


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார்.
இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான
கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்
ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.
எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!
மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.
நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.
‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.
எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.
மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.
புலம்பெயர் எமது உறவுகளே!
நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.
மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.
வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.
விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.
அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!
உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.
எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.
அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.
அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,
நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.
அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?
உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.
அன்புக்குரிய மக்களே!
எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
அன்புக்குரிய மக்களே!
எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?
யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.
அன்புக்குரிய மக்களே!
எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.
அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.
சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.
அன்புக்குரிய மக்களே!
நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.
நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது?
If we don’t fight for our freedom who else will?
வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.
அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!
போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.
உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.
ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.
சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?
அன்புக்குரிய மக்களே!
எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’
‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!
எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.
அன்புக்குரிய மக்களே!
தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.
எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!
எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.
வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.
பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?
நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.
அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!
உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.
இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.
அன்புக்குரிய மக்களே!
சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.
எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.
நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
திலீபன் அண்ணை கூறியது போல்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.
சிங்களத்தின் போர் வெற்றி உச்சங் கொண்ட பொழுது நிலப்பரப்புக் குறுகித் தமிழர் வாழ்வு அவல முற்றுதத் தவிக்கின்றது. இந்த இக் கட்டை முற்கூட்டியே உணர்ந்து கொண்ட செருந்தியின் அம்மா தனது குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு படைவ ல்வளைப்புக்குள் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். எல்லோரையும் கூட்டிச் செல்வதற்கு முன் கணவரும் தானுமாக ஊருக்குச் சென்று நிலைமையைக் கணக்கிட்டனர்.
அம்மாவுக்கு அகவை ஐம்பது. ஐயாவுக்கு ஐம்பத்தைந்து. ஊருக்குச் சென்ற தனது வயது முதிர்ந்த தமக்கை ஒருவருடன் செருந்தியின் தாயார் கோயிலுக்குச் சென்றார் இருவரும் நல்ல முதியவர்கள். கோயிலுக்குப் பக்கத்தில் சிறு பற்றைக் காடுகளும் படையினரின் அரண்களும் இருந்தன. படையரண்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது பற்றைக்குள்ளிருந்து விசில்சத்தமொன்று இவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. திரும்பிப் பார்த்தபோது சிங்களப்படையாள் ஒருவன் இவர்களிருவரையும் பற்றைக்குள் வருமாறு சைகையால் அழைப்பு விடுத்தான். இடுப்புக்குக் கீழே அவனுடலில் உடையில்லை திகைத்துப் போன அந்த மூதாட்டிகள் இருவரும் திரும்பிப் பாராமல் வந்த வழியே வீட்டைச் சேர்ந்தனர்.
செருந்தியின் அம்மா தனது பெட்டி படுக்கையை அடுக்கிக் கொண்டு வன்னிக்கு வந்து சேர்ந்தார். நடந்ததையெல்லாம் தனது மகளிடம் கூறினார். தங்கையையும்இ தம்பியையும் கூட்டிக்கொண்டு சென்று ஊரில் வாழும் நினைப்பை அடியோடு மறந்தார். “சிங்களப் படைகள் ஊரில் இருக்கும் வரை தமிழ்ப் பெண்களின் வாழ்வு எப்போதும் அச்சம் நிரம்பியதாகவே இருக்கும் வெறிகொணட் அந்த மிருகங்களுக்கு இளையவர்இ முதியவர் என்ற வேறுபாடுகள் எதுவும் தெரிவதில்லை.
