை. இதைச் சிங்களத் தலைவர்கள் கூட 1919ம் ஆண்டில் ஏற்றுக் கொண்டிருந்தனர். இலங்கை நாடானது ஒற்றை நிர்வாகத்தின் கீழ் ஆங்கிலேயரால் 1833ம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்னர் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக வட கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென்று இராச்சியங்களும் இருந்தன.

அப்படியிருந்தும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை மதிக்காது மேற்படி தீர்மானமானது திரு.ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

அதன் காரணமாக யுத்தம் நீடிக்கத் தொடங்கியதும் அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதில் கண்ணாய் இருந்து வந்துள்ளார்கள். அதனைத் தமது இராணுவப் பாதுகாப்புச் சித்தாந்தத்தின் கொள்கையாகவும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்கள்.

அதியுச்ச பாதுகாப்பு வலையங்களானவை காணிகளைச் சுவீகரித்தது மட்டுமல்லாமல் பொதுமக்களை அங்கிருந்து அகற்றி அவர்களின் வருகைக்குத் தடை விதிப்பதாகவும் அமைந்தது.

இதனால்தான் எமது உள்நாட்டுக் குடி பெயர் மக்களின் அவலங்கள் தொடர்ந்திருந்து கொண்டு வருகின்றது. அதி உச்சப் பாதுகாப்பு வலையங்கள் என்று யுத்த காலத்தில் அடையாளம் காட்டப்பட்ட இடங்கள் இப்பொழுதும் அவ்வாறே குறிப்பிடப்படுவது பிழையென்று தெரிந்துதான் சில இடங்களை விசேட அபிவிருத்தி வலையங்கள் என்று பெயர் மாற்றித் தாமே அங்கு தொடர்ந்திருந்து வருகின்றார்கள் இராணுவத்தினர்.army_bulldozer land grab sl

இவ்வாறான இராணுவ செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். உதாரணமாக,

1. உயர் பாதுகாப்பு வலையங்களினால் உள்நாட்டினுள்ளேயே குடிபெயர்ந்த மக்கள்

2. இந்தியா, மேலைநாடுகள் போன்றவற்றிற்கு மேற்படி உயர் பாதுகாப்பு வலையங்களின் நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற மக்கள்

3. போரில் பலவற்றையும் இழந்து தமது காணிகளுக்கான உரிமையாவணங்களையும் இழந்து நிற்கும் மக்கள்.

4. சுனாமியால் இடம் பெயர்ந்த மக்கள்

5. காலாவதிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் பல வருடகாலமாகத் தமது காணிகளில் இராமையினால் பாதிக்கப்பட்ட மக்கள்

6. வேறு விதங்களில் இராணுவத்தினால் கையேற்கப்பட்டிருக்கும் வியாபாரக் காணிகள் அத்துடன் வீடுகளை இழந்து நிற்கும் மக்கள்.

புலம் பெயர்ந்த மக்களுள் முஸ்லீம் மக்களும் அடங்குவர். ஆண் துணைகளை இழந்த பெண்களும் அவர்தம் குடும்பங்களும் அடங்குவர்.

எனவே இன்று நாம் “நிலமும் நாங்களும்” என்ற தலையங்கத்தின் கீழ் பல விடயங்களை அவதானித்துள்ளோம். முக்கியமாக அரசியல், இராணுவ, இனரீதியான சிந்தனைகள் காரணமாக பாரம்பரிய வாழ்விடங்களைத் தொலைத்துவிட்ட நிலையில் எமது மக்களுள் பலர் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களைத் தற்காலிகமாக வாழ இடமளித்த நிலங்களின் சொந்தக்காரர்கள் கூட எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளார்கள்.

காணியிருந்துங் காணியற்ற வாழ்வை அவற்றின் உரிமையாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான இடம்பெயர்ந்த மக்களின் உரித்துக்கள் பற்றி ஐக்கிய நாடுகள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து “பின்ஹெய்ரோ கேட்பாடுகள்” என்ற தலையங்கத்தின் கீழ் உள்நாட்டு இடம் பெயர் மக்களினதும், அகதிகளினதும் வீடுகள் காணிகள் போன்றவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிய சில கோட்பாடுகளை இயற்றியுள்ளார்கள்.

பொருட்கோடல் உள்ளடங்கலாக 23 கொள்கைக் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

அவற்றில் இருந்து ஒரேயொரு கொள்கைக் கருத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது முக்கியமான இரண்டாவது கொள்கைக் கருத்து பின்வருமாறு அமைகின்றது.

2.1. “எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆதனத்தில் இருந்தோ எதேச்சாதிகாரமாகவோ அல்லது சட்டத்திற்கு மாறாகவோ எந்தவொரு அகதியோ அல்லது இடம்பெயர் நபரோ வெளியேற்றப்பட்டிருப்பின், அவர்கள் அவ்வீட்டிலோ காணியிலோ அல்லது ஆதனத்திலோ மீளக் குடியமர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் ஆவார்.

அத்துடன் ஏதேனும் ஒரு சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைச் சபையொன்றினால் வீடோ, காணியோ, ஆதனமோ உண்மையில் திரும்பப் பெற முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாகக் காணப்படுமிடத்து அதற்கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்துடையவராவார்.

2.2. மேலும் பின்வருமாறு கூறுகின்றது.

இடம்பெயர்வுக்குத் தக்க நிவாரணமாக அரசுகள் ஆதன மீளளிப்பையே முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதனையே மீளளிக்கும் நீதியின் மிக முக்கியமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீளளிப்புப் பெறும் உரித்தானது துல்லியமான ஒரு தனியுரித்து. வீடு காணி, ஆதனம் ஆகியவற்றிற்கு உரிமையுடைய அகதிகளோ, இடம்பெயர் நபர்களோ திரும்ப வந்தால் என்ன, வராதிருந்தால் என்ன மேற்படி உரித்தானது எந்த விதத்திலும் பாதிப்படையாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைக் கருத்தானது மீள்க்குடியிருப்பு என்ற தனியுரித்து எந்தளவுக்குச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

போர் முடிந்து ஏழாவது வருடம் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், மீள் குடியிருப்பு வேண்டிப் பதியப்பட்ட இரண்டாயிரம் பேரின் வழக்குகள் இன்னும் தாமதமடைந்திருக்கும் இந்நிலையில்,

எமது மக்களின் வாழ்வாதாரங்கள் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாக எவரோ ஒருவர் காணியில், வீட்டில், ஆதனத்தில் கவனிப்பார் அற்று காத்துக் கிடக்கும் இவ்வேளையில்,

மேற்படி சர்வதேச கொள்கைக் கருத்தானது ஒரு ஒளிக்கீற்றை எம்மண்ணில் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

இன்றைய கருத்தரங்கம் இந்த பின்ஹெய்ரோ கோட்பாட்டுக் கருத்தை வலியுறுத்துவதற்காக ஏற்பாடு செய்த ஒரு கூட்டமாகாவே எனக்குத் தென்படுகின்றது.

மக்களின் பரிதவிப்பை நாங்கள் புரிந்துள்ளோம். ஆனால் அவர்களின் மீள்குடியேறும் உரித்தை உணர்ந்துள்ளோமா என்றால் பெருவாரியாக இல்லையென்றே கூற வேண்டும்.

இவ்வுரித்தின் தாற்பரியம் ஜனாதிபதி முதல் சகல மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் மிகத் திடமாகத் தெரியவர வேண்டும்.

தெரியப்படுத்த வேண்டும். மக்களை அகதிகளாக்கி, தம் நாட்டிலேயே அன்னியர்களாக்கி வருடக்கணக்காக அவர்களை ஏதிலி வாழ்வு வாழ்விட சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற கருத்தை நாங்கள் இன்று முன்வைப்போம்.

எங்கள் அரசாங்கங்களும் இராணுவத்தினரும் மக்களின் ஒரு முக்கியமான தனியுரித்தைப் பறித்து வைத்துப் பங்கம் ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைகளைப் பாழ் படுத்தி வந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் கேட்டறியுமாறு இங்கிருந்து உரத்துக் கூறுவோம்.

நாங்கள் சட்டப்படி குற்றம் இழைத்து விட்டோம் என்று அரசாங்கத்தினரும் இராணுவத்தினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இன்றைய கூட்டம் அமைந்துள்ளது என்ற மனநிறைவுடன்,

ஆனால் எமது குடிபெயர்ந்த மக்களின் நிலையை நினைத்து மனவருத்தத்துடன் அவர்கள் வாழ்வில் வசந்தம் பரிணமிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

மாவீரர் நாள் பாடல் வரிகள்

மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார்.

maaveerar day song 1 maaveerar day song 2 maaveerar day song 3

முழுப் பாடல்

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

Col Vasanthan“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை பயிற்சியாளர் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலையே முதன்முதலாக கனரக ஆயுதங்களுடனான (PK, RPG, AKLMG)அணிநடை பயிற்சியை அறிமுகப்படுத்திய இராணுவ ஆசிரியர் என்ற பெரும் பெயரையும் தன்னகத்தே கொண்ட வேங்கையே கேணல் வசந்த் அல்லது குமரிநாடான்.

