Search

Eelamaravar

Eelamaravar

Month

November 2010

வாய்மைத் திருமகன்

leader-Prabakaran-birthday wishes

தேசியத் தலைவா தேசியத் தலைவா!
தேசம் எழுதிய தீந்தமிழா!-கை
வீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்
விளைத்தனை ஈழம் பெருந்தலைவா! – தேசியத்

ஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்
ஏர்முனைய யாக்கிய ஈழமகன்-ஈழம்
வாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கிய
வரலா றெழுதிய வண்ணமகன்! – தேசியத்

ஆகுதி யானவர் ஏகிக் களம்புக
வேதம் உரைத்திட்ட வித்துவனே-தமிழர்
சாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்
சந்ததி கொடுத்தாய் தத்துவனே! -தேசியத்

காடு எரிந்தது ககனம் எரிந்தது
நாடு மறந்திலை நாயகனே-பெற்ற
வீடு உலவிய வெற்றித் திருமகள்
வீழ்ந்தும் மறந்திலை ஈழமதே! -தேசியத்

நீயொரு தலைவன் நீதான் தலைவன்
நீள்நிலம் எங்கும் நீயொருவன்-தமிழ்த்
தாயவள் தந்த தங்கத் தலைமகன்
சாயாத ஈழம் படைத்தமகன்! -தேசியத்

-புனிதன்

தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்கள்





காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள்


1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது.

1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒருவாறு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்து விட்டனர். எங்குமே இந்திய அமைதி காக்கும்படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதற்கிடையே காட்டிகொடுப்போர்கள், துணை இராணுவ குழுக்கள் என நிறைந்திருந்திருந்தது தேசம். இரண்டு போராளிகளில் ஒருவர் எமது ஊர்காரர் மற்றவர் முல்லை மாவட்டம் என சொன்னார் ஆனால் இடம் சொல்லவில்லை. ஒருவர் சந்திரன் மற்றவர் பெயர் ஞாபகம் இல்லை. சந்திரன் அரைகாற்சட்டையும் சேட்டும் மற்ற போராளி சாரம் கையில் டோர்ச் லைட் ஆனால் ஆயுதம் எதுவும் கைகளில் இல்லை களைத்து விழுந்தடித்து வந்தவர்கள் எனது அப்பாவையும் அம்மாவையும் தான் சந்திக்கவேண்டும் என கேட்டனர்.

நான் அவர்களை எங்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு குசினிக்குள் இருந்த அம்மா அப்பா ஆகியோரை கூப்பிட்டு கொண்டு வந்து அவர்கள் முன் விட்டேன் ஆச்சரியம் எதுவும் இல்லை ஏனென்றால் அவ்வளவு நெருக்கடிக்குள்ளும் கிழமைக்கு இரண்டு தடவை போராளிகள் வந்து போவார்கள் ஆகையால் அம்மா கேட்டார் என்ன ஐய்யாக்கள் இந்த நேரம் ஏதும் பிரச்சினையோ என்று சி..சீ அப்படி ஒண்டும் இல்லை அம்மா இந்த கடிதத்தை உங்களிட்ட கொடுக்க சொன்னவை அண்ணையின்ர இடத்தில் இருந்து வந்தது. சரி நாங்கள் போவிட்டு வாறம் என்றனர்.

அவசரப்படவேண்டாம் ஏதாவது சாப்பிடுங்கோ அல்லது தேத்தண்ணியாவது குடிச்சிட்டு போங்கோ என்றார் அம்மா. அப்பா சொன்னார் இந்த இருட்டுக்க எங்க போகப்போறியள் மழையும் இருட்டு கட்டி கிடக்கு என்றார். ஆனால் அவர்கள் இல்ல இல்ல நாங்கள் போகவேண்டும் என அடம்பிடித்தனர்; சென்றனர். ஆனால் ஏன் அடம் பிடித்தார்கள் என்பது எனக்கு அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது. அத்தோடு எங்கள் வீட்டில் அழுகை ஒலியும் கேட்கவே அயலவர்கள் வீட்டில் கூடிவிட்டனர்.

