வடமுனையில் சிறப்புடன் செயற்பட்டவர் மேஜர் இனிதன்.. மேஜர் இனிதன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை நிலையான முகவரியாககொண்ட புண்ணியமூர்த்தி பிரதீபன் என்ற மாவீரனின் மூன்றாம் ஆண்டு வீரவணக்கநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

வடபேர்முனையில் பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையின் கீழ் சிறப்புற செயற்பட்டு பலகளங்களை கண்ட மேஜர் இனிதன் 2007.09.27 அன்று முகம்மாலையில் சிறீலங்காப்படையினரின் படைநகர்விற்கு எதிரான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.