விடுதலை புலிகளின் ஒரு தொடக்கப்பள்ளியானது படைத்துறைப்பள்ளி என்று பெயர் கொண்டது. இதை அறியாதவர்கள் யாரும் இல்லை. இங்கு தான் அவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அணி தயாராகி கொண்டிருந்தது. அதற்கு பிரதம ஆசிரியர் வசந்த். அணிநடையில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்பித்த வசந்த் படைத்துறை பள்ளி போராளிகள் அணிக்கு தாயாக தந்தையாக நண்பனாக ஆசானாக என்று அத்தனை நிலைகளிலும் அவர்களுக்கு எல்லாமாகி நின்றார்.

படையணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளிலும் தனது படைத்துறை பள்ளி சார்ந்த போராளிகளை கொண்டு போட்டிகளை வெற்றி பெறத் தவறியது இல்லை. அதுவும் அணிநடையில் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது படைத்துறைப்பள்ளி அணி. இதற்கு அடித்தளம் இட்டது வேறு யாரும் அல்ல “கேணல் வசந்த்” என்று அவரது நினைவு பகிர்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறார். படைத்துறை பள்ளியின் முதலாவது அணி போராளியாக இருந்து பின் நாட்களில் கணணிப்பிரிவின் முது நிலை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த போராளி ஒருவர்.

குறித்த சில வருட படைத்துறைப்பள்ளி பயிற்சிகளின் பின் போராளிகள் வேறு வேறு படையணிகளுக்கு சென்ற போது குறித்த சில போராளிகளை தன்னுடனே தனது ஆசிரியர் பணிக்காக வைத்திருந்த வசந்த் தனது நேரடி நெறிப்படுத்தல்களில் அவர்களை வலு மிக்க ஆசிரியப் போராளிகளாக மாற்றுவதில் வெற்றி கண்டார். இது நியமாக போனது 1999 காலப்பகுதியில் நடைபெற்ற கராத்தே போட்டி ஒன்றில். இவரது அணியும் பொதுமக்களில் இருந்து பல வீரர்களும், விடுதலைப்புலிகளின் ஏனைய படையணியை சேர்ந்த கராத்தே அணியினரும் பங்கு பற்றி இருந்தார்கள்.

ஆனால் இவரது அணியை சேர்ந்தவர்களது சண்டையிடும் ஆற்றலானது அங்கு போட்டிக்கு வந்திருந்தவர்களை ஒரு கணம் திகைக்க வைத்திருந்ததை மறுக்க முடியாது. டேய் “வசந்தன் வாத்திண்ட பெடியள் வந்திருக்கிறாங்கள் அவங்களோட சண்டை போடா எங்களால முடியாது ” வெளியில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் அணிகள் இவர்களுடன் சண்டையிட பயந்து நின்றன. ஏனைய படையணி போராளிகளும் கூட இவர்களை கண்டு கொஞ்சம் தயக்கத்துடனே போட்டியில் பங்கு பற்றினர். அவ்வாறாக வசந்த் அவர்களை வளர்த்திருந்தார். விடுதலை புலிகளின் படையணிகளில் வசந்த் ஒரு முக்கிய பயிற்சியாளராக தனது போராளிகளை வளர்த்திருந்தார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கைக்குரிய போராளியாக உயர்ந்திருந்த வசந்த் தொடர்பாக மூத்த போராளி ஒருவரிடம் வினவினேன். அப்போது ” தம்பி முதலில் வசந்தன் என்ற பெயரை உச்சரிக்காதீர்கள். அவருக்கு வசந்தன் அல்ல பெயர். “வசந்த்” என்பதுவே அவரது இயக்க பெயர். “வசந்தண்ண” என்று போராளிகள் அழைப்பதன் மூலமாக மருவிய பெயரே வசந்தன். ஆனால் அவனது உண்மை பெயர் வசந்த். வசந்தன் என்பது அவருக்கு விருப்பம் இல்லாத பெயர் அதனால் அதை பயன்படுத்தாதீர்கள். மன்னிக்கனும் அண்ண இந்த தகவல் நான் அறியாதது. அனைவரையும் போலவே நானும் வசந்தன் என்றே நினைத்திருந்தேன். என் அறியாமையை நினைத்து கொண்டு மன்னிப்பு கேட்டு தொடர்கிறேன் அவரை பற்றி சொல்லுங்க.

கேணல் வசந்த் நீண்ட காலமாக போராளிகளை வளர்த்தெடுக்கும் ஆசானாகவே தனது போராட்ட பணியில் இருந்தார் ஆனால் அவர் அந்த காலங்களிலும் களமுனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுத்து ஒவ்வொரு கலச்சூழலையும் போராளிகளுக்கு தெளிவு படுத்துவார். அதற்காக களமுனைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக ஆய்வு செய்து கொண்டே இருப்பார். அவர் என்றும் களமுனைகளை துறந்தது இல்லை. களமுனைகளுக்காக காத்திருந்ததும் இல்லை.

எங்கெல்லாம் களமுனைகள் விரிந்து கிடந்தனவோ அங்கெல்லாம் களத்தினை தேடி செல்லும் துணிச்சல் மிக்க போராளி தான் வளர்த்த ஒவ்வொரு போராளிகளின் மனதிலும் தேசியத்தலைவரையும் மக்களையும் எங்கள் மண்ணையும் நேசிப்பதற்கான அடித்தளங்களை அவர் பலமாகவே இட்டிருந்தார்.

தமிழீழ மகளிர் படையணிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கான தற்காப்பு பயிற்சியாளராக வசந்த் செயற்பட்ட காலங்களில் சாதாரண ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை சிறப்பாக இயக்கம் வல்லமை தாங்கிய மகளிர் படையணிகளாக அவர்களை வளர்ப்பது மட்டுமல்லாது. தமது தற்காப்பு பயிற்சிகளிலும் முன்னிலை வகித்தார்கள் என்றால் அது வசந்த் என்ற ஆசிரியரின் முழு முயற்சிகள் என்றால் மிகையில்லை. “கராத்தே” மட்டுமல்லாது எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, சிலம்பு, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, கத்திச்சண்டை, யோகாசனம் எதிரியை நினைவிழக்க செய்யும் முறைகள் போன்றவற்றோடு ஜப்பானிய சீன கலைகள் உள்ளடக்கிய தற்காப்பு பயிற்சிகளை மகளிர் படையணிகளுக்கு விதைத்தார் கேணல் வசந்த்.

“உண்மை தான் அண்ண வசந்த் மாஸ்டர பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிய போதே நான் சேகரித்த தகவல்களில் முதன்மையானவையாக இருந்தது அவரது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் நடையணி பயிற்சி தான். இவற்றை விட வேறு என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

அண்ண சண்டைகள் பற்றிய திட்டமிடல்களின் போது அருகில் வைத்திருக்கும் ஒரு போராளிகளுள் ஒருவராக இவர் இருந்தவர் என்பது யாவரும் அறிந்த விடையம் தான். ஆனாலும் வசந்த் என்ற இந்த போராளி மீது எங்கள் தலைவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுகளே அங்கு இடம்பெறும் சண்டைக்கான திட்டமிடலில் கருத்துக்களை கூறும் ஒரு முது நிலை போராளியாகவும் கள நிலவரங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க கூடிய செயற்பாட்டாளனாகவும் வசந்த் தோன்றினார். அதனால் தான் பல வெற்றி சண்டைகளுக்கான திட்டங்களை வசந்த் தலைவருக்கு கொடுத்திருந்தான்.

2005 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் முற்றுமுழுதாக ஆசிரியர் என்ற நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு தலமைசெயலக ஆயுத படைக்கலங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதும் தலைமைசெயலக சிறப்புத் தாக்குதல் அணியான “மணாளன் சிறப்பு தாக்குதல் அணியின் ” பயிற்சியாளராகவும் களமுனை ஆலோசகராகவும் செயற்பட்டார். இங்கு மீண்டும் நான் அவரை பற்றி குறிப்பிட நினைப்பது கேணல் வசந்த் களமுனைகளை விட்டு பிரிந்திருந்ததில்லை. என்பதாகும்.

அவர் தனது நினைவு பகிர்வை முடித்திருந்த போதும் வசந்த் அவர்களின் களமுனை செயற்பாடுகளை விட முக்கிய செயற்பாடுகளாக பல விரிந்து கிடந்ததை நான் வேறு பலரிடம் திரட்டிய தகவல்களில் கண்டுகொண்டேன்.Col Vasanthan 2

கேணல் வசந்த் படைக்கல பிரிவுக்கான பொறுப்பாளராக இருந்த போது எங்கோ ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஸ்கோப்” என்று சொல்லப்படுகிற ஆயுத இலக்கு குறிகாட்டி ஒன்றினை தமிழீழ மண்ணில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். 600 அமெரிக்க டொலர் குடுத்து வாங்க வேண்டிய அந்த குறிகாட்டியை நான் உருவாக்குகிறேன் என்று தலைவரிடம் அனுமதி பெற்று கிட்டத்தட்ட ஆறு முறைகள் முயற்சியில் தோல்வியடைந்து, ஏழாவது முறை தனது கண்டுபிடிப்பை தலைவரிடத்திலே வெற்றியாக சேர்த்திருந்தார்.

