வீரத்தமிழன்,மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவை சுமந்து தேனிசை செல்லப்பா
2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கொழுவைநல்லூர். சென்னை அருகே கொளத்தூரில் அவரது சகோதரி தமிழரசியின் வீட்டில் தங்கிப் பணி செய்தார்..
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துக்குமார் பெயரின் இணையம்
http://www.muthukumar.in/home.php
——————————————————————–

————————————————————————-
பள்ளப்பட்டி ரவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனவரி 31 2009, சனிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரின் பேருந்து நிலையம் அருகில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரும் பலனின்றி பிப்ரவரி2, 2009 அன்று மரணமடைந்தார்.
——————————————
சீர்காழி இரவிச்சந்திரன்
சீர்காழி காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலர் இரவிச்சந்திரன் 2009 பிப்ரவரி 7 அன்று அதிகாலை 1.30 மணியளவில் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, தமிழ் வாழ்க….. தமிழீழம் வெல்க…… ராஜபக்சே ஒழிக….. காங்கிரஸ் ஒழிக…….. எனக் குரல் கொடுத்துக் கொண்டே தம்மைத் தாமே எரித்துக் கொண்டார். அன்று மாலை 4 மணியளவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து மாண்ட சீர்காழி இரவிச்சந்திரனின் இறுதி மடல்
தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு கோரி தீக்குளித்த காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலரான “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் 07/02/09 மாலை உயிரிழந்தார்.
தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார். இறுதி மடலில் எழுதப்பட்டிருந்ததாவது,என் பெயர் எஸ். இரவிச்சந்திரன். த.பெ. சுந்திரமூர்த்தி, 1 ஏ, பிடாரி தெரு, சீர்காழி.
தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம்.
என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..
ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே..
இலங்கை அரசே என் உயிர் தருகிறேன். போரை நிறுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார்
07/02/09 சனிக்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடலில் தீ எரிந்துகொண்டிருக்கும் போது, “தமிழ் வாழ்க!… தமிழீழம் வெல்க!… காங்கிரஸ் ஒழிக!… ராஜபக்ச ஒழிக!… என ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே எரிந்திருக்கிறார் .
அவரின் பெற்றோர் உடனேயே தீயை அணைத்ததுடன், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சீர்காழி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் –
தமிழீழம் வெல்க!
தமிழ் வாழ்க!
தமிழ் மக்களை காப்பாற்றுங்க!
ராஜபக்ச ஒழிக!
காங்கிரஸ் ஒழிக!
போரை நிறுத்துங்கள்!
என வலியின் வேதனையிலும் முழக்கமிட்டார்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக மருத்துவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாலை 3:45 நிமிடமளவில் “வீரத் தமிழ் மகன்” ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
மறுநாள் 08/02/09 , அவரின் இறுதி சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு வீர வணக்கம் செய்தனர்.
——————————————
அமரேசன்
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவர் 2009 பிப்ரவரி 8 அன்று, சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார்.
—————————————
ஜோதி என்கிற தமிழ்வேந்தன்
கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் 2009 பிப்ரவரி 18, மதியம் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார். கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். சிகிச்சை பலனின்றி இரவு 1.20 மணியளவில் மருத்துவமனையில் மரணமானார்.
———————————————
சிவப்பிரகாசம்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிப்ரவரி 21, 2009 மாலை சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இளைஞர் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்த தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பிப்ரவரி 22 இல் உயிரிழந்தார்.
——————————————————
கோகுலகிருஷ்ணன்
சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 55), பிப்ரவரி 25 2009 காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டு தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்தவரான கோகுலரத்தினம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு எதிலியாக வந்து, பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள சிலோன் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.
—————————————-
சீனிவாசன்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன். இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி பிப்ரவரி 26 2009, இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தே.மு.தி.க. கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மார்ச் 2, 2009 அன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
————————————————
சதாசிவம் சிறீதர்
சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர்(எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர். இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் மார்ச் 4 2009 அன்று, தீக்குளித்த சீறிதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி மார்ச் 5 அன்று உயிரிழந்தார்.
