குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.
கரும்புலியின் தடங்கள் தொட்டு ………..!
தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் இக்கட்டான சூழல்கள் பலவற்றை மாற்றியமைத்து விடுதலைப்பயணத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்த தற்காப்புக்கவசங்கள் தற்கொடைப் போரளிகள். கரும்புலிகள் எங்கள் காவலர்கள். கரும்புலிப் படையணிகள் காலத்தை வென்று நிற்கும் பெரும்பலத்தின் தோன்றல்கள் ஈகத்தின் விளக்கமே இவர்கள் தானென்றால் அது மிகையாகாது –
கரும்புலிகள் ஒவ்வொருவரினதும் உள்ளக்கிடக்கைகளை ஒட்டுமொத்தமாய் உள்ளாய்ந்து உணர்ந்து அறிந்தவர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்தான்.உறுதியையும் தெளிவையும் தலைவரிடம் கற்றுக்கொண்டு உரிமையையும் உறவையும் அவரிடமே பெற்றுக்கொண்டு ஊருலகமறியாது உயரிய தியாக வடிவங்களாக ஒளிர்கின்ற கரும்புலிக்காவியர்கள் கற்பனைகளைக் கடந்துநிற்கும் விற்பன்னர்கள் .
அழகு மாணிக்கங்களாய் அல்ல அத்திவாரக் கற்களாய் மிளிர்கின்றார்கள் கரும்புலிப் போராளிகள் என்று தெரியாமலே அவர்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் பல எமக்கும் கிடைத்திருக்கின்றன . நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி வாழும் அருமையான நாட்கள் கிடைத்திருக்கின்றன. அதுகூட ஒரு பெரும் பேறுதானென்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில் கரும்புலி லெப் கேணல் -பிருதுவி / நற்புகழ் என்னும் போராளி நடந்த தடங்களைத் திரும்பிப் பார்க்க விளைகிறேன் :
பலோரோடு நாம் பழகினாலும் சிலபேர் எம்மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர் . பிருதுவியும் அவ்வாறான மறக்கமுடியாத ஒருத்திதான் : மிகச்சிறந்த பண்புகளால் அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொள்பவள். அமைதியான சுபாவம், அன்பான செயல்கள், கனிவான பேச்சு, பணிவான பக்குவம், சிரித்தபடியே எத்தனை கடினமான பணிகளையும் ஏற்றுச் செய்வது, இப்படி அந்தப் பட்டியல் இன்னும் நீளும்.
போராளிகள் என்றாலே தமது வாழ்வையும் பொருட்படுத்தாது பிறருக்காகாக வாழவும் , மக்களுக்காகப் போராடவும் தலைப் பட்டவர்கள்தான். அதிவேகமான செயற்பாடுகளாலும் சாதனைகளாலும் போர்த்திறனாலும் அறியப்படுபவர்களென்றால் அதற்கு எடுத்துக்கட்டாய்த் திகழ்பவள் பிருதுவி. 1980 ம் ஆண்டு கிளிநொச்சி மண்ணில் பிறப்பெடுத்த பிருதுவிக்கு பெற்றோர் இட்ட பெயர் “தியாகதேவி “. அந்தப்பெயரின் வடிவம் அவளேயானாள் என்பதே சாலப்பொருந்தியது.
இரு சகோதரர்களின் இடையே பிறந்த ஒரே பெண்பிள்ளை என்பதால் செல்லமாகவே வளர்ந்து வந்தாள். சிறுவயதிலே அதிக கெட்டித் தனங்களைத் தன்வசம் வைத்திருந்த சுட்டிப்பெண் .
1996 ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்விப்பொது சாதாரண தரத்தில் கற்றுக் கொண்டிருந்த மாணவி நற்புகழை எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைச்சம்பவங்கள் வெகுவாகப் பாதித்தது. அத்தோடு தமிழீழ விடுதலைப்போர் வேகமெடுத்திருந்தது, விமானத்தாக்குதக்ல்கள், எறிகணை வீச்சுகள், மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக் குறியாக்கிக்கொண்டிருந்தன.
தான் பிறந்த தாய்நாட்டின் மேல் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவருக்கும் தாய் மண்ணைக் காக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது எனும் கருத்தில் மிகத்தெளிவாக இருந்தால். கல்வியில் காட்டிய ஆர்வம் மேலாக இருந்தாலும், தானும் ஒரு போராளியாகி விடுதலைக்காய்ப் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே அவள் உறுதியோடு புறப்பட்டாள்.