வெறும் 1200 இலங்கை ரூபாக்களின் பெறுமதியில் உருவாக்கப்பட்ட அந்த குறிகாட்டி வெளிநாடுகளில் இருந்து வாங்கிய குறிகாட்டிகளின் தரத்தில் இருந்து எந்த குறைவும் இல்லாமல் இருப்பதை கண்டு தலைவர் வியந்தார் என்பது வரலாறு. உடனடியாக இவற்றை விடுதலைப்புலிகளின் படைக்கல உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய பணிக்கப்பட்டாலும், நெருங்கி வந்து கொண்டிருந்த இராணுவ முற்றுகையும், சண்டைக்களங்களும் அதற்கு நேரத்தை தராது போனது இந்த வெற்றியில் இருந்து ஒரு பாடத்தை அவர் எம்மிடையே விட்டு சென்றார். தோல்வி என்பது எமக்கு படிக்கல், எத்தனை முறை தோற்றாலும் அத்தனை முறையும் ஒருவன் எழுவான் எனில் அவன் தோற்றதாக வரலாறு இல்லை குறைந்த வளப்பரப்புக்குள் இருந்த எம்மால் இப்படியான குறிகாட்டிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது எனில் அதற்கு வசந்த் வாத்தியோட விடா முயற்சியும் கிடைத்த வளங்களை பயன்படுத்த தெரிந்த நுண்ணறிவும் என்றால் அது பொய்யில்லை. இத்தகைய ஒரு பெரு வீரன் தேசத்தில் எரிந்த எறிகணைகளின் துண்டுகளால் வீழ்ந்து தீப்பிழம்புகளின் வேகம் தாங்காது மண்ணுக்காக மடிந்து விட்டார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் தான் நேசித்த ஆசிரியத்துவத்தின் புனிதத்தை தொலைத்து உயிர்வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து சென்ற வேங்கை அவர். இதை அவரது இறுதி வார்த்தைகள் நிரூபணம் செய்கின்றன. இந்த வீர ஆசான் தனது இறுதி கணங்களுக்காக காத்திருக்கிறேன் என்பது தெரியாது தனது பொறுப்பின் கீழ் உள்ள படைக்கலங்களை ஒழுங்கு படுத்தல்களில் முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி மாலை கடந்து இரவு ஆகிகொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அவருடன் இருந்த சில போராளிகளுடன் இறுதிச் சண்டைக்கான ஆயுத வினியோகத்துக்கான தயார்படுத்தல்களில் சுத்திகரிப்பு, சீர்திருத்தம், களஞ்சியம், விநியோகம் என பல முனைப்புக்களில் இருந்த நேரம்.

பல் முனை தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவலங்கள் நிறைந்த பாதைகளில் உயிர் காக்க ஓடி கொண்டிருக்கிறார்கள். போராளிகள் தங்கள் தயார்படுத்தல்களில் மும்முரமாகி இருக்கிறார்கள். அப்போதும் அங்கே ஒரு இனத்துரோகம் அரங்கேறுகிறது. என்பது நடந்த சம்பவங்களின் துல்லியம் எமக்கு எடுத்துரைத்து நின்றது. அன்று இரவு சூழ்ந்த அந்த நேரத்தில் எங்கிருந்தோ எமது பாதுகாப்பரனை விட்டு வெளிவந்து வீதியில் ஏறிய இராணுவ அணி ஒன்று சரியாக இலக்கு வைத்து வசந்த் வாத்தியுடைய படைக்கல களஞ்சியத்தை நோக்கி தாக்குதலை தொடுக்கிறது. உடனடியாக தாக்குதலை முடித்து அந்த இடம் விட்டு போகிறது.

பகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் காலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த்தும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை
அடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த கட்டளை இடுகிறார். ஓடு, ஓடு வெளீல எல்லாரும் ஓடுங்கடா அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப் பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார்.

மாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியையே விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது.

இந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா? “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது…? அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன்.

போராளிகள் தடுக்க முடியாது அவரது வீர போராளிக்கான குணத்தை கண்டு விக்கித்து போய் நிற்கிறார்கள். எத்தனையோ சமர்க்களங்களில் தீய்க்கு தீயாக எரிந்த நாயகர் வரிசையில் தானும் சேர்வது தெரியாது கைத்துப்பாக்கியை பாதுகாக்க தீயின் நாக்குகளுக்கு போக்குக்காட்டி உள்ளே நுழைகிறார் எரிபொருள் மூண்டு எரிகிறது, வெடிபொருட்கள் வெடிக்கின்றன. சிந்தி கொழுந்து விட்டு எரிகிறது. வாகனங்கள் தீயின் நாக்குகளால் பொசுங்குகின்றன. உள்ளே ஓடிய புலியை பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது புலியணி. ஆனால் போனவர் மீண்டும் வரவில்லை… காத்திருப்பு அதிகாலை வரை தொடர்கிறது. ஆனால் தீயின் நாக்குகள் அடங்கவில்லை.

நடு இரவு கடந்து விடியலுக்கு நேரம் வரும் போது தீ அடங்கத் தொடங்கி எல்லாம் ஓய்வுக்கு வந்த போது அனைவரும் வசந்த் மாஸ்டரை தேடுகிறார்கள். வோக்கிகள் அனைத்தும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பெயரை உச்சரிக்கிறது. புலிகளின் அணிகள் தாம் தங்களது வசந்த் மாஸ்டரை இழந்து விட்டோம் என்பது தெரியாது தேடிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் கிடைக்காத அவரது தொடர்பு இவர்களை அந்த களஞ்சியத்தின் உட்பகுதிக்குள் தேட வைக்கிறது. தேடல் தொடர்ந்து உள்ளே சென்ற போது களஞ்சியத்தின் உள் பகுதியில் அவரது உடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. காலிலிருந்து இருந்து அரைவாசி வயிற்றுப் பகுதி வரை எரிந்து கிடந்தது புலியாசானின் வீர உடலம். தான் நேசித்த கைத்துப்பாக்கியை இறுக்க பற்றி கிடக்கிறது அவரது கரம். தான் நேசித்த விடுதலை போராட்டத்திற்காக தடையுடைக்கும் முது நிலை போராளியாக வாழ்ந்த வசந்த் நெருப்பின் நாக்குகளுள்ளுள் எரிந்து கிடக்கிறார். ஆனாலும் உடலத்தை துளைத்து கிடந்த எறிகணை துண்டுகள் அவரது வீரவுடல் தீயால் வீழவில்லை என்பதை எமக்கு காட்டி நின்றது.

அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றது நெருப்பு.

என்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை தலைவரிடம் குடுங்கள் என்று தன் கதை முடித்த சீலன் தடம் பதித்து நிமிர்ந்தவர்களில் ஒருவனாக எங்கள் வசந்த் மாஸ்டரும் தான் நேசித்த கைத்துப்பாக்கிகாக மூச்சை நிறுத்தி கொண்டார். தேச தலைவனின் தம்பியாக நேசத்துக்குரியவனாக வாழ்ந்து தேச விடுதலைக்காகவே தன்னை எதிரியின் எறிகணைக்குள் ஆகுதியாக்கி கேணல் குமரிநாடான் அல்லது வசந்த் என்று நிலையெடுத்து எங்கள் மனங்களை வென்று பதிந்து போய் கிடக்கிறார்

நினைவுப்பகிர்வு:- கவிமகன்

பிரபாகரனின் பாதி பலம் பொட்டு தான்

balraj-soosai-podduபிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்……

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.

புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!

பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,

”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு.

ராஜீவ் காந்தி கொலையின் போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.

அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள்.

யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது இராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கையின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் இராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம் கூட இராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை இராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”இராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் இராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமே மிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு.

கருணா, சிங்கள அரசோடு லேசான தொடர்பில் இருந்த போதே, அது குறித்துப் பிரபாகரனிடம் எச்சரித்திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை இராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள இராணுவமும் நம்பிவிட்டது.

பிரபாகரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, இராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட்டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பிலிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் இராணுவம் இதுவரை அடையாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இராணுவத்துக்கே புரியாத புதிர்தான்.

ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றிதழைக் கேட்டு இந்திய அரசு, இராணுவத்தை நச்சரித்து வருகிறது.

பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் இராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது.

இராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிறநாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்படவிருந்த போது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை இராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

உலக நாடுகளில் புலிகளை சிதைத்துக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் அல்லாத நிதிப் புள்ளிகள்!

Tamil Diaspora co operationsஇக்கட்டுரையினை முழுமையாக  ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதராங்கள் இல்லாவிட்டாலும்  அதனை உங்களிடமே விட்டு விடுகின்றோம்..