——————————————————–
நாகலிங்கம் ஆனந்த்
கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009 மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்.
————————————————————-
இராசசேகர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் இராசசேகர் (வயது 24). பா.ம.க.வைச் சேர்ந்த இவர் மார்ச் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை இவர் உயிரிழந்தார்.
————————————————————–
பாலசுந்தரம்
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். மார்ச் 22, 2009, மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
————————————————————–
மாரிமுத்து
விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). காங்கிரஸ் தொண்டரான இவர், ‘இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, மார்ச் 22 2009 இரவு, வீட்டு வாசலில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
—————————————————-
சிவானந்தன்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46), சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே ஏப்ரல் 17, 2009 இரவு இலங்கையில், இராணுவத்தின் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பியவாறு தன் மீது மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இவர் தமிழர் தேசிய இயக்கத் தொண்டராவார்.
—————————————————
சுப்பிரமணி
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). ஏப்ரல் 23 2009 அன்று கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
——————————————————
ராஜா
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி 2009 பிப்ரவரி 7 மலேசியவில், இலங்கை தமிழ் இளைஞர் ராஜா (வயது27) என்பவர் தீக்குளித்து இறந்தார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தது. அந்த டைரியில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதி இருந்தார். அதில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை மூலம் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய அதிபர் ஓபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நார்வே சமாதான தூதர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்லவேண்டும். என்றும் எழுதப்பட்டிருந்தன.
———————————————————–
முருகதாசன்
சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009 பிப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் லண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு ஈகப்பேரொளி முருகதாசன் தீக்குளித்தார். முத்துக்குமாரின் இறுதி அறிக்கை போலவே, இதுவும் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தியது.
——————————————————————–
அப்துல் ரவூப்
இந்த ஈகியர்களுக்கு முன்பாகவே ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர் ஈகம் செய்தவர் அப்துல் ரவூப்.
ஈழத்தில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிங்களநாட்டின் சிங்களக் கால்பந்து அணியினரைத் தமிழ்நாட்டில் விளையாட அனுமதித்ததைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்காடு அப்துல் ரவூப் 1995 டிசம்பர் 14ஆம் நாள் தீக்குளித்து மாண்டார்.
—————————————————————–
-தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 –
————————————–
eekiyar-19 ஈகியர்கள் விபரங்கள்
இது ஒரு மறுபதிப்பு
நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன்.
விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய் இருந்தேன். அந்த வீட்டுக்குள் இருந்தால் அப்படியே ஆள் இருப்பது தெரியும். என்ன செய்வது அதற்குள்தான் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவதானிக்கலாம். எனவே அங்கிருந்த கட்டிலுக்கு கீழே பையையும் றைபிளையும் ஒளித்து வைத்தேன். ஜி.பி.எஸ்சும், கொம்பாசும் எப்பவுமே என்னுடைய கழுத்திலும்;, குண்டு எப்பவுமே இடுப்பிலும் கொளுவியபடியே இருக்கும்.
மாங்காயும், கடலைப்பருப்பும் தான் சாப்பாடு. ஒரு வீட்டில் சின்னப்பிள்ளைகள் சாப்பிடுகிற மா இருந்தது. எடுத்தேன்; அதில் நாய்க்கும் கொஞ்சம் கொடுத்தேன். அது என்னைவிட்டுவிட்டுப் போகவேயில்லை. ஆமி கிட்ட வரும் சத்தங்கள் கேட்டால் நன்றாக மறைந்து இருப்பேன், இல்லாவிடில் அவதானித்துக் கொண்டு இருப்பேன்.