துப்பாக்கி ஏந்தியபடி ஊருக்குச் செல்வது தான் சரியான முடிவு” என்பதைக் களத்தில் நிற்கும் செருந்தி தாயாருக்கு உணர்த்தினார். அவரது தாயாரும் இப்போது உண்மையை உணர்ந்து இடருக்குள் வாழ்கின்றார் என்றபோதும் இப்போது அவருக்கு அச்சங்கள் ஏதுமில்லை.முன்னேறிவரும் எதிரிக்கு சுடு கருவியால் பதிலுரைக்கச் சமர்முல்லை இப்பொழுதும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றார். 2007 மார்ச் மாதத்திலிருந்து மன்னாரில் தொடங்கிய அவரது களமுனை வாழ்வுக்கு ஒருநாள் கூட ஓய்வுகிடைக்கவில்லை. அக்கராயன் பகுதியில் நடந்த மோதலொன்றில் ஒரு சிறிய சன்னம் அவரது மேற்கையைத் துளைத்தது. காதுக்கு அண்மையாகவிருந்த மருத்துவ நிலை யுத்திலேயே அந்த விழுப்புண்ணுக்கான சிகிச்சையை மேற்கொண்டுவிட்டுத் தொடர்ந்தும் காப்பரணிலேயே அவர் நின்று கொண்டார்.
சமர்முல்லையின் பெரியம்மாவின் மகளுக்குத் தீரா நோய்இ போர் நெருக்கடியின் நடுவிலும் அவளை மேற்சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைத்தனர். வவுனியா மருத்துவமனையில் நின்ற காலத்தில் பெரியம்மாவின் மகள் அங்கு பார்த்த பல கட்சிகளால் அதிர்ந்து போனாள். விடுதலைப்புலிகளின் சடலங்கள் என்று அடுக்கிவைக்கப்பட்ட அறைகளில் பொதுமக்களின் சடலங்களே கிடந்தன. சிங்களம் ஊடகங்களில் பரப்புரை செய்வது போல அரச செலவில் அடக்கம் செய்யப்படும். அவையெல்லாம் விடுதலைப் புலிகளினுடையவை அல்ல. படையினர் முன்னேறி வந்த போது இ அகப்பட்ட தமிழ் மக்களை வேறு பிரித்து இளவயதினர் சடலங்களாகி மருத்துவமனைச் சவச்சாலையில் கிடத்தப்பட்டிருந்தனர். தான் கண்டதையுங் கேள்விப்பட்டதையும் பார்த்துப் பயந்துபோன சமர்முல்லையின் அக்கா.. உடனயாகவே பாதை திறக்க வன்னிக்கு வந்துசேர்ந்தார்.
வருவதற்கிடையில் தனது மூன்று மகன்மாரையும் கூட்டிக்கொண்டு படைவல்வளைப்புப் பகுதிக்குள் போய்விட்டார். இவர்களது சின்னம்மாவின் பிள்ளைகள் எங்கே? சின்னம்மா எங்கே? அனைத்தையுங் கேள்வியுற்ற சமர்முல்லைக்கு வேதனையாகவிருந்தது. யாவற்றையும் கண்முன்னே கண்டு நிலைமையைத் தெரியப்படுத்த வந்த அக்காவுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. சமர்முல்லையைத் தொடுவதற்குச் சாவு பயந்துபோயிருக்கின்றது. போராடும் அகவையில் எதிரியிடம் அகப்பட்ட அவரது தம்பிமார்களைச் சாவு துவைத்து மிதித்துப் போட்டிருக்கின்றது.எப்படி வாழ்கின்றோம் என்பதைப் பொறுத்தேத சாவு வந்து எதிர்ப்படும்இ போராட மறப்பவர் கொல்லப்படுவர். தற்காத்துக்கொள்பவர் போரை வெல்வார். சமர்முல்லையும் அவரது உடன் பிறவா மூன்று தம்பிகளும் இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுக்கள்.
களத்தில் நின்று போராடி விழுப்புண்ணேந்திப் படுக்கை ஓய்வில் இருக்கிறார் கெங்கா களத்தில் எதிரிகளின் சன்னடிமழைக்கு நடுவில் நின்றபோதும் அவர் நடுங்கியதில்லை. போராடும் வேளையில் வீரச்சாவை எதிர்கொண்ட தோழியரின் வித்துடல்களைக் கண்டபோதும் அவர் துவண்டதில்லை. எதிரியின் சன்னந் துழைத்து வயிறு கிழிந்தபோதும் அவர் வாடித் துடிக்கவில்லை. ஆனால் தருமபுரம் மருத்துவமனையில் ஏழு அகவைகொண்ட மதியழகன் என்ற சிறுவனைப் பார்த்தபோது அவர் நடுநடுங்கிப் போனார்.