பெண்போராளிகளின் படையத் தொடக்கப் பயிற்ச்சிப் பாசறை” லீமா 4″ அவளை வரவேற்றது . கருப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் அந்தப் பயிற்சி முகாம் மிக அழகாகவே அமைக்கப்பட்டிருந்தது. அங்கே தனது ஆரம்பப் பயிற்ச்சியை நிறைவு செய்தபோது தியாகதேவி “நற்புகழ் ” என்னும் பெயர் பெற்றிருந்தாள். லீமா 4 பயிற்சி அணியின் நிறைவு விழா நிகழ்விற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தது .அன்றுதான் முதன்முதலில் நற்புகழ் என்னும் பிருதுவியை நான் பார்த்தேன் .
பல கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தன .இடையிடையே பரிசில் வழங்கும் வைபவமும் இடம் பெற்றுக் கொண்டிருந்தது .எல்லா நிகழ்வுகளிலும் பிருதுவியை அடிக்கடி பார்க்ககூடியதாக இருந்தது. துரு துருவென எறும்பைப் போல சுறுசுறுப்பாய்த் தெரிந்தாள். அவ்வளவு போராளிகளிலும் தனியே தென்பட்ட அவளின் அழகைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை .
அப்போது அவளை அருகழைத்துப் பேசியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது . பயிற்சியை முடித்த குறுகிய காலப் பகுதியிலேயே நற்புகழ் சத்ஜெய இராணுவ நடவடிக்கை எதிர்சமரில் பங்கு கொண்டாள். ஆனையிறவிலிருந்து பரந்தனூடாக கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையே சத்ஜெய என்பது குறிப்பிடத்தக்கது .
தொடர்ந்து மாலதி படையணியில் ஒரு போராளியாக ஜெயசிக்குறு எதிற் சமரில் மிகத் திறமையாகச் செயற்ப் பட்டாள். அப்படியே ஓயாத அலைகள் 3 இல் களமிறங்கினாள். இவ்வாறே நற்புகழின் தாக்குதல் அனுபவம் விரிவுகண்டது .
இவளது ஆற்றல்களை இனங்கண்ட மாலதிபடையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா அக்கா, இவளை மேலதிக விசேட பயிற்சிக்காக (master’s training) அனுப்பிவைத்தார்.
படையணிகளை வழிநடத்தும் பொறுப்பாளர்களை உருவாக்கும் ஓர் பட்டறைதான் அப் பயிற்சித்தளம். அங்கே பயிற்சித்திட்டங்கள் கடுமையானதாக இருப்பதோடு, பலரகப்பட்ட ஆயுதங்களைக் கையாள்வது பற்றியும் எதிரிகளின் தாக்குதல் நகர்வுகளை முறியடித்தல் , முகாம் தகர்புக்கள் எனப் பல்வேறு போர் தொடர்பான கற்பித்தற் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்ற. ஒரு பட்டறையாகவே விளங்கும் அத்தளத்தில் நற்புகழ் தனது மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தினாள். அங்கே பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் அவளது வலது காலில் பெரிய காயம் ஒன்று ஏற்பட்டது . இதன் விளைவாக அவளால் பயிற்சியைத் தொடரமுடியவில்லை .காயம் குணமடைய சிலமாதங்களானது. அதன்பின்னர் ஊன்றுகோலின் உதவியுடனேயே அவள் நடக்கவேண்டியிருந்தது .
இவ்வேளை இவளின் பணி மாற்றங்கண்டது .அத்தோடு நற்புகழ் என்னும் அவளது பெயர் பிருதுவியாகியது .தமிழீழ விடுதலைப் புலிகளின் ராஜன் கல்விப்பிரிவுக்கு கற்கை நெறிக்காக அனுப்பிவைக்கப்பட்டாள் பிருதுவி .அரசியல், பொது அறிவு, உலகவியல், போர்க்கலை போன்ற விடயங்களைக் கற்றுத் தேர்ந்து வித்தகியாகத் திகழ்ந்தாள்.
