Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2010

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 17

இவ்வாறான பயிற்சிகளுக்கு நடுவே, ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நீண்டதூரத் தாக்குதல் அணிகள் உருவாகின்றன. இவர்களுக்கான பயிற்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக, எதிரியின் முகாம்கள், ஆறுகள், அருவிகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்கு மீது தாக்குதல் நடத்தும் வகையில் உருப்பெற்றிருந்தார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் போராளிகளின் பயிற்சித் தளங்கள் தொடர்பாக தொடர்ந்துவரும் தொடர்களில் தருகின்றேன். புதிய புதிய போராளிகளின் உள்வாங்கல்களால் விடுதலைப் புலிகளின் படை அணிகளில் சிறந்த தலைமையாளர்கள், சிறந்த குறி சூட்டாளார்கள் என ஒருபக்கமும், சிறந்த சிற்பக் கலைஞன், சிறந்த கணணி இயக்குனர்கள், சிறந்த கணக்காளர்கள் என அறிவுத்திறன் சார்ந்த இன்னொரு பக்கமும் வளர்ச்சியடைந்திருந்தது.

மறுபக்கத்தில் கடற்புலிகளின் அணிகளும் புதிய போராளிகளை உள்வாங்கி பெரும் வளர்ச்சி கண்டிருந்தது. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு தொடக்கம் பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, நாயாறு வரையான நீண்ட கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களில் பலர் தங்களது பிள்ளைகளை கடற்புலி அணியில் இணைத்திருந்தார்கள். கடலோடு வாழ்ந்து பழகியதால் அவர்களுக்கு கடலில்ப் பயணிப்பதும், நீச்சல் அடிப்பதும் அத்துப்படியாக தெரிந்திருந்ததால் பெற்றோர்கள் இவர்களை விரும்பி கடற்புலிகளின் அணியில் இணைத்தார்கள்.

அத்துடன், கடலில் சிறீலங்காப் படையினரின் தாக்குதலில் தமது உறவுகளை இழந்திருந்த பலரும் தமது பிள்ளைகைள கடற்புலிகளில் இணைக்க முனைந்தார்கள். இவர்களில் பலர் கடற்புலிகள் அணியில் உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் தளபதி சூசை அவர்களின் கீழ் வளர்க்கப்பட்டார்கள். இதேவேளை, புதிய போராளிகளின் பயிற்சிகளின் நிறைவில், பெற்றோர் முன்னிலையில் போராளிகளை காண்பிக்கும் நடவடிக்கை பெரும் நிகழ்வுகளாக நடந்தன. அதாவது அணிவகுப்பு மரியாதைகளுடன் புதிய போராளிகள் தமது பெற்றோர்களை காண்கின்றார்கள், சந்திக்கின்றார்கள்.

பயிற்சியில் ஈடுபட்டதன் காரணமாக பெற்றோர்களை நீண்ட நாட்களாகக் காணாத போராளிகளுக்கு பேற்றோறர்களை அழைத்து வந்து அவர்களின் பிள்ளைகள் காண்பிக்கப்பட்டார்கள். புதிய போராளிகள் தங்கள் திறமைகளை தாய் தந்தை உறவுகளிற்கு சொல்லி மகிழ்ந்தனர். இதனால் பெற்றோர்கள் பூரிப்படைந்தார்கள். தன்பிள்ளை பெரிய திறமைசாலி, படை நடத்துபவன், பொறுப்பாளன், கனரக துப்பாக்கி இயக்குபவன் என்று அவர்கள் பெருமிதம் அடைந்து பிள்ளைக்கு பலத்தினை ஊட்டியது. இவ்வாறுதான் அன்று அனைத்து புதிய போராளிகளுக்கும் பெற்றோர் சந்திப்புக்கள் நிகழ்ந்தேறின. புதிய போராளிகளின் இணைவினால் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்து சென்றது.

கடற்புலிகளின் அதிகரிப்பினால் கடற்படையில் புதிய படை அணிகள் உருவாக்கப்படுகின்றன. தாக்குதல் அணிகளைவிட கரையோர காவல்படை என புதிய அணி உருப்பெறுகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில், எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்த யாழ்குடாநாட்டில் கைக்குண்டு வீச்சும், காவலரண் தகர்ப்பும் அங்குள்ள விடுதலைப் புலிகளால் நடத்தப்படுகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் பங்கேற்று எதிரிக்கு அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை யாழ்ப்பணத்தில் சிறீலங்காப் படையினருக்கு ஆத்திரம் ஊட்டும் செயல்களாக மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், எதிரி யாழ்குடாவைவிட்டு களமுனைக்கு நகர்த்தமுடியாத ஒரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை விடுதலைப் புலிகளின் யாழ்குடா புலனாய்வாளர்களான பொது மக்களும் (இவர்கள் இவ்வாறான தாக்குதலுக்கும் என பயிற்றப்பட்டிருந்தவர்கள்) இணைந்தே மேற்கொண்டார்கள் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், யாழ்குடாநாட்டில் மேலும் சில தாக்குதல்களை மேற்கொள்வதற்கென கரும்புலிகளை உள்ளடக்கிய புலனாய்வுத்துறை அணி ஒன்று வன்னியில் இருந்து கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு தரையிறப்படுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஊடுருவி சிறீலங்காப் படையினருக்கு பின்தள இழப்புக்களை ஏற்படுத்தும் முகமாகவும் சிறீலங்காப் படையினரின் கனரக நீண்ட தூர தாக்குதல்களுக்குப் பயன்படும் பீரங்கிகளின் நிலைகளைக் கண்டறிந்து அவற்றினை தகர்த்தெறியும் முகமாகவும் அதாவது சிறீலங்காப் படையினரின் பின்தளங்களில் ஆட்லறி மற்றும் மல்ரிபரல் எறிகணைகளை இயக்கவிடாமல் செய்வதன் ஊடாக படையினருக்குரிய வழங்கல் பகுதியினை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தரைவழியாகவும் கடல்வழியாகவும் யாழ்குடாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். யாழ்குடாவிற்கான கடல்வழிப் பாதையாக இருவழிகள் இருந்தன.

ஒன்று வடமராட்சி கிழக்கில் இருந்து கடல்வழியாக சென்று கற்கோவளம் பகுதியில் தரை இறங்குதல். இதற்காக பயிற்றப்பட்ட அணிகள் செல்வார்கள். அதாவது கடலில் ஒரு கடல்மைல் தூரத்திற்கு கூடுதலாக நீந்தக்கூடியவர்கள் தான் இந்த வழியினூடாகச் செல்வார்கள். வடமராட்சி கிழக்கு கடல் மற்றும் நாகர்கோவில் கடற்பகுதிகளில் இருந்து சிறிய படகுகள் விரைந்து சென்று கற்கோவளத்தை அண்டிய கடற் பகுதியில் இவர்களை இறக்கிவிடுவார்கள். இவர்கள் கடலில் நீந்தியவாறு சிறீலங்காப் படையினரின் நடமாட்டங்களை அவதானித்து கரையேற வேண்டும். மற்றையது, யாழ்ப்பாணத்தில் அடுத்த பகுதியாக உள்ள கிளாலி கடல் வழியாக குருநகர், பாசையூர் பகுதிகளில் சென்று தரை இறங்குதல்.