***

லண்டன் மாவீரர் நாள்! மண்டபத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து விசனம்

லண்டனில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் மண்டபத்தினர் நடந்து கொண்ட விதத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட வலிகள் பற்றி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக திரு சிவந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

*****

ஒரு முன்னை நாள் போராளியின் அன்பான வேண்டுகோள்!

வணக்கம் உறவுகளே…

இந்தப் பதிவினை நான் பதிவிடுவதன் உண்மையான நோக்கம் என்னவெனில், பிர்த்தானியாவில் பாதைமாறிப் பிரயாணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முகமூடியினை அணிந்த வெறும் நிதிக் கட்டமைப்பு ஒன்றின் தேசத்துரோக செயற்பாட்டினை மக்களாகிய நீங்கள் இனங்கண்டு அவர்களை இல்லாதொழிக்கவேண்டும் என்பதுடன், வரியுடை அணிந்த உண்மையான முன்னைநாள் போராளிகளை உள்ளடக்கியதான ஒரு புதிய கட்டமைப்பு ஒன்றை ஏகமனதாக நிறுவி அவர்கள் ஊடாக தேசிய மாவீரர் நாள் உள்ளடங்கலான அனைத்து நிகழ்வுகளையும் நடத்தவேண்டும் என்பதுடன், முற்றுமுழுதான போராளிகளைக்கொண்ட ஒரு அரசியல் அணியினை உருவாக்குவதுடன், மக்களுக்குள் தெரிவுசெய்யப்பட்ட தீவிர செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய இரண்டாம்நிலை கட்டமைப்பையும் நிறுவி அதனூடாக இழக்கப்பட்ட எமது பலத்தினை மீட்பதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட சீரான நிர்வாகக் கட்டமைப்பாக இக்கட்டமைப்பு வழர்ச்சிகாணவேண்டும் என்பதுடன், “எமது தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் தோன்றும்வரை” இக்கட்டமைப்பு மட்டுமே புலிகளுக்கான ஒரே ஒரு பலமான கட்டமைப்பாக இயங்கமுடியும் என்ற நிலையினை உருவாக்கி, எமது மக்களை கௌரவமாக அவர்கள் தம் மாவீரச் செல்வங்களை வணங்குவதற்கான புறச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க முன்வருமாறு பிருத்தானியாவில் தஞ்சமடைந்திருக்கும் வரியுடை அணிந்த முன்னை நாள் போராளிகள் அனைவரையும் துணிந்து செயற்பட முன்வருமாறு “ஐந்து வரியுடை அணிந்த போராளிகளின் சகோதரன் என்ற உரிமையுடனும், ஒரு மாவீரனின் சகோதரன் என்ற உரிமையுடனும்,எனது தந்தையை நாட்டுப்பற்றாளராகக் கொண்டவன் என்ற உரிமையுடனும் நானும் ஒரு வரியுடை அணிந்த முன்னை நாள் போராளி என்ற உரிமையுடனும் இதை உங்கள்முன் அறிக்கையிட விரும்புகின்றேன்.

கடந்த 17-05-2009ற்கு முன்னர் உலக நாடுகளில் உள்ள ஈழ உணர்வாழர்களை ஒன்றிணைப்பதற்காக எமது தேசியத் தலைவர் அவர்களால் விடுதலைப் புலிகளின் சில முக்கிய செயற்பாட்டாளர்கள் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் யாவும் மேற்குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் சிதைவடைந்து சின்னா பின்னமாகி உருக்குலைந்து போயிருப்பதனால் அவர்களை வழிநடத்திவந்த உண்மையான ஆதரவாழர்கள் பலர் தமது தனிப்பட்ட பாதுகாப்பின் நிமித்தம் தலைமறைவாகவும், பலர் தமக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாகவும், பலர் தம்மை நெறிப்படுத்திவந்த உண்மையான விடுதலைப் புலிகளின் தொடர்புகள் யாவும் “17-05-2009ற்கு பின்னர் இல்லாததன் காரணமாகவும்” மேற்குறிப்பிட்ட கட்டமைப்புக்களை விட்டு வெளியேறிய நிலையிலும், சிலர் மட்டும் அதாவது இந்தக் கட்டமைப்புக்களின் நிதி நிலைகளில் செயற்பட்டுவந்த முக்கிய புள்ளிகள் தவிர்ந்த அனைவரும் தற்போதுவரை அஞ்ஞாத வாசத்தில்தான் இருந்துவருகின்றார்கள்.

ஆனால் இந்த நிதிகளைக் கையாண்ட நிதிப்புள்ளிகள் மட்டும் தமது வழமையான செயற்பாட்டை இன்றுவரை செவ்வனே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்’ இது எப்படி அவர்களால் முடிகின்றது?

குறிப்பாக 17-05-2009ற்கு பின்னரான விடுதலைப் புலிகளின் உண்மையான செயற்பாடுகள் அனைத்தும் தாயகத்தில் சிதறடிக்கப்பட்டு விட்டதனால், அந்த சிதறடிக்கப்பட்ட தளங்களில் இருந்து தப்பிச்சென்றுகொண்டிருக்கும் போராளிகள் அனைவரும் பல்வேறு நாடுகளுக்குள் தங்களை நிலைப்படுத்திவரும் இன்றுவரையான உண்மையான களச் சூழ்நிலையாக இருந்துவருகையில் அவர்களால் உடனடியாக இந்த நாடுகளில் எதுவும் செய்யமுடியாது என்ற உண்மை நிலையினை மக்களாகிய நீங்களும் நன்கு அறிவீர்கள்.

அத்துடன் தாயகத்திலிருந்து புலம்பெயர் செயற்பாட்டாளர்களை வழிப்படுத்தி, நெறிப்படுத்திய இந்த உண்மையான போராளிகள் அனைவரும் தற்போதுவரை உலகநாடுகள் எங்கும் பரந்திருப்பதனால் தங்களுக்கான தனித் தளத்தினை எங்கும் இதுவரை பலமாக நிறுவமுடியாமல் இங்கும் அவர்கள் சிதறிய நிலையில்தான் இருந்துவருகின்றார்கள்’ இது ஒரு உண்மையான ஜதார்தமான நிலைதான்’ ஆனாலும் இது வெகு காலம் செல்லாதென்பதும் மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும்.

இதேபோன்றுதான நிலைதான் ஏற்கனவே செயற்பட்டுவந்த உண்மையான விடுதலைப் புலிகளின் செயற்பாட்டளர்களுக்கும் இந்த நாடுகளில் அவர்களை இயக்கிவந்த வன்னித் தளத்துடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டதனால் அவர்களும் எந்தவித வழிப்படுத்தல்களுமின்றி அமைதியாக இருந்துவருகின்றார்கள்’ ஆகமொத்தத்தில் உண்மையான விடுதலைப் புலிகளும், அவர்கள் இயக்கிவந்த உண்மையான விடுதலைச் செயற்பாட்டாளர்களும் சமமான வாழ்கையினைத்தான் தற்போதுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.

மேலும் இங்கே கவனிக்கப்படவேண்டிய அதி முக்கிய விடையம் என்னவெனில், உண்மையான போராளிகளும், உண்மையான செயற்பாட்டாளர்களும் இன்றுவரை ஒருங்கிணையாத போது எப்படி இந்த நிதிப் புள்ளிகளால் மட்டும் விடுதலைப் புலிகளின் சார்பாக இந்த நாடுகளில் வாழும் எமது மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களிடம் நிதிகளைத் திரட்டவும் முடிகின்றது?

இங்கேதான் இதற்கான மர்மங்கள் பொதிந்து கிடக்கின்றன. அது என்னவெனில், 17-05-2009ற்கு முன்னரான சுமார் ஆறு மாத காலத்துக்குள் புலம்பெயர் நிதி நிலைகளில் வீற்றிருந்த மேற்குறிப்பிட்ட புள்ளிகள் அனைவரும் “KP எனப்படும் பத்மநாதனின்” நேரடி நெறிப்படுத்தலுக்குள் உட்பட்டிருந்ததுடன்’ இந்த நிதிப் புள்ளிகளால் உலக நாடுகளெங்கும் சமகாலத்தில் எமது மக்களிடம் திரட்டப்பட்ட நிதிகள் அனைத்தும் KPயின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்துவந்ததென்பதும், அது தற்போதுவரை இருந்துவருவதாகவுமே நம்பப்படுகின்றது.

இதற்கான வலுவான ஆதாரமாக இலங்கையிடம் சரணடைந்த KPயின் தந்திரமான சரணடைவையே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்’ மேலும் புலம்பெயர் நிதிப் புள்ளிகளை இன்றுவரை அவர்தான் நெறிப்படுத்துகின்றார் என்பதற்கான புலனாய்வு ரீதியான தகவல்களும் சில முக்கிய புள்ளிகள் ஊடாக வெளியில் கசிந்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக எமக்கு சில தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அது என்னவெனில்,KPஎனப்படும் பத்மநாதனை மேற்குறிப்பிட்ட ஆறுமாத காலப்பகுதிக்குள்தான் புலிகள் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக நியமித்திருந்தார்கள் என்பதுடன்’ இதற்கான காரணங்களாக இந்த ஆறுமாத காலத்திற்கு முன்பாக புலிகளின் சர்வதேச கடல் நடவடிக்கைகள் அனைத்தும் சிங்கள,இந்திய,உலக கூட்டுச் சதிகள் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் புலிகளின் அனைத்து கப்பல்களும் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து தாக்கி மூழ்கடிக்கப்பட்டதும் நாம் கண்ட உண்மை வரலாறுகள்.