மதியழகன் கல்லாறு மக்கள் குடியிருப்பில் உறங்கிக் கொண்ருந்தபோது கிபிர் விமானங்கள் நள்ளிரவு வேளையில் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தான். வயிற்றுப் பகுதியையும் முள்ளந்தண்டையும தாக்கிய சன்னம் அவனது இயக்கத்தை இடுப்பின் கீழே முடக்கிப்போட்டிருந்தது. அன்றைய நாள் அவனது தாயும்இ உடன்பிறப்பும் இவனுடன் காயமடைந்தனர். தாயின் தந்தை கொல்லப்பட்டார். கிழிந்த நார்போல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை மருத்துவர்கள் மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். பல நாட்களாக உணவின்றிக் கிடந்த அவனது தோற்றம் பார்ப்பவர் மனங்களை உலுக்கியெடுத்து.
கெங்காவுக்கு அவனைப் பார்க்கையில் அந்த எதியோப்பியக் குழந்தை தான் நினைவுக்கு வந்தது. ஓட்டியுலர்ந்த உடல்இ உணவுக்கு வழியற்ற நிலை. அருகிலே அக் குழந்தையின் சாவுக்காய் தவங்கிடக்கும் பிணந்தின்னிக் கழுகு அன்று உலகையே ஒரு கணம் உலுக்கியெடுத்த அந்த எதியோப்பியக் குழந்தையின் உருவம் அவளது கண்ணெதிரே தெரிந்தது.குச்சிக்குச்சிக் கையுடனும் கால்களுடனும் உள்ளொடுங்கிய விழியிரண்டுடனும் இடுப்பின் கீழ் உணர்வற்ற நிலையில் மதியழகன் கிடந்தான்.பட்டினிக்கு பதிலாகப் படுகாயம். பிணந்தின்னிக் கழுகாகப் போர்வெறி தலைக்கேறிய சிங்கள அரசும் அதற்கு உதவும் நாடுகளினாலும் சிறிது சிறிதாகச் செத்துக்கொண்டிருக்கின்றான். அந்தச் சிறுவன் வாழும் பிணமாகக் காட்சி தரும் அவனது நிலை ஈழத்தின் எந்ச் சிறுவருக்குமே வரக்கூடாது. கிட்டத்தட்ட மதியழகன் போலவே வயிற்றுக் காயத்தால் உடல் பிய்ந்து பாதிக்கப்பட்டாலும் மெதுவாகத் தேறியெழுந்து நடமாடக் கற்றுக் கொண்டிருக்கிறாள் கெங்கா. மதியழகனைப் போல உயிர் துடிக்கச் செத்துக் கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகளுக்காக அவளது உள்ளம் நெருப்பாய்க் கொதித்தது.
சிங்களம் ஏவிவிடும் எறிகணைகளும் வான்குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் ஒரு முறையுடன் ஆறி அடங்கிப்போய்விடும் ஆனால் அவை மூட்டிவிட்ட மனங்களின் நெருப்பு மட்டும் ஒருநாளும் ஆறி அடங்கிவிடுவதில்லை. அது தணல் பூத்துக்கிடக்கும் தக்க வேளையில் மூசியெழுந்து மூர்க்கங் கொண்டு சுழலும் ஒருமுறையல்ல பலமுறை எரிக்கும் பலம் அதனுக்குண்டு கருக்கும் வேகம் அதனுக்குண்டு.வீரத்தேவி பெயருக்கேற்றாற்போல வீரத்தேவிதான். 2ஆம் லெப். மாலதி படையணிக்கு அவளது வீரமும் பலம் சேர்ந்திருக்கின்றது. வீட்டுக்கொருவர் போராடவேண்டுமென்ற அழைப்புக் கிடைக்கும் முன்பே அவள் போராடப் போய்விட்டாள். அவள் மட்டுமல்ல அவருடன் வீட்டில் நான்கு பேராகப் போராட்டத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். தந்தை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுடன் இணைந்து செயற்படுகின்றார். தமையன் ஒருவரும் தம்பி ஒருவருமாக களத்தில் பணியாற்றுகின்றனர். லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார்ப் பிரிவிலிருந்து மற்றொரு அண்ணன. லெப்.கேணல் வீரத்திலகனாக மண்ணுள் விதையாகிப் போனார். இப்போது வீரத்தேவியும் இவர்களுடன் இணைந்து தேசக் கடமையைத் தோள்மேல் சுமக்கின்றாள்.