அங்கு வரும் கடல்தொழிலாளர்கள் சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலேயே இந்த நடவடிக்கை இலகுவாக இருக்கும் என்பதால், அவர்களுடனான தொடர்புகள் பேணப்பட்டு கடல்வழியிலான பயணம் இடம்பெறும். கடலின் இடையில் வரும் அவர்களிடம் போராளிகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தரையில் இறக்கிவிட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ் மக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ள சிறீலங்காப் படையினரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று, அங்கு தகவல்களைத் திரட்டியது மட்டுமல்ல, படையினரின் உணவினையே உண்டு படை நிலைகளுக்குள்ளே பதுங்கி வாழ்ந்த மாபெரும் வரலாற்று வீரன்தான் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ.

ஆனாலும், கரும்புலி பூட்டோ உண்பதற்கு உணவின்றியியும் முகாம்களுக்குள் நடமாடி இலக்குகளை சரியாக இனங்கண்டு சொல்லியிருக்கிறான். இதேவேளை, யாழ்குடாவில் இவ்வாறு சென்றிருந்த போராளிகளை மக்களும் பாராமரித்தார்கள். அவ்வாறான மக்கள் அன்றைய நாளில் இருந்தார்கள் என்றால் அது பெருமிதம்தான். ஏன்னென்றால் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் விடுதலை ஆதரவாளர்களும் இருந்தார்கள். அவர்கள் ஊடாக மேலும் பல விடுதலை ஆதரவாளர்களுகம் கைதாகின்றார்கள். இவ்வாறு அன்று யாழ்ப்பாணத்தில் வீடுகளில் நின்ற விடுதலைப் புலிகளை எவ்வாறாவுதல் கைது செய்துவிட படையினர் முற்படுகின்றவேளை, தன்னைதானே சுட்டும், விடுதலைப் புலிகளின் கொள்கை மரபிற்கு அமைய நஞ்சினை கடித்தும் வீரச்சாவடையும் நிகழ்வுகள் பல நடந்தேறின.

இவ்வாறுதான் லெப்.கேணல் பூட்டோ வீடொன்றில் தங்கி இருந்தவேளை, அந்த வீட்டை சிறீலங்காப் படையினர் சுற்றிவளைத்த முற்றுகையிட்டனர். படையினரின் முற்றுகையை உடைக்க முடியாது என்பதை அந்தக் கரும்புலிப் போராளி உணர்ந்துகொண்டிருந்தான். தான் உயிருடன் பிடிபட்டால் யாழ்குடாவில் செயற்படும் போராளிகள் பலருக்கு ஆபத்து நேரும் என்பதை பூட்டோ அறிந்திருந்தான். எனவே, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கவைத்து தன்னைதானே அழித்து விடுதலைக்கு வித்தானான் அந்தக் கரும்புலி.

இவ்வாறன தெய்வீக பிறவிகள் தான் அன்று யாழ்ப்பாணத்தில் நின்ற கரும்புலி அணிகள். பூட்டோவின் இழப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கரும்புலித் தாக்குதல் அணிகளின் வேவு நடவடிக்கைகள் சற்று மந்தமடைகின்றன. இதனால், நாகர்கோவில் கண்டல் பகுதிகள் ஊடாக விடுதலைப் புலிகளின் மேலும் சில வேவு அணிகள் சிறீலங்காப்படை கட்டுப்பாட்டுக்குள் நுழைகின்றார்கள். இதில் தளபதி தீபன் அவர்களின் வேவு அணிகள் சிறப்புற அவர்களது நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. இந்நிலையில்தான் லெப்.கேணல் தியாகராஜன் தலைமையில் ஒர் அணி அதாவது புலனாய்வுத்துறை அணி அங்கு களமிறங்குகின்றார்கள்.

(தொடரும்…)

நன்றி்
ஈழமுரசு

தேசியத் தலைவரைப் புரிந்துகொள்ளுதல் – பாகம் 2

அந்த ஒற்றை மனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை தூக்கிநிறுத்தி அதனை தாங்கி நிற்கும் தோள்களுக்கு உரியவர்.

உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீர விளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமை மறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும், சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது. இந்தப் போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஒரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். இதற்கான ஆற்றலையும், அறிவையும் அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார்? அனுபவங்கள் என்ற அற்புதமான பாடத்திலிருந்தே நிறையப்பெற்றுக் கொண்டார்.

காலகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கான ஒரே தலைவர் என்ற முறையில் அந்தப் போராட்டம் சந்தித்த அனைத்து தேக்கங்களையும், சவால்களையும், வளைவுகளையும் அவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் விடுதலைக்கு சாதகமானதாக்கி முன்னெடுத்தார். ஓப்புவமை இல்லாத தலைவர் என்ற முறையில் அவர் தான் கற்றுக் கொண்ட பாடங்களை அனுபவங்களை நீதியை, ஒழுக்கத்தை, உறுதியை என்று அனைத்தையும் தனது தோழர்களுக்கு தளபதிகளுக்கு கற்பித்தார். தான் கற்றுக் கொண்டதை மற்றவர்க்கு தனது நடைமுறை மூலமும், செயலின் மூலமும் சொல்லிக் கொடுத்தவர் தேசியத்தலைவர்.

தேசியத்தலைவர் அவர் பார்க்கும், கேட்கும், அறியும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொண்டார். பெற்றுக் கொண்டார். தேசியத்தலைவர் கற்றுக் கொண்ட முதலாவது பள்ளிக்கூடமாகவும், பல்கலைக் கழகமாகவும் அவரின் தந்தையாரே இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சிங்கள இராணுவச் சிறை ஒன்றில் மரணமாகிய அவரின் வாழ்வும், வழமையும், பழக்கவழக்கங்களும், நேர்மையும், ஓர்மமும் தலைவரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் அற்புதமானவை. ஆழமானவை. அமரர் வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் மிகவும் எளிமையானவராகவும், அதே நேரம் உறுதிமிக்கவராகவும் இருந்தவர்.

கடல்களை பிளந்து தேச எல்லை கடந்து சென்று தொழில் செய்யும் கப்பல்களை சொந்தமாக கொண்டதும், செல்வச் செழிப்புமிக்கதுமான ஒரு குடும்பத்தின் மூத்த வாரிசான வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் தனது குடும்பசிறப்புகள் எதுவும் தனது நிதி இருப்புகள், நில இருப்புகள் எவற்றின் தாக்கமும் இன்றி மிகவும் இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்ந்தவர். மிகவும் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தின் தலைமகனான வேலுப்பிள்ளை அப்பா அவை அனைத்தையும் உதறியவராக உலாவந்தவர். மிகவும் மெதுவாக நடக்கும் பழக்கமுள்ள அவர் மிகவும் உன்னிப்பாக தனது பார்வையை பதித்தபடியே நடைபோடும் அவரின் அந்தப் பழக்கமே தலைவரின் இயல்பான எந்தநேரமும் பார்வையை கூர்மையாக வைத்திருப்பதாக வந்திருக்கலாம்.