இந்த கப்பல்களின் தொடர் மூழ்கடிப்பின் காரணமாகத்தான் அதுவரை புலிகளின் தண்டனைக் காலத்தை அனுபவித்துவந்த KPஎனப்படும் பத்மநாதனை அவசரமாக தலைவர் அவர்கள் தண்டனையை நிறுத்தி மீண்டும் பழைய பொறுப்பில் நியமித்திருந்தார்’ ஆனால் இந்த மாற்றம் நிகழ்ந்து ஓரிரு வாரங்களில் KP தாய்லாந்தில் அந்நாட்டுப் பொலிசாரிடம் அகப்பட்ட சம்பவம் ஒன்று திட்டமிட்ட வகையில் நிகழ்ந்திருந்தது’ ஆனால் அவர் பின்னர் தான் அவர்களிடம் இருந்து தப்பிவிட்டதாக வன்னிக்கு பெருமையுடன் தகவலையும் பரிமாறியிருந்தார்.

இதற்கான அடித்தளத்தினை “இலங்கை புலனாய்வுதான்” மேற்கொண்டிருந்ததாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் தனது கீழ்மட்டத் தாக்குதல் தளபதிகள்முன் முள்ளிவாய்க்காலை நாம் அண்மித்தவேளையில் சினத்துடன் கூறியும் இருக்கிறார்’

இங்கே இந்த பாசாங்கு நடவடிக்கை KPயாலும்,இலங்கை புலனாய்வாலும் எதற்காக மேற்கொள்ளப்பட்டதென்றால் அவரில் எமது தலைவர் அவர்கள் பூரண நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதே இதற்கான உண்மைக் காரணம் எனவும் தளபதி சூசை அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

KPயின் இந்த நயவஞ்சக செயற்பாடுகளை ஆரம்பத்தில் தலைவர் அவர்களால் இனங்காண முடியாமல் போனதற்கு மேற்குறிப்பிட்ட நிதிப் புள்ளிகளின் KPயுடனான அந்தரங்க கூட்டுத் துரோகம்தான் முதன்மைக் காரணங்கள் என அன்று தளபதி பொட்டு அம்மானாலும் கருதப்பட்டிருந்தது’ இந்தத் துரோகத்திற்குப்பின்னர்தான் புலிகளுக்கான அழிவுகாலம் வேகமாக நகர்ந்து சென்றது.

ஆகமொத்தத்தில் சர்வதேசத்தில் எமது புலனாய்வுப் போராளிகளின் பலவீனத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே KPயும் அவன் கூட்டாளிகளும் தமது துரோகத்தை செவ்வனே நடைமுறைப்படுத்தி எமது தாயகத்தையும்,ஆயிரக்கணக்கான எமது போராளிகளையும்,மக்களையும், எமது மக்கள் அள்ளிவழங்கிய தாயக மீட்பிற்கான நிதியினையும் தமது தேசத் துரோகத்தினால் நாசம் செய்துள்ளார்கள்.

இத்தனைக்கும் ஆசான்களாக இருந்துவரும் இந்த நிதிப் புள்ளிகளை ஏன் எம்மால் அழிக்கமுடியாதுள்ளது?அல்லது ஏன் இன்னும் இனங்காண முடியாமல் உள்ளது?இல்லையேல் இனங்கண்டும் அழிக்கமுடியவில்லையா?

இதற்கான உண்மைக் காரணங்கள் இதுதான், அதாவது இந்த நிதிப் புள்ளிகள்தான் இன்றுவரை நாங்கள் சென்றுவரும் மாவீரர் நாள்’அதாவது 2009ற்கு பின்னர் பிரமாண்டமாக நடத்தப்பட்டுவந்த ஒவ்வொரு மாவீரர் நாட்களையும் நடாத்திவருகின்றார்கள்’

எப்படி இவர்களால் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து பிமாண்டமான முறையில் நடாத்த முடிகின்றது? மேலும் இவர்களால் இதுவரை நடாத்தப்பட்ட மாவீரர் நாட்கள் ஊடாக சாதிக்கப்பட்டவை என்ன? இன்னும் தற்போதைய காலகட்டத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்தி சிதறடிக்கப்பட்ட போராளிகளை ஒருங்கிணைத்து விடுதலைப் புலிகளின் சர்வதேச பலத்தினை பலப்படுத்தி எமது மாவீரர்களின் கனவினை நனவாக்கவும், விடுதலைப் புலிகளின் சர்வதேச பலத்தினை ஒருங்கிணைத்து விடுதலைப் புலிகளின் சார்பாக ஒரு பலமான மக்கள் செல்வாக்கினை இந்த உலக நாடுகளில் நிறுவுவதற்காக ஏதாவதொரு நகர்வினையும் இதுவரை மேற்கொண்டார்களா?அத்துடன் ஈழ உணர்வாழர்களால் வழங்கப்பட்டுவரும் கோடிக்கணக்கான நிதிகளை இதுவரை விடுதலைப் புலிகளின் அரசியல் எழிச்சிக்காக ஏதேனும் ஒரு முயற்சியெடுத்து பயன்படுத்தினார்களா?

இன்னும் சிதறடிக்கப்பட்டு பலவீனப்பட்டிருக்கும் எமது இயக்கத்தினை கட்டியெழுப்புவதனூடாகவே தமிழருக்கான அரசியல் கௌரவத்தினை இந்த உலகநாடுகளிடமிருந்து பேரம்பேசிப் பெறமுடியுமே அன்றி வேறு எந்தவகையிலும் நாம் எம்மை பலப்படுத்துவதனூடாக எதையும் பெறமுடியாதென்கிற உலக ஜதார்த்தத்தை இவர்கள் புரிந்திருக்கிறார்களா?

மேலும் விடுதலைப் புலிகளின் பெயரால் இவர்கள் தம்மை மட்டும் இந்த நாடுகளில் பலப்படுத்தி தமக்கான நிதிகளை மட்டும் பெற்றுக்கொண்டிருக்கிறார்களே அன்றி இவர்கள் உண்மையில் விடுதலைப் புலிகளா?

மேலும் எமது தாயகத்தில் பலவீனப்பட்ட எமது இயக்கத்தின் பலத்தினை உண்மையில் மீழவும் கட்டியெழுப்புவதாக இருந்தால் வெளிநாடுகளுக்குள் அரசியல் தஞ்சமடைந்துகொண்டிருக்கும் சகல போராளிகளையும் இவர்கள் ஒரு கட்டமைப்புக்குள் உள்வாங்கி அவர்களைப் பலப்படுத்துவதனூடாகவே விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தினை ஸ்திரப்படுத்த முடியும்’இதுவரைக்கும் அப்படிப்பட்ட வேலைத்திட்டம் எதையாவது இவர்கள் நடைமுறைப் படுத்தியுள்ளார்களா?

இப்படியான அடுக்கடுக்கான கேள்விகளை இதுவரைக்கும் உண்மையான விடுதலை உணர்வாளர்களும்,உண்மையான விடுதலைப் புலிகளும் பலதடவை இவர்களை நோக்கி கேட்டிருந்த போதிலும் இவர்களால் அக்கேள்விகளுக்கான உறுதியான பதில்கள் எவையும் இதுவரைக்கும் வழங்கமுடியவில்லை.

இருந்தும் நழுவல் வழுவல் போக்கிலான பதில்களை மட்டும் அவ்வப்போது தெரிவித்து அதாவது தாம் “மேலிடத்தின் தொடர்புடன்தான் இருப்பதாகக் கூறி” தமது தனிப்பட்ட பிழைப்பினை விடுதலைப் புலிகளின் பெயரால் இந்த நிதிப் புள்ளிகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆகமொத்தத்தில் இவர்களால் விடுதலைப் புலிகளை ஒருங்கிணைக்கும் எந்தவொரு முயற்சிகளும் இதுவரைக்கும் கடுகளவேனும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நூறுவீதம் எம்மால் ஆணித்தரமாகவும் அறுதியிட்டும் கூறவும்முடியும், இதற்கான ஆதாரங்களாக இந்த நாடுகளுக்குள் கடந்த 17-05-2009ற்கு பின்னர் வருகைதந்த நூற்றுக்கணக்கான போராளிகள் எமக்கு சாட்சிகளாக இருக்கின்றார்கள்.