நேரமும் போகுது இருட்டுப்பட்டதும் வெளிக்கிடவேணும் என நினைச்சுக் கொண்டு இருந்தேன். நிலவும் மறைய கடவுளை வேண்டிக் கொண்டு வெளிக்கிட்டேன். அப்படியே கரையைப் பிடிச்சுப் போனேன். ஒரு றோட்டு வந்தது. அது பழைய றோட்டு போக்குவரத்து எதுவுமே இல்லை. அங்கால் பக்கம் வயல் வெளி. வரம்பால் போய்க் கொண்டிருந்தேன். இருட்டுக்குள் எதுவுமே தெரியவில்லை. திடீரென்று தூரத்திலே வானத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. எனக்கு உடனே விளங்கீற்று. ஆமி அடிச்ச பரா என்று. உடனே கொம்பாசை எடுத்து பாகையைப் பார்த்தன்;;. 315. அந்தப் பாகையில் போனால் வழி தவறாமல் போகலாமென்று அடிக்கடி பாகையைச் செக்பண்ணிக் கொண்டுதான் போவன். நடந்து கொண்டே இருந்தேன்.
ஒரு சின்ன ஊர்மனை அதைக்கடந்து அங்கால் பக்கம் வயல் வெட்டை. அடுத்து, அருவியில் இடுப்பளவு தண்ணீர். ஒருமாதிரி அதைக்கடந்து போனேன். ஒரு பெரிய தென்னந்தோட்டம். பேருக்குத்தான் அது தென்னைந்தோட்டம் ஆனால் ஒரு தென்னையிலும் உயிர் இல்லை. மனிதர்கள் நடைபிணமாவது போல இதுவும் நன்றாக நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் உயிர்தான் இல்லை. செல்ப்பீஸ் படாத மரமே இல்லை. ஓலை எல்லாம் காய்ந்துபோயிருந்தது. அப்படியே எல்லாத்தையும் பார்த்;துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தேன். ரக்ரர் வரும் சத்தம் கேட்டது. நான் கடந்து வந்த இடங்களிலும் ரக்ரர் தடங்கள் இருந்தது. நாயும் குலைத்துக் கொண்டேயிருந்தது.
அருவிகள் தண்ணீர் இல்லாமல் மணலாக இருந்தால் அப்படியே பின்பக்கமாகத் திரும்பி நடந்து போவன். தடம் இருந்தாலும் நான் போகும்பக்கம் வரமாட்டான். எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் நகருவேன். பாதையொன்று இருந்தது. தடவிப் பார்த்தால் தடங்கள் எல்லாம் புதிதாய் இருந்தது. றோட்டுக்கு அங்கால்பக்கம் இருக்கிற வீட்டில்தான் நாய் குரைக்கிறது. நான் றோட்டைக் கடக்கிறது என்றால் அந்த வீட்டுக்கு நேரேதான் கடக்க வேண்டும்;. என்ன செய்வது கடக்கத்தான் வேண்டும். வேலிக்கு கிட்டே வந்தேன். நாய் என்னுடைய பக்கம் பார்த்துதான் குரைத்தது. குரைக்கட்டும் என்று மெதுவாக நடந்தால் ‘டாக்கட்’ தெரியும். வேகமாய் கடந்திட்டால் தெரியாது. எனவே வேகமாக நடந்து அடுத்த வாசல் வழியாக ஒரு காணிக்குள் போனேன்.
நாய் கூடுதலாக குரைக்கத் தொடங்கியது. நான் தாமதிக்காமல் அடுத்த வேலிக்குக் கிட்டப் போனேன். வேலி சரியான நெருக்கமாக இருந்தது. வேர்களும் கொடிகளும் வேலிக்கு மேலே படர்ந்திருந்தது. தடவிப் பார்த்தேன். சின்ன இடைவெளி இருந்தது. அதனூடாக கடந்து ஒரு மாதிரி மறு காணிக்குள் போய்விட்டேன். அப்படியே அடுத்த காணியையும் தாண்ட, ஒரு றோட்டு. பள்ளமான இடமென்பதால் றோட்டு முழுக்க தண்ணீர் நின்றது. அதுக்கு அடுத்த காணியில்தான் ஆமியின் சத்தம் கேட்டது. மோட்டர்(எஞ்சின்) சத்தமும் கேட்டது. நான் கடந்து போகப் போவது வெட்டை. மெதுமெதுவாகப் பாதையைக் கடந்து வெட்டையில் நின்ற ஒரு பற்றைக்குள் போய் இருந்துவிட்டேன். நிறைய நேரம் நடந்துவிட்டேன். காலெல்லாம் ஒரே வலித்தது. கை வேறு வருத்தமாக இருந்தது. நுளம்பும் கடித்தது. தண்ணீரில் நனைந்தது, குளிர் எல்லாமாகச் சேர்ந்து வதைக்கத் தொடங்கியது.