“தனியொருவர் மட்டும் போராடினால் போதாது. குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் இணைந்து தோள் கொடுக்கும்போதுதான் விடுதலையை வெல்லமுடியும்” என்பது அவளது முடிவு தமிழர் நிலத்தைக் கூறுபோட்டுப் பிளந்து துண்டாடிவிட எதிரிமுனைகின்றான். காடுஇ வெளிஇ கடல் வயல் என்று பாராமல் அங்குலமங்குலமாக நகர்ந்து படையெடுத்து வருகின்றான். வீடுஇ தோட்டம் தேடிய தேட்டம் யாவற்றையும் விட்டுவிட்டு மக்களெல்லாரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். தமிழீழத்தில் சண்டை நடக்காத ஊர் ஏது? நிலவுக்குப் பயந்தொளித்துப் பரதேசம் போகமுடியாது. அதுபோலப் போருக்கஞ்சி ஓடவும் முடியாது வீரத்தேவியின் குடும்பத்தைப் போல எல்லாக் குடும்பமும் போருக்குத் திரும்பினால் வரும்படை சரியும் விரைவில். மூக்கால் அழுதுகொண்டும் கதைப்பதற்குத் திருப்பிக் கதைத்துக்கொண்டும் இருக்கும் வானியைப் பார்த்தால் எவரும் துணிந்தவள் என்று சொல்லமாட்டார்கள். எந்நேரமும் பகிடியும் பம்பலுமாக அவளிருப்பதைப் பார்த்தவர்கள் எத்தகைய துன்பத்தையும் தாங்குபவளாக அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள். அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள்.
வாணி துணிந்தவள். எத்தகைய துன்பத்தையும் தாங்குபவள். துப்பாகியுடன் களத்தில் நிள்றாள். ஒளிப்படக்கருயுடன் தளத்ததில் நின்றாள். இடப்பெயர்வுக்கு நடுவில் ஓயாது உழைத்தார். போர்க்களம் அழைத்த போதெல்லாம் புயலாய் நின்றாள். சிறுத்தை அணியின் சிறப்புப் பயிற்சி முறியடிப்புக்கான பயிற்சிஇ சிறப்புப் பாதுகாப்புப் பணிஇ நிதர்சனத்தின் படப்படிப்புப் பயிற்சி என்று பலதரப்பட்ட பணிகளைச் செய்து அறிவியல் நகரில் சண்டைப் படப்பிடிப்புப் பணியில் நின்றபோது சாவு அவளை வந்து சந்தித்தது. அதுவரையும் சிரித்துக்கொண்டும்இ கதைத்துக்கொண்டும்இ இயங்கிக்கொண்டும் இருந்தாள் அவர்இ ‘ஈரத்தீ முழு நீளப் படத்தில் அவள் நடந்தாள். உண்மையிலே ஒரு ஈரத்தீயாகவே இருந்தாள் அவள். கலைப்பணியைத் தாங்கி மக்களிடையே நின்றுழைத்தாள். போர்ப் பணியைத் தாங்கி களம் நடுவே நின்றுழைத்தாள். மேஜர் ஈழவாணி சிரிப்புடனே மடிந்தபோது எவ்வித தேசமுமின்றி அவளது கைகளுக்கு நடுவே பாதுகாப்புடன் கிடந்தது படப்பிடிப்புக் கருவி அதில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளே எம் விடுதலைப் போரை எடுத்துரைப்பதற்கான கருவி.
Recent Comments