அத்துடன் மேற்குறிப்பிட்ட நிதிப் புள்ளிகள் கூறிவரும் மேலிடம் என்பது துரோகி KP பத்மநாதனே அன்றி விடுதலைப் புலிகளின் மேலிடம் அல்ல’

மேலும் கடந்த 17-05-2009ற்குப் பின்னர் இவர்கள் கூறிவந்த இன்னுமொரு மேலிடத்தைப்பற்றி இங்கே நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அதுதான் கேணல் றாம், கேணல் நகுலன்’ இவர்களுடன் தான் எமது தலைவர் அவர்கள் இருப்பதாகவும் இவர்களின் உத்தரவில்தான் தாங்கள் இங்கு செயற்பட்டுவருவதாகவும் கூறப்பட்டிருந்தது’ ஆனால் அந்த றாமும்,நகுலனும் தற்பொழுது எங்கே? இதற்கான விடை அவர்கள் பத்திரமாக இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் பிடியில் இருக்கிறார்கள் என்பதுதான்.

அப்போ இந்த நிதிப் புள்ளிகள் கூறிய மேலிடம் என்பது தற்போதுவரை இவர்களின் தொடர்புடன்தான் இருக்கின்றதென்பதை அன்றே இவர்கள் நிரூபித்துவிட்டார்கள்’ மேலும் மேற்குறிப்பிட்ட மேலிடத்திற்காக இவர்கள் கோடிக்கணக்கான பணத்தினை தாங்கள் அனுப்பியதாகவும், அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் இன்னும் குறித்த மேலிடத்திலிருந்து தம்முடன் தொடர்பில் பேசிய கேணல் றாம், கேணல் நகுலன் ஆகிய இருவரும் இந்த நிதிப் புள்ளிகளுடன் தொலைபேசியில் காட்டுக்குள் இருந்து பேசியதான ஒரு ஒலிவடிவத்தை நீங்களும் கேட்டிருப்பீர்கள்’ இதிலிருந்தே இந்த நிதிப் புள்ளிகளை யார் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களாகிய நீங்கள் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியும்.

அத்துடன் கேணல் றாம்,கேணல் நகுலன் இந்த இருவர் உள்ளடங்கலான சுமார் 150து வரையான போராளிகள் ஏற்கனவே அதாவது 2009 ஜனவரிக்கு முன்னதாகவே மட்டக்களப்பு,அம்பாறை உள்ளிட்ட வனப்பகுதியில்தான் தளமிட்டிருந்தார்கள் என்பதை வன்னியில் இறுதிவரை இருந்த அனைத்துப் போராளிகளுக்கும் இது நன்கு தெரியும்’ 18-05-2009துவரை அதாவது போர் முடியும்வரை இவர்கள் வன்னிக்குள் வரவேயில்லை’ ஆனால் போர்முடிந்த சில வாரங்களிலேயே இவர்கள் கருணாவினதும்,KPயினதும் வேண்டுகோளிற்கிணங்க இரகசியமான முறையில் இராணுவப் புலனாய்வாளர்களிடம் அகப்பட்டுவிட்டார்கள்.

ஆனால் இவர்களுடனான சர்வதேசத் தொடர்பினைப்பேணி அதனூடாக இலங்கை புலனாய்வாளர்கள் தாம் பணம்சம்பாதிக்கவும், சர்வதேசத்தில் செயற்பட்டுவரும் உண்மையான உணர்வாழர்களை இனங்கண்டு அவர்களை தமது சதிவலையில் வீழ்த்தவும், இன்னும் விடுதலைப் புலிகளின் பாணியில் ஒரு கட்டமைப்பை நிறுவி அதனூடாக சேர்க்கப்படும் நிதிகளை சூறையாடவுமே இலங்கை புலனாய்வு KP, கருணா, உள்ளடங்கிய சதிக்கும்பல்களை உருவாக்கி அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில்தான் றாம்,நகுலன் ஊடாக சர்வதேசத்திலிருக்கின்ற நிதிப் புள்ளிகளுடன் தற்போதுவரை தொடர்பினில் இருந்துவருகின்றார்கள்.

இங்கே இன்னுமொரு மிகவும் முக்கியமான விடையம் என்னவெனில், சர்வதேசத்தில் தற்போதுவரை இயங்கிவருகின்ற நிதிப் புள்ளிகள் எவரும் உண்மையான போராளிகள் இல்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விடையம்’ இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் இவர்களை மேலிடம் என்ற வார்த்தையை இராணுவப் புலனாய்வே இவர்களிடம் கூறும்பொழுதும், இவர்களால் அவற்றை இலகுவாக நம்பவும் முடிகின்றது’ அத்துடன் இந்த நிதிப் புள்ளிகளை நம்பி உண்மையான உணர்வாழர்களும் இவர்களின் நயவஞ்சகத்தை அறியாது விடுதலைப் புலிகள்தான் இந்த நிதிப் புள்ளிகளை வழிநடத்துவதான எண்ணத்தில் எந்தவித எதிர்ப்புக்களுமின்றி தமது ஆதரவினையும் வழங்கிவருகின்றார்கள்.

இதனால்தான் இந்த நிதிப் புள்ளிகள் மக்களின் எந்தவித எதிர்ப்புக்களுமின்றி தங்களை இலகுவாக உருமறைத்து இயக்கமுடிகின்றது’ மேலும் ஒரு முக்கியமான விடையம் என்னவெனில், இந்த நிதிப் புள்ளிகள் இயக்கம் போன்ற பாணியிலேயே தங்களை இயக்கி வருவதுதான் இவர்களை எவராலும் இலகுவில் இனங்காண முடியாமல் உள்ளதற்கான இன்னுமொரு காரணமாகவும் இருந்துவருகின்றது’ ஆனால் இந்த நிதிப் புள்ளிகளை தற்போதுவரை உண்மையான போராளிகள் அனைவரும் இனங்கண்டுவிட்டார்கள் என்பதனை மட்டும் இந்த நிதிப் புள்ளிகள் நன்கு தெரிந்துவைத்துள்ளார்கள்.

அதனால்தான் “தமது உறவுரீதியான சில போராளிகளை தம்வசம் வைத்திருந்து” அவர்களையும் தமது துரோக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி அவர்களால் தமது துரோகத்தை மக்கள்முன் மறைத்தும் வருகிறார்கள்’ இப்படியான துரோகிகளின் கையினில்தான் தற்போதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஊசலாடிவருவதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும் இந்த நிதிப் புள்ளிகள் தாயகத்தில் இருந்து தப்பிவந்த போராளிகளை துரோகிகள் என்றும், குப்பி கடித்து ஏன் சாகவில்லை என்றும் பகிரங்கமாகவே உண்மையான போராளிகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றார்கள் என்றால்’இந்தக் கேள்விகளை கேட்பவர்கள் உண்மையில் யாராக இருக்க முடியும்? புலிகளைப் பார்த்து புலிகள் கேட்பார்களா? மக்களே,போராளிகளே சிந்தியுங்கள்.

ஆகவே என் அன்புக்குரிய பித்தானியாவாழ் ஈழ உணர்வாழர்களே,மாவீரர் போராளி குடும்பங்களே,போராளிகளே சிந்தியுங்கள்…..

இப்படியான இந்த நயவஞ்சக பிசாசுகளின் கைகளில் எமது தேசியத் தலைமையினால் கட்டிவழர்க்கப்பட்ட இந்த புனிதமான இயக்கம் நிதிப் புள்ளிகளால் சமகாலத்தில் பந்தாடப்பட்டுவருவதை வெறுமனே கைகட்டி நாம் வேடிக்கைபார்து ஒதுங்கிநிற்க முடியுமா? மேலும் உண்மையாக எமது தலைவனிலும், மாவீரர்களிலும் எமது தேசத்திலும் நாம் இன்றுவரை பாசத்துடன்தான் இருக்கிறோமென்றால் எதற்காக நாம் இந்த நிதிப் புள்ளிகளை இயங்கவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டும்?

சிங்கள எதிரிகளுக்கெதிராக நாம் உயிரை அர்ப்பணித்துப் போராடும்பொழுது எங்களுக்குள் இல்லாத உயிர்ப்பயம் இப்போ எதற்காக உங்களுக்குள் எழவேண்டும்? முள்ளிவாய்க்கால்வரை எமக்குள் தோன்றாத உயிர்ப்பயம் இப்போ பிருத்தானியாவில் மட்டும் ஏன் தோன்றவேண்டும்? எமது விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்துவதற்காக எதிரியுடன் போரிட்டு மடியும் தறுவாயிலும் தனது ஆயுதத்தை எடுத்துச்சென்றுவிடு, என்னையும் கொன்றுவிடு என்று உன் தோழன் உனக்கிட்ட கட்டளை எதற்காக? இப்போ எதிரிக்குச் சமமாக எமது பலத்தை அழிப்பதற்கு எம்மைப்போல் சிலர் வேடம் தரித்து எம்மை அழிக்க முயலும்பொழுது நீ தெரிந்தும் வேடிக்கை பார்ப்பது எதற்காக?

ஆயிரம் ஆயிரம் எம் போராளிகள் உன்னையும் என்னையும்போன்ற உயிருள்ள மனிதர்களாகத்தான் இருந்தார்கள்’ ஏன் அவர்கள்மட்டும் சாகவேண்டும்? நீயும் நானும் அவர்களும் சேர்ந்துதானே களமாடினோம்? ஆனால் நீயும் நானும் சாகவில்லை’ ஆனால் அவர்கள் மடிந்துவிட்டார்கள். அதற்காக நாங்கள் தப்பிவிட்டோம் என்றல்ல……

விழ விழத்தான் புலிகள் எழுந்தார்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்’ எல்லோரும் அன்றே விழுந்திருந்தால் எழுவது யார்?