அந்த கடிதம் இதுதான் அதாவது ஒரு தபால் அட்டை பருமனில் சிவப்பு ரோஜா படத்தின் அருகே ஊன்றப்பட்ட துப்பாக்கி அதில் மாவீரர் நாள் 1989 கார்த்திகை 27 என அச்சிடப்பட்ட எழுத்துக்கள் என நினைக்கின்றேன். ஆனால் அடுத்த பக்கத்தில் எழுதப்பட்டவைதான் எம்மை எல்லோரையும் எனது குடும்பம் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டது. ஆம் அதில் எழுதப்பட்டு இருந்தது என்னவென்றால் மேஜர் ———– குடும்பத்தினருக்கு என எழுதப்பட்டு இருந்தது. ஆம் அன்றுதான் எங்கள் சகோதரன் வீரச்சாவு உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்ட நாள்.

அதற்கு முன்னர் மேஜர் —– வீரமரணம் என செய்தி வந்தது ஆனால் எவரும் உறுதியாக சொல்லவில்லை என்பதால் அடிக்கடி வரும் வதந்திகள் என்றே வீட்டில் நினைத்தார்கள் ஏனென்றால் எப்போ வீரமரணம்? எந்த சண்டையில்? நாள்? நேரம்? என்ன நடந்தது? என்ற எந்தவிபரமோ அல்லது வித்துடலோ எங்கே அடக்கம் செய்தது என்ற விபரமோ சொல்லவில்லை ஆகையால்தான் வதந்தி என நாம் இருந்துவிட்டோம்.

ஆனால் வதந்தி அல்ல உண்மை 1989 ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நித்திகை குளத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்திருந்தார் மேஜர் —– அவர்கள். தமிழீழ தேசிய தலைவருக்கு மெய்பாதுகாவலராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த காலப்பகுதியில் இந்தியப்படையினரால் ஒப்பரேசன் செக்மேற் 3 என்ற நடவடிக்கையினை முறியடித்து தாக்கிய சமரில் வீரச்சாவு அடைந்தார். இவரின் வித்துடலும், இவருடன் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளினதும் வித்துடல்களும் தலைவர் முன் நிலையில் தேசிய தலைவரின் முகாம்களில் ஒன்றான (பின் நாளில் கமல் பேஸ்) மணலாற்று காட்டுப்பகுதியில் விதைக்கப்பட்டது.

ஆம் முதலாவது தமிழீழ மாவீரர் நாள் நினைவு கூரப்படுவதற்கு முன்பாகவே எமக்கு இந்த விடயம் அனைத்தும் தெரிந்தது. இதனால் எனது அம்மா கட்டாயம் நான் என் பிள்ளை புதைக்கப்பட்ட இடத்தை பார்க்கவேண்டும் என அடம்பிடித்தார். இதனால் 1989 நவம்பர் மாதம் அளவில் சில போராளிகள் வந்து வடமராட்சியில் இருந்து எம்மை அழைத்து சென்றனர். முல்லைதீவு வரை சென்றோம் எங்குமே இந்திய இராணுவம் நின்றாலும் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. நாம் முல்லைத்தீவு வரை பஸ் இல் பயணம் செய்து பின்னர் அளம்பில் பகுதி கடற்கரையில் ஒரு தென்னம் தோட்ட பகுதிவரை ஒரு கன்ரர் வானில் சென்றோம். இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தபின்பு ஒரு பச்சை நிற டற்சன் பிக் அப் வாகனம் வந்து எம்மை அழைத்து சென்றது நீண்ட தூரம் சென்றபின்பு ( இரவு) ஒரு முகாமுக்குள் நுழைந்தோம். பின்னர் அங்கு போராளிகள் எமக்கு தே நீர் தந்தார்கள். அதன்பின்னர் போராளிகள் சொன்னார்கள் இனிதான் கவனமாக இருக்கவேண்டும் என்றார்கள். ஏனென்றால் ஆபத்து நிறைந்ததும், குன்றும் குழியும்,சேரும் சுரியும், மழை நீரும் அதேவேளை கும் என்ற இருட்டும் எனது பெற்றோருக்கு பயத்தினை ஏற்படுத்தினாலும் மகனின் இடத்தை பார்க்கவேண்டும் என்ற வீச்சும், போராளிகள் பக்கத்தில் இருந்ததாலும் பயம் கலைந்தது. 05 அல்லது 06மணித்தியாலம் கழிந்து அந்த முகாமை அடைந்தோம்.