தேசியத்தலைவரின் புத்தகங்கள் மீதான தேடல்கூட அவரின் தந்தையாரிடம் இருந்தே வந்ததுதான்.தேசியத்தலைவர் தனது தந்தையை ஆழமாக புரிந்துகொண்டவர். தனது தந்தையின் ஆளுமைகளை அந்தப் புரிந்து கொள்தலுக்கு ஊடாகவே தலைவர் உள்வாங்கினார். சின்னஞ்சிறு மழலை தனது தந்தையையைப் பார்த்தே நடக்கப்பயில்வதைப் போன்றே தலைவரும் தனது தகப்பனாரின் இயல்புகளையே தனதாக்கினார். அவருடைய எளிமை, அவருடைய நேர்மை, அவருடைய உறுதி, அவருடைய பார்வை என்றே எல்லாமுமே. தேசிய தலைவருக்கு அவர் வளர்ந்த பின்னர் நிறைய நண்பர்களும் தோழர்களும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலும் தேசியத் தலைவருக்கு கிடைத்த முதலாவது நண்பராக அவரின் தந்தையாரே இருந்திருக்கிறார்.

இதனை நிறைய இடங்களில் தலைவர் சொல்லியுள்ளார். ஒரு நண்பனுக்கு அறிவுறுத்துவது போலவே வேலுப்பிள்ளை அப்பா எல்லா விடயங்களையும் தோழமையுடன் தனது மகனுக்கு சொல்லிக் கொடுத்தார். தனக்குள்ளே யாகம் வளர்க்கும் அதி உயர் ஞானத்தைக்கூட தந்தையிடம் இருந்தே தனக்குள் பெற்றார் தலைவர். இவை எல்லாவற்றையும் விட வேலுப்பிள்ளை அப்பாவிடம் இருந்த பொங்கிவரும் சத்திய ஆவேசம்தான் தலைவர் தனது அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கற்றுக்கொண்ட அதிஉச்ச பாடமாகும். அந்த சத்திய ஆவேசம்தான் தேசியவிடுதலைப் போராட்டமாக பிறப்பபெடுத்தது. தன்னுடைய ஒரு பிரதியாக ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத் தலைவனை உருவாக்கிய அந்த தந்தை என்றும் நினைவுகூரத்தக்க ஒரு பரிமாணம்.

இப்படியாக தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட இயல்புகளையும், தானே கற்றுக்கொண்ட அனுபவங்களையும் தலைவர் தனது தோழர்களுக்கு கற்பித்தார். அந்த வகையில் தலைவர் எப்படி தனது தந்தையை அணு அணுவாக தனக்குள் உள்வாங்கினாரோ அப்படியே கிட்டு என்ற உன்னத தளபதியும் தலைவரை அணுஅணுவாக தனக்குள் உள்வாங்கி தனது ஆத்மத்தை வளர்த்தவர். போர்க்குணத்தை கூர்தீட்டியவர். இந்த சனவரி 16ம் திகதியுடன் அவர் வீரமரணமடைந்து பதினெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தேசியதலைவரின் ஆளுமைகளை முழுமையாக தரிசிக்க விரும்பும் எந்த ஒரு மனிதனும் தேசியத் தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையில் எந்தநேரமும் ஓடிக்கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாத உணர்வலைகள் பற்றியும் புரிதல்பற்றியும் முதலில் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.

தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையிலான உறவு என்பது தலைவர்-போராளி, தலைவர்-தளபதி என்ற பொறுப்புநிலைகளை எல்லாம் கடந்த ஒரு உன்னத நிலையிலானது. தேசியத் தலைவர் சொல்வதுபோல ‘ஓரே இலட்சியத்தை ஆழமாக வரித்துக்கொண்ட இருவருக்கு இடையிலான ஆன்ம உறவு’ அது. ஒரு கோபக்கார இளைஞனாக போராட்டத்துக்கு வந்த குமார் என்ற அந்த பொடியனை செதுக்கி செதுக்கி எல்லா ஆளுமைகளும் நிறைந்த கிட்டு என்ற அதிமானுடனாக மாற்றியவர் தலைவர்தான். தான் தனது தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட அமைதியான உறுதி, உறுதிநிறைந்த அமைதி என்பனவற்றை கிட்டுவுக்கும் சொல்லிச்சொல்லி அவரை நிதானமான உறுதியான வீரனாக்கினார்.

முகாம்களிலிருந்து இராணுவம் வெளிவந்துவிட்டது என்ற போதிலும், கடற்கரையால் நேவிபடகின் மூலம் கடற்படை இறங்குகிறான் என்ற நிலையிலும், ஏன் சுதுமலையில் தனது முகாம் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய சிங்களப்படையால் சுற்றிவளைக்கப்பட்டபோதிலும் கிட்டு நிதானமாக ஆனால் மிக வீரமுடன் உறுதியாக நின்ற பொழுதுகளும்… இறுதியிலும் இறுதியாக அந்த கடைசிநாளான சனவரி 16 அன்று வங்கக்கடலில் இந்தியக் கடற்படை சுற்றி நின்று சரணடையச் சொல்லி வற்புறுத்தியபொழுதிலும் அதே நிதானத்துடன் தனது காலை இழுத்து இழுத்து நடந்து ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து படகுமுழுதும் சக்கை வைத்த உறுதியும், மரணித்த நிமிடம்வரை காட்டிய அமைதியும் தலைவர் சொல்லித் தந்தவைதான்.

கிட்டுவும் தேசியத்தலைவரைப் போன்றே தேடல் மிகுந்த ஒரு மனிதன். புத்தகம் என்றாலும் சரி, சகமனிதனின் அனுபவங்கள் என்றாலும்சரி, திரைப்படம் என்றாலும் சரி, தலைவர் எப்படி அவற்றை உள்வாங்குவாரோ அப்படியே கிட்டுவுக்கும் சாத்தியமானது. வேட்டைத் துப்பாக்கிக்கு மின்னி வைப்பதிலிருந்து தான்பிரின் என்ற அயர்லாந்து போராளியின் வரலாறு வரைக்கும், சக்கை அடையும் முறையிலிருந்து சனங்களுடன் வேலைசெய்யும் முறைவரைக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து கிட்டுவுக்கு கற்பித்தவர் அந்த தலைவர்தான். தனது படிப்பினைகளை தனது வரலாற்றிலிருந்தே பெற்றுக்கொண்ட தலைவர் தன்னைப் போன்றே ஓர்மமும் ஒழுக்கமும் வீரமும் வழிகாட்டும்திறனும் தனது தளபதிகளுக்கும் அவர்களினூடாக தனது போராளிகளுக்கும் பரவச்செய்தார். இதுவே ஈழத் தமிழினத்தின் எழுச்சியானது.

