“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.”

” தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்புதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

வீரவரலாற்று பின்ணணி காணொளியில்



தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே

தேசியத் தலைவர் பிரபாகரனின் உரை திலீபனின் வீரச்சாவின் பின் 26-09-1987-காணொளி


வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில்

தாயக விடுதலைக்காக தம்முயிர் தந்த இம் மாவீரரை வணங்கி அவர்கள் நினைவாக இவ் ஆவணப்பதிவுகளை இற்றைப்படுத்திக்கொள்ளுகின்றோம்