அங்கு மண்குவியலால் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மழைவெள்ளத்தில் அவை கரைந்தும் இருந்தது. ஒவ்வொரு மாவீரர்களது தலைமாட்டிலும் ஒரு தடி நாட்டப்பட்டு இருந்தது அதில் ஒரு பலகை துண்டில் சிவப்பு பெயின்ற் இனால் ஒவ்வொருவரது பேரும் எழுதப்பட்டு இருந்தது. டோர்ச் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தோம் இதே நேரம் எனது தம்பி (போராளி) சொன்னான் அம்மா அண்ணாவின்ர 7வதாக இருக்கு பாருங்கோ என்றான் ஆம் மேஜர் —– என்ற பெயர் எழுதப்பட்டு இருந்தது. குந்தியிருந்து எல்லா மாவீரர்களது பெற்றோர்கள் போலவும் மண்ணில் அடித்து, நெஞ்சில் அடித்து கதறி அழுதார்கள் எனது பெற்றோர். பூக்கள் தூவினோம்.மெழுகுவர்த்தி ஏற்றினோம். எல்லோரும் கவனமா இருங்கோ பிள்ளையள் என்ற எனது பெற்றோரின் எச்சரிக்கையோடு அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம். ஒரு கிழமை பயணத்துடன் எங்கள் முதலாவது தமிழீழ மாவீரர் நாளை நினைவு கூர்ந்து மணலாற்று காட்டில் இருந்து புறப்பட்டோம் புறப்படும் போது எமது சகோதரர் விதைக்கப்பட்ட வீடியோ பிரதியினையும் தந்தார் எனது இளைய சகோதரர்.

அந்த வீடியோ கொப்பியினை வீட்டிற்கு கொண்டுவந்து எங்களூரில் டி.வி வைத்திருக்கின்ற ஒருவரிடம் சென்று அதனை போட்டு பார்த்தோம். அதில் பெற்றோ மாக்ஸ் வெளிச்சத்தில் கிடங்கு வெட்டி வரிசையாக அதே உடுப்புடன் வீரர்கள் விதைக்கப்படுவதும் அதனை வீடியோ பிடிப்பதனையும்பார்க்கும் போது அதிசயமாக இருந்தது சண்டை உக்கிரமாக நடந்த வேளையிலும் கூட தேசியத்தலைவர் அவர்களுடன் கேணல் சங்கர் அண்ணா, கேணல் கிட்டண்ணா, பிரிகேடியர் சொர்ணம் அண்ணா, மேஜர் சோதியா அக்கா ஆகியோர்கள் இறுதிவரை நின்று 07 மாவீரர்களுக்கும் மண் தூவி வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். அதே போன்றுதான் முள்ளிவாய்க்கால் இறுதி போரிலும் வீரச்சாவடைந்த போராளிகளும் மக்களும் அப்படியே புதைக்கப்பட்டதும் வணக்கம் செலுத்தியதனையும் ஒப்பீடு செய்து பார்க்கின்றேன்.

எங்கள் வீரர்களுக்கு,

எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.

லெப்.கேணல் மாறன் வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் மன்னார் அடம்பன் பகுதி மீட்பின்போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாறன் உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர்–காணொளி


19-06-1961 – 27-11-1982

லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.


சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

‘ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

லெப்.சங்கர் பற்றி தலைவர்-காணொளி

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்…. சங்கராக விடுதலைப் புலியாக மாறினான்.


சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம்.

முதலில்… எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்… இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகையிடப்படுகிறது….. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று … விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான்.

தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.


இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

நன்றி
எரிமலை நவம்பர் 2000

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை…மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்


எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஒரு மீள்பதிவு

தமிழீழப் பாடல்கள் காணொளி

லெப்.கேணல் யோகரஞ்சனின் 13ம் ஆண்டு வீரவணக்கங்கள்

18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்


கோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை உணர்ந்து நவம்பர் 21 முதல் 27 வரையான ஒருவார காலப்பகுதியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தவேண்டுமென்பதே தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு செய்யும் மரியாதை.