இந்த எழுச்சியானது ஆளுமைகளினதும் உணர்வுகளினதும் நீட்சிதான். இந்த உணர்வுகளும் ஆளுமைகளும் இருக்கும்வரை எமது விடுதலைப் போராட்டத்தை எவராலும் பிடுங்கி எறிந்துவிடமுடியாது. ஏனென்றால் இது தலைமுறை தலைமுறையாக, கண்ணுக்குத் தெரியாத அலையாக எமது மக்களுக்குள் பிறப்பெடுத்து வருகிறது. நாமும் கற்றுக் கொள்வோம். வாழ்வின் இறுதி நாள்வரைக்கும் தேடுவோம்.இன்னும் நிறைய கற்றுக்கொள்வோம் எங்களின் தேசியத் தலைவரிடமிருந்து…

ச.ச.முத்து

நன்றி:ஈழமுரசு

முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம்


ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்.

நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்.

ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள்

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்

lttelogo

ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.

அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.

எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


முத்துக்குமார்

கு. முத்துக்குமார் (இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிர்த் தியாகம் செய்த தியாகப் போராளி ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்கு பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.

பொருளடக்கம்

[மறை]

//

[தொகு] தீக்குளிப்பு

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார்.

அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.

இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், “இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்[1].

[தொகு] திமுக அரசைக் கண்டிப்பு

தீக்குளிக்க முன்னர் இவர் ஒரு நீண்ட மடல் வரைந்துள்ளார். அந்தக் கடித்ததில் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிதுறப்பு சமர்பிப்பு ஒரு நாடகம் என்றும், “தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்” என்றும் கூறப்பட்டுள்ளது.

[தொகு] இந்திய அரசை கண்டிப்பு

[தொகு] வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள், தியாகி கு.முத்துக்குமார் அவர்களுக்கு வீர வணக்கம். [2]

தியாகி கு.முத்துக்குமாரின் வீரமரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர் என பொதுமக்கள் அலை அலையாய் திரண்டு தங்கள் உணர்வுகளை வீரமரணத்தை ஒட்டி வெளிப்படுத்தினர். சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து 30.01.2009 நடத்திய வீர வணக்க ஊர்வலம் மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.

திரளான திருநங்கைகள் ,விடுதலை சிறுத்தைகள் பாட்டாளி மக்கள் கட்சி , பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் , குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

[தொகு] ‘முடிந்தவரை போராடுங்கள்’

‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’; என்று அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதனால் அவரது இறுதி மரியாதை நிகழ்வில் தாமதம் ஏற்பட்டது.அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

[தொகு] முத்துக்குமாருக்கு மணிமண்டபம்

முத்துக்குமாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என “இளந்தமிழர் இயக்கம்“ என்ற அமைப்பு அறிவித்து, அதற்கான பணிகளை செய்து வருகின்றது. இது தொடர்பாக உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்[3].

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை ஊழியர் தீக்குளித்து தற்கொலை (தட்ஸ்தமிழ் செய்தி)
  2. தியாகி கு.முத்துக்குமார் அவர்களுக்கு வீர வணக்கம்
  3. முத்துக்குமார் மணிமண்டபம் – உலகத் தமிழர்களுக்கு முத்துக்குமாரின் தந்தை எழுதிய கடிதம்

[தொகு] வெளியிணைப்புகள்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 16

மன்னார் உயிலம்குளம் சோதனை நிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொண்ட அதேவேளை, மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் ஊடான அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

எனினும், வன்னி மீதான பொருளாதாரத் தடையினை சிறீலங்கா அரசு மேலும் இறுக்குகின்றது. பொருளாதாரத் தடையை இறுக்கியபடி வன்னி மீது பரவலாக வான்வழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் வான்படையினை அழிக்கும் நோக்கில் இரணைமடு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. வேவு விமானம் மூலம் வேவு எடுக்கப்பட்ட தகவல்களினதும், தரைவழியாக எடுக்கப்பட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் இந்தத் தாக்குதல்களை நடத்திய சிறீலங்கா வான்படையினர், பின்பு அதனை அண்மித்த காட்டு பகுதிகள் மீதும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் முகாம்கள், பயிற்சி முகாம்களை இனம்கண்டுபிடித்து தாக்குதல் நடத்துகின்றார்கள்.

இதன்போது விடுதலைப் புலிகளின் வான்படைத்தளம், பயிற்சித்தளங்கள் முதன்மையானவர்கள் கூடும் இடங்கள், பெரும் முகாம்கள், வெடிபொருள் களஞ்சியங்கள், ஆயுத வெடிமருந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு இலக்காகின்றன. இத்தாக்குதல்கள் வெற்றி அளிப்பதற்கான காரணம் வேவு விமானத்தின் வேவு நடவடிக்கை மட்டுமல்ல, விண்வெளி ஊடாகப் பெறப்பட்ட தகவல்களும்தான் என்பது இங்கு முக்கியமானது. கிழக்கு மாகாணத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா, அடுத்து வன்னி மீது இலக்கு வைத்தது. அதற்கு முன்னதாக அது மன்னார் மாவட்டத்தை கைப்பற்ற திட்டமிட்டு, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் சிறீலங்கா படையினர் கடல்வழியாக தரை இறக்கம் ஒன்றைச் செய்து மன்னார் மாவட்டத்திற்கான தாக்குதலை ஆரம்பித்திருந்தார்கள்.

இதன்போது குறிப்பிட்ட நாட்களுக்குள் மன்னாரின் முசலி பிரதேசம் சிறீலங்கா படையினர் வசம் வீழ்கிறது. இதில் இருந்த விடுதலைப் புலிகள் மன்னாரின் வடபகுதி நோக்கி நகர்கின்றார்கள். சிறீலங்காவின் தென்பகுதிமீது விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு இந்த முசலிப் பிரதேசமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வன்னியில் இருந்து வெடிபொருட்கள் புத்தளம் ஊடாக தென்பகுதிக்கும் கடத்தும் பாதையாக மன்னார் முசலி பிரதேசம் பயன்பட்டது. இதனைக் கைவிட்ட விடுதலைப் புலிகள் பின்னர் ஏனைய வழிகளூடாக தங்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக வில்பத்து சரணாலயம் ஊடான பாதை பயன்படுத்தப்பட்டது.

அன்று வில்பத்து சரணாலயத்தின் வடபகுதியில் விடுதலைப் புலிகள் தளம் ஒன்றையும் அமைத்திருந்தார்கள். நிலைமை இவ்வாறிருக்க, களத்தில் போர் நிலமைகள் வலுவடைகின்றன. ஆங்காங்கே களமுனைகள் புதிதுபுதிதாக திறக்கப்படுகின்றன. மன்னார் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் தாக்குதல்கள் நடந்தேறுகின்றன. அதேவேளை மணலாற்றுப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்குள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் களமுனையுடன் மோதல்களைத் தொடங்குகின்றார்கள். இதனால் தாக்குதல்கள் பல பகுதிகளிலும் வலுப்பெறுகின்றன. இதேவேளை சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போராளிகளின் சிறுசிறு அணிகள் படையினரின் காவலரண்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல், துப்பாக்கிசூடு போன்றவற்றை நடத்துகின்றார்கள்.