அப்படியே றைபிளைக் கழற்றி வைத்துவிட்டு வரம்பில் சாய்ந்து படுத்தேன். ஆனால் நித்திரை கொள்ளவில்லை. பக்கத்தில் ஆமி. கொஞ்ச நேரம் அப்படியே படுத்துவிட்டேன். திடீரென்று ஆமி கதைக்கிற சத்தம் பக்கத்தில் கேட்டது. வேகமாக எல்லாத்தையும் எடுத்தேன். சிலவேளை நான் வந்ததைப் பார்த்துவிட்டானோ தெரியாது என்று நினைத்துக் கொண்டு வேகமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நிறையப் பற்றைகள் இருந்தது இருந்தது. அதனூடாக மறைந்து மறைந்து போய்க் கொண்டு இருந்தேன்.
இடப்பக்கம் ஊர்மனை வலப்பக்கம் காடு. காட்டுக்கு அருகில் ஒரு மறைப்பாக பார்த்து அப்படியே படுத்துவிட்டேன். விடியப் போகிறது. கொஞ்சநேரம் நித்திரை கொண்டேன். விடிந்த பிறகு எழும்பிப் பார்த்தேன் நான் போற பக்கம் ஒரு ஒற்றையடிப் பாதை ஒன்று போய்க் கொண்டிருந்தது. கொஞ்சத் தூரம் போய்ப் பார்த்தேன். பிறகு திரும்பி வந்து எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போவம் என்று நினைத்தேன். காடுதானே பகல் நகருவோம் என்று வெளிக்கிட்டுப் போனேன். கட்டிடம் ஒன்று வந்தது. அது பழைய கிச்சின். அப்படியே அந்தப் பாதையால் போய்க் கொண்டிருந்தேன். கிரவல் போட்ட பாதை வந்தது. அதால போய்க்கொண்டிருந்தேன். அடிக்கடி பாகையைப் பார்த்துப் பார்த்துதான் போவேன். நிறையக் கட்டிடங்கள் தள்ளித் தள்ளி இருந்தன. பெரிய பேஸ் போல இருக்கு. பேசின்ர நடுமையத்திற்கு வந்துவிட்டேன். அந்தக் கட்டிடத்துக்குள் போய்ப் பார்த்தேன். நிறைய வெடிமருந்துகள் செய்கின்ற இடம். அப்பாவின் (தேசியத்தலைவரின்) படம் இருந்தது. எல்லாத்தையும் பார்த்து விட்டு (பிக்ஸ்) ஜி.பி.எஸ் ஐப் பயன்படுத்திக் கொண்டு வெளிக்கிட்டேன். பெரிய காடு. சருகுகளுக்கு மேலால்தான் நடந்து போனேன். ஏனெனில் பாதை மணலாக இருந்தது. தடயம் விடக்கூடாது.
எப்பவுமே தலையில் ஒரு தொப்பி போடுவேன். பேஸ் முடிவு. தடை(பறியல்) இருந்தது. மைன்ஸ்சுக்கான கம்பிகளும் இருந்தது. பாகையைப் பிடிச்சுப் பார்த்தேன். விலத்திவிட்டேன். உடனே பாகையைப் பிடித்துக் கொண்டு போனேன். ஆமியின் பழைய பொசிசன்கள் நிறைய இருந்தது. போய் ஒரு கட்டத்தில் பார்த்தால் முன்னுக்கு பெரிய……….