ஈழப்பிரதேசம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் விடுதலைக்காக மாண்ட போராளிகளை போற்றவென ஆரம்பிக்கப்பட்டதே மாவீரர் வாரம். 1989-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990-ஆம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் வீரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்கப் புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூறப்பட்டது. அந்த வகையில் மாண்ட இந்தக் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

வடமராட்சி கம்பர்மலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் நவம்பர் 27, 1982-இல் முதல் மாவீரரானார். இவரின் ஏழு ஆண்டுகளின் மரணத்தின் பின்னரே முதன் முதலில் நவம்பர் 27, 1987-லில் இருந்தே மாவீரரை நினைவு கூரும் முகமாக புலிகளினால் கடைப்பிடிக்கப்பட்டது. ஏறத்தாள அறுநூறு புலிப்போராளிகளின் முன்னிலையில் அடர்ந்த முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம் என்னும் இடத்திலேயே நினைவெழுச்சிகள் நடைபெற்று புலிகளின் தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார். ஆரம்பத்தில் முன்று தினங்களாக இருந்து பின்னர் ஏழு தினங்களாக பிரகடனப்படுத்தபட்டு வெகு சிறப்பாக நவம்பர் 27, 2008 வரை கொண்டாடப்பட்டது. புலிகளின் ஆயுதங்கள் மே 2009-இல் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டு இனமானத் தமிழர்களினாலும் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களிற்கிடையே இருக்கும் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படுகின்றது. புலிகள் பலமாக இருந்தவேளையில் தாமே புலிகளின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் இன்று இரண்டு பட்டு நிற்கின்றார்கள். ஒரு பகுதியினர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறுகின்றனர். இன்னொரு பகுதியினர் பிரபாகரன் எந்த நேரத்திலும் வெளியில் வருவார் என்கின்றனர். தமிழர்களைப் புலிகள் நடுக்கடலில் தத்தளிக்க விட்டு தப்பிச்சென்றுவிட்டார்கள் என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள். ஒரு பிரபாகரனோ அல்லது பத்துப் பிரபாகரனோ சாவதால் ஈழப்போராட்டம் அழிந்துவிடப் போவதில்லை. இதனை மறந்தே சிங்கள அரசு தனது காய்நகர்த்தலை மேற்கொள்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழியில் போராடிய தமிழர் தலைமைகளுடன் பேசி சுமூகமாக பிரச்சினையைத் தீர்த்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு மனிதன் இருக்கிறார் என்று உலகத்திற்கே தெரியாமல் போயிருக்கும். ஆனால், சிங்கள அரசு அதனை செய்யத்தவறியதன் காரணமே வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத வழிப் போராட்டம். இனியேனும் அவர் வழிப் போராட்டம் மீண்டும் எழாமல் இருக்க வேண்டுமென்றால் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் நிச்சயம் ஒரு பிரபாகரனல்ல ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சியம். இப்படியாக ஈழத்தமிழரின் போராட்டம் இருக்கையில் மாண்ட போராளிகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாகவே தான் பிரபாகரனால் அன்று மாவீர் நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.

துயிலும் இல்லங்களின் மகிமை

1195303806_5001-9018

தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார். அதன்படியே கட்டுமானப் பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவக் காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கபட்டது. பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கபட்டது.

முதன் முதலில் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் அதாவது 1989-ஆம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991-இல் தொடங்கப்பட்டாலும் 2005-ஆம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்று கூறுகின்றார்கள் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்.

பல போராட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட மாவீரர் இல்லங்கள் இன்று சிங்கள படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன என்பதை கேட்டு கதறுகின்றார்கள் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். துயிலும் இல்லங்கள் பக்கமே போக கதிகலங்கி நின்ற படையினர் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டதென்ற மமதையில் அரக்கத்தனமான வேலைகளை செய்கின்றார்கள். எதிரியாக இருந்தாலும் இறந்தவரின் உடலை அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற உலக மரபு இருந்தும் புலிகளின் இறந்த போராளிகளின் உடல்களை தெருத்தெருவாக இழுத்துச்சென்று அசிங்கப்படுத்தி உலக மரபையே மீறினது சிங்கள அரச படைகள். இப்படிப்பட்ட படையிடமா துயிலும் இல்லங்களின் மகிமை என்னவென்று கேட்கமுடியும். கேட்பதும் மகா தவறு.

முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25,000-க்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழம் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே தமிழர்கள் கருதி வந்துள்ளார்கள். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும் மரணத்துக்குச் சவால் விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது.

தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும் அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும் எத்தனையோ விதங்களில் அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும் வாரம் தான் இந்த மாவீரர் வாரம்.

தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது. தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன. ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள் பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களுடையதே. இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.


ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். இவரின் கூற்று பொய்யாகிவிடக் கூடாது.