இவளின் அசாத்தியத் திறமைகளுக்காய் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களிடமிருந்து பரிசில்களைப் பெற்றுக் கொண்டாள் .அனைத்துப் படையணிகள் மட்டத்தில் நடந்த பொதுஅறிவுப் போட்டியில் முதலிடம் பெற்றுக் கொண்டதற்காகவும், சிறந்த குறிபார்த்துச் சூட்டாளினியாய் வெற்றி பெற்றதற்காகவும் அவள் அப் பரிசில்களைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது ராஜன் கல்விப்பிரிவின் 2வருட கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்ததற்கான சான்றிதழையும் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.
பிருதுவியின் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை இழையோடிக்கொண்டிருக்கும். கண்களில் குறும்புத்தனம் பளிச்சிடும் அதே நேரம் பார்வையில் தெளிவும் வெளிப்படும். படையணியின் ஒன்றுகூடல்கள், தலைவர் சந்திப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் மேடையேறும் பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகங்கள் முதலியவற்றில் தூள்கிளப்புவாள் பிருதுவி.
அவள் ஊன்றுகோலை ஊன்றி நடப்பதும், புன்னகையோடு பேசுவதும் எங்கள் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுபடுத்தும். அதனால் நாங்கள் அவளை புன்னகை மன்னி என்றும் தமிழ்ச் செல்வன் அண்ணாவின் தங்கச்சி என்றும் நக்கலடிப்போம். தோற்றத்தில் அவள் எடுப்பாகவும் எழிலாகவும் காணப்படுவதால் “பொறுப்பாளர் “என்று நான் அவளை அழைப்பதுண்டு .
எடுத்த செயலை நேர்த்தியாகச் செய்யும் கலை இவளுக்கேயுரியது .அதனால் தலைவர் அவர்களால் நேசிக்கப்படுகின்ற பாராட்டப்படுகின்ற பிள்ளைகளில் (அப்படித்தான் தலைவர் பெண்போராளிகளை அழைப்பார் )இவளும் ஒருத்தியானாள். பிரிக்கேடியர் விதுசாவுக்கும் மிகவும் பிடித்தமானவள் மட்டுமல்ல இவளோடு பழகும் அனைவருக்கும் இவள் விருப்பத்திற்குரியவளே .
மேலும் இவளது கற்பித்தற் பணி விரிவடைந்தது. மகளீரின் அனைத்துப் படையணிகளுக்கும் அரசியல், இராணுவ போர்த்தந்திரங்கள் தொடர்பான வகுப்புக்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பணிக்கப்பட்டாள். இவளின் நீண்டகனவு தன்னையும் கரும்புலியணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்பது . 2002ம் ஆண்டளவில் அதற்க்கான விருப்பத்தைத் தெரிவித்து அனுமதி வேண்டி தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினாள் பிருதுவி . இதற்குரிய அனுமதி 2008ம் ஆண்டிலேயே அவளுக்குக் கிடைத்தது . தமிழீழம் ஒன்றே உயிர் மூச்சாய் கொண்ட அவள் கரும்புலிப் படையனியில் ஒருத்தியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.
தனது உயிரைக்கொடுக்கத்தானே நேரம் குறிக்கக் காத்திருந்தாள். 30 வருடங்களுக்கு மேலான சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழின அழிப்பின் உச்ச அவலம் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கட்டுக்கடங்காது போனது . நாலாபுறத்திலும் எறிகணைகளைப் பொழிந்தபடியும், விமானத்தாக்குதல்களை நடத்தியபடியும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்தவாறும், துப்பாக்கிச் சூடுகளை சரமாரியாக நடத்திக்கொண்டும் இராணுவம் நகர்ந்து வந்தது .
நிமிடத்துக்கு நிமிடம் தமிழரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சுடுகாடாய்த் தோற்றம் பெற்றது வன்னிப்பெருநிலம் . இவ்வேளை மக்கள் முற்றுகையிடப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள் இன்னும் பலர் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வாழ்வோடும் சாவோடும் போராடும் மக்களைக் காக்க விடுதலைப் போராளிகள் தம்மாலான எதிர்சமரை மேற்கொண்ட வண்ணமிருந்தனர் .