“நாங்கள் விழவில்லை” அதனால் எம்மை நம்பி விழுந்தவர்களுக்காக நாம் எழவேண்டும்’ ஆகவே என் அன்பான போராளிகளே
உணர்வாழர்களே…….

நேற்றைய 27-11-2015து பிரித்தானியாவில் நடந்த மாவீரர் நாளில்’ இடம்பெற்ற வரலாற்று துரோகத்திற்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ புலித்தோல் போர்த்திய செல்வந்தர்களின் கால்களிலும் கைகளிலும் எமது மாவீரர்கள் பந்தாடப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அத்துடன் பார்வையாளர்களாக புலிகளும் இருக்கமுடியாது’ இன்னும் மாவீரர் நாள் என்பது முதன்மையாக விடுதலைப் புலிகள் கூடிநின்று இறந்த தமது வீரர்கள்மேல் சபதமெடுக்கவேண்டும் என்பதே எமது தலைவர் அவர்கள் போட்ட கட்டளையும் ஆகும்’ இங்கே பார்வையாளர்களாக போராளிகள் எவரும் இருக்கமுடியாதென்பதை உங்கள் சிரத்தினிலும் நெஞ்சினிலும் நிறுத்தி அடுத்துவரும் மாவீரர் நாளினை வரிப்புலிகள் புடைசூழ மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை எமது மாவீரர்களின் உறவுகள் பெருமையோடு நின்று தாமும் அஞ்சலி செலுத்தி பெருமைகொள்கவேண்டும் என்பதே எமது தலைவரினதும் விருப்பமாகும்’

ஆகவே எம் தலைவன் ஆணையை சிரமேற்றி இங்கே பிருத்தானியாவில் புலிகளை அழிக்கும் புலித்தோல் போர்த்திய நயவஞ்சக துரோகிகளை இனங்கண்டு வெளியேற்ற அனைவரையும் உண்மையான வரிப்புலியின்கீழ் அணிதிரழுமாறு அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றேன்.

நன்றி
முன்னை நாள் போராளி
பரந்தாமன்!

தமிழர்குரல்

இத்தாலி மீடியாவில் மாவீரர்களின் தியாகம்-காணொளி

italy mediaதமிழ் மக்ககளின் பிரச்சனைகளையும் எமது மாவீரர்களையும் அவர்கள் எமது மக்களுக்காக எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்பதையும் அவர்களின் குழந்தைத்தனமான அன்பு நிறைந்த குணத்தையும் எங்கள் மக்களுக்கு தெரிந்த விடயம் இந்த முறை மாவீரர் நாளில் இத்தாலி மக்களும் வந்தார்கள் அவர்களின் மீடியாவின் பேட்டி எமது மக்களின் பிரச்சனை இத்தாலி மக்களையும் சென்றடையும் எமது மாவீரர்களின் தியாகமும் அவர்களை சென்றடையும்

நன்றி -Selvan Dinushiyan

மாவீரர் நாள் 2015 லண்டன் – பாரதிராஜா பேச்சுbarathiraja london 2015

Remembering our Maveerar

TamilEelam heros day 2015 Every year, in the month of November, Remembrance Day is commemorated to remember the fallen soldiers who defended liberty, equality and humanity of their homeland with their life – this is observed in North America and in many parts of the world. Many of those wars were fought outside their homeland to prevent the invasion of their homeland and a dictatorship state.

As the people of Tamileelam, we commemorate our Remembrance Day, Maveerar Naal on the 27th of November. In Tamileelam before 2009, there was the Maaveerar Week that had incorporated many festivities in different cities were people showcased their love for our heoroes of Tamileelam. Themes such as sacrifice, determination, dedication were very dominant. Almost every family had a Maaveerar who sacrificed their life for Tamileelam. Thuyilum Illam was filled with not just graves, but legacies of the past that our resistance movement was built on. I was told how even vehicles passing by Thuyilum Illam slowed down to show their respect to our fallen.

I can only imagine how much our people held this month dear to their hearts in Tamileelam because I never had the chance to go back to my homeland. I didn’t even get the opportunity to be born in my own homeland because of the genocidal Sri-Lankan onslaught against our people, which forced my parents to flee the country.

Today in our homeland, everything has been wiped out to erase our identity, history and pride. Will this stop us from remembering our heroes of Tamileelam in our homeland and the diaspora? Will this shake our morale to such an extent to forget the 30+ years of legacy that paused in Mulivaaiykal?karthikai poo 2

During the early stages of our resistance movement, the honourable national leader of Tamileelam, V. Pirapaharan, showed the outmost importance to our heroes starting from Shankar Anna. They are the heart and soul of our struggle, without them there will be no progressive resistance movement for the people of Tamileelam. The goal of the resistance movement was not to bolster the armed struggle but to develop and build on the concept of self determination, nation and homeland which led to the formation of the defacto state of Tamileelam.

Almost many recognized nation state during their independence movement, never had the idea of having a rememberance event during their struggle but were commemorated after. We have a proud history were we remembered our heoroes who sacrificed their lives from the early stages of our resistance movement against the Sri-Lankan genocidal opression. Moreover, when most wars were fought outside the borders, ours has to do with resisting the genocidal opression of the Sri-Lankan state in our homeland. The Sri-Lankan state can try to convulute the history of the Tamils of Tamileelam but our heroes made sure our history and identity stayed intact by sacrificing themselves.

Many heroes took a bullet in their chest so we could escape the genocide, many heroes gave up on their everyday life for a life of war so people in Tamileelam would be able to have an everyday life. If the commonwealth cannot forget their heroes so cannot the citizens and diaspora of Tamileelam. You can destroy the Thuyilum Illam physically present in Tamileelam but not the Thuyilum Illam we built for the thousands of Maaveerar in our hearts. What the resistance movement did in 2009 was temporarily silence the arms in their hands and accelerated the feeling of Tamil nationalism thereby strengthening the movement for free Tamileelam worldwide as one powerful force to reckon with. We will only rest when we see our homeland of the Eelam Nation with right to self determination.

Written By: Prynth N.

karthikai poo

25th Anniversary of Maveerar Naal

Maveerar Naal is a day of remembrance for our beloved soldiers who fell fighting for a cause they felt worthy enough to sacrifice their lives for. This year marks the 25th anniversary of Maveerar Naal and it is more important than ever to remember why these soldiers sacrificed their lives for us. One shouldn’t just use this day of remembrance to reflect on the struggles of our brothers and sisters, rather we should relive their sacrifices on a day to day basis. Our brothers and sisters who have perished wouldn’t want us to reflect negatively on the past; moreover, they would want us to fight for the future so that the struggles they went through would not be wasted. On November 27th we should pay homage to our brothers and sisters out of respect, compassion and gratitude. They sacrificed they lives so that we could grow up without the barriers and hardships they faced. When people imply that our children are our future, I immediately think back to our Maveerar. Most of our freedom fighters were just like you and I, young people with big ambitions, a long life to look forward to. They all dreamt about making their mark on the world; however, as much as they wanted to live their lives, they were willing to give it all up so that the kids of tomorrow never would have to worry.praba heros day 3

Sacrifice can mean many different things; giving up that last piece of chocolate; giving your cousin that toy you loved as a kid; offering your seat to an elderly person, these are all examples of sacrifices we make on a day to day life. Now let’s look at the sacrifices our fellow brothers and sisters made back home. They sacrificed first and foremost their families, a thought that many of us will never be able to comprehend. One truly cannot appreciate the value of family until they are taken away from us. Our freedom fighters in a selfless act, willingly left their families so that they can fight for the many. Another sacrifice that was made was the education of our freedom fighters. We all know the oppressive and underhanded tactics used by the government to singlehandedly restrain Tamil students from progressing on towards higher education. This methodical process prohibited even the greatest of minds from succeeding. To combat this issue, our brothers and sisters sacrificed their careers for us. Many of our fallen soldiers would be in their 40′s right now if they were alive today. Who knows what great scientist, doctor, engineer or better pioneer we could have known had they been alive. The list of sacrifices that our brothers and sisters made can go on for a very long time but there is one final sacrifice I would like to mention, comfort. Our freedom fighters gave up the comforts we take for granted in our day to day lives. Our freedom fighters gave up the comforts of their own homes; they oftentimes fought in the jungles of Mulliyvaikal; they gave up their friends; they gave up their favourite foods and many more. These small comforts cannot be undervalued. Sacrifice according to you and I may now might not seem as drastic as it once did. On November 27th we should pay our respect to those very sacrifices our brothers and sisters made.

Maveerar Naal is a day of remembrance. We should stand in silence and reflect on the lives of our freedom fighters. When you go and lay your flowers or garlands on the Thuyilum Illam, you should stand humbly and with appreciation. We should as a collective whole try to find a way to bring to fruition the dreams of those we lost. The struggle to fight for our own homeland continues, we the students of today have the opportunities and means to wage a new kind of war. A war that has the capabilities to bring to light the atrocities that were committed by the government and their senior members. This war can achieve accountability and punishment for the crimes that were committed; furthermore, this war can achieve our own national state of Thamil Eelam. While our fallen soldiers rest in heaven, they will only truly rest in peace when they see the rise of a new sunrise on the soils of Thamil Eelam.