எதிரியானவன் களத்தில் அரக்கத்தனமான வேலைகளை செய்யும் அதேவேளையில் புலத்திலும் பல நாசகார வேலைகளைச் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளான். சில ஈனத் தமிழர்களும் அவனுக்கு விலைபோய் விட்டார்கள். எட்டப்பனை அடையாளம் கண்டு அவனுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடத்தை அளித்து சிங்கள அரசின் முகத்திரையை கிழிக்கும் முகமாக வேலைத்திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த வருடம் இடம்பெறும் மாவீரர் வாரத்தினூடாக எதிரியின் முகத்தில் கரியை பூசும் வண்ணமாக புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மாவீரர் வாரத்தை நடாத்தி தமிழினம் கோழையல்ல என்பதை உணர்த்த வேண்டும். தமிழினம் புலிக்கொடியை இன்றல்ல நெற்றல்ல பல நூறு ஆண்டுகளிற்கு முன்னரே ஏற்றுக்கொண்டவர்கள். தமது தன்மான புலிக்கொடியுடன் கப்பல்களில் இந்திய சமுத்திரத்தில் வலம் வந்தார்கள். கடல் வழியாகச் சென்று சில நாடுகளை ஆண்டதுடன் உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். இப்படிப்பட்ட பாரம்பரிய நாகரிகத்தை கொண்ட இனமே தமிழினம் என்பதை உலகத்திற்கே உணர்த்த வேண்டும். வீழ்ந்த புலிக்கொடியை மீண்டும் பறக்க விட மாவீரரை நெஞ்சில் நிறுத்தி நிகழ்வுகளை செய்வதனூடாக எழுச்சிபெற வைக்க முடியும். இதனூடாக தமிழினத்தின் எதிரிகளுக்கு தக்க பாடத்தை கற்பிக்க முடியும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழீழக்காவல் துறை ஆரம்பிக்க பட்ட நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன.

காவல்துறை உருவாக்கம் காணொளியில்

பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும்.

1991 ஆம் ஆண்டு இதேநாள் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது.

மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள். தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவற்றுயினர் செயற்பட்டார்கள்.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை. போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும்.

மேலும்
ஈழவிம்பகம்
http://aruchuna.net/
—————————————————————-
Pirapaharan opens Tamil Eelam Police HQ

Speaking during the opening ceremony of the Tamil Eelam Police Head quarters complex today, Sunday 7th September 2003, at 06.40 am in Kilinochchi, Leader of Liberation Tigers of Tamil Eelam (LTTE) V. Pirpaharan congratulated the Chief of Police, the young men and women of the police service and the liberation fighters who contributed to the growth of the Tamil Eelam police force, Voice of Tigers (VoT) radio said this morning.

Head of Heros Affairs, Pon Thiyagam and Commander of Sea Tigers Col.Soosai lit the ceremonial lamps, LTTE’s Head of Intelligence Pottu Amman hoisted the Tamil Eelam flag, and Chief of Tamil Eelam Police P. Nadesan raised the official flag of Tamil Eelam Police.

Police HQ opening

Police HQ opening A photo album of the opening ceremony:

——————————————————————————

Colombo, 29 December, (Asiantribune.com): K.Elango has been appointed as the Inspector General of Police to the areas under the control of Liberation Tigers of Tamil Eelam in Vanni. “Tamil National Leader Velupillai Prabhakaran on November 19, 2007 appointed Mr K Elango as the new Head of the Tamileelam Police.““Tamil National Leader Velupillai Prabhakaran on November 19, 2007 appointed Mr K Elango as the new Head of the Tamileelam Police.“

He succeeds P. Nadeson, who was appointed as the Head of the Political Division of the LTTE after the death of S.P.Tamilselvan who succumbed to the aerial bombardment by the Sri Lanka Air Force on 02 November.

The Ltte Peace Secretariat news release revealed “Tamil National Leader Velupillai Prabhakaran on November 19, 2007 appointed Mr K Elango as the new Head of the Tamileelam Police.“

According to the news release “The Tamileelam Police was created by the Tamil National Leader Velupillai Prabhakaran exactly 16 years ago.”

The news release went on to add, “Tamileelam Police has been rendering in valuable service in maintaining law and order and through this ensuring justice and equality in Tamileelam for the last 16 years.“

– Asian Tribune –

Tamil Eelam police celebrate anniversary
——————————————————————————-
Chronology:

  • Tiger cops learn Sinhala
  • Prabha hails Eelam police
  • Three more police stationsin a month – LTTE Police Chief
  • LTEE’s police and UPFA’s silence
  • Up ↑