இவ்வாறே மூங்கிலாறு ஊடாக உடையார்கட்டை நோக்கி முன்னேறிவந்த இலங்கைப் படையணிகளிடம் மாட்டிகொண்ட மக்களில் பெண்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கொடூரமான பாலியற் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள் . நிர்கதியான அவர்களைக் காப்பற்ற கிருஸ்ணபரமாத்துமா வரப்போவதில்லையே .. அச்சமயம் பிருதுவி தனது கடமையை நிறை வேற்றத் தயாரானாள்.தானும் ஒரு சாதாரண பெண்ணைப்போலவே இராணுவத்தினரிடம் சரணடைந்தாள். கூட்டமாய் நின்ற அந்த மிருகங்களிடையே தன்னை வெடிக்கச் செய்தாள்.
அதன்மூலம் நுற்றுக் கணக்கான இராணுவ வெறியர்கள் கொன்றொழிக்கப் பட்டதுமல்லாது பெண்களை நெருங்குவதற்கு முயலும் அவர்களிடத்தே பேரச்சத்தை விளைவித்தாள் பிருதுவி என்னும் தியாகதேவி .
இச்சம்பவமானது வெளிவராத ஒரு வீரத்தின் மகுடம். துளியேனும் அச்சமின்றி தமிழீழ விடிவிற்காய் வெடிசுமந்து சென்ற தங்கை பிருதுவியின் தடங்களைத் தொட்டுத்தொடர்கிறோம்
.. தமிழீழம் தேடிய அவளது கனவுகளோடு …..
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கலைமகள் 05.07.2015
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்
https://prabhakaranquotes.wordpress.com/
தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan விம்பங்கள்
நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.
http://www.eelamview.com/2010/07/25/leader-velupillai-prabaharans-quotes/
செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார்.
அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார்.
ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும்.
1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர்.
எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர்.
அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது.
இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி.
12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார்.
இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!!
– நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!!
பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.
கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.
ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். பல கரும்புலிகள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும், அவர்களது அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.
” கரும்புலிகள் ” என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்க்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல அர்த்தங்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது. முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன்.
எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…..!
” நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன் “
கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்.
இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.
” உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும் ” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.
கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம் – உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.
கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.
” நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன் ”
பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலிகள்
“பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்” – தமிழீழத் தேசியத் தலைவர் ,மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே.
அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது தமதுடலோடு, தமதுயிரோடு ‘தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.
ஓயாத எரிமலையாக சதா குமுறிக் கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையைத் தணிக்க, எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையை தணிக்க, எதுவும் செய்யவும் எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள்.
ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றை சாதித்துஇருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள். நெஞ்சு புல்லரிக்;கும், உயிர் வேர்க்கும். அவர்கள் கண்களுக்கு முன்னால் விரி;ந்து கிடந்த இன்றைய ஷநவீன நாகரீகத்தின் தாலாட்டில்தான் உறங்கினார்கள். புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் உலாவந்தார்கள்.
இவற்றுக்குள் வாழ்ந்தும் எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது. வெளிப்படையாக அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்தபோதும், உள்ளுக்குள் இதய அறைகளின் சுவர்களுக்குள் தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அப+வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்;குள் புகுந்தது. பகைவனை அழிக்கும் தனது நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்ந இந்த அதிசய மனவுணர்வுவை எப்படிஅவர்கள் பெற்றார்கள்.
தாயகத்திற்காக செய்யப்படும் உயிர் அர்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் உண்மை. ஆனாலும் இங்கென்றால் வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை பரிப+ரணமான ஒரு போர்ச் சூழ்நிலை. அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும்.
ஆனால் அங்கு………… அது முற்றிலுமே ஒரு தலைகீழான நிலமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி அவற்றுக்குத் தீனி போட்டு சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது.
அதில் படுத்துறங்கி பகை தேடி வேவு பார்த்து ஓழுங்கமைத்து குறி வைத்து, வெடி பொருத்தி புறப்பட்டு, மனிதக்குண்டாகி………… எல்லாவற்றையும் தானே செய்வதோடு பகையழிக்கும் போது தன்னையழிக்கும் போதும் கூட தன்பெயர் மறுத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்பணத்தில் அது உன்னதமானது.
அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது.? உண்மையில் இவையேல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளேதான். நம்புதற்கரிய அற்புதங்கள்தான்… மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்த புனிதர்கள், தான் அழியப்போகும் கடைசிப் பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள், ”முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட” பிரபாகரனின் குழந்தைகள்.
Recent Comments