இவை தொடர்ச்சியாக வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நடந்தேறிக்கொண்டிருந்தன. வன்னி எங்கும் போர்களமுனைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து விடுதலைப் புலிகள் தமது ஆழணி பலத்தினை பலப்படுத்துகின்றார்கள். அரசியல் போராளிகள் வீதிகளுக்கு இறங்கி மக்களிடம் போரட்ட வலுவிற்கான ஆணியினை திரட்டுகின்றார்கள். தளபதிகள், பொறுப்பாளர்கள் என இதில் பரவலாக எல்லோரும் ஈடுபடுகின்றார்கள். இதில் குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் என்னவெனில் போராளிகளை இணைப்பதற்காக தளபதி பால்ராஜ் அவர்கள் மக்களிடம் நேரடியாக இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் போரளிகளையும் அணி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் குடும்பமாகிவிட்ட முன்னாள் போராளிகளுக்கு அவர்களது குடும்பத்தினரைக் கருத்தில்கொண்டு கொடுப்பனவு கொடுக்கப்படுகின்றது.

அதாவது மாதாந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பால்ராஜ் அண்ணை, போராளிகள் இணைப்பில் இறங்கியதன்பின் முன்னாள் போராளிகளின் மனைவிமாரே தங்கள் கணவரை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவைத்த சம்பவங்களும் நடந்தது. முல்லை மாவட்ட முன்னாள் போராளியின் மனைவி ஒருவர் கணவனை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவிட்டு, “நீங்கள் பால்ராஜ் அண்ணையுடன் போங்கள். அப்பத்தான் அவர் மணலாத்தில உங்களை வைத்திருப்பார். அங்கு நின்றால் வீட்டிற்கு வந்துபோவது இலகு. அப்பதான் களமுனையையும் வீட்டையும் பாப்பிங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதேபோல் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகள் தளபதி தீபன் அவர்களின் கீழும், மன்னார் மாவட்ட போராளிகள் தளபதி பானு அவர்களின் கீழும் அணிதிரள்கின்றார்கள்.

இவ்வாறு முன்னாள் போராளிகளின் அணிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இவர்கள் ஏற்கனவே துப்பாக்கி பிடித்து பயிற்சி எடுத்தவர்கள் என்பதால் அடிப்படை பயிற்சி அளிக்கத் தேவையில்லை. சூட்டுப்பயிற்சியுடன் இவர்கள் படை அணியாக மாறுகின்றார்கள். இது ஒருபுறம் நடந்தேறுகின்றது. மறுபுறத்தில் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் மக்களிடம் அவசர அழைப்பினை விடுக்கின்றார். 2006ம் ஆண்டின் இறுதிப்பகுதி அது வீட்டுக்கொருவர் நாட்டிற்கு என்று அழைப்பு விடுக்கின்றார். விடுதலைப் புலிகளின் இந்த அறைகூவலினை அன்று இருந்த விடுதலைப் புலிகளின் ஊடகங்களான ஈழநாதம், புலிகளின் குரல், தமிழீழ தேசிய தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஏடு, சுதந்திரப்பறவைகள் மற்றும் தெருவெளி நாடகங்கள் ஊடாக முரசறையப்படுகின்றன.

இப்போதுதான் அங்கு புறநானுற்றிலும் மிஞ்சிய மகிமை வன்னியில் நடந்தேறுகின்றது. வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்காக இணைகின்றார்கள். பெற்றோர்களால் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் இணைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த செய்திகளை தாங்கியபடி அன்றைய ஈழத்தின் ஊடகங்கள் செய்திகளை முதன்மையாக வெளியிட்டன. ஆனாலும் ஒரு சில பெறறோர் பிள்ளைகளை இணைப்பதற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்காமல் பின்னடித்தார்கள். தமது பிள்ளைகளுக்கு திருமண வயதிற்கு வரும் முன்னரே மணம் முடித்து வைத்தார்கள். திருமண வயது வாராதவர்களுக்கு திருமணப் பதிவு செய்வதை பதிவாளர்கள் மறுத்தார்கள்.

இதனால், பதிவில்லாமல் சிலர் கலாச்சாரத் திருமணங்களை செய்து வைத்து தங்கள் பிள்ளைகள் போராட்டத்திற்கு செல்லாது தடுத்தார்கள். தாலிக்கொடி செய்து கட்டுவதற்கு கூட அவகாசம் இல்லாமல், இருந்த மஞ்சள் கயிற்றில் அவசர அவசரமாக தாலி கட்டிவைத்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. இந்தத் திருமணங்கள் அப்போது மக்களால் ‘போர்க் கல்யாணம்’ என நகைச்சுவையாக் குறிப்பிடப்பட்டது பலரும் அறிந்தது. இதேவேளை, இணைந்த போராளிகள் அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு புதிய புதிய படை அணிகளாக களமிறங்குகின்றார்கள். புதிய போராளிகளுக்காக களமுனைகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு புதிய போராளிகள் மன்னார் களமுனையாக இருந்தாலும் முகமாலை களமுனையாக இருந்தாலும், மணலாற்றுக் களமுனையாக இருந்தாலும், வவுனியா களமுனையாக இருந்தாலும் தமது வீரங்களை எதிரிக்கு காட்டுகின்றார்கள்.

முதன்மை தளபதிகளின் வழிநடத்தலில் களமுனைகளின் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்புக்கள் இப்புதிய பேராளிகளால் நிகழ்கின்றன. இவ்வாறு போராளிகள் களமுனை அனுபவங்களை பெற்று அடுத்தகட்டத்திற்காக தன்னை தயார்படுத்துகின்றார்கள். அதாவது அதிகாரி பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு அதிகாரி பயிற்சி அளிக்கும் இடமாக முத்தையன் கட்டு பயிற்சி தளங்கள் அமைகின்றன. அதாவது அதிகாரி என்பது பதினைந்து போரைக் கொண்ட ஒரு அணியினை வழிநடத்தும் திறமை. இதற்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறுதான் புதியபோராளிகளின் பதவி நிலைகள் உயர்கின்றன. இவ்வாறு அணிகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேறுசில அணிகள் கிளைமோர்த் தாக்குதல், கட்டடத் தகர்ப்பு, கனரக வாகனத் தகர்ப்பு என வெடிமருந்துப் பயிற்சிகளில் சிறப்புத் தேர்ச்சி அடையும் நோக்கில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு

பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது.

அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் நான் அந்த அபூர்வமான கெரில்லாத் தலைவரை சந்திப்பதற்கு முன் இரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அந்த அறையில் உட்கார்ந்திருந்தபோது புலிகள் இயக்கப்போராளி ஒருவர் ஒரு வர்ணத்தொலைக்காட்சியை இயங்க வைத்தார்.