தொடரும்.
thamilkuyil@gmail.com
கல்லறைத் தொட்டிலிலே 2007 ,2008 தை காவியமான மாவீரர்களைச் சுமந்து-
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
2007ம் ஆண்டு தை காவியமான மாவீரர்கள்
——————————————————————————–
2008ம் ஆண்டு சனவரி காவியமான மாவீரர்கள்
தளராத துணிவோடு களமாடினாய் பாடல்
போர்க்கைதிகள் விடுவிப்பு
கைக்குண்டுத்தாக்குதலில் கால் இழந்தபின்னர் மக்கள் முன்தோன்றி பேச்சு
சுதுமலையில் கேணல் கிட்டு அவர்களின் பேச்சு
வைகோவுடன் கேணல் கிட்டு அவர்கள்
கேணல் கிட்டு – கேடயமாய் காத்த எம்மக்களே பாடல் காணொலியில்
கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – I
கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – II
கேணல் கிட்டு பற்றி தளபதி பொட்டு
கேணல் கிட்டு பற்றி தளபதி சூசை
———-
வேறு பல காணொளிகள்
விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி – எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்படை நடவடிக்கைக்கு எதிராக சனவரி 16 – 17 வரை விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் போரிட்டு படைநடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர்.
இத்தற்காப்புச் சமரில் லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட 70 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது!
வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது.
கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது!
கிட்டுவும் அவருடன் வந்த 12தோழர்களும் நிலையாமை என்ற பூலோக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேரின்ப நிலையை எட்டுகின்றனர்.
ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்!
வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும்
அகத்தே நகும் – இது வள்ளுவன் குறள்.
ஆகாய நீர், காற்று, பூமி, நெருப்பு எல்லாமே இந்தியாவை பார்த்து அகத்தை நகைக்கவில்லை! எல்லா மூலைக்கும் கேட்கும் விதமாக எள்ளி நகையாடின. எப்படியிருப்பினும் –
நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு – எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்கவிட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும்.
கிட்டு ஒரு அரசியல் வாதி!
விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது – இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை!
கிட்டு ஒரு ராஜதந்திரி!
இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான்.
கிட்டு ஒரு ஊடகவியலாளன்!
பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு.
கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்!
கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று – சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை.
கிட்டு ஒரு ஓவியன்!
அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்” அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்!
கிட்டு ஒரு கவிஞன்!
அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்!
இப்படி இப்படியாக –
கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்!
இந்தி அரசே!
அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்!
இப்போது கேட்கிறோம்!
அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா?
எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா?
முடியாது!
உன் இலட்சக்கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது!
ஏனெனில் – கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்!
செண்பகப்பெருமாள்.
- இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள்
- கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கம்
- எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு
- யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!
- லெப்.கேணல் குட்டிசிறி வீரவணக்கம்
- பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு
‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”” என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பி;ன்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.
7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா – சந்தியிலுள்ள பியுூபர் – கலா தீவி;ல் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறி;னார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.
13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு இப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்;டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.
‘திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா” என்று கேட்டபொழுது ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இடுத்த கேள்வியாக ‘நீங்கள் இலங்கைத் தமிழர்களா”? என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தி;யக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?”” என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா”? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.
சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.
ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்களவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சுூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.
அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.
இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது ‘தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்” பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக்; கப்பலின் காப்டன் ‘அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.
தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.
சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான் திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத் தினார். சென்னை அழைத்துவரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.
இந்தப் பேச்சுக்களிடையே பயணட் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணு}ரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.
16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானு}ர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.
சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. ‘தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை” என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.
16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.
கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிற பொழுது ”தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்”” எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.
“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு”

கடற்புலி கப்டன் குணசீலன் (குணராஜ்) @ சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா 2-ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்
தகவல் :
காவியநாயகன் கிட்டு – Maaveerarkal – Heroes
நடுக்கடலில் படுகொலை – பழ நெடுமாறன்
இது ஒரு மீள்பதிப்பு
தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு

கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993)சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக…
எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு
“என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை.“மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது…
யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!
கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா? தெரியாது!சதாசிவம் கிருஷ்ணகுமார்?தெரியாது!கிட்டுவைத் தெரியுமா?ஓ தெரியுமே!யார் அவர்?கிட்டு மாமா!யாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே…
இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள்
கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்துவரலாற்றுப் பிண்ணனி, பாடல்கள்
லெப்.கேணல் குட்டிசிறி வீரவணக்கம்
Recent Comments