“Nothing I can say will ever be able to express the feeling of Maaveerar Naal. I have always celebrated Maaveerar Naal abroad, and to actually know what sadness and pride combined would feel like whilst standing on the soil that we so long to own as ours, the soil on which thousands had shed blood and tears whilst fighting for self determination, the soil that we would one day call Tamil Eelam, was absolutely amazing.” (Sampavi, 2005)

KaarthikaiBy: Athithan Kurukulasingam

Maaveerar-3

My Hero – A True Story

We all have a hero in our lives, in my family our hero is my sister. She is not my blood sister, she is my cousin sister. She is the daughter of my mother’s younger sister. She was known as Yaal Esai, and was the only female Maveerar of my family.

At a very young age she left home to fight for freedom. Freedom that will give ethnic Tamils rights to speak their mother tongue, go to school and be treated equally.

She was a courageous girl. She had a strong personality. She had her own style, her own uniqueness. She was a different beauty. Her hair was as black as the night sky, and her brown complexion was like a chocolate river. Her attitude was sharp, with a strong personality. She had the will power and confidence to take on any challenge, but she was only 18, an age that was too young to trust. She was in the 10th grade, and was a great student. Her strongest subject was math and science. Everything in her life went smoothly, until that one day. It was a day we could never forget, a day that changed her life.

It was a school day and a rainy one too. The clouds cried rain, pouring on to the roads making it flooded with water. The streets were filled with huge mud puddles. The students had to run for cover under the nearest tree. It wasn’t like a school that we assume to see with tables, chairs, rooms or a roof. It was in an open field, and consisted of sitting in the hot sun. She was one of the children who stood under a tree waiting for the rain to stop. As they waited, an army truck pulled into the school property. Six Sri Lankan military soldiers got off the truck. They said they were inspecting and spoke to the teacher. After questioning about the school the men walked around the children. Vasanthi, was a friend of my cousin, was standing under small mango tree, which was a bit further than where the rest of the students were standing. Her uniform was soaked because of the rain, making the outline of her undergarments visible. She was a year older than my cousin, and was ripening as a woman. She was fair with skin clear like ivory, with glowing eyes like night stars. She just hit puberty and was glowing, looking ever so beautiful each day.praba heros day

Looking at Vasanthi, a solider reached out and touched her cheek, pinching it and then smiling. Scared as she was she didn’t look up. Squishing her chin in his palms he pulled her face up, so close that both their noses touched. He glared at her and smiled at her. His smile wasn’t greeting, it was a molestic smile, cold and disgusting, one that will give any child chills up their spine. After a half an hour the men left, leaving the students and their teachers alone. The rain stopped and school was dismissed. My cousin and her friend Vasanthi got on their bikes and rode home. On their way home, they were stopped by a truck, the same truck with the same men who came to their school earlier that day. They stopped Vasanthi’s bike and asked her to step out. Looking at my cousin, one of the men told her to leave and go home. Afraid of the men my cousin left, hoping that her friend too will be excused and will follow behind her. But that poor girls luck, she was never seen alive after that day. What happened to her? She was raped, by six Sri Lankan Military men. She was found outside the schoolyard covered in mud. Her cheeks were bruised and bitten, her uniform torn from the bust, her breasts were wounded and she bled from her rectum and uterus. They did not pity this child or even thought that she was a little girl, but yet used her for her innocence. The news spread out, and soon everyone in the village knew. After hearing of her school mate’s horrific death, my cousin struggled to find justice, she wanted answers. “Justice is something that we Tamils can not get,” told her teacher. “From the time you were born in 1983, students were burned alive and beaten to death because they were Tamil. The courts wouldn’t dare to rescue someone who was killed or hurt by the army. I had to fight for my rights to become a teacher; this isn’t something that will change. Yaal esai, you just have to move on and hope it doesn’t happen to you.” These were the words that her teacher told her, to forget what happened, to pretend and live on with her life.

She sat at home for several days, not going to school or speaking to anyone at home, traumatized by what happened and continuously questions her on whether she should step up and be a voice for her people. After a week of thinking she came to a conclusion. She wanted to join in on a student out reach, an army which programmed and controlled by united Tamil students of Sri Lanka. This was something against the government for sure, but that’s not what she cared about, she wanted justice, so she made up her mind.

She left and joined the movement. We never saw her after that, no one contacted her, and didn’t know what happened to her. After a few years, she came to visit. She saw her mother, my aunt, my chithi. But she did not smile or cry. She came bare, showed no emotion, for she was just a soul that had only one thing in mind, Tamil Eelam. She came home and ate to please her mother, and departed heading back to work. She would give surprise visits, making her parents feel safe that their daughter is alive. But all that ended on May 17 2009.

May 2009, was a month that I could never forget. It was the month that the Sri Lankan army planned to and successfully attacked Tamil civilians. It was a systematic genocide, and it was what killed my sister. How did she die? She died like a true hero, fighting till her last breath. She fought to protect not just her identity, but to protect her sisters and mothers, aunts and nieces. She did it to protect her kind and her people. She died on the second last day of war, May 17th. She was not just an idol to me, but also to many Tamils internationally. She is my hero, a person who made me stronger, who helped me understand who I am and where I came from. Her struggle, her fight and her sacrifice will never be forgotten. Her name was not just symbolic, it didn’t just represent the music of the ancient instrument ‘yaal’, but she also became an anthem. Every moment that I pronounce her name, I feel pride as she became a sacred chime, a healing mantra that motivates me pushing me further in search for success. My cousin always said to her siblings that, “we are all born to create history and make a change”, and she is right. Her sacrifice became one of the reasons I can proudly say my identity, create a better future and realise the value of what I have now. The freedom that she never had, that same freedom that I was privileged to have gotten became my reason to carry on her struggle and fire. Because I want to pass down her dream and let her rest in peace.

R.I.P YAAL EESAI

MINOLTA DIGITAL CAMERA

Every moment can be a new life

The death of a Soldier isn’t just any death,
It is a historical event, a beautiful sacrifice.
A sight which revives another’s soul,
Truly a soldier never dies,
The fire that burns within him, it never dies.
It ignites the fire within others to strive for success,
It ignites the fire within others to fight for their people, to fight for their land.

Our struggle is the seed we have planted towards victory,
Our Maveerar are the nourishments needed to grow strong towards our goal,
As the struggle grows stronger, the closer we are to fulfilling their dreams,
So why wait? Every moment can be a new life.
So why do you let them pass by?
Our Maveerars fought with dreams,
They fought with love and affection,
They fought to see brighter futures for us,
They fought to see the Tamil Eelam Flag fly high,
So why do you let them pass by?
Every moment can be a new life.

Written By: Lavaniya Rajah

Maveerar Cemetry

கனடாவில் நடைபெறும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் (நேரலை)

தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய பி.ப. 6:05 மணிக்கு (கனடா நேரம் கலை 7:35) விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பாகும்.canada_27112015_3

இன்று முழுவதும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நேரடியாக பார்வையிடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

http://livestream.com/accounts/13238428/events/4541635

யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

இன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு, பின்னர் வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயக பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அஞ்சலியை தாயக பாடலுடன் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியுடனும் நினைவுகூர்ந்தனர்.

maveerar_university_001 maveerar_university_002 maveerar_university_003 maveerar_university_004 maveerar_university_005 maveerar_university_006 maveerar_university_007 maveerar_university_008 maveerar_university_009

புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி

தாய விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியான இன்று மாவீரர்களுக்கு புலனாய்வாளர்கள் சூழ்ந்திருக்க யாழ். நல்லூர் ஆலயம், பெரிய தேவாலயம் ஆகியவற்றில் ஈகை சுடர் ஏற்றபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த அஞ்சலியை செலுத்தியுள்ளார். காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் தொடர்ந்து யாழ்.பெரிய தேவாலயத்திலும் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவுகூரும் உரித்தை யாரும் பறிக்க முடியாது.

எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை மனங்களில் கொண்டு அவர்களுக்காக நாங்கள் மனமுருகி ஈகை சுடர் ஏற்றி செய்கின்ற அஞ்சலியும் நாங்கள் அவர்களை மறக்கவில்லை அவர்களுடைய கனவுகள் ஒருநாள் நனவாகும் என்ற திடமுமே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியாகும்.

அதனை நாங்கள் எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தொடர்ந்து செய்வோம் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் என்றார்.nallur_sivaji

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.bati_maveerara_005

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் அவரது தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உட்பட்டோர் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மண்ணில் தமிழன் உள்ளவரை மாவீரர் நினைவு மறையாது கண்ணில் காணா தெய்வங்களை கார்த்திகை 27ல் வழிபடுவோம் என்னும் தொனிப் பொருளில் நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த மாணவன் இ.செந்தூரனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Up ↑