அவை நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடாவாகும். ஒளி பிரயோகிக்கப்பட்ட விதமும், கமெராவின் கோணங்களும் பிரபாகரனை நிஜத்திலும் பெரியதாகக் காட்டியது. அவர் பலமானவராக, கடுமையானவராக, வீரம்செறிந்தவராகக் காணப்பட்டார். அந்த ஒளியிழைநாடா, புலிகளை ஒரு பெருமை மிக்க தேசத்தின் ஒழுக்கமான இராணுவமாகக் காட்டியது. அங்கு பிரபாகரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சீருடையில் உள்ளார். புலிக்கொடியை ஏற்ற அவர் அணிவகுத்து நின்ற புலிப்படையினரைத்தாண்டிச் சென்றார். தேசபக்திப்பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரகாசமான கண்களுடன் – பெருமையுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை சூரியப்பிரகாசம் நிரம்பிய வெளியில் பிரபாகரன் பறக்க விடுகின்றார்.

 

அங்கு பிரபாகரன் கொள்கை கொண்ட பிரமாண்டமான மனிதர் – புரட்சியாளர், கவர்ச்சிகர மானவர். ஆனால் முதல்தடவையாக பிரபாகரனைச் சந்தித்தபோது பேச்சிழந்து போனதுடன் அதிருப்தியுற்றேன். அவர் அந்த அறைக்குள் நடந்து வந்தார். நான் அடையாளம் காணவில்லை. வீடியோவில் கண்ட ஆறடி உயரமுள்ள நேர்த்தியானவரால், பாதிக்கப்பட்டதால் அடையாளம் காணவில்லை. அங்கு வந்த மனிதன் கட்டையான, சிறு தமிழ் வணிகர் போன்ற உருவ முள்ளவர். நான் அவரை புலி ஆதரவாளர் என்று நினைத்தேன். ஒரு ஆர்வமுள்ள தலையாட்டலும் செய்தேன். சில நிமிடங்களின் பின்னர் ஒரு மென்மையான குரல் தமிழில் ஒலித்தது. ‘நான் தான் பிரபாகரன்’ என்றார். அவர் அடையாளம் கண்டுவிட்டார். நான் அடையாளம் காணவில்லை.

அந்த மனிதர் மன்னிப்பு கேட்பவர் போன்று சிரித்தார். நான் அந்த முகத்தை ஆராய்ந்தேன். எனது பேர திர்ச்சிக்கு பின் அது பிரபாகரன் தான் என்பதை உணர்ந் தேன். கமெராக்கள் பொய்சொல்லாதென யார் சொன்னார்கள். பிரபாகரன் கருஞ்சாம்பல் நிறக்காற்சட்டையும், வான நீலநிறமுள்ள சேர்ட்டும் அணிந்திருந்தார். அவர் வீதியால் நடந்து சென்றால் யாரும் அவரை இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கமாட்டார்கள். வீடியோவில் பார்த்த உறுதிமிக்க, சீருடை தரித்த, கொரில்லாத் தலைவருக்கும், இந்த மென்மையான தோற்றமளிக்கும் சிவிலியனுக்குமிடையோன ஒப்பீடு ஒரு தற்செயல் நிகழ்வே. நான் ஏன் வீடியோவில் பிரபாகரன் பேசவில்லை என்பதை உணர்ந்தேன்.

பெருமனிதனிடம் மென்மையான குரல். அது ஒரு நாயகனின் தோற்றத்தைப் பாதிக்கும். நான் என் நம்பாத தன்மையை மறைக்க முயன்றேன். ஆனால் அதிர்ஸ்டவசமாக அது பிரபாகரனை சிறிது அதிசயப்பட மட்டும் வைத்தது. எனது குழப்பத்தை மறைப்பதற்கு சிறந்தவழி எனது கேள்விகளை ஆரம்பிப்பது. அது இருமணிநேரம் நீடித்தது. முடிவில் என் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனைச் சந்தித்ததை உணர்ந்தேன். இன்று பல குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்தித்த பின்பும் பிரபாகரனே மிகக் குறிப்பிடத்தக்கவராவார்.பிரபாகரன், நான் சந்தித்தவர்களில் மிக உறுதிகொண்டவர். அவரது தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர் தான் உணர்வார்கள்.

ஊடகவியலாளர்,

தெற்காசியத் தலைமைச் செய்தியாளர்,

ரைம்ஸ்,

சி.என்.என். இந்தியா.

அனிதா பிரதாப்

தமிழீழம் செயற்கை கோளின் பார்வையில் காணொளி

ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை தம் அடிமை வலைக்குள் சிக்கவைத்து தமிழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் இறைமையையும் சீர்குலைத்தார்கள் என்பதையும் முழு உலகமும் அறியாமல் இருக்கமுடியாது. அந்நியர்களான போர்த்துக்கீசரும், டச்சுக்காரர்களும் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த போதிலும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் தனி நிர்வாக அலகாகக்கொண்டே ஆட்சி செய்தனர்.

ஆனால் 1796ல் டெச்சுக்காரர்களிடம் இருந்து இலங்கை முழுவதையும் தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், தமது நிர்வாக வசதிக்காக இலங்கைமுழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கை இலங்கை வரைபடத்தில் இருந்து நீக்கிய பாதகமான, துரோகத்தனமான செயல். அந்த மண்ணின் கண்ணீர் சிந்தும் வரலாற்று நிகழ்வுகளில் மிகக் கொடூரமானது. மேலும், ஆங்கிலேயர்கள் 1948ம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கும்போது ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கை முழுவதையும், பெரும்பான்மைமக்களாகிய சிங்களவர் கையில் தாரைவார்த்துவிட்டுத் தப்பித்துக்கொண்ட,ஜனநாயக முறைகேடான நிகழ்வும் அங்குதான் நிகழ்ந்திருக்கிறது.

ஜனநாயக கோட்பாட்டை பேரினவாதக் கோட்பாடாகக் கருதிக்கொண்ட அல்லது மாற்றிக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் செய்த அனர்த்தங்கள் எண்ணற்றவை. இலங்கையிலும், ஈழமண்ணிலும் சிந்திய தமிழர்களின் இரத்தங்களும், சொத்துக்களின் அழிவுகளும், மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் சோதனைகளும், வேதனைகளும், இழப்புக்களும் எண்ணில் அடங்கா. பொறுத்து,பொறுத்து ஈற்றில் பொங்கி எழுந்த தமிழ்க் குலம், குறிப்பாக இளைஞர்குழாம் தமது இழந்த உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரமாக வாழச் சித்தம் கொண்டனர்.

தமிழர்கள் இழந்த உரிமைகளை மீள வழங்குவதில் சிங்கள அரசும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளும் புரிந்த அரசியல் சாகசங்கள், வித்தைகள், நடவடிக்கைகள் பலப்பல. சமரச முயற்சிகளினால் எழுதப்பட்ட பல உடன்படிக்கைகள் எத்தனைதடவைகள் கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அவலங்களுக்கு முழுக்க, முழுக்க சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகள் என்று கூறுவது ஒரு பக்கச்சார்பானது.

குறிப்பாக 1930 களில் இருந்து, ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிந்தோ, தெரியாமலோவிட்ட தவறுகளும், கைக்கொண்டதவறான அரசியல் கோட்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கொள்கைகளும், பல சந்தர்ப்பங்களில் மாற்றான் கைக்கு விலைபோன நிகழ்வுகளும் பலவகைகளில் ஈழத்தமிழர்களின் இன்றைய இந்த அவலநிலைக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நியாயவாதிகள் ஒப்புக்கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய இனப்படுகொலையின் பின்னர் ஈழத்தின் அரசியல் நிலைமையிலும், தலைமையிலும் ஏற்பட்டமாற்றம்,தமிழர்களின் இந்தப் புரையோடிப்போன துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஒரு நிலையான பரிகாரம் கிடைக்கும் என்று தமிழ்த்தேசமும், நன்நோக்குள்ள பிறதேசங்களும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களுக்குக் கிடைத்த தலைமையாக ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற அரசியல் அமைப்பும், அதன் ஒப்பற்ற தேசியத் தலைவரே பிரபாகரன் என்பதும் தமிழ் மக்களும் உலகமும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். பேரினவாத சக்திகளுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய அரசியல் இராணுவ மாற்றுவழிகளையும், கொள்கைகளையும் மிகவும் திறமையாகவும், சாதுரியமாகவும் தீட்டி, அரசியல் சாணக்கியர்களையும், தன் தளபதிகளையும், போராளிகளையும், உரிய முறையில் வழிநடாத்தி, தமிழ்மக்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி உறுதியுடனும், தூரநோக்குடனும், நாட்டுப்பற்றுடனும், நேர்மையாகவும், உண்மையாகவும் அரசியல் விடிவை நோக்கி விரைந்துசெல்லும் ஓர் ஒப்பற்ற தலைவனாக தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கிடைத்தமை காலம் ஈந்த ஒரு பெரும் பேறாகும்.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக, தளராமலும்,உறுதியுடனும், யாருக்கும் விலைபோகாமலும், நேர்மையாகவும், இதயசுத்தியுடன் கொண்ட கொள்கைக்காக, தமிழ்மக்களின் நிரந்தர விடிவுக்காய் தன் உயிரையும் துச்சமாக மதித்து, களத்தில் நின்று போரை வழிநடத்துகின்ற, போராடுகின்ற ஒரு வீரத் தமிழ் மகனை, ஓர் ஒப்பற்ற தேசியத் தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தளபதிகளோடு தளபதிகளாய், கரும்புலிகளோடு கரும்புலிகளாய், போராளிகளோடு போராளிகளாய்,அரசியல் அறிஞர்களோடு சமமாய், தாமும் தலைவனாக மட்டும் இல்லாமல், அநாதரவற்றவர்களுக்கெல்லாம் தாயாய், தந்தையாய், ஊனமுற்றவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் திகழும் ஓர் ஒப்புயர்வற்ற தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது ஈழமண்ணின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்று துணிந்து மகிழ்ச்சியோடு கூறக் கூடியதாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நீதி, நியாயம், தர்மம், என்பன உண்மையானால் இவ்வாசகங்கள் ஈழவரலாற்றின் இறுதி அத்தியாயத்தில் நிரந்தரமாக பதிவு செய்யப்படவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. அவ்வாறான ஒர் ஒப்பற்ற தலைவனின் 50வது பிறந்த தினம் 26.110. 2004 அன்று தமிழர்கள் பட்டி, தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்படும் இவ்வேளையில், ஈழத்தமிழர் பூரண சுதந்திரம் கொண்ட மக்களாக அந்த மண்ணில் வாழ தலைவனே! நீ வழிசமைக்க வேண்டும் என்று நல்லாசி கூறுவதோடு நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும் என்று எம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மனநிறைவோடு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

வரலாற்றாய்வாளர்,

விரிவுரையாளர், சார்ள்ஸ் ஸ்ரூபேட் பல்கலைக்கழகம்.

அவுஸ்திரேலியா.

கலாநிதி முருகர் குணசிங்கம்

ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

கால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது.

துளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி தோன்றும் இடைவெளிக்குள் தோற்றமுற்றான் ஒருவன். ஒரு தலைவன்.

இவன் உலகத் தமிழர்களின் இறைமைக்கும் தற்பெருமைக்குமான குறியீடு. இன்று நடைபெற்றுக்கொண்டிக்கும் ஈழத்தமிழர்களின் மகாபுரட்சி சென்றடையவேண்டிய இலக்கையும் அதன் திசையையும் தீர்மானிக்கும் தீர்க்கமான வல்லமை கொண்ட இவனை யாரும் வாங்கமுடியாது. இவனுக்கு விலையில்லை. தனக்கு இவன் தானிட்ட கட்டளையே தன் மக்களுக்கு இவன் கொடுத்த வாக்குறுதி. அடையவேண்டியதை அடைவதற்குக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுக்கத் தயங்காதவர்களில் இவன் ஒருவன்.

மனிதர்களின் தீர்ப்புகள் எவையாயிருந்தாலென்ன. அவர்கள் வெறும் மனிதர்கள்தானே. தீர்ப்பளிக்கும் உரிமை வரலாற்றுக்குமட்டுமே உண்டு. மனிதர்களுக்குக் கடமைகளேயுண்டு. இயற்கையிடம் பாடம் கேட்டு, வரலாற்றினால் வழிகாட்டப்பட்டவர்களுக்குத் தோல்வி எப்போதும் வந்ததில்லை. அவ்வப்போது புரட்சியின் தொல்நகரான பாரிஸின் சில வீதிகளில்நடக்கும் போது இந்நகரின் ஆத்மா அறைகூவி அழைக்கிறது. அடக்கு முறைக்கெதிராக அணிதிரண்ட மக்களைத் திறம்பட வழிநடத்திய தலைவர்கள் பிறந்த தேசம் இது. மாறா(marat), டோன்தோ(ன்)(danton), காமி தெமூள(ன்) (camille desmoulins), ச(ன்) யுயிஸ்த் (sant just), றொபெஸ்பியர் (robespierre)மக்களுக்காய் மட்டுமே சுவாசித்த இந்த மகான்களின் சுவாசப்பைகளினால்தான் சுத்திகரிக்கப்பட்டது இத்தேசத்தின் நாடிகளில் இன்றும் ஓடும் உதிரம்.

றொபெஸ்பியர். விடுதலையும், மக்களுக்கான ஒரு குடியரசும் என்பதற்காகத்தான் இவன் வாழ்ந்தான். மடிந்தான். இவன் மக்களுக்கான விடுதலையை மட்டுமே சுவாசித்தான். மக்களின் விடுதலைக்காக அறிவியல் ரீதியில் ரூசோ சிந்தித்ததை செயலுருவில் வடிவமைத்த இவன், சுதந்திரப் பிரெஞ்சு தேசத்தின் காரணகர்த்தா.காரணம் இவனை யாரும் விலைக்கு வாங்க முடியவில்லை. இவனை யாரும் கறைபடுத்த முடியவில்லை. தனது கொள்கையில் ஒருதுளியையேனும் இவன் விற்கவில்லை. இவனது உறுதிப்பாடுகளின் ஒரு இம்மியையேனும் யாரும் அசைக்க இவன் அனுமதிக்கவில்லை. வரலாறு உள்ள வரைக்கும் இவனுக்கு ‘மாசற்றோன்’ எனும் நாமமே இருக்கும். பிரஞ்சுத் தேச வரலாற்றில் இவனுக்குப் பின் வேறு யாருக்கும் இந்நாமம் சூட்டப்படவில்லை.

விடுதலை பற்றியும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலைபற்றியும் தரவுகளைத் தருபவை இந்நாட்டின் வரலாற்றேடுகள். சமாதானப் போர்வையில், பேசுவோம் எனும் தோரணையில் காலத்தை இழுத்துப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு பேரினவாதச் சக்திகளும், மேற்கு நாடுகளின் ‘நாகரீகப் புத்திஜீவிதங்களும்’, அண்டை நாட்டின் பிராந்திய வல்லரசுத் திமிருமாகச் சதிசெய்யும் இவ்வேளையில், விழிப்பாயிருந்து, விலைபோகாது, தூர அரசியல் நோக்குடன், ஈழத்தமிழர் போராட்டத்தை இதயத்தில் வரித்த தலைவனுக்கும் ‘மாசற்றோன்’ எனும் நாமம் சூட்டப்படட்டும். வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மீளப்பெறமுடியாதவை. மனிதர்களில் மகோன்னதமானவர்களின் கனவுகளை நனவாக்குவதைத் தவிர கடமையேதும் இல்லை.

றொபெஸ்பியரிடமிருந்து பெற்ற கனவை நிறைவாக்கக் கனலென உதித்தான் நெப்போலியன் எனும் வீர வேங்கை. வெற்றிமேல் வெற்றிவாகை சூடினான். கண்மூடி முழிக்கும் வேகத்தில் ஐரோப்பாவை அதிர வைத்தான். புயலெனஎழுந்த இவன் வேகத்தில் சருகென மறைந்தனர் எதிர்ப்புரட்சியாளர்களும் அடக்கு முறையாளர்களும். இவனது இராணுவ உத்திகளையும், தூர நோக்கையும், மனத்திடத்தையும், அஞ்சாத நெஞ்சையும், அசைக்கமுடியாத கொள்கை யுறுதியையும், தீர்க்கமான புத்திக்கூர்மையையும் கண்ட பிரஞ்சு தேசம் இவனிடம் தனது கனவைக்கையளித்தது.

சமகாலத்தவர்களின் எந்தத் தீர்ப்புகளுக்கும் இவன் அஞ்ச வில்லை. மாமனிதர்கள் வரலாற்றுக்கு மட்டுமே கணக்குக் கொடுக்கவேண்டியவர்கள். வரலாற்றுக்கு மட்டுமே அவர்களிடம் கணக்குக் கேட்கும் உரிமையுண்டு. மிகுதிகளை அவன் சல சலப்புகளாகவும், இயலாமைகளாகவும், அலறல்களாகவுமே கண்டான். பிரெஞ்சு தேசம் தனது வரலாற்றில் பதின்நான்கு தரம் தனது அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டது. ஆனால் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சிவில் சட்டக் கோர்வையின் அடிப்படையில் கைவைக்கவில்லை. நெப்போலியனால் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்வாகக் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுக ளைத் தாண்டி இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றது. பிரெஞ்சுத் தேசியக்கட்டுமானத் தின் அதிசிறந்த இராணுவ மேதையாகவும், அதிசிறந்த அரசியல் ஞானியா கவும் இருந்த ஒரேயொருவன் நெப்போலியன்தான் என்பதை இன்று வரலாறு அறைந்து கூறுகிறது.

இது வரலாறு வழங்கிய தீர்ப்பு. ஈழத்தமிழரின் எதிர்கால வரலாறு வழங்கப்போகும் தீர்ப்பை இன்றே தமிழர்கள் வழங்கிவிட்டார்கள். தமது தேசியக் கட்டுமானத்தின் தலைவன் யாரென்பதை ஈழத்தமிழர்கள் ஐயமின்றி உணர்ந்து கொண்டுவிட்டார்கள். வரலாற்றின் தீர்ப்பிற்காய் காத்திருப்பவர்கள் இருந்து விட்டுப்போகட்டும். எகிப்திய அடிமை நுகத்திலிருந்து அறுத்தெடுத்துத் தன் எபிராய மக்களை விடுதலைக்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குமாக அழைத்துச் சென்றான் தீர்க்கதரிசி மோசஸ். கட்டளைகளிட்டான், மீறியவர்க்குத் தண்டனை கொடுத்தான்.

கடக்கவேண்டியிருந்ததோ இரக்கமற்ற பாலைவனம். கடினப்பாதைகள் கண்டு மக்களோ அஞ்சினர். மீண்டும் அடிமைகளாகவே எகிப்துக்குச் சென்று விடுவோமே எனக் கெஞ்சினர். கடைமனிதர்களுக்கும், கண்ணீர் வடிப்பவர்களுக்கும் அரை வழியில் விடைகொடுத்து விட்டுத் தொடரவேண்டியிருந்த பயணமது. யாருக்குச் சுதந்திர பூமி வேண்டும்? அடிமைத்தளைகளை தமது உள்ளங்களிலிருந்து அறுத்தெறியாதோர் சுதந்திரத்தைப் பெற்றுத்தான் என்ன செய்யப்போகிறார்கள்?அடிமை நிலை மறந்த சுயாதீன மக்களை வழி நடத்த வேண்டி மோஸஸ் நாற்பது வருடங்கள் தன் மக்களைக் கொண்டலைந் தான். சினாய் பாலைவனத் தின் கொடூரங்களுக்கு மக்கள் முகம் கொடுத்தார்கள். இரக்க மற்ற பாலைவனப் பாதையில் மக்கள் துன்பத்தீயில் புடம் போடப்பட்டார்கள்.

நாற்பது வருடங்கள் துன்பத் தீயில் புடம்போடப்பட்ட மக்கள் இறுதியில் போராடித் தமக்கு வாக்குறுதியளிக்கப் பட்ட பூமியை அடைந்தார்கள்.

சுதந்திர பூமிக்குச் சுதந்திர மக்களை, அறிவில் மேம்படுத்தி, ஆற்றலில் உன்னதமானவர்களாக்கி, அடிமைத்தளையறுத்து, சமத்துவம் நிறுவி, சாதியழித்து, அழைத்துச் செல்லும் வல்லமைமிக்க தலைவன்!

இக்கனவை நனவாக்கி நீங்கள் காலத்தை வெல்ல வாழ்த்துகிறேன்.

இதுவன்றோ நாமனைவரும் வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்குக் கொடுத்த வாக்குறுதி. இதுவன்றோ நாம் நனவாக்கி அவர்களுக்கு காணிக்கையாச் செலுத்த வேண்டிய கனவுப்பூ.

இடருற்று, அடக்கு முறைக்குப் பலியாகிய ஈழத்தமிழரின் துணிவுச்சுடர் பிறந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

நீழ்காலம் ஒங்கியது ஒளிருமென வாழ்த்தி நிற்போம்.

மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்

படைப்பாளி.

பிரான்ஸ்.

வாசுதேவன்

Up ↑